search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 238496"

    • நள்ளிரவு மர்ம நபர்கள் கிணற்றில் கொட்டி விட்டு சென்று விட்டனர்
    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த கடைசி குளம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மகேஷ் இவர் கிராமத்தில் 10 ஏக்கரில் நெல் கரும்பு ஆகியவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.

    இவர் விவசாயம் செய்யும் விவசாய கிணற்றில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் கோழி கழிவுகளை கிணற்றில் கொட்டி விட்டு சென்று விட்டனர்.

    இதனால் அந்த விவசாய கிணறு துர்நாற்றம் வீசும் சூழல் ஏற்பட்டது.

    அங்கு வசிக்கும் 15 குடும்பங்களுக்கு இந்த விவசாய கிணற்றில் இருந்து தான் குடிநீர் எடுத்துச் செல்லுகிறது வழக்கம். இதனால் பே்பகுதி மக்கள் கோழி கழிவுகளை கொட்டி சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் சாராய வியாபாரிகளான அமரன், முத்து, ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் சப்ளை செய்த முக்கிய குற்றவாளிகள் புதுவை முத்தியால் பேட்டை ராஜா என்கிற பர்கத்துல்லா, வில்லியனூர் ஏழுமலை, சென்னை திருவேற்காடு இளையநம்பி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் மரக்காணம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் சாராயம், மதுபானம் விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் நாள்தோறும் ரோந்து பணியில் ஈடுபட்டு, ஏராளமானவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரிக்கின்றனர். அதில் ஒரு சிலர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கின்றனர்.

    நாளொன்றுக்கு சுமார் 100-க்கும் மேற்பட்டோரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரிப்பதால், போலீஸ் நிலையத்தில் துர்நாற்றம் வீசியது. இதனால் வானூர், கோட்டக்குப்பம் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு நேற்று மாலை மயக்கம் வந்தது. இதனையடுத்து பணியில் இருந்த போலீசார், விரைந்து சென்று பினாயில் வாங்கி வந்து போலீஸ் நிலையம் முழுவதும் தெளித்தனர். மேலும், போலீஸ் நிலையத்தின் வெளியிலும் தெளித்தனர். அதன் பின்னர் நிம்மதி பெருமூச்சு விட்ட போலீசார் தங்களின் பணிகளை தொடர்ந்தனர்.

    • கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசி வருவதோடு, தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
    • மாவட்ட நிர்வாகம் சனத்குமார் நதியை தூய்மைப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி நகர பகுதியை ஒட்டியுள்ள சனத்குமார் நதியின் ஆற்றுப்படுக்கை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தண்ணீர் செல்லும் பாதை முழுவதும் தடம் தெரியாமல் இருந்து வருகிறது.

    தற்போது இந்த நதியில் மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசி வருவதோடு, தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    அதே போல் ஆற்று படுக்கையில் குப்பைகளை கொட்டுவதால் கழிவு நீர் தொட்டியாக மாறி நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி, ஆறு மற்றும் குளங்களை தூர்வாரி நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் வத்தல்மலை என்ற மலையில் இருந்து தான் சனத்குமார் நதி உருவாகி வருகிறது.

    இந்த நதியில் இலளிகம், மாதேமங்கலம், அன்னசாகரம், அதியமான் கோட்டை, உள்ளிட்ட ஏரிகள் மற்றும் கோடிக்கரை வழியாக வருகின்ற தண்ணீர்தான் சனத்குமார் நதியாக செல்கிறது.

    தற்பொழுது சனத்குமார் நதி சாக்கடை கால்வாயாக மாறி உள்ளது. அதனால் மாவட்ட நிர்வாகம் சனத்குமார் நதியை தூய்மைப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தருமபுரி நகரப் பகுதியில் இருந்து செல்லும் சாக்கடை தண்ணீரையும், இலக்கியம்பட்டி பஞ்சாயத்தில் இருந்து வரும் சாக்கடை தண்ணீரையும் நேரடியாக சனத்குமார் நதியில் இணைத்துள்ளார்கள்.

    எனவே நகராட்சியும் பஞ்சாயத்து நிர்வாகமும் சாக்கடை கால்வாயில் வரும் கழிவு நீரை தனி கால்வாய் அமைத்து தூய்மைப்படுத்திய பின்னர் சனத்குமார் நதியில் விட வேண்டும்.

    சனத்குமார் நதியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • உணவுகளை அருந்திவிட்டு எறியப்படும் பாக்கு தட்டுகளால் குப்பைகள் சேருவதோடு மட்டுமல்லாமல் துர்நாற்றம் வீசுகின்றன.
    • சரியான முறையில் தூய்மை பணி இல்லாததால் ஒருசில பகுதிகளில் குப்பை கூடாரமாக காட்சியளிக்கின்றன.

     ஒகேனக்கல்,

    ஒகேனக்கல் சுற்றுலா தலமானது தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

    அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்லும் நடைபாதை, கார் பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உணவுகளை அருந்திவிட்டு எறியப்படும் பாக்கு தட்டுகளால் குப்பைகள் சேருவதோடு மட்டுமல்லாமல் துர்நாற்றம் வீசுகின்றன.

    சில நாட்களாக சரியான முறையில் தூய்மை பணி இல்லாததால் ஒருசில பகுதிகளில் குப்பை கூடாரமாக காட்சியளிக்கின்றன.

    இதனை கண்டு சுற்றுலாப் பயணிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த சூழ்நிலையில் தூய்மை பணியாளர்கள் மூலம் பாக்கு தட்டு மற்றும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 10 வார்டு பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீரை இந்த ஏரியில் விடுவதால் கழிவு நீர் கலந்து சாக்கடை நிறைந்த ஏரியாக மாறி உள்ளது.
    • மாவட்ட நிர்வாகமும், வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தருமபுரி,

    தமிழகத்தில் மிகப்பெரிய ஊராட்சி இலக்கியம்பட்டி முதன்மை ஊராட்சியாக இருந்து வருகிறது. இந்த ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ளது.

    பிடமனேரி, வி.ஜெட்டிஅள்ளி, மாந்தோப்பு, நெல்லிநகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த ஊராட்சியில் முக்கிய நீர் ஆதாரமாக இலக்கியம்பட்டி ஏரி, பிடமனேரி ஏரி ஆகிய இரண்டு ஏரிகள் இருந்து வருகிறது. இதில் பிடமனேரி ஏரி 40 ஏக்கர் பரப்பளவில் இருந்து வந்தது.

    ஏரியின் நடுவே 2 திறந்தவெளி கிணறுகள் அமைத்து ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யபட்டு வருகிறது.

    ஊராட்சி நிர்வாகத்தின் மெத்தன போக்கால் 10 வார்டுகளுக்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீரை இந்த ஏரியில் விடுவதால் ஏரி கழிவு நீர் கலந்து சாக்கடை நிறைந்த ஏரியாக மாறி உள்ளது.

    ஆண்டு தோறும் அரசுக்கு மீன் பாசி விற்பனையில் 15 லட்சத்திற்கு மேல் வருவாயை ஈட்டி தரும் இந்த ஏரி தற்பொழுது ஆகாயத்தாமரை நிறைந்து பார்க்கும் இடம் எல்லாம் பிளாஸ்டிக் கழிவுகளும், பன்றிகளும் மேய்ந்து ஏரி மாசுபட்டு துர்நாற்றம் வீசி வருவதால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஏரியை சுற்றி இருக்கும் பொது மக்களுக்கு நோய்த் தொற்றுகளுக்கு ஆளாகி அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது சம்பந்தமாக ஊராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் இப்பகுதி பொது மக்கள் பலமுறை முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது தருமபுரி மாவட்டத்திற்கு வருகை புரிந்திருந்த சட்டமன்ற கணக்கு குழுவிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் மனுவாக கொடுத்தோம். அதனைத் தொடர்ந்து சட்டமன்ற கணக்கு குழுவும் மாவட்ட ஆட்சியரும் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றி ஏரியை தூர்வாரி தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே இலக்கியம்பட்டி ஊராட்சி மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 10 ஏக்கர் ஏரி நிலத்தை மீட்க வேண்டும். ஏரிக்கு பாதுகாப்பு வேலி அமைத்து தண்ணீரை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரிக்கோடி பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது அதனையும் சீர் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தற்போது கோடை காலம் துவங்கி உள்ள நிலையில் ஏரியை தூர்வாரி, ஆகாய தாமரையை அகற்றினால் தருமபுரி நகர மக்களுக்கு பொழுது போக்குவதற்கு படகு சவாரி செய்யவும், பறவைகள் தங்குவதற்கும் ஏதுவாக இருக்கும். எனவே மாவட்ட நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும் வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • எரிவாயு எடுத்து செல்லும் குழாயில் இன்று அதிகாலை திடீர் கசிவு ஏற்பட்டது.
    • கொச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள களமசேரி, காக்கநாடு, எடப்பள்ளி, குசாட் பகுதியில் பலத்த துர்நாற்றம் வீசியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சியில் அதானி நிறுவனத்திற்கு சொந்தமான இயற்கை எரியவாயு நிறுவனம் உள்ளது.

    இந்த நிறுவனத்தில் இருந்து எரிவாயு எடுத்து செல்லும் குழாயில் இன்று அதிகாலை திடீர் கசிவு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் குழாயில் இருந்து கசிந்த ரசாயனம் அந்த பகுதி முழுவதும் பரவியது.

    இதனால் கொச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள களமசேரி, காக்கநாடு, எடப்பள்ளி, குசாட் பகுதியில் பலத்த துர்நாற்றம் வீசியது.

    கொச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது பற்றி அறிந்ததும் அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் நிறுவன அதிகாரிகளும் விரைந்து சென்று குழாயில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் அவர்கள் கூறும்போது, குழாயில் இருந்து கசிந்த ரசாயனம், சமையல் எரிவாயுவில் கலக்கப்படும் ரசாயணம் என்றும் ரசாயன கசிவால் பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்றும், குழாயில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணி விரைவில் முடியும் என்றும் தெரிவித்தனர்.

    • விழுப்புரத்தை அடுத்த ஜானகிபுரம் பகுதியில் 4 வழி புறச்சாலை உள்ளது. அங்கு ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்,
    • அடையாளம் தெரியாமல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியபடி இருந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தை அடுத்த ஜானகிபுரம் பகுதியில் 4 வழி புறச்சாலை உள்ளது. இச்சாலையில் உள்ள ஆவின் பாலகம் அருகில் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு ஏராளமான மரங்களும், முட்புதர்களும் உள்ளன.இப்பகுதியில் இருந்து இன்று காலை துர்நாற்றம் வீசியது. இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்குள் பொது மக்கள் சென்று பார்த்தனர். அங்கு ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து விழுப்புரம் தாலுக்கா போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அடையாளம் தெரியாமல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியபடி இருந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தூக்கில் தொங்கியவர் யார்? இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுனரா என்பது போன்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்பரவும் அபாயம் உள்ளது.
    • இறைச்சிகழிவுகள், இறந்த விலங்கினங்கள், நெகிழி பொருட்கள் கொட்டப்பட்டுவதால் கடும் துர்நாற்றம்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆணைக்காரன்சத்திரம்,கோபாலசமுத்திரம் ஊராட்சிகளில் 20கிராமங்களின் சேகரிக்கப்படும் ஊராட்சி குப்பைகள்,கழிவுகள் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் கொட்டப்பட்டு நீர்நிலை மாசுஏற்பட்டுவந்தது.

    மேலும் அப்பகுதியில் பெரும் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டு நோய்பரவும் அபாயம் நிலவியது.

    நீர்நிலை பகுதியில் குப்பைகள் கொட்டக்கூடாது என அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் இராம.பிரபு வழக்குரைஞர் அறிவிப்பானையை ஊராட்சி ஒன்றியத்திற்கு அனுப்பினார்.

    அதன்பின்னர் நீர்நிலை அருகே குப்பைகள் கொட்டக்கூடாது என நீர்வளஆதாரத்துறையினர் மூலம் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

    கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் குப்பைகள் கொட்டப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டாலும், 2ஊராட்சிகளுக்கு உட்பட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள குப்பைகளை மக்கும்குப்பை,மக்காத குப்பை என தரம்பிரித்து எடுத்து சென்று கொட்டுவதற்கு இடம் தேர்வு செய்யாமல் பொதுமக்கள் கூடும் இடங்கள்,குடியிருப்புகள்,பள்ளிகள் உள்ள பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் தேக்கம் அடைந்துள்ளது.

    குப்பைகளுடன் இறைச்சிகழிவுகள்,இறந்த விலங்கினங்கள்,நெகிழி பொருட்களும் கொட்டப்பட்டுவதால் கடும் துர்நாற்றம்,சுகாதாரசீர்கேடு ஏற்பட்டுவருகிறது. ஆகையால் இரண்டு ஊராட்சிகளிலும் நாள்தோறும் சேகரமாகும் குப்பைகளை குவித்து வைக்காமல் மாற்று இடம் தேர்வு செய்து தரம்பிரித்து கொட்டிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து கொள்ளிடம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் இராம.பிரபு ஊரக வளர்ச்சித்துறை அரசு செயலாளருக்கு பதிவு தபாலில் கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளார்.

    • மேயர் சுந்தரி ராஜா உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • கடும் துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளில் துப்புரவு ஊழியர்கள் தினந்தோறும் குப்பைகளை அகற்றி மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து கொண்டு சென்று வருகின்றனர். கடலூர் மாநகராட்சியில் தற்போது குப்பை கிடங்கு இல்லாததால் 3இடங்களில் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து உடனுக்குடன் குப்பைகளை அகற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் கடலூர் மாநகராட்சி பகுதியில் குப்பை கிடங்கு இல்லாததால் ஆங்காங்கே குப்பைகள் உடனுக்குடன் அகற்ற முடியாத நிலையில் துப்புரவு ஊழியர்கள் இருந்து வருகின்றனர். 

    இதன் காரணமாக கடலூர் மாநகராட்சி பகுதியில் உடனுக்குடன் குப்பைகளை அகற்ற முடியாத காரணத்தினால் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசி வருவதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. இதில் கடலூர் மஞ்சக்குப்பம் சொரக்கல்பட்டு பகுதியில் குப்பை தொட்டிகள் முழுவதும் கழிவுகள் மற்றும் குப்பைகள் நிரம்பி சாலையில் சிதறி இருக்கின்றது இதனை நாய், பன்றிகள் கிளறி செல்வதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். ஆகையால் அதிகாரிகள் சுகாதாரத்திற்கு தனி கவனம் செலுத்தி பொதுமக்களின் அடிப்படை பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 

    • சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வந்த மோட்டார் திடீரென்று பழுதானதால் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரக்கூடிய கழிவுநீர் முழுவதும் அந்தபகுதியில்உள்ள வீடுகளை சூழ்ந்தது,
    • அதிகாரியிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளில் வீடுகள் வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்களில் இருந்து பாதாள சாக்கடை மூலம் கழிவுநீர் வெளியேற்றப்பட்டு ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் மூலம் கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.கடலூர் தேவனாம்பட்டினம் கேகே நகர் பகுதிகளில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகின்றது. இதில் அந்த சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வரக்கூடிய பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வந்தது.கடந்த சில தினங்களாக சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வந்த மோட்டார் திடீரென்று பழுதானதால் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரக்கூடிய கழிவுநீர் முழுவதும் சுத்திகரித்து வெளியேற்ற முடியாமல் தற்போது கழிவுநீர் முழுவதும் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளை சூழ்ந்து உளளது.தற்போது வீடுகளை சுற்றியும் கழிவு நீர் முழுவதும் குளம் போல் தேங்கி கடும் துர்நாற்றம் வீசி வருகின்றது. இது மட்டும் இன்றி தற்போது கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    இது சம்பந்தமாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லைஇதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு மக்களுக்கு மர்ம காய்ச்சல், வாந்தி மயக்கம் ,வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தாக்கக்கூடிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்எனவே பொதுமக்களின் அடிப்படை அத்தியாவசிய தேவையான சுகாதாரத்தை அதிகாரிகள் ஏற்படுத்தி நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    • சாலையின் ஒரு புறத்தில் 50-க்கும் மேற்பட்ட தனியார் உணவகங்கள் கடைகள், செயல்பட்டு வருகிறது
    • கால்வாயில் கழிவு நீர் நிரம்பி தேசிய நெடுஞ்சாலை மற்றும் சர்வீஸ் சாலையில் பாய்ந்து தேங்கி நிற்கிறது.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த காரனோடை அருகே உள்ள ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலை வழியாக சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையின் ஓரத்தில் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது.

    சாலையின் ஒரு புறத்தில் 50 க்கும் மேற்பட்ட தனியார் உணவகங்கள் கடைகள், செயல்பட்டு வருகிறது. இந்த உணவகங்களின் கழிவுநீர் நெடுஞ்சாலையில் உள்ள மழைநீர் கால்வாயில் விடப்பட்டு உள்ளது.

    இதனால் கால்வாயில் கழிவு நீர் நிரம்பி தேசிய நெடுஞ்சாலை மற்றும் சர்வீஸ் சாலையில் பாய்ந்து தேங்கி நிற்கிறது. அவ்வழியே செல்லும் வாகனங்களில் கழிவுநீர் சிதறி மற்ற வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. மேலும் இந்த கழிவு நீரால் துர்நாற்றம் வீசுகிறது.

    இதுகுறித்து சோழவரம் வட்டார வளர்ச்சி ஆணையாளரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆணையாளர் குலசேகரன் ஒன்றிய குழு தலைவர் ராஜாத்திசெல்வசேகரன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு விசாரணை செய்தார்.

    அப்போது அரசு அனுமதி இல்லாமல் குடிநீர் இணைப்புகள் பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது இதனை தொடர்ந்து சாலையோரத்தில் உள்ள பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு அனுமதி இல்லாத 12 குடிநீர் குழாய் இணைப்புகளை துண்டிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். கால்வாயில் கழிவுநீர் விடுவதை தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆய்வின்போது அழிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி ரமேஷ், மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • சுமார் 5ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • சேதமடைந்த சம்பா பயிர்கள் அழுகி துர்நாற்றம் வீசி வருகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டம் வடுகச்சேரி, ஆலங்குடி, மூங்கில்குடி, செம்பியன்மகாதேவி, இருக்கை, மகாதானம் சுக்கானூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 5ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்யப்ப ட்டுள்ளது.

    கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் கன மழையால் வயல்களை மழைநீர் சூழ்ந்தது. நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு 10 தினங்களில் தயாராக இருந்த 5000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி நெல் மணிகள் முளைத்து சேதமடைந்துள்ளது.

    சேதமடைந்த சம்பா பயிர்கள் அழுகி துர்நாற்றம் வீசி வருகிறது.

    இதுவரை வேளாண் துறை அதிகாரிகள் பார்வையிடவே இல்லை எனவும் உடனடியாக தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை முறைப்படி கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×