search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிய கோப்பை 2023"

    • பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
    • பாகிஸ்தான் தரப்பில் விக்கெட்களை கைப்பற்றினார்.

    ஆசிய கோப்பை 2023 தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆசிய கோப்பை தொடரின் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றம் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ள. இன்றைய போட்டி இலங்கையில் உள்ள கண்டியில் நடைபெற்றது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தியா அணிக்கு துவக்க வீரர்களான கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி சுமாரான துவக்கத்தையே கொடுத்து. அடுத்து வந்த விராட் கோலி 4 ரன்களை மட்டும் எடுத்து பெவிலியன் திரும்பினார். இவருடன் விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

     

    இந்திய அணியின் டாப் ஆர்டர் சட்டென சரிந்த நிலையில், மிடில் ஆர்டரில் களமிறங்கிய இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பான்டியா ஜோடி விக்கெட் விழுவதை தடுத்து நிறுத்தி, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. இஷான் கிஷன் 81 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 82 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய ஹர்திக் பான்டியா 87 ரன்களை குவித்து அசத்தினார். இதன் மூலம் இந்திய அணி ஸ்கோர் வேகமாக அதிகரித்தது.

    இந்திய அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 266 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஷகீன் ஷா அப்ரிடி 4 விக்கெட்களை வீழ்த்தினார். இவர் தவிர அந்த அணியின் ஹாரிஸ் ரவுப் மூன்று விக்கெட்களையும், நசீம் ஷா மூன்று விக்கெட்களை வீழ்த்தி அசத்தினர். பாகிஸ்தான் அணி 267 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது. 

    • ஆசிய கோப்பை 2023 தொடர் கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கியது.
    • ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி ஏற்கனவே ஒரு வெற்றியை பெற்று விட்டது.

    ஆசிய கோப்பை 2023 தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆசிய கோப்பை தொடரின் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றம் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ள. இன்றைய போட்டி இலங்கையில் உள்ள கண்டியில் நடைபெறுகிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து இருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி என்பதால், ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் இடைய இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்து இருக்கிறது.

    ஆசிய கோப்பை 2023 தொடர் துவங்கும் முன்பு தான் பாகிஸ்தான் அணி, சர்வதேச ஒருநாள் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி இருக்கிறது. ஐ.சி.சி. ஒருநாள் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி மூன்றாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

    • பாகிஸ்தான் அணி 2-வது போட்டியில் இந்தியாவிடம் நாளை மோதுகின்றன.
    • இந்தியாவைப் போலவே அவர்களும் நல்ல வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர்.

    ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில், பாகிஸ்தானின் ஷதாப் கான் 4 விக்கெட் கைப்பற்றினார். ஷாஹீன் அஃப்ரிடி, ஹரிஷ் ராஃப் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், நசீம் ஷா மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

    இதனையடுத்து பாகிஸ்தான் அணி 2-வது போட்டியில் இந்தியாவிடம் நாளை மோதுகின்றன. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் இந்தியாவைப் போலவே அவர்களும் நல்ல வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

    இது குறித்து சவுரவ் கங்குலி கூறியிருப்பதாவது:-

    பாகிஸ்தானுக்கு மிகச் சிறந்த பந்துவீச்சு தாக்குதல் உள்ளது. நசீம் ஷா, அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவ்ஃப். இந்தியாவைப் போலவே அவர்களும் நல்ல வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர். எனவே அவர்கள் ஒரு சிறந்த பந்துவீச்சு தாக்குதல் மற்றும் இந்தியா அவர்களுக்கு எதிராக நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கடந்த 2021-ம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ஷாஹீன் அஃப்ரிடி இந்திய வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தி பாகிஸ்தானின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

    • வங்காளதேச அணியின் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ 89 ரன்களை அடித்தார்.
    • இலங்கை அணியில் சரித் அசலங்கா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 62 ரன்களை குவித்தார்.

    ஆசிய கோப்பை 2023 தொடரின் இரண்டாவது போட்டியில் வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் ஆடியது. வங்காளதேச அணியின் துவக்க வீரர்கள் முகமது நைம் மற்றும் தம்சித் ஹாசன் முறையே 16 ரன்கள் மற்றும் டக் அவுட் ஆகி வெளியேறினர்.

    இவர்களை தொடர்ந்து களமிறங்கிய நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ 89 ரன்களை அடித்தார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். இவரை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக வங்காளதேசம் அணி 42.4 ஓவர்களில் வெறும் 164 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

     

    அடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு சரியான துவக்கம் கிடைக்கவில்லை. இலங்கை அணியின் துவக்க வீரர்களான பதும் நிசங்கா மற்றும் திமுத் கருணரத்னே முறையே 14 மற்றும் 1 ரன் எடுத்து அவுட் ஆகினர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் 5 ரன்களுக்கு அவுட் ஆனார். சதீரா சமரவிக்ரமா 54 ரன்களை குவித்தார்.

    இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய சரித் அசலங்கா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 62 ரன்களை குவித்தார். இதில் ஐந்து பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். இதன் மூலம் இலங்கை அணி 39 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 165 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    • பாகிஸ்தான் அணி சார்பில் கேப்டன் பாபர் அசாம் 149 ரன்களை விளாசினார்.
    • நேபாளம் அணியின் சோம்பால் கமி இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்.

    ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் பஹார் ஜமான் 14 ரன்களிலும், இமாம் உல் ஹக் 5 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் 129 பந்துகளில் 14 பவுன்டரிகள், 4 சிக்சர்களை விளாசி 151 ரன்களை குவித்தார். இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய முகமது ரிஸ்வான் 45 ரன்களை எடுத்தார். அடுத்த வந்த சல்மான் ஆகா 5 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இவருடன் ஆடிய இப்திகார் அகமது 71 பந்துகளில் 109 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

     

    அந்த வகையில் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 342 ரன்களை குவித்து அசத்தியது. கடின இலக்கை துரத்திய நேபாளம் அணிக்கு துவக்க வீரர்களான குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் ஜோடி முறையே 8 மற்றும் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றியது. அதன்பிறகு வந்த ரோஹித் பவுடல் டக் அவுட் ஆனார்.

    துவக்கத்திலேயே தடுமாறிய நேபாள அணிக்கு சோம்பால் கமி மற்றும் ஆரிப் ஷேக் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி, விக்கெட்கள் விழுவதை ஓரளவுக்கு தடுத்து நிறுத்தியது. இந்த ஜோடி முறையே 28 மற்றும் 26 ரன்களை குவித்து தங்களது விக்கெட்டை இழந்தது.

     

    இவர்களை தொடர்ந்து வந்த வீரர்கள் அதிக ரன்களை அடிக்காமல் அவுட் ஆக, நேபாளம் அணி 104 ரன்களை குவித்த நிலையில், 23.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆசிய தொடரின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் நாளை மோதுகின்றன.
    • இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொள்கிறது. இந்த போட்டி 2-ந் தேதி இலங்கையில் நடக்கிறது.

    புதுடெல்லி:

    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி பாகிஸ்தானில் நடக்கிறது. இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொள்கிறது. இந்த போட்டி 2-ந் தேதி இலங்கையில் நடக்கிறது.

    வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அந்த உலகக்கோப்பை தொடருக்கு சிறப்பாக தயாராகும் பொருட்டு ஆசிய அணிகள் இந்த ஆசிய கோப்பை தொடரை சிறப்பாக பயன்படுத்தி கொள்ளும்.

    இந்நிலையில் ஆசிய கோப்பைக்கான முதல் 2 போட்டியில் கேஎல் ராகுல் விளையாடமாட்டார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    கேஎல் ராகுல் மிகவும் நன்றாக முன்னேறி வருகிறார். ஆனால் ஆசிய கோப்பையின் முதல் இரண்டு போட்டிகளான பாகிஸ்தான் மற்றும் நேபாளத்திற்கு எதிராக அவர் விளையாடமாட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பயிற்சி முகாம் பெங்களூரு அருகே உள்ள ஆலூரில் நடைபெற்று வருகிறது.
    • பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை திடீரென ரிஷப் பண்ட் சந்தித்தார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் ரோகித் சர்மா ஷர்மா தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆசிய கோப்பை போட்டிக்கு சிறந்த முறையில் தயாராகுவதற்காக இந்திய வீரர்களுக்கு 6 நாள் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பயிற்சி முகாம் பெங்களூரு அருகே உள்ள ஆலூரில் நடைபெற்று வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, காயத்தில் இருந்து மீண்டுள்ள ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை திடீரென ரிஷப் பண்ட் சந்தித்தார். பந்த் அணி வீரர்களுடன் மீண்டும் இணைவதையும், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் தொடர்புகொள்ளும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.



    • ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய வீரர்களுக்கு 6 நாள் பயிற்சி முகாம்.
    • கேப்டன் ரோகித் ஷர்மா, அஜித் அகார்கர் ஆகியோர் கூர்ந்து கவனித்தனர்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஆசிய கோப்பை 2023 தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தான் என இரண்டு நாடுகளில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

    ஆசிய கோப்பை போட்டிக்கு சிறந்த முறையில் தயாராவதற்காக இந்திய அணி வீரர்களுக்கு ஆறு நாட்கள் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி முகாம் பெங்களூரு அருகே உள்ள ஆலூரில் நேற்று தொடங்கியது.

     

    கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, காயத்தில் இருந்து மீண்டுள்ள ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றுள்ளனர். இன்றைய பயிற்சியில் கே.எல். ராகுல் கலந்து கொண்டார். முதலில் தான் கடந்த சில வாரங்களாக செய்துவரும் வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டார் கே.எல். ராகுல்.

    அதன் பிறகு, நெட்ஸ்-இல் பேட்டிங் செய்ய களமிறங்கினார். இவருக்கு ஷர்துல் தாக்கூர் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் பந்து வீசினர். துவக்கம் முதலே அதிரடியாக ஆடிய கே.எல். ராகுல், உடலில் எந்த இடையூறும் ஏற்பட்டதாக காட்டிக் கொள்ளவில்லை. கே.எல். ராகுல் பயிற்சியில் ஈடுபடுவதை கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அஜித் அகார்கர் ஆகியோர் கூர்ந்து கவனித்து வந்தனர்.

    வேகப்பந்து வீச்சை தொடர்ந்து அக்சர் பட்டேல் மற்றும் மயான்க் மார்கன்டே ஜோடி கே.எல். ராகுலுக்கு பந்துவீசியது. இவர்களின் பந்துவீச்சில் கே.எல். ராகுல் பல்வேறு ஷாட்களை அடித்தார். இதில் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் உள்ளிட்ட ஷாட்களும் அடங்கும். 

    • ஐபிஎல் போட்டியின் போது கேஎல் ராகுல் காயமடைந்தார்.
    • பேட்டிங் மற்றும் கீப்பிங் செய்யும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியில் லக்னோ அணியின் கேப்டனாக பணியாற்றியவர் லோகேஷ் ராகுல். முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான அவர் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது காயமடைந்தார்.

    பீல்டிங்கின்போது அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. பின்னர் ஸ்கேன் பரிசோதனை முடிவில் தசைநார் கிழிந்துள்ளதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பிறகு NCA-ல் தனது மறுவாழ்வில் சிறப்பாக செயல்பட்டார்.



    இந்நிலையில் அவர் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் பேட்டிங் மற்றும் கீப்பிங் செய்யும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    பும்ரா உடற்தகுதியுடன் திரும்பிய நிலையில் கேஎல் ராகுலும் திரும்பினால் இந்திய அணிக்கு பெரும் நம்பிக்கையாக இருக்கும். ஆகஸ்ட் 30-ம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை 2023 போட்டிக்கான இந்திய அணிக்கு கேஎல் ராகுல் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அடுத்த 2 ஆண்டுக்கான காலண்டரை வெளியிட்டது.
    • 2023 ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் ஒரே பிரிவில் உள்ளது.

    புதுடெல்லி:

    ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அடுத்த 2 ஆண்டுக்கான காலண்டரை வெளியிட்டுள்ளது. 2023 ஆசிய கோப்பைக்கான தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குழுவில் உள்ளன என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) தலைவர் ஜெய் ஷா உறுதிப்படுத்தினார்.

    பி.சி.சி.ஐ. செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) தலைவருமான ஜெய் ஷா 2023 மற்றும் 2024-ம் ஆண்டுக்கான கவுன்சிலின் கிரிக்கெட் காலண்டர் மற்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆசிய கோப்பைக்கு தகுதி பெறுவதற்கான பாதை கட்டமைப்பை அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், ஏ.சி.சியின் முக்கிய போட்டியான ஆடவர் ஆசிய கோப்பை செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

    இதில் 6 அணிகள் இடம்பெறும். 3 அணிகள் கொண்ட இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் குவாலிபையர் 1 (ஆண்களுக்கான பிரீமியர் கோப்பை வென்றவர்கள்) ஒரு குழுவில் இடம்பெறுவர்.

    இலங்கை, வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் மற்றுமொரு குழுவில் உள்ளன. இந்தப் போட்டியில் மொத்தம் 13 போட்டிகள் நடைபெறவுள்ளன என தெரிவித்தார்.

    ×