search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கப்பல்"

    • சரக்கு கப்பல் எம்.வி. புரவலானி தற்போது எம்.வி. ரகிமா என்ற பெயரில் இயங்கி வருகிறது.
    • வழக்கின் விசாரணையை வருகிற 13-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி:

    கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த நந்தக்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

    அதில், சென்னையை சேர்ந்த புரவலான் கப்பல் போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு கப்பல் எம்.வி. புரவலானி தற்போது எம்.வி. ரகிமா என்ற பெயரில் இயங்கி வருகிறது.

    இந்த கப்பலில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆயில் சரி பார்ப்பவராக ஒப்பந்த அடிப்படையில் நான் பணியில் சேர்ந்தேன். 9 மாதங்களுக்கு தலா மாதம் ரூ.30 ஆயிரத்து 842 சம்பளம் என ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    ஆனால் பணியில் சேர்ந்தது முதல் கடந்த 13 மாதங்களாக எனக்கு ஊதியம் வழங்கவில்லை. முன் தொகையாக ரூ.50 ஆயிரம் மட்டுமே வழங்கி உள்ளனர்.

    எனவே எனக்கு ஊதியம் மற்றும் இழப்பீட்டு தொகையுடன் ரூ.4.48 லட்சம் தர வேண்டி உள்ளது. அதனை வழங்க கப்பல் நிறுவத்திற்கு உத்தரவிட வேண்டும். நிலுவையில் உள்ள சம்பளம் குறித்து பலமுறை கப்பல் நிறுவனத்திற்கு தகவல் அனுப்பியும் இதுவரை முறையான பதில் அளிக்கவில்லை. எனவே அதனை சிறை பிடிக்க வேண்டும் என கேட்டிருந்தார்.

    இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் முத்துசாமி ஆஜராகி தற்போது எம்.வி. ரகிமா கப்பல் மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதுவரை மனுதாரருக்கு வழங்க வேண்டிய ஊதிய தொகையை சென்னை தனியார் கப்பல் நிறுவனம் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. எனவே அதனை சிறைபிடித்து மனுதாரருக்கு உரிய இழப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதிட்டார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்துஸ், தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள எம்.வி. ரகிமா கப்பலை சிறைபிடிக்க உத்தரவிட்டார்.

    மேலும் இந்த வழக்கின் விசாரணையை வருகிற 13-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

    • 6 ஆயிரம் டன் உப்புடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது.
    • கப்பலில் 4 இந்தியர்கள் உள்பட 14 பேர் இருந்தனர்.

    கிரீஸ் நாட்டில் அலெக்சாண்ட்ரியா துறைமுகத்தில் இருந்து இஸ்தான்புல்லுக்கு 6 ஆயிரம் டன் உப்புகளை ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது.

    லெஸ்போஸ் தீவு அருகே கப்பல் சென்று கொண்டிருந்த போது அதன் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. கடும் புயலில் சிக்கி அந்த கப்பல் கடலில் கவிழ்ந்தாக தெரியவந்துள்ளது.

    விபத்து நடந்த கப்பலில் 8 எகிப்தியர்கள், 4 இந்தியர்கள், 2 சீரியாவைச் சேர்ந்தவர் என 14 பேர் இருந்தனர். இதில் எகிப்து நாட்டை சேர்ந்த ஒருவர் மட்டும் உயிர் தப்பினார். ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. உயிரிழந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

    மாயமான 12 பேரையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. இந்த பணியில் கிரீஸ் நாட்டு கடலோர காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல்களும் தேடிவருகின்றன. கப்பல் கவிழ்ந்ததில் அதில் இருந்த 6 ஆயிரம் டன் உப்பு கடலில் கரைந்தது.

    • திருவனந்தபுரம் கிம்ஸ் ஹெல்த் ஆஸ்பத்திரியில் நடந்தது
    • 56 வயதானவருக்கு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டது.

    நாகர்கோவில்:

    கேரளாவின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து சுமார் 50 கடல் மைல் தூரத்தில் ஒரு கப்பல் சென்று கொண்டிருந்த போது பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 56 வயதானவருக்கு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை இந்திய கடலோர காவல் படையின் உதவியோடு திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் ஹெல்த் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு சி.டி.ஸ்கேன் சோதனை செய்தபோது மூளை மற்றும் நலனை பாதுகாக்கும் மென்படல சவ்வுக்கும் இடையே ரத்தக்கசிவு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப் பட்டது. இந்த நிலை வலையனையமிடை ரத்தக்கசிவு என மருத்துவ ரீதியாக அறியப்பட்டது.

    மூளையை சுற்றியுள்ள மூளை முள்ளந்தண்டு திரவத்தில் கசியும் ரத்தம் சேர்வது உள் மண்டை அழுத்தம் அதிகரிப்பதற்கு வழி வகுக்கும். இது நோயாளியின் ஆரோக்கி யத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும். குருதி நாள வீக்கத்தினால் ஏற்படும் கிழிசல் ரத்தக்கசிவின் மிக பொதுவான காரணமாகும்.அதைத்தொடர்ந்து அவருக்கு மண்டையோட்டை திறந்து செய்யப்படும் கிரானியோட்டமி என்ற அறுவை சிகிச்சை மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் ஆலோசனை யின்பேரில் 5 மணி நேரம் நடந்தது. அதன் பிறகு அவர் சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்து சொந்த நாட்டுக்கு திரும்பி சென்றார். அவருக்கு அறுவை சிகிச்சையையும் மற்றும் பின் தொடர் சிகிச்சையையும் மேற்கொண்ட குழுவில் நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் நிபுணர்கள் டாக்டர்கள் அபு மதன், என்.எஸ். நவாஸ், பாபி ஐப், நரம்பியல் மயக்கவியல் துறையின் டாக்டர் சுசாந்த் பி, உடல் மருத்துவத்துறை நிபுணர் டாக்டர் ேஜ.நித்தா ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

    • குளச்சலில் குடும்பத்தினர் சோகம்
    • நடுக்கடலில் படகு மூழ்கி 3 பேர் மாயம்

    குளச்சல் :

    குளச்சல் துறைமுக தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியம் (வயது 50). இவர் சொந்தமான விசைப் படகு வைத்து கடலில் மீன் பிடி தொழில் செய்து வருகிறார்.

    இந்த படகில் பங்கு தாரரான மாதா காலனியை சேர்ந்த ஆன்றோ (47) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கியம் (52), கொட்டில்பாட்டை சேர்ந்த பயஸ் (54) உட்பட 16 மீனவர்கள் கடந்த 25-ந்தேதி குளச்சல் துறை முகத்திலிருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். விசைப்படகை ஆன்றோ ஓட்டினார்.

    நேற்று முன்தினம் நள்ளிரவு தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் பகுதியில் இருந்து 30 நாட்டிங்கல் கடல் தூரத்தில் மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். திடீரென விசைப்படகின் ஒரு பக்கம் சாய்ந்து கவிழ்ந்தது. இதையடுத்து மீனவர்கள் கடலில் தத்தளித்து கொண்டிருந்த னர். அப்போது அந்த வழியாக விசைப்படகில் வந்த மீனவர்கள் நடுக்கட லில் தத்தளித்த மீனவர்களை மீட்டனர். 13 மீனவர்கள் மீட்கப்பட்டனர். ஆன்றோ, ஆரோக்கியம், பயஸ் ஆகிய 3 பேரும் மாயமானார்கள்.

    இதையடுத்து அந்த 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. மீட்கப்பட்ட 13 மீனவர்களும் குளச்சல் பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். மீனவர்கள் 3 பேர் கடலில் மூழ்கியது குறித்து கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும், மீனவர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று முழுவதும் தேடியும் மீனவர்கள் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக தேடும் பணி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில் இருந்து வரப்பட்ட கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல் மூலம் மீனவர்களை தேடி வருகிறார்கள். மேலும் குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவர்களும் மீனவர்கள் மூழ்கிய பகுதியில் சென்று தேடும் பணியில் ஈடுபட்டுள் ளனர். மீனவர்கள் மாயமாகி 36 மணி நேரத்துக்கு மேலாவதால் அவர்களது கதி என்னவென்று தெரியாத நிலை உள்ளது.

    இதனால் அவர்களது குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர். குளச்சலில் உள்ள மாயமான மீனவர் குடும்பத்தினரை அமைச்சர் மனோ தங்கராஜ் சந்தித்து பேசினார். மாயமான மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

    அமைச்சருடன் பிரின்ஸ் எம்.எல்.ஏ. மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகளும் சென்று இருந்தனர். இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், மாயமான மீனவர்களை கப்பல் மூலம் தேடும் பணி நடைபெற்று வருகிறது. விசைப்படகு மூழ்கிய பகுதி ஆழமான பகுதி என்பதால் இந்திய கடற்படைக்கு சொந்தமான குழியாளிகளை வைத்து மீட்க வேண்டுமென மீனவர்களின் உறவினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை மீன்வளத்துறை அமைச்ச ரின் கவனத்திற்கு கொண்டு சென்று மீனவர்களை மீட்க ந டவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

    இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு உள்ளது. மீனவர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கை களையும் அரசு மேற்கொண்டு வருகிறது என்றார்.

    இதற்கிடையே 3 மீன வர்கள் மாயமான சம்ப வத்தால் குளச்சல் விசைப் டகினர், வள்ளம் கட்டுமர மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தமாக இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. கரை திரும்பிய விசைப்படகி லிருந்து மீன்கள் இறக்கி விற்பனையும் செய்யப படவில்லை. இதனால் மீன் ஏலக்கூடம் வெறிச்சோடி காணப்பட்டது.

    • வெளியுறவுத்துறை மந்திரியிடம் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை
    • அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் அனைவரும் உயிர்தப்பி கப்பல் மூலம் மாலத்தீவுக்கு சென்றனர்.

    நாகர்கோவில்:

    விஜய்வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்டம் இரவிபுத்தன்துறையை சேர்ந்த 7 மீனவர்கள் உள்பட 12 மீனவர்கள் கடந்த 11-ந்தேதியன்று மாலத்தீவு அருகே ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, அந்நாட்டின் இழுவை கப்பல் மீன வர்களின் படகு மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் படகு மற்றும் அதில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் கடலில் முழ்கின. அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் அனைவரும் உயிர்தப்பி கப்பல் மூலம் மாலத்தீவுக்கு சென்றனர்.

    அந்நாட்டு அரசு அவர்களை கைது செய்தது. பின்னர் அவர்களை விடுவிக்க இந்திய தூதரகத்தை நான் தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொண்டேன். மீனவர்கள் தாயகம் திரும்பி வரவும் நடவடிக்கை எடுத்தேன். பின்னர் ஊர் திரும்பிய மீனவர்களை சந்தித்து அவர்கள் கோரிகை் கையை கேட்டறிந்தேன். அப்போது சேதம் அடைந்த படகு உள்பட ரூ.1½ கோடி மதிப்பில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனை கப்பல் நிறுவனத்திடம் இருந்து பெற்று தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து நான் நேற்று டெல்லி சென்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தேன். அப்போது மாலத்தீவு கப்பல் மோதி படகு விபத்துக் குள்ளான மீனவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என மனு அளித்தேன்.

    இதுதொடர்பாக மாலத்தீவு அரசை தொடர்பு கொண்டு நிறுவனத்திடம் இருந்து நஷ்டஈடு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மந்திரி உறுதியளித்துள்ளார். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • மீனவர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்களை மாலத்தீவு கப்பல் படையினர் மீட்டு கரை சேர்த்தனர்.
    • காயமடைந்த மீனவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்

    நாகர்கோவில் :

    இரவிபுத்தன்துறையை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த மாதம் 7-ந்தேதி ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது தூத்துக்குடியில் இருந்து சரக்கு ஏற்றிக் கொண்டு மாலத்தீவுக்கு சென்று கொண்டிருந்த இழுவை கப்பல் மோதியதில் படகு முற்றிலும் சேதமடைந்தது. இதில் மீனவர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்களை மாலத்தீவு கப்பல் படையினர் மீட்டு கரை சேர்த்தனர்.

    இந்நிலையில் அவர்கள் சொந்த ஊரான குமரி மாவட்டம் இரையு மன்துறைக்கு வந்து சேர்ந்த னர். அவர்களை விஜய்வசந்த் எம்.பி. மற்றும் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். மேலும் மீனவர்கள் தரப்பில் சேதமடைந்த படகு மற்றும் பொருட்களுக்கு ரூ.1½ கோடி மதிப்பில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், மோதிய கப்பல் நிறுவனத்தி டம் இருந்து நஷ்ட ஈடாக பெற்று தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் கலந்துகொள்ள செல்லும் விஜய் வசந்த் எம்.பி. டெல்லி தூதரக அதிகாரியிடம் பேசி இதற் கான முயற்சி மேற்கொள ளப்படும் எனவும், காயமடைந்த மீனவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.

    நிகழ்ச்சியில் இரவி புத்தன்துறை பங்குத்தந்தை ரெஜூஸ்பாபு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆரோக்கிய ராஜன், தூத்தூர் கிறிஸ்து தாஸ், பஞ்சாயத்து கமிட்டி தலைவர் லைலா, கவுன்சிலர் பேபி ஜான், காங்கிரஸ் பஞ்சாயத்து கமிட்டி தலைவர் ஜஸ்டின், நாகர்கோவில் மாநகர தலைவர் நவீன்குமார், குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • கலெக்டரிடம் குடும்பத்தினர் மனு
    • மாலத்தீவு நாட்டு கடற்படையினர் கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்டு அங்குள்ள தீவில் தங்க வைத்தனர்.

    நாகர்கோவில் :

    தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பைஜு. இவருக்கு சொந்த மான விசைப்படகில் கடந்த 7-ந்தேதி இரவிபுத்தன் துறை, தூத்தூர் மற்றும் கேரள மாநிலம் விழிஞ்சம், பாண்டிச்சேரி, அசாம் பகுதியை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ந்தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    மீன்பிடித்து விட்டு இவர்கள் தேங்காய்பட்டி னம் துறைமுகத்திற்கு திரும்பிக்கொண்டி ருந்தனர். நேற்று அதிகாலை வந்து கொண்டிருந்த போது தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு நோக்கி சென்ற இழுவை கப்பல் ஒன்று விசைப்படகு மீது மோதியது. பின்னர் அந்த கப்பல் நிற்காமல் சென்று விட்டது. கப்பல் மோதியதில் விசைப்படகு உடைந்து கடலில் மூழ்கியது. படகில் இருந்த 12 மீனவர்களும் கடலுக்குள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    கடலில் நீந்தியப்படியே உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மாலத்தீவு நாட்டு கடற்படையினர் கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்டு அங்குள்ள தீவில் தங்க வைத்தனர். இது குறித்து குமரி மாவட்டம் மீன்வளத்துறை அதிகாரிக ளுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவ குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மீனவர்களை மீட்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று தெற்காசிய மீனவர் தலைமையின் பொதுச்செய லாளர் சர்ச்சில் கோரிக்கை வைத்துள்ளார்.

    இந்தநிலையில் மீன வர்கள் குடும்பத்தினர் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஸ்ரீதரை சந்தித்து மனு அளித்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், மாலத்தீவில் தவிக்கும் 12 மீனவர்களையும் உடனடி யாக மீட்டு கொண்டு வர வேண்டும். சேதமடைந்த விசை படகிற்கு உரிய நிவாரணமும், மீனவர்க ளுக்கு நிவாரணமும் வழங்க வேண்டும். விசை படகு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கப்பல் மீது அரசு உடனடி நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • ஷோல் (shoal) என்பது அதிக ஆழமில்லாத ஒரு சிறிய கடற்கரை பகுதியாகும்
    • இக்கப்பலால் சீனாவிற்கும், பிலிப்பைன்ஸிற்கும் இடையே சச்சரவு எழுந்துள்ளது

    வட சீன கடலில் இணையும் மலேசியா, வியட்னாம், ப்ரூனே, தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் கடல் பகுதிகள் அனைத்தும் தனக்கு சொந்தமானது என சீனா உரிமை கொண்டாடி வருகிறது.

    பிலிப்பைன்ஸிற்கு சொந்தமான பலவான் எனும் தீவிலிருந்து 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, இரண்டாம் தாமஸ் ஷோல். ஷோல் (shoal) என்பது அதிக ஆழமில்லாத ஒரு சிறிய கடற்கரை பகுதியாகும்.

    பிஆர்பி ஸியர்ரா மேட்ரே எனும் பிலிப்பைன்ஸ் நாட்டு போர்கப்பல், இரண்டாம் உலக போரில் பயன்பட்டு வந்தது. இதன் பயன்பாட்டு காலம் முடிவடைந்ததும் அக்கப்பலை பிலிப்பைன்ஸ் இரண்டாம் தாமஸ் ஷோல் பகுதியில் நிறுத்தியது. அக்கப்பலை பிலிப்பைன்ஸ் நாட்டின் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த பிற கப்பல்களின் பல்வேறு பயன்பாடுகளுக்கு ஒரு தளமாக பிலிப்பைன்ஸ் பயன்படுத்தி வந்தது.

    அப்பகுதிக்கு அருகில் உள்ள மிஸ்சீஃப் ரீஃப் எனும் கடற்பாறை பகுதியை 1995-ல் சீனா கைப்பற்றியதற்கு பதிலடியாக பிலிப்பைன்ஸ் அக்கப்பலை இரண்டாம் தாமஸ் ஷோல் பகுதியில் 1999-ல் நிலைநிறுத்தியது.

    தற்போது இக்கப்பலால் சீனாவிற்கும், பிலிப்பைன்ஸிற்கும் இடையே சச்சரவு எழுந்துள்ளது.

    அக்கப்பல் நிறுத்தப்பட்டிருக்கும் ஷோல் தங்களுக்கு சொந்தமான ரெனாய் ஜியாவ் பகுதி என்றும் பிலிப்பைன்ஸ் அந்த இடத்தில் வேண்டுமென்றே, சட்டவிரோதமாக அக்கப்பலை நிறுத்தியிருப்பதாகவும் அதனை உடனே அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து சீனா வலியுறுத்தி வருகிறது.

    இக்கப்பலில் உள்ளவர்களுக்கு தேவைப்படும் பொருட்களை கொண்டு சென்ற ஒரு சிறிய கப்பல் மீது தனது நாட்டு கப்பல் ஒன்றிலிருந்து சீனா நீர் பாய்ச்சும் இயந்திரங்களை கொண்டு நீரை பாய்ச்சி விரட்ட முயற்சித்ததாக பிலிப்பைன்ஸ் குற்றம்சாட்டியது.

    இந்நிலையில் நேற்று மீண்டும் ஒருமுறை சீனா இக்கப்பலை அப்புறப்படுத்த வலியுறுத்தியது. இதற்கு பிலிப்பைன்ஸ் மறுப்பு தெரிவித்து விட்டது.

    இப்பிரச்சனையை பன்னாட்டு அரசியல் நிபுணர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேரளாவின் பைபோர் துறைமுகத்தில் இருந்து துபாய்க்கு கடல் வழியாக செல்ல 4 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும்.
    • விமானத்தில் செல்வதானால் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை கட்டணம் ஆகும்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் இருந்து ஏராளமானோர் வளைகுடா நாடுகளில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.

    இவர்கள் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு விமானங்கள் மூலமே வருகிறார்கள். இதனால் பண்டிகை காலங்களில் வளைகுடா நாடுகளில் இருந்து கேரளா வருவதற்கு விமானங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபற்றி வெளிநாடு வாழ் கேரள மக்கள் அரசிடம் புகார் கூறியிருந்தனர்.

    வளைகுடா நாடுகளில் வசிக்கும் கேரள மக்களின் இக்கோரிக்கையை ஏற்று கேரளாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது பற்றி கேரள அரசு ஆலோசித்து வருவதாக மாநில சிறுதுறைமுகங்கள் துறை மந்திரி அகமது தேவர்கோவில் தெரிவித்தார்.

    கேரளாவின் பைபோர் துறைமுகத்தில் இருந்து துபாய்க்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவது குறித்து தற்போது ஆலோசனை நடந்து வருகிறது. கேரளாவின் பைபோர் துறைமுகத்தில் இருந்து துபாய்க்கு கடல் வழியாக செல்ல 4 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும். ஒரு பயணிகள் கப்பல் மணிக்கு 35 கிலோ மீட்டர் தூரம் சென்றால் பைபோரில் இருந்து துபாய் சென்றடைய 3½ நாட்கள் ஆகும். இதற்கு கட்டணம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையே ஆகும்.

    இதுவே விமானத்தில் செல்வதானால் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை கட்டணம் ஆகும். ஆனால் கப்பல் பயணத்தில் பயண நேரம் அதிகமானாலும், கட்டணம் மிகவும் குறைவாக இருக்கும் என்று கப்பல் நிறுவனத்தினர் தெரிவித்தனர். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்கிய முதல் மாநிலம் கேரளா என்ற பெருமையை பெறும்.

    • ராணுவம் மற்றும் கப்பல் படை, விமான படை ஆகியவற்றுக்கு அக்னிபத் திட்டத்தின் கீழ் பொது நுழைவு தேர்வு நடத்தி, வீரர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
    • இந்திய கப்பல் படையில் 4 ஆண்டு பணி வழங்கும் அக்னிபத் திட்டத்தின் கீழ் வீரர்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

    சேலம்:

    இந்திய அரசு பாதுகாப்பு துறையில் உள்ள முப்படை களான ராணுவம் மற்றும் கப்பல் படை, விமான படை ஆகியவற்றுக்கு அக்னிபத் திட்டத்தின் கீழ் பொது நுழைவு தேர்வு நடத்தி, வீரர்கள் சேர்க்கப்படு கின்றனர்.

    அதன்படி இந்திய கப்பல் படையில் 4 ஆண்டு பணி வழங்கும் அக்னிபத் திட்டத்தின் கீழ் வீரர்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

    1.365 இடங்கள்

    இந்த தேர்வுக்கு திரு மணமாகாத இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 1,365 இடங்கள் உள்ளன.

    கல்வி தகுதி கணிதம், இயற்பியல், கணிதம் பாடத்துடன் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். விண்ணப்ப தாரர்கள் 01.11.2002- 30.04.2006 -க்குள் பிறந்திருக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 15.06.2023 ஆகும்.

    விண்ணப்ப கட்டணம், ஜி.எஸ்.டி., வரி என ரூ.649 செலுத்த வேண்டும். எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோ தனை உள்ளிட்ட தேர்வுகள் அடிப்படையில் பணி யமர்த்தப்படுவார்கள்.

    இந்த தகவலை இந்திய கப்பல்படை தெரிவித்துள்ளது.

    • ஒரு கட்டத்தில் கடற்படையினரிடம் சிக்கி கொண்ட கப்பலை போதை பொருள் கடத்தல் குழுவினர் சோதனை செய்தனர்.
    • போதை பொருளை ஏற்றி வந்த பிரதான கப்பல் பற்றிய தகவல்களும் அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை.

    திருவனந்தபுரம்:

    பாகிஸ்தானில் இருந்து இந்திய கடல் வழியாக போதை பொருள் கடத்தப்படுவதாக உளவு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை உளவு துறை இந்திய கடற்படைக்கும், போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் தெரிவித்தது.

    இதற்காக ஆபரேசன் சமுத்திரகுப்தா என்ற பெயரில் கடற்படை மற்றும் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் இணைந்து வேட்டையில் இறங்கினர். இதில் பாகிஸ்தானில் இருந்து இந்திய கடல் பகுதிக்குள் நுழையும் கப்பல்களை கண்காணித்து வந்தனர். இதில் சந்தேகப்படும்படி வந்த கப்பல் ஒன்றை கடற்படை மற்றும் போதை பொருள் கடத்தல் பிரிவினர் இணைந்து விரட்டி சென்றனர்.

    சினிமாவில் வருவது போல் நடுக்கடலில் இந்த சேசிங் சம்பவம் நடந்தது. ஒரு கட்டத்தில் கடற்படையினரிடம் சிக்கி கொண்ட கப்பலை போதை பொருள் கடத்தல் குழுவினர் சோதனை செய்தனர்.

    அந்த கப்பலில் மெத்தாம் பேட்டமைன் எனப்படும் விலை உயர்ந்த போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுசிறு மூட்டைகளில் மொத்தம் 2525 கிலோ போதை பொருள் இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சர்வதேச சந்தையில் இதன்மதிப்பு ரூ.25 ஆயிரம் கோடி எனக்கூறப்படுகிறது.

    இந்த போதைபொருளை அதிகாரிகள் கொச்சியில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்தனர். அவர்கள் போதை பொருளை கைப்பற்றி கொச்சி அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் இந்த தகவலை கோர்ட்டுக்கும் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக போதை பொருள் தடுப்பு பிரிவினர் கூறும்போது, பாகிஸ்தானை சேர்ந்த போதை பொருள் கடத்தல்காரன் ஹாஜி சலீம் என்பவருக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகவும், அவரது குழுவினர்தான் போதை பொருளை கடத்தி வந்ததாகவும் தெரிவித்தனர்.

    தற்போது ஹாஜி சலீம் குழுவை சேர்ந்த பாகிஸ்தானியர் ஒருவர் இந்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர் மூலம் போதை பொருள் யாருக்காக கொண்டு வரப்பட்டது? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க அதிகாரிகள் குழு விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் போதை பொருளை கடத்தி வந்த பிரதான கப்பலை அதிகாரிகள் தாய் கப்பல் என்று குறிப்பிட்டனர். அந்த கப்பலில் இருந்து போதை பொருள் சிறுசிறு பார்சல்களாக பிரிக்கப்பட்டு அவை நடுக்கடலில் சிறிய ரக படகுகளில் ஏற்றப்பட்டு கரைக்கு கொண்டு வரப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இவ்வாறு போதை பொருளை ஏற்ற வந்த சிறிய படகுகளில் 3 படகுகள் கடற்படையிடம் சிக்கியதாகவும், 2 படகுகள் தப்பி சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது. அந்த படகுகளை தேடிவருவதாக கடற்படை தெரிவித்தது.

    இதற்கிடையே போதை பொருளை ஏற்றி வந்த பிரதான கப்பல் பற்றிய தகவல்களும் அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை.

    அந்த கப்பல் நடுக்கடலில் இருந்து மாயமாகி விட்டதா? அல்லது கடலில் மூழ்கிவிட்டதா? என்பதும் தெரியவில்லை. இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, தாய் கப்பல் பற்றி விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

    • இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து
    • கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் மேற்கு தெருவை சேர்ந்தவர் லிகோரி. இவருடைய மகன் டெனி லிகோரி (வயது 23). இவர் வெளிநாட்டில் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு திரும்பி னார். நேற்று இரவு 10 மணி அளவில் டெனிலிகோரி தனது இருசக்கர வாகனத்தில் கன்னியாகுமரி மெயின் ரோட்டில் பெரியார் நகர் சந்திப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி நோக்கி மின்னல் வேகத்தில் வந்த கேரளா சுற்றுலா பஸ் பெரியார் நகருக்கு செல்வதற்காக திரும்பியது.

    அப்போது டெனிலிகோரி சென்ற இரு சக்கரவாகனம் மீது அந்த சுற்றுலா பஸ் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட டெனிலிகோரி சம்பவ இடத்திலேயே துடி துடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கேரளா சுற்றுலா பஸ்சை ஓட்டி வந்த பத்தனம் திட்டா, முடியூர் கோணம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் பினுகுமார் (46) என்பவரை கைது செய்தனர்.

    ×