search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆரோக்கியம்"

    • கைகளை நன்றாக தேய்த்து கழுவினால் மட்டும் போதாது.
    • கை கழுவும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள்.

    மழைக்காலங்களில் பரவும் நோய்த்தொற்றுகளை தடுக்க கைகளை சுத்தமாக பராமரிப்பதும் முக்கியம். சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிட்ட பின்பும் மட்டுமே கை கழுவும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். அப்போதும் கைகளை நன்றாக தேய்த்து கழுவினால் மட்டும் போதாது. 'ஹேண்ட் வாஷ்' அல்லது சோப் பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும்.

    துணி துவைப்பதற்கு பயன்படுத்தும் சோப்பை கொண்டு கைகளை கழுவக்கூடாது. கடினத்தன்மை கொண்ட அந்த சோப் கைகளை விரைவாக உலர்வடைய செய்துவிடும். மென்மையான சோப் பயன்படுத்தியே கைகளை கழுவ வேண்டும்.

    சருமத்தை போலவே கைகளும் ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மையை கொண்டிருக்க வேண்டும். எந்த வேலை செய்து முடித்தாலும் உடனே கைகளை கழுவ வேண்டும். அதுபோல் கைகளை கழுவியதும் டவல் கொண்டு துடைத்து உலர வைத்துவிட வேண்டும்.

    அப்படி செய்வது கைகளை மென்மையாக்குவதோடு, சுருக்கம் போன்ற வயதான தோற்ற பொலிவு ஏற்படுவதை தவிர்க்கும்.

    வெளியிடங்களுக்கு செல்லும்போது முகத்திற்கு சன்ஸ்கிரீன் பூசிக்கொள்வது போல் கைகளுக்கும் பூசிக்கொள்வது பொலிவு தரும். இரவில் தூங்க செல்வதற்கு முன்பு கைகளில் எண்ணெய் தடவலாம். அது தசைகள் உலர்வடையாமல் பார்த்துக்கொள்ளும், கைகளுக்கு மிருதுத்தன்மையையும் ஏற்படுத்திக்கொடுக்கும்.

    விரைவாகவே கைகளில் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்யும்போது நோய்த்தொற்றுகளும் நெருங்காது.

    • நுரையீரல் நம் உடலின் முக்கிய உள் உறுப்பு.
    • மூச்சுக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை கூட ஏற்படுத்துகின்றது.

    நுரையீரல் என்பது மனித உடலில் இருக்கும் மிக முக்கிய உறுப்பு ஆகும். பாக்டீரியா மற்றும் கிருமித் தொற்றால் நுரையீரல் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. இதனால் மூச்சுக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை கூட ஏற்படுத்துகின்றது.

    நுரையீரல் நம் உடலின் முக்கிய உள் உறுப்பு. காற்றில் உள்ள பிராண வாயுவை ரத்தத்தில் சேர்ப்பதும், கரியமில வாய்வை பிரித்து வெளியேற்றுவதும் நுரையீரலின் முக்கியப்பணி.

    மூக்கின் வழியாக நாம் சுவாசிக்கும் காற்று, மூச்சுக்குழல் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். நுரையீரல் பகுதிகளில் பல நுண்கிளைகளாக பிரிந்து மில்லியன் கணக்கான நுண்காற்று பைகள் அமைந்துள்ளன. அவை மென்மையான தசைகளை கொண்டவை.

    இதில் பல நுண்ணிய ரத்தக்குழாய்கள் இருப்பதால் நுரையீரல் தமனி மூலமாக வந்த ரத்தத்தில் உள்ள கரியமில வாயுவை வெளியேற்றி புதிய பிராண வாயுவை ஏற்றுக்கொண்டு சிறைகள் மூலமாக இதயத்துக்கு செல்கிறது. இந்த நுண்ணிய பைகளில் தான் காற்று பரிமாற்றம் நிகழ்கிறது.

    இந்தியாவில் ஒரு கோடி மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு உள்ளது. இதில் தமிழ்நாட்டை பொறுத்தவரை கிட்டத்தட்ட 40 லட்சம் பேருக்கு நுரையீரல் பாதிப்பு வருகிறது. இதில் சிறு வயதில் இருந்து பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் நுரையீரல் தொற்றினால் பாதிக்கப்படலாம்.

    ஆனால் 30 வயதை கடந்த ஆண்களும், பெண்களும் தான் அதிகமாக நுரையீரல் பாதிப்பினால் பாதிக்கப்படுகின்றனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு 3 காரணங்கள் உண்டு.

    ஒன்று மரபணுக்கள் மூலமாகவோ அல்லது சுற்றுச்சூழல் காரணங்களாகவோ அதாவது காற்று மாசுபாடு, விறகு அடுப்பு பயன்படுத்துவது, கொசுவர்த்தி பயன்படுத்துதல். வெல்டிங் கியாஸ் போன்ற பல காரணங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதினாலும் நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது.

    அதுமட்டுமில்லாமல் உணவுமுறைகளினாலோ அல்லது சூரிய வெளிச்சம் அதிகம் இல்லாத பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கூட நுரையீரல் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

    தற்போது உள்ள காலங்களில் நிறைய பேருக்கு குறைப் பிரசவம் ஏற்படுகிறது இதனால் கூட நுரையீரல் பாதிப்பு ஏற்படலாம். ஏனென்றால் நுரையீரல் வளர்ச்சி என்பது 36 வாரங்கள் கழித்து பிறக்கும் குழந்தைகளுக்கு நன்றாக இருக்கும். ஆனால் அதேநேரத்தில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு நுரையீரல் வளர்ச்சி என்பது மாறுபடும். இதனால் அந்த குழந்தைகள் வளரும்போது அவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படலாம்.

    இந்த நுரையீரல் பாதிப்பு சமீப காலமாக கொரோனா தொற்றுக்கு பிறகு அதிகம் ஏற்பட்டு வருகிறது என்று ஆய்வறிக்கைகள் நமக்கு தெரிவிக்கின்றன. 

    நுரையீரல் தொற்று ஏற்படுவதற்கான காரணங்கள்:

    நுரையீரல் தொற்று ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமாக புகைப்பிடிப்பதினால் நுரையீரல் அதிகமாக பாதிக்கப்படுகிறது அதுமட்டுமில்லாமல் கொசுவர்த்தியில் இருந்து ஏற்படும் புகையின் மூலமும் நுரையீரல் பாதிக்கப்படும்.

    ஏனென்றால் கொசுவர்த்தியை ஏற்றிவிட்டு நாம் வீட்டின் கதவை அடைத்துவிடுகிறோம். அந்த புகை இரவு முழுவதும் அறையை சுற்றியே இருக்கும் அந்த காற்றை தான் நாம் சுவாசிப்போம். கொசுவர்த்தி புகையினால் நுரையீரல் பாதிப்பு அதிகம் இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர். இதுவும் கிட்டத்தட்ட புகைப்பிடிப்பதற்கு சமமாகவே கருதப்படுகிறது.

    புகைப்பழக்கத்தால் மூச்சுவிடுவதில் சிரமங்கள் ஏற்படும். நாளடைவில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

    வாய், உதடு, தொண்டை, குரல் வளையம், உணவுக் குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீரகம், கல்லீரல், வயிறு, கணையம் என உடல் உள் உறுப்புகளையும் இது பாதிக்கிறது. எதிர்காலத்தில் இதய ரத்தக் குழாய் அடைப்பு நோய்கள், மாரடைப்பு, பக்கவாதம், ரத்தக் குழாய்கள் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் வருவதற்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

    சுவை அரும்புகள் தமது ஆற்றலை இழந்துவிடுவதால், நாளடைவில் உணவின் மீது விருப்பம் குறையத்தொடங்கும்.

    புற்றுநோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. புகையிலை நச்சு யாரையும் விட்டு வைப்பதில்லை, மற்றவர்கள் புகைக்கும் பொழுது வெளிவரும் புகைகூட நச்சு தன்மையுடையது. உயிருக்கு ஊறு விளைவிக்கும். 

    • வாய்வுத் தொல்லை, மாரடைப்பைத் துல்லியமாக வேறுபடுத்திப் பார்க்க முடியாது.
    • தீவிரமான வலியையோ, அசவுகரியத்தையோ ஏற்படுத்தும்.

    லேசாக நெஞ்சு வலித்தால்கூட அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்குமோ, இதயக் கோளாறாக இருக்குமோ என்கிற அச்சம் பலருக்கும் உள்ளூர எழுகிறது. அது மாரடைப்புதான் என்கிற பயம் வரத்தான் செய்கிறது. ஆனால், சாதாரண வாய்வுத் தொல்லையால்கூட நெஞ்சுவலி ஏற்படலாம்.

    நெஞ்சுவலிக்கு வாய்வுத் தொல்லையும் காரணமாக இருக்கலாம், மாரடைப்பும் காரணமாக இருக்கலாம். இவற்றை எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது என்று பார்க்கலாம்.

    வாய்வுத் தொல்லை, மாரடைப்பைத் துல்லியமாக வேறுபடுத்திப் பார்க்க முடியாது. ஆனாலும், அறிகுறிகளை வைத்து ஓரளவு வகைப்படுத்தலாம்.

    மாரடைப்பாக இருந்தால், குறிப்பிட்ட இடத்தில் மட்டுமல்லாமல், சுற்றியுள்ள பகுதிகளுக்கும் அவை பரவும். உதாரணமாகத் தோள்பட்டை, கை, முதுகுத் தண்டுவடம், கழுத்து, பற்கள், வாயின் தாடைப் பகுதிக்கு வலி பரவும். குறிப்பிட்ட ஒரே பகுதியில் மட்டும் தீவிரமான வலியையோ, அசவுகரியத்தையோ ஏற்படுத்தும்.

    வாய்வுத் தொல்லை, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் அப்படியல்ல. வாய்வுத் தொல்லை அல்லது நெஞ்செரிச்சலின்போது குறிப்பிட்ட பகுதியின் உள்ளே இருந்து யாரோ குத்துவது போன்ற உணர்வும், இழுப்பதுபோன்ற உணர்வும் ஏற்படும். அதேபோல் மூச்சுத்திணறலோ, தோள்பட்டையில் வலியோ, தொண்டையில் அழுத்தமோ ஏற்படாது.

    வாய்வுத் தொல்லையின்போது வாய்நாற்றம், பற்சிதைவு, உணவு விழுங்குவதில் சிக்கல், வாந்தி, எதுக்களித்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். சிலருக்கு, நெஞ்சுப் பகுதியில் இல்லாமல், பின்முதுகு அல்லது குறிப்பிட்ட ஒரு பகுதியில் உள்ளே இருந்து ஏதோவொன்று இழுப்பதுபோன்ற உணர்வு ஏற்படலாம்.

    நெஞ்செரிச்சலின்போது, புளித்த ஏப்பம் அதிகமாக ஏற்படும். மூச்சுக் குழாயில் ஏற்படும் எரிச்சலால், உடலில் அமிலத்தன்மை அதிகரிப்பதை உணர முடியும். அதேபோல நெஞ்செரிச்சல், சாப்பிடுவதற்கு முன் அல்லது சாப்பிடாத நேரங்களில்தான் அதிகம் ஏற்படும். அமிலத்தன்மை அதிகம் இருக்கும் என்பதால், ஆரோக்கியமான உணவு உண்டதும் இந்தப் பிரச்னை உடனடியாகச் சரியாகிவிடும்.

    இவற்றை அடிப்படையாக வைத்து, உங்களுக்கு ஏற்படும் நெஞ்சு வலி மாரடைப்பா அல்லது வாயுத் தொல்லையா என்பதை நீங்களாகவே கணித்துக்கொள்ளலாம். சிலருக்குப் பதற்றம் அதிகரிக்கும்போது, அதன் காரணமாகக்கூட நெஞ்சு வலி ஏற்படலாம். இது, மருத்துவ மொழியில் பேனிக் அட்டாக் (Panic Attack) எனப்படும்.

    நெஞ்சுப்பகுதியின் நடுப்பகுதியில் வரக்கூடிய வலி இதயத்தில் ஏற்படும் வலியாக இருக்கும். இடது பக்கம் வரக்கூடிய வலி பெரும்பாலும் வாயுப்பிடிப்பாகத்தான் இருக்கும். ஏனென்றால் இதயத்துக்கும், இரைப்பைக்கும் இடையில் டயாப்ரம் என்ற ஒரு சவ்வு தான் இருக்கும். இது நாம் இரவு நேரம் கடந்து சாப்பிடும் போதோ அல்லது நிறையை தண்ணீர் குடிக்கும் போதோ அல்லது வயிறு நிறைய சாப்பிடும் போதோ இந்தமாதிரி வாயுப்பிடிப்பு ஏற்படும். சாப்பிட்ட சாப்பாடு சரியாக செரிமானம் ஆகாத போது கூட வாயுப்பிடிப்பு ஏற்படும்.

    இதற்கு சிறந்த வழி என்னவென்றால் ஆரோக்கியமான சாப்பாடு, அளவான தண்ணீர் தான். இந்த வாயுப்பிடிப்பு பிரச்சனை இருப்பவர்கள் கடைகளில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதுவும் இரவு சாப்பாடு 7 மணியில் இருந்து 7.30 மணிக்குள் முடித்துவிட வேண்டும். அதுவும் அளவான தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும், வயுறு முட்ட நீர் அருந்தக்கூடாது. இவ்வாறு செய்தால் மட்டுமே வாயுப்பிடிப்பை தவிர்க்க முடியும்.

    • ஆரோக்கியத்தை மேம்படுத்த, சர்க்கரைகள் சேர்க்கப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.
    • இயற்கை சர்க்கரையை விட பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் சர்க்கரை ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.

    ஒரு நாளைக்கு உண்ணக்கூடிய சர்க்கரையின் அளவு என்பது நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் மொத்த கலோரிகளின் அளவு மற்றும் நமது செயல்பாடுகளை பொறுத்தது.

    பொதுவாக முடிந்தவரை அதிகமான சர்க்கரைகளைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கவில்லை. அதிக சர்க்கரை சாப்பிடுவது தடுப்பூசி மூலம் தடுக்கப்பட்ட பல நோய்களுக்கு வழிவகுக்கும்.

    இது கூடுதல் ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் கலோரிகளை வழங்குகிறது மற்றும் நீண்ட காலத்திற்கு வளர்சிதை மாற்றத்தை சேதப்படுத்தும். 

    பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற உணவுகளில் இருந்து இயற்கையாக கிடைக்கும் சர்க்கரைகள் மற்றும் சர்க்கரைகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டை காண்பது மிகவும் முக்கியம்.

    பழங்கள், காய்கறிகளில் நீர், நார்ச்சத்து மற்றும் பல்வேறு நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன. இயற்கையாக கிடைக்கும் சர்க்கரைகள் முற்றிலும் நல்லது, ஆனால் சேர்க்கப்பட்ட சர்க்கரைக்கு இது பொருந்தாது.

    மிட்டாய்களில் சர்க்கரை முக்கிய மூலப்பொருளாகும். குளிர்பானங்கள், வேகவைத்த பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்களில் சர்க்கரை உள்ளது.

     

    ஆரோக்கியத்தை மேம்படுத்த, சர்க்கரைகள் சேர்க்கப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

    நாம் ஒருநாளைக்கு எடுத்துக்கொள்ளும் மொத்த கலோரிகளில் வெறும் 10% மட்டும் தான் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என அமெரிக்கர்களுக்கான உணவு வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கிறது.

    மேலும் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளில் இயற்கை சர்க்கரையும் அடங்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக உங்கள் ஓட்ஸ் மீலில் தேனை சேர்த்தால், ஓட்ஸ் மீலில் இயற்கையான மூலத்திலிருந்து சேர்க்கப்பட்ட சர்க்கரை உள்ளது.

    பழங்கள் மற்றும் காய்கறிகள் உணவுகளில் உள்ள இயற்கை சர்க்கரையை விட பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் சர்க்கரை ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.

    அதிகப்படியான சர்க்கரை நுகர்வு உடல் பருமன், டைப் 2 நீரிழிவு, இதய நோய், சில புற்றுநோய்கள், பல் சிதைவு, ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

    அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (AHA)படி, ஒரு நாளில் உண்ண வேண்டிய அதிகபட்ச சர்க்கரை அளவு:

    ஆண்கள்: ஒரு நாளைக்கு 150 கலோரிகள் (37.5 கிராம் அல்லது 9 டீஸ்பூன்)

    பெண்கள்: ஒரு நாளைக்கு 100 கலோரிகள் (25 கிராம் அல்லது 6 டீஸ்பூன்)

    நீங்கள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தால், மேற்கூறிய அளவு சர்க்கரை எடுத்துக்கொள்ளலாம். உங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் இந்த சிறிய அளவிலான சர்க்கரையை எரித்துவிடலாம்.

    இருப்பினும் உணவில் சர்க்கரை சேர்க்க வேண்டிய அவசியமில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    • பொதுவான நோயாகவே நீரிழிவு நோய் இருந்து வருகிறது.
    • பேரிச்சம்பழ விதைகளும் ஊட்டச்சத்து மிகுந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

    இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அதில் ஒன்று தான் இந்த நீரிழிவு நோய்.

    உலகளவில் உள்ள மக்களை பாதிக்கும் ஒரு பொதுவான நோயாகவே நீரிழிவு நோய் இருந்து வருகிறது. இந்த வகை நீரிழிவு நோயைத் தவிர்க்க சில ஆரோக்கியமான உணவுமுறைகள் மற்றும் பழக்க வழக்கங்களைக் கையாள்வது அவசியமாகும்.

    அந்த வகையில் நீரிழிவு நோயைத் திறம்பட கட்டுப்படுத்துவதில் பேரிச்சம்பழ விதை பவுடர் பெரிதும் உதவுகிறது. அதென்ன பேரிச்சம்பழ விதை?

    இன்று பெரும்பாலானோர் பேரிச்சம்பழத்தை சாப்பிட்டு விட்டு, பேரிச்சம்பழ கொட்டையைத் தூக்கி எறிகின்றனர். ஆனால், பேரிச்சம்பழம் மட்டுமல்லாமல் அதன் விதைகள் உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு வழிகளில் நன்மை பயக்கிறது. இதில் நீரிழிவு நோயாளிகளுக்கு பேரிச்சம்பழ விதை பவுடர் தரும் நன்மைகளைக் காணலாம்.

    பேரிச்சம்பழம் அவற்றின் ஆற்றல் அதிகரிக்கும் பண்புகளுக்காக மிகவும் பெயர் பெற்றதாகும். ஆனால், இதன் விதைகளை நம்மில் பெரும்பாலானோர் நிராகரித்து விடுகிறோம்.

    ஆனால், இந்த பேரிச்சம்பழ விதைகள் சத்தானதா என்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா? அதிலும் குறிப்பாக இதை தூளாக அரைத்து உட்கொள்வது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. அதில் ஒன்றே ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதாகும்.

    பேரிச்சம்பழத்தினைப் போலவே, பேரிச்சம்பழ விதைகளும் ஊட்டச்சத்து மிகுந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. பேரிச்சம்பழ விதைகள் டயட்டரி ஃபைபர், பாலிபினால்கள் மற்றும் ஒலிக் அமிலம், அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்றவை நிறைந்துள்ளன.

    இந்த ஊட்டச்சத்துக்கள் ரத்த சர்க்கரை அளவுகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும், இந்த விதைகளில் உள்ள கூறுகள் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை சீராக்க உதவுகிறது.

    எனவே, இவை நீரிழிவு நோயாள் அல்லது நீரிழிவு நோய் அபாயத்தில் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.

    பேரிச்சம்பழ விதைகளில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை குடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதுடன், சீரான தன்மையை ஊக்குவிக்கிறது. மேலும், இந்த நார்ச்சத்துக்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

    பேரிச்சம்பழ விதை பவுடரை தயார் செய்யும் முறை

    * முதலில் குறிப்பிட்ட அளவிலான பேரிச்சம்பழ விதைகளை எடுத்துக் கொண்டு, நன்கு சுத்தம் செய்து, வெயிலில் ஒரு நாள் முழுவதும் உலர வைக்கலாம்.

    * பின்னர், விதைகளை கடாய் ஒன்றில் சேர்த்து, மிதமான சூட்டில் வறுத்துக் கொள்ள வேண்டும். இதில் விதைகள் எரிக்கப்படாமல் அல்லது கருகாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும். மேலும், இந்த விதைகள் மிருதுவாகும் வரை கையால் நசுக்க வேண்டும்.

    இவ்வாறு வறுத்த விதைகளை கைகளால் நசுக்கி பிறகு மிக்சியில் அரைத்துக் கொள்ளலாம். இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமிக்க பேரிச்சம்பழ விதைத்தூள் தயாராகி விட்டது.

    இந்த பொடியை ஒரு ஸ்பூன் வெதுவெதுப்பான பாலில் கலந்து தினந்தோறும் காலை நேரத்தில் குடிக்கலாம்.

    கவனிக்க வேண்டியவை

    பேரிச்சம்பழ விதைகள் சாத்தியமான பலன்களைத் தருவதாக இருப்பினும், இதை மிதமாக உட்கொள்வது அவசியமாகும். முதலில் மெதுவாகத் தொடங்கி, உடல் எவ்வாறு பதிலளிக்கிறது என்பதை கண்காணிக்க வேண்டும்.

    குறிப்பாக வேறு ஏதாவது உடல்நல பிரச்சனைகள் இருப்பின், எந்தவொரு பொருளையும் எடுத்துக் கொள்ளும் முன்னர் நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்வது நல்லது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புரோபயாடிக்குகள் ஆரோக்கியமான குடலை ஊக்குவிக்கின்றன.
    • நீர்சத்துள்ள உணவுகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது.

    வண்ணமயமான பழங்கள் மற்றும் காய்கறிகள்:

    உங்கள் குழந்தையின் தட்டில் ஒரு வானவில் இருப்பதை கற்பனை செய்து பாருங்கள். பெர்ரி, சிட்ரஸ் பழங்கள், மிளகுத்தூள் மற்றும் கீரைகள் இயற்கையில் சத்துக்கள் நிறைந்தவை. இதில் அதிக அளவு வைட்டமின்கள் மற்றும் ஆக்சிஜனேற்றம் நிறைந்துள்ளன.

    புரதங்கள்:

    கோழி, ஒல்லியான இறைச்சிகள், மீன் மற்றும் பருப்பு வகைகளை உங்களில் குழந்தைகளின் உணவில் இணைக்கவும். இவை நோய் தொற்றை ஏற்படுத்தும் வைரஸ்களில் இருந்து உங்கள் குழந்தையை பாதுகாக்கும்.

    புரோபயாடிக்குகள்:

    தயிர் மற்றும் புளித்த உணவுகளில் காணப்படும் புரோபயாடிக்குகள் ஆரோக்கியமான குடலை ஊக்குவிக்கின்றன. இது வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முக்கிய அம்சமாகும்.

    முழு தானியங்கள்:

    முழு கோதுமை, ஓட்ஸ் மற்றும் பழுப்பு அரிசி ஆகியவை நீடித்த ஆற்றலையும், நோய் எதிர்ப்பு சக்தியை ஆற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன.


    நட்ஸ் வகைகள்:

    நட்ஸ் மற்றும் விதைகளில் துத்தநாகம், செலினியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இவை குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    திரவங்கள்:

    போதுமான நீரேற்றம் நோயெதிர்ப்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது. தண்ணீர், மூலிகை தேநீர் மற்றும் நீர்த்த பழச்சாறுகளை வழங்குங்கள்.

    மழைக்காலத்தில் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த உணவுவகைகளை எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும், இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதற்கு முன், நீங்கள் மருத்துவரின் ஆலோசனையையும் பெறலாம்.

    • தூய்மையில் கவனம் செலுத்தாததால் பல நோய் தொற்றுக்கள் ஏற்படுகின்றன.
    • குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள்.

    பல்வேறு பகுதியில் கொளுத்தும் வெயிலில் இருந்து நிவாரணம் கிடைக்கும் வகையில், மழை பெய்து வருகிறது. என்னதான் மழை வெப்பத்தில் இருந்து நமக்கு கொஞ்சம் ஆறுதல் தந்தாலும், மழைக்காலத்தில் வைரஸ் மற்றும் நோய் தொற்றுக்களின் ஆபத்து பன்மடங்கு அதிகரிக்கும்.

    எனவே, வெயில் காலத்தை விட மழைக்காலத்தில் ஆரோக்கியத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். எனவே, மழைக்காலத்தில் ஏற்படும் வைரஸ் நோய்கள் அவர்களை எளிதில் பாதிக்கலாம். இந்த பருவத்தில் சிறிய குழந்தைகள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

    அதேசமயம், மழைக்காலத்தில் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால், கொசுக்கள் வேகமாக உற்பத்தியாகின்றன. இந்த கொசுக்களிடம் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதும் முக்கியம். அதேபோல, புதிதாகப் பிறந்த குழந்தை சளி, இருமல் மற்றும் நிமோனியா போன்ற பொதுவான வைரஸ் தொற்றுகளால் பாதிக்கலாம்.

    எனவே, மழைக்காலங்களில் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். மழைக்காலத்தில் பிறந்த குழந்தையை எப்படி பராமரிப்பது என்பதை பற்றி பார்க்கலாம்.

    எப்படி பராமரிப்பது?

    * உங்கள் குழந்தை 6 மாதங்களுக்கும் குறைவாக இருந்தால், குழந்தைக்கு முடிந்தவரை முழு உணவாக தாய்ப்பால் கொடுக்க முயற்சிக்கவும். தாயின் பாலில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.

    * குழந்தைகளுக்கு உணவு கொடுக்க ஆரம்பித்து விட்டால், ஆரோக்கியமான காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

    * மழைக்காலங்களில் தூய்மையில் கவனம் செலுத்தாததால் பல நோய் தொற்றுக்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில், வெளியில் இருந்து வந்த பிறகு உங்கள் கைகளை கழுவ முயற்சிக்கவும். அதற்கு பின்னர் உங்கள் குழந்தைகளைத் தொடவும்.

    * கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருக்க, வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் கொசுக்களிடமிருந்து பாதுகாக்க முழு கை ஆடைகளையும் அணிய வேண்டும்.

    * பருவமழை காலத்தில் அனைத்து இடங்களிலும் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். எனவே, இந்த காலகட்டத்தில் குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்ல வேண்டாம். கூட்ட நெரிசலான இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதால் வைரஸ் தொற்று ஏற்படலாம்.

    * அதேசமயம், புல் அதிகம் வளரும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம், ஏனெனில் இதுபோன்ற இடங்களில் கொசுக்கடி பயம் இருக்கும்.

    * மழைக்காலத்தில் குழந்தைகள் எளிதில் நோய்வாய்ப்படுவார்கள். எனவே, குழந்தையை எப்போதும் உலர்வாக வைக்க முயற்சி செய்யுங்கள். வலுவான சூரிய ஒளியில் குழந்தைகளின் ஆடைகளை உலர்த்தவும்.

    * சூரிய ஒளி குறைவாக இருந்தால், குழந்தையை ஆடை அணிவதற்கு முன் லேசாக அயர்ன் செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் ஆடைகளில் உள்ள ஈரப்பதம் நீங்கும். குழந்தையின் டயப்பரை அடிக்கடி மாற்றவும். ஒரே டயப்பரை நீண்ட நேரம் அணிவதால் குழந்தைக்கு தொற்று மற்றும் சளி கூட ஏற்படலாம்.

    • உடலில் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
    • சரியான அளவு கார்போஹைட்ரேட்டுகளை எடுக்க வேண்டும்.

    நீரிழிவு என்பது ஒரு தீவிர நோயாகும். இது உலகம் முழுவதும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளை அதன் பலியாக்குகிறது. நீரிழிவு நோயில் இரண்டு வகைகள் உள்ளன. டைப் 1 நீரிழிவு, குழந்தை பருவ நீரிழிவு என்றும் அழைக்கப்படுகிறது.

    இதில் ஒரு நபர் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த மனிதனால் உருவாக்கப்பட்ட இன்சுலின் பயன்படுத்த வேண்டும். அதேசமயம் டைப் 2 நீரிழிவு மரபணு காரணங்களால் ஏற்படுகிறது மற்றும் வாழ்க்கை முறையுடன் தொடர்புடையது.

    டைப் 1 நீரிழிவு நோயின் போது என்ன செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.

    * டைப் 1 நீரிழிவு நோய், தாமதமாக கண்டறியப்படுகிறது. டைப் -1நீரிழிவு நோயைப் பற்றி அறிய, ஆன்டிஜென் சோதனை செய்யப்பட வேண்டும். இதற்காக நீங்கள் ஐலெட் செல் ஆன்டிஜென் மற்றும் குளுடாமிக் அமிலம் டிகார்பாக்சிலேஸ் 65 ஆகியவற்றைப் பெறலாம். இது தாமதமாக கண்டறியப்பட்டால் நீரிழிவு நோய் மேலும் அதிகரிக்கலாம்.

    * டைப் 1 நீரிழிவு அடிக்கடி கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற மன அழுத்த ஹார்மோன்களை தூண்டுகிறது. இது உடலில் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். டைப் 1 நீரிழிவு நோயாளிகளில், இந்த ஹார்மோன் மாற்றங்கள் இன்சுலின் மூலம் கட்டுப்படுத்த கடினமாக இருக்கும் உயர் ரத்த சர்க்கரை அளவை ஏற்படுத்தும்.

    எனவே, உங்கள் உணர்ச்சி ஆரோக்கியத்தை நீங்கள் புறக்கணிக்கக்கூடாது. ஆனால் மன அழுத்தத்தை குறைக்கவும், இந்த ஹார்மோன்களை கட்டுப்படுத்தவும் முயற்சிக்கவும்.

    உங்கள் ரத்த சர்க்கரை அளவுகள், உணவு உட்கொள்ளல், உடல் செயல்பாடு மற்றும் இன்சுலின் அளவைப் பற்றிய குறிப்பை எப்போதும் வைத்திருக்க வேண்டும். இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது முக்கியம். ஒரு நாளிதழ் எழுதுவது நீரிழிவு வடிவங்களைக் கண்டறிந்து அதைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

    டைப் 1 நீரிழிவு நோயுடன் தொடர்புடைய சிக்கல்கள், சிறுநீரக செயல்பாடு சோதனைகள் மற்றும் லிப்பிட் சுயவிவரம் சரியான நேரத்தில் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்வது மிகவும் முக்கியம். இதனால் அது சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். இந்த சோதனைகள் செய்யப்படாவிட்டால், தேவையான சிகிச்சையை தாமதப்படுத்தலாம்.

    கார்போஹைட்ரேட்டுகளின் சரியான அளவைக் கண்டுபிடிப்பது மிகவும் முக்கியம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் அளவை தவறாகக் கணக்கிடுவது தவறான இன்சுலின் டோசுக்கு வழிவகுக்கும். இது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம். எனவே, சரியான அளவு கார்போஹைட்ரேட்டுகளை எடுக்க எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது நிபுணரை அணுகவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • `நேக்லரியா போலேரி' என்னும் ஒற்றை உயிரணு உயிரினம் ஆகும்.
    • ஏரிகள், ஆறுகள், நன்னீர் தேக்கங்கள் மற்றும் சூடான நீரூற்றுகளில் காணப்படுகிறது.

    முதன்மை அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்பது மூளை மற்றும் மூளையைச் சுற்றி மூடியிருக்கும் சவ்வு திசுக்களில் ஏற்படும் தொற்று பாதிப்பு ஆகும். இந்த தொற்று பாதிப்புக்கு காரணம் ''நேக்லரியா போலேரி'' என்னும் ஒற்றை உயிரணு உயிரினம் ஆகும். மூளையை தின்னும் அமீபா என்று இதற்கு பெயரிடப்பட்டு உள்ளது.

    'நேக்லரியா போலேரியா' என்னும் இந்த ஒற்றை உயிரணு உயிரினம் உலகம் முழுவதும் உள்ள ஏரிகள், ஆறுகள், நன்னீர் தேக்கங்கள் மற்றும் சூடான நீரூற்றுகளில் காணப்படுகிறது.

    குறிப்பாக, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் சூடான நீரிலும், சரியாக குளோரினேட் செய்யப்படாத நீச்சல் குளங்களிலும் அதிகம் காணப்படுகிறது.

    வெதுவெதுப்பான நீர் உள்ள குளங்கள் அல்லது ஏரிகளில் மூழ்கி குளிக்கும்போது இந்த அமீபா மனிதனின் மூக்கு வழியாக நுழைந்து நேரடியாக மூளைக்கு செல்கிறது. பின்னர் மூளையின் திசுக்களை வேகமாக தின்று அழிக்கிறது.

    இந்த அமீபா உடலுக்குள் நுழைந்து விட்டால் ஆரம்ப அறிகுறிகளாக தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி காணப்படும். மேலும், கழுத்து இறுக்கம், குழப்பம், மக்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் கவனம் இல்லாமை, சமநிலை இழப்பு, வலிப்பு மற்றும் கண் முன் மாய தோற்றங்கள் தோன்றுவது போன்ற பாதிப்புகள் ஏற்படும். நோய் தொற்று ஏற்பட்ட 12 நாட்களில் மரணம் நேர்கிறது.

    இந்தியாவில் பல்வேறு இடங்களில் உள்ள நீர் தேக்கங்கள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் மூளை தின்னும் ''நேக்லரியா போலேரி'' அமீபா இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த அமீபா பாதிப்பை சரியான முறையில் கண்டறிய தவறுவதால், மூளைக்காய்ச்சல் என்று கருதி விடுவதாகவும் கூறப்படுகிறது.

    இந்த மூளையை உண்ணும் அமீபா வெதுவெதுப்பான நீரில் வாழும் ஒரு தெர்மோபிலிக் உயிரினம். இதனால், இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் அதிக அளவில் வெதுவெதுப்பான நீர் நிலைகளில் இவை பெருக ஏற்றதாக இருக்கிறது. எனவே, இந்த அமீபா தொற்று விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று தொற்று உயிரியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    • ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.
    • இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன.

    இனிப்பு, புளிப்பு என இரண்டு சுவையும் கலந்தது நாவல் பழம். இதில் வைட்டமின் சி, இரும்புச்சத்து, ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்பட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இது நாவல் பழம் சீசனாக இருப்பதால் பலரும் அதனை ருசிப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். நாவல் பழத்தை எல்லோரும் ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்கள் இவை...

    * நாவல் பழத்தில் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் மற்றும் ஜாம்போலின் உள்ளது. இது மாவுச்சத்தை சர்க்கரையாக மாற்றுவதை கட்டுப்படுத்த உதவும். அத்துடன் ரத்தத்தில் சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துவதன் மூலம் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

    * நாவல் பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அது செரிமானத்துக்கு உதவும். மலச்சிக்கலை தடுக்கும். குடல் இயக்கம் சீராக நடைபெறுவதற்கும் உதவிடும். நாவல் பழத்தின் விதைகள் மற்றும் பட்டைகள் பாரம் பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

    * நாவல் பழத்தில் அந்தோசயின்கள், பிளா வனாய்டுகள், பாலி பீனால்கள் உள்ளிட்ட ஆன்டி ஆக்சிடென்டுகள் நிரம்பியுள்ளன. புற்றுநோய், இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன.

    * நாவல் பழத்தில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பை கட்டுப்படுத்த உதவும். இதன் மூலம் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். பெருந்தமனி தடிப்பு தோல் அழற்சி அபாயத்தை குறைக்கும்.

    * நாவல் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடும் திறனை அதிகரிக்கச் செய்யும்.

    * நாவல் பழத்தில் இருக்கும் அதிகப்படியான ஆன்டி ஆக்சிடென்டுகள் சருமத்திற்கு சேதம் ஏற்படுத்தும் பிரீ ரேடிக்கல்களுக்கு எதிராக போராடும், விரைவில் வயதான அறிகுறிகள் எட்டிப்பார்ப்பதை தடுத்து சருமத்திற்கு பொலிவு சேர்க்கும். முகப்பரு, கரும்புள்ளிகளுக்கு எதிராகவும் பாதுகாப்பு அளிக்கும்.

    * நாவல் பழத்தில் நார்ச்சத்து அதிகம். கலோரி குறைவு. அதனால் உடல் எடையை சீராக நிர்வகிக்க முயற்சிப்பவர்களுக்கு நாவல் பழம் சிறந்த தேர்வாக அமையும். குறைவாக சாப்பிட்டாலே வயிற்றுக்கு திருப்தி அளிக்கும். அதனால் அதிக கலோரிகளை உட்கொள்ள தோன்றாது. ஒட்டுமொத்தமாகவே கலோரி உட்கொள்ளும் அளவை குறைக்கும்.

    * நாவல் பழத்தில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்க உதவும். அதன் இலைகள் மற்றும் பட்டைகள் வாய் புண்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், ஈறு நோய்களை தடுப்பதற்கும் பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன.

    யார் எவ்வளவு சாப்பிட வேண்டும்?

    குழந்தைகள் 50 கிராம் முதல் 75 கிராம் வரை நாவல் பழத்தை உட்கொள்ளலாம். அதேவேளையில் அவர்களுக்கு ஒவ்வாமையோ, செரிமான பிரச்சினைகளோ ஏற்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்வது முக்கியமானது.

    மற்றவர்கள் சுமார் 100 கிராம் முதல் 150 கிராம் நாவல் பழம் உட்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகளாக இருந்தால் தினமும் 50 முதல் 100 கிராம் வரை சாப்பிடலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், ரத்தத்தில் சர்க்கரை அளவை நிர்வகிப்பதற்கும் உதவும்.

    இரைப்பை குடல் பிரச்சினை, சிறுநீரக பிரச்சினை கொண்டவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். ஏனெனில் நாவல் பழத்தில் ஆக்சலேட்டுகள் உள்ளன. அதனை அதிக அளவில் உட்கொண்டால் சிறுநீரக கற்களால் அவதிப்படுபவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நன்மைகளை தரும்.
    • மூளையின் இயக்கம் சீராக இருப்பதால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

    மது அருந்துபவர்கள் சராசரியாக ஒரு நபர் ஆண்டுக்கு 9.5 லிட்டர் ஆல்கஹால் உட்கொள்வதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. சிலர் அவ்வப்போது குடிப்பவர்கள். 28 நாட்களுக்கு மது அருந்தாமல் இருப்பது உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    நமது பழக்கவழக்கங்களால் நமது ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. நமது பழக்க வழக்கங்களால் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. சில மாற்றங்கள் நேர்மறையான விளைவைக் கொண்டிருக்கின்றன. சில மாற்றங்கள் மிகவும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

    மது குடிக்கும் பழக்கத்தை கைவிடுவது நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பலவிதமான நன்மைகளை தரும்.

    பொதுவாக, மது குடித்து உறங்கும் நிலையில் மூளையின் இயக்கம் சரியான நிலையில் இல்லாமல் போவதால் ஆழ்ந்த தூக்கம் இருக்காது.

    மதுவை கைவிடும் போது மூளையின் இயக்கம் சீராக இருப்பதால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

    காலையில் எழும் போது ஹேங்க் ஓவர் தலைவலி பாதிப்புகள் நீங்கும். மது உடலில் இருக்கும் நீர் சத்தை உறிஞ்சிக் கொள்வதால் வாய் நாக்கு வறண்டு விடும். ஆனால், மது குடிக்காதபோது உடலில் நீர் வினியோகம் சரியாக இருக்கும். மது மூளையில் உள்ள மெல்லிய நரம்புகளை பலவீனம் அடையச் செய்துவிடும்.

    மூளையின் நினைவாற்றலை கையாளும் பகுதியான "ஹிப்போகேம்பஸ்" என்ற பகுதியை செயல்பட விடாமல் மது தடுக்கிறது. இதனால், நினைவாற்றல் குறையும். எளிதில் எந்த விஷயங்களும் உடனே நினைவுக்கு வராது. ஆனால், மதுவை நிறுத்தியவுடன் மூளை நரம்புகள் பலம் பெறுவதால் நினைவாற்றல் மேம்பட ஆரம்பிக்கும்.

    மது உடலின் வளர்சிதை மாற்றத்தை குறைப்பதால் உண்ணும் உணவின் சத்துக்கள் உடலில் உட்கிரகிக்கப்படாமல் போகிறது. எனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய் தொற்றுகளுக்கு ஆளாக நேரிடும்.

    மதுவை நிறுத்தி விடும்போது வயிறு நன்றாக இருக்கும். செரிமான மண்டலம் பலம் பெற்று குடல் உறிஞ்சிகள் ஊட்டச்சத்துக்களை நன்றாக உறிஞ்சி, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை ரத்தத்தில் சேமிப்பதால் உடல் பலம் பெறும்.

    மதுப்பழக்கம் உடலின் தோல் பகுதியில் உள்ள நீர்ச்சத்தை இழக்க செய்வதால் மங்கலான அல்லது வீங்கிய சருமம் மற்றும் தோல் அழற்சியை ஏற்படுத்தும். மதுவை கைவிடும் போது தோலுக்கு போதியளவு நீர்ச்சத்து கிடைத்து சரும ஆரோக்கியம் மேம்படும்.

    மதுப்பழக்கம் உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்க்கான முக்கிய காரணமாக அறியப்படுகிறது. மதுவை கைவிடும்போது இதயம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

    • தினமும் குறைந்தது 7-8 மணிநேரம் தூங்க வேண்டும்.
    • ஆரோக்கியமான உடலை பராமரிக்க தினமும் குறைந்தது 7-8 கிளாஸ் தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

    நன்றாக தூங்குவது

    தூக்கமின்மை உடலின் இயற்கையான பழுதுபார்க்கும் செயல்முறைகளை சீர்குலைக்கிறது. இது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை இழக்கச் செய்யும் மன அழுத்த ஹார்மோன்களின் அளவு அதிகரிப்பதற்கும் வழிவகுக்கிறது. கூடுதலாக, இது நச்சுகளை எதிர்த்துப் போராடும் உடலின் திறனை பலவீனப்படுத்துகிறது. இந்த வாழ்க்கை முறை தோல் தொய்வு, கருமையான வட்டங்கள் மற்றும் சுருக்கங்களை ஏற்படுத்துகிறது. இளமை தோற்றத்தையும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்க தரமான தூக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பது அவசியம். தினமும் குறைந்தது 7-8 மணிநேரம் தூங்க வேண்டும்.

    மது பழக்கத்தை தவிர்க்கவும்

    அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வது உங்கள் வயதை அதிகமாக்கும். ஏனெனில் இது சருமத்தை நீரிழப்பு செய்கிறது, வீக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் கொலாஜன் உற்பத்தியைக் குறைக்கிறது. இந்த காரணிகள் முன்கூட்டிய சுருக்கங்கள், மந்தமான மற்றும் சீரற்ற தோல் தொனிக்கு வழிவகுக்கும்.

    நீரிழப்பு

    நிறைய தண்ணீர் குடிப்பது சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்கும் திறவு கோலாகும். நீரிழப்பு உயிரியல் முதுமையை விரைவுபடுத்துவது மட்டுமல்லாமல் நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. ஆரோக்கியமான உடலை பராமரிக்க தினமும் குறைந்தது 7-8 கிளாஸ் தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.


    உடற்பயிற்சி இல்லாமை

    வழக்கமான உடற்பயிற்சி உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இதன் விளைவாக தோல் பிரகாசம் அதிகரிக்கிறது. வழக்கமான உடற்பயிற்சியானது ஆரோக்கியமான மற்றும் அதிக சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழ உதவுகிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. மாறாக, உடற்பயிற்சியின்மை உடல் பருமன், நீரிழிவு, இதயம் தொடர்பான நோய்கள் போன்ற பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

    புகைபிடித்தல்

    நமது உடல் உறுப்புகளில் புகைபிடிப்பதால் ஏற்படும் தீங்கான விளைவுகள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், அதன் விளைவுகள் வயதான செயல்முறைக்கு நீட்டிக்கப்படுகின்றன. மேலும் உடலில் அழற்சியின் அளவை உயர்த்துகின்றன. இந்த வீக்கம் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் புரதங்களை சேதப்படுத்துகிறது, இது சுருக்கங்கள், நேர்த்தியான கோடுகள் மற்றும் மந்தமான நிறத்தை உருவாக்க வழிவகுக்கிறது. தோல் ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வைப் பாதுகாக்க புகைபிடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

    சூரிய வெளிப்பாடு

    சூரியனின் புற ஊதா (UV) கதிர்களைத் தொடர்ந்து வெளிப்படுத்துவது உங்கள் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை அழிக்கிறது. இதனால் அது சுருக்கங்கள் மற்றும் தொய்வுகளுக்கு ஆளாகிறது. இது மட்டுமல்லாமல், இந்த தீங்கு விளைவிக்கும் கதிர்களை நீண்ட நேரம் வெளிப்படுத்துவது தோல் புற்றுநோயின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது. உங்கள் சருமத்தை இளமையாகவும், புள்ளிகள் இல்லாமலும் வைத்திருக்க, வெளியே செல்வதற்கு முன் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்.


    மன அழுத்தம்

    மன அழுத்தம் என்பது முதுமைக்கு ஒரு வேகமான வழியாகும். அறியப்பட்ட உடல்நல பாதிப்புகளுக்கு அப்பால், மன அழுத்தம் உங்கள் சருமத்தை மங்கச் செய்யும் வீக்கத்தைத் தூண்டுகிறது மற்றும் உங்கள் சரும செல்களை முன்கூட்டியே முதிர்ச்சியடையச் செய்கிறது. எனவே, தியானம், யோகா அல்லது பொழுதுபோக்குடன் இளமைப் பொலிவு மற்றும் உயிர்ச்சக்தியை அப்படியே வைத்திருக்கவும்.

    ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்

    ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை இழந்து, தீங்கு விளைவிக்கும் பொருட்களை ஏற்றுவதன் மூலம் வயதானதை விரைவாகக் கண்காணிக்கலாம். மோசமான ஊட்டச்சத்து தோலின் வயதை துரிதப்படுத்துகிறது. மந்தமான தன்மை, சுருக்கங்கள் மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை இழக்கிறது. கூடுதலாக, அதிகப்படியான சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் வீக்கத்திற்கு வழிவகுக்கும், மேலும் வயதான செயல்முறையை விரைவுபடுத்துகிறது. ஒரு சீரான, ஊட்டச்சத்து நிறைந்த உணவை ஏற்றுக்கொள்வது இளமை நிறத்தையும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த சருமத்தை வளர்க்கும்.

    ×