search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவாதம்"

    • இந்துக்களின் உணர்வுகளை ராகுல் புண்படுத்துகிறார்.
    • அம்பானி, அதானி பேசிய பகுதிகளும் நீக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் கடந்த 24-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த 28-ந்தேதி தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது.

    ஆனால் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அந்த விவாதத்தை தொடங்க முடியவில்லை. இந்தநிலையில் பாராளுமன்ற மக்களவையில் நேற்று இந்த விவாதம் தொடங்கியது.

    மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் விவாதத்தில் பங்கேற்று சுமார் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் பேசினார். அப்போது அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மீதும், பா.ஜ.க. தலைவர்கள் மீதும் ஆவேசமாக சுமத்தினார்.

    அவரது ஆவேச பேச்சுக்கு பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் ஆகியோர் உடனுக்குடன் பதிலடி கொடுத்தனர். இதன் காரணமாக பாராளுமன்றத்தில் நேற்று விவாதத்தில் அனல் பறந்தது.

    ராகுல்காந்தி பேசும் போது, "இந்துக்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் எந்த நேரமும் பயம், வன்முறை, வெறுப்புணர்வு, பொய்கள் பற்றியே பேசுகிறார்கள். அவர்கள் இந்துக்கள் என்று சொல்ல முடியாது" என்றார். அவர் அப்படி பேசும்போது பா.ஜ.க. எம்.பி.க்களை பார்த்து கைநீட்டி குறிப்பிட்டு பேசினார்.

    இதற்கு பிரதமர் மோடி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பதில் அளித்து பேசுகையில், "ஒட்டு மொத்த இந்து சமுதாயத்தை வன்முறையாளர்கள் என்று சொல்வது தீவிரமான விஷயம் ஆகும்" என்றார்.

    அதேபோல மத்திய மந்திரி அமித்ஷாவும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பேசுகையில், "கோடிக் கணக்கான இந்துக்களின் உணர்வுகளை ராகுல் புண்படுத்துகிறார். அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கூறினார்.

    ராகுல் தனது பேச்சின் போது அக்னிவீர் திட்டம் பற்றியும் கடுமையாக குறைகூறி பேசினார். மேலும் தொழில் அதிபர்கள் அம்பானி, அதானி பற்றியும் குறிப்பிட்டார். இந்த பேச்சுக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் ராகுல்காந்தியின் பேச்சு பற்றி சபாநாயகர் ஓம்பிர்லா ஆய்வு நடத்தினார். ராகுல் காந்தியின் பேச்சு சபை விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா? என்று ஆய்வு செய்யப்பட்டது.

    இதையடுத்து ராகுல் காந்தி நேற்று விவாதத்தின் போது பேசிய பேச்சில் ஒரு பகுதியை நீக்குவதற்கு சபாநாயகர் ஓம்பிர்லா முடிவு செய்தார். அதன்படி ராகுல் காந்தி பேச்சின் ஒரு பகுதி நீக்கப்பட்டது. இன்று காலை அதுபற்றிய தகவல்கள் வெளியானது.

    இந்துக்களை தொடர்புபடுத்தி ராகுல்காந்தி பேசியது சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பிரதமர் குறித்தும், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். குறித்தும் அவர் முன்வைத்த விமர்சனங்கள் நீக்கப்பட்டன. அதுபோல அக்னிவீர் திட்டம் பற்றி அவர் குறைகூறி இருக்கும் பகுதியும் நீக்கப்பட்டது.

    • கேப்டன் ரோகித் சர்மா குறித்து தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் பேசியுள்ளனர்
    • தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் கசிகோ ரபாடா, டேவிட் மில்லர், ஹெயின்ரிச் க்ளாஸன், கேசவ் மகராஜ் ஆகியோர் தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர்.

    டி 20 உலகக் கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்காமல் இந்த இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன. பலம் வாய்ந்த இந்த இரு அணிகளுக்கும் இடையில் அணல் பறக்கும் வகையில் நடக்க உள்ள இன்றைய இறுதிப்போட்டியை ரசிகர்களும் கிரிக்கெட் வீரார்களும் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

    அணியில் உள்ள ஒவ்வொருவரின் பலம் மற்றும் பலவீனம் குறித்த விவாதமே இப்போது திரும்பிய இடத்திலெல்லாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹிட்மேன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா குறித்து தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் கசிகோ ரபாடா, டேவிட் மில்லர், ஹெயின்ரிச் க்ளாஸன், கேசவ் மகராஜ் ஆகியோர் தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர்.

    ரோகித் சர்மா பயம் என்பதையே அறியாத சிறந்த ஆட்டக்காரர் என்றும் தான் அவரின் பெரிய ரசிகன் என்றும் கேசவ் மஹராஜ் கூறியுள்ளார். க்ளாஸன் ரோகித் பற்றி கூறுகையில், அவர் கிரிக்கெட்டில் நம்பமுடியாத வகையில் சிறந்த மூளைக்காராக உள்ளார். அவருடன் விளையாட்டின் நுணுக்கங்கள் பற்றி பேச நான் ஆர்வமாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

    டேவிட் மில்லர் பேசுகையில், ரோகித் டி- 20 யில் சிறந்த பினிஷராக உள்ளார். களத்தில் பதற்றம் அடையாத அவரின் நிதானத்தைப் பார்த்து வியக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், ரபாடா ரோகித்தை தலைசிறந்த பேட்டர் என்றும் உலகின் தலைசிறந்த பவுலர் என்றும் புகழ்ந்துள்ளார்.  

    • திடீரென அசைவுகள் ஏதுமின்றி பைடன் ஸ்தம்பித்து விடுவதும் வழக்கமாக உள்ளது.
    • ஜோ பைடனின் இந்த தடுமாற்றம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அமெரிக்காவில் வரும் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்கு நேர் விவாதிப்பது வழக்கம்.

    அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மொத்தம் 90 நிமிடம் விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஜார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் நடைபெற்ற நிகழ்வில் ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் நேருக்கு நேர் சந்தித்து விவாதித்தனர்.

    பொருளாதார பிரச்சனையை மையமாக வைத்து விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் வாக்காளர்களிடம் ஆதரவு கேட்டனர். தங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? என்பது குறித்தும் விளக்கம் அளித்தனர்.

    81 வயதாகும் ஜோ பபைடன் வயது மூப்பின் காரணமாக சமீப காலங்களாக பொது நிகழ்ச்சிகளில் அவரது பேச்சிலும் நடையிலும் தடுமாற்றம் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவின.

    மேலும் நிகழ்ச்சிகளில் திடீரென அசைவுகள் ஏதுமின்றி பைடன் ஸ்தம்பித்து விடுவதும் வழக்கமாக உள்ளது. அந்த வகையில், இன்று டிரம்புடன் நடந்த விவாதத்தின்போது, கோவிட் பெருந்தொற்று குறித்து பேசுகையில், ஜோ பைடன் சற்று நேரம் அசைவின்றி ஸ்தம்பித்தார்.

    அவர் என்ன செய்கிறார் என்று டிரம்ப் உற்று நோக்கினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இந்த மொத்த விவாதத்த்திலும் ஜோ பைடன் பேச்சில் பலமுறை தடுமாற்றம் ஏற்பட்டது. அவரது குரல் தழுதழுத்திருநத்து. சில சமயம் அவர் என்ன பேசுகிறார் என்றே புரியாத சூழல் நிலவியது.

    ஜோ பைடனின் இந்த தடுமாற்றம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பைடனுக்கு பதில் அதிபர் வேட்பாளராக ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன.

    இந்நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக மிச்செல் ஒபாமா போட்டியிடுவார் என்று குடியரசு கட்சியின் வழங்கறிஞர் டெட் க்ரூஸ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • டிரம்புக்கு பதிலளித்த ஜோ பைடன், My son is not a sucker.. you are a sucker, you are a loser என்று குறிப்பிட்டார்
    • ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்ட அவர்களில் கோல்ப் விளையாட்டில் யார் சிறந்தவர் என்றும் விவாதித்துக்கொண்டனர்.

    அமெரிக்காவில் வரும் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்கு நேர் விவாதிப்பது வழக்கம்.

    அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மொத்தம் 90 நிமிடம் விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஜார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் நடைபெற்ற நிகழ்வில் ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் நேருக்கு நேர் சந்தித்து விவாதித்தனர்.

     பொருளாதார பிரச்சனையை மையமாக வைத்து விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் வாக்காளர்களிடம் ஆதரவு கேட்டனர். தங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? என்பது குறித்தும் விளக்கம் அளித்தனர்.

    இந்த விவாதத்தில் பொருளாதாரம், வேலையின்மை, சட்டவிரோத குடியேற்றம், வெளியுறவுக் கொள்கை, கருக்கலைப்பு உரிமைகள், இஸ்ரேல் பாலஸ்தீன போர், கொரோனா தொற்றைக் கையாண்ட விதம் உள்ளிட்ட பலவற்றைக் குறித்தும் அவர்கள் விவாதகித்தனர். பைடன் சீனாவிடம் பணம் பெற்றுக்கொண்டு அமேரிக்காவில் பற்றாக்குறையை உண்டாக்குகிறார் என்று கூறும் அளவுக்கு டிரம்ப் சென்றார். மேலும் ஜோ பைடனின் மகன் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் சிக்கியுள்ளதை குறிப்பிட்ட டிரம்புக்கு, My son is not a sucker.. you are sucker, you are a loser என்று டிரம்ப் பாலியல் வழக்கில் சிக்கியுள்ளதை குறிப்பிட்டு ஜோ பைடன் பதிலளித்தார்.

    ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்ட அவர்களில் கோல்ப் விளையாட்டில் யார் சிறந்தவர் என்றும் விவாதித்துக்கொண்டனர். 81 வயதாகும் ஜோ பபைடன் வயது மூப்பின் காரணமாக சமீப காலங்களாக பொது நிகழ்ச்சிகளில் அவரது பேச்சிலும் நடையிலும் தடுமாற்றம் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவின.

    மேலும் நிகழ்ச்சிகளில் திடீரென அசைவுகள் ஏதுமின்றி பைடன் ஸ்தம்பித்து விடுவதும் வழக்கமாக உள்ளது. அந்த வகையில், இன்று டிரம்புடன் நடந்த விவாதத்தின்போது, கோவிட் பெருந்தொற்று குறித்து பேசுகையில், ஜோ பைடன் சற்று நேரம் அசைவின்றி ஸ்தம்பித்தார்.

     

    அவர் என்ன செய்கிறார் என்று டிரம்ப் உற்று நோக்கினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இந்த மொத்த விவாதத்த்திலும் ஜோ பைடன் பேச்சில் பலமுறை தடுமாற்றம் ஏற்பட்டது. அவரது குரல் தழுதழுத்திருநத்து. சில சமயம் அவர் என்ன பேசுகிறார் என்றே புரியாத சூழல் நிலவியது.   

    • கேலோ இந்தியா போட்டிக்கு ம.பிக்கு மத்திய அரசு ரூ. 25 கோடி கொடுத்து, தமிழகத்திற்கு கொடுத்தது ரூ. 10 கோடி.
    • ராயபுரம், கொடுங்கையூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.

    தமிழக சட்டப்பேரவையில் விளையாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

    • விளையாட்டு வீரர்களுக்கு கலைஞர் ஸ்போர்ட்ஸ்கிட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • திமுக ஆட்சிக்கு வந்த பின் விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 102 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

    • ஓட்டப்பந்தயம் என்றால் உசேன் போல்ட், கிரிக்கெட் என்றால் தோனி அதேபோல் அரசியல் களத்தில் முதல்வர் ஸ்டாலின்.

    • கடந்த ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் 12 பேர் பங்கேற்றிருந்தனர். இந்த முறை பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க 16 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.

    • பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ. 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    • கேலோ இந்தியா போட்டிக்கு ம.பிக்கு மத்திய அரசு ரூ. 25 கோடி கொடுத்து, தமிழகத்திற்கு கொடுத்தது ரூ. 10 கோடி.

    • முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் கூடுதல் விளையாட்டுகள் இந்தாண்டு சேர்க்கப்படும்.

    • அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.

    • கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான பணிகள் விரைவுப்படுத்தப்படும்.

    • உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 210 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

    • ராயபுரம், கொடுங்கையூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.

    இவ்வாறு கூறியுள்ளார்.

    • அதிகாரிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு
    • நகராட்சி தலைவர் உஷாவெங்கடேஷ் தலையிட்டு சமரசம்


    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை நகராட்சியில் நகர் மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் உஷாவெங்கடேஷ் தலைமை வகித்தார். ஆணையாளர் மனோகரன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் காரமடை நகராட்சியில் தனியார் ஒப்பந்ததாரர் நிறுவனம் சரியான முறையில் குப்பைகளை அகற்றாததால் அந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு:

    விக்னேஷ் (பா.ஜ.க) : காரமடை நகராட்சியில் குப்பை எடுப்பதில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. இதற்கு நகராட்சி அதிகாரிகள் மற்றும் தலைவர் தான் பதில் கூற வேண்டும்.

    வனிதா (அ.தி.மு.க.): தூய்மை பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை எனக்கூறி தற்போது தூய்மை பணிகளை மேற் கொண்டு வரும் ஒப்பந்த தாரரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது பணி புரிந்து வரும் தூய்மை பணியாளர்கள் பலருக்கும் சம்பளம் போடவில்லை. பி.எப், இ.எஸ்.ஐ பிடிக்கப்படவில்லை. அவர்களுக்கு இதெல்லாம் கிடைக்குமா. தூய்மை பணிகளை எவ்வாறு மேற்கொள்ளப் போகிறோம்.

    நித்யா (தி.மு.க.): என் வார்டில் எந்த பணிகளும் நடப்பது இல்லை. எனது வார்டில் கோவில் கும்பாபிஷகம் தொடர்பாக புற்கள் வெட்ட ஆட்கள் வேண்டும் என கேட்டேன். ஆணையாளரிடம் தொலை பேசி வாயிலாக பேசும் போது அவர் தரக்குறைவாக பேசினார்.

    கோபமாக போன் இணைப்பை துண்டித்தார். இதுதான் நாகரீகமா? எப்படி பேசணும்னு தெரியாதா உங்களுக்கு. மேலும் என் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் மிரட்டுகிறார். நடவடிக்கை எடுங்கள் பார்த்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதற்கு பதில் அளித்து ஆணையாளர் கூறும்போது, நான் அவரிடம் அநாகரிகமாக எதுவும் பேசவில்லை, அவர்தான் நகராட்சி ஊழியரை மிரட்டினார். கவுன்சிலராக இருந்தாலும் கூட நகராட்சி ஊழியரை எப்படி அவர் மிரட்டலாம். அதை தான் கேட்டேன் என்றார்.

    அப்போது கவுன்சிலர் நித்யாவிற்கு ஆதரவாக தி.மு.க., ம.தி.மு.க, சி.பி.எம் கவுன்சிலர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பெண் கவுன்சிலர் வார்டு தேவைக்காக கேட்கும் போது ஆணையாளர் எப்படி இப்படி பேசலாம் என வாக்குவாதம் முற்றியது.

    இதனால் ஆத்திரமடைந்த ஆணையாளர் மனோகரன் நான் பேசியது தவறு என்று நீங்கள் நினைத்தால் நான் இந்த மன்ற கூட்டத்தை விட்டு வெளியேறுகிறேன் என கூறி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

    அப்போது இவருடன் சுகாதார ஆய்வாளர் சீனிவாசன், பொறியாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் வெளிநடப்பு செய்தனர்.

    அதன்பின் நகராட்சி தலைவர் உஷாவெங்கடேஷ் ஆணையாளர் மனோகரன் மற்றும் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் மன்ற கூட்டத்திற்கு அழைத்து வந்தார்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
    • வேளாங்கண்ணி நகர் பகுதியில் புதிய தார் சாலை அமைத்து முட்புதர்களை அகற்ற வேண்டும்.

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி மாதாந்திர கூட்டம் நடந்தது.

    நகர மன்ற தலைவர் ஷீலா கேத்ரின் தலைமை தாங்கினார். நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஏகராஜ், துணைத்தலைவர் வாசிம் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் 30 வார்டுகளிலும் உள்ள பிரச்சினைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் கவுன்சி லர்கள் பேசியதாவது:-

    ஜாகீர்(திமுக): மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நகராட்சி வளர்ச்சி பணிக்காக ஒதுக்கிய நிதி எதுவும் முறையாக செயல்படுத்தவில்லை. இதனால் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    ராபர்ட் (திமுக): தற்போது விழாகாலம் துவங்கியுள்ளதால் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்புக்கள் அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல கூட இயலவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டும்.

    ராமசாமி(திமுக): மவுண்ட் பிளசன்ட் பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

    தற்போது இந்த கட்டிங்களை மீண்டும் திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கட்டிடங்களை திறக்க அனுமதி கொடுத்தது யார்? இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் கூட எவ்வித பலனும் இல்லை.

    மேலும் நகர பகுதியில் பல்வேறு இடங்களில் தனியார் கேபிள் நிறுவன ங்கள் சாலையில் கேபிள் பதித்தும் கம்பங்கள் நட்டும் வருகின்றன. இவர்கள் முறையாக நகராட்சிக்கு கட்டணம் செலுத்தி உள்ளார்களா? என்பதும் தெரியவில்லை.

    சரவணகுமார்(அதிமுக): சுகாதார பிரிவில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க ப்படுவது குறித்து தெரிவிக்க வேண்டும். கவுடர் டாக்கீஸ் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் தெருவிளக்கு அமைத்து தர வேண்டும். வேளாங்கண்ணி நகர் பகுதியில் புதிய தார் சாலை அமைத்து முட்புதர்களை அகற்ற வேண்டும்.

    மன்சூர்(திமுக):குன்னூர் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹாய் மாக்ஸ் விளக்கு எரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகளும், பயணிகளும் அவதியடைந்து வருகிறார்கள்.

    இது மட்டுமல்லாமல் நகர பகுதியில் பல இடங்களில் தெருவிளக்குகள் முறையாக எரிவதில்லை.

    இதனை ஆய்வு செய்து அதிக வாட்ஸ் உள்ள எல்.இ.டி பல்புகளை பொருத்த வேண்டும். அனைத்து வார்டுகளிலும் அதிக வாட்ஸ் கொண்ட எல்இடி விளக்குகள் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு கவுன்சிலர்கள் விவாதித்தனர்.

    • நெல்லை-தென்காசி 4 வழிச்சாலை பணிகள் 36 மாதங்களை கடந்தும் நடைபெற்று வருகிறது.
    • போதுமான தடுப்புகள், எச்சரிக்கை பலகைகள் அமைத்து சாலை பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டம் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக அரங்கில் கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் காரசார விவாதங்கள் நடைபெற்றது.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:-

    நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் இந்த மாதத்தில் முடியும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில் இன்னும் நிறைய பணிகள் நிலுவையில் உள்ளது. சாலைப் பணிகளை முடிக்கக்கூடிய இலக்கு தேதி மட்டும் மாறுகிறதே தவிர, பணிகள் முடிந்தபாடில்லை. 18 மாதங்களில் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நெல்லை-தென்காசி 4 வழிச்சாலை பணிகள் 36 மாதங்களை கடந்தும் நடைபெற்று வருகிறது.

    பாவூர்சத்திரம் மற்றும் ராமசந்திரப்பட்டணம் அருகே அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. விபத்துகளை தடுக்க அதிகாரிகளின் நடவடிக்கை போதுமானதாக இல்லை. ஒன் டு ஒன் பஸ்கள் அசுர வேகத்தில் சென்று தொடர்ந்து விபத்துகளை ஏற்படுத்தி வருகிறது. சாலை பாதுகாப்பில் போதுமான நடவடிக்கைகள் எடுத்து சாலை விபத்துகளை தடுக்காவிட்டால் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்து நீதிமன்றம் வரை சென்று அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முறையிடுவோம். சாலை பாதுகாப்பு குறித்து போதுமான நடவடிக்கைகள் எடுக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    உடனே மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், அங்கு அமர்ந்திருந்த அதிகாரிகளை பார்த்து ஆலங்குளத்தில் இருந்து தென்காசி வரையிலான நான்கு வழிச்சாலை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். போதுமான தடுப்புகள், எச்சரிக்கை பலகைகள் அமைத்து சாலை பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும். சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள திறப்புகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    இதுகுறித்து சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகையில், நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை பணிகளில், சாலை பாதுகாப்பில் உள்ள குறைபாடுகள் குறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போதுமான எச்சரிக்கை பலகைகள் மற்றும் தடுப்புகள் அமைத்தல், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர் என்றார்.

    • ஆணையாளர் மன்ற கூட்டரங்கிற்கு 12 மணிக்கு வந்தது கண்டனத்திற்கு உரியது.
    • கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பெய்த மழையால் 800க்கு மேற்பட்ட தெருவிளக்குகள் பழுதாகி போனது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் உஷா வெங்கடேஸ் தலைமை வகித்தார். ஆணையாளர் அமுதா முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு:

    வனிதா சஞ்ஜீவ்காந்தி (அ.தி.மு.க): கடந்த 6 மாதமாக நகர்மன்ற கூட்ட த்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யப்பட வில்லை. குறிப்பாக தெருவிளக்கு, பழுதடைந்த சாலைகளை சீரமைக்க தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆணையாளர்: 10 நாட்களுக்குள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    விக்னேஸ் (பா.ஜக): நகராட்சி கூட்டம் 11 மணிக்கு நடப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஆணையாளர் மன்ற கூட்டரங்கிற்கு 12 மணிக்கு வந்தது கண்டனத்திற்கு உரியது. கூட்டத்தில் வைக்கப்பட்ட 66 தீர்மானங்கள் நிறைவேற்ற தாமதமாகும். எனவே இந்த கூட்டத்தில் வார்டு உறுப்பினர்களின் குறைகளை மட்டுமே கேட்க வேண்டும். தனியாக ஒருநாள் சிறப்பு கூட்டம் நடத்தி தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்.

    ஆணையாளர்: நேரம் இல்லாத காரணத்தினால் இந்த கூட்டத்தில் வார்டு உறுப்பினர்களின் குறைகள் மட்டுமே விவாதிக்கப்படும். தீர்மானங்கள் நிறைவேற்ற சிறப்பு கூட்டம் மற்றொரு நாள் நடத்தப்படும்.

    ராம்குமார் (திமுக): சத்ய சாய் நகரில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. ஆனால் அன்று முதல் இப்பகுதியில் உள்ள 18 தெருவிளக்குகளும் எரிவது இல்லை. செல்வபுரம் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் கல்வெட்டுகள் இல்லை. இதனால் வாகன ஓட்டுநர்கள் சிரமத்தில் உள்ளனர்.

    குருபிரசாத் (திமுக): தூய்மை பணியாளர்களுக்கு சம்பள உயர்வு ஏற்படுத்தி கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி. இந்த கூட்டத்தில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

    நகராட்சியில் கடந்த மாதங்களில் நடந்த நகர்மன்ற கூட்டத்தில் 350க்கு மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதுவரை எந்த வளர்ச்சி பணிகளும் நடக்க வில்லை. நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.2.70 கோடி மதிப்பில் 27 வார்டுகளுக்கும் அடிப்படை வசதிகள் செய்து தருவதாக கூறி கழிவுநீர் கால்வாய், தார்சாலை, தெருவிளக்கு, உள்ளிட்டவை செய்து தரக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் எந்த பணியும் நடக்கவில்லை.

    கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பெய்த மழையால் 800க்கு மேற்பட்ட தெருவிளக்குகள் பழுதாகி போனது. எனவே இதனை சிறப்பு பணி த்திட்டத்தின் கீழ் அடிப்படை தேவைகளை ஆய்வு செய்து உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும்.

    இந்நிலையில் கூட்டத்தில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்க கோரி தீர்மானம் நிறைவேற்ற நடந்த வாக்கு வாதத்தின் போது 23-வது வார்டு உறுப்பினர் செண்பகம் (திமுக) மற்ற உறுப்பினர்களை பார்த்து அருவருக்கத்தக்க வகையில் பேசினார்.

    இதனால் ஆவேசமடைந்த உறுப்பினர்கள் அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மன்ற கூட்ட த்தில் சலசலப்பு ஏற்பட்டது.

    • காரை ஓட்டிய அம்ஜத் மிக கடுமையான வார்த்தைகளால் யோகி ஆதித்யநாத்தையும், பிரதமர் மோடியையும் தாக்கியுள்ளார்.
    • தகவல் அறிந்து கொந்தளித்த அப்பகுதி கிராம மக்கள், மிர்சாப்பூர்-பிரயாக்ராஜ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    பாஜக ஆட்சி நடைபெறும் உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் நகரத்தில், அரசியல் தொடர்பான வாக்குவாதத்தின்போது கார் டிரைவர் ஒருவர், பயணியை கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    வாடகை சொகுசு காரில் பயணித்த ராஜேஷ் துபே (52) எனும் பயணி ஒருவருக்கும், அந்த கார் டிரைவர் அம்ஜத் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து இருவரும் காரசாரமாக பேசி விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அம்ஜத் விமர்சித்துள்ளார். இதற்கு ராஜேஷ் துபே ஆட்சேபம் தெரிவித்ததுடன், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ஆதரவாக பேசி உள்ளார். வாக்குவாதம் கடுமையானதை தொடர்ந்து, ராஜேஷை அவரது வீட்டின் அருகே இறக்கிவிட்ட ஓட்டுனர் அம்ஜத், திடீரென அவர் மீது காரை ஏற்றினார். இதில் தலை நசுங்கிய ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இச்சம்பவம் தொடர்பாக மிர்சாபூர் காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் மிஷ்ரா தெரிவித்ததாவது:

    ராஜேஷ் துபே, மிர்சாபூரில் நடைபெற்ற தனது சகோதரர் ராகேஷ் துபேயின் மகனின் திருமணத்திற்கு சென்று விட்டு காரில் திரும்பியுள்ளார். இவரோடு உடன் பயணித்த உறவினரின் தகவல்படி, ராஜேஷிற்கும் சக பயணிகளுக்கும் இடையே அரசியல் விவாதம் எழுந்துள்ளது. அப்போது காரை ஓட்டிய அம்ஜத் மிக கடுமையான வார்த்தைகளால் யோகி ஆதித்யநாத்தையும், பிரதமர் மோடியையும் தாக்கி பேசியுள்ளார். மோடியையும், யோகியையும் அவமானப்படுத்தும் விதமாக பேசிய அம்ஜத்திற்கு ராஜேஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    காரில் உள்ள மற்ற பயணிகள் இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளனர். அவர்கள் அனைவரும் அவரவர் இடம் வந்ததும் ஒவ்வொருவராக இறங்கியுள்ளனர்.

    அம்ஜத் காரை பாதி வழியிலேயே நிறுத்தி ராஜேஷை இறங்கச் சொன்னதாக தெரிகிறது. ராஜேஷ் துபே இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருக்கும்போது, பின்னால் தனது சொகுசு காரை வேகமாக அவர் மேல் மோதி, நசுக்கி கொன்றதாக தெரிகிறது.

    தகவல் அறிந்து கொந்தளித்த அப்பகுதி கிராம மக்கள், மிர்சாபூர்-பிரயாக்ராஜ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட குற்றவியல் நடுவரும், கண்காணிப்பாளரும் அங்கு வந்து உடனே குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் பல அதிகாரிகள் விரைந்து வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    அரசியல் தொடர்பான விவாதம் கொலையில் முடிந்தது மிர்சாபூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கீழக்கரை நகராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • நடந்து செல்லும் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் அந்தக் குழிக்குள் விழுந்து காயமடைந்து வருகிறார்கள்

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர்மன்ற அவசரக் கூட்டம் நடந்தது. தலைவர் செஹானஸ் ஆபிதா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஹமீது சுல்தான்,ஆணையாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    கவுன்சிலர் சப்ராஸ் நவாஸ், துணைத் தலைவர் ஹமீது சுல்தான்: கடந்த 3 மாதங்களுக்கு முன் பொது நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பெத்ரி தெருவில் பைப்லைன் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டது. ஒப்பந்ததாரர் பழனி அதை எடுத்தார். அந்த இடத்தில் பைப் போடுவதற்கு குழிகள் தோண்டப்பட்டு 3 மாதங்களாக அப்படியே போட்டு வைத்துள்ளார். இதனால் அங்கு நடந்து செல்லும் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் அந்தக் குழிக்குள் விழுந்து காயமடைந்து வருகிறார்கள். அது ஏன் அப்படியே போடப்பட்டுள்ளது? ஓவர்சியர்: அந்த ஒப்பந்ததாரரிடம் பலமுறை கூறியும் நாளை பார்க்கிறேன், நாளை பார்க்கிறேன் என்று காலம் தாழ்த்தி வருகிறார்.

    துணைத் தலைவர்: அவ்வாறு பணி செய்ய மறுக்கும் ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றார். கவுன்சிலர்கள் பாதுஷா, காயத்ரி மீரான் அலி, நஸ்ருதீன். முஹம்மது ஹாஜா சுஐபு, சித்திக், சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா, பொறியாளர் அருள், மேற்பார்வையாளர் சாம்பசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • காரமடை நகராட்சியில் மாதாந்திர கூட்டம் தலைவர் உஷா வெங்கடேஷ் தலைமையில் நடந்தது.
    • இந்த கூட்டத்தில் 57 தீர்மானங்கள் மன்றத்தின் முன் வைக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் காரமடை நகராட்சியில் மாதாந்திர கூட்டம் தலைவர் உஷா வெங்கடேஷ் தலைமையில் நடந்தது. கமிஷனர் பால்ராஜ், துணைத் தலைவர் மல்லிகா ஜெயப்பிரகாஷ், பொறியாளர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தனர்.

    இதனை தொடர்ந்து கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசினர்.

    1-வது வார்டு பிரியா (கம்யூ): எனது வார்டில் சேரன் நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் வீடுகளுக்குள் கழிவு நீர் செல்கிறது. அதற்கு தீர்வுகாண வேண்டும்.

    7-வது வார்டு ரங்கசாமி (தி.மு.க), நேரு நகரில் போர்வெல் பழுதாகி உள்ளது. எனவே புதிய போர்வெல் அமைக்க வேண்டும்.

    5-வது வார்டு ரவிக் குமார்(தி.மு.க), பொன்விழா நகரில் வீட்டுமனைக்கு அனுமதி இல்லாமல் குடியிருப்புகள் கட்டப்படுகிறது. இதற்கு உரிய அனுமதி பெற வேண்டும்.

    9-வது வார்டு பிரியா (தி.மு.க), ராயல் கார்டன், முல்லை நகர், காமராஜர் நகர் பகுதியில் குடிநீர் விஸ்தரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    21-வது வார்டு விக்னேஷ், (பாஜக),காரமடை நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள மின்மயானத்தில் ஆம்புலன்ஸ் இருந்தும் வாடகை வாகனத்தை மக்கள் பயன்படுத்துகின்றனர்.

    உடனடியாக இந்த ஆம்புலன்ஸ் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மின்மாயானம் மாலை 7 மணிவரை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    24-வது வார்டு ராமமூர்த்தி (திமுக),பெரியார் நகரில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இவர்கள் பாலம் வசதி இல்லாததால் கழிவுநீரில் நடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் வீடுகளுக்கு குடிநீர் குழாய் அமைக்கும் பணியும் முறையாக நடக்கவில்லை. தனியார் ஒப்பந்ததாரர் குடியிருப்புவாசிகளிடம் இணைப்பிற்கு ரூ.15 ஆயிரம் வாங்கி உள்ளனர். ஆனால் தண்ணீர் 3 முதல் 4 குடம் மட்டுமே வருகிறது.

    வளர்ச்சி பணிகளுக்கு டெண்டர் விடும்போதும் ஒப்பந்த குழுவினருக்கு தெரியாமல் டெண்டர் விட கூடாது என பேசினார்.இதற்கு பதில் அளித்த கமிஷனர் பால்ராஜ், ரூ.25 ஆயிரத்திற்குட்பட்ட பணிகளுக்கு மட்டுமே பணிகளை பிரித்து கொடுப்பதில் முடிவு செய்யும் உரிமை ஒப்பந்த குழுவினருக்கு உண்டு. அதற்கு மேல் மதிப்பில் உள்ள பணிகளுக்கு ஒப்பந்த குழுவுக்கு உரிமை இல்லை என்றார்.

    துணைத்தலைவர் மல்லிகா ஜெயப்பிரகாஸ் (காங்கிரஸ்)- எனது வார்டுக் குட்பட்ட குடிநீருக்கு போர்வெல் அமைக்காததால் வீடுகளில் கருப்பு கொடி கட்டுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டும்.இதேபோன்று 13-வது வார்டு கண்ணப்பன் (தி.மு.க), 27-வது வார்டு வனிதாசஞ்ஜீவ்காந்தி (அ.தி.மு.க), 2-வது வார்டு குருபிரசாத், 17-வது வார்டு மலர்கொடி (தி.மு.க), தியாகராஜன்(தி.மு.க.) உள்பட அனைத்து கவுன்சிலர்களும் தங்கள் பகுதி குறைகள் குறித்து பேசினர்.

    இந்த கூட்டத்தில் 57 தீர்மானங்கள் மன்றத்தின் முன் வைக்கப்பட்டது. அப்போது அஜந்தாவில் மனை பிரிவுகள் வரையறைக்கு அனுமதி கேட்டு வைக்கப்பட்ட தீர்மானத்தில், எந்த இடம், எந்த வார்டு என குறிப்பிடவில்லை.

    மேலும் அங்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் உள்ளது. எனவே லே-அவுட்டுகளை கவுன்சிலர்கள் பார்வையிட வேண்டும் என்றும், அதன் பின்பே ஒப்புதல் அளிக்கவும், அதுவரை நிறுத்தி வைக்கவும் வேண்டும் என கவுன்சிலர் தியாகராஜன் தெரிவித்தார். அவரது கருத்துக்கு பெரும்பாலான கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்ததால் அந்த தீர்மானம் உள்பட 6 தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டது.

    ×