search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீவிர கண்காணிப்பு"

    • அருவியின் பாதுகாப்பு கம்பிகளின் மீது ஏறிய போது நிலை தடுமாறி காவிரி ஆற்றில் விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
    • தொங்கு பாலத்தின் அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பரிசல் ஓட்டிகள் சுற்றுலாப் பயணியை ஆற்றில் அடித்து வருவதை கண்டதும் உடனடியாக அவரை மீட்டனர்.

    ஒகேனக்கல்,

    தமிழகத்தின் முதன்மை சுற்றுலாத் தலமான தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று விடுமுறை நாள் என்பதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்தனர்.

    சுற்றுலாப் பயணிகள் எண்ணை தேய்த்து மெயின் அருவி, காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனர். கடந்த ஆண்டு காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் மெயின் அருவியின் ஒரு பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்ததால், மறுப்பகுதி மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் சிலர் தனியார் பார்களில் இருந்து மது பாட்டில்களை வாங்கி கொண்டு தடை செய்யப்பட்ட இடங்களில் மது குடித்து விட்டு காவிரி கரையோரத்தில் ஆபத்தான இடங்களில் குளித்தனர்.

    இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்திருந்த சுற்றுலா பயணி ஒருவர் மது போதையில் மெயின் அருவியில் குளித்துக் கொண்டிருக்கும்போது, அருவியின் பாதுகாப்பு கம்பிகளின் மீது ஏறிய போது நிலை தடுமாறி காவிரி ஆற்றில் விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

    அப்போது தொங்கு பாலத்தின் அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பரிசல் ஓட்டிகள் சுற்றுலாப் பயணியை ஆற்றில் அடித்து வருவதை கண்டதும் உடனடியாக அவரை மீட்டு கரையோரப் பகுதிக்கு எடுத்துச் சென்று முதலுதவி செய்து அவசர சிகிச்சைக்காக ஊட்டமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற சுற்றுலாப் பயணி குணமடைந்து வீடு திரும்பினார்.

    வார விடுமுறை நாட்க–ளில் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு–படுத்தப்பட்டு வருவதாலும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்ப–டும் மெயின் அருவி, தொங்கு பாலம் உள்ளிட்ட பகுதிகளில் போதுமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படாத–தாலும், தனியார் பார்களில் விற்கப்படும் மது–பானங்களை சில பயணிகள் வாங்கி குடித்துவிட்டு இதுபோன்று தவறான செயல்களில் ஈடுபடுவதால் உயிரிழப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

    எனவே, அதனை தடுக்கும் விதமாக மெயின்அருவியில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான முறையில் குளிப்பதற்காக கடினமான தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

    மேலும், மெயின்அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றங்கரை–யோரம் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பின் போது போலீ–சார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போலீசார் ரோந்து செல்ல வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.
    • கடும் நடவடிக்கையால், குற்ற செயல்களில் ஈடுபடுவோர் முடங்கி உள்ளனர்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ஜவகர் பொறுப்பேற்ற பின் பல்வேறு அதிரடி நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். போலீசாருக்கு விடுமுறை, சாதாரண காரணத்துக்காக மாற்றப்ப ட்டவர்களுக்கு மீண்டும் பழைய பணியிடம் ஒதுக்கீடு, மனு மற்றும் கோரிக்கைக்காக பார்க்க வருவோரை காக்க வைக்காமல் உடனுக்குடன் பார்ப்பது உள்பட பல்வேறு மாற்றங்கள் அமலாகி உள்ளது.

    குறிப்பாக பாதுகாப்பு, சட்டம் – ஒழுங்கு, போக்கு வரத்து நெரிசலை தவிர்த்தல் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்ப டுகிறது. திருட்டு, கொள்ளை, வழிப்பறி, மிரட்டல், ரவுடிகள் நடமாட்டம், தேவையற்ற வகையில் சுற்றித்திரிபவர்களை கட்டுப்படுத்துதல் போன்ற வற்றுக்காக, தெருக்கள், கடை வீதிகள், பிரதான சாலைகளில் போலீசார் ரோந்து செல்ல வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.

    இதனை ஏற்று மோட்டார் சைக்கிள் மற்றும் ஜீப்களில் மக்கள் நடமாட்டம் உள்ள மற்றும் நடமாட்டம் இல்லாத தெருக்கள், கடை வீதிகள், பிரதான சாலைகள், பஸ் நிறுத்தங்கள் போன்ற இடங்களில் போலீசார் ரோந்துப்பணி செல்கின்ற னர். குறிப்பிட்ட போலீசார், குறிப்பிட்ட பகுதிக்கு ரோந்து சென்று குறிப்புகள் அனுப்பி வருகின்றனர்.

    போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களில், விரைவாக போக்குவரத்தை சீர்செய்யவும், தேவை யானால் கூடுதல் போலீ சாரை பயன்படுத்த உத்தர விட்டதால் கடந்த ஒரு வாரமாக கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    குறித்த நேரம் தவிர மற்ற நேரங்களில் டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த பார்களை கண்காணிக்கின்றனர். இரவு குறிப்பிட்ட நேரத்துக்கு ப்பின் தேவையற்ற கடை களை மூடவும், நடமா ட்டங்களை கட்டுப்படுத்த வம், அனுமதியற்ற சட்ட விரோத மது விற்பனை, லாட்டரி, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வோர் மீதும் கடும் நடவடிக்கையால், குற்ற செயல்களில் ஈடுபடு வோர் முடங்கி உள்ளனர்.

    • அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • சோதனைச்சாவடி பகுதிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று வருகிறது.

    அந்தியூர்:

    கர்நாடகா சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (மே) 10-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அங்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. மேலும் அரசியல் கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனைசாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அதே போல் தமிழக- கர்நாடகா மாநில எல்லை பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைத்து அந்த வழியாக வரும் வாகனங்களை தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கிறார்கள்.

    இதே போல் ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி, பண்ணாரி மற்றும் அந்தியூர் அடுத்த பர்கூர் வழியாக கர்நாடகா மாநில எல்லை பகுதியில் சோதனைச் சாவடிகள் உள்ளது. இந்த வழியாக வாகனங்களை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் லாரி, பஸ், வேன், சரக்கு வாகனங்கள், 2 சக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த நிலையில் கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தலையொட்டி அந்தியூர் அருகே தாமரைக்கரை, பர்கூர், கர்கேகண்டி வழியாக தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான நால்ரோடை அடுத்து கூடலூர், மாட்டலி, ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்தியூர், பர்கூர் வழியாக கர்நாடகாவுக்கு செல்லும் வாகனங்கள் எல்லை பகுதியில் தீவிர வாகன சோதனைக்கு பிறகே கர்நாடகாவிற்குள் செல்ல அனுமதிக்கபட்டு வருகின்றது. இதனால் கர்நாடகா சோதனைச்சாவடி பகுதிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது.

    • மதுரை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் எழுதினர்.
    • பறக்கும் படைகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    மதுரை

    தமிழகம் முழுவதும் இன்று 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை சுமார் 9 லட்சத்து 76 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தேர்வு இன்று (6-ந் தேதி) தொடங்கி வருகிற 20-ந்தேதி வரை நடக்கிறது. முதல் தேர்வாக இன்று தமிழ் மொழி பாட தேர்வு நடந்தது.

    மதுரை மாவட்டத்தில் 38 ஆயிரத்து 945 மாணவ, மாணவிகள் இன்று 10-ம் வகுப்பு தேர்வை எழுதினர். இதற்காக மாவட்டம் முழு வதும் 145 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டி ருந்தன. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. தேர்வு பணியில் ஆசிரியர்கள், அலுவலர்கள் என ஆயிர த்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட தனிப் படைகள் அமைக்கப்பட்டு தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று கண்காணித்த னர்.

    முன்னதாக தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், முதன்மை கல்வி அதிகாரி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். தேர்வு மையங்க ளில் மாணவ, மாணவிகளுக்கு தேவைான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டி ருந்தன.

    விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 12,755 மாணவர்களும், 12,791 மாணவிகளும் மற்றும் தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 25 ஆயிரத்து 776 பேர் 10-ம் வகுப்பு தேர்வை எழுதுகின்றனர். இதற்காக மாவட்டத்தில் 116 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டி ருந்தன.

    இன்று காலை சரியாக 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. ஆனால் மாணவ- மாணவிகள் 20 நிமிடம் முன்பே தேர்வு அறைக்குள் தீவிர சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பா ளர்கள் என 1200-க்கும் மேற்பட்டோர் தேர்வு பணியில் ஈடுபட்டனர்.

    சிவகங்கை மாவட்டத்தில் 8,890 மாணவர்களும், 9,123 மாணவிகள் என மொத்தம் 18 ஆயிரத்து 13 பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதற்காக அமைக்கப்பட்டி ருந்த 101 தேர்வு மையங்களில் இன்று காலை தேர்வு தொடங்கியது. தேர்வு பணியில் 1,500க்கும் மேற்பட்டோர் ஈடு படுத்தப்பட்டிருந்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று 84 தேர்வு மையங்களில் 8,359 மாணவர்களும், 8,480 மாணவிகளும், 497 தனி தேர்வர்கள் என மொத்தம் 17 ஆயிரத்து 501 பேர் பத்தாம் வகுப்பு தேர்வை எழுதினர். 1264 கண்கா ணிப்பாளர்கள், 84 முதன்மை கண்காணிப்பா ளர்கள், 84 துறை அலு வலர்கள், மற்றும் 148 பணியாளர்கள் தேர்வு பணிக்கு நியமிக்கப்பட்டி ருந்தனர்.

    முதல்முறையாக இன்று அரசு பொதுத்தேர்வை எதிர்கொண்ட பத்தாம் வகுப்பு மாணவ-மாணவி கள் தமிழ் மொழிப்பாட தேர்வை உற்சாகமாக எழுதினர். தேர்வு மையங்க ளுக்கு முன்கூட்டியே வந்தி ருந்த அவர்கள் கடைசி நேர தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டனர். மேலும் ஆசிரியர் ஆசிரியர்களும் மாணவ-மாணவிகளுக்கு தேர்வு எழுதுவது குறித்து விளக்கியதை நேரில் காண முடிந்தது.

    தேர்வு எழுதுபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் மாணவ மாணவிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். துண்டு தாள் வைத்துக்கொள்வது, பிறரை பார்த்து எழுதுவது, ஆள் மாறாட்டம் போன்ற செயல்களில் ஈடுபட்டால் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், 3 ஆண்டுகள் தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை எச்ச ரித்திருந்தது.

    எனவே 3 மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டிருந்த பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட னர்.

    • போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.
    • மோப்ப நாய்கள் கொண்டு சோதனை செய்யப்படுகிறது.

    கோவை

    குடியரசு தின விழா நாளை மறுநாள் (வியாழக்கி ழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    கோவை மாநகரில் குடியரசு தின விழா நடைபெறும் வ.உ.சி. மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் வழிபா ட்டுத் தலங்கள் ரெயில் நிலையங்கள், பஸ் நிலைய ங்கள் விமான நிலையம் ஆகியவற்றில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரெயில் நிலையத்தில் போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் எவ்வாறு பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறா ர்கள் என கேட்டறிந்தார். மேலும் ரெயில் நிலைய த்திற்கு வரும் பயணிகளின் உடமைகளை சோதனை செய்யும் ஸ்கேனர் கருவிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.பின்னர் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது

    கோவை மாநகரில் குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மத்திய ரெயில் நிலையம், போத்தனூர், சிங்கா நல்லூர், வடகோவை ரெயில் நிலையங்கள், காந்திபுரம், சிங்காநல்லூர் பஸ் நிலையங்கள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ரெயில் நிலையத்தில் 24 மணி நேரமும் மோப்ப நாய்கள் கொண்டு சோதனை செய்யப்படுகிறது. பயணிகளின் உடைமைகளும் சோத னை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்க ப்படுகிறார்கள். பயணிகள் பாதுகாப்புக்கு எந்தவித சுணக்கம் இல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.பார்சல்கள் அனைத்தும் திறந்து பார்த்த பின்னர் தான் அனுப்பு அறிவுறு த்தப்பட்டுள்ளது. குடியரசு தினம் முடியும் வரை இந்த நடைமுறைகள் இருக்கும்.பாதுகாப்பு தொடர்பா ன வழக்குகளில் சம்மந்தப்ப ட்டவர்கள் கண்காணிப்பில் உள்ளார்கள்.மாநகரில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    லாட்ஜ்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அங்கு தங்குபவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. விபரங்களை சேகரிக்காத லாட்ஜ் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாநகர எல்லைகளில் உள்ள 11 சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மாநகர முக்கிய இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பறவைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • 1,206 கோழி பண்ணைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    கோவை,

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் ஆழுர் மற்றும் கோட்டயம் பகுதியில் பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள கோழி பண்ணைகள் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திடீரென கோழி இறப்பு அதிகளவில் இருந்தால் உடனடியாக கால்நடை பராமரிப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பண்ணை உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கால் நடை பராமரிப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கோவை மாவட்டத்தில் உள்ள 1,206 கோழி பண்ணைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    கோவையில் ஒரு பன்முக கால்நடை ஆஸ்பத்திரி, 96 மருந்தகம், 15 கால்நடை ஆஸ்பத்திரிகள், 25 கிளை சென்டர்கள், ஒரு கிளினிக்கல் சென்டர் ஆகியவை உள்ளன. இவற்றில் பணியாற்றும் டாக்டர்கள் மூலம் அருகே உள்ள கோழிப் பண்ணைகளில் தொடர்ந்து சென்று கண்காணிக்கப்பட்டு வருகின்றது. திடீரென ஏராளமான கோழிகள் இறந்தால் உடனடியாக கால்நடை துறையினருக்கு தகவல் தெரிவிக்க பண்ணை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.நீர் நிலைகள் மற்றும் பிற இடங்களில் இடம் பெயர்ந்து வரும் பறவைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

    மேலும், கோவையில் இருந்து கேரளாவிற்கு கோழிகள் கொண்டு செல்ல தடையின்மை சான்றிதழ் அளிக்கப்படுகிறது. கோழி பண்ணைகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு வந்தால் 6 மாத காலம் அதன் தாக்கம் இருக்கும்.

    இதனால், முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாளையாறு, மீனாட்சி புரம் உள்ளிட்ட 12 இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகன கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது. தற்போது வரை கோவையில் எந்த பகுதியிலும் பறவைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த சில மாதங்களாக பன்றிகள் உயிரிழந்து வந்தன.
    • கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் உள்பட நீலகிரி வனக்கோட்ட பகுதியில் கடந்த சில மாதங்களாக பன்றிகள் உயிரிழந்து வந்தன.

    ஆய்வில், கா்நாடக மாநிலம் பந்திப்பூா் புலிகள் காப்பகம் மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சலால் பன்றிகள் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் நடைபெற்ற ஆய்வில், வளா்ப்பு பன்றிகள் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்படவில்லை என உறுதியானது.

    எனினும், கேரள, கா்நாடக மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் கக்கநல்லா, தாளூா், சேரங்கோடு, நாடுகாணி உள்ளிட்ட 8 சோதனை சாவடிகளில் கால்நடை மருத்துவ குழு மூலம் முழுமையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே, நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.

    வெளி மாநிலங்களில் இருந்து இறைச்சிப் பன்றிகளை நீலகிரிக்கு கொண்டுவரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 2-வது நாளாக கால்நடை மண்டல இயக்குநா் பகவத்சிங், கூடலூா் கோட்டாட்சியா் முகமது ஆகியோா் தலைமையில், மசினகுடி, கூடலூா், தொரப்பள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள வளா்ப்பு பன்றிக்கூடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    வளா்ப்பு பன்றிக்கூடங்களில் உள்ள பன்றிகளை விற்க கூடாது என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ள நிலையில், ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சலால் வனவிலங்குகள், கால்நடைகள், மனிதா்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என கால்நடை மண்டல இயக்குநா் பகவத்சிங் தெரிவித்துள்ளாா்.

    • கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தொற்று கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட் டுள்ளது.
    • கோவை மாவட்டத்தில் தற்போது பெரியளவில் கொரோனா பாதிப்பு இல்லை

    கோவை,

    அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா நோய்த் தொற்று மிக தீவிரமாக பரவி வருவதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் குஜராத், ஒடிசா ஆகிய மாநிலங்களில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து, கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தொற்று கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட் டுள்ளது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் சமீரன் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் தற்போது பெரியளவில் கொரோனா பாதிப்பு இல்லை. வெளிநாடுகளில் தொற்று அதிகரித்துள்ளதால் மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரப்ப டுத்தப்பட்டுள்ளது.

    கொரோனா சிகிச்சை மையங்கள் உள்ளிட்டஅனைத்து வசதிகளும் ஏற்கெனவே தயார் நிலையில் உள்ளன. நோய்த் தொற்று பரவல் அதி கரிக்கும்போது அனைத்தும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர்அருணா கூறியதாவது:-

    புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பைகண்டறிவதற்காக புதிதாக கொரோனா ெதாற்று உறுதி செய்யப்படுபவர்களின் சளி மாதிரிகள் சென்னையில் உள்ள மாநில பொது சுகாதாரத் துறை ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடந்த 2 நாள்களாக கோவையில் ஒருவருக்குகூட நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய் யப்படவில்லை. தொடர்ந்து கொரோனா பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.வெளிநாடுகளில் இருந்து கொரோனா தொற்று அறிகுறி களுடன் வருபவர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி, கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையம் சார்பில் தெர்மல் ஸ்கேனர் மூலம் வெளி நாட்டுப் பயணிகளுக்கு பரிசோ தனை செய்யப்படுகிறது.

    காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத் தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • உபரி நீர் விநாடிக்கு 1 லட்சத்து 95 ஆயிரம் கன அடி தண்ணீர், காவிரி ஆறு மற்றும் கொள்ளிடத்தில் திறந்து விடப்படுகிறது.
    • கொள்ளிடக் கரை பகுதியில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கர்நாடக மாநிலத்தில் கடும்மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு அதிக அளவில்தண்ணீர்வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவான120 அடியை எட்டிய நிலையில், உபரி நீர் விநாடிக்கு 1 லட்சத்து 95 ஆயிரம் கன அடி தண்ணீர், காவிரி ஆறு மற்றும் கொள்ளிடத்தில் திறந்து விடப்படுகிறது. பவானிசாகர்பகுதியில் பெய்யும் மழையும், கொள்ளிடம் ஆற்று பகுதியில் பெய்யும் மழை நீருடன் சேர்ந்த உபரி நீரும் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது. கீழணை யில் 8 அடி தண்ணீ ரை மட்டுமே தேக்க முடியும் என்பதால் நேற்று முன்தி னம் மதியம் விநாடிக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கன அடிதண்ணீர் கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனா ல்கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு வெள்ள நீர் சென்றது. மேலும் கொள்ளிட ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    ஆற்றில் வெள்ள நீர் செல்வதால் சிதம்பரம் அருகே தீவு கிராமங்களான அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம்,திட்டுக்காட்டூர்,கீழ குண்டலபாடி ஆகிய கிராமங்களில் குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இப்பகுதி மக்கள் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டு, உணவு வழங்கப்பட்டு வருகிறது. இக்கிராமங்களில் வருவாய்,வளர்ச்சித்துறை ஊரக அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். மேலும் நீர்வளத்துறை கொள்ளிடம் வடிநில கோட்ட சிதம்பரம் செயற்பொ றியாளர் காந்தருபன் தலைமையில் உதவி செய ற்பொறியாளர் அணை க்கரை குமார், சிதம்பரம் ஞானசேகர் மற்றும் உதவிப்பொறியாளர்கள், நீர்வளத்துறை பணியாளர்கள் கொண்ட குழுவினர் கொள்ளிடக் கரை பகுதியில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வாட்ச் டவர் அமைக்கப்பட்டுள்ளது.
    • போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, முக்கிய ரோடுகளில் போலீசார் சீரமைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    கோவை

    கோவை நகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போலீஸ் கண்காணிப்பு தீவிரப்ப டுத்தப்பட்டுள்ளது.

    குறிப்பாக பெரிய கடை வீதி, ராஜ வீதி, ஒப்பணகார வீதி, கிராஸ்கட் ரோடு, டி.பி ரோடு உள்பட 50-க்கும் மேற்பட்ட முக்கிய வணிக, வர்த்தக பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகி ன்றனர்.

    கூட்ட நெரிசலை கண்காணிக்க நகரில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வாட்ச் டவர் அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் பைனாகுலர் மூலமாகவும், கண்காணிப்பு காமிரா மூலமாகவும் கூட்ட நெரிசலையும், திருடர்க ளையும் கண்காணித்து வருகி ன்றனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, முக்கிய ரோடுகளில் போலீசார் சீரமைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.பல்வேறு இடங்களில் வாகனம் நிறுத்தும் இடங்கள் முறைப்படுத்தப்பட்டு வருகிறது. நெரிசல் மிகுந்த இடங்களில் வாகனங்க ள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி திருடர்களை பிடிக்க நகரில் முக்கிய இடங்களில் போலீசார் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காந்திபு ரம், உக்கடம் ஆகிய பஸ் நிலையங்களில் கூட்ட நெரிசல் மிக்க வீதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வெளியூர் திருடர்கள் மற்றும் உள்ளூர் திருடர்கள் 150 பேரின் புகைப்படம் வைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். இவர்கள் கோவையில் லாட்ஜ், ஓட்டல்களில் தங்கி கைவரிசை காட்ட முயற்சிப்பதாக தகவல் வந்துள்ளது. இவர் களை போலீசார் தேடி வருகின்றனர்.இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:-பண்டிகைக்கு பொருட்கள் வாங்க வரும் மக்களால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது. வழக்கமான நாட்களை காட்டிலும் 2 மடங்கு வாகன போக்குவ ரத்து அதிகமாகி விட்டது.

    இதனை சரி செய்வது கடிணமாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. கடை வீதிகளில் நிறுவனத்தினர் வாகனங்கள் நிறுத்த இட வசதி செய்து தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்கு வரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் நிறுத்தப்ப டும் வாகனங்கள் அப்புறப்ப டுத்தப்படும். நோ பார்க்கிங் பகுதியில் வாகனங்கள் நிறுத்த கூடாது. தீபாவளி முடியும் வரை மாலை நேரங்களில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.  

    • சுதந்திர தினவிழாவை சீர்குலைக்கும் வகையில் முயற்சிகள் நடக்கலாம் என்பதால் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய உளவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.
    • திண்டுக்கல் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களது உடமைகள் சோதனை செய்யப்பட்டன.

    திண்டுக்கல்:

    இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அரசு மற்றும் தன்னார்வ அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர். சுதந்திர தினவிழாவை சீர்குலைக்கும் வகையில் முயற்சிகள் நடக்கலாம் என்பதால் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய உளவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    இதனைதொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்றுமுதல் வருகிற திங்கட்கிழமை வரை 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சென்னை, கோவை உள்பட பல்வேறு நகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.

    இதனால் நேற்று இரவு முதலே அனைத்து ரெயில்நிலையங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதேபோல் அரசு மற்றும் ஆம்னி பஸ்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி சமூகவிரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்க அனைத்து பயணிகளிடமும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களது உடமைகள் சோதனை செய்யப்பட்டன. இதேபோல் ரெயில் நிலையத்திற்கு வந்த பார்சல்களும் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அந்தந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதேபோல் பஸ்நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் , வழிபாட்டு தலங்கள் ஆகிய இடங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பழனி மலைக்கோவிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதனிடையே சுதந்திர தினவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் கலெக்டர் விசாகன் கொடியேற்றி தியாகிகளுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிப்பதுடன் அரசின் நலத்திட்ட உதவிகளும் வழங்க உள்ளார். இதற்காக இன்று மாவட்ட விளையாட்டு அரங்கில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.

    ×