search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம் எஸ் டோனி"

    • எம்.எஸ். டோனி தலைமையின் கீழ் யுவராஜ் சிங் நீண்ட காலமாக விளையாடினார்.
    • 2007 மற்றும் 2011 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல யுவராஜ் சிங் முக்கிய வீரராக திகழ்ந்தார்.

    இந்திய அணியின் தலைசிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக திகழந்தவர் யுவராஜ் சிங். இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் திகழ்ந்தார். இந்திய அணி 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கும், 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் யுவராஜ் சிங்.

    இவரது தந்தை யோக்ராஜ் சிங். இவர் தொடர்ந்து எம்.எஸ். டோனியை விமர்சித்து வருகிறார். தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்தவர் என வெளிப்படையாக குற்றம்சாட்டுகிறார்.

    இந்த நிலையில் எம்.எஸ். டோனியை ஒருபோதும் மன்னிக்கமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் கூறியதாவது:-

    நான் எம்.எஸ். டோனியை மன்னிக்க மாட்டேன். கண்ணாடியில் அவரது முகத்தை அவர் பார்க்க வேண்டும். அவர் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர். ஆனால், அவர் எனது மகனுக்கு (யுவராஜ் சிங்) எதிரான என்ன செய்தார்? என்பதெல்லாம் தற்போது வெளியாகி கொண்டிருக்கிறது. இதை எனது வாழ்நாள் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்.

    நான் எனது வாழ்வில் இரணடு விசயங்களை செய்தது கிடையாது. முதல் விசயம், எனக்கு எதிராக செயல்பட்டவர்களை ஒருபோதும் மன்னித்தது கிடையாது. 2-வது, எனது குடும்ப உறுப்பினர்களாக இருந்தாலும் சரி அல்லது குழந்தைகளாக இருந்தாலும் சரி, ஒருபோதும் என வாழ்வில் கட்டிப்பிடிக்கமாட்டேன்.

    இவ்வாறு யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் தெரிவித்துள்ளனர்.

    ஏற்கனவே ஐபிஎல் 2024 தொடரில் சிஎஸ்கே தோல்விக்கு டோனியின் மோசமான செயல்கள்தான் காரணம். யுவராஜ் சிங் மீது டோனி பொறாமைப்படுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எம்.எஸ்.டோனி பலருக்கு ரோல் மாடலாகத் திகழ்ந்து வருகிறார்.
    • நடுவர்கள் வழங்கும் தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்வதிலும் டோனி வல்லவர்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் மகேந்திரசிங் டோனி. இவரது தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 உலகக் கோப்பைகளை வென்றுள்ளது. பல தொடர்களில் இந்திய அணிக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

    விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் சாதனை படைத்துள்ள அவர் பலருக்கு ரோல் மாடலாகத் திகழ்ந்து வருகிறார்.

    விக்கெட் கீப்பிங், ஸ்டம்பிங், ரன் அவுட், கேட்ச் என அனைத்திலும் சிறப்பாக செயல்படும் திறமை கொண்டவர் டோனி. நடுவர்கள் வழங்கும் தீர்ப்பை எதிர்த்து முறையீடு (டி.ஆர்.எஸ்) செய்வதிலும் டோனி வல்லவர்.

    இந்நிலையில், டோனி எப்போதுமே துல்லியத்திற்கும் நெருக்கமான டி.ஆர்.எஸ். முடிவுகளை எடுப்பார் என இந்தியாவின் பிரபல நடுவர் அனில் சவுத்ரி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அனில் சவுத்ரி சமீபத்தில் அளித்த பேட்டியில், ரசிகர்கள் கூறுவது உண்மைதான். டோனி மிகவும் துல்லியமானவர். அவருடைய அழைப்புகள் (டி.ஆர்.எஸ்.) கிட்டத்தட்ட துல்லியத்திற்கு மிகவும் நெருக்கமாக இருக்கும். பேட்ஸ்மேன்களுக்கு பின்னால் இருப்பதால் விக்கெட் கீப்பர்களால் சில நேரங்களில் பவுலர்களின் பொசிஷனை சரியாகப் பார்க்கமுடியாது. அது வித்தியாசமானது. இருப்பினும் டோனி எடுக்கும் முடிவுகள் காரணம் மிகுந்ததாக இருக்கும் என தெரிவித்தார்.

    • பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜடேஜா 43 ரன்கள் விளாசினார்.
    • இந்த போட்டியில் சென்னை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 43 ரன்கள் அடித்தார். பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ராகுல் சஹார், ஹர்ஷல் படேல் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி சென்னை பந்து வீச்சாளர்களின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. முடிவில் பஞ்சாப் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    அந்த அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் அடித்தார். சென்னை தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஜடேஜா 3 விக்கெட்டுகளும், தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

    இந்த போட்டியில் ஆட்டநாயகனாக ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் சிஎஸ்கே அணிக்காக அதிகமுறை ஆட்டநாயகன் விருதை வென்ற டோனி சாதனையை ஜடேஜா முறியடித்துள்ளார். டோனி 15 முறை ஆட்டநாயகன் விருதை வென்று முதல் இடத்தில் இருந்தார். தற்போது அதனை முறியடித்து ஜடேஜா (16 முறை) முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    இவர்களுக்கு அடுத்தப்படியாக ரெய்னா 12 முறையும் ருதுராஜ் 11 முறையும் ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை சூப்பர் கிங்ஸ் 5 வெற்றி, 5 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது
    • கடந்த ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய பத்திரனா 19 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

    நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 5 வெற்றி, 5 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 11-வது போட்டியில் பஞ்சாப் கிங்சை நாளை (5-ந் தேதி) மீண்டும் சந்திக்கிறது. இந்த ஆட்டம் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவில் மாலை 3.30 மணிக்கு நடக்கிறது.

    இந்நிலையில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி தம்மை மற்றொரு அப்பாவைப் போல பார்த்துக் கொள்வதாக பத்திரனா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

    பத்திரனாவின் வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில்,

    "என்னுடைய அப்பாவுக்கு பின் கிரிக்கெட் வாழ்க்கையில் டோனி பெரும்பாலும் என் அப்பாவின் வேலையை செய்கிறார். எப்போதும் என் மீது அக்கறையை காட்டும் அவர் நான் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய சில ஆலோசனைகளை கொடுக்கிறார். எனது வீட்டில் இருக்கும் போது கிட்டத்தட்ட எனது அப்பா காட்டும் அக்கறையை அவர் இங்கே காட்டுகிறார். அதுவே போதும் என்று நினைக்கிறேன்.

    களத்திலும் களத்திற்கு வெளியேயும் அவர் நிறைய விஷயங்களை என்னிடம் சொல்ல மாட்டார். சிறிய விஷயங்களை மட்டுமே சொல்வார். ஆனால் அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். அது எனக்கு நிறைய தன்னம்பிக்கையையும் கொடுக்கும்" என்று அவர் கூறினார்.

    கடந்த ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய பத்திரனா 19 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இந்த சீசனில் இதுவரை 13 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை சூப்பர் கிங்சின் பந்துவீச்சு நிலை பரிதாபமாக உள்ளது.
    • இரு அணிகளும் நாளை மோதுவது 30-வது போட்டியாகும்.

    தர்மசாலா:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

    நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 5 வெற்றி, 5 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

    சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 6 ஆட்டத்தில் சி.எஸ்.கே. 4-ல் வெற்றி (பெங்களூரு 6 விக்கெட், குஜராத் 63 ரன், கொல்கத்தா 7 விக்கெட் , ஐதராபாத் 78 ரன்) பெற்றது. இரண்டில் (லக்னோ 6 விக்கெட், பஞ்சாப் 7 விக்கெட்) தோற்றது. வெளியூரில் ஆடிய 4 போட்டியில் ஒன்றில் வெற்றி (மும்பை 20 ரன்) பெற்றது. 3 ஆட்டத்தில் ( டெல்லி 20 ரன், ஐதராபாத் 6 விக்கெட், லக்னோ 8 விக்கெட்) தோற்றது.

    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 11-வது போட்டியில் பஞ்சாப் கிங்சை நாளை (5-ந் தேதி) மீண்டும் சந்திக்கிறது. இந்த ஆட்டம் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் மாலை 3.30 மணிக்கு நடக்கிறது.

    சேப்பாக்கத்தில் கடந்த 1-ந் தேதி நடந்த ஆட்டத்தில் தோற்றதற்கு சி.எஸ்.கே. பழிவாங்கும் ஆர்வத்தில் இருக்கிறது. பஞ்சாப் கிங்சுக்கு பதிலடி கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் 6-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    பிளே ஆப் சுற்றுக்கு நுழைய எஞ்சிய 4 ஆட்டங்களும் முக்கியமானது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

    அதிரடி பேட்ஸ்மேன் ஷிவம் துபே கடந்த ஆட்டத்தில் டக்அவுட் ஆனதால் அணி போதுமான ரன்களை குவிக்கவில்லை. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார். அவர் 1 சதம், 4 அரை சதத்துடன் 509 ரன் குவித்து இந்த தொடரில் முதல் இடத்தில் உள்ளார்.

    நாளைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்சின் பந்துவீச்சு நிலை பரிதாபமாக உள்ளது. 5 பவுலர்கள் ஆடவில்லை.

    14 விக்கெட் வீழ்த்திய முஸ்டாபிசுர் ரகுமான் சர்வதேச போட்டிக்காக வங்காளதேசம் திரும்பியுள்ளார். பதிரனா, தீக் ஷனா உலக கோப்பை விசா நடைமுறைக்காக இலங்கை சென்றுள்ளனர். தீபக் சாஹர் காயத்தில் உள்ளார். துஷார் தேஷ்பாண்டே காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    இது சி.எஸ்.கே.வுக்கு பாதிப்பே. நாளைய ஆட்டத்தில் பந்துவீச்சில் முழுமையான மாற்றம் இருக்கும்.

    பஞ்சாப் கிங்ஸ் 4 வெற்றி , 6 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி சென்னையை மீண்டும் வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

    பஞ்சாப் அணியில் பேர்ஸ்டோ, ஷசாங்சிங், பிரப்சிம்ரன், அர்ஷ்தீப் சிங், கேப்டன் சாம் கரண், ரபடா போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 30-வது போட்டியாகும். இதுவரை நடந்த 29 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 15-ல், பஞ்சாப் கிங்ஸ் 14-ல் வெற்றி பெற்றுள்ளன.

    இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

    • ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்காக சிஎஸ்கே வீரர் முஸ்தஃபிசுர் வங்கதேசம் திரும்பினார்.
    • உங்களைப் போன்ற லெஜண்டுடன் சேர்ந்து விளையாடியது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது.

    ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் முதல் 4 இடங்கள் முறையே ராஜஸ்தான், கொல்கத்தா, லக்னோ, ஐதராபாத் ஆகிய அணிகள் உள்ளன. இந்த புள்ளிபட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வெற்றி 5 தோல்வியுடன் 5-வது இடத்தில் உள்ளது.

    சென்னை அணிக்கு பேட்டிங் சிறப்பாக இருந்தாலும் பந்து வீச்சு கவலை அளிக்கும் விதமாக உள்ளது. முஸ்தஃபிசுர் தவிர மற்ற பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கி வருகின்றனர். இதனால் வெற்றி பெற போட்டியில் கூட சென்னை அணி தோல்வியை சந்தித்து வருகிறது.

    சிஎஸ்கே அணிக்கு பந்து வீச்சுக்கு பக்க பலமாக இருந்த வங்காள தேச வீரர் முஸ்தஃபிசுர் ரகுமான் சிஎஸ்கே அணியில் இருந்து விடை பெற்றார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்காக சிஎஸ்கே வீரர் முஸ்தஃபிசுர் வங்கதேசம் திரும்பினார்.

    இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அந்த பதிவில் எல்லாவற்றுக்கும் நன்றி மஹி பாய். உங்களைப் போன்ற லெஜண்டுடன் சேர்ந்து விளையாடியது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. உங்களது மதிப்புமிக்க அறிவுரைகளுக்கு நன்றி.

    அவற்றை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். உங்களை மீண்டும் சந்திக்கவும், மீண்டும் உங்களுடன் சேர்ந்து விளையாடவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

    • முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 191 ரன்கள் எடுத்தது.
    • டெல்லி அணி 20 ரன்கள் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது.

    ஐபிஎல் தொடரின் 13-வது லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 191 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 171 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 20 ரன்கள் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது.

    இந்நிலையில் இந்த போட்டியில் அதிரடியாக பேட்டிங் செய்த டோனிக்கு எலக்ட்ரிக் ஸ்டிரைக்கர் ஆஃப் தி மேட்ச் என்ற ஸ்பெஷல் விருது வழங்கப்பட்டது. அதைப் பார்த்த அவருடைய மனைவி சாக்ஷி, தோல்வியை சந்தித்த சோகம் கொஞ்சமாவது முகத்தில் தெரியுதா பாருங்க என்ற வகையில் இன்ஸ்டாகிராமில் கலாய்த்துள்ளார்.

    இது பற்றி இன்ஸ்டாகிராமில் சாக்ஷி கூறியதாவது:-

    ஹேய் மஹி. நாம் போட்டியில் தோல்வியை சந்தித்தோம் என்பதை உணர முடியவில்லை என்று சிரிக்கும் ஸ்மைலியை போட்டு கலாய்த்துள்ளார். அத்துடன் வெற்றி பெற்ற ரிஷப் பண்ட்க்கு அவர் தெரிவித்துள்ள வாழ்த்து பின்வருமாறு, அனைத்துக்கும் முதலாக ரிஷப் பண்ட்டுக்கு வரவேற்பு கொடுப்போம் என்று கூறியுள்ளார்.

    • நாளை ஐபிஎல் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க இருக்கிறது.
    • டோனியின் புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் நாளை தொடங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியின் வீரர்களை தயார் செய்து தற்போது தீவிர பயிற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர்.

    நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. இதில் ஆர்சிபி- சிஎஸ்கே அணிகள் மோத உள்ளன. மேலும் ஐ.பி.எல். தொடரின் தொடக்க விழாவும் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளதால் அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில் டோனியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது. ஐபிஎல் அறிமுக போட்டியில் டோனி எந்த ஹர் ஸ்டைலுடன் இருந்தாரோ அந்த ஸ்டைலுடன் நடப்பு ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ளார். கருப்பு நிற உடையில் டோனி இருக்கும் புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

    இதற்கு பல லட்சம் ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். மேலும் ஹீரோ மாதிரி இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

    • 2-வது டெஸ்ட் போட்டியில் வர்ணனையாளராக ஜாகீர் கான் மற்றும் பீட்டர்சன் ஆகியோர் செயல்பட்டனர்.
    • அப்போது இந்திய கேப்டன் டோனி தன்னுடைய பாக்கெட்டில் இருப்பதாக ஜாகீர் கானிடம் பீட்டர்சன் கூறினார்.

    இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்தும் 2-வது டெஸ்ட்டில் இந்தியாவும் வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளனர்.

    இந்நிலையில் இந்த போட்டியில் வர்ணனையாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் பீட்டர்சன் ஆகியோர் செயல்பட்டனர். அப்போது இந்திய கேப்டன் டோனி தன்னுடைய பாக்கெட்டில் இருப்பதாக ஜாகீர் கானிடம் பீட்டர்சன் கூறினார். அதற்கு யுவராஜ் சிங் உங்களை பலமுறை அவுட்டாக்கி தம்முடைய பாக்கெட்டில் போட்டதை மறந்து விடாதீர்கள் என்று ஜாகீர் கான் பதிலடி கொடுத்தார்.

    இது குறித்து அவர்கள் பேசிய உரையாடல் பின்வருமாறு:-

    கெவின் பீட்டர்சன்: என்னுடைய பாக்கெட்டில் யார் இருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா? மகத்தான டோனி. அவர் கம்ரான் அக்மலுக்கு அடுத்தபடியாக இருக்கிறார்.

    ஜாகீர் கான்: நான் சமீபத்தில் யுவராஜ் சிங்கை சந்தித்தேன் என்பது உங்களுக்கு தெரியும். அவர் அங்கே கெவின் பீட்டர்சன் இருப்பதை பற்றி என்னிடம் கூறினார்.

    கெவின் பீட்டர்சன்: ஆம்.. நீங்கள் அதை சொல்வீர்கள் என்று எனக்கு தெரியும். யுவராஜ் என்னை சில முறை அவுட்டாக்கியுள்ளார்.

    ஜாகீர் கான்: அதனால் கெவின் பீட்டர்சன் ஒரு பட்டப் பெயரை யுவராஜுக்கு கொடுத்தது எனக்கு நினைவிருக்கிறது.

    கெவின் பீட்டர்சன்: ஆம் அதை யுவராஜ் தன்னுடைய இமெயில் முகவரியாக நீண்ட காலம் பயன்படுத்தினார். நாங்கள் சில மகத்தான போட்டி போட்டுள்ளோம்.

    (தொடர்ச்சி) களத்தில் எங்களுக்கிடையே சில அழகான போட்டியும் நடந்துள்ளது. நீண்ட காலம் நீங்கள் விளையாடும் போது இதுதான் நடக்கும். அப்போது நீங்கள் ஜாலியாக பேசும் வாய்ப்பு கிடைப்பதும் அதைப்பற்றிய நல்ல விஷயமாகும். அஸ்வின் அதே விஷயத்தை பென் ஸ்டோக்ஸிடம் கேரியர் முடிந்ததும் செய்வார். அவர்களும் இதே போல விளையாடி முடித்த பின் பேசி மகிழ்வார்கள்.

    என்று பேசினார்கள். 

    • காயத்தால் சென்னை அணியில் நான் நினைத்த அளவுக்கு விளையாட முடியவில்லை.
    • பயிற்சியாளராக ஒருவர் கேப்டனாக ஒருவர் எடுக்கும் முடிவுகளில் அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

    இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட்டில் இந்திய அணியை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி வீழ்த்தியுள்ளது.

    பென் ஸ்டோக்ஸ்- மெக்கல்லம் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பஸ்பால் எனப்படும் தங்களுடைய அணுகுமுறையை வைத்து வெற்றி காண முடியும் என்பதை இங்கிலாந்து அணி நிரூபித்துள்ளது.

    இந்நிலையில் டோனி மற்றும் ஸ்டீபன் பிளெமிங் போல நானும் ப்ரெண்டன் மெக்கலமும் கற்றுக் கொள்வதாக பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    காயத்தால் சென்னை அணியில் நான் நினைத்த அளவுக்கு விளையாட முடியவில்லை. ஆனால் அந்த நம்ப முடியாத சிறந்த அணியில் நானும் ஒரு அங்கமாக இருந்தேன். புனே அணிக்காக விளையாடிய போது நான் டோனி மற்றும் பிளெமிங் ஆகியோருடன் நிறைய விளையாடியுள்ளேன்.

    பயிற்சியாளராக ஒருவர் கேப்டனாக ஒருவர் எடுக்கும் முடிவுகளில் அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். டோனி ஆட்டத்தில் வெளியே இருப்பது போன்ற உணர்ச்சியை கொண்டிருப்பார். அதே சமயம் சில நேரங்களில் நீங்கள் ஓரத்தில் அமர்ந்திருக்கும் போது அந்த உணர்ச்சி உங்களுக்கு இருக்காது. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சிறந்த புரிதலை கொண்டிருப்பதாக நினைக்கிறேன்.

    டோனி மற்றும் பிளெமிங் ஆகியோர் வீரர்களை தேர்வு செய்வது சம்பந்தமாக அல்லது எந்த முடிவாக இருந்தாலும் அதை வேகமாக எடுப்பார்கள். அது எப்போதும் அணிக்கு நன்மையை ஏற்படுத்துவதாக இருக்கும். அதைத் தான் நானும் மெக்கலமும் எப்போதும் பின்பற்ற முயற்சித்து கடைபிடிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த 12 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட இந்தியா தோற்றதில்லை. இந்த நிலையை இந்தியா தக்கவைத்து கொள்ளுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.

    • வெற்றி பெற்ற போட்டியில் என்னுடைய சதம் வந்தது மகிழ்ச்சியை கொடுக்கிறது.
    • சில காலங்கள் முன்பாக நான் டோனியிடம் பேசினேன்.

    வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதற்கான முதல் போட்டி நேற்று ஆன்ட்டிகுவா நகரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது.

    அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 326 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹரி ப்ரூக் 71, ஜாக் கிராவ்லி 48 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 48.5 ஓவரிலேயே இலங்கை எட்டியது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சதம் விளாசிய ஷாய் ஹோப் (109) ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

    இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பாக இந்திய ஜாம்பவான் டோனியுடன் பேசிய போது அவர் கொடுத்த சில ஆலோசனைகள் இப்போட்டியில் சிறப்பாக விளையாடுவதற்கு உதவியதாக சாய் ஹோப் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    வெற்றி பெற்ற போட்டியில் என்னுடைய சதம் வந்தது மகிழ்ச்சியை கொடுக்கிறது. சில காலங்கள் முன்பாக நான் டோனியிடம் பேசினேன். அப்போது நீங்கள் நினைப்பதை விட எப்போதுமே உங்களுக்கு களத்தில் அதிக நேரம் இருப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். அந்த வார்த்தைகள் என்னுடன் ஒட்டிக்கொண்டது.

    செபார்ட் சிறப்பாக விளையாடினார். இத்தொடரின் ஆரம்பத்திலேயே வெற்றியை பெற்றுள்ள நாங்கள் அதை அடுத்த போட்டியிலும் தொடர்வோம் என்று நம்புகிறேன். எங்களின் தொடக்க வீரர்கள் நன்றாக விளையாடினார்கள். இதே போன்ற துவக்கத்தை அடுத்த போட்டியில் அவர்கள் கொடுக்க முயற்சிக்க வேண்டும். இருப்பினும் உலகின் சிறந்த அணியாக நீங்கள் இருப்பதற்கு சில கேட்ச்களை தவற விடக்கூடாது. இதே நல்ல செயல்பாடுகளை நாங்கள் அடுத்த போட்டிகளிலும் தொடர்வதற்கு பார்க்க வேண்டும்.

    என்று கூறினார்.

    • சூப்பர் பைக்குக்கு டோனி ஆட்டோகிராப் போட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
    • பைக்கை தனது டி-ஷர்ட்டால் துடைத்து, பின்னர் அந்த இடத்தில் டோனி ஆட்டோகிராப் போட்டார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம் எஸ் டோனி. அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக கபில் தேவுக்கு பிறகு 2-வது உலகக் கோப்பையை வாங்கி கொடுத்த கேப்டன் டோனி ஆவார்.

    டோனி ஓய்வை அறிவித்த பிறகு அவர் குறித்த வீடியோக்கள் சமூக வளைதளங்களில் வைரலாகி வருவதுண்டு. அவர் ரசிகருக்கு ஆட்டோகிராப் போட்டாலும் சரி, பைக் ஓட்டினாலும் சரி, விமான நிலையத்தில் இருந்து நடந்து வந்தாலும் சரி உடனே அந்த வீடியோ வைரலாகி விடும். அதுபோல சமீபத்தில் இந்திய முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் டோனி வீட்டிற்கு சென்று அங்குள்ள பைக்குகளை பார்த்து வீடியோ வெளியிட்டார் உடனே இந்த வீடியோவும் வைரலாகியது. இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.

    இந்த வரிசையில் தற்போது சூப்பர் பைக்குக்கு டோனி ஆட்டோகிராப் போட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. சொந்த ஊரான ராஞ்சியில் ரசிகரின் பைக்குக்கு டோனி ஆட்டோகிராப் போடுகிறார். அப்போது பைக்கில் தூசி இருந்ததால் அதனை தனது டி சர்ட்டால் துடைத்து, பின்னர் அந்த இடத்தில் அவர் ஆட்டோகிராப் போட்டார்.

    பின்னர் பைக் மீது உட்கார்ந்து ஸ்டார்ட் செய்து எப்படி இருக்கிறது என்பதை சோதித்தார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    ×