என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டி20 உலகக் கோப்பை"
- டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறியது.
- இதனால் பாகிஸ்தான் வீரர்கள் சில கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
புளோரிடாவில் உள்ள ஒரு நகரத்தில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃப் தனது மனைவியுடன் பேசியவாறு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற ஒருவர் ஹரிஸ் ராஃப்பை பார்த்து ஏதோ சொல்ல உடனே கோபமடைந்த ராஃப், அந்த நபரை தாக்குவதற்காக செருப்பை கூட கழற்றி விட்டு ஓடினார்.
இதனை பார்த்த அவரது மனைவி ஹரிசை சமாதானம் படுத்த முயற்சித்தார். ஆனால் ஹரிஸ் அந்த நபரிடம் சென்று வார்த்தை போரில் ஈடுப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ஹரிஸ், டிரோல் செய்தவர் ஒரு இந்தியராக இருக்க வேண்டும். என்றும் குறிப்பிட்டு இருந்தார். உடனே அந்த நபர் நான் பாகிஸ்தானை சேர்ந்தவர் என பதிலளித்தார்.
வாக்குவாதம் தொடர்ந்ததால் ரஃப்பின் மனைவி அவரை அமைதிப்படுத்த முயன்றார். ஆனால் ஹரிஸ் அந்த நபருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். இது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறிய பிறகு, பாகிஸ்தான் வீரர்கள் சில கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
- ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பவர் பிளேயில் அதிக ரன்கள் விளாசியுள்ளனர்.
- 91 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அதனை வெஸ்ட் இண்டீஸ் முறியடித்துள்ளது.
செயிண்ட் லூசியா:
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிக்கோலஸ் பூரனின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 218 ரன்கள் குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 104 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி பவர் பிளேயில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. முதல் ஆறு ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 92 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் குவித்தது.
இதன் மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் பவர்பிளேயில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற சாதனையை வெஸ்ட் இண்டீஸ் படைத்துள்ளது.
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் முதல் ஆறு ஓவர்களில் அதிக ரன்கள் அடித்த அணிகள் விவரம்:-
வெஸ்ட் இண்டீஸ் - 92 ரன் (ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, 2024)
நெதர்லாந்து - 91 ரன் (அயர்லாந்துக்கு எதிராக, 2014)
இங்கிலாந்து - 89 ரன் (தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2016)
தென் ஆப்பிரிக்கா - 83 ரன் (இங்கிலாந்துக்கு எதிராக, 2016)
இந்தியா - 82 ரன் (ஸ்காட்லாந்துக்கு எதிராக, 2021)
மேலும் இந்த போட்டியில் நிக்கோளஸ் பூரன் மற்றும் சார்லஸ் இணைந்து ஒரு ஓவரில் 36 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளனர். உமர்சாயின் ஓவரில் 10 எக்ஸ்ட்ராக்கள் (5 வைடுகள், ஒரு நோ-பால் மற்றும் நான்கு லெக்-பைகள்) அடங்கும்.
ஒரே ஓவரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள்:-
36 - யுவராஜ் சிங் (இந்தியா) எதிராக ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து), டர்பன், 2007
36 - கீரன் பொல்லார்ட் (வெஸ்ட் இண்டீஸ்) எதிராக அகிலா தனஞ்சய (இலங்கை), கூலிட்ஜ், 2021
36 - ரோஹித் சர்மா & ரிங்கு சிங் (இந்தியா) எதிராக கரீம் ஜனத் (ஆப்கானிஸ்தான்), பெங்களூரு, 2024
36 - திபேந்திர சிங் ஐரி (நெதர்லாந்து) எதிராக கம்ரன் கான் (குவைத்), அல் அமேரத், 2024
36 - நிக்கோலஸ் பூரன் & ஜான்சன் சார்லஸ் (வெஸ்ட் இண்டீஸ்) எதிராக அஸ்மத்துல்லா ஓமர்சாய் (ஆப்கானிஸ்தான்), செயின்ட் லூசியா, 2024
- நிக்கோலஸ் பூரன் 53 பந்துகளில் 8 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 98 ரன்கள் குவித்தார்.
- கிறிஸ் கெயில்ஸ் 124 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
செயிண்ட் லூசியா:
டி20 உலகக் கோப்பை தொடரின் 40-வது போட்டியில் ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 218 ரன்களை குவித்தது. நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ஆடி 53 பந்துகளில் 8 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 98 ரன்களை குவித்தார்.
அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 114 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 104 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் 8 சிக்சர்களை விளாசியதன் மூலம் நிக்கோலஸ் பூரன் 128 சிக்சர்களை விளாசி அதிக சிக்சர்களை அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக சிக்சர்களை விளாசிய கிறிஸ் கெயிலின் சாதனையை நிக்கோலஸ் பூரன் முறியடித்துள்ளார்.
கிறிஸ் கெயில்ஸ் 124 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
- நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ஆடி 53 பந்துகளில் 98 ரன்களை குவித்தார்.
- 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
டி20 உலகக் கோப்பை தொடரின் 40-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர் பிரெண்டன் கிங் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய ஜான்சன் சார்லஸ் 27 பந்துகளில் 43 ரன்களை சேர்த்தார். அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ஆடி 53 பந்துகளில் 98 ரன்களை குவித்தார்.
இதன் மூலம் அந்த அணியின் ஸ்கோர் அதிகரித்தது. இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷாய் ஹோப் மற்றும் கேப்டன் பொவெல் முறையே 25 மற்றும் 26 ரன்களை அடித்தனர். போட்டி முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்களை குவித்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் குலாப்தின் நயிப் விக்கெட்டுகளையும், ஒமர்சாய் மற்றும் நவீன் உல் ஹக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
கடின இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் குர்பாஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய இப்ராகிம் 38 ரன்களை சேர்த்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால் அந்த அணி ரன் குவிக்க முடியாமல் திணறியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் அபார பந்துவீச்சு காரணமாக ஆப்கானிஸ்தான் அணி 16.2 ஓவர்களில் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஒபெட் மெக்காய் 3 விக்கெட்டுகளையும், அகெயில் ஹொசைன் மற்றும் குடகேஷ் மோட்டி தலா 2 விக்கெட்டுகளையும், ஆண்ட்ரே ரசல் மற்றும் அல்சாரி ஜோசப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
- டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெற்றியுடன் விடைபெற்றது.
- பெர்குசன் டி20 கிரிக்கெட்டில் அபார சாதனை படைத்தார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. இரு அணிகளும் ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறி விட்டன. அந்த வகையில், இந்த போட்டி தொடரில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
சம்பிரதாய அடிப்படையில் நடைபெற்ற இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெற்றியுடன் விடைபெற்றது.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் லாக்கி பெர்குசன் டி20 கிரிக்கெட்டில் அபார சாதனை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் நான்கு ஓவர்கள் பந்துவீசிய பெர்குசன் அவை அனைத்தையும் மெய்டென்களாக (ரன் ஏதும் கொடுக்காமல்) வீசினார். நான்கு ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
முன்னதாக கனடா அணி கேப்டன் சாத் பின் சஃபார் டி20 கிரிக்கெட்டில் தான் வீசிய நான்கு ஓவர்களில் ரன் ஏதும் விட்டுக்கொடுக்காமல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அந்த வகையில், டி20 கிரிக்கெட்டில் நான்கு ஓவர்களையும் மெய்டென்களாக வீசிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெர்குசன் பெற்றிருக்கிறார்.
- பெர்குசன் நான்கு ஓவர்களை மெய்டென்களாக வீசி 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
- டெவான் கான்வே அதிகபட்சமாக 35 ரன்களை எடுத்தார்.
டி20 உலகக் கோப்பை தொடரின் 39-வது போட்டி நேற்றிரவு நடைபெற்றது. மழை காரணமாக இந்த போட்டி தாமதமாக துவங்கியது.இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
பப்புவா நியூ கினியா அணிக்கு துவக்க வீரர்கள் டோனி உரா (1) மற்றும் கேப்டன் அசாத் வாலா (6) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய சார்லெஸ் அமினி மற்றும் சீஸ் பௌ முறையே 17 மற்றும் 12 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இதன் மூலம் அந்த அணி 19.4 ஓவர்களில் வெறும் 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து சார்பில் அபாரமாக பந்துவீசிய பெர்குசன் நான்கு ஓவர்களை மெய்டென்களாக வீசி 3 விக்கெட்டுகளை எடுத்தார். இவர் தவிர டிரெண்ட் பௌல்ட், டிம் சவுதி மற்றும் இஷ் சோதி தலா 2 விக்கெட்டுகளையும், மிட்செல் சாண்ட்னர் 1 விக்கெட் வீழ்த்தினர்.
எளிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 12.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 79 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து சார்பில் டெவான் கான்வே அதிகபட்சமாக 35 ரன்களை எடுத்தார். இதன் மூலம் அந்த அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பப்புவா நியூ கினியா சார்பில் கபுவா மொரி 2 விக்கெட்டுகளையும், செமோ கமியா 1 விக்கெட் வீழ்த்தினர்.
- இரு அணிகளும் தொடரிலிருந்து ஏற்கனவே வெளியேறிவிட்டதால் இந்த ஆட்டம் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
- மழை பெய்வதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
தரோபா:
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 39-வது லீக் ஆட்டத்தில், அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட நியூசிலாந்து அணி, பப்புவா நியூ கினியை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் தொடரிலிருந்து ஏற்கனவே வெளியேறிவிட்டதால் இந்த ஆட்டம் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
இந்நிலையில் அங்கு மழை பெய்வதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மழை நின்றதால் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் இதுவே தனது கடைசி 20 ஓவர் உலகக் கோப்பை என்று அறிவித்து இருப்பதால், அவரை வெற்றியுடன் வழியனுப்ப நியூசிலாந்து அணி தீவிர முனைப்பு காட்டும்.
- இந்திய அணி வீரர்கள் அமெரிக்காவில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் பயணம் மேற்கொண்டனர்.
- ஜூன் 20-ம் தேதி இந்திய அணி தனது முதல் சூப்பர் 8 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியுடன் மோதவுள்ளது.
பர்படாஸ்:
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று நாளை மறுநாள் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் தொடங்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் அமெரிக்காவில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் பயணம் மேற்கொண்டனர்.
இதன்பின் ஓய்வெடுத்த இந்திய அணி வீரர்கள், இன்று பார்படாஸ் பீச்சில் உற்சாகமாக விளையாடியுள்ளனர். இந்திய அணியின் விராட் கோலி, ரிங்கு சிங், அர்ஷ்தீப் சிங், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, சாஹல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கலீல் அஹ்மத், சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதில் ஒரு பக்கம் ரிங்கு சிங் 6 பேக் உடலுடனும் இன்னொரு பக்கம் 8 பேக் உடற்கட்டுடன் விராட் கோலி உற்சாகத்துடன் பீச் வாலிபால் விளையாடி இருக்கிறார். இருவரின் புகைப்படங்களையும் பதிவிட்டு இந்திய வீரர்களின் ஃபிட்னஸை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஜூன் 20-ம் தேதி இந்திய அணி தனது முதல் சூப்பர் 8 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியுடன் மோதவுள்ளது.
- பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி லீக் போட்டியில் பாபர் அசாம் 32 ரன்கள் எடுத்தார்.
- இதன்மூலம் டோனியின் சாதனையை பாபர் முறியடித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 37-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் பாபர் அசாம் 2 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் விளாசினார்.
32 ரன்களைச் சேர்த்ததன் மூலம் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை பாபர் அசாம் படைத்துள்ளார். அதன்படி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கேப்டனாக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற டோனியின் சாதனையை பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் முறியடித்துள்ளார்.
டோனி டி20 உலகக்கோப்பை தொடர்களில் 29 இன்னிங்களில் 529 ரன்களை குவித்ததே சாதனையாக இருந்து வந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் 17 இன்னிங்ஸ்களில் 549 ரன்களை குவித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இப்பட்டியலில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் 19 இன்னிங்ஸ்களில் 527 ரன்களை எடுத்து மூன்றாம் இடத்தில் உள்ளார்.
- கோலியின் ஆட்டத்திறன் குறித்து கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை.
- அவர் ஐ.பி.எல். தொடரில் இருந்தே நன்றாக விளையாடி வருகிறார்.
லாடெர்ஹில்:
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கனடாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டம் மழையால் ரத்தான பிறகு இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், '
இந்த உலகக் கோப்பை போட்டியில் விராட் கோலியின் (3 ஆட்டத்தில் 5 ரன்) பார்ம் குறித்து கேள்வி எழுப்புகிறீர்கள். அவர் நன்றாக ஆடினாலும், இல்லாவிட்டாலும் நான் உங்களை சந்திக்க வரும் போதெல்லாம் அவரை பற்றி நீங்கள் கேட்க தவறுவதில்லை. அது எனக்கு பிடித்திருக்கிறது.
கோலியின் ஆட்டத்திறன் குறித்து கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. அவர் ஐ.பி.எல். தொடரில் இருந்தே நன்றாக விளையாடி வருகிறார். ஓரிரு முறை ஆட்டமிழந்தது, எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. உண்மையில் இது அவரை இன்னும் கூடுதல் வேட்கையுடன் விளையாட தூண்டும். அவர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஆவலில் உள்ளார்.
இவ்வாறு ரத்தோர் கூறினார்.
சூப்பர்8 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் வருகிற 20-ந்தேதி மோத உள்ளது.
- கடைசி லீக் ஆட்டத்தை ஆடுவதற்கு முன்பே பாகிஸ்தான் இந்த தொடரில் இருந்து வெளியேறியது.
- பாகிஸ்தான் 4 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றது.
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் லீக் சுற்றுகள் நாளையுடன் முடியவுள்ளது. இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து அணிகள் வெளியேறியுள்ளது. இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் 4 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றது. கடைசி லீக் ஆட்டத்தை ஆடுவதற்கு முன்பே பாகிஸ்தான் இந்த தொடரில் இருந்து வெளியேறியது. டி20 உலக கோப்பையில் முதல் சுற்றிலேயே பாகிஸ்தான் வெளியேறுவது இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறத் தவறியதற்காக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
எங்களை ஆதரித்ததற்கு மிக்க நன்றி. இந்த மோசமான விளையாட்டுக்காக மன்னிக்கவும். இங்குள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கொஞ்சம் உதவியது. ஆனால் ஒட்டுமொத்தமாக எங்கள் பேட்டிங் கிளிக் செய்யவில்லை என்று நான் நினைக்கிறேன். அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் சில தவறுகளை செய்தோம்.
எப்போதுமே ஒரு அணி தோற்கும் போதும் வெற்றி பெறும் போதும் அணியாகதான் விளையாடுகிறோம். ஆனால் தோல்வி பெறும்போது மட்டும் கேப்டனை கை காட்டுகிறீர்கள். ஒவ்வொரு வீரருக்கு பதிலாகவும் நான் விளையாட முடியாது. அணியில் உள்ள 11 பேரும் ஒன்றாக விளையாடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால்தான் வெற்றி பெற முடியும். எனவே அணி தோற்கும்போது கேப்டன் ஒருவரை மட்டுமே கைகாட்டுவது தவறு
இவ்வாறு பாபர் அசாம் கூறினார்.
- எனக்கு இன்னும் 2 ஆண்டுகள் தொடர்ந்து விளையாட ஆசை தான்.
- 39 வயதான அவர் இதுவரை 15 ஒருநாள், 54 டி20 போட்டியில் விளையாடி மொத்தம் 74 விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார்.
ஆன்டிகுவா:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நமிபியா ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் வெளியேறியது. நமிபியா அணியின் ஆல்-ரவுண்டராக வலம் வந்த டேவிட் வைஸ், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார்.
ஓய்வு குறித்து அவர் கூறியதாவது:-
எனக்கு இன்னும் 2 ஆண்டுகள் தொடர்ந்து விளையாட ஆசை தான். ஆனால் எனது கடைசி ஆட்டத்தை உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதுவும் உலகத்தரம் வாய்ந்த இங்கிலாந்து போன்ற அணிக்கு எதிராக விளையாடியதுடன் நிறைவு செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான நேரம்.
இவ்வாறு டேவிட் வைஸ் குறிப்பிட்டார்.
39 வயதான டேவிட் வைஸ் இதுவரை 15 ஒரு நாள், 54 இருபது ஓவர் போட்டியில் விளையாடி மொத்தம் 74 விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார். தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த டேவிட் வைஸ் முதலில் தங்களது சொந்த நாட்டு அணிக்காக ஆடினார். 2016-ம் ஆண்டில் நமிபியாவுக்கு இடம் பெயர்ந்த அவர் 2021-ம் ஆண்டில் இருந்து நமிபியா அணிக்காக விளையாடி வந்தது நினைவு கூரத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்