search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜிம்பாப்வே இந்தியா தொடர்"

    • முதலில் ஆடிய இந்தியா 182 ரன்கள் குவித்தது.
    • கேப்டன் சுப்மன் கில் அரை சதம் கடந்தார்.

    ஹராரே:

    இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 182 ரன்கள் குவித்தது. கேப்டன் சுப்மன் கில் 66 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ஜிம்பாப்வே சார்பில் ராசா, பிளசிங் முசரபானி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி ஒரு கட்டத்தில் 39 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தத்தளித்தது. அடுத்து ஆடிய டியான் மியர்ஸ் - கிளைவ் மடாண்டே ஜோடி பொறுப்புடன் ஆடியது. டியான் மியர்ஸ் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார்.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 23 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும், ஆவேஷ் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், சர்வதேச டி20 போட்டி வரலாற்றில் 150 வெற்றிகளை பெற்ற முதல் அணி என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் அணி பெற்றது.

    பாகிஸ்தான் 142 வெற்றியுடன் 2வது இடத்திலும், நியூசிலாந்து 111 வெற்றியுடன் 3வது இடத்திலும் உள்ளது.

    • ஜிம்பாப்வே தரப்பில் டியான் மியர்ஸ் 65 ரன்கள் விளாசினார்.
    • இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும் ஆவேஷ் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஹராரே:

    இந்திய கிரிக்கெட்- ஜிம்பாப்வேயில் அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 182 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 66 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜிம்பாப்வே தரப்பில் ராசா, பிளசிங் முசரபானி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனையடுத்து ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்களாக வெஸ்லி மாதேவேரே- தடிவானாஷே மருமணி ஆகியோர் களமிறங்கினர். வெஸ்லி மாதேவேரே 1 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த பிரையன் பென்னட் 4, தடிவானாஷே 13, ராசா 15, ஜொனாதன் காம்ப்பெல் 1 அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    இந்நிலையில் டியான் மியர்ஸ் - கிளைவ் மடாண்டே ஜோடி பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். கிளைவ் மடாண்டே 37 ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் டியான் மியர்ஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார்.

    இதனால் ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும் ஆவேஷ் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • இந்தியா தரப்பில் சுப்மன் கில் 66 ரன்கள் குவித்தார்.
    • ஜிம்பாப்வே தரப்பில் ராசா, பிளசிங் முசரபானி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஹராரே:

    இந்திய கிரிக்கெட்- ஜிம்பாப்வேயில் அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் களமிறங்கினர். இந்த ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். நிதானமாக விளையாடி ஜெய்ஸ்வால் 36 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அபிஷேக் 10 ரன்னில் வெளியேறினார்.

    இதனையடுத்து சுப்மன் கில் - ருதுராஜ் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை கணிசமாக உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 66 ரன்னில் ஆட்டமிழந்தார். அரை சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட ருதுராஜ் 49 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே தரப்பில் ராசா, பிளசிங் முசரபானி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
    • 2 போட்டிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது.

    ஹராரே:

    சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 13 ரன் வித்தியாசத்திலும் 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 100 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையை உள்ளது.

    இந்த நிலையில் இரு அணிகள் மோதும் 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சஞ்சு சாம்சன், சிவம் துபே, ஜெய்ஸ்வால் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமாருக்கு பதிலாக கலீல் அகமது இடம் பிடித்துள்ளார்.

    • ஜிம்பாப்வே தொடரில் முதல் 2 போட்டியில் இவர்கள் இடம் பெற முடியவில்லை.
    • சாய்சுதர்சன் 2-வது 20 ஓவர் போட்டியில் அறிமுகமாகி இருந்தார்.

    ஹராரே:

    சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் தொடரில் 2 போட்டி முடிவில் 1-1 என்ற சமநிலை காணப்படுகிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 13 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது. 2-வது போட்டியில் இந்தியா 100 ரன் வித்தியா சத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் ஆட்டம் ஹராரேயில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

    இந்த போட்டியிலும் இந்திய அணி அதிரடி தொடருமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும், பந்துவீச்சில் ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், அவேஷ் கான் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். கடந்த போட்டியில் இந்திய அணி 234 ரன் குவித்து இருந்தது. இந்த போட்டியிலும் வென்று இந்தியா முன்னிலை பெறும் வேட்கையில் உள்ளது.

    சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் இருக்கிறது.

    இரு அணிகளும் நாளை மோதுவது 11-வது ஆட்ட மாகும். இதுவரை நடந்த 10 போட்டிகளில இந்தியா 7-ல், ஜிம்பாப்வே 3-ல் வெற்றி பெற்றுள்ளன.

    நாளைய போட்டி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.

    ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணியுடன் ஜெய்ஸ்வால், சஞ்சுசாம்சன், ஷிவம்துபே ஆகியோர் இணைந்துள்ளனர்.

    வெஸ்ட்இண்டீசில் 20 ஓவர் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த இவர்கள் 3 பேரும் நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஜிம்பாப்வே தொடரில் முதல் 2 போட்டியில் இவர்கள் இடம் பெற முடியவில்லை.

    தற்போது அவர்கள் இந்திய அணியில் இணைந்து உள்ளதால் சாய்சுதர்சன், ஹர்ஷித் ரானா, ஜிதேஷ் சர்மா ஆகியோர் நாடு திரும்புகிறார்கள். இவர்கள் முதல் 2 போட்டிகளுக்கு மட்டும் அணியில் சேர்க்கப்பட்டு இருந்தனர்.

    இதில் சாய்சுதர்சன் 2-வது 20 ஓவர் போட்டியில் அறிமுகமாகி இருந்தார். ஆனால் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் டி20 போட்டியில் துருவ் ஜுரேல் விக்கெட்டை லூக் ஜோங்வே கூறினார்.
    • துருவ் விக்கெட்டை வீழ்த்தியவுடன், லூக் ஜோங்வே தனது ஷூவை கழற்றி, அவர் காதில் வைத்து போன் பேசுவது போல அந்த விக்கெட் வீழ்ச்சியை கொண்டாடினார்.

    ஹராரே:

    இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது.

    முன்னதாக முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சாளர் லூக் ஜோங்வே 10 வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் துருவ் ஜுரேல் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். துருவ் 14 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். துருவ் விக்கெட்டை வீழ்த்தியவுடன், லூக் ஜோங்வே தனது ஷூவை கழற்றி, அவர் காதில் வைத்து போன் பேசுவது போல அந்த விக்கெட் வீழ்ச்சியை கொண்டாடினார். இந்திய வீரர் ஒருவரை ஆட்டமிழக்க செய்தவுடன் அவர் ஷூவை அவிழ்த்தது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    இந்நிலையில் நான் யாரையும் அவமானப்படுத்துவதற்காக அப்படி கொண்டாடவில்லை என்று லூக் ஜாங்வே தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-

    முதல் போட்டிக்கு முன் தனது காதலியுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததாகவும், அப்போது விக்கெட் வீழ்த்தினால் அதை எப்படி கொண்டாட வேண்டும் என இருவரும் விவாதித்ததாகவும், அப்போது அவரது காதலி விக்கெட்டை வீழ்த்தினால் ஷூவை அவிழ்த்து காதில் வைத்து போன் பேசுமாறு தெரிவித்தார்.

    என லூக் ஜாங்வே கூறினார்.

    • அபிஷேக் சர்மா 46 பந்துகளில் தனது முதல் சர்வதேச சதத்தைப் பதிவுசெய்தார்.
    • இதன் மூலம் ஆட்டநாயகன் விருதை அபிஷேக் சர்மா தட்டி சென்றார்.

    இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று ஹராரேவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் அபிஷேக் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய 46 பந்துகளில் தனது முதல் சர்வதேச சதத்தைப் பதிவுசெய்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்களைக் குவித்தது.

    அதன்பின் விளையாடிய ஜிம்பாப்வே அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    இந்நிலையில் இப்போட்டி முடிந்த கையோடு அபிஷேக் சர்மா, தனது ஆலோசகரும், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவனுமான யுவராஜ் சிங்குடன் வீடியோ கால் வாயிலாக உரையாடினார். அப்போது யுவாராஜ் சிங் அபிஷேக் சர்மாவிடம், "உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். நீங்கள் அதற்கு தகுதியானவர். இது வெறும் ஆரம்பம் மட்டும் தான். இன்னும் பல வர உள்ளன" என்று பாராட்டியுள்ளார்.

    இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அந்தவகையில் அவர் தனது இரண்டாவது போட்டியிலேயே சதமடித்து அசத்தியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகக்குறைந்த இன்னிங்சில் சதமடித்த வீரர் எனும் சாதனை படைத்துள்ளார்.

    • ஒரு இளம் வீரராக அன்றைய நாள் உங்களுக்கானதாக அமைந்தால் அன்று நீங்கள் நன்றாக செயல்பட வேண்டும்.
    • நீ எதிரணியை அடிக்க வேண்டும் என்று ருதுராஜ் என்னிடம் சொன்னார்.

    ஹராரே:

    இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி ஹராரேவில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 234 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அபிஷேக் சர்மா 100 ரன், ருதுராஜ் கெய்க்வாட் 77 ரன், ரிங்கு சிங் 48 ரன் எடுத்தனர்.

    இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 134 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

    அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    இந்நிலையில் ஒருவேளை பந்து என்னுடைய இடத்தில் இருந்தால் அது முதல் பந்தாக இருந்தாலும் நான் அதை அடித்து நொறுக்கிச் செல்வேன் என அபிஷேக் சர்மா கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இது என்னுடைய சிறந்த செயல்பாடு என்று நினைக்கிறேன். முதல் போட்டியில் சந்தித்த தோல்வி எங்களுக்கு எளிதல்ல. இன்று என்னுடைய நாளாக உணர்ந்தேன். எனவே அதை நான் பயன்படுத்திக் கொண்டேன். டி20 என்பது வேகத்தை பயன்படுத்தி அதை கடைசி வரை எடுத்துச் செல்வது பற்றியதாகும். இந்த நேரத்தில் என் மீது தன்னம்பிக்கை வைத்த பயிற்சியாளர்கள், கேப்டன்கள் மற்றும் அணி நிர்வாகங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

    ஒரு இளம் வீரராக அன்றைய நாள் உங்களுக்கானதாக அமைந்தால் அன்று நீங்கள் நன்றாக செயல்பட வேண்டும். நாங்கள் ஒவ்வொரு ஓவராக எடுத்து விளையாடினோம். நீ எதிரணியை அடிக்க வேண்டும் என்று ருதுராஜ் என்னிடம் சொன்னார். எப்போதும் எனது திறமையை நான் நம்புகிறேன். ஒருவேளை பந்து என்னுடைய இடத்தில் இருந்தால் அது முதல் பந்தாக இருந்தாலும் நான் அதை அடித்து நொறுக்கிச் செல்வேன்.

    என்று கூறினார்.

    • முதலில் ஆடிய இந்தியாவின் அபிஷேக் சர்மா சதமடித்தார்.
    • அடுத்து ஆடிய ஜிம்பாப்வே 134 ரன்களை எடுத்து தோற்றது.

    ஹராரே:

    இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி ஹராரேயில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 234 ரன்களைக் குவித்தது. முதலில் நிதானமாக ஆடி அரை சதமடித்த அபிஷேக் சர்மா அதன்பின் அதிரடியில் இறங்கி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அறிமுகமான தொடரிலேயே அபிஷேக் சர்மா 46 பந்துகளில் 8 சிச்கர்கள், 7 பவுண்டரியுடன் சதமடித்து அவுட்டானார். 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 137 ரன்கள் சேர்த்தது.

    ருத்ராஜ் கெய்க்வாட் 47 பந்தில் 77 ரன்னும், ரிங்கு சிங் 22 பந்தில் 48 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.

    இதையடுத்து, 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. அந்த அணியின் வெஸ்லி மதேவரே ஓரளவு தாக்குப்பிடித்து 43 ரன்கள் எடுத்து அவுட்டானார். பென்னெட் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், ஜிம்பாப்வே 20 ஓவரில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 1-1 என சமன் செய்தது.

    • முதலில் ஆடிய இந்தியா 234 ரன்களை குவித்தது.
    • தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தினார்.

    ஹராரே:

    இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் சுப்மன் கில் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    அடுத்து இறங்கிய ருத்ராஜ் கெய்க்வாட் அபிஷேக்குடன் இணைந்து பொறுமையாக ஆடினார். முதலில் நிதானமாக ஆடி அரை சதமடித்த அபிஷேக் சர்மா அதன்பின் அதிரடியில் இறங்கி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அறிமுகமான தொடரிலேயே அபிஷேக் சர்மா 46 பந்துகளில் 8 சிச்கர்கள், 7 பவுண்டரியுடன் சதமடித்து அவுட்டானார். 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 137 ரன்கள் சேர்த்தது.

     அடுத்து கெய்க்வாட்டுடன் ரிங்கு சிங் இணைந்தார். ருத்ராஜ் அரை சதம் கடந்தார். இருவரும் சிக்சர், பவுண்டரிகளாக அடித்தனர்.

    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 234 ரன்களைக் குவித்துள்ளது. ருத்ராஜ் கெய்க்வாட் 47 பந்தில் 77 ரன்னும், ரிங்கு சிங் 22 பந்தில் 48 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதையடுத்து, 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்குகிறது.

    • டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இந்தியாவின் அபிஷேக் சர்மா சதமடித்தார்.

    ஹராரே:

    இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் சுப்மன் கில் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    அடுத்து இறங்கிய ருத்ராஜ் கெய்க்வாட் அபிஷேக்குடன் இணைந்து பொறுமையாக ஆடினார்.

    முதலில் நிதானமாக ஆடிய அபிஷேக் சர்மா அரை சதம் கடந்தார். அதன்பின் அதிரடியில் இறங்கினார். சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

    அறிமுகமான தொடரிலேயே அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தியுள்ளார். அவர் 46 பந்துகளில் 8 சிச்கர்கள், 7 பவுண்டரியுடன் சதமடித்து அவுட்டானார்.

    • இரு அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி இன்று நடக்கிறது.
    • டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    ஹராரே:

    சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    ஹராரேவில் நேற்று நடந்த முதல் போட்டியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்தது. ஜிம்பாப்வே நிர்ணயித்த 116 ரன் இலக்கை எடுக்க முடியாமல் 19.5 ஓவரில் 102 ரன்னுக்கு இந்தியா ஆல்-அவுட் ஆனது.

    இந்நிலையில், இரு அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி இதே மைதானத்தில் இன்று நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ஜிம்பாப்வேவுக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்து, விளையாடுகிறது.

    ×