search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 260111"

    • பல் கட்டுவதிலும் கம்ப்யூட்டரின் உதவியுடன் செய்யக்கூடிய நவீன முறைகள் உள்ளன.
    • ஈறு நோய் உள்ளவர்கள் அனைத்து வயதிலும் இருப்பார்கள்.

    மதுரையை சேர்ந்த நளா பல் மருத்துவமனை டாக்டர் ஜெ.கண்ணபெருமான் கூறியதாவது:-

    உடல் ஆரோக்கியத்திற்கும் உள்ளத்தில் தன்னம்பிக்கைக்கும் பற்களின் ஆரோக்கியம் மிக அவசியம். வாய் தான் உடலின் ஆரோக்கியம் காட்டும் கண்ணாடியாக விளங்குகிறது. சர்க்கரை நோய், ரத்தசோகை, வயிறு மற்றும் குடல் பிரச்சினைகள் போன்ற பல உடல் உபாதைகளை வாயின் ஆரோக்கியத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும். அதே போல் உடலுக்கு பற்களின் தேவை பல பரிமாணங்களில் இருக்கும். உணவை நன்றாக சாப்பிடுவதற்கு, தடையின்றி பேசுவதற்கு, அழகாக சிரிப்பதற்கு என பற்களின் பயன்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

    இம்பிளான்ட் நிரந்தர பற்கள்

    இம்பிளான்ட் என்பது டைட்டானியம் என்னும் உலோகத்தால் ஆனது. இது பற்களின் வேர் பகுதிக்கு பதிலாக செயலாற்றக்கூடியது. . இம்பிளான்ட் பொருத்துவதால் மற்ற பற்களுக்கோ உடலுக்கோ எந்த விதமான பக்கவிளைவுகளும் வராது. இம்பிளான்ட் பொருத்தி அதன் மேல் நிரந்தர பற்கள் கட்டுவதன் மூலம் இயற்கை பற்கள் போன்ற பலமான பற்களை பெறலாம்.

    யார் செய்து கொள்ளலாம்?

    இம்பிளான்ட் நிரந்தர பல் கட்டும் சிகிச்சை வயதானவர்களுக்கு தான் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு உண்டு. ஆனால் பல் கட்ட வேண்டிய தேவை எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம்.

    இளம் வயதினருக்கு முக அழகிற்கும் சிரிப்பிற்கும் தேவைப்படும். அலுவலகம் செல்பவர்கள், ஆசிரியர்கள் போன்றோருக்கு சரியாக பேசுவதற்கு தேவைப்படும். வயதானவர்களுக்கு நன்றாக சாப்பிட தேவைப்படும். இதில் எது குறைந்தாலும் வாழ்க்கை முறையில் பல அசவுகரியங்களை சந்திக்க நேரிடும்.

    சொத்தை பற்கள், ஆடும் பற்கள், விளையாடும் பொழுதோ அல்லது கீழே விழுந்தோ உடையும் பற்கள் என பல விதமான சூழ்நிலையில் பல் கட்டும் சிகிச்சை தேவைப்படும். ஈறு நோய் உள்ளவர்கள் அனைத்து வயதிலும் இருப்பார்கள். ஈறு நோயால் வலி வராது. ஆனால் மெதுவாக பரவி பற்களை ஆட செய்து விடும். இது ஒரு சிலருக்கு இளம் வயதிலேயே வரும். மரபு வழியாகவோ அல்லது வாழ்க்கை முறை மற்றும் சரியான கவனிப்பு இல்லாததால் பலருக்கும் ஈறு நோய் மற்றும் பற்களில் பாதிப்பு வருகிறது. எனவே எந்த வயதிலும் பற்களின் தேவை உள்ளவர்கள் இம்பிளான்ட் பற்கள் பொருத்தும் சிகிச்சையை செய்து கொள்ளலாம்.

    பல் பிரச்சினை காரணமாக பல் செட் போட்டுகொண்டு சாப்பிட அவதிப்படுவார்கள், பொது இடங்களில் பேசுவதற்கும் சிரிப்பதற்கும் சங்கடப்படுவார்கள். ஒரு சில பற்கள் முதல் பற்களே இல்லாதவர்கள் என எல்லா தரப்பினரும் எந்த தயக்கமுமின்றி இம்பிளான்ட் நிரந்தர பற்கள் பொருத்தும் சிகிச்சை செய்து கொள்ளலாம்.

    இம்பிளான்ட் சிகிச்சையின் நவீன புரட்சி

    இன்றைய நவீன சிகிச்சை முறையில் ஐரோப்பிய இம்பிளான்ட்கள் மிகவும் முக்கியமானதாகும். எலும்பு தேய்ந்து போனதால் நிரந்தர பல் கட்ட முடியாமல் பல் செட் போடுபவர்களுக்கு அவர்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட இம்பிளான்ட்கள் உள்ளன. சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, இருதய நோய், ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு சிகிச்சை முறையில் சில மாற்றங்களை செய்தால் எந்த தடையுமின்றி இவர்கள் அனைவரும் இம்பிளான்ட் சிகிச்சையின் மூலம் நிரந்தர பற்கள் பெறலாம்.

    பல் கட்டுவதிலும் கம்ப்யூட்டரின் உதவியுடன் செய்யக்கூடிய நவீன முறைகள் உள்ளன. பற்களின் அளவை கம்ப்யூட்டரில் பதிவு செய்தால் நிரந்தர பற்களை நம் வாய்க்கேற்ப துல்லியமாக வடிவமைத்து கொடுத்துவிடும். அதேபோல் கம்ப்யூட்டர் மூலம் வடிவமைக்கப்படும் நிரந்தர பற்கள் செராமிக் மற்றும் ஜிர்க்கோனியா போன்ற அதி நவீன பொருட்களால் செய்யப்படுகின்றன. இவை மிக லேசானதாகவும் அதே சமயம் அதிக பலம் உள்ளதாகவும் இருக்கும். எனவே பல் கட்டிய உணர்வே இல்லாமல் இயற்கை பற்கள் போலவே இருக்கும்.

    இம்பிளான்ட் நிரந்தர பற்கள் பொருத்தியவர்கள் விரும்பியதை சாப்பிட முடியும். மருத்துவரின் பரிந்துரைக்கேற்ப உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்ள முடியும். இதனால் உடலின் ஆரோக்கியம் வெகுவாக முன்னேறும். அதே போல் பேசுவது, சிரிப்பது அனைத்திலும் ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தி ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் ஒன்றிணைந்து வாழ்க்கை தரத்தை உயர்த்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குழந்தையின் பொக்கை வாய்ச் சிரிப்புக்கு மயங்காதவர் யாருமே இருக்க முடியாது.
    • குழந்தையின் பற்களை ஆரம்பத்திலிருந்து பராமரிக்க வேண்டியது அவசியம்.

    தாய்ப்பால் குடிக்கும் பச்சிளம் குழந்தைகளின் பல் பராமரிப்பு பற்றிய சில அத்தியாவசியத் தகவல்கள். ஏன் குழந்தைகளுக்கு பற்கள் முளைக்கும்போதே சொத்தையாக வளர்கிறது என்பதற்கான காரணங்களை தெரிந்து கொள்ளலாம்.

    குழந்தை பால் குடித்து முடித்த ஒவ்வொரு முறையுமே, நம் விரலில் தூய்மையான துணியை சுற்றி குழந்தையின் ஈறுகளை நன்றாக சுத்தம் செய்துவிடவேண்டும்.

    குழந்தைகளுக்கு பால் பற்கள் முளைத்ததும், அவர்களுக்கென இருக்கும் பிரத்தியேக டூத் பிரஷ், பேஸ்ட் கொண்டு தினமும் காலை, இரவு என இரு வேளைகளிலும் பல் துலக்கிவிடவும்.

    பின்னர் பெரியவர்கள் பயன்படுத்தும் டங்க் க்ளீனரை பயன்படுத்தாமல், தூய்மையான துணியாலோ அல்லது குழந்தைக்கு பல் துலக்கப் பயன்படுத்தும் பிரஷ் கொண்டோ நாக்கினை சுத்தம் செய்துவிடலாம்.

    பெரும்பாலான அம்மாகள், இரவு நேரத்தில் பால் புட்டியை வாயில் வைத்தபடியே குழந்தைகளை தூங்க வைப்பார்கள்.

    அதனால் இரவு முழுக்க குழந்தையின் பற்களில் பாலில் இருக்கும் இனிப்பு, பாக்டீரியாக்களுடன் வினைபுரிய வாய்ப்பிருக்கிறது. இச்செயல்பாடு தொடர்ந்தால், சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு பல் சொத்தை உள்ளிட்ட பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்கிறது.

    சிறுவயதில் குழந்தைகளுக்கு பற்களில் பிரச்சனை உண்டானால் நிரந்த பற்கள் முளைக்கும்போது சரியாகிவிடும் என குழந்தைகளின் பல் பராமரிப்பில் பல பெற்றோர்கள் கவனம் செலுத்த மாட்டார்கள்.

    இது முற்றிலும் தவறானது. பால் பற்கள், நிரந்தர பற்களின் சக்தியையும் தாங்கி வளர்கின்றன என்பதால், இதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

    வாயில் விரல் வைத்து சூப்புவது, நாக்கினை இரண்டு பற்களுக்கு இடைபட்ட பகுதியில் அடிக்கடி வைத்துக்கொள்வது போன்ற செயல்பாடுகளை பெரும்பாலான குழந்தைகள் செய்வார்கள். இதனால் அவர்கள் பல் வரிசை சீரற்றதாகவும், முக அமைப்பு மாறவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் பெற்றோர்கள் குழந்தைகளின் இந்த நடவடிக்கைகளை கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

    • குழந்தைகளுக்கு புளூரைடு நிரம்பிய பற்பசையை பயன்படுத்த வேண்டும்.
    • குழந்தைகளின் பற்களை பெற்றோர் சுத்தம் செய்ய வேண்டும்.

    குழந்தைகளுக்கான பற்கள் பாதுகாப்பு குறித்து டாக்டர் வினுசியா பாலாஜி கூறுகையில், குழந்தைகள் பிறந்த 6 மாதங்களில் இருந்து பற்கள் வளர தொடங்கிவிடும். சிறு குழந்தைகளுக்கு விரலில் மாட்டிக்கொண்டு பல் துலக்கும் பிரஸ்(பிங்கர் பிரஸ்) மூலம் பல் துலக்க பழக்கப்படுத்த வேண்டும்.

    குழந்தைகளுக்கு புளூரைடு நிரம்பிய பற்பசையை பயன்படுத்த வேண்டும். தூங்கும் முன்பு பால்குடிக்கும் பழக்கம் உள்ள குழந்தைகள் பல் துலக்கிவிட்டு தூங்க வேண்டும். அவ்வாறு முடியாத பட்சம் ஈர துணியை கொண்டு குழந்தைகளின் பற்களை பெற்றோர் சுத்தம் செய்ய வேண்டும்.

    முடிந்த வரை குழந்தைகளை வாயு நிரப்பட்ட குளிர்பானங்களை குடிக்க வைப்பதை தவிர்க்க வேண்டும். நொறுக்கு தீனிகளான சிப்ஸ் வகைகள், சாக்லேட் உள்ளிட்டவற்றை குறைக்க செய்யலாம். பல் சிகிச்சையை பொறுத்தவரை பெரியவர்களை விட குழந்தைகளுக்கு செய்வது மிகவும் கடினம்.

    எனவே குழந்தைகளுக்கு சொத்து சேர்ப்பதை விட, பற்களில் சொத்தை சேர்க்க விடாமல் பாதுகாக்க வேண்டும்.

    மேற்சொன்ன ஆலோசனைகளை பின்பற்றினால், ஆரோக்கியமான புன்னகை உங்கள் வசம் என்றார்கள்.

    • பற்களின் வேர் வளரும்போது, பற்கள் மேல் புறமாக வளரும்.
    • முடி, நகம் போன்று பற்களும் ஒரு கடினமானத் திசுவாகும்.

    பற்கள் குழந்தைகளுக்கு முளைக்கும் போதெல்லாம் காய்ச்சல் வரும். பற்கள் முளைக்கும்போது குழந்தைகள் கொஞ்சம் அதி தீவிரமாகவும் செயல்படுவார்கள்.

    குழந்தைகள் தாயின் வயிற்றில் கருவாக இருக்கையிலே 6-8வது வாரத்திலேயே பால் பற்கள் தோன்றி விடுகின்றன. கருவில் 14-வது வாரம் நிறைவடையும்போது, ஈறுகளும் பால் பற்களும் குழந்தைகளின் உடலுக்குள் தோன்றிவிடும்.

    தாயின் வயிற்றிலே தோன்றிவிடும் நிரந்தர பற்கள், பின் குழந்தையாக வெளிவந்ததும் 3 அல்லது 6 மாதங்களில் பற்கள் வெளியே முளைத்து வரத் தொடங்குகின்றன. பற்கள் வருவதன் அறிகுறிகள் வாயிலிருந்து உமிழ்நீர் வடிதல் வாயை நரநரவென்று கடித்துக் கொண்டிருத்தல் போன்ற அறிகுறிகள்.

    ஈறின் உள்பகுதியில் உள்ள எம்பிரியானிக் செல்களில் இருந்து பற்கள் தோன்றி, ஈறினைத் துளைத்து வெளிவருகிறது. முடி, நகம் போன்று பற்களும் ஒரு கடினமானத் திசுவாகும். இவை நரம்பு கிளைகளின் வேர்களைப் பிடித்துக் கொண்டு வளருகின்றன. பல் முளைக்கும் நிலையானது 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டு வெளியே வருகின்றன.

    குழந்தை பருவத்தில் ஒவ்வொரு 6 மாத இடைவெளியில், குறைந்தது 4 பற்கள் முளைக்கின்றன. பற்களின் வேர் வளரும்போது, பற்கள் மேல் புறமாக வளரும். 8 மாதம் - 6 வயது வரை, பற்கள் வேகமாக வளருகின்றன. ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளுக்கு பற்கள் விரைவாகத் தோன்றி, விரைவாக வளர்கின்றன.

    • பற்களை பாதுகாத்து பாதுகாப்பான வாழ கற்றுக்கொள்வோம்.
    • பாக்டீரியா என்ற நுண் கிருமிகள் ஈறு நோயை உண்டாக்கும்.

    காரைக்குடி மணீஸ் பல் மருத்துவமனை டாக்டர் மணிகண்டன் விளக்கம்

    பொதுவாக இருதய நோய் உள்ளவர்களுக்கு ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு பெரும் பாதிப்பை தரும். மேலும் பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ளாதவர்களுக்கு பாக்டீரியா என்ற நுண் கிருமிகள் ஈறு நோயை உண்டாக்கும். அதன் மூலம் கிருமிகள் நமது ரத்தக்குழாயில் கலந்து இருதயத்தில் அடைப்பு உண்டாகும்.

    Atherosclerosis இந்த பிரச்சினை உள்ள நிறைய பேருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும் இருதய நோய் உள்ளவர்கள் பல் மருத்துவரை அணுகும் போது இருதய நோய் உள்ளவர்கள் தாங்கள் எடுக்கும் மாத்திரைகள் குறித்த விவரங்களை மருத்துவர்களிடம் தெளிவாக எடுத்து கூற வேண்டும்.

    ஈறுகளில் உள்ள கிருமிகளை உண்டாக்கும் இன்பக்‌ஷன் மூலமாக நமது மூளையில் இருக்கும் செல்கள் பாதித்து நமக்கு ஞாபக மறதி மற்றும் அல்சீமர் போன்ற நோய்களை உண்டாக்கும். இப்படியும் ஆகுமா என பலருக்கும் தெரிவதில்லை. அதனாலேயே பலரும் பல் பிரச்சினையை அலட்சியமாக எடுத்துக்கொள்கின்றனர்.

    நீரழிவு நோய் உள்ள ஒரு சிலருக்கு எவ்வளவு மாத்திரை எடுத்துக்கொண்டாலும், சாப்பாடு திட்டமாக எடுத்துக்கொண்டாலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையவே குறையாது. ஏன் என்றால் அவர்களின் ஈறுகளில் உள்ள கிருமிகள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த விடாது. எனவே நமது பற்களை பாதுகாத்து பாதுகாப்பான வாழ கற்றுக்கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாப்பிட்டவுடன் கண்டிப்பாக வாய் கொப்பளிக்க வேண்டும்.
    • தினமும் இரண்டு வேளை பல் துலக்குவது அவசியம்.

    முகத்திற்கு அழகு சேர்க்கும் விஷயங்களில் பற்களுக்கும் முக்கிய பங்குண்டு. அதை எப்படி பாதுகாப்பது என தெரிந்து கொள்வோமா...?

    குழந்தைப் பருவம் முதலே பற்களை முறையாக சுத்தம் செய்யவேண்டும். தினமும் இரண்டு வேளை பல் துலக்குவது அவசியம். சாப்பிட்டவுடன் கண்டிப்பாக வாய் கொப்பளிக்க வேண்டும். சிலருக்கு சிறு வயதிலேயே பற்கள் நீண்டு வளர்வதால், அவர்களது முக அமைப்பே மாறிவிடுகிறது. இதற்குக் காரணம், குழந்தைப் பருவத்தில் விரல் சூப்புவதே.

    பால் பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் வளரும் பருவத்தில் இந்தப் பழக்கம் தொடரும் பட்சத்தில், பற்கள் நேரான வளர்ச்சிக்கு விரல்கள் இடையூறாக இருக்கின்றன. பற்கள் இயல்பை விட்டு விரல் சூப்பும் நிலைக்கேற்ப நீண்டு வளர ஆரம்பித்து விடுகின்றன. எனவே, 4 வயதுக்கு மேல் குழந்தைகள் இந்தப் பழக்கத்தைத் தொடர அனுமதிக்கக்கூடாது.

    பல் துலக்கும்போது பலரும் தெரியாமலேயே தவறு செய்கிறார்கள். அது, பற்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பல் ஈறுகளுக்கு கொடுக்க மறப்பதுதான்.

    ஈறுகளுக்கும், பற்களுக்கும் இடையில் உள்ள சின்ன இடைவெளிகளில் நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் தங்குவதால்தான் ஈறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க ஈறுகளை எப்படி பாதுகாப்பது என்பதை பல் மருத்துவர்கள் மூலம் அறிந்து, அதை குழந்தைகளுக்குக்கற்றுக் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்தால், பிற்காலத்தில் பல் தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

    • குழந்தைகளை தினமும் இரு வேளைகளிலும் பல் துலக்க வேண்டும் சொல்லித்தர வேண்டும்.
    • சாப்பிட்டதும் குழந்தைகளை வாய் கொப்பளித்துக் கொள்ள பழக்கப்படுத்துங்கள்.

    மழலைகளின் புன்னகை.... அனைவருக்குமே மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுப்பவை. குழந்தைகளின் முத்துப்போன்ற பற்களை பராமரிக்கத் தேவையான ஆலோசனைகளை பார்க்கலாம்...

    * பிறந்த நாளில் இருந்தே குழந்தையின் பல் பராமரிப்பில், பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். பால் பற்கள் முளைத்திராத குழந்தைகள் பால் குடித்து முடித்த ஒவ்வொரு முறையுமே, நம் விரலில் தூய்மையான துணியை சுற்றி குழந்தையின் ஈறுகளை நன்றாக சுத்தம் செய்துவிடவேண்டும்.

    * குழந்தைகளுக்கு பால் பற்கள் முளைத்ததும், அவர்களுக்கென இருக்கும் பிரத்தியேக டூத் பிரஷ், பேஸ்ட்(பற்பசை) கொண்டு தினமும் காலை, இரவு என இரு வேளைகளிலும் பல் துலக்கிவிடவும். பின்னர் பெரியவர்கள் பயன்படுத்தும் டங்க் க்ளீனரை பயன்படுத்தாமல், தூய்மையான துணியாலோ அல்லது குழந்தைக்கு பல் துலக்கப் பயன்படுத்தும் பிரஷ் கொண்டோ நாக்கினை சுத்தம் செய்துவிடலாம்.

    * பெரும்பாலான அம்மாகள், இரவு நேரத்தில் பால் புட்டியை வாயில் வைத்தபடியே குழந்தைகளை தூங்க வைப்பார்கள். அதனால் இரவு முழுக்க குழந்தையின் பற்களில் பாலில் இருக்கும் இனிப்பு, பாக்டீரியாக்களுடன் வினைபுரிய வாய்ப்பிருக்கிறது. இச்செயல்பாடு தொடர்ந்தால், சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு பல் சொத்தை உள்ளிட்ட பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்கிறது. மேலும் அனைவருமே இனிப்பு சார்ந்த எந்த பொருட்களை சாப்பிட்ட பின்னரும் தண்ணீரால் வாயை கொப்பளித்து மற்றும் தண்ணீர் குடிப்பதன் மூலம் இனிப்பானது ஓராளவாவது பற்களில் தங்குவதை தவிர்க்க முடியும்.

    * பால் பல் பிரச்சனை தானே; நிரந்த பற்கள் முளைக்கும்போது சரியாகிவிடும் என குழந்தைகளின் பல் பராமரிப்பில் பல பெற்றோர்களும் போதிய கவனமின்மை மற்றும் விழிப்புணர்வின்மையுடன் இருப்பார்கள். பால் பற்கள், நிரந்தர பற்களின் சக்தியையும் தாங்கி வளர்கின்றன என்பதால், பால் பல் பிரச்சனை நிரந்தர பற்களும் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    * குழந்தைகளின் 7-12 வயதிற்குள் பால் பற்கள் விழுந்து நிரந்தர பற்கள் முளைத்திருக்க வேண்டும். இதில் ஏதாவது பிரச்சனைகள் இருப்பின், கட்டாயமாக பல் மருத்துவரை அணுக வேண்டும்.

    * வாயில் விரல் வைத்து சூப்புவது, நாக்கினை இரண்டு பற்களுக்கு இடைபட்ட பகுதியில் அடிக்கடி வைத்துக்கொள்வது போன்ற செயல்பாடுகளை பெரும்பாலான குழந்தைகள் செய்வார்கள். இதனால் அவர்கள் பல் வரிசை சீரற்றதாகவும், முக அமைப்பு மாறவும் வாய்ப்பிருக்கிறது. குழந்தைகளுக்கு தொடர்ந்து விரல் சூப்பும் பழக்கம் இருந்தால், விரல்களில் வேப்பம் எண்ணெய்யை(Neem Oil) தடவி விடலாம். பல குழந்தைகள் விரலில் தடவிய எண்ணெய்யை துடைத்துவிட்டு, மீண்டும் விரல் சூப்புவார்கள். இப்படி தவிர்க்க முடியாத சூழலில் பல் மருத்துவரை அணுகி, பிரச்சனையை தீர்க்கும் வழிமுறைகளை செய்யலாம்.

    * குழந்தைகளின் தாடை அமைப்பு, பல் வரிசை ஆகியவை சரியாக இருக்கின்றதா என அவ்வபோது கவனிக்க வேண்டும். பல் வரிசை சீரற்ற தன்மையில் இருந்தால் எந்த வயதில் க்ளிப் அணிய வேண்டும், எந்த வகையான க்ளிப் அணிய வேண்டும் என்பது போன்ற விபரங்களை பல் மருத்துவரின் ஆலோசனை பெற்று செய்யலாம்.

    * குழந்தைகளை தினமும் இரு வேளைகளிலும் பல் துலக்க வேண்டும் என சொன்னால், நீ இரண்டு வேளைகளிலும் பல் துலக்குகிறாயா? என நம்மையே எதிர்கேள்வி கேட்பார்கள். ஆக பெற்றோர்களாகிய நாமும் தினமும் இருவேளைகளிலும் பல் துலக்குவதை கட்டாயமாக செய்தால்தான், நாம் சொல்வதை குழந்தைகளும் கேட்பார்கள்.

    * சிறு வயதிலேயே ஐஸ்கிரீம், சாக்லேட், பிஸ்கட் சாப்பிட்டால் பல் பிரச்சனைகள் வரும் என பல பெற்றோர்களும் குழந்தைகளை கண்டிப்புடன் வளர்ப்பதுண்டு. சிறு வயதில் இதுபோன்ற உணவுப் பொருட்களை மகிழ்ச்சியுடன் சாப்பிடுவதை தவிர்க்காமல், கட்டுப்பாடுடன் சாப்பிடச் சொல்லுங்கள். ஆனால், சாப்பிட்டதும் அவர்களாகவே வாய் கொப்பளித்துக் கொள்ள பழக்கப்படுத்துங்கள்.

    * சிறு வயதிலேயே பல் சொத்தை, இடைவிடாத பல் கூச்சமும், பல் வலியும், சீரற்ற பல்வரிசை என எத்தகைய பல் சார்ந்த பிரச்சனைகளாக இருந்தாலும் அருகிலுள்ள மெடிக்கல், பல் சாராத மருத்துவர்களை அணுகி மாத்திரை வாங்கிச் சாப்பிடுவதை தவிர்த்து, பல் மருத்துவரை அணுகி பிரச்சனையை ஆரம்ப கட்டத்திலேயே சரிசெய்து கொள்வது சிறந்தது.

    ×