search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரக்கன்றுகள் நடப்பட்டது"

    • பசுமை ஊராட்சியாக மாற்ற ஏற்பாடு
    • அதிகாரி ஆய்வு

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் அம்பலூர் ஊராட்சி மரக்கன்றுகள் நடுவதில் முன் மாதிரியாக செயல்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 6 மாதத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடப்பட்டு வருகிறது.

    இந்த ஊராட்சியை பசுமை ஊராட்சியாக மாற்ற இதற்கான பணிகளை அந்த ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி. முருகேசன் செய்து வருகிறார்.

    பல்வேறு கட்டங்களாக செயல்படுத்தி வரும் இந்த பணியை நேற்று திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி நேரில் சென்று பார்வையிட்டு மரக்கன்றுகளை அம்பலூர் பகுதியில் நட்டார்.

    அப்போது உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு போளூர் சாலையில் உள்ள நிர்மலா நகர் பகுதியில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மூலம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் சேத்துப்பட்டு வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கம் மையம். புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

    இந்த கட்டிடத்தை கடந்த 9-ந் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இதைத்தொடர்ந்து நேற்று ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கட்டிடம் வளாகத்தில் திருவண்ணாமலை மாவட்டவேளாண் துணை இயக்குனர் (நுண்ணீர் பாசனம்) சேத்துப்பட்டு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நாராயணமூர்த்தி, சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகோபால், வேளாண்மை அலுவலர் இலக்கிய, ஆகியோர் மரக்கன்று, அலுவலகத்தில் இனிப்பு, வழங்கினர்.

    நிகழ்ச்சியில் சேத்துப்பட்டு பேரூராட்சி மன்ற தலைவர் சுதா முருகன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் திலகவதி செல்வராஜன், ஆரணி வேளாண்மை செயற்பொறியாளர் கிருஷ்ணன், மற்றும் மேலாண்மை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×