search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி20 உலகக் கோப்பை"

    • ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்த பிறகு இருவரும் டி20-யில் விளையாடவில்லை.
    • அடுத்த ஆண்டு வெஸ்ட்இண்டீஸ், அமெரிக்காவில் நடக்கும் உலகக் கோப்பையில் அவர்கள் இடம் பிடிப்பார்களா? என்பது கேள்வி.

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 3-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் 55 ஆட்டங்களை கொண்டது.

    இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பையில் விராட் கோலி, ரோகித் சர்மா விளையாட வேண்டும் என்று வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் பிரபல வீரர் பிரைன் லாரா விருப்பம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பையில் (50 ஓவர்) இந்திய அணி சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தியது. அபாரமாக விளையாடி முக்கியமான ஆட்டத்தில் தோல்வி ஏற்படுவது சில சமயங்களில் நடக்கும்.

    விராட் கோலி, ரோகித் சர்மா அனுபவம் வாய்ந்த வீரர்கள். அவர்களது அனுபவத்துக்கு மாற்று இல்லை. வெஸ்ட்இண்டீஸ் ஆடுகளங்களை நன்கு அறிந்தவர்கள். சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். இதனால் 20 ஓவர் உலக கோப்பையில் அவர்கள் விளையாட வேண்டும். அவர்களை அணியில் சேர்க்க வேண்டும்.

    இந்தியா எந்த அணியை தேர்வு செய்தாலும் ஒரு வலிமையான சக்தியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதேநேரத்தில் கோலியும், ரோகித் சர்மாவும் ஜாம்பவான்கள். அவர்களை எளிதில் நிராகரித்துவிட இயலாது.

    இவ்வாறு லாரா கூறியுள்ளார்.

    இந்திய அணி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை அரைஇறுதியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்தப் போட்டியில் இருந்து ரோகித் சர்மாவும், விராட் கோலியும் 20 ஓவர் அளவில் இடம் பெறவில்லை.

    ஜெய்ஸ்வால், சுப்மன் கில், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட இளம் வீரர்களை கொண்டு 20 ஓவர் அணி பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

    • இந்திய அணி எளிதாக வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
    • முடிந்தவரை சிறப்பாக விளையாடுவோம் என நெதர்லாந்து கேப்டன் நம்பிக்கை.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை போட்டி தொடரில் தற்போது சூப்பர்12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று ஒரேநாளில் மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன. காலை 8.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

    நண்பகல் 12.30 மணிக்கு தொடங்கும் 2வது போட்டி இந்தியா நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங் மற்றும் பௌலிங்கில் வலுவாக இருக்கும் இந்திய அணி, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியிலும் எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நெதர்லாந்து தனது முதல் போட்டியில் வங்காளதேசத்திடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ், இன்றைய போட்டியில் நாங்கள் வெற்றி பெற மாட்டோம் என்று பெரும்பாலானவர்கள் கருதுவதாகவும், முடிந்தவரை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதே எங்களது நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் மாலை 4.30 மணிக்கு பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 3வது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது.

    • ஆஸ்திரேலியா முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது.
    • இலங்கை அணி முதல் ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    பெர்த்:

    டி20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் சூப்பர் 12 சுற்று ஆட்டம் ஒன்றில் குரூப்1-ல் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதுகின்றன.

    ஆஸ்திரேலியா அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. இதனால் அரைஇறுதிக்கு முன்னேற் இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இலங்கை அணி முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற அந்த அணி முயற்சிக்கும் என்பதால், இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெர்த் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

    • பந்து வீச்சு பலம், பேட்டிங் வரிசை அவர்களின் பலவீனம்.
    • ஷார்ட் பிட்ச் பந்து வீச்சுக்கு எதிராக அவர்களால் சிறப்பாக விளையாட முடியாது.

    டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இன்றைய ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

    இந்த டி20 உலகக் கோப்பையில் உள்ள அனைத்து அணிகளையும்விட, பாகிஸ்தானிடம் சிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர், குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள். ஆஸ்திரேலியாவைப் பார்த்தால், அவர்களிடம் 140 கிமீ வேகத்தில் பந்து வீசக்கூடிய ஒரே ஒரு பந்து வீச்சாளர் மட்டுமே உள்ளனர். இங்கிலாந்தைப் பொறுத்தவரை, மார்க் வுட் மணிக்கு 150 கிமீ வேகத்தில் பந்து வீச முடியும்.

    ஆனால். பாகிஸ்தானுக்காக, ஷாஹின் அப்ரிடி, ஹரிஸ் ரவுப் மற்றும் நசீம் ஷா ஆகியோர் 140 கிமீக்கு மேல் பந்து வீசுவார்கள். வேகப்பந்து வீச்சுதான் அவர்களின் பலம். இருப்பினும், அவர்களின் பேட்டிங் வரிசை அவர்களின் பலவீனம். அவர்களிடம் தரமான பவர்-ஹிட்டர் இல்லை, மேலும் அவர்கள்(பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள்) ஷார்ட் பிட்ச் பந்து வீச்சுக்கு எதிராக அவர்களால் விளையாட முடியாது.

    பாபர் சீக்கிரம் அவுட்டானால், இந்தியா தனது மிடில் ஆர்டர் வேகப்பந்து வீச்சை சிறப்பாக வெளிப்படுத்த முடியும். ஆஸ்திரேலிய மைதானங்கள் பெரியவை, எனவே பவுண்டரி அடிப்பது அவர்களுக்கு எளிதாக இருக்காது. இதுவே பாகிஸ்தானுக்கு பலவீனங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • இந்திய அணி பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்ப்பு
    • இந்திய பேட்ஸ்மேன்களை மிரட்டும் பாகிஸ்தான் பந்து விச்சாளர் ஷகீன்ஷா அப்ரிடி.

    மெல்போர்ன்:

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் சுற்று போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில், சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

    கடந்த மாதம் துபாயில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதற்கு இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுத்து வெற்றியுடன் இந்த தொடரை இந்திய அணி தொடங்கும் என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதுவரை இரு அணிகள் இடையே நடைபெற்றுள்ள 11 டி20 போட்டிகளில் இந்திய அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    இந்திய அணி பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா,வீராட் கோலி, லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இருந்தாலும் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்து வீச்சில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் நல்ல நிலையில் உள்ளனர்.

    எனினும் பாகிஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன்ஷா அப்ரிடி அணிக்கு திரும்பியிருப்பது கூடுதல் பலமாக கருதப்படுகிறது. இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அவர் கடும் சவாலாக இருப்பார். இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது.
    • தேவன் கான்வே அதிரடியாக ஆடி 92 ரன்கள் விளாசினார்

    டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று சூப்பர்-12 சுற்று தொடங்கியது. இதில் இன்று போட்டியை நடத்தும் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்துடன் மோதுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

    துவக்க வீரர்கள் பின் ஆலன், தேவன் கான்வே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி 56 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தது. ஃபின் ஆலன் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய கான்வே அரை சதம் கடந்து ஸ்கோரை உயர்த்தினார். கேப்டன் வில்லியம்சன் 23 ரன், கிளென் பிலிப்ஸ் 12 ரன் சேர்த்தனர்.

    அதன்பின்னர் கான்வேயுடன் நீஷம் இணைய, நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. கான்வே 92 ரன்களுடனும், நீஷம் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது. 

    • 8 அணிகள் கலந்துகொண்ட முதல் சுற்று நேற்றுடன் முடிந்தது.
    • சூப்பர் 12 சுற்றில் விளையாடும் 12 அணிகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

    மெல்போர்ன்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 16-ந் தேதி தொடங்கியது. இதில் 16 நாடுகள் பங்கேற்றன. முதல் சுற்று, சூப்பர் 12 ரவுண்டு என 2 பகுதியாக போட்டியை நடத்த அட்டவணை அமைக்கப்பட்டது.

    தர வரிசை அடிப்படையில் 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 ரவுண்டில் விளை யாடுகின்றன. முதல் சுற்று மூலம் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டன. 8 நாடுகள் கலந்து கொண்ட முதல் சுற்று நேற்றுடன் முடிந்தது.

    இதன் முடிவில் ஏ பிரிவில் இருந்து இலங்கை, நெதர்லாந்தும் , பி பிரிவில் இருந்து ஜிம்பாப்வே, அயர்லாந்தும் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன. 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து , நமீபியா , ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 4 அணிகள் வெளியேற்றப்பட்டன.

    சூப்பர் 12 சுற்று இன்று தொடங்குகிறது. இதில் விளையாடும் 12 நாடுகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

    குருப்-1 பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து , நியூசிலாந்து , ஆப்கானிஸ்தான் , இலங்கை அயர்லாந்து அணிகளும், குரூப்-2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா , வங்காளதேசம், ஜிம்பாப்வே , நெதர்லாந்து அணிகளும் இடம் பெற்று உள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் 2 பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் நாடுகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

    சூப்பர் 12 சுற்றின் இன்றைய தொடக்க ஆட்டங்களில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து, இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் மோதுகின்றன.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை நாளை எதிர்கொள்கிறது. மெல்போர்ன் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.

    இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

    இந்திய அணி கடந்த மாதம் துபாயில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதற்கு நாளைய ஆட்டத்தில் பதிலடி கொடுத்து வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது. இரு அணிகள் இடையே யான 20 ஓவர் போட்டியில் இந்தியாவே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இரு அணிகளும் இதுவரை 11 ஆட்டத்தில் மோதியுள்ளன. இதில் இந்தியா 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி சதவீதம் 68.

    உள்நாட்டில் மட்டுமே சிறப்பாக ஆடுகிறது, வெளி நாடுகளில் கோட்டை விட்டு விடுகிறது என்ற விமர்சனம் இந்திய அணி மீது இருக்கிறது. அதை சரி செய்ய உலக கோப்பையை வெல்ல வேண்டிய நெருக்கடி உள்ளது.

    இந்திய அணியின் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார். அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் வீராட் கோலி, லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.

    பந்து வீச்சில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் நல்ல நிலையில் உள்ளனர். ஆல் ரவுண்டர் வரிசையில் ஹர்திக் பாண்ட்யா சாதிக்கும் ஆர்வத்தில் இருக்கிறார். சமீப காலமாக பந்து வீச்சு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. இதை சரி செய்வது அவசியமாகும். பும்ரா, ஜடேஜா இல்லாதது அணிக்கு பாதிப்பே.

    பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கில் கேப்டன் பாபர் ஆசம், முகமது ரிஸ்வான், பஹர் ஜமான் ஆகியோரும் பந்து வீச்சில் ஹாரிஸ் ரவூப், முகமது நவாஸ் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். வேகப்பந்து வீரர் ஷகீன்ஷா அப்ரிடி திரும்பி இருப்பது அணிக்கு கூடுதல் பலமே.

    இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிக்க வாய்ப்பு உள்ளது. 80 முதல் 90 சதவீதம் வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒரு மில்லி மீட்டர் முதல் 5 மில்லி மீட்டர் வரை மழை பெய்யலாம். இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • இந்த உலகக் கோப்பையில் எங்கள் அணியின் பேட்டிங் செயல்பாடு திருப்தி இல்லை
    • சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறிய அயர்லாந்து அணிக்கு வாழ்த்து தெரிவித்தார் பூரன்.

    டி20 உலகக் கோப்பை முதல் சுற்று லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறுவதற்கான முக்கியமான இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியடைந்தது. இதனால் தொடரில் இருந்து வெளியேறியது. டி20 போட்டிகளில் சிறந்து விளங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த உலகக் கோப்பையில் நிச்சயம் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் சுற்றோடு வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. வீரர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    தோல்வி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கேப்டன் நிகோலஸ் பூரன் பேசும்போது, தனக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவும், ரசிகர்களை ஏமாற்றிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

    'நாங்கள் எங்கள் ரசிகர்களையும் எங்களையும் ஏமாற்றிவிட்டோம். இந்த தோல்வி வேதனை அளிக்கிறது. நான் எனது மோசமான ஆட்டத்தால் சக வீரர்களையும் ஏமாற்றிவிட்டேன். இந்த உலகக் கோப்பையில் எங்கள் அணியின் பேட்டிங் செயல்பாடு திருப்தி இல்லை. பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் 145 ரன்கள் எடுத்தால், அடுத்து அந்த ரன்னுக்குள் எதிரணியை கட்டுப்படுத்துவது பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் கடினமான பணியாகும். அது ஒரு சவாலாகவும் இருக்கும்' என்றார் பூரன்.

    மேலும், சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறிய அயர்லாந்து அணிக்கு வாழ்த்து தெரிவித்த பூரன், அந்த அணி பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டினார். அயர்லாந்திடம் அடைந்த தோல்வி தங்களுக்கு ஒரு கற்றல் அனுபவம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    • முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 3 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் சேர்த்தது.
    • நமீபியா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களே எடுத்தது.

    டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்று குரூப்-ஏ லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நமீபியா அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய துவக்க வீரர் முகமது வாசீம் 50 ரன்கள் விளாசினார். விருத்யா அரவிந்த் 21 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ரிஸ்வான் 43 ரன்களுடனும், பாசில் ஹமீது 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நமீபியா அணி 16 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. துவக்க வீரர்கள் மைக்கேல் 10 ரன்னிலும், ஸ்டீபன் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஜேன் நிகோல் ஒரு ரன், ஜெர்ஹார்டு 16 ரன், ஜேன் பிரைலிங்க் 14 ரன், ஜேஜே ஸ்மித் 3 ரன், ஜேன் கிரீன் 2 ரன் என விரைவில் விக்கெட்டை இழந்தனர்.

    அதேசமயம் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வீஸ், அரை சதம் கடந்து நம்பிக்கை அளித்தார். அவருடன் ரூபன் இணைய அணியின் ரன் ரேட் உயர்ந்தது. 

    ஆட்டத்தின் கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் 3 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், 4வது பந்தில் வீஸ் ஆட்டமிழந்தார். அவர் மொத்தம் 55 ரன்கள் சேர்த்திருந்தார். அவர் ஆட்டமிழந்ததால் ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சாதகமாக திரும்பியது.

    அடுத்த இரண்டு பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்ததால், நமீபியா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களே எடுத்தது. இதனால் ஐக்கிய அரபு அமீரகம் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் உலகக் கோப்பை தொடரில் ஐக்கிய அரபு அமீரகம் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. முகமுது வாசீம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    நமீபியா தோல்வியடைந்ததால்,  சூப்பர்-12 வாய்ப்பினை இழந்தது. குரூப் ஏ பிரிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறி உள்ளன. 

    • ஐக்கிய அரபு அமீரக அணியின் துவக்க வீரர் முகமது வாசீம் 50 ரன்கள் விளாசினார்.
    • நமீபியா அணி 16 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.

    டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நமீபியா அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்று முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய துவக்க வீரர் முகமது வாசீம் 50 ரன்கள் விளாசினார். விருத்யா அரவிந்த் 21 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ரிஸ்வான் 43 ரன்களுடனும், பாசில் ஹமீது 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நமீபியா அணி 16 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. துவக்க வீரர்கள் மைக்கேல் 10 ரன்னிலும், ஸ்டீபன் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் ஜேன் நிகோல், ஜெர்ஹார்டு நிதானமாக விளையாடினர்.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 153 ரன்கள் சேர்த்தது.
    • ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக லூக் ஜாங்வே 29 ரன்கள் அடித்தார்.

    ஹோபர்ட்:

    டி20 உலகக் கோப்பையில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஜான்சன் சார்லஸ் 45 ரன்கள் சேர்த்தார். ஜிம்பாப்வே தரப்பில் சிக்கந்தர் ரசா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    இதையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, வெஸ்ட் இண்டீசின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே அணி, 18.2 ஓவர்களில் 122 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக லூக் ஜாங்வே 29 ரன்கள் அடித்தார். வெஸ்லி 27 ரன்கள் சேர்த்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    • முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 6 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது.
    • இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 23-ந் தேதி பாகிஸ்தானை எதிர் கொள்கிறது.

    பிரிஸ்பேன்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி குரூப் 2 பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வரும் 23-ந் தேதி பாகிஸ்தானை எதிர் கொள்கிறது.

    அதற்கு முன்னதாக இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. நேற்றைய முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 6 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது.

    2-வது பயிற்சி ஆட்டம் பிரிஸ்பேன் மைதானத்தில் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் நியூலாந்து அணியுடன் இந்திய அணி மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி நம்பிக்கையுடன் விளையாட முடியும் என கருதப்படுகிறது.

    முன்னதாக குரூப்-1 பிரிவில் இடம் பெற்றுள்ள நியூசிலாந்து அணி முதல் பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. நாளை நடைபெறும் மற்ற பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

    ×