என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கையடக்க கணினி"
- அமைச்சர் காந்தி வழங்கினார்
- மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க கலெக்டர் வளர்மதி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அரசு பள்ளியில் நன்றாக படிக்கும் ஏழை எளிய மாணவ, மாணவிகள் இன்றைய கணினி உலகில் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள ஏதுவாக தேர்வுகளுக்கான பாடப்பிரிவுகள் அடங்கிய சிறப்பு செயலிகள் நீட், ஜே.இ.இ பாடங்கள் அடங்கிய மற்றும் இணைய வசதிகளுடன் உள்ள கையடக்க கணினி சமூக பங்களிப்பு நிதியில் வழங்கிட கலெக்டர் வளர்மதி நடவடிக்கை எடுத்தார்.
அதனடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2023-24 கல்வியாண்டில் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவில் பயிற்சி தேர்வு நடத்தப்பட்டு மதிப்பெண் அதிகம் பெற்ற 24 அரசு பள்ளிகளை சேர்ந்த 40 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தேர்வு செய்யப்பட்ட மாண வர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கையடக்க கணினி வழங்கி பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட ஊரா ட்சிக்குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகரமன்ற தலைவர் சுஜாதாவினோத், சாப்ட் சோர்ஸ் டெக்னாலஜி அப்துல்மஹித் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- மருத்துவம் மற்றும் பொறியியல் தேர்வு எழுதும் 35 மாணவர்களுக்கு கையடக்க கணினியை ராமநாதபுரம் கலெக்டர் வழங்கினார்.
- 143 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி கல்வித்துறையின் மூலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வை எளிதாக கையாளும் வகையில் விலையில்லா கையடக்க கணினி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் மாணவ, மாணவிகளுக்கு கையடக்க கணினி வழங்கி பேசியதாவது:-
அரசுபள்ளியில் பிளஸ்-2 படித்து மருத்துவ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படிக்க தேவையான தேர்வுக்கான எளிய பயிற்சி முறையை போதியளவு மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. தற்போது அரசு பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியை பையூஸ் ஆகாஷ் நிறுவனம் மூலம் இணையதளத்தில் விண்ணப்பித்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கல்வி உதவி தொகையுடன் பயிற்சி வழங்கும் வகையில் மத்திய அரசு 117 முன்னேற விளையும் மாவட்டங்களை தேர்வு செய்து இத்தகைய பயிற்சிகளை வழங்குகிறது.
இதற்காக தமிழ்நாட்டில் 2 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய முன்னேற விளையும் மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இந்த நிறுவனம் மூலம் இணையதளம் வழியாக விண்ணப்பித்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நுழைவு தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 143 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்த நிலையில் நுழைவு தேர்வுக்கு 35 மாணவ-மாணவிகள் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு நுழைவு தேர்வை எளிதாக பயிற்சி பெற்று எழுதும் வகையில் ஒவ்வொருவருக்கும் ரூ.86 ஆயிரம் மதிப்பீட்டில் நிதி ஆயோக் திட்டத்தின் மூலம் இலவசமாக கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இணையதளம் வழியாக நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படுவதன் மூலம் மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்று நுழைவு தேர்வை எளிதாக கையாள முடியும். ஒவ்வொரு மாணவ- மாணவிகளும் விடாமுயற்சியுடன் படித்து வெற்றி என்னும் இலக்கை பெற்று லட்சியத்தை அடைந்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் பாலுமுத்து, மாவட்ட பையூஸ் ஆகாஷ் ஒருங்கிணைப்பாளர்கள் ஆறுமுகம், பாலமுருகன், பாஸ்கரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்