search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா ஆஸ்திரேலியா தொடர்"

    • இந்திய சுற்றுப் பயணத்துக்கு செல்லும் ஆஸ்திரேலிய அணி நல்ல நிலையில் உள்ளது.
    • அடுத்த இரண்டு மாதங்களில் நிறைய நல்ல கிரிக்கெட்டை பார்க்கலாம் என மிட்செல் ஸ்டார்க் கூறினார்.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது.

    இந்த நிலையில் கைவிரல் காயம் காரணமாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இருந்து விலகி உள்ளார்.

    விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வருவதால் இந்தியாவுக்கு எதிரான தொடக்க டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறும் போது இந்திய சுற்றுப் பயணத்துக்கு செல்லும் ஆஸ்திரேலிய அணி நல்ல நிலையில் உள்ளது. இந்தியாவில் நீண்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறோம். அடுத்த இரண்டு மாதங்களில் நிறைய நல்ல கிரிக்கெட்டை பார்க்கலாம் என்றார்.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
    • இந்த தொடரில் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இணைந்துள்ளனர்.

    மும்பை:

    ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் (பிப். 9, பிப். 17, மார்ச் 1, மார்ச் 9) மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் (மார்ச் 17, மார்ச் 19, மார்ச் 22) விளையாடுகிறது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி விவரம் வருமாறு:

    ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மான் கில், சிதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயஸ் அய்யர், கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஆர்.அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், சூர்யகுமார் யாதவ்

    • இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் பிப்ரவரி 9-ந்தேதி தொடங்குகிறது.
    • ஸ்டார்க் முதல் டெஸ்டில் ஆடவில்லை.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (பிப்ரவரி) இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் பிப்ரவரி 9-ந்தேதி தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் டெல்லியிலும் (பிப் 17-21) 3-வது டெஸ்ட் தர்மசாலாவிலும் (மார்ச் 1-5), 4-வது டெஸ்ட் அகமதாபாத்திலும் (மார்ச் 9-13) நடக்கிறது.

    அதை தொடர்ந்து ஒருநாள் போட்டிகள் மார்ச் 17, 19 மற்றும் 22-ந்தேதிகளில் முறையே மும்பை, விசாகப்பட்டணம், சென்னை ஆகிய இடங்களில் நடக்கிறது.

    இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

    ஆஸ்திரேலிய தேர்வு குழு இந்திய தொடருக்கு 4 சுழற்பந்து வீரர்களை தேர்வு செய்து உள்ளது. நாதன் லயன், ஆஸ்டன் ஆகர், டோட்மர்பி, மிச்சேல் சுவப்சன் ஆகிய 4 சுழற்பந்து வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதமாக இருக்கும் என்பதால் அதற்கு ஏற்ற வகையில் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. பீட்டர் ஹேன்ட்ஸ் காம்ப் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது ஆச்சரியமானதாகும். அதே நேரத்தில் 2-வது சிறப்பு விக்கெட் கீப்பர் இடம் பெறவில்லை.

    வேகப்பந்து வீரர் ஸ்டார்க் முதல் டெஸ்டில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்திய தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி வருமாறு:-

    கம்மின்ஸ் (கேப்டன்), வார்னர், உஸ்மான் கவாஜா, லபுஷேன், டிரெவிஸ் ஹெட், மேட் ரென்ஷா, ஹேண்டஸ்கம், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஆஸ்ட்ன ஆசுர், நாதன்லயன், மிக்சேல் சுவெப்சன், மர்பி, ஸ்டார்க், ஹாசல்வுட், ஸ்காட் போலந்து, லான்ஸ் மேரிஸ்.

    • ஆஸ்திரேலிய அணி பிப்ரவரி மாதம் இந்தியா வந்து 4 டெஸ்டிலும், 3 ஒருநாள் போட்டியிலும் ஆடுகிறது.
    • அவர் ஏதாவது 2 டெஸ்ட்டில் விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மும்பை:

    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் ஜஸ்பிரித் பும்ரா.

    30 டெஸ்டில் 128 விக்கெட்டும், 72 ஒருநாள் ஆட்டத்தில் 121 விக்கெட்டும், 60 இருபது ஓவர் போட்டியில் 70 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளார்.

    29 வயதான பும்ரா காயத்தால் சர்வதேச போட்டியில் தொடர்ந்து ஆட முடியாத நிலையில் உள்ளார். அவர் கடைசியாக டெஸ்ட், ஒரு நாள் போட்டியில் ஜூலை மாதமும், 20 ஓவரில் செப்டம்பர் மாதமும் விளையாடி இருந்தார்.

    காயத்தில் இருந்து முழு குணம் அடைந்ததால் இலங்கைக்கு எதிராக இன்று தொடங்கும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம் பெற்று இருந்தார். இந்த நிலையில் முதுகுப் பகுதியில் தொடர்ந்து பிடிப்பு இருப்பதால் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பும்ரா விலகியுள்ளார்.

    இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் விளையாடுவது சந்தேகம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கு நுழைய இந்தியாவுக்கு இந்த தொடர் முக்கியமானது. பும்ரா இல்லாமல் போனால் பாதிப்பு இருக்கும்.

    இதனால் அவர் ஏதாவது 2 டெஸ்ட்டில் விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆஸ்திரேலிய அணி பிப்ரவரி மாதம் இந்தியா வந்து 4 டெஸ்டிலும், 3 ஒருநாள் போட்டியிலும் ஆடுகிறது. முதல் டெஸ்ட் நாக்பூரில் 9-ந்தேதி தொடங்குகிறது. மார்ச் 13-ந்தேதி டெஸ்ட் தொடர் முடிகிறது. அதன்பிறகு ஒருநாள் தொடர் மார்ச் 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது. 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் நடக்கிறது.

    • இந்தியாவில் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்கள் இருக்கும் என்பதால் அத்தொடரில் நிச்சயமாக இடது கை ஸ்பின்னர் ஆஸ்டன் அகர் இருப்பார்.
    • கடந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் விளையாடிய அனுபவத்தைப் பெற்றிருப்பது இந்தியாவுக்கு நல்ல சவாலை கொடுப்பதற்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

    தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்ற ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் தொடரை 2 - 0 (3) என்ற கணக்கில் வென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. சொல்லப்போனால் வரும் ஜூன் மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பைனலுக்கு முதல் அணியாக தகுதி பெறும் வாய்ப்பை ஆஸ்திரேலியா 90% உறுதி செய்துள்ளது.

    இந்நிலையில் தென்னாபிரிக்காவை தோற்கடித்த புத்துணர்ச்சியுடன் உள்ள ஆஸ்திரேலியா இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற முயற்சிக்கவுள்ளது.

    சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான அணியாக திகழும் இந்தியா 2012-க்குப்பின் கடந்த 10 வருடங்களாக எந்த அணிக்கு எதிராகவும் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்றதில்லை.

    இந்நிலையில் கடந்த வருடம் பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகளில் விளையாடிய அனுபவம் தற்போதுள்ள ஃபார்ம் ஆகியவற்றை பயன்படுத்தி இம்முறை நிச்சயமாக இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்போம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

    இது பற்றி அத்தொடரில் வென்ற பின் அவர் பேசியது பின்வருமாறு:-

    நாம் எப்போதும் இருக்கப் போவதைப் போலவே எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன். இந்த கோடைகாலம் நமக்கு அற்புதமாகவே அமைந்தது. மேலும் இந்த வெற்றியால் நாங்கள் சூழ்நிலைக்கு உட்படுத்திக் கொள்ளும் திறமையை பெற்றுள்ளோம் என்று உணர்கிறேன்.

    அத்துடன் கடந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் விளையாடிய அனுபவத்தைப் பெற்றிருப்பது உண்மையிலேயே இந்தியாவுக்கு நல்ல சவாலை கொடுப்பதற்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அங்கு நாங்கள் ஒண்ணும் கண்ணை மூடிக்கொண்டு போகப் போவதில்லை. குறிப்பாக அடுத்த 12 மாதங்களில் எப்படி விளையாட பார்க்கிறோம் என்பதை பிரதிபலிக்க அடுத்த சில வாரங்களில் தேவையான முடிவுகளையும் புத்துணர்ச்சிகளையும் எடுக்க உள்ளோம்.

    மேலும் இந்தியாவில் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்கள் இருக்கும் என்பதால் அத்தொடரில் நிச்சயமாக இடது கை ஸ்பின்னர் ஆஸ்டன் அகர் இருப்பார். அவரை மேற்கொண்டும் சோதித்து பார்க்க விரும்பவில்லை. ஏனெனில் இத்தொடரில் 800 ரன்கள் அடித்த போதும் அவர் சிறப்பாக பந்து வீசினார்.

    அவரைப் போன்றவருக்கு அது எளிதல்ல என்றாலும் அவர் தன்னுடைய வேலையில் சிறப்பாக செயல்பட்டார். மேலும் அங்கு (இந்தியாவில்) மைதானங்கள் சற்று வெடிப்பாகவும் மற்றும் அதிகமாக சுழலும் என்று நம்புகிறேன். அதே சமயம் இந்தியாவில் எப்படி இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்காத பிட்ச்களும் இருக்க வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரையும் கைப்பற்றுவோம் என டேவிட் வார்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    • இந்தியாவில் நாக்பூர், டெல்லி, தர்மசாலா மைதானங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை.

    பிப்ரவரியில் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

    தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் மற்றும் 2-வது டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது. இதையடுத்து 3-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 4ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதன்பின்னர் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.

    2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் இரட்டை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். நீண்ட நாட்களாக தடுமாறி வந்த அவர், மீண்டும் ஃபார்மிற்கு வந்திருப்பதால் ஆஸ்திரேலிய அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிப்ரவரியில் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

    இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரையும் கைப்பற்றுவோம் என டேவிட் வார்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் நாக்பூர், டெல்லி, தர்மசாலா மைதானங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. இந்த மைதானங்களில் நாங்கள் ஏற்கனவே விளையாடி இருக்கிறோம்.

    இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் மிகுந்த சவாலாக இருக்கும். இருப்பினும் இந்த தொடரை நாங்கள் போராடி வெல்வோம். தற்போது பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் ஆஸ்திரேலிய அணி நல்ல ஃபார்மில் உள்ளது. நாதன் லயன் போன்ற உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள் எங்களிடம் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் தரவரிசை பட்டியல் இன்று அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதன்படி 78.57 வெற்றி சதவீதத்துடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் 58.93 வெற்றி சதவீதத்துடன் இந்திய அணி 2ஆம் இடத்தை பிடித்துள்ளது.

    3-ம் இடத்தில் 53.33 சதவீதத்துடன் இலங்கை அணியும், 50 வெற்றி சதவீதத்துடன் தென்னாப்பிரிக்கா 4ஆம் இடத்திலும் உள்ளன.

    இதற்கு அடுத்தடுத்த இடங்களில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேச அணிகள் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

    முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணி இறுதிப்போட்டியில் பங்கேற்கும். அந்த வகையில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் இறுதி போட்டியில் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 196 ரன்களை குவித்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 142 ரன்களில் சுருண்டது.

    மும்பை:

    இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா பெண்கள் அணி நிர்ணயிக்கப்பட்ட20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. கார்ட்னர் 32 பந்தில் 66 ரன்னும், கிரேஸ் ஹாரிஸ் 35 பந்தில் 64 ரன்னும் குவித்தனர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 129 ரன்கள் சேர்த்து அசத்தியது.

    இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய பெண்கள் அணி களமிறங்கியது. தீப்தி ஷர்மா மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 53 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், இந்திய அணி 20 ஓவரில் 142 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் டி20 தொடரை 4-1 என கைப்பற்றியது.

    ஆஸ்திரேலியாவின் ஹீதர் கிரஹாம் ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகி மற்றும் தொடர் நாயகி விருது அஷீக் கார்ட்னருக்கு வழங்கப்பட்டது.

    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 187 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா கடைசி ஓவரில் 187 ரன் எடுத்ததால் சமனில் முடிந்தது.

    மும்பை:

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, அலிசா ஹீலி தலைமையிலான உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    மும்பையில் நடந்த முதல் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது.

    இந்நிலையில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை மூனி 82 ரன்னும், மெக்ராத் 70 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடினார். அவர் 49 பந்துகளில் 4 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    மற்றொரு தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 34 ரன்னும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 21 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் ரிச்சா கோஷ் 13 பந்தில் 3 சிக்சர் உள்பட 26 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் உள்ளார்.

    கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்தியா 13 ரன்களை எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.

    இதையடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது. முதலில் ஆடிய இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 2 சிக்சர் உள்பட 20 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 16 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது. இதன்மூலம் இந்திய அணி டி20 தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.

    • முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 90 ரன் அடித்தது.
    • ஆடுகளம் ஈரப்பதம் காரணமாக போட்டி நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது.

    நாக்பூர்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. மொகாலியில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

    இரு அணிகளுக்கும் இடையே 2-வது டி20 போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற்றது. நேற்று பெய்த கனமழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் போட்டி நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. இறுதியாக 8 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது. இதை தொடர்ந்து டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 8 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 90 ரன் அடித்தது. 


    கேப்டன் ஆரன் பிஞ்ச் 31 ரன் அடித்தார். அதிகபட்சமாக மேத்யூ வாட் 43 ரன் குவித்து களத்தில் இருந்தார். இந்தியா தரப்பில் அக்சர் படேல் 2 விக்கெட்களையும், பும்ரா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். பின்னர் 91 ரன் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் 10 ரன்னுக்கு வெளியேறினார். சிறப்பாக விளைடியாக கேப்டன் ரோகித் சர்மா 46 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.

    விராத் கோலி 11 ரன்னும், பாண்ட்யா 9 ரன்னும் எடுத்தனர். தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 10 ரன் அடித்தார். 7.2 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 92 ரன் குவித்த இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 1-1 என்ற சமன் நிலையில் உள்ளது.

    • மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஐதராபாத்தில் வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது.
    • ஐதராபாத் ஜிம்கானா மைதானத்தில் காலை முதலே ரசிகர்கள் குவியத் தொடங்கினர்.

    ஐதராபாத்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 2வது போட்டி நாக்பூரில் நாளை நடைபெறுகிறது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஐதராபாத்தில் வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் இன்று முதல் விற்பனை செய்யப்படுகின்றன.

    டிக்கெட்டுகளை வாங்குவதற்காக ஐதராபாத் ஜிம்கானா மைதானத்தில் காலை முதலே ரசிகர்கள் குவியத் தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றது. ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி ரசிகர்களை ஒழுங்குபடுத்தினர். இதில் சில ரசிகர்களுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • ஒவ்வொரு ஆட்டத்திலும் 200 ரன்களை குவிக்க முடியாது.
    • 208 என்பது மிகவும் நல்ல ஸ்கோராகும். இதை பந்து வீச்சாளர்கள் தக்க வைக்க தவறி விட்டனர்.

    மொகாலி:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

    மொகாலியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன் குவித்தது.

    ஹர்திக் பாண்ட்யா 30 பந்தில் 71 ரன்னும் (7 பவுண்டரி, 5 சிக்சர்), லோகேஷ் ராகுல் 35 பந்தில் 55 ரன்னும் ( 4 பவுண்டரி , 3 சிக்சர்), சூர்யகுமார் யாதவ் 25 பந்தில் 46 ரன்னும் ( 2 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். நாதன் எல்லீஸ் 3 விக்கெட்டும் , ஹாசல்வுட் 2 விக்கெட்டும் , கேமரூன் கிரீன் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 4 பந்து எஞ்சி இருந்த நிலையில் 209 ரன் இலக்கை எடுத்து சாதித்தது. அந்த அணி 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தொடக்க வீரர் கேமரூன் கிரீன் 30 பந்தில் 61 ரன்னும் ( 8 பவுண்டரி , 4 சிக்சர் ), மேத்யூ வேட் 21 பந்தில் 45 ரன்னும் ( 6 பவுண்டரி, 2 சிக்சர்), ஸ்டீவ் சுமித் 24 பந்தில் 35 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

    அக்‌ஷர் படேல் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், யுசுவேந்திர சாஹல் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    இந்திய அணி 208 ரன் குவித்தும் தோற்றது பரிதாபமே. பந்து வீச்சு அந்த அளவுக்கு மோசமாக இருந்தது. பீல்டிங்கிலும் பல கேட்ச்களை தவற விட்டனர். தோல்விக்கு பிறகு பேசிய ரோகித் சர்மா பந்து வீச்சாளர்களை கடுமையாக சாடினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    208 என்பது மிகவும் நல்ல ஸ்கோராகும். இதை பந்து வீச்சாளர்கள் தக்க வைக்க தவறி விட்டனர். நாங்கள் நன்றாக பந்து வீசவில்லை. பேட்ஸ்மேன்கள் நல்ல முயற்சி எடுத்து 200 ரன்னுக்கு கொண்டு வந்தனர். பந்து வீச்சாளர்கள் நேர்த்தியுடன் பந்து வீசவில்லை.

    ஒவ்வொரு ஆட்டத்திலும் 200 ரன்களை குவிக்க முடியாது. ஹர்திக் பாண்ட்யாவின் பேட்டிங் அதிரடியாக இருந்தது. ஸ்கோரை உயர்ந்த நிலைக்கு எடுத்து சென்றார். அடுத்த ஆட்டத்துக்குள் பந்து வீச்சு குறித்து கவனம் செலுத்தியாக வேண்டும்.

    20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு நாம் பார்க்க வேண்டிய விஷயங்கள் உள்ளன. என்ன தவறு நடந்தது என்பதை புரிந்து கொள்வது எங்களுக்கு சிறந்த விளையாட்டாக இருந்தது.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    கடைசி கட்ட ஓவர்களில் (டெத் ஓவர்) சிறப்பாக வீசக்கூடிய புவனேஷ்வர் குமார், ஹர்சல் படேல் மற்றும் சாஹல் நேற்று மோசமாக வீசி ரன்களை அள்ளிக்கொடுத்தனர்.

    புவனேஷ்வர் குமார் 4 ஓவரில் 52 ரன்னும், ஹர்சல் படேல் 4 ஓவரில் 49 ரன்னும், சாஹல் 3.2 ஓவரில் 42 ரன்னும் விட்டுக் கொடுத்தனர்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் வருகிற 23-ந்தேதி நடக்கிறது.

    • இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 71 ரன்கள் குவித்தார்.
    • பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்ட கேமரான் கிரீன் 30 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார்.

    மொகாலி:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 6 விக்கெட் இழப்பிறகு 208 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 71 ரன்கள் குவித்தார். கே.எல்.ராகுல் 55 ரன்களும், சூரியகுமார் யாதவ் 46 ரன்களும் அடித்தனர்.

    இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் 22 ரன்களில் வெளியேறிய நிலையில், கேமரான் கிரீன் - ஸ்டீவன் ஸ்மித் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்ட கேமரான் கிரீன் 61 ரன்கள் விளாசினார். ஸ்மித் 35 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஜோஸ் இங்லிஸ் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    பரபரப்பான கடைசி கட்டத்தில், டிம் டேவிட், மேத்யூ வேட் இருவரும் அதிரடியாக ஆடி ஆஸ்திரேலியாவின் வெற்றியை உறுதி செய்தனர். டிம் டேவிட் 18 ரன்களும், மேத்யூ வேட் 45 ரன்களும் விளாச, ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டி கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி 23ம் தேதி நடக்கிறது. 

    ×