என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரிஷப் ஷெட்டி"
- சிறந்த இயக்குனராக சூரஜ் ஆர் பர்ஜாத்யா (உஞ்சாய்) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- சிறந்த இசையமைப்பாளராக பிரிட்டம் (Brahmastra) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
70-வது தேசிய பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. 2022-ல் சினிமாத்துறையில் சிறந்து விளங்கிய படங்கள், நடிகர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டன.
கன்னட திரைப்படமான காந்தாரா படத்தில் நடித்த ரிஷப் ஷெட்டி சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தை இயக்கியவரும் ரிஷப் ஷெட்டிதான். மேலும் இந்த படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த நடிகர்: ரிஷப் ஷெட்டி (காந்தாரா)
சிறந்த நடிகை: நித்யா மேனன் மற்றும் மானசி பரேக்
சிறந்த துணை நடிகை: நீனா குப்தா (உஞ்சாய்)
சிறந்த பின்னணி பாடகர்: அரிஜித் சிங் (பிரம்மாஸ்திரா) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த இசையமைப்பாளர்: பிரிட்டம் (பிரம்மாஸ்திரா)
சிறந்த பின்னணி இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான் (பொன்னியின் செல்வன்-1)
சிறந்த இயக்குனர்: சூரஜ் ஆர் பர்ஜாத்யா (உஞ்சாய்)
சிறந்த படம்: ஆட்டம் (Feature Film), பிரம்மாஸ்திரா (சிறந்த விஎஃப்எக்ஸ்), காந்தாரா (முழுக்க முழுக்க பொழுபோக்கு)
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ’காந்தாரா’ வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுகிறது.
- இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
கடந்த ஆண்டு சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் 'காந்தாரா' டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வசூலை அள்ளியது.
இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் சீக்வலாக இல்லாமல், ப்ரீக்வலாக உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். இதையடுத்து இப்படத்திற்கு 'காந்தாரா- ஏ லெஜண்ட் பாகம் 1' என தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு சமீபத்தில் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை பகிர்ந்து அறிவித்தது.
இந்நிலையில், காந்தாரா- ஏ லெஜண்ட் பாகம் 1' திரைப்படத்தின் கதை 1970 -80 காலகட்டத்தில் நடைபெறுவது போன்று அமைந்துள்ளதால் இதற்கான பிரமாண்ட செட் அமைக்கும் பணி மங்களூரில் பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'காந்தாரா- ஏ லெஜண்ட் பாகம் 1'.
- இப்படம் சீக்வலாக இல்லாமல், ப்ரீக்வலாக உருவாகவுள்ளது.
கடந்த ஆண்டு சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் 'காந்தாரா' டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வசூலை அள்ளியது.
ரூ.8 கோடி செலவில் தயாரான 'காந்தாரா' திரைப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் சீக்வலாக இல்லாமல், ப்ரீக்வலாக உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார்.
காந்தாரா பாகம் 1 போஸ்டர்
இதையடுத்து இப்படத்திற்கு 'காந்தாரா- ஏ லெஜண்ட் பாகம் 1' என தலைப்பு வைத்துள்ளதாகவும் இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளது. ஆக்ரோஷமாக ரிஷப் ஷெட்டி இருக்கும் இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- காந்தாரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
- இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
கடந்த ஆண்டு சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் 'காந்தாரா' டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வசூலை அள்ளியது.
ரூ.8 கோடி செலவில் தயாரான 'காந்தாரா' திரைப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் சீக்வலாக இல்லாமல், ப்ரீக்வலாக உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். இதையடுத்து இப்படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.
காந்தாரா 2 போஸ்டர்
இந்நிலையில், 'காந்தாரா பாகம்-1' திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் 27-ஆம் தேதி நண்பகல் 12.25 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. மேலும், இந்த போஸ்டரில் 'இது வெறும் வெளிச்சம் அல்ல தரிசனம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘காந்தாரா’.
- இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
கடந்த ஆண்டு சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் 'காந்தாரா' டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வசூலை அள்ளியது.
ரூ.8 கோடி செலவில் தயாரான 'காந்தாரா' திரைப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் சீக்வலாக இல்லாமல், ப்ரீக்வலாக உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். இதையடுத்து இப்படத்தின் கதையை இயக்குனர் ரிஷப் ஷெட்டி எழுதி வருவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'காந்தாரா 2' படத்தின் திரைக்கதையை இயக்குனர் ரிஷப் ஷெட்டி எழுதி முடித்துள்ளதாகவும் இப்படத்தின் பூஜை நவம்பர் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கதைக்காக ரிஷப் ஷெட்டி பல ஆராய்சிகளை செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
- ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘காந்தாரா’.
- இப்படத்தின் இரண்டாம் பாகம் ப்ரீக்வலாக உருவாக உள்ளது.
கடந்த ஆண்டு சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் 'காந்தாரா' டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வசூலை அள்ளியது.
ரூ.8 கோடி செலவில் தயாரான 'காந்தாரா' திரைப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் சீக்வலாக இல்லாமல், ப்ரீக்வலாக உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'காந்தாரா 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கும் என்றும் இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்காக இயக்குனர் ரிஷப் ஷெட்டி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
- “காந்தாரா” திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் ரிஷப் ஷெட்டி.
- தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரும் இயக்குனருமாக வலம் வருபவர் ரிஷப் ஷெட்டி. இவர் சமீபத்தில் வெளியான "காந்தாரா" திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் ரிஷப் ஷெட்டியை இந்தியா முழுவதும் அறியவைத்தது.
இவர் தற்போது "காந்தாரா" படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில், ரிஷப் ஷெட்டி தனது 40வது பிறந்தநாளை ரசிகர்களுடன் கடந்த 7ஆம் தேதி கொண்டாடினார். அந்த விழாவில் "காந்தாரா" திரைப்படத்தில் இடம்பெற்ற 'பூத கோலா' நடனத்தை மேடையில் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அதன்பின்னர் அவரது மனைவி பிரகதி, ரிஷப் ஷெட்டி பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்திருப்பதாக தெரிவித்தார். இந்த அறக்கட்டளை குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் அறிவித்தார்.
ரிஷப் ஷெட்டியை பார்ப்பதற்காக அவரது ரசிகர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வரும்பவர் ரிஷப் ஷெட்டி.
- இவர் இயக்கத்தில் காந்தாரா -2 விரைவில் உருவாகவுள்ளது.
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. கடந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.
பஞ்சுருளியிடம் ஆசிப்பெற்ற ரிஷப் ஷெட்டி
கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்தை பலரும் பாராட்டினர். இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இயக்குனர் ரிஷப் ஷெட்டி நிஜ காந்தாராவான பஞ்சுருளி தெய்வத்தை நேரில் சென்று வணங்கி ஆசி பெற்றுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
- இயக்குனர் ரிஷப் ஷெட்டி ‘காந்தாரா -2’ திரைப்பட வேலையில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.
- இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளதாக படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது.
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. கடந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.
காந்தாரா
கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்தை பலரும் பாராட்டினர். இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இயக்குனர் ரிஷப் ஷெட்டி கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மையை சந்தித்துள்ளார்.
ரிஷப் ஷெட்டி - பசவராஜ் பொம்மை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,"கொல்லூரில் முகாம்பிகை தரிசனம் செய்ய சென்ற போது முதல் மந்திரி பசவராஜ் பொம்மையை சந்தித்தேன், எனக்கு அரசியல் சாயம் வேண்டாம், காந்தார எழுத்தில் முழுமையாக ஈடுபட்டுள்ளேன், உங்கள் அனைவரின் அன்பும் வரமாக அமையட்டும்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
வரவிருக்கும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மைக்கு ஆதரவாக நடிகர் கிச்சா சுதீப் பிரசாரம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ಕೊಲ್ಲೂರು ಮುಕಾಂಬಿಕೆ ದರ್ಶನಕ್ಕೆ ಹೋದಾಗ ಮಾನ್ಯ ಮುಖ್ಯಮಂತ್ರಿಗಳ ಭೇಟಿಯಾಯಿತು, ರಾಜಕೀಯದ ಬಣ್ಣ ಬೇಡ, ? ಕಾಂತಾರದ ಬರವಣಿಗೆಯಲ್ಲಿ ಸಂಪೂರ್ಣ ತೊಡಗಿ ಕೊಂಡಿದ್ದೇನೆ, ನಿಮ್ಮೆಲ್ಲರ ಪ್ರೀತಿ ಆಶೀರ್ವಾದ ಇರಲಿ ?? pic.twitter.com/Sw7WjiRWdG
— Rishab Shetty (@shetty_rishab) April 13, 2023
- கடந்த ஆண்டு வெளியான காந்தாரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
- இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. கடந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.
ரிஷப் ஷெட்டி பதிவு
கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்தை பலரும் பாராட்டினர். இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து நேற்று யுகாதி பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குனர் ரிஷப் ஷெட்டி 'காந்தாரா -2' திரைப்படத்தின் கதை எழுதும் பணியில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
ನಾಡಿನ ಸಮಸ್ತ ಜನತೆಗೆ ಯುಗಾದಿ ಹಬ್ಬದ ಶುಭಾಷಯಗಳು.
— Rishab Shetty (@shetty_rishab) March 22, 2023
Happy Ugadi !
ಬರವಣಿಗೆಯ ಆದಿ…Kantara writing begins ! pic.twitter.com/6nfIfCeEiu
- இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘காந்தாரா’.
- இப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. கடந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.
காந்தாரா
கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்தை பலரும் பாராட்டினர். இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டியை கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை சந்தித்துள்ளார்.
ரிஷப் ஷெட்டி - பசவராஜ் பொம்மை
இது தொடர்பாக பசவராஜ் பொம்மை தனது சமூக வலைதளத்தில், "கன்னடத்தின் பெருமைக்குரிய இயக்குனர் ரிஷப் ஷெட்டி காந்தாரா திரைப்படத்தின் மூலம் நமது மண்ணின் கலாச்சாரத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர், வனவாசிகளுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளை நம் முன் வைத்தவர். இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் விரைவில் தீர்க்க அரசு ஆர்வமாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
ನಮ್ಮ ನೆಲದ ಮೂಲ ಸಂಸ್ಕೃತಿ - ಪರಂಪರೆಯನ್ನು ಕಾಂತಾರ ಚಿತ್ರದ ಮೂಲಕ ಜಗತ್ತಿಗೆ ಪರಿಚಯಿಸಿದ ಕನ್ನಡದ ಹೆಮ್ಮೆಯ ನಿರ್ದೇಶಕ @shetty_rishab ಯವರು ಅರಣ್ಯ ನಿವಾಸಿಗಳೊಡನೆ ಚರ್ಚಸಿ ಅವರ ಸಮಸ್ಯೆಗಳನ್ನು ನಮ್ಮ ಮುಂದೆ ಮಂಡಿಸಿದ್ದಾರೆ. ಈ ಎಲ್ಲಾ ಸಮಸ್ಯೆಗಳನ್ನು ಶೀಘ್ರವಾಗಿ ಪರಿಹರಿಸಲು ಸರ್ಕಾರ ಸಹ ಉತ್ಸುಕವಾಗಿದೆ. pic.twitter.com/CL0i9iVtvN
— Basavaraj S Bommai (@BSBommai) March 8, 2023
- நடிகர் ரிஷப் ஷெட்டி ‘காந்தாரா’ படத்தின் மூலம் உலக அளவில் அறியப்பட்டார்.
- ’காந்தாரா’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. கடந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.
ரிஷப் ஷெட்டி
கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்தை பலரும் பாராட்டினர். இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், 'சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகர்' என்ற பிரிவில் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு 2023-ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்த விழா நேற்று (பிப்ரவரி 20) மும்பையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Feels honoured and Blessed to be awarded prestigious Dadasaheb Phalke Award for Most Promising Actor (Hindi). pic.twitter.com/EeGA68fM81
— Rishab Shetty (@shetty_rishab) February 20, 2023
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்