search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி20 உலகக் கோப்பை"

    • ஐ.சி.சி. தொடர்களில் ஒவ்வொரு போட்டியிலும் சிறந்து விளங்கும் இந்திய பீல்டருக்கு பி.சி.சி.ஐ. விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
    • இந்தியாவின் சிறந்த பீல்டர் விருதை விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தட்டிச்சென்றார்.

    நியூயார்க்:

    20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நியூயார்க்கில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

    இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 119 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 6 ரன் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரீத் பும்ரா 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பும்ராவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

    இந்நிலையில் ஐ.சி.சி. தொடர்களில் ஒவ்வொரு போட்டியிலும் சிறந்து விளங்கும் இந்திய பீல்டருக்கு பி.சி.சி.ஐ. விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் சிறந்த பீல்டர் விருதை விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தட்டிச்சென்றார்.

    இதையடுத்து அந்த விருதை இந்திய முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி ரிஷப் பண்டுக்கு அணிவித்தார். இது தொடர்பான வீடியோவை பி.சி.சி.ஐ தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    • உலக கோப்பை முழுவதும் பும்ரா இதே மாதிரியான மனநிலையுடன் இருக்க விரும்புகிறேன்.
    • பாகிஸ்தான் அடுத்த ஆட்டத்தில் கனடாவுடன் நாளை மோதுகிறது.

    நியூயார்க்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்து 2- வது வெற்றியை பெற்றது.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் விளையாடிய இந்திய அணி 19 ஓவர்களில் 119 ரன்னில் சுருண்டது.

    ரிஷப் பண்ட் அதிக பட்சமாக 31 பந்தில் 42 ரன்னும் (6 பவுண்டரி), அக் ஷர் படேல் 18 பந்தில் 20 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். நசீம் ஷா, ஹாரிஸ் ரவூப் தலா 3 விக்கெட்டும், முகமது அமீர் 2 விக்கெட்டும், ஷகீன் ஷா அப்ரிடி 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    120 ரன் இலக்கை பாகிஸ்தான் எளிதில் எடுக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சை அந்த அணியால் தாக்கு பிடிக்க முடியவில்லை. பாகிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 113 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முகமது ரிஸ்வான் அதிகபட்சமாக 31 ரன் (1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். ஜஸ்பிரீத் பும்ரா 14 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். அவர் ஆட்ட நாயகனாக தேர்வு பெற்றார். ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், அக் ஷர் படேல் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.


    இந்த வெற்றிக்கு பிறகு பேசிய கேப்டன் ரோகித் சர்மா வேகப்பந்து வீரர் பும்ரா ஒரு மேதை என்று பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    எங்களது பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. பாதி இன்னிங்சுக்கு பிறகு நாங்கள் நல்ல பார்ட்னர் ஷிப்பை அமைக்க தவறி விட்டோம். 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்தோம். ஒவ்வொரு ரன்னும் முக்கியமானது. 140 ரன்கள் வரை எதிர் பார்த்தேன்.

    ஆனால் எங்கள் பந்து வீச்சாளர்கள் மிகவும் அபாரமாக பந்து வீசினார்கள். 119 ரன் என்றாலும் நம்மால் சிறப்பாக செயல்பட முடியும் என்று வீரர்களுக்கு நம்பிக்கை அளித்தேன். நமக்கு நடந்தது போல் அவர்களுக்கும் நடக்கலாம் என்றேன்.

    இந்த உலக கோப்பை முழுவதும் பும்ரா இதே மாதிரியான மனநிலையுடன் இருக்க விரும்புகிறேன். அவரது பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. பந்துவீச்சில் அவர் ஒரு மேதையாவார். இது ஆரம்பரம் மட்டுமே. இன்னும் நீண்ட தூரம் இருக்கிறது.

    ரசிகர்கள் ஆதரவு அமோகமாக இருந்தது. நாங்கள் எங்கு விளையாட சென்றாலும் திரண்டு வந்து ஆதரவை தருகிறார்கள். அவர்கள் வீட்டுக்கு செல்லும் போது பெரிய புன்னகையுடன்தான் செல்வார்கள் என்று உறுதியாக சொல்வேன்.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    20 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற 7-வது (8 ஆட்டம்) வெற்றியாகும்.

    இந்த தொடரில் 2-வது வெற்றி கிடைத்தது. ஏற்கனவே அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. 4 புள்ளியுடன் இருக்கும் இந்திய அணி 3-வது ஆட்டத்தில் அமெரிக்காவை 12-ந்தேதி சந்திக்கிறது.

    பாகிஸ்தான் 2-வது தோல்வியை தழுவியது. ஏற்கனவே அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் தோற்று இருந்தது. இதனால் அந்த அணி வெளியேற்றப் படும் நிலையில் இருக்கிறது. பாகிஸ்தான் அடுத்த ஆட்டத்தில் கனடாவுடன் நாளை மோதுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
    • இந்த விமானத்தை யார் இயக்கினார் என்ற தகவல் இல்லை.

    டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. மழை காரணமாக இந்த போட்டியில் தாமதம் மற்றும் இடையூறு ஏற்பட்ட நிலையில், போட்டியின் போது நடைபெற்ற சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

    இந்த வீடியோவின்படி, சிறிய ரக விமானம் ஒன்றில் "இம்ரான் கானை விடுதலை செய்" என்ற வாசகம் அடங்கிய கொடி கட்டப்பட்டு இருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. போட்டியின் போது இந்த விமானத்தை யார் இயக்கினார்கள், இதன் பின்னணியில் இருப்பது யார் என்பது தொடர்பாக இதுவரை எந்த தகவலும் இல்லை.

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி அமெரிக்காவின் நியூ யார்க்கில் உள்ள நசௌ கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் நடத்துகின்றன.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் உள்ளார்.

    நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 119 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து 120 ரன்களை இலக்காக துரத்திய பாகிஸ்தான் அணி கடைசி ஓவர் வரை போராடி தோல்வியை தழுவியது. இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


    • ரோகித் சர்மா, விராட் கோலி சுமாரான துவக்கத்தையே கொடுத்தனர்.
    • நசீம் ஷா, ஹாரிஸ் ரௌஃப் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி பேட்டிங்கை துவங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி சுமாரான துவக்கத்தையே கொடுத்தனர்.

    இந்த ஜோடி முறையே 13 மற்றும் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியது. அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த் அதிரடியாக ஆடி 31 பந்துகளில் 42 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இவருடன் விளையாடிய அக்சர் படேல் 20 ரன்களை சேர்த்தார்.

     


    இவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக இந்திய அணி 19 ஓவர்களில் 119 ரன்களை மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ரௌஃப் தலா 3 விக்கெட்டுகளையும், முகமது ஆமிர் 2 விக்கெட்டுகளையும், ஷாஹீன் ஷா அப்ரிடி 1 விக்கெட் வீழ்த்தினர்.

    120 ரன்களை வெற்றி இலக்காக துரத்திய பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் 31 ரன்களையும், கேப்டன் பாபர் அசாம் 13 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த உஸ்மான் கான் மற்றும் ஃபகர் சமான் 13 ரன்களை சேர்த்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

     


    இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்தியாசார்பில் சிறப்பாக பந்துவீசிய ஜஸ்பிரீத் பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்சர் படேல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 

    • ஈரமான அவுட்பீல்டு காரணமாக டாஸ் தாமதம் ஏற்பட்டது.
    • இதைத் தொடர்ந்து அரைமணி நேர தாமதத்திற்கு பிறகு டாஸ் போடப்பட்டது.

    இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே ஈரமான அவுட்பீல்டு காரணமாக டாஸ் தாமதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அரைமணி நேர தாமதத்திற்கு பிறகு டாஸ் போடப்பட்டது.

    அப்போது காயின் எங்க என்று கேட்ட ரோகித் சர்மா, டாஸ் காயினை பேண்ட் பாக்கெட்டிற்குள் போட்டு அதனை மறந்து காணாமல் தேடியுள்ளார். அப்போது பாபர் அசாம் பாக்கெட்டில் இருக்கிறது என்று சிரித்து கொண்டார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பவுலிங் தேர்வு செய்தார்.

    இதேபோன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று பிறகு பந்து வீச்சா அல்லது பேட்டிங்கா என்பது குறித்து அந்த நேரத்தில் மறந்து விட்டார். பின்பு சிறிது நேரம் யோசித்து பதில் அளித்து இது தொடர்பான வீடியோ அந்த சமயத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

    • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் உகாண்டா 39 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அபாரமாக பந்துவீசிய அகேல் ஹொசைன் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    கயானா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கயானாவில் இன்று நடைபெற்ற 18-வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், உகாண்டா அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 173 ரன்கள் குவித்தது. ஜான்சன் சார்லஸ் 44 ரன்னும், ரசல் 130 ரன்னும் எடுத்தனர்.

    தொடர்ந்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உகாண்டா அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சியாக அமைந்தது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

    இறுதியில், உகாண்டா அணி 12 ஓவரில் 39 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 134 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் 5 விக்கெட் வீழ்த்திய அகேல் ஹொசைனுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

    • அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டியாக உள்ளது.
    • பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி விளையாடவில்லை.

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்றிரவு நடைபெற இருக்கும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. உலகக் கோப்பை தொடரின் அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றாக இந்தியா-பாகிஸ்தான் அணிகளின் மோதல் இருக்கிறது.

    அந்த வகையில், இன்றைய போட்டிக்கு முன் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஒரு அணியாக அனைவரும் சிறப்பாக பங்காற்ற வேண்டும் என்று தான் நினைப்பதாக தெரிவித்தார்.

    இது குறித்து பேசிய அவர், "போட்டியில் வெற்றி பெற ஒன்றிரண்டு வீரர்களை மட்டும் சார்ந்திருக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். ஒரு அணியாக நான் உள்பட 11 பேரும் பங்காற்ற வேண்டும். அணியில் முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் போட்டியில் முக்கிய பங்காற்ற போகின்றார்கள். ஆனாலும், அனைவரும் அவர்களால் முடிந்த பங்களிப்பை வழங்க வேண்டும்."

    "வங்காளதேசம் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி விளையாடவில்லை. ஆனால் இந்த போட்டிக்கு முன்பு அவர் போதுமான பயிற்சியை எடுத்துக் கொண்டுள்ளார். உலகின் பல்வேறு பகுதிகளிலும், மிக முக்கிய தொடர்களில் விளையாடிய அனுபவம் கொண்டவர் விராட். அந்த அனுபவத்தை எதுவும் வீழ்த்த முடியாது," என்று தெரிவித்தார். 

    • இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
    • மிட்செல் மார்ஷ் 35 ரன்களையும், மேக்ஸ்வெல் 28 ரன்களையும் சேர்த்தனர்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 17-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். இந்த ஜோடி முறையே 34 மற்றும் 39 ரன்களில் ஆட்டமிழந்ததுய அடுத்து வந்த கேப்டன் மிட்செல் மார்ஷ் 35 ரன்களையும், கிளென் மேக்ஸ்வெல் 28 ரன்களையும் சேர்த்தனர்.

    இவர்களை தொடர்ந்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டாயினிஸ் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது. இங்கிலாந்து சார்பில் கிரிஸ் ஜார்டன் 2 விக்கெட்டுகளையும், மொயின் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷித் மற்றும் லியம் லிவிங்ஸ்டன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    202 ரன்களை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் கேப்டன் ஜாஸ் பட்லர் ஜோடி சிறப்பான துவக்கம் கொடுத்தது. இருவரும் முறையே 37 மற்றும் 42 ரன்களை சேர்த்தனர். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் மற்றும் ஜானி பேர்ஸ்டோ தலா 10 மற்றும் 7 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தனர்.

    மொயின் அலி மற்றும் ஹாரி புரூக் முறையே 25 மற்றும் 20 ரன்களை சேர்த்தனர். ஒருபக்கம் ரன்கள் சேர்த்த போதிலும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. இதன் காரணமாக இங்கிலாந்து அணி போட்டி முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • லோகன் வான் பெக் 23 ரன்களை சேர்த்தார்.
    • டேவிட் மில்லர் ரன் கவிப்பில் ஈடுபட்டார்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய நெதர்லாந்து அணி 103 ரன்களை சேர்த்தது. நெதர்லாந்து அணி சார்பில் பொறுமையாக விளையாடிய சிப்ராண்ட் 40 ரன்களை சேர்த்தார். இறுதியில் போராடிய லோகன் வான் பெக் 23 ரன்களை சேர்த்தார்.

    இதைத் தொடர்ந்து எளிய இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் துவக்க வீரர்களான ஹென்ட்ரிக்ஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய குவிண்டன் டி கார் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் மார்க்ரமும் ரன் ஏதும் எடுக்காமல் வந்த வேகத்தில் நடையை கட்டினார்.

    இதையடுத்து ஸ்டப்ஸ் நிதானமாக ஆடி 33 ரன்களை சேர்த்தார். இவருடன் ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் ரன் கவிப்பில் ஈடுபட தென் ஆப்பிரிக்கா அணி 18.5 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை குவித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    போட்டி முடிவில் டேவிட் மில்லர் 59 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். நெதர்லாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய கிங்மா மற்றும் வான் பெக் தலா 2 விக்கெட்டுகளையும், பாஸ் டி லீட் 1 விக்கெட் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய நெதர்லாந்து 103 ரன்களை எடுத்தது.

    நியூயார்க்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நடக்கும் 16-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது. தொடக்கம் முதலே தென் ஆப்பிரிக்கா வீரர்கள் துல்லியமாகப் பந்துவீசினர். இதனால் நெதர்லாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    7-வது விக்கெட்டுக்கு இணைந்த சைப்ரண்ட், வான் பீக் ஜோடி 50 ரன்களுக்கும் மேல் எடுத்தது. அந்த அணியில் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ஒட்னீல் பார்ட்மேன் 4 விக்கெட்டும், மார்கோ ஜான்சன், அன்ரிச் நார்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகிறது.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
    • ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான், பரூக்கி ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    கயானா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. குர்பாஸ் 80 ரன்கள் எடுத்தார்.

    160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 15.2 ஓவரில் 75 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 84 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

    ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான், பரூக்கி ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    இந்நிலையில், வெற்றி பெற்ற பிறகு பேட்டியளித்த ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் கூறியதாவது:

    நியூசிலாந்து போன்ற பெரிய அணிக்கு எதிராக நாங்கள் பெற்ற இந்த வெற்றி மிகவும் சிறப்பானது. எங்களின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். பேட் மற்றும் பந்தில் எங்களின் சிறப்பான செயல் திறன் இது. இப்படிப்பட்ட ஒரு அணியை வழிநடத்த நான் பெருமைப்படுகிறேன்.

    எங்கள் பந்துவீச்சாளர்கள் திறமையைப் பயன்படுத்தி பந்து வீசும் பொழுது எங்களுக்கு எதிராக 160 ரன்களை சேசிங் செய்வது கடினம். நாங்கள் திறமையை சரியாகப் பயன்படுத்தினால் எங்களை வீழ்த்துவது கடினம். வெற்றியோ, தோல்வியோ நாம் செய்ய வேண்டிய விஷயங்களைச் சரியாக செய்யவேண்டும். முடிவைப் பற்றி எப்பொழுதும் கவலைப்படுவது கிடையாது.

    பந்துவீச்சில் எங்களுக்கு பரூக்கி மிகச்சிறந்த தொடக்கத்தை கொடுத்து வருகிறார். இரு போட்டிகளிலும் அவர் பந்து வீசிய விதம் ஆச்சரியமாக இருந்தது. தொடர்ந்து தன்னுடைய பந்துவீச்சில் பணிபுரிந்தால் அவர் இதைவிட இன்னும் திறமையாக வரமுடியும் என தெரிவித்தார்.

    • டி20 உலகக் கோப்பையில் இந்தியா , பாகிஸ்தான் அணிகள் நாளை மோதுகின்றன.
    • இம்முறை இந்தியாவை வீழ்த்துவதற்கு பாகிஸ்தானுக்கு வாய்ப்புள்ளது என்கிறார் கம்ரான் அக்மல்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பரான கம்ரான் அக்மல் தனியார் யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியாவின் பேட்டிங் வரிசை சரியாக இருப்பதாக எனக்கு தெரியவில்லை. விராட் கோலி 3-வது இடத்தில் களமிறங்கினால் அழுத்தத்தை உள்வாங்கி வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பார். அதுவே இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது.

    யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களமிறங்கி, விராட் கோலி 3-வது இடத்தில் வரவேண்டும். விராட் கோலியை இந்தியா தொடக்கமாக களமிறக்கினால் அவர்கள் ஏதோ ஒரு இடத்தில் சிக்கக்கூடும். பொதுவாக விராட் கோலி ஒருபக்கம் நங்கூரமாக நின்று போட்டியை வெற்றிகரமாக முடிக்கக்கூடியவர்.

    எனவே, விராட் கோலியை தொடக்கத்தில் களமிறக்கி இந்தியா மிகப்பெரிய தவறு செய்துள்ளது என நினைக்கிறேன். இந்தியா தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். பும்ரா, சிராஜ் ஆகியோர் நன்றாக பந்து வீசுகின்றனர். ஹர்திக் பாண்ட்யா விக்கெட்டுகளை எடுத்தார். ஒரே மைதானத்தில் அவர்களுக்கு 3 போட்டிகள் நடைபெறுவது கண்டிப்பாக சாதகமாக இருக்கும். இதுபோன்ற போட்டிகளுக்கு ஐ.சி.சி. தரமான மைதானத்தை அமைக்கவேண்டும். இல்லை என்றால் ரசிகர்கள் சென்றுவிடுவார்கள் என தெரிவித்தார்.

    ×