search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விரைவு ரயில்"

    • பலத்த சத்தத்துடன் எஞ்ஜினில் இருந்து பெட்டிகள் தனியாக பிரிந்தன.
    • சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    எர்ணாகுளம் - டாடா நகர் விரைவு ரயில் இன்று காலை கேரளா மாநிலத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது ரயிலின் பிரதான பகுதியில் இருந்து பலத்த சத்தத்துடன் எஞ்ஜினில் இருந்து பெட்டிகள் தனியாக பிரிந்தன. இந்த சம்பவமானது காலை 9.30 மணியளவில் நடந்துள்ளது.

    இந்த சம்பவத்தில் எஞ்ஜில் இருந்து மூன்றாவது பெட்டி விலகியுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பிரிந்து நின்ற பெட்டிகளை சரி செய்து எஞ்சினுடன் இணைத்ததால் ரயில் மீண்டும் இயக்கப்பட்டது.

    சம்பவம் நடந்த போது ரயில் மெதுவாக நகர்ந்ததாகவும், பயணிகள் யாருக்கும் எந்த காயமும் எற்படவில்லை எனவும் அதிகாரிகள் கூறினர். ரயில் எஞ்ஜினில் இருந்து பிரிந்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டைக்கு விரைவு ரயில் சேவை இன்று துவங்கியது.
    • செங்கோட்டையிலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் மாலை 4.30 மணிக்கு மயிலாடுதுறை வந்தடையும்.

    சுவாமிமலை:

    மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டைக்கு விரைவு ரயில் சேவை துவக்கம்.மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டைக்கு விரைவு ரயில் சேவை இன்று துவங்கியது.மயிலாடுதுறையில் இருந்து காலை 11:30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராஜபாளையம், சிவகாசி, தென்காசி வழியாக செங்கோட்டை சென்றடையும்.

    இதே மார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் மாலை 4.30 மணிக்கு மயிலாடுதுறை வந்தடையும். இன்று 9 பெட்டிகளுடன் இயக்கப்பட்ட இந்த ரயிலில் 23 பெட்டிகளை இணைத்து இயக்க ரயில் பயணிகள் கோரிக்கை. நிறுத்தப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து நேற்று மீண்டும் இயக்கப்படும் மயிலாடுதுறை- செங்கோட்டை விரைவு ரயிலுக்கு கும்பகோணம் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு.இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கும்பகோணம் வர்த்தக சங்கத்தினர். மற்றும் ரயில் பயணிகள் சங்கத்தினர்.அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    ×