search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 252351"

    • கொடை விழா இன்று தொடங்கி 29-ந்தேதி வரை நடக்கிறது.
    • மேலசங்கரன்குழி ஊரில் முத்தாரம்மன் கோவில் உள்ளது.

    மேலசங்கரன்குழி ஊரில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொடை விழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 29-ந்தேதி வரை நடக்கிறது.

    இன்று அதிகாலை 5 மணிக்கு பக்திகானம், காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 10 மணிக்கு லலிதா சகஸ்ரநாம வழிபாட்டை நெட்டாங்கோடு ஸ்ரீசாரதேஸ்வரி ஆஸ்ரமத்தை சேர்ந்த யோகேஸ்வரி மீராபுரி மாதாஜி, யோகேஸ்வரி வித்தியாபுரி மாதாஜி ஆகியோர் நடத்துகிறார்கள். பகல் 12 மணிக்கு தீபாராதனை, 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, இரவு 9 மணிக்கு வில்லிசை ஆகியவை நடைபெறுகிறது.

    நாளை (புதன்கிழமை) அதிகாலை 5,.30 மணிக்கு பக்திகானம், காலை 8.30 மணிக்கு நாதஸ்வரம், 9 மணிக்கு வில்லிசை, 11 மணிக்கு சுருள் அழைப்பு, பகல் 1 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, சிங்காரி மேளம், பிற்பகல் 3 மணிக்கு அம்மன் பவனி, மாலை 6 மணிக்கு வில்லிசை, இரவு 7 மணிக்கு அன்னதானம், 8.30 மணிக்கு நாதஸ்வரம், 9 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12.30 மணிக்கு தீபாராதனை ஆகியவை நடக்கிறது.

    நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு பக்திகானம், காலை 6 மணிக்கு நாதஸ்வரம், 7 மணிக்கு வில்லிசை, மாலை 5 மணிக்கு பக்திகானம், இரவு 7 மணிக்கு தீபாராதனை, 10 மணிக்கு மண்டல பூஜை ஆகியவை நடைபெறுகிறது.

    மேலசங்கரன்குழி ஊர் ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை மற்றும் ஆண்டு திருவிழா கடந்த 5-ந்தேதி தொடங்கியது. அன்று காலை 6 மணிக்கு புதிய கொடிமரம் நாட்டப்பட்டது. 23-ந்தேதி இரவு 8.30 மணிக்கு திருக்கல்யாண ஏடுவாசிப்பும், 25-ந்தேதி மாலை 6.30 மணிக்கு திருஏடுவாசிப்பு பட்டாபிஷேகமும் நடந்தது. நேற்று பிற்பகல் 3 மணிக்கு சுவாமி திருக்கோவில் பவனி வருதலும், இரவு 7.30 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடந்தது.

    வருகிற 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு பக்திகானம், காலை 10 மணிக்கு கீதா பாராயணத்தை யோகேஸ்வரி மீராபுரி மாதாஜி, யோகேஸ்வரி வித்யாபுரி மாதாஜி ஆகியோர் நடத்துகிறார்கள். இரவு 8மணிக்கு சுவாமி பணிவிடை, 8.30 மணிக்கு வாணவேடிக்கை, 9 மணிக்கு சுவாமி அலங்கார வாகன பவனி வருதல் ஆகியவை நடைெ்பறுகிறது. அதிகாலை 3 மணிக்கு கொடி இறக்கப்படுகிறது.

    • 25-ந் தேதி திருவிளக்கு பூஜையும் அதைத் தொடர்ந்து நவீன வில்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
    • முத்தாரம்மன் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.

    தென்திருப்பேரை:

    ஏரல் அருகில் உள்ள இடையர்காடு முத்தாரம்மன் கோவில் கொடை விழா நேற்று நடைபெற்றது. கடந்த 20-ந் தேதி கொடை விழாவை முன்னிட்டு கால்நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

    புனிதநீர் தீர்த்தம்

    25-ந் தேதி திருவிளக்கு பூஜையும் அதைத் தொடர்ந்து நவீன வில்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. மறுநாள் இரவு வில்லிசை நிகழ்ச்சியும், நேற்று காலை தாமிரபரணி ஆற்றிலிருந்து பக்தர்கள் மேளதாளத்துடன் புனித நீர் தீர்த்தம் எடுத்து வந்து கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம், யாக பூஜைகள் செய்யப்பட்டு புனிதநீர் கோவில் கலசங்களில் ஊற்றப்பட்டு தீபாராதனை வருஷா பிஷேகம் நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து தீபாராதனை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் பக்தர்கள், பொதுமக்களுக்கு காலை, மதியம், இரவு அன்னதானம் வழங்கப்பட்டது.

    பின்னர் அன்று இரவு பெண்கள் முளைப்பாரி எடுத்து அம்மன் கோவிலை சுற்றி வந்து கும்மியடித்து வழிபட்டனர். அதைத் தொடர்ந்து வில்லிசை நிகழ்ச்சியும் தொடர்ந்து கரகாட்டம், நையாண்டி மேளம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    கொடைவிழா

    இரவு முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் சாமக்கொடை, தீபாராதனை மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இன்று அதிகாலையில் வாண வேடிக்கையுடன் முத்தாரம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வாண வேடிக்கை, கரகாட்டம், மேளதாளத்துடன் வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.

    இன்று மதிய கொடையுடன் விழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    • அன்னை முத்தாரம்மன் ரிஷபம் வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் பவனி வந்துபக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
    • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்தசரா பெருந்திருவிழாவில் 3 -ம் நாளான இன்று இரவு 9 மணிக்கு அன்னை முத்தாரம்மன் ரிஷபம் வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் பவனி வந்துபக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    முன்னதாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிசேகங்களும் மாலை 4 மணிக்கு சமய சொற்பொழிவு, இன்னிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும்.

    விரதம் இருந்து வரும் பக்தர்கள் அதிகாலையில் கடலில் நீராடி, காப்பு கட்டி விரதத்தை தொடர்ந்து வருகின்றனர். கோவில் திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தூத்துக்குடிஇணை ஆணையர் அன்புமணி, உதவிய ஆணையர் சங்கர், செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தசரா குழுவினர் வந்து கடலில் புனித நீர் எடுத்து கோவில் வளாகத்திற்கு வந்து சுவாமி தரிசனம் செய்வதும் நடந்து கொண்டிருக்கிறது.

    தூத்துக்குடி மாவட்ட மருத்துவ துறை, போலீஸ் துறை, மின்சார துறை போன்ற பல்வேறு அரசு துறை அதிகாரிகள் குலசேகரன்பட்டினம் நகரம் முழுவதும் வலம் வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    துப்புரவு பணிகள் தீவிரம்

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவையொட்டி சுமார் 15 நாட்கள் உடன்குடி மற்றும் குலசேகரன் பட்டினம் பகுதியில் வேடமணிந்து பக்தர்கள் வீதி வீதியாக நடமாடுவார்கள். பல இடங்களில் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் ஆங்காங்கே அமர்ந்திருந்து உணவு தயாரித்து சாப்பிடுவார்கள். அதனால் குலசேகரன்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சொர்ன பிரியா, துணைத்தலைவர் கணேசன் ஆகியோர் மேற்பார்வையில் துப்புரவு பணியாளர்கள் குலசேகரன்பட்டினம் நகர் முழுவதும் இரவு பகலாக துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அதுபோல உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சியில் தலைவர் ஹூமைராஅஸ்ஸாப் கல்லாசி, துணைத் தலைவர் மால் ராஜேஷ், செயல் அலுவலர் பாபு ஆகியோர் மேற்பார்வையில் இரவு பகலாக துப்புரவு பணி தொடர்ந்து நடந்து வருகிறது.கிருமி நாசினிகள் தெளிப்பதும், குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துவதும், கழிவு நீரை தேங்க விடாமல் தடுப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றது.

    • ஆடிக் கொடை விழா கடந்த 1-ந் தேதிஇரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையுடன் தொடங்கியது.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று காலை முதல் நள்ளிரவு வரைகோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.

    உடன்குடி:

    தசரா திருவிழாவில் தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆடிக்கொடை விழா ஆண்டுதோறும் வெகு விமர்கசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு ஆடிக் கொடை விழா கடந்த 1-ந் தேதிஇரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையுடன் தொடங்கியது.

    இரவு 10 மணிக்கு வில்லிசை, நேற்று காலை 7 மணி, காலை 8.30 மணி, மாலை 5 மணி, இரவு 7 மணி ஆகிய நேரங்களில் அன்னை முத்தாரம்மனுக்குசிறப்பு அபிஷேகம், பகல் 10 மணிக்கு கும்பம் தெரு வீதி வருதல், வில்லிசை மகுட இசை, மதியம் 12 மணிக்கு அன்னதானம், இரவு 8 மணிக்கு வில்லிசை, மகுட இசை இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, இரவு 11 மணிக்கு கும்பம் திருவீதி வருதல். இரவு முழுவதும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

    பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று காலை முதல் நள்ளிரவு வரைகோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். ஆண் பெண் பக்தர்கள் தீச்சட்டிஏந்திவருதல், வேல்குத்திவருதல். பால்குடம் எடுத்து எடுத்துவருதல்போன்ற பல்வேறு நேமிசங்களை அம்மனுக்கு செலுத்தினர். இன்று காலை 8 மணிக்கு அன்னதானம் நடந்தது.

    காலை 9 மணிக்கு சிறப்பு மகுட நிகழ்ச்சி, காலை 11 மணிக்கு கும்பம் வீதி உலா, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராட்டு விழா, இரவு 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகளுடன் கொடை விழா நிறைவு பெறுகிறது.

    கொடை விழா ஏற்பாடு களை தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், செயல் அலுவலர் ராம சுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

    • ஆடிப்பூரத்தையொட்டி நடந்தது
    • திரளான பக்தர்கள் தரிசனம்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி வடக்கு ரத வீதியில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது. இதையொட்டி மூன்று முகம் கொண்ட முத்தாரம்மனுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடந்தது. மாலையில் அம்மனுக்கு மா காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சாயரட்சை தீபாராதனை நடந்தது.

    பின்னர் இரவு 8 மணிக்கு முத்தாரம்மனுக்கு 1008 வளையல்கள் அணிவிக்கப்பட்டு அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகளும் விசேஷ பூஜைகளும் நடந்தது. முன்னதாக விநாயகருக்கு முதல் பூஜை நடந்தது.அதன்பிறகு முத்தாரம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. மேலும் இந்த கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களான உச்சிமாகாளி அம்மன், பைரவர் சுவாமி, சுடலை மாடசுவாமி, புலமாடசுவாமி, இசக்கி அம்மன், ஆகிய பரிவார சுவாமிகளுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது.

    இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொணடு அம்மனுக்கு வளையல் வழங்கி வழிபாடு செய்தார்கள். பின்னர்பக்தர்களுக்கு அந்த வளையல் அருள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    ×