search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 237283"

    • சிறுமி பாலியல் வழக்கில் சிக்கியவர்கள் மீது குண்டாஸ்
    • எஸ்பி பரிந்துரைின் பேரில் மாவட்ட கலெக்டர் உததரவு

    கரூர், 

    கரூரில் சிறுமி பாலியல் குற்ற வழக்கில் கைதான, மூன்று நபர்கள். மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், கடந்த ஆண்டு டிசம்பரில் பதிவு செய்யப் பட்ட, சிறுமி பாலியல் குற்ற வழக்கில், கரூரை சேர்ந்த சதீஷ்குமார், (வயது 32), சணப்பிரட்டியை சேர்ந்த மதன் (32), வடக்கு காந்தி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (34) ஆகியோர் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், சதீஷ்குமார் உள்ளிட்ட மூன்று பேரையும், குண்டர் காவல் சட்டத்தின் கீழ் கைது தடுப்பு செய்ய, எஸ்.பி., சுந்தரவதனம், மாவட்ட கலெக்ட ருக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்றுக் கொண்ட, கலெக்டர் பிரபு சங்கர், மூன்று பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய, நேற்று உத்தரவிட்டார்.இதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் உள்ள சதீஷ்குமார் உள்பட மூன்று பேருக்கும் அதற்கான, உத்தரவு நகலை, கரூர் மகளிர் போலீசார் வழங்கினர்.

    • சீலநாயக்கன்பட்டி இரட்டை கோவில் அருகே கொத்தனார் மூர்த்தியை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.5 ஆயிரத்தை பறித்துச் சென்றார்.
    • இது குறித்த புகாரின் பேரில் அன்னதா னப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து நிர்மல் தாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் எருமாபாளையம் சன்னியாசிகுண்டு பாறைக்காடு பகுதியை சேர்ந்தவர் நிர்மல் தாஸ் (வயது 22). இவர் கடந்த மாதம் 2-ந் தேதி சீலநாயக்கன்பட்டி இரட்டை கோவில் அருகே கொத்தனார் மூர்த்தியை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.5 ஆயிரத்தை பறித்துச் சென்றார். இது குறித்த புகாரின் பேரில் அன்னதா னப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து நிர்மல் தாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அவர் மீது ஏற்கனவே கிச்சிப் பாளையம், கொண்ட லாம்பட்டி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி வழக்குகள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பி டத்தக்கது. தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தில் அவரை கைது செய்ய போலீஸ் கமிஷனர் விஜயகுமாரிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனை ஏற்று நிர்மல் தாஸை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் உத்தரவிட்டார். இதற்கான ஆணையை சேலம் மத்திய சிறையில் உள்ள அவரிடம் போலீசார் வழங்கினர்.

    • தொடர் குற்றச் செயலில் ஈடுபட்டதால் குண்டர் சட்டம் பாய்ந்தது
    • மாவட்ட எஸ்.பி.பரிந்துரையின் பேரில், கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்

    அரியலூர், 

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே தழுதாழைமேட்டை சேர்ந்த ஜெயமணி(எ)ஜெயமணிக்குமார் (வயது 27). இவர், அதே ஊரை சேர்ந்த பாலசுப்ரமணியன் மற்றும் அவரது மகன் பவித்ரன்(27) ஆகியோரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றார். இது குறித்து புகாரின் பேரில் மீன்சுருட்டி காவல் துறையினர் வழக்குப் பதிந்து ஜெயமணிக்குமாரை கைது செய்தனர். மேலும் இவர், தொடர் குற்றச் செயலில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையடுத்து கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயமணிக்குமார் ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • மனைவியை கொலை செய்தவர்
    • கலெக்டர் பரிந்துரை பேரில் நடவடிக்கை

    கறம்பக்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த வெண்ணாவல்குடி கொத்தோட்டையன் குடியிருப்பில் உள்ள பாண்டியராஜன் (வயது 19) என்பவர், கறம்பக்குடி ஒன்றியம் தெற்கு பல்லவராயன் பத்தை கிராமத்தைச் சேர்ந்த பழனியம்மாள் என்ற நித்தியாவை (வயது 35) கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் இவர் மீது உள்ள பல்வேறு வழக்குகளின் காரணமாக மாவட்ட போலீஸ் எஸ்.பி. வந்திதா பாண்டே பரிந்துரையின்படி மாவட்ட கலெக்டர் கவிதா ராமு அவர்களின் உத்தரவின் படி குண்டர் சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை, கஞ்சா குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை, ரேஷன் அரிசி கடத்துவோர், விபசார தொழிலில் ஈடுபடுபவர் மீதும் குண்டர் சட்டம் பாய்கிறது.
    • 175 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    சேலம்:

    சேலம் மாநகரில் தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வழிப்பறியில் ஈடுபடு–வோர், தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை, கஞ்சா குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை, ரேஷன் அரிசி கடத்துவோர், விபசார தொழிலில் ஈடுபடுபவர் மீதும் குண்டர் சட்டம் பாய்கிறது.

    இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் ஓராண்டிற்கு சிறையில் இருந்து வெளியே வர முடியாது.

    தமிழக சிறைகளில் 1000-க்கும் மேற்பட்டோர் குண்டாசில் கைதாகி சிறையில் உள்ளனர்.

    சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா உத்தரவின் பேரில் இந்த ஆண்டு 175 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களில் 80 பேர் ரவுடிகள், 16 பேர் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்கள், 51 பேர் வழிப்பறி மற்றும் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள்.

    கடந்த ஆண்டில் 129 பேர் குண்டாசில் கைது செய்யப்பட்டு இருந்தனர். கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக 46 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சேலம் தாதகாப்பட்டி மூலப்பிள்ளையார் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த பிரபல ரவுடி கத்தி முனையில் பால்ராஜ் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் செயின் மற்றும் ரூ.2,700 பறித்துக் கொண்டார்.
    • இது குறித்த புகார் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி மாதேசை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி ஸ்ரீரங்கம் 5-வது தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் பால்ராஜ் (வயது 27). இவர் கடந்த 8-ந் தேதி மூலப்பிள்ளையார் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி மாதேஷ் (26), கத்தி முனையில் பால்ராஜ் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் செயின் மற்றும் ரூ.2,700 பறித்துக் கொண்டார்.

    இதைக் கண்ட அப்பகுதி மக்கள், மாதேசை பிடிக்க முயன்றபோது கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்த புகார் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி மாதேசை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    சேலம் லைன்மேடு புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணி (45). கார் டிரைவரான இவர், கடந்த 10-ந் தேதி மோட்டார் சைக்கிளில் தாதகப்பட்டி மேட்டு தெரு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது இவரை வழிமறித்த, தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு அம்மன் நகர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி பிச்ச கார்த்தி (24), கத்தியை காட்சி மிரட்டி மணியிடம் இருந்து 2 பவுன் சங்கிலி, ரூ.2175 பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    மற்றொரு சம்பவம்

    இதேபோல், சேலம் லைன்மேடு வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (54). இவர் கடந்த 6-ந் தேதி சேலம் தாதகாப்பட்டி சண்முகா நகர் ஜங்ஷன் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இவரை வழிமறித்த அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி விஜய் (36), கத்தி முனையில் மிரட்டி சீனிவாசனிடம் இருந்து 2 1/4 பவுன் சங்கிலி மற்றும் ரூ.4,300 பறித்துக் கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் ப்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    குண்டர் சட்டம்

    கைது செய்யப்பட்ட ரவுடிகள் 3 பேரும், தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால், இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா, மாநகர போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா ஆகியோர் பரிந்துரை செய்தனர். இதன் பேரில் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா, ரவுடிகள் பிச்ச கார்த்தி, மாதேஷ், விஜய் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்து உத்தரவிட்டார்.

    • அடுப்பில் எரிந்து கொண்டிருந்த தீ கட்டையை எடுத்து கையிலும் முகத்திலும் தாக்கினர்.
    • மேலும் கத்தி முனையில் மோகன்ராஜ் பாக்கெட்டில் இருந்த ரூ.3000-த்தையும் பறித்துக் கொண்டனர்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி தாகூர் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 37). சுமை தூக்கும் தொழிலாளியான இவரை கடந்த மாதம் 18-ந் தேதி தாதகாப்பட்டி சண்முகம் நகர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி எலிபிரகாஷ் (24), பராசக்தி நகர் பகுதியைச் சேர்ந்த சொல்யூஷன் சதீஷ் (26) ஆகியோர் எதற்காக எங்களை பற்றி போலீசருக்கு தகவல் தெரிவிக்கிறாய் என கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு அடுப்பில் எரிந்து கொண்டிருந்த தீ கட்டையை எடுத்து கையிலும் முகத்திலும் தாக்கினர். மேலும் கத்தி முனையில் மோகன்ராஜ் பாக்கெட்டில் இருந்த ரூ.3000-த்தையும் பறித்துக் கொண்டனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த மோகன்ராஜ், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீ சார் வழக்கு பதிவு செய்து, இவர்கள் இருவரையும் தேடி வந்தனர்.

    இந்நிலையில் மணிய னூர் காத்தாயம்மாள் நகர் பகுதியைச் சேர்ந்த அருள்மணி (30) என்பவர் தாதகாப்பட்டி கேட் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த பிரகாஷ் மற்றும் சதீஷ் ஆகியோர், கத்தி முனையில் அருள்மணி கையில் இருந்த 1/2 பவுன் தங்க மோதிரம் மற்றும் ரூ.2000-ஐ பறித்துக் கொண்டனர். இதுகுறித்து அருள்மணி அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா வழக்குப்பதிவு செய்து ரவுடி எலி பிரகாஷ் மற்றும் சதீஷ் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்.

    இவர்கள் இருவரும் பொதுமக்களை அச்சுறுத்தியும், தொடர் குற்ற செயல்களிலும் ஈடுபட்டு வந்ததாலும், இவர்கள் மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் மாநகர போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா ஆகியோரின் பரிந்துரையின் பேரில் போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா நேற்று ரவுடி எலி பிரகாஷ் மற்றும் சொல்யூ ஷன் சதீஷ் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    இதையடுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நகல் நேற்று மாலை சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மேற்கண்ட நபர்களிடம் வழங்கப்பட்டது.

    • சேலத்தை கலக்கிய பிரபல வழிப்பறி திருடர்கள்- லாட்டரி சீட்டு வியாபாரி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
    • மேற்கண்ட 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க ஆணை பிறப்பித்தார்.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி ெபரியகொல்லப்பட்டி காமராஜர் காலனியை சேர்ந்தவர் கோகுல்நாத் என்கிற கோகுல் (வயது 29). கடந்த 2021-ம் ஆண்டு கன்னங்குறிச்சி பகுதியில் வைத்து சின்னத்திருப்பதி பாரதிநகரை சேர்ந்த ராஜ மகேந்திரன் மற்றும் சேவிகவுண்டர் தெருவை சேர்ந்த பிரேம்குமார் ஆகியோரிடம் பணம் வழிப்பறி செய்தார். இதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் பெரியகொல்லப்பட்டியை சேர்ந்த ரகுமான் என்பவரை கட்டையால் தாக்கிய அவர், கொண்டப்ப–நாயக்கன்பட்டியை சேர்ந்த பிரபாகரன் என்பவரை கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்தார். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுல்நாத்தை கைது செய்தனர்.

    இதேபோல் சேலம் முள்ளுவாடிகேட் மக்கான் தெருவை சேர்ந்தவர் ஜாபர் அலி (வயது 35). இவர் கடந்த 2020-ம் ஆண்டு சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் இருந்து செல்போன் பறித்து சென்றார். தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 27-ந்தேதி சேலம் புதிய பஸ் நிலையத்தில் ெஜயபால் என்பவரிடம் ரூ.40 ஆயிரம் திருடினார். அதே மாதம் 30-ந்தேதி இட்டேரி சுடுகாடு அருகே நடந்து சென்ற ராஜா என்பவரை ஜாபர் அலி கூட்டாளிகளுடன் சேர்ந்து கத்திமுனையில் பணம் வழிப்பறி செய்தார். இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜாபர் அலியை கைது செய்தனர்.

    மற்றொரு சம்பவம்: சேலம் கிச்சிப்பாளையம் ஓந்தாபிள்ளைக்காடு 4-வது கிராஸ் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 34). கடந்த 2020-ம் ஆண்டு கார்த்திக் எடப்பாடி க.புதூர் மேற்கு தெருவில் ஒரு வீட்டுக்குள் புகுந்து பிரோவில் இருந்த தங்க தோடு, வெள்ளி கிண்ணம், பணம் ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை திருடினார். தொடர்ந்து அவர், கடந்த ஜூன் மாதம் 15, 16-ந்தேதிகளில் எருமாபாளையம் செல்லக்குட்டிக்காட்டை சேர்ந்த கேசவன் மற்றும் சன்னியாசிகுண்டு அர்ஜுனர் காலனிைய சேர்ந்த பரணி செல்வம் ஆகியோரை வழிமறித்து கத்திமுனையில் பணம், செல்போன், தங்க செயின் ஆகியவற்றை பறித்துச் சென்றார்.இந்த சம்பவம் குறித்து கிச்சிப்பாளையம், அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

    அதுபோல் சேலம் அம்மாப்பேட்டை பெரிய கிணத்து தெருவை சேர்ந்தவவர் பாலமுருகன் (வயது 45). கடந்த 2021-ம் ஆண்டு இவர் அம்மாப்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் ஆட்களை வேலைக்கு அமர்த்தி, வெளிமாநில லாட்டரி சீட்டு என்ற பெயரில் வெள்ளை துண்டு சீட்டில் போலியாக நம்பர் எழுதி மோசடியில் ஈடுபட்டார். இது பற்றி தட்டிக்கேட்ட ரங்கநாதன் என்பவரை திட்டி கத்தியால் குத்தினார். இதை தடுக்க வந்த ெபாதுமக்களை பாலமுருகன் கத்தியை காட்டி மிரட்டினார். இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    சேலம் மத்திய ெஜயிலில் அடைக்கப்பட்டுள்ள கோகுல்நாத், ஜாபர் அலி, கார்த்திக், பால முருகன் ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோதாவிடம் பரிந்துரை செய்தனர். இதையடுத்து போலீஸ் கமிஷனர், மேற்கண்ட 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க ஆணை பிறப்பித்தார். இந்த உத்தரவு ஆணை சேலம் மத்திய சிறையில் வழங்கப்பட்டது.

    • கஞ்சா விற்ற 48 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    • ரூ.7.12 கோடி சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டன.

    மதுரை

    மதுரை மாவட்டம் ஒத்தக்கடை, நாகமலை புதுக்கோட்டை, சேடப்பட்டி, ஆஸ்டின்பட்டி ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்றதாக 35 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களில் 11 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். கஞ்சா வியாபாரிகளின் ரூ.7 கோடியே 3 லட்சத்து 51ஆயிரத்து 922 மதிப்பு உள்ள அசையா சொத்துக்கள், ரூ.8லட்சத்து 49 ஆயிரத்து 981 மதிப்பிலான அசையும் சொத்துக்கள் உள்பட ரூ.7 கோடியே 12 லட்சத்து 1903 மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன.

    மதுரை மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் தொடர்பு உடைய 205 பேரில், 109 பேரிடம் பிணைய பத்திரம் எழுதி வாங்கப்பட்டு உள்ளது. இதில் ஒப்பந்த விதிகளை மீறியதாக 35 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    கஞ்சா வியாபாரிகள் மட்டுமின்றி அவர்களின் 41 உறவினர்களுக்கு சொந்தமான 15 வீடுகள், இடம் மற்றும் 21 நிலங்கள், 5 கடைகள், 2 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகிய சொத்துக்களும் முடக்கப்பட்டன.

    மதுரை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 48 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மற்றும் உறவினர்களின் அசையும்- அசையா சொத்துக்களும் முடக்கப்படும் என்று மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் தெரிவித்தார்.

    • சேலம் கிச்சிபாளையம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தலில் 2 பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
    • மேலும் அதனை பதுக்கி வைத்தும் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.

    சேலம்:

    சேலம் நெத்திமேடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார், சேலம் கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர்கள் 2 பேரும் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டனர் .மேலும் அதனை பதுக்கி வைத்தும் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். குற்ற செயல்களை தடுக்கும் வகையில் அவர்கள் 2 பேரையும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் மலர்விழி குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் அவர்கள் 2 பேரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மதுரை

    சம்மட்டிபுரம், பாரதியார் தெருவைச் சேர்ந்த அன்புசெல்வம் மகன் மணிகண்டன் (வயது 19). சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, வள்ளுவர் நகர், பர்மா காலனி ஆறுமுகம் மகன் சேதுபதி (வயது 22). மேற்கண்ட 2 பேர் மீதும் கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருவரும் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடுவதாக போலீசுக்கு தகவல் வந்தது.

    2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி சேதுபதி, மணிகண்டன் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×