search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 238978"

    • இயற்கை சீற்றங்களை தாங்கி வளர கூடிய 5000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளது.
    • 3 வருடங்கள் மரங்களின் வளர்ச்சி கண்காணிக்கப்படும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் கூறியதாவது,

    திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் அரசு இடங்கள், பள்ளிகள், பூங்காக்கள், குப்பை கிடங்குகள், குளம், ஆறு, வாய்க்கால் கரை பகுதிகளில் இந்தாண்டு நகராட்சிக்கு வருமானம் தரக்கூடிய வகையிலும், இயற்கை சீற்றங்களை தாங்கி வளர கூடிய 5000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளது.

    இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம், நகராட்சி நிர்வாகம், பாலம் தொண்டு நிறுவனம், ஸ்கார்டு தொண்டு நிறுவனம் இணைந்து இப்பணியை மேற்கொள்ளவுள்ளது.

    இப்பணியானது ஒரு மாதத்தில் முடிவடையும். தொடர்ந்து 3 வருடங்கள் மரங்களின் வளர்ச்சி கண்காணிக்கப்படும் என்றார்.

    இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் அப்துல் ஹரிஸ் மரக்கன்றை நட்டு பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மக்கள் கல்வி நிறுவன இயக்குனர் பாலகணேஷ், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், திட்ட அலுவலர் திருலோகசந்தர் மற்றும் அலுவலர்கள் கனகதுர்கா, திலகவதி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

    • இலங்கையில் சீன ராணுவப்படை குவிக்கப்பட்டதால் நடவடிக்கை
    • மேலும் கடலோர பாதுகாப்பு குழும போலீசுக்கு சொந்தமான 11 சோதனை சாவடிகளிலும் போலீசார் இரவு- பகலாக வாகன சோதனை நடத்திவருகிறார்கள். கடற்கரை மணலில் ஓடும் அதிநவீன ரோந்து வாகனங்கள் மூலமும் கடலோரப் பகுதிகளில் போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வருகிறார்கள்.
    • லாட்ஜூகளிலும் சந்தேகப்படும்படியான நபர்கள் யாராவது தங்கிஇருக்கிறார்களா? என்றும் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி,

    அக்.18-

    இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவுவதை பயன்படுத்தி அங்கு சீன நாட்டின் ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    ஏற்கனவே இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி சீன நாட்டின் உளவு கப்பல் இலங்கைக்கு வந்தது. இந்த நிலையில் சமீப காலமாக இலங்கையில் சீன ராணுவ படை குவிக்கப்பட்டு சீன ராணுவ வீரர்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

    எனவே இலங்கையின் அண்டை நாடான இந்தியா முழுவதும் கடலோர பகுதிகளை கண்காணிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்கும்படி உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் கடலோர பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல குமரி மாவட்ட கடலோரப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த வகையில் கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 48 கடற்கரை கிராமங்களிலும் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் இரவு-பகலாக போலீசார் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி மற்றும் குளச்சல் கடலோர காவல் நிலைய போலீசார் இந்த பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலில் ரோந்து சென்று சந்தேகப்படும்படியான படகுகள் ஏதாவது வருகிறதா? என்று தீவிரமாக கண்காணிக்கிறார்கள்.

    மேலும் கடலோர பாதுகாப்பு குழும போலீசுக்கு சொந்தமான 11 சோதனை சாவடிகளிலும் போலீசார் இரவு- பகலாக வாகன சோதனை நடத்திவருகிறார்கள். கடற்கரை மணலில் ஓடும் அதிநவீன ரோந்து வாகனங்கள் மூலமும் கடலோரப் பகுதிகளில் போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    லாட்ஜூகளிலும் சந்தேகப்படும்படியான நபர்கள் யாராவது தங்கிஇருக்கிறார்களா? என்றும் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள்.

    • வளர்ச்சி பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் லால்வேனா ஆய்வு செய்தார்.
    • தரமான முறையில், விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி, காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், நாட்டரசன்கோட்டை பேரூராட்சி, செட்டிநாடு ஊராட்சி ஆகிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது.

    இது தொடர்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் லால்வேனா, கலெக்டர் மதுசூதன்ரெட்டி, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நாட்டரசன்கோட்டை பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.138.95 லட்சம் மதிப்பீட்டில் செங்கமளத்தான் ஊரணியில் நடைபெற்று வரும் மேம்பாடு மற்றும் புனரமைப்புப் பணிகள் தொடர்பாகவும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் உபகரணங்களான மரம் அறுக்கும் எந்திரம், சவுக்குக்கட்டை, சாரக்கயிறு, தயார் நிலையில் உள்ள மணல் மூட்டைகள் உள்ளிட்டவைகளும், தூய்மைப் பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களான கையுறை, ரெயின்கோட்டுகள், தலைக்கவசம், ஒளிரும் சட்டை, பிளாஸ்டிக் தார்பாய் போன்ற உபகரணங்கள் பேரூராட்சி அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், பள்ளித்தம்மம் ஊராட்சியில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துப் பெட்டகங்கள் மற்றும் இயல்முறை சிகிச்சைகள் தொடர்பாக பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கப்படும் விதம் மற்றும் முறைகள் குறித்து பயனாளிகளிடம் கேட்டறிந்தார்.

    தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம், சிறுவத்தி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், விஜயபுரம் சமத்துவபுரத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்படவுள்ள சமுதாயக்கூடம், மணவயல் ஊராட்சி, கோட்டூர் கிராமத்தில் ரூ.7.21 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கதிர் அடிக்கும் தளம் தொடர்பான கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதேபோன்று திருமணவயல் ஊராட்சி, தேவகோட்டை நகராட்சி, செட்டிநாடு ஊராட்சி பகுதிகளிலும் வளர்ச்சி பணிகளை கண்காணிப்பு அலுவலர் லால்ேவனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது, பணிகளை தரமான முறையில், விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.

    • பண்டிகை காலத்தை யொட்டி அங்கு கூடுதல் போலீசார் நியமனம் செய்து இரவு ரோந்து பணியை தீவிரப் படுத்துவதுடன் காலை, மாலை நேரங்களில் கண்காணிப்பு பணியையும் அதிகரிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. மேலும் கடைவீதிகளில் கூட்டம் அதிகமாக காணப் படும். எனவே அந்த பகுதி களிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.
    • பழைய கொள்ளையர்கள் பிக்பாக்கெட் திருடர்கள் குறித்த படங்களை அறி விப்பு பலகையாக பொது இடங்களில் வைத்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் உஷாராக இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை யாக உள்ளது.

    நாகர்கோவில், அக்.13-

    தீபாவளி பண்டிகை நெருங்குவதையடுத்து நாகர்கோவில் நகரப் பகுதி களில் காலை, மாலை நேரங் களில் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதி வரு கிறது.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராள மான பொதுமக்கள் குடும்பத்தோடு கடை வீதிகளுக்கு வந்து செல் கிறார்கள். இதனால் வடசேரி பஸ்நிலையம், மற்றும் அண்ணா பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொள்ளையர்கள் செயின் பறிப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் மப்டி உடைகளில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். அண்ணா பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் நீண்ட நாட்களாக பூட்டி கிடக்கிறது. பண்டிகை காலமான தற்பொழுது கூட்டம் அலைமோதி வரும் நிலையில் அங்கு போலீசாரை நியமனம் செய்து கண்காணிப்பு பணியை தீவிரபடுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை யாக உள்ளது.

    எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உடனடி நடவடிக்கையாக அண்ணா பஸ்நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தை திறந்து அங்கு கூடுதல் போலீசார் நியமனம் செய்து பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். மேலும் பஸ் நிலையத்தில் சி.சி.டி.வி. கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சுமார் 8 கேமிராக்கள் பஸ் நிலை யத்தில் உள்ளது. இதில் ஒரு சில கேமராக்கள் செயல் படாமல் பழுதடைந்து உள் ளது.

    எனவே பழுதடைந்துள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை சரி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புற காவல் நிலையம் திறப்பதுடன் சி.சி.டி.வி. கேமிராக்கள் சரி செய்யும் பட்சத்தில் குற்ற சம்பவங்கள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. இதே போல் வடசேரி பஸ் நிலையத்தில் தற்போது புறக்காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

    பண்டிகை காலத்தை யொட்டி அங்கு கூடுதல் போலீசார் நியமனம் செய்து இரவு ரோந்து பணியை தீவிரப் படுத்துவதுடன் காலை, மாலை நேரங்களில் கண்காணிப்பு பணியையும் அதிகரிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. மேலும் கடைவீதிகளில் கூட்டம் அதிகமாக காணப் படும். எனவே அந்த பகுதி களிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.

    பழைய கொள்ளையர்கள் பிக்பாக்கெட் திருடர்கள் குறித்த படங்களை அறி விப்பு பலகையாக பொது இடங்களில் வைத்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் உஷாராக இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை யாக உள்ளது.

    • பண்டிகை காலங்கள் நெருங்குவதையடுத்து நடவடிக்கை
    • போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீசாருக்கான மாதாந்திர குற்ற தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

    மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஏ.டி.எஸ்.பி.க்கள், டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முதியோர் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள முதியோர் கட்டுப்பாட்டு அறைக்கான உதவி எண் 14567 தொடர்பான விழிப்பு ணர்வு ஸ்டிக்கரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வெளி யிட்டார். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் பேசியதா வது:-

    குமரி மாவட்டத்தில் தற்பொழுது திருட்டு சம்பவங்கள் அதிக அளவு நடந்து வருகிறது.குறிப்பாக ஆட்கள் இல்லாத வீடுகளை குறிவைத்து கொள்ளை யர்கள் கைவரிசை காட்டி வருகிறார்கள். இதை தடுக்கும் வகையில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். வருகிற 24-ந் தேதி தீபாவளி பண்டிகை வரவுள்ளது.

    இதைத் தொடர்ந்து கிறிஸ்மஸ் புத்தாண்டு பொங்கல் பண்டிகைகளும் வர உள்ளது. அந்த காலங் களில் மாவட்டம் முழுவ தும் பாதுகாப்பை அதிக ரிக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் மப்டி உடையில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். பஸ் நிலை யங்கள் கடை வீதிகள் மார்க்கெட் பகுதிகளில் மாறு வேடங்களில் கண்காணிப்பு பணியை மேற்கொள்வதுடன் வாகன சோதனையை தீவிர படுத்த வேண்டும்.

    வங்கிகளில் இருந்து பணம் எடுத்துச் செல்ப வர்கள் நகைகளை வாங்கி செல்பவர்கள் கவனமாக எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். போஸ்கோ வழக்குகள் மற்றும் பெண்க ளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்களில் விரைந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். பழைய குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடம் நன்னடத்தை சான்றிதழ் எழுதி வாங்கப்பட வேண்டும்.குமரி மாவட்டத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள ரவுடிகள் பட்டியலை தயாரித்து அவர்கள் அவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கஞ்சா குட்கா புகையிலை விற்பனை தடுக்க அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் .தொடர்ந்து கஞ்சா மற்றும் குட்கா விற்பனை ஈடுபடுபவர்கள் மற்றும் குற்ற செயல் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாரதிய ஜனதா ஆர்.எஸ்.எஸ். விசுவ இந்து பரிஷத் நிர்வாகிகள் வீடுகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
    • பயணிகளின் உடமைகள் சோதனைக்குட்படுத்தப் பட்டு வருகிறது. ரெயில்வே பிளாட்பாரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நாகர்கோவில்:

    பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உள் ளது.

    இதையடுத்து அசம்பா வித சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்கும் வகை யில் தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டுள்ளனர்.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடு பட்டு உள்ளனர்.குமரி மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஐ.ஜி. ஆஸ்ரா கர்க் ஆய்வு மேற்கொண்டார்.

    குமரி மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். நாகர்கோவிலில் முக்கிய சந்திப்புகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதே போல் நாகர்கோவில், குளச்சல், தக்கலை, கன்னியாகுமரி சப்-டிவிஷனல் உட்பட்ட முக்கிய சந்திப்புகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பாரதிய ஜனதா ஆர்.எஸ்.எஸ். விசுவ இந்து பரிஷத் நிர்வாகிகள் வீடுகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மாவட் டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரவு நேரத்தில் 2 ஷிப்ட்டு களாக பிரிக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வரு கிறார்கள். மாவட்ட எல்லை பகுதியிலுள்ள சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    போலீசார் அந்த பகுதி களில் வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார் கள். மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண் காணிக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற் கரை கிராமங்களிலும் போலீசார் ரோந்து சுற்றி வரு கிறார்கள்.

    கோவில்களிலும் பாது காப்பு பலப்படுத்தப்பட்டுள் ளது. நாகர்கோவில் ரெயில் நிலையத்திலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். பயணிகளின் உடமைகள் சோதனைக்குட்படுத்தப் பட்டு வருகிறது. ரெயில்வே பிளாட்பாரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியா குமரி யில் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. கடற்கரை பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். லாட்ஜுகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • பா.ஜ.க., இந்து அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது.
    • சந்தேகப்படும்படியாக வரும் நபர்களை விசாரித்து வருகின்றனர்.

    ஊட்டி

    தமிழகத்தில் பா.ஜ.க., இந்து அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. இதைத்தொடர்ந்து கமாண்டோ படை வீரர்கள், அதிரடி படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதேபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பல்வேறு தரப்பினர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் நீலகிரி மாவட்டத்திலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் இணைந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கூடலூர் பகுதியில் உள்ள கேரள எல்லைகளான நாடுகாணி, பாட்ட வயல், சோலாடி, நம்பியார்குன்னு உள்பட அனைத்து சோதனை சாவடிகளிலும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தேகப்படும்படியாக வரும் நபர்களை விசாரித்து வருகின்றனர்.

    ஒரு பஸ்சில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர் இதுகுறித்து போலீசார் கூறும்போது, கூடலூர் பகுதியில் 3 தாசில்தார்கள் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அனைத்து சோதனை சாவடிகளிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் சுழற்சி முறையில் வருகிற 30-ந் தேதி வரை பணிபுரிய உத்தரவிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து வாகன சோதனையும் தீவிரபடுத்தப்பட்டு உள்ளது என்றனர்.

    • பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலி
    • பஸ், ரெயில் நிலையங்களிலும் சோதனை

    நாகர்கோவில்:

    கோவை, சேலம், மதுரையை தொடர்ந்து குமரி மாவட்டத்திலும் பாரதிய ஜனதா ஆதரவாளர் வீட்டில் பெட்ரோல் கொண்டு வீசப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.

    இதையடுத்து குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கலெக்டர் அரவிந்த் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள முக்கிய சந்திப்புகள், தலைவர்கள் சிலைகள், பாரதிய ஜனதா நிர்வாகிகள் வீடுகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நேற்று இரவு விடிய விடிய போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டனர். இரண்டு ஷிப்டுகளாக கண்காணிப்பு பணி நடந்தது.நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி சப்-டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.

    இன்று 2-வது நாளாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாகர்கோவில் ெரயில் நிலையத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். ரெயிலில் வரும் பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ெரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களிலும் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி, வள்ளி யூர், இரணியல், நாங்குநேரி, குழித்துறை ரெயில் நிலை யத்திலும் பாதுகாப்பு அதிக ரிக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவில் நாகராஜா கோவில், சுசீந்திரம் தாணு மாலய சாமி கோவில், மண்டைக் காடு பகவதி அம்மன் கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்பட அனைத்து கோவில்களுக்கும் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    அரசு அலுவலகங்களி லும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பொது மக்கள் அனைவரும் பரிசோ தனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.பொதுமக்கள் கொண்டு வந்த பேக்குகள் முழுமை யாக சோதனை செய்யப்பட் டது.

    ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம், களியக்கா விளை சோதனை சாவடி களிலும் போலீசார் போலீஸ் பாதுகாப்பு பலப்ப டுத்தப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங் களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். பாதுகாப்பு பணியில் 1200 போலீ சார் ஈடுபட்டுள்ளனர்

    பாதுகாப்பு மாவட்டம் முழுவதும் பலப்படுத்தப்பட் டுள்ள நிலையில் பெட்ரோல் நிலையங்களில் பாட்டில்களில் பெட்ரோல் வழங்கக்கூடாது என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    • பாரதிய ஜனதா பிரமுகர் வீடுகளில் பெட்ரோல் குண்டுவீச்சு எதிெராலி
    • கோவில்கள், தலைவர்கள் சிலைகளுக்கு பாதுகாப்பு

    நாகர்கோவில்:

    கோவையில் பாரதிய ஜனதா பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டது‌.

    இதைத்தொடர்ந்து மதுரை, சேலம், பகுதி களிலும் பாரதிய ஜனதா பிரமுகர்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப் பட்டு உள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது. இதை யடுத்து தமிழகம் முழு வதும் பாதுகாப்பு பலப்ப டுத்தப்பட்டுள்ளது.குமரி மாவட்டத்திலும் பாது காப்பை பலப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.

    இதையடுத்து குமரி மாவட்டம் முழுவதும் போலீ சார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள னர். நாகர்கோவில் கன்னி யாகுமரி குளச்சல் தக்கலை சப் டிவிஷன்களுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு போலீசார் 2 ஷிப்டுகளாக ரோந்து சுற்றி வந்தனர். இன்று காலையிலும் பாது காப்பு பணியில் ஈடு பட்டுள்ளனர்.

    நாகர்கோவிலில் முக்கிய சந்திப்புகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரு கிறார்கள். வடசேரி, பார்வதிபுரம், கலெக்டர் அலுவலக சந்திப்பு, செட்டி குளம் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது. வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை, அண்ணா சிலை, ஒழுகினசேரியில் உள்ள பெரியார் சிலை, வேப்பமூட்டில் உள்ள காமராஜர் சிலை உட்பட நாகர்கோவில் நகரில் உள்ள முக்கிய தலைவர்கள் சிலைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நகரில் உள்ள முக்கிய சாலைகளில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.

    நாகர்கோவில் நாகராஜா கோவில் உள்பட முக்கிய மான கோவில்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது. நாகர்கோவில் ெரயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டனர். கன்னியா குமரியிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிரா மங்களிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில், திருவட்டார் ஆதிகேச பெருமாள் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்பட கோவில்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப் பட்டது. ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம், களியக்கா விளை சோதனை சாவடி களில் போலீசார் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டனர்.

    வெளியூர்களில் இருந்து வந்த வாகனங்களை சோ தனை செய்தனர். மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    • சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாநகர பகுதியில் சீரான முறையில் குடிநீர்விநியோகம் செய்வது குறித்தான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • 57 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் 1,17,000 குடிநீர் இணைப்புகளுக்கு குடிநீர் வழங்கப்படும் விவரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாநகர பகுதியில் சீரான முறையில் குடிநீர்விநியோகம் செய்வது குறித்தான ஆய்வுக்கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் ஆணையாளர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகர பகுதியில் தற்போது எத்தனை நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்பது குறித்தும் மாநகர பகுதியில் உள்ள 57 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் 1,17,000 குடிநீர் இணைப்புகளுக்கு குடிநீர் வழங்கப்படும் விவரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    அனைத்து பகுதிகளுக்கும் தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஒவ்வொரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கும் உள்ள குடிநீர் இணைப்புகள் எத்தனை என்பதை துல்லியமாக கணக்கெடுப்பு செய்து அதன் அடிப்படையில் குடிநீர் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

    குடிநீர் விநியோகத்தினை முறைப்படுத்திட அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ள பகுதிகளில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. மாநகர பகுதியில் பணிபுரியும் பிட்டர்கள் பகுதி வாரியாக குடிநீர் விநியோகம் செய்யும் நாள் ,நேரம் ,ஆகியவற்றை அட்டவணைப்படுத்தி பகுதிகளில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குடிநீர் விநியோகத்தை சீர்படுத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    மாநகர பகுதியில் அனுமதியற்ற முறையில் குடிநீர் இணைப்புகள் பெறபட்டுள்ளதா என்பதையும் வணிக நிறுவனங்கள் அனுமதி அளித்திற்கு மேற்பட்டு முறைகேடாக குடிநீரை பயன்படுத்துகிறார்களா என்பதையும் கண்காணிக்கவும், அனுமதி இல்லாமல் உள்ள குடிநீர் இணைப்புகளை உடனடியாக துண்டிப்பு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கூட்டத்தில் மாநகர பொறியாளர் ரவி, உதவி ஆணையாளர்கள் ரமேஷ்பாபு , சாந்தி , தியாகராஜன், கதிரேசன். .சுப்பையா மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு சோதனை சாவடிகள் மற்றும் மாவட்ட எல்லைகளிலும் கடந்த மூன்று நாட்களாக தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
    • 36 -க்கும் மேற்பட்ட ரேஷன் அரிசி அரவை ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    நுகர்பொருள் வாணிப கழகத்தின் வாயிலாக விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு அங்கிருந்து அரிசி அரவை ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு ரேஷன் அரிசி அரவை செய்யப்பட்டு ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது.

    இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் விவசாயி களிடம் நெல்லை நேரடி கொள்முதல் செய்வதில், வெளி மாவட்டங்களில் இருந்து ஏதேனும் இடைத் தரகர்கள் வாயிலாக உரிய ஆவணங்கள் இல்லாமல் நெல் மூட்டைகள்எடுத்து வருவதையும், அரிசி ஆலைகளில் முறைகே டுகள் நடைபெ றாமல் கண்காணிக்கவும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையின் காவல் துறை இயக்குநர் ஆபாஸ்குமார் மேற்பார்வையில், திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர்சுஜாதா, காவல் துணைக்க ண்காணிப்பாள ர்கள் மற்றும் இதர காவல் அலுவலர்களுடன் சேர்ந்து திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கரூர் ஆகிய 9 மாவட்டங்களிலும் ரேஷன் அரிசி அரவை செய்யும் ஆலைகள் மற்றும் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையங்களுக்கு லாரிகளில் கொண்டு வரப்படும் நெல் மூட்டைகள் உரிய ஆவணங்களுடன் வருகிறதா என பல்வேறு சோதனைச் சாவடிகள் மற்றும் மாவட்ட எல்லைகளிலும் கடந்த மூன்று நாட்களாக தீவிர வாகன சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    திருச்சி மண்டலத்தில் இதுவரை நடந்த தீவிர வாகன சோதனையில் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் எந்த ஆவணங்களும் இல்லாமல் சுமார் 29  டன் நெல் ஏற்றி வரப்பட்ட 2 லாரிகளை பிடித்து நுகர் பொருள் வாணிப கழக துணை மேலாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

    மேலும் 43 டன் நெல் மூட்டைகள் ஏற்றி வந்த 3 லாரிகளை பிடித்து லாரி ஓட்டுநர்களிடம் தீவிர விசாரணை செய்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல் கருர் மாவட்டம் குளித்தலை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார்1.05 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை திருச்சி மண்டலத்தில் 73 நேரடி நெல் கொள்முதல் மையங்கள் மற்றும் 36 -க்கும் மேற்பட்ட ரேஷன் அரிசி அரவை ஆலைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் இதனைத் தொடர்ந்து காவல்துறை இயக்குநர் ஆபாஸ்குமார் தஞ்சாவூர் சரகம், மருங்குளத்தில் உள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தையும், மருங்குளத்தில் உள்ள நவீன அரிசி ஆலையையும், நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர்சுஜாதா, திருச்சி மற்றும் தஞ்சாவூர் சரக காவல் துணைக்காவல் கண்காணிப்பாளர்கள், தஞ்சாவூர் உட்கோட்ட தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக துணை மேலாளர் முத்தையா மற்றும் தஞ்சாவூர் கொள்முதல் அதிகாரி எழில் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • வைகை கரையோரங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
    • ஜே.சி.பி. போன்ற எந்திரங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தற்போது மதுரை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளது. இன்னும் 4 நாட்கள் மழை நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

    தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் வைகை அணை நிரம்பி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளது, மதுரை மாவட்டத்தில் 75 சதவீத நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. அதனால் கரையோர மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாட்டை செய்ய வேண்டும்.

    அதேபோல் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் ராட்சத பம்புகள் மூலம் மழை நீரை வெளியேற்ற வேண்டும். பேரிடர் ஒத்திகை மட்டும் போதாது. நிலவரத்துக்கு ஏற்றார் போல் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளூர் முதல்நிலை மீட்பாளர்களை அரசு தயார் நிலைப்படுத்த வேண்டும்.

    கடந்த மாதம்ஆற்றில் குளிக்கச் சென்ற ராணுவ வீரர் உட்பட சிலர் உயிரிழந்தனர். ஆகவே ஆற்றின் கரையோரங்களில் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ, செல்பி எடுக்கவோ அனுமதிக்காமல், கரையோரங்களை 24 மணி நேரமும் ரோந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். அதேபோல் தொற்றுநோயை தடுக்கும் வகையில், மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். பாதிக்கப்படும் மக்களை முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு வேண்டிய தரமான உணவு, சுத்தமான குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகளை அரசு செய்ய வேண்டும்.

    இந்த பருவ மழை காலங்களில் நீர்நிலை கரைகளை பலப்படுத்த தேவையான மணல் மூட்டைகளை தயாராக வைத்திருக்க வேண்டும். அதேபோல் ஜே.சி.பி. போன்ற எந்திரங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×