search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக கூட்டணி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் வந்தனர்.
    • 9-ந்தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் தமிழக நிர்வாகிகள் மட்டும் பங்கேற்கின்றனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது? எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

    தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக டெல்லியில் இருந்து வந்திருந்த காங்கிரஸ் தலைவர்கள் முகுல்வாஸ்னிக், சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார், கே.எஸ்.அழகிரி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.


    இந்நிலையில், நேற்று முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், வருகிற 9-ந்தேதி காங்கிரசுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று காங்கிரஸ் கட்சியின் டெல்லி மற்றும் தமிழக குழுவினர் பங்கேற்ற நிலையில், 9-ந்தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் தமிழக நிர்வாகிகள் மட்டும் பங்கேற்கின்றனர்.

    • காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.
    • கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம் என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. முதலில் இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி நாளை தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச உள்ளது.

    இந்நிலையில், தி.மு.க.- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே வருகிற 3-ந்தேதி தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுப்பராயன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ பழனிசாமி, மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர்.

    கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம் என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

    • பேச்சுவார்த்தையில் எத்தனை தொகுதிகள் என்பதை விவாதித்து இறுதிவடிவம் கொடுக்க திட்டம்.
    • காங்கிரஸ் கைவசம் உள்ள சில தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட விரும்புவதாகவும், ஒரு சில தொகுதிகளை கூட்டணிகட்சிகளுக்கு வழங்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது? எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான பேச்சுவார்த்தை நிறைவடைந்தன.

    தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் முகுல்வாஸ்னிக், சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார் ஆகியோர் இன்று சென்னை விமான நிலையம் வந்தனர். அவர்கள் நேராக சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றனர். அங்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற குழு தலைவர் செல்வ பெருந்தகை எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், செல்லக்குமார், முன்னாள் தலைவர்கன் தங்கபாலு, இளங்கோவன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

    பின்னர் அண்ணா அறிவாளயம் புறப்பட்டு சென்றார்கள். அங்கு டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க. தொகுதி பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேக்சுவார்த்தையில் எத்தனை தொகுதிகள் என்பதையும் எந்தெந்த தொகுதிகள் என்பதையும் விவாதித்தனர்.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் கைவசம் உள்ள சில தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட விரும்புவதாகவும், ஒரு சில தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு வழங்கதிட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    • இன்று நடைபெறும் பேக்சுவார்த்தையில் எத்தனை தொகுதிகள் என்பதையும் எந்தெந்த தொகுதிகள் என்பதையும் விவாதித்து இறுதிவடிவம் கொடுக்க திட்டமிட்டுள்ளார்கள்.
    • காங்கிரஸ் கைவசம் உள்ள சில தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட விரும்புவதாகவும், ஒரு சில தொகுதிகளை கூட்டணிகட்சிகளுக்கு வழங்கதிட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது? எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியது.

    தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் முகுல்வாஸ்னிக், சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார் ஆகியோர் இன்று சென்னை விமான நிலையம் வந்தனர். அவர்கள் நேராக சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றனர். அங்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற குழு தலைவர் செல்வ பெருந்தகை எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், செல்லக்குமார், முன்னாள் தலைவர்கன் தங்கபாலு, இளங்கோவன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

    பின்னர் அண்ணா அறிவாளயம் புறப்பட்டு சென்றார்கள். அங்கு டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க. தொகுதி பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இன்று நடைபெறும் பேக்சுவார்த்தையில் எத்தனை தொகுதிகள் என்பதையும் எந்தெந்த தொகுதிகள் என்பதையும் விவாதித்து இறுதிவடிவம் கொடுக்க திட்டமிட்டுள்ளார்கள்.


    கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு கன்னியாகுமரி, விருதுநகர், திருச்சி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, ஆரணி, திருவள்ளூர், தேனி, கரூர் ஆகிய தமிழகத்தில் 9 தொகுதிகளும் புதுவையில் ஒரு தொகுதியையும் ஒதுக்கி இருந்தனர். அந்த தேர்தலில் தேனி தொகுதியை தவிர மற்ற 8 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தேனி தொகுதியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை எதிர்த்து போட்டியிட்ட ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்று இருந்தார்.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் கைவசம் உள்ள சில தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட விரும்புவதாகவும், ஒரு சில தொகுதிகளை கூட்டணிகட்சிகளுக்கு வழங்கதிட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    எனவே மாற்று தொகுதியாக எந்தெந்த தொகுதிகளை கேட்பது என்று காங்கிரஸ் தலைவர்கள் விவாதித்து எடுத்த முடிவின் அடிப்படையில் தி.மு.க.விடம் கேட்க திட்டமிட்டுள்ளார்கள்.

    • சமீபத்தில் திருச்சியில் நடத்தப்பட்ட விடுதலை சிறுத்தைகள் மாநாட்டின் மூலம் தன் பலத்தை திருமாவளவன் நிரூபித்து காட்டி உள்ளார்.
    • தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்டு கட்சி நாகப்பட்டினத்தை விட்டுக்கொடுக்க தயங்குகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.

    முதலில் இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி வருகிற 30-ந்தேதி தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச உள்ளது.

    கடந்த தேர்தலில் விழுப்புரம், சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இரண்டு தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் வெற்றி பெற்றது.

    இந்த தேர்தலில் 3 தொகுதிகள் கேட்க திருமாவளவன் திட்டமிட்டுள்ளார்.

    சமீபத்தில் திருச்சியில் நடத்தப்பட்ட விடுதலை சிறுத்தைகள் மாநாட்டின் மூலம் தன் பலத்தை திருமாவளவன் நிரூபித்து காட்டி உள்ளார். இந்த மாநாட்டில் திரண்டிருந்த கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரிலேயே பார்த்தார்.

    இதை மையமாக வைத்து கூடுதல் தொகுதி கேட்கும் முடிவில் திருமாவளவன் உறுதியாக இருக்கிறார்.

    நாகப்பட்டினம் அல்லது காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றை கேட்க முடிவு செய்துள்ளார். நாகப்பட்டினம் தற்போது கம்யூனிஸ்டு கையில் உள்ளது. காஞ்சிபுரம் தி.மு.க. கையில் இருக்கிறது.

    நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதிக்குள் ஒரு சட்டமன்ற தொகுதியும், காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதிக்குள் 2 சட்டமன்ற தொகுதிகளும் விடுதலை சிறுத்தைகள் கைவசம் உள்ளது.

    தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்டு கட்சி நாகப்பட்டினத்தை விட்டுக்கொடுக்க தயங்குகிறது. அதேபோல் காஞ்சிபுரம் தொகுதிக்கு காங்கிரஸ் குறிவைத்துள்ளது. இந்த போட்டிக்குள் திருமாவளவனும் இறங்கி இருப்பதால் காங்கிரசும், கம்யூனிஸ்டும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

    • டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் முகுல்வாஸ்னிக், சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார் ஆகியோர் இன்று சென்னை வந்தனர்.
    • 9 தொகுதிகளை தி.மு.க தர மறுத்தால் மேலும் 12 தொகுதிகளின் பட்டியலை வழங்கவும் காங்கிரஸ் தயாராக உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது? எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று பிற்பகலில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.

    தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் முகுல்வாஸ்னிக், சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார் ஆகியோர் இன்று சென்னை விமான நிலையம் வந்தனர். அவர்கள் நேராக சத்திய மூர்த்தி பவனுக்கு சென்றனர். அங்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற குழு தலைவர் செல்வ பெருந்தகை எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், செல்லக்குமார், முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் 21 தொகுதிகள் அடங்கிய பட்டியலை தி.மு.க. தலைமையிடம் வழங்கி அதில் 14 தொகுதிகளை கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட தொகுதிகளை கேட்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த 9 தொகுதிகளை தி.மு.க தர மறுத்தால் மேலும் 12 தொகுதிகளின் பட்டியலை வழங்கவும் காங்கிரஸ் தயாராக உள்ளது.

    நெல்லை, ராமநாதபுரம், தென்காசி, திண்டுக்கல், திருவண்ணாமலை, தஞ்சை, மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், அரக்கோணம், தென்சென்னை ஆகிய தொகுதிகளை கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

    கடந்த தேர்தலில் வென்ற 9 தொகுதிகளுடன் கூடுதலாக விருப்ப 5 தொகுதிகளை சேர்த்து மொத்தமாக 14 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க திமுகவிடம் காங்கிரஸ் கோரிக்கை வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    • தி.மு.க. வழங்கும் தொகுதி எண்ணிக்கையில் உடன்பாடு ஏற்பட்டால் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை வழங்கவும் திட்டமிட்டுள்ளார்கள்.
    • காங்கிரஸ்-தி.மு.க. பேச்சுவார்த்தையை தொடர்ந்து கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

    சென்னை:

    தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்குகிறது.

    இதற்காக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார் ஆகிய மூவரும் நாளை டெல்லியில் இருந்து சென்னை வருகிறார்கள்.

    விமான நிலையத்தில் இருந்து நேராக சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற குழு தலைவர் கு.செல்வபெருந்தகை, காரிய கமிட்டி உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், செல்லக்குமார், முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன், கிருஷ்ணசாமி ஆகியோருடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.

    பின்னர் மாலை 3 மணியளவில் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச செல்கிறார்கள். டெல்லி தலைவர்கள், கே. எஸ்.அழகிரி, செல்வபெருந்தகை ஆகியோர் செல்கிறார்கள்.

    கடந்த முறை தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அதே போல் இந்த ஆண்டும் குறைந்த பட்சம் 9 தொகுதிகள் தர வேண்டும் என்று வலியுறுத்த திட்டமிட்டுள்ளார்கள். ஆளும் தி.மு.க. தரப்பில் 7 தொகுதிகள் வரை ஒதுக்க சம்மதித்து இருப்பதாக கூறப்படுகிறது.

    கூட்டணியில் அதிக கட்சிகள் இருப்பதால் பங்கீட்டில் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கூட்டணி கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

    எனவே நெருக்கடியான சூழ்நிலையில் டெல்லி தலைவர்கள் நேரில் அமர்ந்து பேச முடிவு செய்கிறார்கள். எனவே நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.


    இந்த கூட்டத்தில் தொகுதிகள் எண்ணிக்கையை உறுதி செய்து விடுவார்கள். அதன் பிறகு டெல்லியில் உள்ள தலைவர்கள் உறுதி செய்த பிறகு எந்தெந்த தொகுதிகளை பெறுவது என்பது பற்றி பேசப்படும் என்று கூறப்படுகிறது.

    தி.மு.க. வழங்கும் தொகுதி எண்ணிக்கையில் உடன்பாடு ஏற்பட்டால் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை வழங்கவும் திட்டமிட்டுள்ளார்கள்.

    காங்கிரஸ்-தி.மு.க. பேச்சுவார்த்தையை தொடர்ந்து கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

    • தேர்தல் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.

    சென்னை:

    2024 மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் குழு, தொகுதி பங்கீடு, கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை என தேர்தல் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.- காங்கிரஸ் இடையே வருகிற 28-ந்தேதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர், காங்கிரஸ் கமிட்டி குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.

    • இரண்டு புது முகங்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் கேட்டுள்ளார்கள்.
    • ஏற்கனவே இருக்கும் 8 எம்.பி.க்கள், புதிதாக 2 பேர் என்ற வகையில் கூடுதலாக ஒரு தொகுதியை கேட்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. மேலிடத்துடன் பேசி வருகின்றன.

    இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிரதான கட்சியான காங்கிரஸ் கடந்த தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் தேனியை தவிர மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது.

    இந்த தேர்தலிலும் கடந்த முறையை போல் 9 தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்குவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

    அதேநேரம் இரண்டு புது முகங்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் கேட்டுள்ளார்கள்.

    சிறுபான்மையினர் ஆணைய தலைவராக இருக்கும் பீட்டர் அல்போன்ஸ் பதவிக்காலம் இந்த ஆண்டு முடிகிறது. எனவே அவரும் சீட் கேட்டு பெறுவதில் தீவிரமாக உள்ளார். காங்கிரசை பொறுத்தவரை மூத்த தலைவர் மட்டுமல்லாமல் மிகச்சிறந்த பேச்சாளர் ஆவார். எனவே அவரை போன்றவர்கள் பாராளுமன்றத்துக்குள் செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் விரும்புகிறது.

    மேலும் மூத்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தனது மகன் கார்த்திக்குக்கும் சீட் கேட்டுள்ளார். சேலத்தில் ஒரு தொகுதி வேண்டும் என்று அவர் தீவிரமாக முயற்சித்து வருகிறார்.

    ஏற்கனவே இருக்கும் 8 எம்.பி.க்கள், புதிதாக 2 பேர் என்ற வகையில் கூடுதலாக ஒரு தொகுதியை கேட்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.

    இது பற்றி காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கேட்ட போது:-

    தேனி தொகுதி கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தொகுதியில் மட்டும் காங்கிரஸ் தோற்றது. எனவே அந்த தொகுதி கிடைப்பதில் பிரச்சினை இருக்காது. தங்கபாலு மகனுக்காக கூடுதலாக ஒரு சீட்டை கேட்கிறார்கள். அது எந்த சீட் என்பது தான் தெரியவில்லை என்றார்.

    • தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க. கூட்டணி கடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றது.
    • கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற 9 தொகுதிகளையும் இந்த தேர்தலிலும் தி.மு.க.விடம் கேட்டுப்பெற வேண்டும் என்று வற்புறுத்த திட்டமிட்டு உள்ளார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி டெல்லி காங்கிரஸ் தலைமை அனைத்து மாநில காங்கிரஸ் நிர்வாகிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறது.

    தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை நாளை (4-ந்தேதி) டெல்லிக்கு அழைத்து இருந்தனர். அதன்படி காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று டெல்லி செல்கிறார்கள்.

    நாளை மாலை 4 மணிக்கு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வ பெருந்தகை, 8 எம்.பி.க்கள், முன்னாள் மாநில தலைவர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    கூட்டத்தில் அமைப்பு ரீதியாக கட்சியை வலுப்படுத்துதல், கூட்டணி விவகாரம், தேர்தலை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்படுகிறது.

    தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க. கூட்டணி கடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. அதே போல் இந்த தேர்தலில் வெற்றி பெறவும், வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக உழைக்க டெல்லி மேலிடம் அறிவுரைகள் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற 9 தொகுதிகளையும் இந்த தேர்தலிலும் தி.மு.க.விடம் கேட்டுப்பெற வேண்டும் என்று வற்புறுத்த திட்டமிட்டு உள்ளார்கள். இதற்கிடையில் ஒன்றிரண்டு முறை எம்.பி.யாக இருப்பவர்களுக்கு பதில் புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ராகுல் விரும்புவதாக கூறப்படுகிறது.

    எனவே நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அதுபற்றியும் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. எல்லா தொகுதிகளிலும் தகுதியான வேட்பாளர்களின் பட்டியலை தயாரிக்கும்படி கேட்டுக்கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஸ்டெர்லைட் போராட்டம், மசோதா குறித்த ஆளுநரின் பேச்சுக்கு கண்டனம்.
    • 12ம் தேதி மாலை 4 மணிக்கு ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதச்சார்பாற்ற முற்போக்குக் கூட்டணி அறிவிப்பு.

    சென்னை:

    ஸ்டெர்லைட் போராட்டம், மசோதா குறித்த ஆளுநரின் பேச்சை கண்டித்து வரும் 12ம் தேதி மாலை 4 மணிக்கு ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதச்சார்பாற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் சர்ச்சைக்குரியதாக உள்ளது. சட்டமன்ற மாண்பை குலைக்கும் நடவடிக்கைகளை ஆளுநர் நிறுத்தும் வரை போராட்டம் ஓயாது என்றும் மதச்சார்பாற்ற முற்போக்குக் கூட்டணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்றால் வி.சி.க. வெளியேறும் என அழுத்தம் திருத்தமாக முன்பு போல திருமாவளவன் கூறவில்லை.
    • 2001-ல் தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இருந்தது. அந்த கூட்டணியில் வி.சி.க.வும் இருந்தது.

    அ.தி.மு.க., பா.ஜ.க. பக்கம் போகும். நாங்கள் பா.ஜ.க. இருப்பதால் அ.தி.மு.க. பக்கம் போகவே வாய்ப்பில்லை என அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார் திருமாவளவன்.

    அதேநேரத்தில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்றால் வி.சி.க. வெளியேறும் என அழுத்தம் திருத்தமாக முன்பு போல திருமாவளவன் கூறவில்லை.

    இது தொடர்பாக மூத்த அரசியல் பார்வையாளர்களிடம் பேசிய போது, "2001-ல் தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இருந்தது. அந்த கூட்டணியில் வி.சி.க.வும் இருந்தது. அதற்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சொன்ன ஒரு பதில் இப்போதும் அற்புதமாக பொருந்தும். அதாவது வி.சி.க., தி.மு.க.வுடன் மட்டும்தான் கூட்டணி வைத்துள்ளது. தி.மு.க.தான் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது" என்றார். அதே டயலாக் 2024 லோக்சபா தேர்தலின் போது, "வி.சி.க., தி.மு.க.வுடன் மட்டும்தான் கூட்டணி வைத்துள்ளது. தி.மு.க.தான் பா.ம.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது" என உருமாறி எதிரொலித்தாலும் ஆச்சரியமில்லை.

    ×