search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல் 2024"

    • சிறப்பாக ஆடிய வில் ஜாக்ஸ் 29 பந்துகளில் 41 ரன்களை குவித்தார்.
    • கலீல் அகமது இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (மே 12) நடைபெறும் இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை துவங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி 27 ரன்களையும், கேப்டன் பாப் டு பிளெசிஸ் 6 ரன்களையும் எடுத்து அவுட் ஆகினர். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் சிறப்பாக ஆடி 29 பந்துகளில் 41 ரன்களை குவித்தார். ராஜத் பட்டிதர் 32 பந்துகளில் 52 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேமரூன் கிரீன் சிறப்பாக ஆடி 24 பந்துகளில் 32 ரன்களை சேர்த்தார். அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

    20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை குவித்தது. டெல்லி சார்பில் கலீல் அகமது மற்றும் ரஷிக் சலாம் தலா இரண்டு விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், முகேஷ் குமார் மற்றும் இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • சி.எஸ்.கே. அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • ஒரே மைதானத்தில் 50 வெற்றிகளை பெற்ற மூன்றாவது அணி.

    ஐ.பி.எல். 2024 தொடரில் இன்று (மே 12) நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன் மூலம், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 50 ஆவது வெற்றியை பதிவு செய்தது. ஐ.பி.எல். தொடரில் ஒரே மைதானத்தில் 50 வெற்றிகளை பெற்ற மூன்றாவது அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மாறியுள்ளது.

     


    முன்னதாக மும்பை இந்தியன்ஸ் வான்கடே மைதானத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஈடன் கார்டன் மைதானத்தில் 52 வெற்றிகளை பெற்றுள்ளன. அந்த வரிசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் 50 ஆவது வெற்றியை பெற்றுள்ளது.

    சேப்பாக்கத்தில் 50 ஆவது வெற்றியை கொண்டாடும் வகையில், சென்னை வீரர்களுக்கு சிறப்பு பதக்கம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்திருந்த சென்னை ரசிகர்களுக்கு சி.எஸ்.கே. சார்பில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • டேரில் மிட்செல் 22 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.
    • ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இன்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது.

    ராஜஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் ஜோடி முறையே 24 மற்றும் 21 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இவரை தொடர்ந்து ஆடிய ரியான் பராக் மற்றும் துருவ் ஜூரெல் பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். ஜூரெல் 28 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஷுபம் தூபே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். ரியான் பராக் ஆட்டமிழக்காமல் 47 ரன்களை குவித்தார்.

    இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை குவித்துள்ளது. சென்னை சார்பில் சிமர்ஜித் சிங் மூன்று விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    எளிய இலக்கை துரத்திய சென்னை அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 18 பந்துகளில் 27 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டேரில் மிட்செல் 22 ரன்களையும், மொயின் அலி 10 ரன்களையும், ஷிவம் தூபே 18 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தனர்.

    18.2 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களை குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி 42 ரன்களை குவித்தார்.

    ராஜஸ்தான் சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், பர்கர் மற்றும் சாஹல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • 62-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    • இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை அக்சர் படேல் வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஐபிஎல் தொடரில் 62-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டிற்கு நாளை நடைபெறும் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை அக்சர் படேல் வழிநடத்துகிறார்.

    இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    • கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
    • சிமர்ஜித் சிங் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐ.பி.எல். 2024 தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. நடப்பு ஐ.பி.எல். தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் அணியாக முன்னேறி அசத்தியுள்ளது. இந்த நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போகும் அடுத்த மூன்று அணிகள் எவை என்பதை நிர்ணயிக்கும் போட்டிகள் நடைபெறுகின்றன.

    அந்த வகையில், இன்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது. ராஜஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் ஜோடி முறையே 24 மற்றும் 21 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர்.

    அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து ஆடிய ரியான் பராக் மற்றும் துருவ் ஜூரெல் பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். ஜூரெல் 28 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஷுபம் தூபே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். ரியான் பராக் ஆட்டமிழக்காமல் 47 ரன்களை குவித்தார்.

    இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை குவித்துள்ளது. சென்னை சார்பில் சிமர்ஜித் சிங் மூன்று விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் 7-வது வெற்றியை பெறுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
    • ராஜஸ்தான் ராயல்ஸ் 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது.

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 61-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடக்கிறது.

    இதில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சி.எஸ்.கே. 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்று வாய்ப்ப்பில் நீடிக்க வேண்டுமானால் ராஜஸ்தானை கண்டிப்பாக வீழ்த்த வேண்டும். அந்த அணியை தோற்கடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் 7-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி சி.எஸ்.கே.வை வென்று 9-வது வெற்றியுடன் பிளே ஆப் சுற்றுக்கு நுழையும் வேட்கையில் உள்ளது. நெருக்கடி எதுவும் இல்லாமல் ராஜஸ்தான் விளையாடும்.

    சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டம் இதுவாகும். இதுவரை நடந்த 6 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4-ல் (பெங்களூரு 6 விக்கெட், குஜராத் 63 ரன், கொல்கத்தா 7 விக்கெட் , ஐதராபாத் 78 ரன்) வெற்றி பெற்றது. இரண்டில் (லக்னோ 6 விக்கெட், பஞ்சாப் 7 விக்கெட்) தோற்றது.

    அதாவது சேப்பாக்கத்தில் முதலில் பேட்டிங் செய்து 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 2 போட்டியில் தோற்றது. 2-வது பேட்டிங் செய்து இரண்டில் வெற்றி பெற்றது.

    ஐதராபாத்துடன் மோதிய ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் இன்றைய போட்டியில் உபயோகிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் சென்னை 78 ரன்னில் வெற்றிபெற்றது. ஆனால் அந்த போட்டி இரவில் நடந்தது. ஆனால் இன்றைய ஆட்டம் பகல்-இரவாக நடக்கிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்துக்காக இன்று காலையில் இருந்ததே சேப்பாக்கம் மைதானத்துக்கு குவிய தொடங்கினார்கள். ரசிகர்கள், ரசிகைகள் காலை 11.30 மணியளவில் இருந்து ஸ்டேடியத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    டிக்கெட் வைத்திருந்த அவர்கள் எந்த கேட் வழியாக எந்த கேலரிக்கு செல்ல வேண்டும் என்பதை போலீசாரும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் அலுவலர்களும் அறிவுறுத்துகிறார்கள். நேரம் செல்ல செலல ரசிகர்கள் ஸ்டேடியம் முன்பு பெரும் அளவில் திரண்டனர்.

    போட்டியை காண வந்த ரசிகர்கள் டோனியின் நம்பரான 7 ஐ கொண்ட ஜெர்சியை ஆர்வத்துடன் வாங்கினார்கள். இதனால் ஸ்டேடியம் பகுதியிலும், வாலாஜா சாலை, பெல்ஸ் ரோட்டில் ஜெர்சி விற்பனை அமோகமாக இருந்தது.

    மேலும் ரசிகர்கள் தங்களது முகங்களில் சி.எஸ்.கே. மற்றும் டோனி என்ற எழுத்துக்களை பெயிண்டால் எழுதி கொண்டனர். வித்தியாசமான சிகை அலங்காரங்களுடன் ரசிகர்கள் போட்டியை பார்க்க சென்றனர்.

    ஐ.பி.எல். போட்டியையொட்டி சேப்பாக்கம் மைதானத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. மைதானத்தை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    மேலும் போட்டி தொடங்கும் நேரத்தில் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    • லக்னோ அணி டெல்லி, மும்பையுடன் மோதுகிறது.
    • 4-வது அணியாக நுழைவதில் சி.எஸ்.கே. டெல்லி அல்லது லக்னோ, பெங்களூரு, குஜராத் இடையே போட்டி நிலவுகிறது.

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இதுவரை 60 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்னும் 10 'லீக்'போட்டிகள் எஞ்சியுள்ளன.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 'பிளே ஆப்' சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. அந்த அணி 9 வெற்றி, 3 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்றுள்ளன.

    கொல்கத்தாவுக்கு இன்னும் 2 ஆட்டங்கள் எஞ்சியுள்ளது. குஜராத்துடன் 13-ந்தேதியும், ராஜஸ்தானுடன் 19-ந்தேதியும் மோதுகிறது. அந்த அணி முதல் 2 இடங்களில் இருப்பது உறுதியாகி உள்ளது.

    மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகியவை பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து ஏற்கனவே வெளியேறி விட்டன. 8 புள்ளியுடன் இருக்கும் மும்பைக்கு ஒரு ஆட்டம் மட்டுமே இருக்கிறது. 8 புள்ளியுடன் உள்ள பஞ்சாப் அணிக்கு 2 ஆட்டம் உள்ளது.

    'பிளே ஆப்' சுற்றுக்கு 3 இடத்துக்கான போட்டியில் 7 அணிகள் உள்ளன. 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும் 3 அணிகள் எவை என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ராஜஸ்தான் அணி 16 புள்ளியுடன் 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி எஞ்சிய போட்டிகளில் சென்னை, பஞ்சாப், கொல்கத்தாவுடன் மோத வேண்டியுள்ளது. இதில் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அந்த அணி 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும். 3 ஆட்டத்தில் தோற்றாலும் அந்த அணிக்கு பெரிய பாதிப்பு இருக்காது என்றே கருதப்படுகிறது.

    டெல்லி, லக்னோவை விட நிகர ரன்ரேட் குறைவாக இருந்தால் மட்டுமே வாய்ப்பை இழக்கும். ராஜஸ்தான் ரன் ரேட்டில் நல்ல நிலையில் இருக்கிறது. இதனால் அந்த அணி தகுதி பெறுவதில் சிக்கல் இருக்காது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் 14 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ளது. எஞ்சிய போட்டிகளில் குஜராத், பஞ்சாப்புடன் மோத வேண்டியுள்ளது. இதில் ஒன்றில் வென்றாலே 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்று விடும். ஏனென்றால் ரன் ரேட்டில் வலுவாக இருக்கிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 3 அணிகளும் ஒரே நிலையில் 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளன. நிகர ரன் ரேட் அடிப்படையில் சென்னை 4-வது இடத்திலும், டெல்லி 5-வது இடத்திலும், லக்னோ 6-வது இடத்திலும் உள்ளன.

    சென்னை அணி எஞ்சிய 2 ஆட்டத்தில் (ராஜஸ்தான், பெங்களூரு) வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். டெல்லி அணி கடைசி இரண்டிலும் வென்றால் 16 புள்ளியை எட்டும். ஆனால் அந்த அணியின் ரன் ரேட் மோசமாக இருக்கிறது. இதில் ஒன்றில் தோற்றாலும் மற்ற அணிகள் முடிவை பொறுத்து சென்னையின் 'பிளே ஆப்' நிலை இருக்கும்.

    டெல்லி அணி எஞ்சிய ஆட்டங்களில் பெங்களூரு (இன்று), லக்னோ (14-ந் தேதி) மோதுகிறது. இந்த இரண்டிலும் வெல்ல வேண்டும். அதே நேரத்தில் மற்ற ஆட்டத்தின் முடிவை பொறுத்தும் 'பிளே ஆப்' சுற்று நிலை இருக்கும்.

    லக்னோ அணி டெல்லி, மும்பையுடன் மோதுகிறது. இதில் இரண்டிலும் வெல்ல வேண்டும். நிகர ரன் ரேட்டில் அந்த அணி மோசமாக இருக்கிறது.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 புள்ளியுடன் உள்ளது. 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் 14 புள்ளியை எட்டும். மற்ற அணிகளும் 14 புள்ளியை எடுக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் 2 ஆட்டத்தில் வென்று போட்டியில் உள்ள மற்ற அணிகள் தோற்க வேண்டும். பெங்களூரு அணியின் நிலைதான் குஜராத்துக்கு இருக்கிறது.

    எஞ்சிய 3 அணிகளில் ராஜஸ்தான், ஐதராபாத் 'பிளே ஆப்'சுற்றுக்குள் நுழைய அதிகமான வாய்ப்பு உள்ளது. 4-வது அணியாக நுழைவதில் சி.எஸ்.கே. டெல்லி அல்லது லக்னோ, பெங்களூரு, குஜராத் இடையே போட்டி நிலவுகிறது.

    • சென்னை அணி இதுவரை 12 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது.
    • சென்னை 15 முறையும், ராஜஸ்தான் 13 தடவையும் வென்று இருக்கின்றன.

    சென்னை:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், குறிப்பிட்ட 5 அணிக்கு எதிராக 2 முறையும், 4 அணிக்கு எதிராக ஒரு முறையும் என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    இந்த போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 61-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னையில் நடைபெறும் 7-வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் இதுவாகும்.

    சென்னை அணி இதுவரை 12 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி அடுத்த சுற்றுக்கு பிரச்சினையின்றி முன்னேற எஞ்சிய 2 ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும். ஆனால் ஒன்றில் மட்டும் வென்றால் ரன்-ரேட்டில் நல்ல நிலையில் இருப்பதுடன், மற்ற அணிகளின் முடிவும் சாதகமாக அமைய வேண்டியது அவசியமானதாகும்.

    சென்னை அணி ஆமதாபாத்தில் நேற்று முன்தினம் நடந்த தனது முந்தைய லீக் ஆட்டத்தில் 35 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்திடம் பணிந்தது. இதில் 232 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 196 ரன்னில் அடங்கியது. இந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் டேரில் மிட்செல் (63 ரன்), மொயீன் அலி (56 ரன்) தவிர வேறு யாரும் சோபிக்கவில்லை. ஒரு ரன்னில் ஏமாற்றம் அளித்த தொடக்க ஆட்டக்காரர்கள் ரஹானே, ரச்சின் ரவீந்திரா நிலைத்து நின்று நல்ல பங்களிப்பை அளிக்க வேண்டியது முக்கியமானதாகும். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 541 ரன்), ஷிவம் துபே (371 ரன்) நல்ல நிலையில் உள்ளனர். கடந்த ஆட்டத்தில் துஷர் தேஷ்பாண்டே தவிர வேறு யாரும் விக்கெட் வீழ்த்தவில்லை. முஸ்தாபிஜூர் ரகுமான், பதிரானா விலகியதாலும், தீபக் சாஹர் காயத்தால் ஒதுங்கியதாலும் பந்து வீச்சில் ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு தீர்வு காண வேண்டியது அவசியமானதாகும்.

    ராஜஸ்தான் அணி 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றை (பிளே-ஆப்) நெருங்கி விட்டது. இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பை அதிகாரபூர்வமாக உறுதி செய்து விடும். முதல் 9 ஆட்டங்களில் 8 வெற்றியை பெற்ற வலுவான அந்த அணி தனது கடைசி 2 ஆட்டங்களில் ஐதராபாத், டெல்லி அணிகளிடம் அடுத்தடுத்து போராடி வீழ்ந்தது.

    ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் கேப்டன் சஞ்சு சாம்சன் (5 அரைசதம் உள்பட 471 ரன்கள்), ரியான் பராக் (4 அரைசதம் உள்பட 436 ரன்), ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வாலும், பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் பவுல்ட், அவேஷ் கான், சந்தீப் ஷர்மா, அஸ்வினும் வலுசேர்க்கிறார்கள்.

    அடுத்த சுற்றுக்குள் நுழைய ராஜஸ்தான் அணியும், அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்த சென்னை அணியும் தீவிரமாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த மோதலில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. உள்ளூர் சூழல் சென்னை அணிக்கு அனுகூலமாக இருக்கும் என்றாலும் எல்லா வகையிலும் சிறப்பாக செயல்பட்டால் தான் ராஜஸ்தானை சாய்க்க முடியும். இவ்விரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை 15 முறையும், ராஜஸ்தான் 13 தடவையும் வென்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    சென்னை: ரச்சின் ரவீந்திரா, ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, டோனி, மிட்செல் சான்ட்னெர் அல்லது சிமர்ஜீத் சிங், ஷர்துல் தாக்குர், துஷர் தேஷ்பாண்டே.

    ராஜஸ்தான்: ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், சுபம் துபே, டோனவன் பெரீரா, ரோமன் பவெல் அல்லது கேஷவ் மகராஜ், அஸ்வின், அவேஷ் கான் அல்லது யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் பவுல்ட், சந்தீப் ஷர்மா.

    இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • அதிரடியாக விளையாடி இஷான் கிஷன் 22 பந்தில் 40 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
    • கொல்கத்தா தரப்பில் வருண் சக்கரவர்த்தி, ரஸல், ஹர்சித் ரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    கொல்கத்தா:

    17-வது ஐ.பி.எல். தொடரின் 60-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக இந்த போட்டி 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி வெங்கடேஷ் ஐயர் மற்றும் நிதிஷ் ரானாவின் அதிரடியால் 16 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் பும்ரா, சாவ்லா 2 விக்கெட்டும் துஷாரா, கம்போஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா- இஷான் கிஷன் களமிறங்கினர். ஒரு முனையில் இஷான் கிஷன் அதிரடியாக விளையாட ரோகித் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக விளையாடி இஷான் கிஷன் 22 பந்தில் 40 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மந்தமாக விளையாடிய ரோகித் 24 பந்துகளில் 19 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 11, பாண்ட்யா 2, டிம் டேவிட் 0 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் மும்பை அணி 16 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா தரப்பில் வருண் சக்கரவர்த்தி, ரஸல், ஹர்சித் ரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனால் கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் நடப்பு தொடரில் முதல் அணியாக கொல்கத்தா பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    • டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட் ஆன வீரர் என்ற சாதனையை நரைன் படைத்துள்ளார்.
    • ஐபிஎல் கிரிக்கெட்டில் 16 முறை சுனில் நரைன் டக்அவுட் ஆகியுள்ளார்.

    ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

    அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 16 ஓவர் முடிவில் 157 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் பும்ரா வீசிய ஓவரின் முதல் பந்திலேயே சுனில் நரைன் கிளீன் போல்டு ஆனார். இதன்மூலம் நரைன் டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை டக்அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

    அவர் 44-வது முறையாக டக்அவுட் ஆகி முதலிடம் பிடித்துள்ளார். இதற்கு முன் அலெக்ஸ் ஹால்ஸ் 43 முறை டக்அவுட் ஆகி 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். சுனில் நரைன் அதேபோல் ஐபிஎல் கிரிக்கெட்டில் 16 முறை சுனில் நரைன் டக்அவுட் ஆகியுள்ளார்.

    அதிகமுறை டி20-யில் டக்அவுட் ஆன வீரர்கள்:

    சுனில் நரைன் (44)

    அலெக்ஸ் ஹால்ஸ் (43)

    ரஷீத் கான் (42)

    பால் ஸ்டிர்லிங் (32)

    கிளென் மேக்ஸ்வெல் (31)

    ஜேசன் ராய் (31)  

    • 21 பந்தில் 42 ரன்கள் குவித்த வெங்கடேஷ் ஐயர் சாவ்லா பந்தில் அவுட் ஆனார்.
    • மும்பை தரப்பில் சாவ்லா 2 விக்கெட்டும் துஷாரா, பும்ரா, காம்போஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    கொல்கத்தா:

    17-வது ஐ.பி.எல். தொடரில் இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் அரங்கேறும் 60-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக ஓவர்கள் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். முதல் ஓவரில் சால்ட் 6 ரன்னிலும் 2-வது ஓவரில் சுனில் நரைன் டக் அவுட்டிலும் வெளியேறினர். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து வெங்கடேஷ் ஐயர் மற்றும் நிதிஷ் ரானா ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். 21 பந்தில் 42 ரன்கள் குவித்த வெங்கடேஷ் ஐயர் சாவ்லா பந்தில் அவுட் ஆனார். அடுத்த சிறிது நேரத்தில் ரானா 33 ரன்னில் வெளியேறினார். அதனை தொடர்ந்து ரஸல் 24 ரன்களிலும் ரிங்கு சிங் 20 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் கொல்கத்தா அணி 16 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் பும்ரா, சாவ்லா 2 விக்கெட்டும் துஷாரா, கம்போஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • ஆர்சிபி அணிக்கு எதிரான நாளைய போட்டியில் ரிஷப் பண்ட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • முக்கியமான போட்டியில் ரிஷப் பந்த் விளையாடாமல் இருப்பது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

    ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 62-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

    இந்த போட்டி இரு அணிகளுக்கும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற மிகவும் மிக்கியமான போட்டி என்பதால் வெற்றிகாக இரு அணிகளும் கடுமையாக போராடுவார்கள்.

    இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டிற்கு நாளை நடைபெறும் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் நாளைய போட்டியில் யார் அணியை வழிநடத்துவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. இந்நிலையில் நாளைய போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை நட்சத்திர ஆல் ரவுண்டர் அக்சர் படேல் வழிநடத்துவார் என அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இருப்பினும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான முக்கியமான போட்டியில் ரிஷப் பந்த் விளையாடாமல் இருப்பது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

    ×