search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் ஆசிய கோப்பை"

    • நடப்பு தொடரில் இருந்து ஷ்ரேயங்கா பாட்டீல் காயம் காரணமாக விலகினார்.
    • அவருக்கு பதிலாக தனுஜா கன்வர் மாற்று வீராங்கனையாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    கொழும்பு:

    மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. இதில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 19.2 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய இந்திய அணி 14.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 109 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனையான ஷ்ரேயங்கா பாட்டீல் நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியானது.

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இடது கை விரலில் ஏற்பட்ட காயத்தால் அவர் எஞ்சிய ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவருக்கு பதிலாக தனுஜா கன்வர் மாற்று வீராங்கனையாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    • டாஸ் வென்ற யு.ஏ.இ. அணி பந்துவீசுவதாக அறிவித்தது.
    • அதன்படி முதலில் ஆடிய இந்தியா 201 ரன்களைக் குவித்தது.

    தம்புல்லா:

    9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகமும், 'பி' பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்தும் இடம் பிடித்துள்ளன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதில் இந்திய நேரப்படி இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்தியா, யு.ஏ.இ அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற யு.ஏ.இ. அணி பந்து வீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஷபாலி வர்மா, ஸ்மிர்தி மந்தனா தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    மந்தனா 13 ரன்னிலும், ஹேமலதா 2 ரன்னிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 14 ரன்னிலும் அவுட்டாகினர். ஷபாலி வர்மா 37 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    5-வது விக்கெட்டுக்கு இணைந்த ஹர்மன்பிரித் கவுர், ரிச்சா கோஷ் ஜோடி அதிரடியாக ஆடியது. ஹர்மன்பிரித் அரை சதம் கடந்தார்.

    இந்த ஜோடி 75 ரன் சேர்த்த நிலையில் கவுர் 66 ரன்னில் வெளியேறினார்.

    கடைசி ஓவரில் ரிச்சா கோஷ் 5 பவுண்டரிகள் விளாசியதுடன் அரை சதம் கடந்தார்.

    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 201 ரன்களைக் குவித்தது. ரிச்சா கோஷ் 64 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யு.ஏ.இ. அணி களமிறங்குகிறது.

    • வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
    • இலங்கையின் பிரபோதானி, பிரியதர்ஷினி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

    மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    வங்காளதேசம் அணியின் துவக்க வீராங்கனை திலாரா அக்தர் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய மற்றொரு துவக்க வீராங்கனை இஷ்மா, இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ருபாயா ஹைடர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

    அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில், களமிறங்கிய கேப்டன் நிகர் சுல்தானா பொறுமையாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினார். இவரும் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் வங்காளதேசம் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களை மட்டமே சேர்த்தது.

     


    இலங்கை சார்பில் சிறப்பாக பந்துவீசிய பிரபோதானி மற்றும் பிரியதர்ஷினி தலா 2 விக்கெட்டுகளையும் சுகந்திகா குமாரி, கவிஷா தில்ஹாரி மற்றும் சமாரி அட்டப்பட்டு தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    112 எனும் எளிய இலக்கை துரத்திய இலங்கை அணி துவக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. துவக்க வீராங்கனையான விஷ்மி குனரத்ன 51 ரன்களை குவித்தார்.

    இவருடன் களமிறங்கிய கேப்டன் சமாரி அட்டப்பட்டு 12 ரன்களையும் அடுத்து வந்த கவிஷா தில்ஹாரி 12 ரன்களையும் சேர்த்தனர். ஹர்ஷிதா சமரவிக்ரம 33 ரன்களை குவிக்க, இலங்கை அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ரன்களை குவித்தது. இதன் மூலம் இலங்கை அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • இது தொடர்பான வீடியோவை இலங்கை அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
    • அந்த வீடியோவில் சிறுமியின் தாயார் ஸ்மிருதி மந்தனாக்கு நன்றி கூறுகிறார்.

    9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 2வது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.2 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பின்னர் களமிறங்கிய இந்திய அணி 14.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 109 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    போட்டி முடிந்த பிறகு, மாற்றுத்திறனாளி சிறுமியை இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனா சந்தித்துப் பேசினார். அப்போது அவருக்கு ஒரு மொபைல்போனை அவர் பரிசாக வழங்கினார்.

    இது தொடர்பான வீடியோவை இலங்கை அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் சிறுமியின் தாயார் ஸ்மிருதி மந்தனாக்கு நன்றி கூறுகிறார்.

    • முதலில் ஆடிய தாய்லாந்து 133 ரன் எடுத்தது.
    • அடுத்து ஆடிய மலேசியா 111 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    தம்புல்லா:

    9-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் பி பிரிவு ஆட்டத்தில் தாய்லாந்து, மலேசியா அணிகள் மோதின. டாஸ் வென்ற தாய்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த தாய்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 133 ரன்கள்எடுத்துள்ளது. அதிகபட்சமாக நன்னபட் கொஞ்சரோஎங்கை 40 ரன்கள் அடித்தார்.

    மலேசியா சார்பில் மஹிரா இஸ்ஸாதி இஸ்மாயில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

    இதையடுத்து, 134 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மலேசியா களமிறங்கியது. வான் ஜூலியா அரை சதம் கடந்து 52 ரன்கள் எடுத்தார். வின்பயர்ட் துரைசிங்கம் 22 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.

    இறுதியில், மலேசியா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 111 ரன்கள்மட்டுமே எடுத்தது. இதன்மூலம் தாய்லாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • அடுத்து ஆடிய இந்தியா அதிரடியாக ஆடி வெற்றி பெற்றது.

    தம்புல்லா:

    9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இலங்கையின் தம்புல்லாவில் இன்று தொடங்கியது. இன்று இரவு நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 19.2 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டும், ரேணுகா தாகூர் சிங், பூஜா வஸ்த்ராகர், ஷ்ரேயங்கா பாட்டீல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 109 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மிரிதி மந்தனா, ஷபாலி வர்மா ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர்.

    முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் குவித்த நிலையில் ஸ்மிரிதி மந்தனா 45 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து ஷபாலி வர்மா 40 ரன்னில் வெளியேறினார். ஹேமலதா 14 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்திய அணி 14.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 109 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், நடப்பு தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

    • டாஸ் வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் 108 ரன்கள் எடுத்தது.
    • இந்தியாவின் தீப்தி சர்மா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    தம்புல்லா:

    9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இலங்கையின் தம்புல்லாவில் இன்று தொடங்கியது.

    இந்நிலையில், இன்று நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சால் பாகிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.

    இறுதியில், பாகிஸ்தான் அணி 19.2 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டும், ரேணுகா தாகூர் சிங், பூஜா வஸ்த்ராகர், ஷ்ரேயங்கா பாட்டீல் தலா 2 விக்கெட்டு வீழ்த்தினர்.

    இதையடுத்து, 109 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    • டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்குகிறது.

    தம்புல்லா:

    9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இலங்கையின் தம்புல்லாவில் இன்று தொடங்கியது. முதல் லீக் ஆட்டத்தில் நேபாளம், யு.ஏ.இ. அணிகள் மோதின. இதில் நேபாளம் அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இன்று நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்குகிறது.

    • டாஸ் வென்ற நேபாளம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த யு.ஏ.இ. 20 ஓவரில் 115 ரன்கள் எடுத்தது.

    தம்புல்லா:

    9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. டாஸ் வென்ற நேபாளம் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த யு.ஏ.இ. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக குஷி சர்மா 36 ரன்கள் அடித்தார்.

    நேபாளம் சார்பில் கேப்டன் இந்து பர்மா 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    இதையடுத்து, 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி நேபாளம் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன சம்ஜானா கட்கா பொறுப்புடன் ஆடினார்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சம்ஜானா கட்கா தனி ஆளாக போராடி அணிக்கு வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில் நேபாளம் 16.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சம்ஜானா கட்கா 72 ரன்கள் அடித்தார்.

    யு.ஏ.இ. சார்பில் கவிஷா எகொடகே 3 விக்கெட் வீழ்த்தினார்.

    • இந்திய அணியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா அரை சதமடித்தனர்.
    • ஐக்கிய அரபு அமீரக அணியை 104 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.

    சில்ஹெட்:

    மகளிர் ஆசிய கோப்பை தொடர் வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய மகளிர் அணி முதல் 2 போட்டிகளில் இலங்கை மற்றும் மலேசியா அணிகளை வீழ்த்தியது.

    இந்நிலையில், நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதியது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவரில் 178 ரன்களை குவித்தது. பொறுப்புடன் ஆடிய தீப்தி ஷர்மா அரைசதம் அடித்தார். அவர் 49 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 64 ரன்கள் அடித்தார். அதிரடியாக ஆடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ், 45 பந்தில் 11 பவுண்டரிகளுடன் 75 ரன்களை குவித்தார்.

    இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஐக்கிய அரபு அமீரக அணி களமிறங்கியது. 20 ஓவரில் அந்த அணி 4 விக்கெட்டுக்கு 74 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 104 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இதனால் இந்திய மகளிர் அணி ஆசிய கோப்பையில் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. ஆட்ட நாயகியாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

    • ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
    • இதில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 7-ம் தேதி மோதுகின்றன.

    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டித் தொடர் வங்காளதேசத்தில் நடைபெற உள்ளது. அந்நாட்டில் உள்ள சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அனைத்துப் போட்டிகளும் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், தாய்லாந்து, இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மோதுகின்றன.

    இந்நிலையில், ஆசிய கோப்பைக்கான மகளிர் கிரிக்கெட் டி20 போட்டிக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, ஆசிய மகளிர் டி20 போட்டி வரும் அக்டோபர் 1-ம் தேதி தொடங்க உள்ளது.

    அக்டோபர் 1-ம் தேதி - இந்தியா, இலங்கை

    அக்டோபர் 3-ம் தேதி - இந்தியா, மலேசியா

    அக்டோபர் 4-ம் தேதி - இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம்

    முக்கிய போட்டியான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 7-ம் தேதி மோதுகிறது.

    அக்டோபர் 8-ம் தேதி - இந்தியா, வங்காளதேசம்

    அக்டோபர் 10-ம் தேதி - இந்தியா, தாய்லாந்து

    அக்டோபர் 13-ம் தேதி - முதல் மற்றும் இரண்டாவது அரையிறுதி

    அக்டோபர் 15-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

    ×