search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்மிகம்"

    • தென் காளகஸ்தி என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
    • ஞானாம்பிகை கோவில் என்றே பேச்சு வழக்கில் அழைக்கப்படுகிறது.

    தேனி அருகே பச்சை பசேலென போர்வை விரித்தாற்போல பசுமையாக காட்சி அளிக்கும் உத்தமபாளையம் உள்ளது. முல்லை பெரியாறு ஆண்டு முழுவதும் ஓடுவதால் இந்த பகுதி குளுமையாக இருக்கும்.

    ராணிமங்கம்மாள் ஆட்சி காலத்தில் இங்கு வசித்த சிவ பக்தர் ஒருவர் அவரது படையின் நிர்வாக பொறுப்பை ஏற்றிருந்தார். காளாத்தீஸ்வரர் பக்தரான அவர் திருப்பதி அருகில் உள்ள காளகஸ்தி சென்று தரிசிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    வயதானதும் அவரால் அங்கு செல்ல இயலவில்லை. இதனை நினைத்து வருந்திய அவர் சுவாமியை மானசீகமாக வழிபட்டார். அவருக்கு காளாத்தீஸ்வரர் இங்கேயே காட்சி கொடுத்தார். மகிழ்ந்த பக்தர் அவருக்கு கோவில் எழுப்பி காளாத்தீஸ்வரர் என்று பெயர் சூட்டினார். இதனால் இக்கோவில் தென் காளகஸ்தி என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

    காளாத்தீஸ்வரருக்கு கோவில் அமைந்த பின்பு அம்பாளுக்கு சிலை செய்தனர். ஆனால் எவ்வளவு முயன்றும் சிலை சரியாக அமையவில்லை. இதனால் பல காலம் அம்பிகைக்கு சன்னதி அமைக்கப் படவில்லை.

    ஒரு சமயம் உத்தம பாளையம் அருகே உள்ள கோகிலாபுரத்தில் முல்லை பெரியாற்றில் மிதந்துவந்த ஒரு கூடையில் அம்பிகையின் சிலை இருந்தது. இதனைக்கண்டு மகிழ்ந்த பக்தர்கள் அதை இங்கே பிரதிஷ்டை செய்தனர்.

    காளகஸ்தியில் உள்ள அம்பிகைக்கு ஞானாம்பிகை என்று பெயர் சூட்டினர். அம்பிகையே இங்கு பிரசித்தி பெற்றவள் என்பதால் இவரது பெயரில் ஞானாம்பிகை கோவில் என்றே பேச்சு வழக்கில் அழைக்கப்படுகிறது.

    கோகிலாபுரத்தை அம்பிகையின் பிறந்த வீடாக கருதி திருக்கல்யாண விழாவின் போது ஊர் மக்கள் அம்பிகைக்கு பிறந்த வீட்டு சீரும், தங்களது மருமகனான சிவனுக்கு வஸ்திரங்களும் கொண்டு வருகின்றனர்.

    சிவன் சன்னதி முன் மண்டப மேற்சுவரில் ராசி நட்சத்திர கட்டத்தின் மத்தியில் வாஸ்துபகவான் பத்மாசனத்தில் அமர்ந்து ஜடாமுடியுடன் காட்சிதருகிறார். வாஸ்து பகவானின் தலைக்கு மேலே பிரம்மா, அம்பிகை, இருவரும் சிவபூஜை செய்யும் சிற்பம் இருக்கிறது.


    இந்த மூவரையும் ஒரு நாகம் சுற்றி உள்ளது. அருகில் சூரியன், சந்திரன், வியாக்ரபாதர், பதஞ்சலி இருக்கின்றனர்.

    வாஸ்து பகவானை சுற்றிலும் 27 நட்சத்திரங்களுக்கான மிருகங்கள், 12 ராசி சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து சூரிய மண்டல ஆகாய ராசி சக்கரம் இருக்கிறது.

    நடுவில் சூரியனும் சுற்றிலும் 12 ராசிகளும் உள்ளன. நிலம் பூமி, தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் இந்த சக்கரங்களின் கீழ் நின்று சிவனை தரிசித்து செல்கிறார்கள்.

    காளாத்தீஸ்வரர்-ஞானாம்பிகை சன்னதிக்கு இடையில் சண்முகர் சன்னதி இருக்கிறது. அம்பாள் முருகன் இருவரையும், ஒரே சமயத்தில் தரிசிக்கும் வகையில் சன்னதிகளின் அமைப்பு இருக்கிறது.

    அம் பாள் சன்னதி எதிரில் உள்ள 9 துளைகளுடன் கூடிய பலகணி (கல் ஜன்னல்) வழியாக இந்த தரிசனத்தை காணலாம். தாயார் நோய் வாய்ப்பட்டால் பிள்ளைகள் அவருக்கு நிவாரணம் வேண்டி இங்கு பூஜை செய்கிறார்கள். மகனை பிரிந்திருக்கும் பெற்றோரும் இங்கு அர்ச்சனை செய்ய வருகின்றனர்.

    கோவில்களில் பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டா தேவி, ஆகிய சப்த மாதர்களை தரிசித்து இருப்பீர்கள். ஆனால் இங்கு அஷ்டமாதர்களை தரிசிக்கலாம்.

    ஆதி சக்தியில் இருந்து 7 அம்சங்களாக 7 தேவியர் தோன்றினர் என்றும் அவர்களே சப்தமாதர்களாக அருளுகின்றனர் என்றும் தேவி பாகவதம் குறிப்பிடுகிறது. இதன் அடிப்படையில் இங்கு ஆதிசக்தியின் வடிவமாக காளிதேவி, சப்த மாதர்களுடன் சேர்ந்து எட்டாவதாக காட்சி தருகிறார்.

    அஷ்டகாளி என்றும் இந்த அமைப்பை சொல்லுவர். இது மிகவும் அபூர்வமான தரிசனம்.

    இத்தலத்தில் சிவன், வாயு அம்சமாக உள்ளார். எனவே இவருக்கும் வாயு லிங்கேஸ்வரர் என்ற பெருமை உண்டு. கண்ணப்பருக்கு காளகஸ்தியில் சிவன் முக்தி கொடுத்தார்.

    இந்நிகழ்வின் அடிப்படையில் கண்ணப்பருக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. சிவராத்திரி அன்று இரவிலும், கண்ணப்பர் குருபூஜை, காளாத்தீஸ்வரர், கண்ணப்பர் இருவருக்கும் விசேஷ பூஜை (பிப்ரவரி 5), நடக்கும். கண்நோய் உள்ளவர்கள் இந்தநாளில் சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.

    மனைவி சிம்ஹிகையுடன் ராகு மற்றும் சித்திரலேகாவுடன் கேதுவிற்கு பின்பு சன்னதி இருக்கிறது.

    ஞாயிற்றுகிழமை ராகு காலத்தில் (மாலை 4.30 முதல் 6 மணி வரை), இவர்கள் சன்னதியில் சர்ப்ப தோஷ பரிகார ஹோமம் நடக்கிறது. நாக தோஷத்தால் திருமணம், மற்றும் பல்வேறு தடைகளை சந்திப்பவர்கள் இதில் தரிசிக்கின்றனர்.

    ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறை நிகழும் ராகு-கேது பெயர்ச்சியின் போது இவர்களது சன்னதியில் திருக்கல்யாண வைபவம் நடக்கும். இச்சன்னதியில் 7 நாகதேவதையர், சிலை சிற்பமாகவும் காட்சிதருகின்றனர்.

    குபேரர் சன்னதி பிரகாரத்தில் ஐஸ்வர்ய லட்சுமியுடன் குபேரர் காட்சிதருகிறார். இவருக்கு பின்புறம் மகாலட்சுமி இருக்கிறார். அட்சயதிரிதியை தினத்தில் இந்த சன்னதியில் விசேஷ பூஜை நடக்கும்.

    கிரகங்களில் சனீஸ்வர பகவானுக்கு கருப்பு நிறம், கல்விக்கு அதிபதியான புதனுக்கு பச்சை நிறம் உகந்தது. ஆனால் இங்கு சனீஸ்வரருக்கு பச்சை நிற வஸ்திரம் அணிவிக்கிறார்கள். கல்வியில் சிறப்பிடம் பெற பக்தர்கள் வஸ்திரம் அணிவிக்கும் வழக்கம் இருக்கிறது.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் சிறப்பு அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி-12 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: நவமி காலை 6.10 மணி வரை பிறகு தசமி மறுநாள் விடியற்காலை 4.59 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம்: மிருகசீரிஷம் இரவு 8.33 மணி வரை பிறகு திருவாதிரை

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மதுரை ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி சேஷ வாகனத்தில் பவனி. பெருவயல் ஸ்ரீ முருகப்பெருமான் புறப்பாடு. திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், இரவு அம்பாள் தங்க மயில் வாகனத்திலும் திருவீதியுலா. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் சிறப்பு அலங்காரம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உதவி

    ரிஷபம்-இரக்கம்

    மிதுனம்-இன்பம்

    கடகம்-முயற்சி

    சிம்மம்-கடமை

    கன்னி-பயிற்சி

    துலாம்- சலனம்

    விருச்சிகம்-பெருமை

    தனுசு- தேர்ச்சி

    மகரம்-பாசம்

    கும்பம்-அனுகூலம்

    மீனம்-பரிசு

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சீதாதேவி மற்றும் லட்சுமணருடன் ராமபிரான் சேவை சாதிக்கிறார்.
    • ராம பிரானின் கரங்களில் உயரமான வில் மற்றும் அம்புகள் உள்ளன.

    கருப்பூர் என்ற பெயரில் தமிழகத்தில் நிறைய ஊர்கள் உள்ளன. அந்த வகையில், பக்கத்து ஊரான கோடாலியை தன்னுடன் இணைத்துக் கொண்டு கோடாலி கருப்பூர் என அழைக்கப்படும் தலம் ஒன்று, கும்பகோணம் அருகே உள்ளது. இத்தலத்தில் தன் தேவியோடும் இளவலோடும் ராமபிரான் சேவை சாதிக்கும் கோவில் ஒன்று இருக்கிறது.

    ராமநாராயணப் பெருமாள் ஆலயம் என்றழைக்கப்படும் அக்கோயில், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம் கம்பீரமாக காட்சி தர, உள்ளே நுழைந்ததும் விசாலமான பிரகாரத்தின் நடுவே பீடம், அதை அடுத்து கொடிமரம், கருடாழ்வார் சன்னதி அமைந்துள்ளது.

    அதைத் தொடர்ந்து சிறப்பு மண்டபமும், மகா மண்டபமும் உள்ளது. மகாமண்டபத்தின் வலதுபுறம் ஆழ்வார்களின் திருமேனிகள் உள்ளன.

    அர்த்த மண்டபத்தை தொடர்ந்துள்ள கருவறையில் சீதாதேவி மற்றும் லட்சுமணருடன் ராமபிரான் சேவை சாதிக்கிறார். புன்னகை தவழும் திருமுகத்துடன் விளங்கும் ராம பிரானின் கரங்களில் உயரமான வில் மற்றும் அம்புகள் உள்ளன. மேற்கு பிரகாரத்தில் வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி-பூதேவியுடன் தனி சன்னதியில் சேவை சாதிக்கிறார்.

    இங்கு புரட்டாசி சனி, வைகுண்ட ஏகாதசி, ராமநவமி ஆகிய நாட்களில் மூலவருக்கும், தேவியர்களுக்கும், வரதராஜப் பெருமாளுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. தினசரி இரண்டு கால பூஜை உண்டு. தடையை விலக்கி விரைந்து திருமணம் நடைபெற அருள்புரிவதில் இங்குள்ள ஆஞ்சநேயர் வல்லவர் என பக்தர்கள் கூறுகின்றனர்.


    ஆஞ்சநேயரிடம் வேண்டிக்கொள்ளும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் அவருக்கு வடைமாலை சாத்தி, தயிர்சாத பிரசாதத்தை பக்தர்களுக்கு வினியோகம் செய்து மகிழ்கின்றனர்.

    மனவேறுபாடுகளால் கவலைப்படும் தம்பதியர் இங்கு வந்து ராமபிரானையும், சீதாதேவியையும் வேண்டிக் கொள்கின்றனர். சில தினங்களிலேயே அவர்களிடையே உள்ள பிணக்கு மறைந்து மனம் மகிழும் தம்பதிகளாய் வாழத் தொடங்குகிறார்கள்.

    பின்னர் அவர்கள் இங்கு வந்து ராமபிரானுக்கும் சீதாதேவிக்கும் அபிஷேக, ஆராதனைகள் செய்து தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறார்கள்.

    சொத்துப் பிரச்சனையால் தனித்து நிற்கும் சகோதரர்களில் யாராவது ஒருவர் இங்கு வந்து ராமபிரான், சீதாதேவி, லட்சுமணன் ஆகியோரை வணங்கினால் சகோதரர்களின் பிணக்கு தீர்ந்து இருவரும் ஒரு சுமூக முடிவுக்கு வருவது ராமபிரானின் அருளால்தான் என்று பலனடைந்த பக்தர்கள் சிலிர்ப்போடு விவரிக்கின்றனர்.

    • 31-ந்தேதி சனிப்பிரதோஷம்.
    • 2-ந்தேதி அமாவாசை.

    27-ந்தேதி (செவ்வாய்)

    * மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி உற்சவம் ஆரம்பம்.

    * திருச்செந்தூர் முருகப்பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்தில் பவனி.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    28-ந்தேதி (புதன்)

    * திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடவருவாயில் ஆராதனை, மயில் வாகனத்தில் பவனி.

    * மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி சேச வாகனத்தில் பவனி.

    * பெருவயல் முருகப் பெருமான் புறப்பாடு.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.

    * சமநோக்கு நாள்.

    29-ந்தேதி (வியாழன்)

    * சுமார்த்த ஏகாதசி.

    * உப்பூர் விநாயகப் பெருமான் உற்சவம் ஆரம்பம், மூசிக வாகனத்தில் உலா.

    * திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை கோ ரதத்திலும், இரவு வெள்ளி தேரிலும் பவனி, அம்பாள் வெள்ளி இந்திர விமானத்தில் உலா.

    * மேல்நோக்கு நாள்.

    30-ந்தேதி (வெள்ளி)

    * முகூர்த்த நாள்.

    * வைஷ்ணவ ஏகாதசி.

    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்தில் பவனி.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * சமநோக்கு நாள்.

    31-ந்தேதி (சனி)

    * சனிப்பிரதோஷம்

    * திருநெல்வேலி சந்தி விநாயகர் திருக்கோவில் வருசாபிஷேகம்.

    * தேவகோட்டை, திண்டுக்கல், திருவலஞ்சுழி தலங்களில் விநாயகப் பெருமான் திருவீதி உலா.

    * மேல்நோக்கு நாள்.

    1-ந்தேதி (ஞாயிறு)

    * திருச்செந்தூர் முருகப்பெருமான் தங்க கைலாச பர்வத வாகனத்தில் பவனி, இரவு கமல வாகனத்தில் புறப்பாடு.

    * உப்பூர் விநாயகப் பெருமான் மயில் வாகனத்தில் பவனி.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    2-ந்தேதி (திங்கள்)

    * அமாவாசை

    * திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி, பெருவயல் ஆண்டவர் தலங்களில் ரத உற்சவம்.

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    • மிகப்பெரிய புத்த நினைவுச் சின்னங்களில் ஒன்றாகும்.
    • ஜாவானியர்களின் தோட்டம் என்று அழைக்கப்படுகிறது.

    இந்தோனேசிய நாட்டின் மத்திய ஜாவாவில் உள்ள மகேலாங் ரீஜென்சி பகுதியில் போரோபுதூர் என்ற இடம் உள்ளது. இங்கே கி.பி. 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மகாயான புத்தர் கோவில் உள்ளது. இது உலகிலேயே மிகப்பெரிய புத்தர் கோவிலாகும்.

    மேலும் மிகப்பெரிய புத்த நினைவுச் சின்னங்களில் ஒன்றாகவும் இது திகழ்கிறது. சைலேந்திர வம்சத்தினரின் ஆட்சி காலத்தில், கி.பி. 8-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 9-ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த புத்தர் கோவில் எழுப்பப்பட்டிருக்கிறது.

    இந்தோனேசியாவின் சாவகத் தீவில் அமைந்துள்ள, யோக்யகர்த்தா நகரில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் வடமேற்கில் இருக்கிறது போரோபுதூர் என்ற பகுதி.

    இங்கே சுண்டோரோ-சம்பிங் மற்றும் மெர்பாபு-மெராபி என்ற இரட்டை எரிமலைகள், புரோகோ மற்றும் எலோ ஆகிய இரண்டு ஆறுகளுக்கு இடையில் ஒரு உயரமான பகுதியில் புத்தர் கோவில் அமைந்திருக்கிறது.

    உள்ளூர் புராணங்களின் படி ஜாவானியர்களின் புனித இடமாக கருதப்படும் இது, 'ஜாவானின் தோட்டம்' என்று அழைக்கப்படுகிறது.

    சாம்பல் நிற ஆண்டிசைட் போன்ற கற்களால் கட்டப்பட்ட இந்த புத்தக் கோவிலானது, அடுக்கடுக்காக ஒன்பது தளங்களைக் கொண்டு அமைந்துள்ளது.


    கீழ் இருந்து முதல் ஆறு அடுக்குகள் சதுர வடிவத்திலும், மேலே உள்ள மூன்று அடுக்குகள் வட்டமாகவும், அதன் மேல் பகுதியில் மையக் குவிமாடமும் இருக்கிறது.

    இந்த கோவிலானது சுமார் 2 மில்லியன் கன அடி கற்களைக் கொண்டு கட்டப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்த ஒன்பது தளங்களின் வழியாகவும் சென்று மேல் பகுதியைக் கண்டுகளிக்க, சுமார் 4 கிலோமீட்டர் வரை நாம் நடக்க வேண்டியதிருக்கும்.


    இந்த கோவிலில் சுமார் 2 ஆயிரத்து 700 புடைப்புச் சிற்பங்களும், 504 புத்தர் சிலைகளும் இருக்கின்றன.

    1975 முதல் 1982-க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தோனேசிய அரசும், யுனெஸ்கோவும் இந்த புத்த நினைவுச் சின்னத்தை ஆய்வு செய்து, இதனை உலக பாரம்பரிய பட்டியலில் இணைத்துள்ளன.

    மறுசீரமைப்பு பணியின் போது, இந்த பகுதியில் உள்ள மூன்று புத்தக்கோவில்கள், அதாவது போரோபுதூர், பாவோன் மற்றும் மெண்டுட் ஆகியவை நேர்கோட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதோடு அந்த காலத்தில் போரோபுதூரில் இருந்து மெண்டுட் வரை இரு புறமும் சுவர்கள் கொண்ட செங்கல் சாலை இருந்துள்ளது. மூன்று கோவில்களும் ஒரே மாதிரியான கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பைப் பெற்றிருக்கின்றன.

    • இன்று பாஞ்சராத்திர ஸ்ரீ ஜெயந்தி.
    • மதுரை ஸ்ரீ நவநீத கிருஷ்ணசுவாமி உற்சவம் ஆரம்பம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி-11 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: அஷ்டமி காலை 7.30 மணி வரை பிறகு நவமி

    நட்சத்திரம்: ரோகிணி இரவு 8.54 மணி வரை பிறகு மிருகசீரிஷம்

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று பாஞ்சராத்திர ஸ்ரீ ஜெயந்தி (விஷ்ணு ஆலயங்களில் ஸ்ரீ கண்ணன் ஜெயந்தி விழா). சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். மதுரை ஸ்ரீ நவநீத கிருஷ்ணசுவாமி உற்சவம் ஆரம்பம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மாட வீதி புறப்பாடு. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை அபிஷேகம். திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நன்மை

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-பண்பு

    கடகம்-வெற்றி

    சிம்மம்-வரவு

    கன்னி-சாந்தம்

    துலாம்- உழைப்பு

    விருச்சிகம்-ஊக்கம்

    தனுசு- ஆதரவு

    மகரம்-அன்பு

    கும்பம்-ஆக்கம்

    மீனம்-அமைதி

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுவாக மாலை நேரத்தில் கொண்டாடப்படுகிறது.
    • விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமாகவும் கருதப்படுகிறது.

    கிருஷ்ண ஜெயந்தி ஆண்டு தோறும் தமிழ் ஆவணி மாதம், அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் அன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

    இந்த விழா ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, கிருஷ்ணாஷ்டமி, ஸ்ரீ ஜெயந்தி என்று பல்வேறு பெயர்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமாக கொண்டாடப்படுகிறது. இது விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமாகவும் கருதப்படுகிறது.

    இந்த விழா பொதுவாக மாலை நேரத்தில் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால், பூஜைகள் மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன.

    கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்கள் வீட்டின் வாயிலிலிருந்து பூஜையறை வரை இடப்பட்டு, குழந்தைகளுக்குரிய சீடை, முறுக்கு போன்ற தின்பண்டங்கள் படைக்கப்படுகின்றன.

    மேலும் கிருஷ்ண ஜெயந்தி என்றாலே உறியடி விழா என்பது நினைவிற்கு வரும். இந்த விழாவிலே ஒரு உயரமான இடத்தில் பானையில் பல பரிசுப் பொருட்களை போட்டு கட்டி விடுவார்கள். இங்கு பானை என்பது பரம்பொருள்.

    அது நமக்கு எட்ட முடியாத இடத்தில் இருக்கிறது. பரம்பொருளை நாடி அவருள் ஐக்கியமாகி முக்தி அடைய வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு ஆத்மாவின் எண்ணமாக இருக்கும்.

    ஆனால் பரம்பொருள் காலடியை சென்று சேருவது என்பது அவ்வளவு எளிதான விஷயமா? எத்தனை, எத்தனை அலைக்கழிப்புகளில் சிக்கி அல்லாட வேண்டியதிருக்கிறது. என்பதைக் குறிக்கும் வகையில் அந்த பானையை உடைத்து எடுப்பவரின் கண்களை கட்டி அவர் மேல் நீர் ஊற்றிக் கொண்டே இருப்பார்கள்.

    இந்த தடைகளை எல்லாம் கடந்தால் தான் அந்தப் பரிசுப் பொருளைப் பெற முடியும். அது போல நாம் நமது வாழ்க்கையில் சந்திக்கும்பலவேறு தடைகளைக் கடந்து சென்றால் தான் பகவானின் திருப் பாதங்களில் தஞ்சம் அடைய முடியும்.

    வீடுகளில் கிருஷ்ணஜெயந்தி கொண்டாட்டங்கள்

    * வீடுகள் மற்றும் கோவில்கள் சுத்தம் செய்யப்பட்டு மலர்கள், மாலைகள் மற்றும் அழகான ரங்கோலிகளால் அலங்கரிக்கப்படுகின்றன.

    * வண்ணமயமான ஆடைகள் மற்றும் நகைகளால் அழகாக அலங்கரிக்கப்பட்ட குழந்தை கிருஷ்ணரின் சிலைகள் அல்லது உருவங்களுடன் சிறப்பு பீடங்கள் அமைக்கப்படுகின்றன.

    * வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரை கிருஷ்ணரின் கால் தடங்களை அரிசி மாவில் இடுவார்கள். இது குழந்தை கிருஷ்ணர் வீட்டிற்கு வருவதாக ஐதீகம்.

    * புதிதாக எடுக்கப்பட்ட வெண்ணெய், அவல் மற்றும் முறுக்கு சீடை போன்ற பலகாரங்களை செய்து நைவேத்தியம் செய்கிறார்கள்.

    * பக்திப் பாடல்களைப் பாடுவது, பகவத் கீதையைப் படிப்பது மற்றும் கிருஷ்ணரின் குழந்தைப் பருவக் கதைகளைப் பாராயணம் செய்வது போன்றவை கடைபிடிக்கப்படுகிறது.


    * வட இந்தியாவில், அஷ்டமி திதி மற்றும் ரோகிணி நட்சத்திரம் முடியும் வரை பக்தர்கள் நிர்ஜல (நீர் கூட குடிக்காமல் இருத்தல்) விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள், சிலர் பழங்கள் மற்றும் சாத்வீக உணவுகளுடன் விரதத்தைத் தேர்வு செய்கிறார்கள்.

    * உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால், அவர்களை சிறிய கிருஷ்ணராகவும் ராதையாகவும் அலங்காரம் செய்வது, பண்டிகை உற்சாகத்தை அதிகரிக்கும்.

    அடுத்து, கிருஷ்ணரின் சிலை அல்லது விக்கிரகத்தை மலர்கள், விளக்குகள் மற்றும் தூபங்களால் அலங்கரித்து தெய்வீக சூழலை உருவாக்கி பூஜை அறையில் வைக்கவும்.

    பாரம்பரிய இனிப்புகளான லட்டு, கேசரி மற்றும் பாயாசம் ஆகியவை பிரசாதமாக தயாரிக்கவும். வெண்ணெய் மற்றும் தயிர் சார்ந்த உணவுகள் போன்ற கிருஷ்ணருக்கு பிடித்த சில உணவுகளையும் படைக்கலாம்.

    பகவான் கிருஷ்ணரை மந்திரங்கள் ஜெபித்து அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பக்திப் பாடல்களைப் பாடி வணங்குங்கள்.

    நீங்கள் அனைவரும் இந்த மங்களகரமான விழாவைக் கொண்டாடி மகிழ எங்களின் அன்பான வாழ்த்துக்கள்.

    • பிரமோற்சவம் அக்டோபர் 4-ந் தேதி முதல் 12 வரை நடக்கிறது.
    • திருமலை மலை சாலைகள் 24 மணி நேரமும் திறந்து வைக்கப்படும்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா அக்டோபர் 4-ந் தேதி முதல் 12 வரை நடக்கிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஜே.ஷ்யாமளா ராவ் கூறியதாவது:-

    திருப்பதி பிரமோற்சவ விழாவின் போது தினமும் காலை 8 முதல் 10 மணி வரையிலும் இரவு 7 முதல் 9 மணி வரையிலும் வாகன சேவைகள் நடைபெறும். கருட வாகன சேவை மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகும்.

    அக்டோபர் 4-ந்தேதி மாலை, மாநில அரசு சார்பில் வெங்கடேசப் பெருமானுக்கு முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்கிறார். அவர் சேஷ வாகன சேவையிலும் பங்கேற்பார்.

    பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், பல ஆர்ஜித சேவைகள் மற்றும் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    சுமார் 7 லட்சம் லட்டுகள் தயார் நிலையில் வைக்கப்படும். கருட வாகன சேவைக்காக மாவட்ட காவல்துறையின் ஒருங்கிணைப்புடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். கருட வாகன சேவை நாளில் திருமலை மலை சாலைகள் 24 மணி நேரமும் திறந்து வைக்கப்படும்.

    அனைத்து கல்யாண கட்டாக்களிலும் இடைவிடாமல் 24 மணி நேரமும் பக்தர்கள் மொட்டை அடிக்க வசதியாக கூடுதல் முடிதிருத்தும் பணியாளர்களை நியமிக்கப்படுவார்கள்.

    அன்னதான கூடம் மட்டுமின்றி பக்தர்கள் காத்திருக்கும் பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் அன்னதானம், பால் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்று கார்த்திகை விரதம். கோகுலாஷ்டமி.
    • திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி-10 (திங்கட்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சப்தமி காலை 9.12 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம்: கார்த்திகை இரவு 9.40 மணி வரை பிறகு ரோகிணி

    யோகம்: மரண அமிர்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று கார்த்திகை விரதம். கோகுலாஷ்டமி வைகாசன ஜெயந்தி. ராமநாதபுரம், மலையப்பட்டி, திருமாலிருஞ்சோலை, பெருங்களத்தூர் ஸ்ரீ கிருஷ்ணர் பிறப்பு வைபவம். பெருவயல் ஸ்ரீ முருகப் பெருமான் திருவீதியுலா. திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ முருகப் பெருமான் கோவிலில் பவனி. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-கடமை

    ரிஷபம்-ஓய்வு

    மிதுனம்-முன்னேற்றம்

    கடகம்-விவேகம்

    சிம்மம்-சிரத்தை

    கன்னி-வாழ்வு

    துலாம்- ஆர்வம்

    விருச்சிகம்-உதவி

    தனுசு- ஊக்கம்

    மகரம்-மகிழ்ச்சி

    கும்பம்-உறுதி

    மீனம்-பரிசு

    • திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பாலாபிஷேகம்.
    • பெருவயல் ஸ்ரீ முருகப் பெருமான் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி-9 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சஷ்டி காலை 11.12 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம்: பரணி இரவு 10.43 மணி வரை பிறகு கார்த்திகை

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பாலாபிஷேகம். திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமான் சிங்கக் கேடயச் சப்பரத்திலும் இரவு பல்லக்கிலும் பவனி. பெருவயல் ஸ்ரீ முருகப் பெருமான் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சனம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பயணம்

    ரிஷபம்-நிம்மதி

    மிதுனம்-நன்மை

    கடகம்-வெற்றி

    சிம்மம்-பாசம்

    கன்னி-முயற்சி

    துலாம்- நிறைவு

    விருச்சிகம்-சலனம்

    தனுசு- கீர்த்தி

    மகரம்-கவனம்

    கும்பம்-போட்டி

    மீனம்-சிந்தனை

    • ராதையுடன் தெய்வீகக் காதல் புரிந்தார் கிருஷ்ணர்.
    • துவாரகைக்கு மதுரா மக்களுடன் குடிபெயர்ந்தார்.

    கம்சனின் சகோதரி தேவகி. இவளை வசுதேவருக்கு கம்சன் திருமணம் செய்து கொடுத்தான்.

    ஒருநாள் வசுதேவர், தேவகி இருவரையும் கம்சன் தனது தேரில் ஏற்றி அழைத்து சென்று கொண்டிருந்தான். அப்போது வானில் அசரிரீ ஒன்று கேட்டது. "கம்சா.... உன் சகோதரி தேவகிக்கு பிறக்கும் 8-வது குழந்தை உன்னை கொல்லும்" என்று அசரிரீ ஒலித்தது.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கம்சன் தேவகியை கொலை செய்யும் எண்ணத்துடன் வாளை உருவினான். அவனை தடுத்த வசுதேவர், தங்களுக்கு பிறக்கும் எல்லா குழந்தைகளையும் ஒப்படைத்து விடுகிறோம் என்று உறுதி அளித்தார்.

    அதை கம்சன் ஏற்றுக் கொண்டான். தேவகி தன் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதற்காக வசுதேவரையும் தேவகியையும் சிறையில் அடைத்தான். அங்கு தேவகிக்கு 7 குழந்தைகள் பிறந்தன.

    அந்த 7 குழந்தைகளையும் பிறந்த உடனேயே கம்சன் அழித்தான். இந்தநிலையில் தேவகி 8-வது முறையாக கர்ப்பம் அடைந்தாள்.

    அதே சமயத்தில் வசுதேவரின் நண்பர் நந்தாவின் மனைவி யசோதாவும் கர்ப்பம் அடைந்தாள். ஆவணி மாதம் அஷ்டமி திதி ரோகிணி நட்சத்திர தினத்தன்று தேவகிக்கு ஆண் குழந்தையும் யசோ–தாவுக்கு பெண் குழந்தையும் பிறந்தன.

    அப்போது மதுரா சிறையில் இருந்த வசுதேவர் முன்பு மகாவிஷ்ணு தோன்றினார். "இந்த ஆண் குழந்தை (கிருஷ்ணர்)யை கோகுலத்தில் உள்ள யசோதா வீட்டில் சேர்த்து விட்டு, அங்கு பிறந்துள்ள பெண் குழந்தையை இங்கு கொண்டு வருமாறு உத்தரவிட்டார்.

    அதன்படி வசுதேவர் கிருஷ்ணரை கூடையில் சுமந்து கொண்டு சென்றார். அவருக்கு ஆதிசேஷன் குடை பிடித்துச் சென்றது. யமுனை நதியைக் கடந்து சென்று அந்த குழந்தையை பிருந்தாவனத்தில் யாதவ குலத்தினரான நந்தகோபர், யசோதையிடம் ஒப்படைத்தார்.

    அந்த குழந்தைக்கு கிருஷ்ணன் என்று நந்தர் பெயரிட்டார். குழல் ஊதி, மாடு மேய்த்து, நண்பர்களுடன் விளையாடி, வெண்ணை திருடி குறும்புத்தனம் செய்து காலத்தை கழித்த கிருஷ்ணன் பிருந்தாவனத்தின் செல்லப் பிள்ளையானார்.

    இதற்கிடையே கம்சன் தன் சகோதரி தேவகிக்கு 8-வது குழந்தை பிறந்து இருப்பதை அறிந்து சிறைக்கு வந்தான். அங்கு அவனுக்கு தெரியாமல் மாற்றி வைக்கப்பட்டிருந்த பெண் குழந்தையை பார்த்தான்.

    இந்த பெண் குழந்தையா என்னை கொல்லப்போகிறது என்று எக்காளமிட்டு சிரித்தான். பிறகு அந்த பெண் குழந்தையை தூக்கிப் பிடித்தப்படி வாளால் வெட்டி கொல்ல முயன்றான்.

    அப்போது அந்த குழந்தை, "உன்னை கொல்ல அவதாரம் எடுத்து இருப்பவர் கோகுலத்தில் வளர்ந்து வருகிறார். விரைவில் உன் கதை முடியப் போகிறது" என்று கூறி விட்டு மறைந்தது. அந்த பெண் குழந்தைதான் பின்னாளில் பவானி அம்மனாக அவதாரம் எடுத்ததாக புராண வரலாறுகளில் சொல்லப்பட்டுள்ளது.

    மாயமாய் மறைந்த பெண் குழந்தை சொன்னதைக் கேட்டு கம்சன் மேலும் அதிர்ச்சி அடைந்தான். தனது பணியாட்களை அனுப்பி விசாரித்தான். அப்போது கோகுலத்தில் வளரும் கிருஷ்ணர் தான் தேவகி பெற்ற 8-வது குழந்தை என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து கம்சன் தனது வீரர்களை அனுப்பி கிருஷ்ணரை கொல்ல முயன்றான். அந்த அசுரர்கள் அனைவரையும் கிருஷ்ணர் வதம் செய்தார்.

    இளவயதில் பிருந்தாவனத்தில் இருந்த பெண்களின் மனதில் கிருஷ்ணர் இடம் பிடித்தார். இவர்களுள் ஒருவரான ராதையுடன் தெய்வீகக் காதல் புரிந்தார்.


    பிறகு மதுரா சென்று கம்சனை வென்று தன் தாத்தாவான உக்கிரசேனரிடம் ராஜ்யத்தை ஒப்படைத்தார். தனது அத்தை மகன்களான பாண்டவர்களுடன், குறிப்பாக அர்ஜூனனுடன் நட்பு கொண்டார். பின்னர் துவாரகை எனும் ஊருக்கு மதுரா மக்களுடன் குடிபெயர்ந்தார்.

    பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே நடந்த குருசேத்திரப் போரில் தனது சேனையை கவுரவர்களிடம் கொடுத்து விட்டு தான் அர்ஜூனனின் தேரோட்டியாக பணிபுரிந்தார்.

    இந்த போர் தொடங்கும் முன் இவர் அர்ஜூனனிடம் மேற்கொண்ட உரையாடலே பகவத் கீதை ஆனது. பின்னர் துவாரகையில் தன் மனைவியான ருக்மணியுடன் வாழ்ந்து யாதவர்களின் அரசராக விளங்கினார்.

    • கண்ணன் வீட்டிற்குள் தத்தித் தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.
    • தடைகளும், பிழைகளும் தீயினில் பட்ட தூசாக அழியும்.

    பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும்.

    அதனால்தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து அரிசி மாவில் கோலமிட்டு பூக்கள், மாவிலை தோரணங்களால் அழகுபடுத்துவர். வாசலில் தொடங்கி பூஜை அறை வரை குழந்தையின் பிஞ்சு பாத தடங்களை அரிசி மாவால் பதிப்பார்கள். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டிற்குள் தத்தித் தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.

    கிருஷ்ணனின் படத்தை அலங்கரித்து மாலைகளும், மலர்களும் சூடி அவனுக்கு பிடித்தமான வெண்ணெய், இனிப்பு வகைகள், சீடை, முறுக்கு, தேன்குழல், பொங்கல், பால் பாயாசம் போன்ற நைவேத்யங்கள் படைத்து அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து பூஜைகள் செய்து பக்தி பாமாலைகள் பாடி வழிபட வேண்டும்.

    அந்த நீலவண்ண கண்ணன் நம் இல்லம் வந்து அருள்புரிய சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் தனது திருப்பாவையில் இவ்வாறு பாடியருளியுள்ளார்.

    'மாயனை மன்னு வட மதுரை மைந்தனை

    தூய பெருநீர் யமுனைத் துறைவனை

    ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை

    தாயை குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை

    தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது

    வாயினாற்பாடி மனத்தினால் சிந்திக்க

    போய பிழையும் புகு தருவானின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.'

    கிருஷ்ணனை இவ்வாறு பாடி வழிபட்டால் எல்லா விதமான தடைகளும், பிழைகளும் தீயினில் பட்ட தூசாக அழியும் என்று தனது திருப்பாவை பாசுரத்தில் கூறியுள்ளார்.

    பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும். இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும்.

    கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள். வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்தபிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி மகிழ்வது சிறப்பு.

    ×