search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "90 சதவீதம் நிறைவு"

    • ஆழியாறு, அப்பா் ஆழியாறு, திருமூா்த்தி என 9 அணைகள் உள்ளன.
    • இந்த அணை, ஒருமுறை நிரம்பிவிட்டால் ஒரு ஆண்டு பாசனத்துக்கும், குடிநீருக்கும் பற்றாக்குறை ஏற்படாது.

    ெபாள்ளாச்சி,

    பரம்பிக்குளம் -ஆழியாறு எனும் பி.ஏ.பி திட்டத்தில் மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, அப்பா் ஆழியாறு, திருமூா்த்தி என 9 அணைகள் உள்ளன.

    இதில் பரம்பிக்குளம் அணை பி.ஏ.பி திட்டத்தில் உள்ள தொகுப்பு அணைகளில் அதிக கொள்ளளவு கொண்டது. 17 டி.எம்.சி.க்கும் அதிகமாக கொள்ளளவு கொண்ட இந்த அணை, ஒருமுறை நிரம்பிவிட்டால் ஒரு ஆண்டு பாசனத்துக்கும், குடிநீருக்கும் பற்றாக்குறை ஏற்படாது.

    பி.ஏ.பி திட்டத்தில் தமிழகத்தில் 4.25 லட்சம் ஏக்கா் நிலம், கேரளாவில் 22 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.இந்நிலையில், பரம்பிக்குளம் அணையின் மதகு கடந்த செப்டம்பா் 20-ந் தேதி உடைந்ததால் அணையில் இருந்து 6 டி.எம்.சி தண்ணீா் வெளியேறியது.

    மதகு உடைப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து நீா்ப் பாசனத் துறை அமைச்சா் துரைமுருகன் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா். மேலும், சில அமைச்சா்களும் ஆய்வு செய்தனா்.

    இதையடுத்து ரூ.7.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மதகு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி தற்போது 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. டிசம்பா் முதல் வாரத்துக்குள் பணிகள் முழுமையாக முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

    இதனை கோவை மண்டலத் தலைமைப் பொறியாளா் முத்துசாமி, பி.ஏ.பி கண்காணிப்புப் பொறியாளா் தேவராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் பணியை ஆய்வு செய்து வருகின்றனா்.

    பரம்பிக்குளம் அணை மதகு உடைப்பு ஏற்பட்டதால் குடிநீருக்கு பாதிப்பு ஏற்படும் என சிலா் தெரிவித்தனா். ஆனால், அதிகாரிகள் தங்கள் நீா் மேலாண்மை திறமையின் மூலம் தற்போது வரை பாசனத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் தண்ணீா் வழங்கி வருகின்றனா். இதனால் மதகு உடைப்பால் திருமூா்த்தி அணையில் இருந்து பாசனம் பெறும் பகுதிகள் பாதிப்படையவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

    • சோலாரில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது.
    • இந்த தற்காலிக பஸ் நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு 156 பஸ்கள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி மையப்பகுதியில் ஈரோடு பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாளொன்றுக்கு 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறுகிய இடம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சூளை மற்றும் சோலாரில் 2 பஸ் நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சோலாரில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது.

    இந்த தற்காலிக பஸ் நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு 156 பஸ்கள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

    மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கரூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் முழுமையாக இந்த பஸ் நிலையத்தில் இருந்துதான் இயக்கப்பட உள்ளன.

    இதற்கான பணிகள் கடந்து சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த புதிய பஸ் நிலையத்தில் கடைகள், இருசக்கர வாகன நிறுத்துமிடம், நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம், போக்குவரத்து துறை சார்ந்த அலுவலர்கள் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுக்கு அறைகள் கட்டப்பட்டுள்ளன.

    கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டன. பஸ் நிலையத்தின் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து விட்டன. தற்போது பயணிகளுக்கு தேவையான குடிநீர் , நடைபாதை மற்றும் இருக்கைகள் அமைக்கும் பணி விறு விறுப்பாக நடந்து வருகின்றன.

    இந்த பணிகளும் முடிந்து இன்னும் 2, 3 வாரங்களில் பஸ் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×