search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் நிலங்கள்"

    • நிலங்களில் எல்லை கற்கள் நடுவதற்கும், வேலி அமைத்து பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
    • விரைவில் கோவில் பெயரில் பட்டா பெற்று நிலங்களை பாது காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    வத்திராயிருப்பு:

    தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை மீட்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி மாவட்டம்தோறும் கோவில் நிலங்களை மீட்க தனி வட்டாட்சியர் உள்பட புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டது. அதிகாரிகள் கோவில்களில் ஆய்வு செய்து நிலங்களை அடையாளம் காணும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாவூத்து உதயகிரி நாதர் கோவில் ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது கோவிலுக்கு சொந்தமாக 349 ஏக்கர் புஞ்சை நிலங்கள், 39 ஏக்கர் நஞ்சை நிலங்கள் கோவில் பரம்பரை அறங்காவலர் காசிகிரி பெயரில் இருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு கோவில் பெயரில் நிலங்களை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு தற்போதைய கோவில் அறங்காவலர் ரூபாபாய் சம்மதம் தெரிவித்தார்.

    இதையடுத்து 43 பட்டா எண்களில் உள்ள 388 ஏக்கர் நிலங்கள் கோவில் பெயரில் மாற்ற வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். இதையடுத்து தனி வட்டாட்சியர் மாரிமுத்து, நில அளவையர், இந்து சமய அறநிலை யத்துறை ஆய்வாளர் முத்து மணிகண்டன் ஆகியோர் நிலங்களை ஆய்வு செய்து வேறு ஏதேனும் ஆக்கிரமிப்பு உள்ளதா? என விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து அந்த நிலங்களில் எல்லை கற்கள் நடுவதற்கும், வேலி அமைத்து பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து வட்டாட்சியர் மாரிமுத்து கூறுகையில், உதயகிரிநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான 388 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு அளவீடு செய்யும் பணி முடிவடைந்து உள்ளது. விரைவில் கோவில் பெயரில் பட்டா பெற்று நிலங்களை பாது காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • மைவாடி நரசிங்கப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 14.39 ஏக்கர் புஞ்சை நிலங்கள் மீட்கப்பட்டன.
    • கோவில் நிலம் மீட்கப்பட்டு அறிவிப்பு பதாகையும் வைக்கப்பட்டது.

    உடுமலை:

    தமிழ்நாடு இந்து சமய அறநிலையத துறை, திருப்பூர் மண்டல இணை ஆணையர் வழிகாட்டுதலின்படி திருப்பூர் உதவி ஆணையர் ஜெயதேவி (கூடுதல் பொறுப்பு) தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை தனி தாசில்தார் மகேஸ்வரன் (ஆலய நிலங்கள்), சரக ஆய்வர் சரவணக்குமார், கோவில் தக்கார் அம்சவேணி, நில அளவையர் நிஷாந்த் மற்றும் கோவில் பணியாளர்கள் முன்னிலையில் கடத்தூர் சந்தான கோபால கிருஷ்ணசுவாமி கோவிலுக்கு சொந்தமான 1.53 ஏக்கர் நஞ்சை நிலங்கள் மீட்கப்பட்டன. இந்த நிலங்களின் மதிப்பு ரூ.76 லட்சம் ஆகும்.

    அதுபோல மைவாடி நரசிங்கப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 14.39 ஏக்கர் புஞ்சை நிலங்கள் மீட்கப்பட்டன. இந்த நிலங்களின் மதிப்பு ரூ.7 கோடியே 19 லட்சத்து 60 ஆயிரம் ஆகும். மேலும் கொழுமம் தாண்டேஸ்வரர் மற்றும் கல்யாண வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான உடுமலை தாலுகா கல்லாபுரம் கிராமத்தில் உள்ள 2.48 ஏக்கர் பரப்பளவுள்ள நஞ்சை நிலங்கள் மீட்கப்பட்டது. இந்த நிலங்களின் மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும்.

    இவ்வாறு மடத்துக்குளம் பகுதியில் மொத்தம் ரூ.8 கோடியே 25 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்ட நிலையில், அந்த இடங்களில் கோவில் நிர்வாகங்களின் சார்பில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டது.

    அதுபோல் அனிக்கடவு கிராமம் சிந்திலுப்பு வெங்கடேசப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தன. இந்த கோவில் நிலம் மீட்கப்பட்டு அறிவிப்பு பதாகையும் வைக்கப்பட்டது.மீட்கப்பட்ட கோவில் நிலத்தின் மதிப்பு ரூ.7 கோடியே 19 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

    • தமிழக அரசுக்கு சொந்தமான கோவில் நிலங்கள் மீட்பு
    • கோவில் நிலங்கள் அனைத்தும் சர்வேயர் மூலமாக அளந்து மீண்டும் கோவிலுக்கு சொந்தமாக்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தமிழக அரசுக்கு சொந்தமான கோவில் நிலங்கள் தேவராய சமுத்திரம் ஸ்ரீ விநாயகர் கோவில், ஸ்ரீ சிவன் கோவில்,ஸ்ரீ பொன்னாச்சி அம்மன் கோவில், ஸ்ரீ பட்டத்தரசி செல்லாண்டியம்மன் கோவில் ,ஸ்ரீ மாரியம்மன் கோவில் ஆகிய கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்கள் இடமிருந்து மீட்கக்கோரி இந்து சமய அறநிலைத்து றைக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் மனு அனுப்பப்பட்டிருந்தது.

    அதன் அடிப்படையில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவின்படி நேற்று கோவில் நிலங்கள் அனைத்தும் சர்வேயர் மூலமாக அளந்து மீண்டும் கோவிலுக்கு சொந்தமாக்கப்பட்டது.

    ×