search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரியாதை"

    • வ.உ.சிதம்பரனார் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    சிவகாசி

    சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம் பிள் ளையின் 152-வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிவ காசியில் திருத்தங்கல் வ.உ.சி. சிலைக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பாக அமைப்பு செயலா ளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு கள் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ராஜவர் மன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எஸ்.என்.பாபு ராஜ், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் வேண் டுராயபுரம் சுப்பிர மணியன், சிவகாசி மாநகர பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவண குமார், கருப்பசாமி பாண்டி யன், ஷாம் என்ற ராஜ அபினேஸ்வரன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேஷ்.

    கருப்பசாமி, லட்சுமிநாராயணன், ஆரோக்கியம், மாவட்ட இலக்கிய அணி தலைவர் என்.ஜி.ஓ.காலனி மாரி முத்து, கூட்டுறவு வங்கி தலைவர் ரமணா, ஒன்றிய கவுன்சிலர் ஜெகத்சிங்பிரபு மாநகர கவுன்சிலர் கரை முருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செய லாளர் பாண்டிய ராஜன், தலைவர் செல்வம், மாநகர இளைஞரணி கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நீட் தேர்வினால் உயிரிழந்த அனிதா படத்திற்கு ஜெயங்கொண்டத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது
    • மாவட்ட செயலாளர் கதிர் வளவன் தலைமையில் வி.சி.க சார்பில் நடைபெற்றது

    ஜெயங்கொண்டம்,

    நீட் தேர்வினால் உயிரை இழந்த அரியலூர் அருகே உள்ள குழுமூரை சேர்ந்த அனிதாவின் உருவப்படத்திற்கு ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் 6 -ம் ஆண்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வீரவணக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் கதிர் வளவன் தலைமை வகித்தார். தொகுதி செயலாளர் இலக்கிய தாசன், மாநில பொறுப்பாளர்கள் கொளஞ்சி, இளங்கோ மணி, சிபி ராஜா, மற்றும் நிர்வாகிகள் சின்னராசா சுந்தர் சி கா குமார் முத்துகிருஷ்ணன் சரவணன் சிவகுமார் இளைய பாரதி லோகு நாகா சக்திவேல் வெங்கட் உள்ளிட்ட மாநில மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டடோர் ஏராளமானோர் கலந்து கொண்டு அனிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    • ராஜீவ்காந்தி பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு திருநாவுக்கரசர் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செய்தார்
    • திருச்சி மாநகர் மாவட்டம் காங்கிரசார் ஏராளமானவர்கள் பங்கேற்பு

    திருச்சி,

    திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளையொட்டி ஜங்ஷன் ரெயில் நிலையம் எதிரில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாநகர மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவர் பேட்டரிக் ராஜ்குமார், மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன்,மாமன்ற உறுப்பினர்கள் ரெக்ஸ், சோபியா விமலா ராணி, பொருளாளர்கள் ராஜா நசீர், இளையராஜா,மாவட்டத் துணைத் தலைவர் பண்ணை கோபாலகிருஷ்ணன், கோட்டத் தலைவர்கள் ரவி, ஜோசப் ஜெரால்ட், பிரியங்கா பட்டேல், ஜ.என்.டி.யு.சி.மாவட்ட தலைவர் சரவணன்,மாவட்ட பொதுச் செயலாளர்கள் பூக்கடை பன்னீர்செல்வம், பட்டேல் சிவா, உறையூர் எத்திராஜ், அண்ணாசிலை விக்டர், செந்தமிழ் செல்வன், மலைக்கோட்டை சேகர், மணிவேல், உறந்தை செல்வம் மாவட்ட செயலாளர்கள் செவந்திலிங்கம், அனந்தபத்மநாதன், புத்தூர் அன்பழகன், பொன்னன், வக்கீல் விக்னேஷ்,முன்னாள் கோட்டத் தலைவர் ராஜ்மோகன், இளைஞர் காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் ரமேஷ் சந்திரன், சேவாதள பிரிவு அப்துல் குத்தூஸ், ஜெகதீஸ்வரி சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஜுபேர், பர்கத், பட்டதாரி அணி தலைவர் ரியாஸ்,மகளிர் அணி மாநகர மாவட்ட தலைவி ஷீலா செலஸ், சம்சுதீன், அமைப்பு சாரா தலைவர் முஸ்தபா, பஞ்சாயத்து ராஜ் பிரிவு தலைவர் அண்ணாதுரை, பழனியாண்டி, எஸ்சி பிரிவு தலைவர் பாக்யராஜ், சேகர்வார்டு தலைவர்கள் கண்ணன். பெல்ட் சரவணன், பாபு , சலீம்பாய், மணிவண்ணன், குங்கிங் செல்வம், லெட்சுமி அம்மாள் விஜய்பட்டேல், அல்லூர் பிரேம், தமிழ்மணி. ரவி, அய்யாகண்ணு, பொன்மலை பாலு, புத்தூர் மூர்த்தி, வட்டாரத் தலைவர் சுப்பிரமணியன், தெற்கு மாவட்ட நிர்வாகிகள் அல்லூர் எழிலரசன், சுப. கோவிந்தன்,அன்பில் ராஜேந்திரன், அர்ஜுன், பரணி, துவாக்குடி நகர தலைவர் ஆனந்தன், அந்தநல்லூர் வட்டார தலைவர் கனகராஜ், மணிகண்டம் வட்டார தலைவர் கருணாகரன், மணப்பாறை வடக்கு வட்டார தலைவர் சிவசண்முகம் மற்றும் ஆனந்த். குறத்தெரு விஸ்வநாதன், தியாகராஜன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும், குடும்பத்தினருக்கும் கலெக்டர் மரியாதை செய்தார்.
    • 20 பேருக்கு ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்து 520 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    திருவாரூர்:

    சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    இதனைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மாவட்ட கலெக்டர் மரியாதை செய்தார்.

    இதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில் ஒரு நபருக்கு ரூ 25 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட ஆதிதிராவிட நலத்துறையின் சார்பில் 4 பேருக்கு ரூ12,552 மதிப்பிலான தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.

    பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 20 நபர்களுக்கு ரூ1,22,520 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    மாவட்ட சமூக நல துறையின் சார்பில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் முதிர்வு தொகையாக 5 பேருக்கு ரூ1,08,296 நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 பேருக்கு ரூ1,74,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், தாட்கோ மூலம் 3 நபருக்கு ரூ5,47,100 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என 36 பேருக்கு 9 லட்சத்து 89 ஆயிரத்து 968 ரூபாய் மதிப்புள்ளான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்கு மார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு துறைகளில் இருந்து சிறப்பாக பணிபுரிந்த அரசு ஊழியர்களை பாராட்டி சான்றிதழ்களை ஆட்சி தலைவர் சாருஸ்ரீ வழங்கினார்.

    இறுதியில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெற்றது.

    இதுபோல் மாவட்டம் முழுவதும் அரசு அலுவலகங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் சுதந்திர தின விழா நடைபெற்றது.

    • தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நிர்வாகிகள் கருணாநிதி சிலை மற்றும் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவுநாளையொட்டி ஊட்டி அறிவாலய வளாகத்தில் நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நிர்வாகிகள் கருணாநிதி சிலை மற்றும் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், மாநில விளையாட்டு மே்ம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, ஊட்டி நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், மாவட்ட அமைப்பாளர்கள் இமயம் சசிகுமார், ராஜா, காந்தல் ரவி, எல்கில் ரவி, கர்ணன், தேவராஜ், யோகேஸ்வரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ், ஊட்டி நகர அவை தலைவர் ஜெய கோபி, துணை செயலாளர்கள் ரீட்டாமேரி, பொருளாளர் அணில்குமார், மாவட்ட பிரதிநிதிகள் தம்பி இஸ்மாயில், கார்திக், வெங்கடேஷ், ராமசந்திரன், ஊட்டி நகரமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், விஷ்னு, கஜேந்திரன், ரகுபதி, செல்வராஜ், கீதா, நாகமணி, மேரி பிளோரீனா, வனிதா, பிரியா வினோதினி, பிளோ ரீனா, மாவட்ட அணி சா ர்பில் மேத்யூஸ், செல்வராஜ், மூர்த்தி, ஜெயராமன், தருமன், மார்கெட் ரவி, அமலநாதன், மத்தீன், ஆட்டோ ராஜன், தியாகு, பௌ்ளன், ஜோகி, சிவகுமார், வெங்கடேஷ், பாபு, அபு, ரகமத்துல்லா, மஞ்சுகுமார், கிட்டான், விஜயகுமார், ஊட்டி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் குண்டன், ராஜூ, காளி, மூர்த்தி, தொ.மு.ச நிர்வாகிகள் ஆனந்தன், சந்திரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • கருப்பு பேட்ஜ் அணிந்து மூவலூரில் இருந்து சித்தர்காடு அண்ணா சிலை வரை மவுன ஊர்வலம் சென்றனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி தலைமை யில் மூவலூர் கடைத்தெருவில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநி தியின் 5-ம் ஆண்டு நினைவு அஞ்சலி முன்னிட்டு அவருடைய படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதனைத் தொடர்ந்து கருப்பு பேஜ் அணிந்து அமைதி பேரணையாக மூவலூரில் இருந்து புறப்பட்டு சித்தர்காடு அண்ணா சிலை வரை மவுன ஊர்வலம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னால் எம்.எல்.ஏ. பாலஅருட்ச்செல்வன், வழக்கறிஞ்சர் அணி சேசோன், ஒன்றிய அவைத் தலைவர் வழக்கறிஞர் பாலு, ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் மாப்படுகை சிவக்குமார், வில்லியநல்லூர் காமராஜ், நீடூர் ஏ.கே .எஸ். பதர்நிஷா நஜிம், கங்கனபுத்தூர் மும்தாஜ் இப்ராஹிம்,அருள்மொழி தேவன் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி தமிழரசன், சித்தர்காடு ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினவேல், உள்ளீட்ட ஏராளமான திமுக வினர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க.செயலாளர் பாபு கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • பொன்.ஆசை தம்பி தலைமையில் கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

    நாகர்கோவில் :

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலை மற்றும் உருவப்ப டத்திற்கு தி.மு.க.வினர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    குமரி மாவட்டத்திலும் கட்சியினர் இன்று ஊர்வ லமாக சென்று கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்தனர். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. மற்றும் கன்னியாகுமரி பேரூர் தி.மு.க.சார்பில் கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் அண்ணா சிலைக்கு அருகில் வைக்கப்பட்டு இருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில்அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் பாபு கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தமிழன் ஜானி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பொன் ஜான்சன், தி.மு.க. பிரமுகர் டாக்டர் சுந்தர்சிங், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பிரேமலதா, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் அன்பழகன், சிறுபான்மையினர் உரிமை நலப்பிரிவு துணைச் செயலாளர் நிசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கொட்டாரம் சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு கொட்டாரம் பேரூர் தி.மு.க.செயலாளரும் கொட்டாரம் பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலருமான வைகுண்ட பெருமாள் தலைமையில்தி.மு.க. வினர் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய அவைத்தலைவர் ராஜகோபால், பேரூர் வார்டு செயலாளர்கள் அய்யப்பன், குமரன், அரிகரசுதன், சுப்பிரமணியன், சந்திரசேகர், வள்ளி நாயகம், பன்னீர்செல்வம், அன்புதாஸ், சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அகஸ்தீஸ்வரம் ஜங்ஷனில் ஒன்றிய செயலாளர் பாபு தலைமையில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது .இதில் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி துணைத்தலைவர் மல்லிகா,கவுன்சிலர்கள் குமரேசன்,பிரேம்ஆனந்த், செல்வராஜ் ,மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தமிழன் ஜானி, மற்றும் ஒன்றிய, பேரூர் ,கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    தென்தாமரைகுளம் ஜங்ஷனில் கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பேரூர் செயலாளர் பூவியூர் காமராஜ் தலைமை தாங்கினார்.திமுக வர்த்தகர் அணி இணைச்செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வழக்கறி ஞர் தாமரைபாரதி மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சியில் பேராசிரியர் டி.சி.மகேஷ், ஒன்றிய பொருளாளர் எட்வின் ராஜ், ஒன்றிய பிரதிநிதி ஜான் கிறிஸ்டோபர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பொன் ஜான்சன், வார்டு செயலாளர்கள் கே.கே.நாதன், ஆல்வின், அன்பு ரமேஷ், டென்னிஸ், நிர்வாகிகள் ஸ்டூவர்ட், எமர்சன், தாமரை பிரதாப், ஆல்பர்ட் பண்ணையார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    குழித்துறை நகராட்சி சேர்மன் பொன்.ஆசை தம்பி தலைமையில் மார்த்தாண்டம் பஸ் நிலையத்தின் முன்பு வைக்கப்பட்ட கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில திமுக சட்டத்துறை இணை செயலாளர் தினேஷ், மாஹின் அபுபக்கர், கவுன்சிலர் அருள்ராஜ் மற்றும் நிர்வாகிகள் ஷாஜிலால், கலை, ஸ்டாலின் உட்பட கட்சி நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர்.

    • தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • நாம் தமிழர் கட்சி சார்பில் சோழவந்தான் தொகுதி தலைவர் சங்கிலி முருகன், செயலாளர் சக்கரபாணி மற்றும் பலர் உள்ளனர்.

    அலங்காநல்லூர்

    சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 218-வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கல்லணை ஊராட்சியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அதன்படி கவுண்டர் மகாஜன சங்கம் சார்பில் சங்கத்தலைவர் விஜயன், செயலாளர் அழகப்பன், பொரு ளாளர் சிதம்பர நாதன், ஆலோசகர்கள் சேகர், ஜெயராமன், ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.

    சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், அவைத் தலைவர் பாலசுப்பிர மணியன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் கொங்கு இளைஞர் பேரவை சார்பில் நினைவு தூணில் வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் பார்த்திபன், செயலாளர் தயாளன், இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பாட்டாளி மக்கள் சார்பில் மாவட்ட தலைவர் செல்லம்பட்டி முருகன் தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் பிரபு, மாவட்ட பொருளாளர் சரோஜினி, முன்னாள் மாவட்ட தலைவர் அழகுராஜா, ஒன்றிய செயலாளர்கள் முருகன், ஈஸ்வரன் முன்னிலையில் மாவட்ட துணைத்தலைவர் ராமசந்திரன், முன்னாள் தலைவர் பாஸ்கரன், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நாம் தமிழர் கட்சி சார்பில் சோழவந்தான் தொகுதி தலைவர் சங்கிலி முருகன், செயலாளர் சக்கரபாணி, ஒன்றிய செயலாளர் சுரேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ஓ.பி.எஸ். அணி சார்பில் ஒன்றிய செயலாளர் சேது சீனிவாசன் தலைமையில் மாவட்ட செயலாளர் முருகேசன், மாநில இளைஞரணி செயலாளர் ராஜ்மோகன், மாவட்ட பொருளாளர் துதி திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலையில் ஒன்றிய செயலாளர்கள் ஜோதிமுருகன், முத்து கிருஷ்ணன், சேகர், அவைத்தலைவர் அய்யாவு, ஒன்றிய துணைத்தலைவர் முனியசாமி, வர்த்தகர் பிரிவு பெருமாள், மாவட்ட இலக்கிய அணி சேகர், புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாலமேடு அய்யாவு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 138-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
    • புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

    டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 138-வது பிறந்த நாளை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு, செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட  கலெக்டர் மெர்சி ரம்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன்  டாக்டர் வை.முத்துராஜா எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, அரசு மருத்துவக்கல்லூரி டீன் ராஜ்மோகன், கோட்டாட்சியர் முருகேசன், நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்ற துணைத்தலைவர் லியாகத் அலி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். 

    • பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்களை மருதூர் ரோட்டரி சங்க தலைவர் கண்ணன் வழங்கினார்.
    • பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் அப்துல்கலாம் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அகில இந்திய முன்னாள் படைவீரர்கள் நலச்சங்க தலைவர் தமிழரசன் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு குடை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்களை மருதூர் ரோட்டரி சங்க தலைவர் கண்ணன் வழங்கினார்.

    வேதாரண்யம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கும் குடை வழங்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என அகில இந்திய முன்னாள் படை வீரர்கள் நலச்சங்க தலைவர் தமிழரசன் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் அப்துல் கலாம் படம் வைக்கப்பட்டு மாலை அணிவித்து, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அழகிரி பாலன், பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் தீபா, முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் இலக்குவன், முன்னாள் செயலாளர் சக்திதாசன், சமூக ஆர்வலர்கள் கோமதி, ஆறுமுகம், சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுமார் அனைவரையும் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் வெற்றியழகன் நன்றி கூறினார்.

    • முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் நினைவிடத்தில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
    • அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாள ரும், அமைச்சருமான சாத் தூர் ராமச்சந்திரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், தமி ழக நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசுவின் தந்தையும், விருதுநகரின் தந்தையாரும் முன்னாள் அமைச்சருமான தங்க பாண்டியனின் 26-வது நினைவு தினம் வருகிற 31-ந் தேதி (திங்கட்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.

    இதையொட்டி மல்லாங் கிணற்றில் உள்ள அவரது நினைவிடத்தில் அன்றைய தினம் தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியா தை செலுத்தப்படுகிறது. எனவே இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சட்டமன்ற உறுப் பினர்கள், தெற்கு, வடக்கு மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், பொதுக் குழு செயற்குழு உறுப்பி னர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், தொண்டர்கள் ஊர்வலமாக செல்லாமல் தனித்தனியே மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • 2 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் 100 மாணவர்கள் படம் வரைந்தனர்.
    • அப்துல்கலாம் உருவபடத்தை 46 நிமிடங்களில் உருவாக்கி மரியாதை செய்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி முத்துராஜம் மெட்ரிக் பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசுத்த லைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாமின் நினைவு நாளை யொட்டி 2 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் 100 மாணவர்கள் ஒருவருக்கு ஒரு அடி வீதம் கொண்ட சாட் அட்டை காகிதத்தில் அப்துல்கலாமின் உருவபடத்தின் பல்வேறு பகுதிகளை தனித்தனியே வரைந்து வண்ணமிட்டு அவற்றை ஒன்றோடு ஒன்று இணைத்து 100 அடி அளவில் பெரிய அப்துல்கலாம் உருவபடத்தை 46 நிமிடங்களில் உருவாக்கி அந்த படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

    நிகழ்வில் பள்ளி தாளாளர் சி.பி.சிவசங்கர் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஜேக்கப்ஞானசெல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×