search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஸ்வினி வைஷ்ணவ்"

    • 26,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • மூலதனச் செலவினங்களுக்காக மாநிலங்களுக்கு சிறப்பு நிதி உதவி.

    டிஜிட்டல் இந்தியா தொடர்பான மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களின் மூன்று நாள் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் தொழில்நுட்பத்துறை மந்திரிகள் கலந்து கொண்டனர்.

    டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முன்னுரிமை அடிப்படையிலான முக்கிய அம்சங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இதில் பேசிய மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் டிஜிட்டல் இந்தியா திட்டம் சென்றடைய தகவல் தொடர்புத்துறை முக்கிய பங்கு வகிப்பதாக கூறினார். நாடு முழுவதும் புதிதாக 25,000 தொலைத் தொடர்பு கோபுரங்களை நிறுவ 26,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறினார். அடுத்த 500 நாட்களில் இந்த கோபுரங்கள் அமைக்கப்படும் என்றார்.

    மாநிலங்களின் மூலதனச் செலவினங்களுக்காக சிறப்பு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், தொலைத் தொடர்புத்துறையில் வர்த்தகர்களை ஈர்க்கும் வகையில் உகந்த கொள்கைகளை மாநிலங்கள் வகுத்து செயல்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். பிரதமரின் கதி சக்தி திட்டத்தில் இணைந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

    • அவுரங்காபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்றார்.
    • அப்போது பேசிய அவர் எதிர்காலத்தில் இந்தியாவில் 400 வந்தே பாரத் ரெயில்கள் இருக்கும் என்றார்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டி பராமரிப்பு தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    47 ரெயில் நிலையங்களுக்கான டெண்டர் விடும் பணிகள் முடிவடைந்த நிலையில், 32 ரெயில் நிலையங்களில் பணிகள் தொடங்கியுள்ளன.

    200 ரெயில் நிலையங்களை சீரமைக்க அரசு பெரிய திட்டம் வகுத்துள்ளது. குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு வசதிகள், காத்திருப்பு ஓய்வறைகள், உணவு விடுதிகள் உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் அந்த ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

    எதிர்காலத்தில் இந்தியாவில் 400 வந்தே பாரத் ரெயில்கள் இருக்கும். அவற்றில் 100 ரெயில்கள் மராத்வாடாவின் லத்தூரில் உள்ள பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும்.

    பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்துப் பகுதிகளும் நெடுஞ்சாலைகள் அல்லது ரெயில்வே மூலம் இணைக்கப்பட்டு வருகின்றன. மராத்வாடாவின் சில பகுதிகளும் இணைக்கப்படும் என தெரிவித்தார்.

    • தொலைத் தொடர்பு சேவையின் தரத்தை மேம்படுத்த வேண்டும்.
    • எதிர்காலத்துக்கு ஏற்ற தொலைத் தொடர்பு சட்டம் அவசியம்.

    டெல்லியில் நடைபெற்ற தொலைத் தொடர்பு கள அலுவலர்கள், அதிகாரிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளின் மாநாட்டில் உரையாற்றிய மத்திய தகவல் தொடர்புத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளதாவது:

    டிஜிட்டல் பொருளாதாரத்தின் உலகளாவிய டிஜிட்டல் உள்ளடக்கத்தில் தரமான தொலைத்தொடர்பு இணைப்பு அவசியம். தொழில்துறை மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து, தொலைத் தொடர்புத்துறை அலுவலர்கள் பணியாற்றினால் மட்டுமே தொழில்நுட்பத்தின் மாறும் தன்மைக்கு ஏற்றவாறு தொலைத்தொடர்புத் துறையை முன்னெடுத்துச் செல்ல முடியும்

    நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் தொலைத்தொடர்பு இணைப்பை உறுதி செய்தல், சேவையின் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை இலக்காக கொண்டு அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் பழங்கால தொலைத் தொடர்பு சட்டங்களுக்கு பதிலாக வலுவான மற்றும் எதிர்காலத்துக்கு ஏற்ற சட்டம் அவசியம். இது தொடர்பான வரைவு அறிக்கை, பொது மக்களின் கருத்துக்களுக்காக விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ரெயில்வேக்கு ரூ.100 செலவாகிறது என்றால், வெறும் ரூ.45 மட்டுமே பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது.
    • அக்டோபர் முதல் பி.எஸ்.என்.எல்.லில் 5ஜி சேவை தொடங்க உள்ளது.

    பிஜ்னோர்

    ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் 2 நாள் பயணமாக உத்தரபிரதேசம் சென்றுள்ளார். பிஜ்னோரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ரெயில் பயணிகளுக்கு 55 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுவதாக கூறினார்.

    இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'ரெயில்வேக்கு ரூ.100 செலவாகிறது என்றால், வெறும் ரூ.45 மட்டுமே பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் பல்வேறு பிரிவினருக்கு வழங்கப்பட்ட கட்டண சலுகைக்காக மத்திய அரசு ரூ.62 ஆயிரம் கோடி செலவிட்டது' என்று தெரிவித்தார்.

    புதிய ரெயில் திட்டங்கள் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், மின்சார ரெயில்கள் கட்டப்பட்டு வருவதாகவும், அவை என்ஜின் இல்லாமல 2-வது அல்லது 3-வது பெட்டியில் இருந்து இயக்கப்படும் வகையில் உருவாக்கப்படுவதாகவும் கூறினார்.

    தொலைத்தொடர்பு துறையையும் வகித்து வரும் அஸ்வினி வைஷ்ணவ், அக்டோபர் முதல் பி.எஸ்.என்.எல்.லில் 5ஜி சேவை தொடங்கப்படுவதாகவும், அடுத்த 500 நாட்களில் 5 பெரிய நகரங்களில் இந்த சேவை தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    • பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு மேற்கொண்டார்.
    • 2023 ஆகஸ்டுக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    சென்னை:

    பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் முதன்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் 97 கோடி ரூபாயில் அதிநவீன விரைவு ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த அதிவேக ரெயிலுக்கு, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

    தற்போது புதுடெல்லி - வாரணாசி, புதுடெல்லி - வைஷ்ணோ தேவி இடையே வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த ரெயிலில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு சென்னை ஐ.சி.எப்.,பில் நடந்து வந்த தயாரிப்பு பணிகள் முடிந்து சோதனை ஓட்டத்திற்கு தயாராக உள்ளது.

    இந்நிலையில், வந்தே பாரத் ரெயிலில் இறுதிக்கட்ட ஆய்வு மேற்கொள்ள மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஐ.சி.எப்., வந்தார். அங்குள்ள பணியாளர்களிடம் தமிழில் நலம் விசாரித்த அவர், சோதனை ஓட்டத்திற்கு தயாராகவுள்ள புதிய வந்தே பாரத் ரெயிலில் ஏறி பார்வையிட்டார்.

    அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் தருணத்தில் வரும் 2023 ஆகஸ்டுக்குள், 75 வந்தே பாரத் ரெயில்களை நாடு முழுதும் இயக்க ரெயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்தார்.

    • 5,882 ரெயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
    • சில ரெயில்களில் பயணிகளுக்கு உதவ அடிப்படை மருத்துவ வசதிகள் வழங்கப்படுகின்றன.

    பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளதாவது:

    ரெயில்வே பாதுகாப்புப் படை, பயணிகளின் பாதுகாப்பில் தனிக் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை ரெயில்வே மேற்கொண்டு வருகிறது.

    அதன்படி ரெயில்களில், ரயில்வே பாதுகாப்புப் படை காவல் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரெயில் பயணிகளுக்கான பாதுகாப்புத் தொடர்பான உதவி எண் 139, 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட ரெயில் பெட்டிகளில், ஆண் பயணிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சமூக ஊடகங்கள் மூலம் ரெயில்வே, பயணிகளுடன் தொடர்பில் உள்ளது. 5,882 ரெயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பயணிகளுக்கு உதவும் வகையில் சில ரெயில்களில் அடிப்படை மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ரெயில் நிலையங்களை மின் தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் ஆகியவற்றுடன் நவீனப்படுத்துவதும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஆன்லைன் மூலம்,பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் போதே உணவுக்கான ஆர்டரையும் வழங்குதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயணிகளுக்கு தரமான சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில், ரெயில் நிலையங்களில் குடிநீர் வழங்கும் தானியங்கி எந்திரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×