என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஷேக் ஹசீனா"
- ஷேக் ஹசீனா லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
- 1975-ம் ஆண்டு புரட்சியில் ஷேக் ஹசீனாவின் மொத்த குடும்பமே படுகொலை செய்யப்பட்டது.
பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ம் ஆண்டு நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் தீர்ப்பு கிடைத்துவிட்ட போதிலும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி போராட்டம் தீவிரமடைந்தது.
இந்நிலையில், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா டாக்கா அரண்மனையை விட்டு பாதுகாப்பான இடத்துக்குச் சென்று விட்டார் என தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து ராணுவம் அங்கு ஆட்சியைக் கைப்பற்றியது.
நாட்டைவிட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா, திரிபுரா மாநிலம் அகர்தலாவுக்கு வருகை புரிந்துள்ளதாகவும் அங்கிருந்து லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
வங்கதேசத்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றுவது ஒன்றும் இது முதல்முறையல்ல. இதற்கு முன்பே 2 முறை ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ராணுவம் காப்பாற்றிய அந்த சமயத்தில் 2 அதிபர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் வங்கதேசத்தின் அதிபராக இருந்தபோது, 1975 ஆம் ஆண்டு நடந்த முதல் ராணுவப் புரட்சியின்போது படுகொலை செய்யப்பட்டார்.
அந்த புரட்சியின் போது ஷேக் ஹசீனாவும் அவரது தங்கை ஷேக் ரெஹானாவும் வெளிநாட்டில் இருந்ததால் உயிர் தப்பினர். அந்தப் புரட்சியின் போது மொத்தமாக ஷேக் ஹசீனாவின் மொத்த குடும்பமே படுகொலை செய்யப்பட்டது.
1981-ல் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த ஜியாவுர் ரஹ்மான் ராணுவத்தினராலேயே படுகொலை செய்யப்பட்டார். அதே சமயம் பல முறை ராணுவத்தின் புரட்சி முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளன.
2009 ஆம் ஆண்டு ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ஏற்ற இரண்டே மாதத்தில் பங்களாதேஷ் ரைபிள் படையினர் பெரும் கலக்கம் செய்தனர் பெரும் சிரமத்திற்குப் பின்னர் அந்த கலகத்தை ராணுவம் அடக்கியது. கடந்த 2012-ம் ஆண்டும் ஹசீனாவுக்கு எதிராக ராணுவம் புரட்சி நடத்த முயன்றது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி போராட்டம் நடந்து வருகிறது.
- இதனால் அங்கு காலவரையற்ற நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
டாக்கா:
பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ம் ஆண்டு நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் தீர்ப்பு கிடைத்துவிட்ட போதிலும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரியும், முந்தைய போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வழங்கக் கோரியும் போராட்டம் நடந்து வருகிறது.
போராட்டம் காரணமாக நேற்று காலவரையற்ற நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் இடையில் மோதல் உருவானது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் காரணமாக அந்நாட்டில் பரபரப்பு சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா டாக்கா அரண்மனையை விட்டு பாதுகாப்பான இடத்துக்குச் சென்று விட்டார் என தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து ராணுவம் அங்கு ஆட்சியைக் கைப்பற்றியது.
- ஆளும் ஷேக் ஹசீனா அரசாங்கத்துக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
- ஜெயலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட கைதிக்ள தப்பி ஓடிவிட்டனர்.
பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 6 மாணவர்கள் உயிரிழந்தனர். போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த போராட்டம் நாட்டின் பெரும்பாலான பகுதியில் பரவியுள்ளது. போராட்டக்காரர்கள் கண்ணில் பட்டதையெல்லாம் தாக்குவதோடு, தீ வைத்து எரித்து வருகிறார்கள். டாக்காவில் உள்ள BTV தொலைக்காட்சியின் தலைமையகத்துக்கு வெளியில் போலீசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. BTV அலுவலகத்தின் வரவேற்பு கட்டிடத்துக்கும் பார்க்கிங்கில் நின்றிருந்த வாகனங்களுக்கும் போராட்டக்காரர்கள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிடத்துக்குள்ளே பலர் சிக்கினர்.
வங்காளதேசத்தின் மத்திய பகுதியில் உள்ள நர்சிங்டி மாவட்டத்தில் உள்ள ஜெயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனை பயன்படுத்தி ஜெயலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட கைதிக்ள தப்பி ஓடிவிட்டனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிகிறது. இதுபோன்று பல்வேறு இடங்களில் நடந்த போராட்டங்கள், கலவரங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது.
போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை காலவரையின்றி மூட அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு நகரங்களில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. தலைநகரில் உள்ள மெட்ரோ நிலையங்கள் சேவையை நிறுத்தியுள்ளன.
போராட்டக்காரகள் மீது ரப்பர் குண்டுகளையும், ஒலியெழுப்பும் கிரைனைடுகளையும் போலீசார் உபயோகித்து வருகின்றனர். போராட்டம் தொடர்வதால் ஆளும் ஷேக் ஹசீனா அரசாங்கத்துக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர அரசு, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் போராட்டத்தை ஒடுக்க ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் வங்காளதேசத்தில் வசிக்கும் 15,000 இந்தியர்களும்பாதுகாப்பாக உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களை கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதால் இந்திய மாணவர்கள் 300 பேர் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர்.
- வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார்.
- தலைநகர் டெல்லி வந்த ஷேக் ஹசீனா இன்று பிரதமர் மோடியை சந்தித்தார்.
புதுடெல்லி:
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார்.
இந்நிலையில், தலைநகர் டெல்லி வந்த ஷேக் ஹசீனா இன்று ஜனாதிபதி மாளிகை சென்றார். அங்கு அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.
அதன்பின், இருநாட்டு உறவு, வர்த்தகம், நீர்வளம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் இரு நாடுகளைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதையடுத்து இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:
இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற வரும் வங்காளதேசத்தினர் எளிதில் விசா பெற இ-மருத்துவ விசா நடைமுறை அமல்படுத்தப்படும்.
வங்காளதேசத்தில் இருந்து இந்திய வழியாக நேபாளத்திற்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இவை இரு நாடுகள் இடையே வளர்ந்து வரும் உறவை எடுத்துக்காட்டுகிறது.
வங்காளதேசத்தின் வடக்கு-மேற்கு பகுதி மக்கள் பலன் பெறும் வகையில் அந்நாட்டின் ரங்பூர் பகுதியில் புதிய இந்திய தூதரகம் திறக்கப்படும்.
இந்தியாவின் பெரிய வளர்ச்சி கூட்டாளியாக வங்கதேசம் உள்ளது. அந்நாட்டுடனான உறவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.
டி20 உலகக் கோப்பையில் இன்று நடைபெறும் இந்தியா-வங்காளதேசம் இடையிலான ஆட்டத்தில் இரு தரப்பிற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இரு நாட்டு உறவை வலுப்படுத்துவதற்காக பிரதமர் மோடி வங்காள தேசத்திற்கு வரவேண்டும் என அழைப்பு விடுக்கிறேன் என தெரிவித்தார்.
- ஷேக் ஹசீனா இந்தியா வருவது இது 2-வது முறையாகும்.
- இரு நாடுகளிடையே கடல் எல்லை உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.
புதுடெல்லி:
அண்டை நாடான வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா 2 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். டெல்லியில் இன்று மாலை அவரை இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் உற்சாகமாக வரவேற்றார்.
இன்று மாலை வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்துப் பேசுகிறார்.
நாளை காலை ஷேக் ஹசீனா பிரதமர் மோடியை சந்திக்கிறார். அப்போது இரு நாட்டு நல்லுறவு குறித்தும், இந்தியா, வங்காளதேசம் இடையே கடல் எல்லை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் விரிவாக விவாதிக்க உள்ளனர். அதன்பின் ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் ஷேக் ஹசீனாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அவர் ஜனாதிபதி திரவுபதி முர்மு, மற்றும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார்.
நாளை மாலை அவர் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வங்காளதேசம் திரும்புகிறார்.
ஷேக் ஹசீனா இந்த மாதத்தில் இந்தியா வருவது இது 2-வது முறையாகும். கடந்த 9-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் அவர் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Bangladesh PM Sheikh Hasina arrives in New Delhi on a State Visit to India
— ANI (@ANI) June 21, 2024
She was received by MoS External Affairs Kirti Vardhan Singh. pic.twitter.com/rMhPMci166
- இந்தியா, வங்காளதேசம் இடையே கடல் எல்லை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் விரிவாக விவாதிக்க உள்ளனர்.
- ஷேக் ஹசீனா இந்தியா வருவது இது 2-வது முறையாகும்.
டாக்கா:
நமது அண்டை நாடான வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா 2 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகிறார்.
டெல்லியில் இன்று மாலை அவரை இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசுகிறார். நாளை காலை ஷேக்ஹசீனா பிரதமர் மோடியை சந்திக்கிறார். அப்போது இரு நாட்டு நல்லுறவு குறித்தும், இந்தியா, வங்காளதேசம் இடையே கடல் எல்லை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் விரிவாக விவாதிக்க உள்ளனர்.
பின்னர் ஷேக் ஹசீனா ஜனாதிபதி மாளிகைக்கு செல்கிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அவர் ஜனாதிபதி திரவுபதி முர்மு, மற்றும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். நாளை மாலை அவர் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வங்காளதேசம் திரும்புகிறார்.
இந்த மாதத்தில் ஷேக் ஹசீனா இந்தியா வருவது இது 2-வது முறையாகும். கடந்த 9-ந்தேதி பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் அவர் பங்கேற்றார்.
- இந்திய பொருட்களை புறக்கணிக்கவும் என எதிர்க்கட்சிகள் பிரசாரம்.
- எதிர்க்கட்சி தலைவர்களின் மனைவிகள் இந்தியாவுக்கு செல்லும்போது சேலை வாங்கி, வங்காளதேசத்தில் விற்பனை செய்தார்கள்.
வங்காள தேசத்தில் இந்திய தயாரிப்பு பொருட்களை புறக்கணியுங்கள் (boycott of Indian products) என்ற எதிர்ப்பு பிரசாரம் தற்போது கிளம்பி வருகிறது. சமூக ஆர்வலர்கள், சமூக வலைத்தளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் (influencers) மட்டும் எதிர்க்கட்சியின் சில தலைவர்கள் இவ்வாறு பிரசாரம் செய்து வருகிறார்கள்.
அவாமி லீக் கட்சியின் தலைவரும், வங்காளதேச பிரதமருமான ஷேக் ஹசீனா இதற்கு கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா கூறியதாவது:-
இந்திய தயாரிப்பு பொருட்களை எதிர்க்க வேண்டும் என சொல்பவர்களுக்கு என்னுடைய ஒரே கேள்வி, எவ்வளவு இந்திய சேலைகள் உங்களுடைய மனைவிகள் வைத்துள்ளார்கள். அந்த சேலைகளை ஏன் உங்கள் மனைவியிடம் இருந்து வாங்கி இன்னும் தீ வைத்து எரிக்காமல் உள்ளீர்கள் என்பதுதான்.
கரம் மசாலா, வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் அனைத்து வாசனை திரவியங்கள் இந்தியாவில் இருந்து வருகிறது. இவைகள் அனைத்தும் வங்காளதேசம் தேசிவாத கட்சி தலைவர்களின் வீட்டின் சமையலறையில் பார்க்கக்கூடாது.
வங்காளதேசம் தேசியவாத கட்சி ஆட்சியில் இருந்தபோது மந்திரிகள் மட்டும் அவர்கள் மனைவியர் இந்தியாவிற்கு சென்றபோது அங்கிருந்து சேலைகளை வாங்கி வங்காள தேசத்தில் விற்பனை செய்தார்கள்.
இவ்வாறு ஷேக் ஹசீனா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
வங்காளதேசத்தின் பொதுத்தேர்தலில் ஷேக் ஹசீனா வெற்றி பெறுவதற்கு துணை செய்ததாகவும், ஷேக் ஹசீனா பிரதமராவதை இந்தியா விரும்புவதாகவும் வங்காளதேச எதிர்க்கட்சி குற்றம் சாட்டின என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பொருட்களை புறக்கணிக்கவும் என்பதை ஊக்குவிக்கும் தொடர்பாக வங்காளதேசம் தேசிவாத கட்சி தலைவர் ருகுல் கபீர் ரிஸ்வி காஷ்மீர் சால்வே-ஐ சாலையில் தூக்கி எறிந்த நிலையில் ஷேக் ஹசீனா இவ்வாறு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
- வாக்குப்பதிவுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
- வாக்குகளை எண்ணும் பணிகளும் துவங்கின.
வங்காளதேச நாட்டில் நேற்று (ஜனவரி 7) பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில் வாக்குப்பதிவுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. வாக்குப்பதிவை தொடர்ந்து வாக்குகளை எண்ணும் பணிகளும் துவங்கின.
வாக்கு எண்ணிக்கையில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 50 சதவீதத்திற்கும் அதிக இடங்களில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். அதன்படி வங்காளதேச நாட்டின் பிரதமராக ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக பதவியேற்க உள்ளார்.
இந்த நிலையில், பிரதமராக பொறுப்பேற்க இருக்கும் ஷேக் ஹசீனாவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில், "தொடர்ந்து நான்காவது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் பிரதமர் ஷேக் ஹசீனாவிடம் பேசி, வாழ்த்து தெரிவித்தேன். தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்காக வங்கதேச மக்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். வங்களாதேசம் மற்றும் அதன் மக்களை மையமாக கொண்ட கூட்டாண்மையை வலுப்படுத்த ஈடுபாடு கொண்டுள்ளோம்," என குறிப்பிட்டுள்ளார்.
Spoke to Prime Minister Sheikh Hasina and congratulated her on her victory for a historic fourth consecutive term in the Parliamentary elections. I also congratulate the people of Bangladesh for the successful conduct of elections. We are committed to further strengthen our…
— Narendra Modi (@narendramodi) January 8, 2024
- தேர்தலை நியாயமான முறையில் நடத்த ஒரு நடுநிலை அரசாங்கத்தை நிறுவ வேண்டும்- எதிர்க்கட்சி
- ஆளும் அவாமி லீ கட்சி தலைமையிலான அரசாங்கம் அதனை ஏற்கவில்லை.
வங்காளதேசம் நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.
தேர்தல் முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோதே ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 50 சதவீத இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இதனால் ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக வங்காளதேச நாட்டின் பிரதமராக பொறுப்பேற்க இருக்கிறார்.
300 இடங்களில் 264 இடங்களுக்கான முடிவு அறிவிக்கப்பட்டபோது ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 204 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அதன் கூட்டணி கட்சியான ஜதியா கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் மொத்தம் 350 தொகுதிகள் உள்ளன. இதில் 50 தொகுதிகளுக்கு அரசாங்கத்தால் பெண் எம்.பி.க்கள் நியமிக்கப்படுவர். எனவே 300 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும். ஆனால் ஒரு வேட்பாளர் மரணம் அடைந்ததால் மீதமுள்ள 299 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
தேர்தலை நியாயமான முறையில் நடத்த ஒரு நடுநிலை அரசாங்கத்தை நிறுவ வேண்டும். அதன் தலைமையில் தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆளும் அவாமி லீ கட்சி தலைமையிலான அரசாங்கம் அதனை ஏற்கவில்லை.
இதனால் பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. மேலும் இந்த தேர்தலை புறக்கணிப்பதாகவும் அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் பிரதமரும், பங்களாதேஷ் தேசியவாத கட்சி தலைவருமான கலீதா ஜியா (வயது 78) வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் வாக்குச்சாவடி மையங்களாக அமைக்கப்பட்ட 5 பள்ளிக்கூடங்களுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்தது.
இந்த பதற்றத்துக்கு மத்தியில் நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. எனவே தேர்தலை அமைதியான முறையில் நடத்த நாடு முழுவதும் போலீசார், ராணுவத்தினர் என சுமார் 7½ லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
- அண்டை நாடான வங்காளதேசத்தில் இன்று பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.
- தேர்தலை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா அறிவித்தார்.
டாக்கா:
அண்டை நாடான வங்காளதேசத்தில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தொடர்ந்து 4-வது முறையாக பிரதமர் ஷேக் ஹசீனா வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி நாடுதழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா அறிவித்தார். மேலும், பொதுத்தேர்தல் நடைபெறும் சூழலில் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் செயலி செயலிழந்துள்ளதாக தகவல் வெளியானது.
இதற்கிடையே, எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு மற்றும் தேர்தல் செயலி செயலிழப்பு ஆகியவற்றுக்கு இடையே பலத்த பாதுகாப்புடன் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தனது வாக்கை இன்று பதிவுசெய்தார். அப்போது பேசிய அவர், இந்த நாட்டில் ஜனநாயகம் தொடர வேண்டும் என தெரிவித்தார்.
- வங்காளதேசத்தில் தீயணைப்பு படையில் முதல் முறையாக பெண்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- இது பாலின பாகுபாட்டை நீக்கும் முக்கிய நடவடிக்கைகளுள் ஒன்று என உள்துறை மந்திரி கூறினார்.
டாக்கா:
உலக அளவில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் அனைத்துத் துறைகளிலும் தடம்பதித்து வருகின்றனர்.
இந்நிலையில், அண்டை நாடான வங்காளதேசத்திலும் தீயணைப்புத் துறையில் பணிபுரிய பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
தலைநகர் டாக்கா அருகே உள்ள புர்பாச்சலில் 15 பெண்கள் தீயணைப்பு வீரர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கு முன்னரும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் பெண்கள் பணிபுரிந்துள்ளனர். ஆனால் தீயணைப்பு வீரர்களாக பெண்கள் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இதுதொடர்பாக அந்த நாட்டின் உள்துறை மந்திரி அசாதுஸ்மான் கான் கமல் கூறுகையில், இது பாலின பாகுபாட்டை நீக்கும் முக்கிய நடவடிக்கைகளுள் ஒன்று என தெரிவித்தார்.
- தூதரக முயற்சிகளின் ஒரு பகுதியாக ஹிம்சாகர் மற்றும் லாங்ரா வகைகளை உள்ளடக்கிய மாம்பழங்கள் மம்தா பானர்ஜிக்கு வங்காளதேச பிரதமர் அனுப்பியுள்ளார்.
- வடகிழக்கு மாநில முதல்-மந்திரிகள் அனைவருக்கும் மாம்பழங்களை ஷேக் ஹசீனா அனுப்பி உள்ளார்.
இந்தியாவின் மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு அண்டை நாடான வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா 600 கிலோ மாம்பழங்களை பரிசாக அனுப்பி உள்ளார். இதுதொடர்பாக வங்காளதேச துணை தூதரக அதிகாரி ஒருவர் கூறும்போது, தூதரக முயற்சிகளின் ஒரு பகுதியாக ஹிம்சாகர் மற்றும் லாங்ரா வகைகளை உள்ளடக்கிய மாம்பழங்கள் மம்தா பானர்ஜிக்கு வங்காளதேச பிரதமர் அனுப்பியுள்ளார். கடந்த ஆண்டும் மாம்பழங்களை அனுப்பி இருந்தோம் என்றார்.
அதேபோல் வடகிழக்கு மாநில முதல்-மந்திரிகள் அனைவருக்கும் மாம்பழங்களை ஷேக் ஹசீனா அனுப்பி உள்ளார்.
கடந்த ஆண்டு பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்காளம், திரிபுரா, அசாம் ஆகிய மாநில முதல்-மந்திரிகளுக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா மாம்பழங்களை அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்