search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயுர்வேதம்"

    • உடல் பருமனுள்ளவர்களுக்கு அதிகமாக வருகிறது.
    • நின்றுகொண்டே வேலை பார்ப்பவர்களுக்கு வரும்.

    வெரிகோஸ் வெயின் பிரச்சினை என்பது பெரும்பாலும் கால்களில் தோலுக்கு அருகிலுள்ள ரத்த நாளங்களில் உள்ள வால்வுகள் ஒழுங்காக செயல்படாமல் இருப்பது, அல்லது செயலற்று போவதால் ரத்தம் கீழ்நோக்கி தேங்கி, நாளங்கள் வீங்கி, சுருண்டு காணப்படும் நோயாகும். இது பெரும்பாலும் நின்றுகொண்டே வேலை பார்ப்பவர்களுக்கும், உடல் பருமனுள்ளவர்களுக்கும் அதிகமாக வருகிறது. இந்நோயில் ரத்தம் தேங்கி நிற்பதால் நிற மாற்றமடைந்து நீலம் கலந்த கருப்பு நிறத்தில் காணப்படும், அரிப்பு, புண்கள் எளிதில் வருகிறது.

    இதற்கான சித்த மருந்துகள்: அமுக்கரா சூரணம் 1 கிராம், முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி., நாக பற்பம் 100 மி.கி., எடுத்து தேன், பால் அல்லது வெந்நீரில் மூன்று வேளை சாப்பிடலாம். பாதிக்கப்பட்ட பகுதியில் எட்டித் தைலம் தேய்க்கலாம். அரிப்பு இருந்தால் அருகன் தைலமும், புண் இருந்தால் பச்சை எண்ணெய்யும் அந்த இடத்தில் போடலாம். அவுரியை அரைத்து வெரிகோஸ் வெய்ன் பிரச்சினை உள்ள இடத்தில் கட்டலாம்.

    சிறப்பு சிகிச்சையாக "அட்டை விடுதல் சிகிச்சை" செய்யலாம். இது சித்தர் பெருமான் அகத்தியர் அருளியது. இந்த சிகிச்சையில் வலி இருக்காது. தொடர்ந்து அட்டை விடும் போது இந்த வெரிகோஸ் வெய்ன் பிரச்சினை நன்றாக சரியாகிவிடும். இது ஒரு பாதிப்பில்லாத எளிய சிகிச்சை முறை. பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவமனையில் இந்த சிகிச்சை இலவசமாக கிடைக்கும்.

    வெரிகோஸ் வெய்ன் பாதிப்புள்ளவர்கள் நெடுந்தூரம் நடக்கும் போது அல்லது வெகு நேரம் நிற்கும் போது பாதிக்கப் பட்ட இடத்தில் இறுக்கமாக துணி அல்லது பேண்டேஜ் கட்டுவது நல்லது.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • நாம் உண்ணும் உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும்.
    • மலக்கட்டு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    வேலூரைச்சேர்ந்த சித்த மருத்துவரும் இம்ப்காப்ஸ் இயக்குனருமான டி.பாஸ்கரன் கூறியதாவது:-

    மூட்டு வலியைப் பொறுத்தவரை மூட்டுகளில் (கீல்) வலியின் ஆதிக்கம் அதிகரித்து நோய் உண்டாகும். மூட்டுகளில் வீங்குவது, குத்துவது, நோவது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி கால்களை மடக்கவும், நீட்டவும், அசைக்கவும் முடியாமல் செய்யக்கூடியது இந்த மூட்டு வலி. 60-70 வயதில் ஏற்பட்ட இந்நோய் தற்போதைய சத்தற்ற உணவு மற்றும் நீரின் காரணமாக சிறு வயதினரையும் பாதிக்கிறது.

    இதுபோன்ற சூழலில் முடக்கத்தான் இலைச்சாற்றையும் விளக்கெண்ணெயையும் சம அளவு எடுத்து கலந்து காய்ச்சி வடிகட்டி சர்க்கரை சேர்த்து வேளைக்கு ஒரு டீஸ்பூன் சாப்பிடலாம். இதை தினமும் இரண்டு தடவை வீதம் சாப்பிட்டால் முழங்கால் வலி தீரும்.

    வாதநாராயணன் இலைகளை நிழலில் காயவைத்துப் பொடியாக்கி தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டால் வாதநோய்கள் விலகும்.

    நொச்சிஇலை (5), மிளகு (5) போன்றவற்றை நீர் விடாமல் அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து வெந்நீர் கலந்து சாப்பிடுவது நல்லது.

    இதைச் சாப்பிட்டால் ஓரிரு வேளையிலேயே வாய்வு பிடிப்பு நீங்கிவிடும். சிற்றரத்தையை பால் விட்டு அரைத்து பாலில் கரைத்துக் காய்ச்சி வடிகட்டிச் சாப்பிடலாம். இதனுடன் தகுந்த அளவு சர்க்கரை சேர்த்து தினமும் இரண்டுவேளை பருகி வந்தால் வாத நோய் விலகும்.

    மூட்டு வீக்கம்

    கைப்பிடி அளவு வாதநாராயணன் இலையுடன் ஆறு மிளகு, சிறிது உப்பு சேர்த்து இடித்து சாறு பிழிந்து தினமும் காலையில் அருந்த வேண்டும். இதை 10 நாட்கள் தொடர்ந்து அருந்தி வந்தால் வாத வீக்கம் மற்றும் குடைச்சல் நீங்கும்.

    கட்டுக்கொடியின் வேர், சுக்கு, மிளகு போன்றவற்றை 5 கிராம் வீதம் எடுத்து சிதைத்து குடிநீராக்கி அருந்தினால் வாத வலிகள் தீரும். இதேபோல் முருங்கை ஈர்க்கினை சிதைத்து நீர் விட்டுக் காய்ச்சிக் குடித்தால் உடல் வலி மற்றும் அசதி தீரும்

    உணவு முறைகள்

    மூட்டு வலி, வாத நோய்களால் வரக்கூடிய மூட்டுவலிகளுக்கு நாம் உண்ணும் உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும். மலக்கட்டு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக கிழங்கு வகைகளைத் தவிர்த்து உளுந்து, சீரகம், சோம்பு, பூண்டு, இஞ்சி, நாட்டுக்கோழி, முட்டை போன்றவற்றைச் சேர்க்கவும். கீரை, பச்சைக் காய்கறிகள், பிரண்டைத் துவையல், முருங்கைக்கீரை மற்றும் அதன் பூ போன்றவற்றை சாப்பிட வேண்டும். பாதாம், அக்ரோட், பேரீச்சம்பழம், நல்லெண்ணெய் போன்றவையும் நல்லது.

    மூட்டுவலிக்கு எண்ணெய் துத்தி இலை, குப்பைமேனித் தழை, சோற்றுக் கற்றாழை, கோவை இலை போன்றவற்றை வகைக்கு 100 கிராம் அளவு எடுத்து தனித்தனியாக இடித்து சாறு பிழிய வேண்டும். இத்துடன் 750 மில்லி அளவு வேப்பெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி வடிகட்ட வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தடவினால் வாத வலி நீங்கும்.

    தழுதாழை இலையை சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது விளக்கெண்ணெய் கலந்து வதக்கி மூட்டுவலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். மூன்று நாட்கள் தொடர்ந்து ஒத்தடம் கொடுத்தால் மூட்டு வலி நீங்கும்.

    பழங்கள்

    உணவில் வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்து கருப்பட்டி, வெல்லம் சேர்க்க வேண்டும். செக்கில் ஆட்டிய எண்ணெய் பயன்படுத்த வேண்டும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் கேழ்வரகு, சாமை, தினை போன்ற சிறுதானிய உணவுகளையும் மூங்கிலரிசியையும் பயன்படுத்த வேண்டும். முருங்கைக்காய், முருங்கைக் கீரை, பூண்டு, முடக்கத்தான், தேங்காய், நெல்லிக்காய், கைக்குத்தலரிசி சேர்க்கவும். பழங்களில் சப்போட்டா, மாதுளை, அன்னாசி சேர்த்துக்கொள்ள வேண்டும். வெள்ளாட்டுக்கறி, வெள்ளாட்டு கால்கள் சிறந்த உணவு. குறிப்பாக நீர் வடிவமாக எடுத்துக் கொள்ளும்போது தேவையான புரதச்சத்து கிடைக்கும். இரவில் ஊற வைத்த கருப்பு எள்ளினை காலையில் வெறும் வயிற்றில் உண்ணலாம். பாசிப்பருப்பு சுண்டல், கொண்டைக்கடலை சுண்டலை மாலையில் எடுத்துக்கொள்ளலாம்.

    வெளிப் பிரயோகம்

    வேம்பு, புங்கன், இலுப்பை, நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் போன்ற ஐங்கூட்டு எண்ணெய் 10 கிராம் எடுத்து அதனுடன் ஐந்து பழுத்த எருக்கு இலை, பச்சைக் கற்பூரம் சேர்த்து காய்ச்சி பூசினால் வலி உடனே குறையும். 100 மில்லி நல்லெண்ணெயுடன் பூனைக்கண் குங்கிலியம் 10 கிராம் சேர்த்துக் காய்ச்சி பூசலாம். தேங்காய் எண்ணெயைக் காய்ச்சி அதில் கற்பூரம் சேர்த்து பயன்படுத்தலாம். இரண்டு டீஸ்பூன் உளுந்துடன் ஒரு டீஸ்பூன் ஆவாரை இலைப் பொடி நீர் சேர்த்துப் பற்றிடலாம். இவற்றையெல்லாம் முறைப்படி செய்தால் மூட்டு வலியில் இருந்து விடுபடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சித்த மருத்துவர் டி.பாஸ்கரன்.

    • யோகா, ஆயுர்வேதம் உலகிற்கு புதிய நம்பிக்கை,
    • 30க்கும் மேற்பட்ட நாடுகள் ஆயுர்வேதத்தை பாரம்பரிய மருத்துவமுறையாக அங்கீகரித்துள்ளன.

    புதுடெல்லி:

    கோவாவின் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம், காஜியாபாத் தேசிய யுனானி மருத்துவ நிறுவனம் மற்றும் டெல்லியில் உள்ள பனாஜியில் உள்ள தேசிய ஹோமியோபதி நிறுவனம் ஆகிய 3 தேசிய ஆயுஷ் நிறுவனங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

    அதன் பின்னர் விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:- ஆயுர்வேதம் என்பது சிகிச்சை மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. யோகா & ஆயுர்வேதம் உலகிற்கு புதிய நம்பிக்கை. ஆயுர்வேதத்தின் முடிவும் விளைவும் எங்களிடம் இருந்தது, ஆனால் சான்றுகளின் அடிப்படையில் நாங்கள் பின்தங்கியிருந்தோம். எனவே, இன்று நாம் 'தரவு அடிப்படையிலான ஆதாரங்களை' ஆவணப்படுத்த வேண்டும்.

    இந்த 3 நிறுவனங்கள் ஆயுஷ் சுகாதார அமைப்புக்கு வேகம் கொடுக்கும். 30க்கும் மேற்பட்ட நாடுகள் ஆயுர்வேதத்தை பாரம்பரிய மருத்துவ முறையாக அங்கீகரித்துள்ளன. மற்ற நாடுகளிலும் ஆயுர்வேதத்தை நாம் ஊக்குவிக்க வேண்டும். ஆயுர்வேதம் சரியான வாழ்க்கை முறையை நமக்குக் கற்பிக்கிறது.

    நமது மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை எப்படிப் பேணுவது என்பதற்கான வழிகாட்டி ஆயுர்வேதம் தான். 'ஒரே பூமிக்கு ஒரே ஆரோக்கியம்' என்ற எதிர்காலக் கண்ணோட்டத்தை உலகிற்கு முன் வைத்துள்ளோம். இதன் பொருள் ஆரோக்கியத்திற்கான உலகளாவிய பார்வை இவ்வாறு அவர் கூறினார்.

    • புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது
    • தைராய்டு சுரப்பி பிரச்சினை உள்ளவர்களுக்கு இது ஓர் அருமருந்து.

    சித்த மருத்துவத்தில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் மிகப் பழமையான மூலிகை மருந்து கருஞ்சீரகம். 100 கிராம் கருஞ்சீரகத்தில் கார்போஹைட்ரேட் 24.9, புரதம் 26.7, கொழுப்பு 28.5 சதவீதத்தில் உள்ளது. வைட்டமின்கள் ஏ, சி, ஈ, பி மற்றும் லினோலெய்க் அமிலம் நிறைந்துள்ளது. இதிலுள்ள 'தைமோகுயினோன்' என்ற தாவர வேதிப்பொருள் மிகச்சிறந்த ஆன்ட்டி ஏஜிங், ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆகும்.

    இது உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதிலும், உடல் உள் உறுப்புகளில் ஏற்படும் கோளாறுகளை சீராக்குவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. கருஞ்சீரக விதைகளில் உள்ள எண்ணெய் சத்து கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரித்து இதய செயல் பாட்டை ஊக்குவிக்கிறது. டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கும் இது நல்ல பலனைத் தருகிறது. தைராய்டு சுரப்பி பிரச்சினை உள்ளவர்களுக்கு இது ஓர் அருமருந்து.

    இதை தினசரி உண்ணும் அளவு 1-3 கிராம். இதை வறுத்து பொடித்து டீ போல போட்டு குடிக்கலாம். அல்லது சமையலுக்கு பயன்படுத்தும் மசாலாவில் சேர்த்து பயன்படுத்தலாம்.

    கருஞ்சீரக விதைக்கு மாதவிடாயை தூண்டும் தன்மை உடையதால் கர்ப்பிணிகள் பயன்படுத்தக்கூடாது. ரத்த அழுத்தத்திற்கு மருந்து எடுப்பவர்கள் இதை அளவோடு எடுக்க வேண்டும், ஏன் எனில் இது ரத்த அழுத்தத்தை சிறிது குறைக்கும். கருஞ்சீரகத்தை தினமும் அளவோடு எடுத்து வந்தால் `இது ஆயுள் காக்கும் இறை மருந்து' என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    • தண்ணீர் கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் குடியுங்கள்.
    • தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிடுங்கள்.

    ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் குளிர்காற்று வீசுவதாலும், உடலில் பித்தம் அதிகரிப்பதாலும் உடலின் நோய் எதிர்ப்பு திறன் குறைந்து காணப்படும். ஆகவே சாதாரண வைரஸ் காய்ச்சல் போன்றவை எளிதில் வருகிறது.

    இதற்கு பயன்தரும் சித்தமருந்துகள்:

    1) நிலவேம்பு குடிநீர் 60 மி.லி. வீதம் தொடர்ந்து ஒரு வாரம் குடிக்க வேண்டும். இதனால் வைரஸ் காய்ச்சல் குணமாகும்.

    2) இருமலுக்கு ஆடாதோடை மணப்பாகு 5-10 மி.லி. வீதம் காலை-மாலை இருவேளை குடிக்க வேண்டும். இதனால் சளித்தொந்தரவு குணமாகும்.

    3) தாளிசாதி வடகம் மாத்திரைகள் இரண்டு எடுத்துக்கொண்டு காலை, மதியம், இரவு கடித்து உமிழ்நீருடன் கலந்து சாப்பிட வேண்டும். இதனால் தொண்டை கரகரப்பு நீங்கும்.

    பொதுவாக குளிர்காலத்தில் கட்டாயம் முகக்கவசம் அணியுங்கள். தண்ணீர் கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் குடியுங்கள். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிடுங்கள். பாலில் மிளகு, மஞ்சள், பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி குடியுங்கள். கொசுக்கள் மூலம் பரவும் நோய்களைத் தவிர்க்க வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்கி நிற்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    • சில மூலிகைகள், உடல் ஆரோக்கியத்துக்கும் நன்மை அளிப்பவையாக இருக்கின்றன.
    • பார்ஸ்லி உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

    சமையலில் உணவுக்கு சுவை கூட்டுவதற்காகவும், நிறத்துக்காகவும், வாசனைக்காகவும் சேர்க்கப்படும் சில மூலிகைகள், உடல் ஆரோக்கியத்துக்கும் நன்மை அளிப்பவையாக இருக்கின்றன. அவற்றைப் பற்றிய தொகுப்பு இங்கே…

    பார்ஸ்லி: பார்ஸ்லி தோற்றத்தில் கொத்தமல்லி போன்று இருக்கும். இதன் இலை, விதை, வேர் என அனைத்தும் உணவுக்கு சுவை கூட்டுவதற்காக உபயோகப்படுத்தப்படுகிறது. பார்ஸ்லி விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், அழகு சாதனப் பொருட்கள், சோப், ஷாம்பு, வாசனைத் திரவியங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது. இதில், ஆன்டி-ஆக்ஸிடண்டுகள், கரோட்டினாய்டுகள், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. பார்ஸ்லியில் இருக்கும் சத்துக்கள் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்துகிறது. செரிமானத்தை சீராக்குகிறது. சிறுநீர் உற்பத்தியை பெருக்குகிறது. மேலும் ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

    பிரிஞ்சி இலை: பிரிஞ்சி இலை எனப்படும் பிரியாணி இலையை, பச்சையாக எடுத்து தேநீர் தயாரித்து பருகி வரலாம். இதனால் ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும். சர்க்கரை நோயாளிகளுக்கு பிரிஞ்சி இலை மிகவும் பயனுள்ளது. இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடண்டுகள், வைட்டமின் ஏ, சி, இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.

    லெமன் கிராஸ்: லெமன் கிராசில் போலிக் அமிலம், பொட்டாசியம், தாமிரம், தயாமின், இரும்புச்சத்து, துத்தநாகம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதைக்கொண்டு தேநீர் தயாரித்துக் குடிக்கலாம். இதனால், உயர் ரத்த அழுத்தம் குறையும். புற்றுநோய் செல்கள் அழியும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். கல்லீரல் சுத்தமாகும். பூஞ்சைத் தொற்று குறையும். இந்த புல்லில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்யைத் தோல் பாதிப்புகளுக்குத் தடவலாம். பொடுகு பிரச்சினை இருப்பவர்கள் லெமன் கிராஸ் எண்ணெய்யை தினமும் தடவி வந்தால் நாளடைவில் பொடுகுத் தொல்லை குறைவதுடன், முடி வளர்ச்சி அதிகரிக்கும். இந்த எண்ணெய்யில் விளக்கேற்றும்போது, கொசு தொல்லை நீங்கும்.

    ஓரிகானோ: இது ஒரு சுவையூட்டி. இந்த மூலிகையைப் பசுமையாக மட்டுமின்றி, காய்ந்த நிலையிலும் பயன்படுத்தலாம். ஓரிகானோவை உணவில் சேர்த்துவந்தால் இருமல், பதற்றம், தலைவலி, ஒழுங்கற்ற மாதவிடாய், பல் வலி ஆகியவை நீங்கும். வயிறு மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் தீரும்.

    ரோஸ்மேரி: புதினா குடும்பத்தைச் சேர்ந்த ரோஸ்மேரி, வாசனை மூலிகைகளில் ஒன்று. இதை தேநீராகத் தயாரித்துக் குடிக்கும்போது மனச்சோர்வு நீங்கி, புத்துணர்வு கிடைக்கும். தூக்கமின்மை பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். இதில், வைட்டமின் பி6 நிறைந்துள்ளது. இதனால் நினைவாற்றல் மேம்படும். தசை வலி நீங்கும். குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் அதிகரிக்கும். மூளையின் உணர்ச்சிகள் சமநிலை அடையும்.

    • மலச்சிக்கல் இருந்தாலும் முகப்பரு ஏற்படும்.
    • எக்காரணம்கொண்டும் எலுமிச்சைப்பழச் சாற்றைத் தனியாக முகத்தில் தேய்க்கக் கூடாது.

    எந்த வகையினால் முகப்பரு ஏற்பட்டிருந்தாலும் எளிமையான முறையில் அதை எப்படி நீக்குவது என்பதுபற்றி இங்கே பார்க்கலாம்.

    - திருநீற்றுப்பச்சிலையை அரைத்து முகப்பரு உள்ள இடங்களில் தொடர்ந்து தடவி வந்தால் எளிதில் குணம் கிடைக்கும். திரிபலா பொடி கசாயத்தால் முகம் கழுவிவந்தாலும் பருக்கள் நீங்கும்.

    - குங்குமாதி லேபத்தைப் பருக்களின்மீது தடவி வர, பருக்கள் மறைவதோடு தழும்புகளும் விரைவில் நீங்கும்.

    - பசுஞ்சாணத்தில் செய்யப்பட்ட விபூதியை தண்ணீரில் குழைத்துத் தேய்த்துவந்தாலும் பருக்கள் மறையும்.

    - 50 மில்லி நல்லெண்ணெயுடன் மிளகை ஊற வைக்க வேண்டும். 20 நாள்கள் கழித்துப் பயன்படுத்த வேண்டும். இதை முகப்பரு உள்ள இடங்களில் தடவி வர பருக்கள் நீங்கும்.

    - அரிசி மாவில் செய்யப்பட்ட நாமக்கட்டியை உரசி தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலும் இது நீங்கும்.

    - வெங்காரத்தைப் பொரித்தால் (போரக்ஸ்) அது மாவாகக் கரையும். அதைத் தண்ணீருடன் கலந்து பரு பழுத்திருக்கும் இடங்களில் தடவி வந்தால் விரைவில் பழுத்து உடையும்.

    - வெள்ளரிப் பிஞ்சை தக்காளி ஜூஸில் ஊற வைத்துத் தொடர்ந்து முகம் கழுவி வர விரைவில் பரு மறையும். அத்துடன் மீண்டும் முகப்பரு வருவதைக் கட்டுப்படுத்தும்.

    - மலச்சிக்கல் இருந்தாலும் முகப்பரு ஏற்படும். வெட்பாலை தைலத்தைப் பயன்படுத்தி வர மலச்சிக்கல் நீங்குவதோடு, முகப்பருவும் மறையும்.

    - பொடுகால் ஏற்படும் முகப்பருவுக்குப் பொடுதலை இலைச்சாற்றைத் தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வர பொடுகு நீங்குவதோடு, முகப்பருக்கள் சீக்கிரம் மறையும்.

    - எலுமிச்சைப்பழச் சாறு, ரோஜாவால் தயாரிக்கப்பட்ட பன்னீர் இரண்டையும் சம அளவு எடுத்துக் கலந்து முகத்தில் பூசி, அரை மணி நேரம் ஊறவைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். வாரம் மூன்று நாள்கள் இவ்வாறு செய்துவந்தால், முகப்பரு மறைந்துவிடும். எக்காரணம்கொண்டும் எலுமிச்சைப்பழச் சாற்றைத் தனியாக முகத்தில் தேய்க்கக் கூடாது. இதில் உள்ள சிட்ரிக் அமிலம் சருமத்தைப் பாதிக்கும். பன்னீர் வாங்கும்போது, அதன் தரத்தைப் பரிசோதித்து வாங்கிப் பயன்படுத்துவது அவசியம்.

    - வேப்பிலை சிறந்த கிருமி நாசினி. கொழுந்து வேப்பிலையைத் தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ, முகப்பருக்கள் நீங்கும்.

    • திரிகடுகு மருந்து நாட்டு மருந்து கடைகளில் மிக எளிதாகக் கிடைக்கின்றன.
    • திரிகடுகு மருந்தை நம்முடைய வீட்டிலேயே மிக எளிமையாக செய்து கொள்ள முடியும்.

    திரிகடுகு என்பது சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் 3 மருத்துவ குணங்கள் கொண்ட பொருட்கள் சேர்ந்த கலவை தான்..

    திரி என்றால் ஆங்கிலத்தில் மட்டுமல்ல; பழந்தமிழிலும் மூன்று என்றுதான் அர்த்தம். சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று மூலப்பொருட்கள் அடங்கியதுதான் திரிகடுகம். எல்லோருடைய வீடுகளிலும் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஒரு இயற்கை மருந்து என்றால் அது இந்த திரிகடுகம்தான். திரிகடுகு சூரணம் என்ற பெயரில் ரெடிமேடாக கிடைத்தாலும் வீட்டில் எளிதாக செய்து கொள்ள முடியும். திரிகடுகு மருந்து நாட்டு மருந்து கடைகளில் மிக எளிதாகக் கிடைக்கின்றன. ஆனால் இந்த திரிகடுகு மருந்தை நம்முடைய வீட்டிலேயே மிக எளிமையாக செய்து கொள்ள முடியும்.

    நல்ல தரமான சுக்கை வாங்கி, அதன் தோலை நீக்கிவிட்டு வெறும் வாணலியில் இட்டு வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். சுக்கை அப்படியே போட்டு மிக்சியில் அரைத்தால் அரைபடாது. லேசாக வறுத்துப் போட்டால் எளிதாக பொடித்துவிட முடியும்.

    சுக்கை போலவே மிளகு மற்றும் திப்பிலி இரண்டையும் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். நன்கு ஆறியதும் இந்த மூன்றையும் மிக்சி ஜாரில் போட்டு அரைத்து நன்கு பொடி செய்து சலித்து எடுக்க வேண்டும். இப்போது திரிகடுகு சூரணம் ரெடி. இதை ஒருகாற்று புகாத பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

    திரிகடுகு சூரணம் காரத்தன்மை கொண்டது. 12 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் ஒரு கிராம் அளவுக்கு திரிகடுகு சூரணத்தை எடுத்து வெந்நீரில் கலந்து தேன் சேர்த்துக் குடிக்கலாம். அல்லது தேனில் குழைத்து அப்படியே சாப்பிடலாம். 12 வயதுக்கும் குறைவான சிறுவர்களாக இருந்தால் 2 சிட்டிகை அளவு மட்டும் எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிடக் கொடுக்கலாம். இதை காலை மற்றும் மாலை என தினம் இரண்டு வேளை மட்டும் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெறும், நோய்களும் அண்டாது.

    • நாமக்கட்டியில் உடலுக்குத் தேவையான கால்சியம் சத்து உள்ளது.
    • நாமக்கட்டியில் உடலுக்குத் தேவையான கால்சியம் சத்து உள்ளது.

    சில தலைமுறைகள் வரை எல்லோரது வீடுகளிலும் இருந்த பொருள் நாமக்கட்டி. தற்போது பலருக்கு அது பற்றிய விவரங்களும், பயன்களும் தெரியாது. நெற்றியில் நாமம் இடுவதற்காக பயன்படுத்தும் நாமக்கட்டி, அதையும் தாண்டி பல நன்மைகளைத் தரக்கூடியது. அதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

    தயாரிக்கும் முறை: வெள்ளைப் பாறைகளை உடைத்து மண்ணாக மாற்றி, அதில் தண்ணீர் கலந்து இரண்டு நாட்கள் அப்படியே வைத்திருந்து, பின்னர் அந்தத் தண்ணீரை வெளியேற்றிய பிறகு, அடியில் தங்கி இருக்கும் வெள்ளைக் களிமண்ணில் இருந்துதான் நாமக்கட்டி தயாரிக்கப்படுகிறது.

    சீரான ரத்த ஓட்டம்: நாமக்கட்டியில் உடலுக்குத் தேவையான கால்சியம் சத்து உள்ளது. இது எலும்பு அமைப்பு, தசைகள், நரம்பு மண்டலத்தின் இயக்கம் மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

    உடலுக்கு குளிர்ச்சி: நாமக்கட்டி உடல் உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்று வலிக்கு நல்ல தீர்வாகும். காலை, மாலை இரண்டு வேளையும் நாமக்கட்டியைத் தண்ணீரில் குழைத்து வயிற்றின் மேல் தடவி வந்தால் மலச்சிக்கல் போன்ற வயிற்றுக் கோளாறுகளை குணமாக்கும். உடல் சூட்டைத் தணித்து, குளிர்ச்சியைத் தரும்.

    முகப்பரு மற்றும் வறட்சி: முகத்தில் உண்டாகும் பருக்கள், கொப்புளங்களை நீக்க நாமக்கட்டியைப் பயன்படுத்தலாம். நாமக்கட்டியை அரைத்து அதில் பன்னீர் கலந்து பருக்கள் உள்ள இடத்தில் தடவ வேண்டும். நன்றாக உலர்ந்த பிறகு குளிர்ந்த நீரினால் முகத்தைக் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்யும்போது பருக்கள், கொப்புளங்கள் நீங்கிவிடும். வறட்சியால் முகத்தில் காணப்படும் சுருக்கங்கள் மறையும். நீண்ட நேரம் முகம் குளிர்ச்சியாக இருக்கும்.

    வீக்கம் மற்றும் ரத்தக்கட்டு: உடலில் கை, கால், மூட்டு போன்ற இடங்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் ரத்தக் கட்டிற்கு நாமக்கட்டி சிறந்த மருந்தாகச் செயல்படுகிறது. இரவு தூங்கச் செல்வதற்கு முன் நாமக்கட்டியைத் தண்ணீரில் குழைத்து வீக்கம் உள்ள இடத்தில் தடவ வேண்டும். காலையில் எழுந்து வெந்நீரிலோ அல்லது சாதம் வடித்த தண்ணீரிலோ கழுவினால் விரைவில் குணமாகும்.

    தாய்-சேய் மருந்து: பிரசவத்திற்குப் பின்பு பெண்களுக்கு ஏற்படும் சருமப் பிரச்சினைகளுக்கு நாமக்கட்டியுடன் சந்தனம் கலந்து சருமத்தில் பூசி வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும். குழந்தைகளின் உடம்பில் உஷ்ணத்தால் ஒரு வித சொறி மற்றும் கண்களில் கட்டி ஏற்படும். அதற்கு நாமக்கட்டியுடன் சந்தனம் கலந்து உபயோகிக்கலாம்.

    • அக்கால மக்களின் ஆரோக்கிய உணவில் வெற்றிலையும் அடங்கும்.
    • கால்சியம், இரும்புச்சத்து ஆகியவையும் வெற்றிலையில் அடங்கி இருக்கிறது.

    வெற்றிலை, மருத்துவ குணம் கொண்ட பொருள் மட்டுமல்ல, மங்களகரமானதும் கூட. நம் நாட்டை பொறுத்தவரை வெற்றிலை இல்லாமல் எந்தவொரு சுப நிகழ்ச்சியும் நடைபெறுவதில்லை. எல்லா நிகழ்ச்சிகளிலும் முதன்மையாக இடம் பிடிப்பது வெற்றிலைதான். சங்க கால நூல்களிலும் வெற்றிலையின் சிறப்புகள் பற்றி குறிப்பிடப்பட் டிருக்கிறது. பத்துப்பாட்டு, மணிமேகலை, சீவக சிந்தாமணி, கலிங்கத்து பரணி, கம்பராமா யணம் என வெற்றிலை இடம்பெற்றிருக்கும் நூல்களின் பட்டியல் வெகு நீளம்.

    அக்கால மக்களின் ஆரோக்கிய உணவில் வெற்றிலையும் அடங்கும். இது ஒரு மருந்து பொருளும் கூட. ஜீரண உறுப்புகள் சரியாக வேலை செய்ய வெற்றிலை துணை புரிகிறது. இது தவிர பற்களுக்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து ஆகியவையும் இதில் அடங்கி இருக்கிறது. வயிற்றில் உள்ள விஷக்கிருமிகளை கொல்லும் தன்மை வெற்றிலைக்கு உண்டு. நீர்ச்சத்தும் நிரம்பப்பெற்றது. வைட்டமின் சி, கரோட்டீன், புரத சத்தும் நிரம்பியது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப் படுத்தி கெட்டக் கொழுப்பை வெளியேற்றக் கூடியது. ஆயுர்வேத மருந்துகள் பலவற்றில் வெற்றிலை இடம் பிடித்திருக்கிறது.

    தீக்காயம்: வெற்றிலை குளிர்ச்சி யானது. தீக்காயங்கள் உள்ள இடத்தில் வெற்றிலையுடன் மஞ்சளை சேர்த்து அரைத்து தடவி வரலாம். தீக்காய எரிச்சல் நீங்கும். காயமும் விரைவாக ஆறும்.

    பல் சொத்தை: வெற்றிலையை வெறும் வாயில் மென்று வந்தால் பற்கள், ஈறுகள் பலப்படும். பல் சொத்தையாவதும் தவிர்க்கப்படும்.

    துர்நாற்றம்: வாயில் துர்நாற்றம் வீசுவதற்கு வயிற்றில் நுண்கிருமிகள் இருப்பதுதான் காரணம். வெற்றிலையை சாறு எடுத்து பருகினால் அது துர்நாற்றத்திற்கு காரணமான நுண்கிருமிகளை கொன்று நிரந்தர தீர்வளிக்கும்.

    எரிச்சல்: தோல் சம்பந்தப்பட்ட அலர்ஜி, எரிச்சல் போன்ற அனைத்திற்கும் சிறந்த மருந்தாக வெற்றிலை விளங்குகிறது. 10 வெற்றிலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு சாறு எடுத்துக்கொள்ளவும். அந்த சாற்றை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து உடல் முழுவதும் தேய்த்து விட்டு, சிறிது நேரம் கழித்து குளித்துவிடலாம். குளிக்கும் நீரிலும் இந்த சாற்றை கலந்து கொள்ளலாம். எரிச்சல், அரிப்பு, அலர்ஜி போன்ற சரும பிரச்சினைகள் நீங்கும். இதில் ஆண்டி இன்ப்ளேமேட்ரி, ஆண்டி பேக்டீரியல் போன்ற பண்புகள் உள்ளதால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

    • 300 படுக்கை வசதிகளுடன் சிறப்பு வசதிகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றுவதற்கு பரிந்துரைக்கப்படும்
    • தேசிய நெடுஞ்சாலைகளை சீர் செய்வதற்கான பரிந்துரை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்படும்

    நாகர்கோவில் :

    தமிழ்நாடு சட்டப்பே ரவை பொது கணக்கு குழுத்தலைவர் செல்வ பெருந்தகை, கலெக்டர் அரவிந்த் மற்றும் பொது கணக்கு குழு உறுப்பி னர்கள் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் அலு வலக வருவாய் கூட்ட ரங்கில் துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செல்வ பெருந்தகை நிருபர் களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்கு குழு சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் விவேகா னந்தர் பாறை மற்றும் திருவள்ளு வர் சிலை, குளச்சல் மீன்பிடித்துறை முகம், கோட்டார் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகிய வற்றை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    தேங்காய்பட்டணம் துறைமுகம், குளச்சல் துறைமுகம் போன்றவற்றில் சிறப்பு கவனம் செலுத்து மாறு சட்டப்பேரவை பொது கணக்கு குழு பல பரிந்துரைகள் செய்திருக்கிறது. இனிவரும் காலங்களில் உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் திட்டங்களை தீட்டுவதோடு. அப்பகுதி மீனவர்கள் மற்றும் வசிப்பவர்களிடம் கேட்டறிந்தும், எப்படி செப்பனிட வேண்டும் விபத்துக்கள் ஏற்படாத வகையில் ஆய்வு மேற்கொண்டு செப்பனிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

    கோட்டாரில் அமைந்துள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை 300 படுக்கை வசதிகளுடன் சிறப்பு வசதிகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றுவதற்கு பரிந்துரைக்கப்படும். தேங்காய் பட்டணம் துறைமுகத்தில் 6 பேர் இறந்துள்ளார்கள்.

    அதில் ஒருவர் வயது முதிர்வு என்ற அடிப்படையில் அன்னாரது குடும்பத்திற்கு கொடுக்க வேண்டிய இழப்பீட்டு தொகையினை குறைத்து வழங்கப்பட்டுள்ளது. எனவே, மீதமுள்ள 5 நபர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையை போன்று வயது முதிர்ந்த நபரின் குடும்பத்தினருக்கும் வழங்குவதற்கு பரிந்துரைக்கப்படும்.

    களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரையிலான தேசிய நெடுஞ்சாலைகளை சீர் செய்வதற்கான பரிந்துரை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்படும். மேலும், குடிசை மாற்று வாரியத்தின் வாயிலாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வீடு இல்லாத பொதுமக்களுக்கு வழங்குவதற்கு பரிந்துரை சமர்ப்பிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வுக்கூட்டத்தில், மாவடட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத், விஜய்வசந்த் எம்.பி., பொது கணக்கு குழு உறுப்பினர்கள் காந்திராஜன், கார்த்தி கேயன், சிந்தனை செல்வன், வேல்முருகன், சட்டப்பேரவை சிறப்பு அலுவலர் ராஜா, எம்.எல்.ஏ.க்கள் விஜயதரணி, ராஜேஷ்குமார், எம்.ஆர். காந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, பத்மநாபபுரம் சப்-கலெக் டர் அலர்மேல்மங்கை, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த்மோகன், சட்டப்பேரவை சார்பு செயலாளர் பாலசீனிவா சன், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராம லிங்கம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×