search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்"

    • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கென தனி நீதிமன்றம் உள்ளது.
    • அதற்கென தனி அரசியமைப்பு உள்ளது- பாகிஸ்தான் கூடுதல் அட்டர்னி ஜெனரல்.

    பாகிஸ்தான் நாட்டின் ராவல்பிண்டியில் வசித்து வந்த கவிஞரும், பத்திரிகையாளருமான அகமது பர்ஹத் ஷா பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புகளால் கடத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக அகமது பர்ஹத் ஷாவின் மனைவி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த இஸ்லாமாபாத் நீதிமன்றம், அகமது பர்ஹத் ஷாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் விரும்புகிறது என நீதிபதி அக்தர் கயானி தெரிவித்தார்.

    இது தொடர்பாக விசாணை நேற்று நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான பாகிஸ்தான் கூடுதல் அட்டார்னி ஜெனரல், "அகமது பர்ஹத் ஷா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) போலீஸ் காவலில் உள்ளார். அவரை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் முன் ஆஜர்படுத்த முடியாது.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வெளிநாட்டு பகுதி. அதற்கென தனி அரசியமைப்பு, தனி நீதிமன்றம் உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் நீதிமன்றத்தின் தீர்ப்பு, வெளிநாட்டு நீதிமன்ற தீர்ப்பாக கருதப்படும் என கூடுதல் அட்டர்னி ஜெனரல் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக இந்தியா- பாகிஸ்தான் இடையே பல தசாப்தங்களாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்தியாவில் கூறப்படும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு எங்களுடைய என பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வரும் நிலையில், பாகிஸ்தான் கூடுதல் அட்டர்னி ஜெனரல் இவ்வாறு கூறியது வியப்பதாக பார்க்கப்படுகிறது.

    அதேவேளையில் இந்தியா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. அது இந்தியாவுடன் இணைக்கப்படும் என தொடர்ந்து கூறி வருகிறது.

    இதற்கிடையே நீதிபதி, "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வெளிநாட்டு பகுதி என்றால், பாகிஸ்தான் ராணுவம், பாகிஸ்தான் நிலைகள் எப்படி அந்த நிலத்தில் நுழைய முடியும்" என கேள்வி எழுப்பியுள்ளார்.

    அகமது பர்ஹத் ஷா திர்காட் போலீசால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • 400 சீட் கிடைக்காவிட்டால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெற மாட்டீர்களா?
    • ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டது பற்றி அமித் ஷா ஏன் கவலைப்படுகிறார்?

    புதுடெல்லி:

    மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வக்கீலுமான கபில் சிபில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நாங்கள் 400 இடங்களை வென்றால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெறுவோம் என உள்துறை மந்திரி அமித் ஷா கூறுகிறார். இவ்வளவு சீட் கிடைக்காவிட்டால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப்பெற மாட்டீர்களா? நீங்கள் அதை திரும்பப்பெற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஆனால், முதலில் சீனா எடுத்துச்சென்ற அந்த 4,000 கி.மீ. தூரத்தை நீங்கள் திரும்பப்பெற வேண்டும்.

    ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு பற்றி அமித் ஷா ஏன் கவலைப்படுகிறார்? இது ஆம் ஆத்மி கட்சியின் உள் விவகாரம்.

    பிரஜ்வலைப் பற்றி யோசிக்கிறீர்களே, அதுபற்றி நீங்கள் ஏன் அறிக்கை கொடுக்கக் கூடாது. இது மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் உள் விவகாரம் என தெரிவித்தார்.

    • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு 2019-ல் நீக்கிய பின்னர், காஷ்மீரில் அமைதி திரும்பியது.
    • ஆனால் தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தை காண்கின்றோம்.

    பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா இன்று மேற்கு வங்காள மாநிலம் செரம்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு 2019-ல் நீக்கிய பின்னர், காஷ்மீரில் அமைதி திரும்பியது. ஆனால் தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தை காண்கின்றோம். முன்னதாக இங்கு அசாதி (Azaadi- சுதந்திரம்) கோஷத்தை இங்கே கேட்டோம். தற்போது அதே கோஷத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கேட்கிறோம். முன்னதாக இங்கே கல் எறிதல் சம்பவங்கள் (ராணுவ வீரர்கள், பாதுகாப்புப்படை வீரர்கள் மீது) நடைபெற்றது. தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷமீரில் நடைபெறுகிறது.

    மணிசங்கர் அய்யர் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் அணுகுண்டு வைத்திருப்பதால் அதை செய்யக்கூடாது என்கிறார்கள். ஆனால், இந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. அதை நாங்கள் எடுப்போம் எடுத்துக் கொள்வோம் என்பத நான் சொல்கிறேன்.

    ஊடுருவியவர்கள் அல்லது சிஏஏ வேண்டுமா என்பதை பெங்கால் முடிவு செய்யும். ஜிகாத்திற்கு வாக்களிக்க வேண்டுமா அல்லது விகாஸ்க்கு வாக்கு அளிக்க வேண்டுமா என்பதை பெங்கால் முடிவு செய்யும். மம்தா பானர்ஜி சிஏஏ-விற்கு எதிராக உள்ளார். வாக்கு வங்கி அரசியலுக்காக ஊடுருவியர்வர்கள ஆதரித்து பேரணி மேற்கொள்கிறார்.

    இவ்வாறு அமித் ஷா பேசினார்.

    • பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய தேசியக் கொடியை ஏந்தி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்பட்டு இந்தியாவுடன் சேர்க்கப்படும் என்றார் அசாம் முதல் மந்திரி.

    புதுடெல்லி:

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மின் கட்டண உயர்வு, வரி விதிப்பு உள்ளிட்டவற்றை எதிர்த்து அப்பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் ஒரு சிலர் இப்பகுதியை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் எனக்கூறி போஸ்டர் ஒட்டியதாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஜார்க்கண்டில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா பேசியதாவது:

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 300 இடங்களில் வெற்றி பெற்றபோது அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது.

    இந்த முறை பா.ஜ.க. 400 இடங்களைக் கைப்பற்றினால் மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமியிலும், வாரணாசியில் ஞானவாபி மசூதி இருக்கும் இடத்திலும் கோவில் கட்டப்படும்.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்பட்டு பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவுடன் சேர்க்கப்படும்.

    காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக பாராளுமன்றத்தில் எந்த விவாதமும் நடைபெறவில்லை. அது உண்மையில் நம்முடையது. தற்போது, அங்கு போராட்டம் நடந்துவருகிறது.

    ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய தேசியக் கொடியை ஏந்தி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இடஒதுக்கீட்டிற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. எஸ்சி, எஸ்டி, ஓபிசி இட ஒதுக்கீடுகளை முடிவுக்கு கொண்டு வந்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் விரும்புகிறது என தெரிவித்தார்.

    • ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
    • அமித் ஷா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து பேசினார்.

    ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு மற்றும் மறுசீரமைப்பு (திருத்தம்) 2023 மசோதாக்கள் நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தின்போது மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா "ஜம்முவில் 37 இடங்கள் இருந்தன. தற்போது 43 இடங்களாக அதிகரித்துள்ளன. முன்னதாக காஷ்மீரில் 46 இடங்கள் இருந்தன. தற்போது 47 இடங்களாக அதிகரித்துள்ளன.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்முடையது என்பதால் 24 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன" எனக் கூறியதாக செய்திகள் வெளியானது.

    இதற்கு பதில் அளித்த உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி எம்.பி. பிரியங்கா சதுர்வேதி "அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க வேண்டும். அவர்களை யார் தடுத்து வைத்துள்ளார்கள்?. நம்முடைய ராணுவம் பலம் வாய்ந்தது. பாகிஸ்தான் சூழ்நிலை தற்போது பலவீனமாக உள்ளது. தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெற வேண்டும். அதன்பின் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேர்தலை நடத்த வேண்டும். ஆனால் அதற்கு முன் ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகம் நிலவ அனுமதிக்க வேண்டும்" என்றார்.

    • மேற்கு வங்காளத்தில் மாதிரி வினாத்தாள் வழங்கப்பட்டது.
    • அதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்த கேள்வி கேட்கப்பட்டது.

    புதுடெல்லி:

    மேற்கு வங்காளத்தில் வங்காள மொழி வழியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாதிரி வினாத்தாளில், இந்திய வரைபடத்தில் 'ஆசாத் காஷ்மீரை' குறிக்கவும் என்று கேட்கப்பட்டிருந்தது.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை அந்நாட்டு அரசு இவ்வாறு குறிப்பிடுகிறது. இதுதொடர்பான படம் சமூக வலைதளங்களில் வெளியானதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்த கேள்விக்கு எதிர்க்கட்சியான பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் இது தவறுதலாக ஏற்பட்டதாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.

    இந்நிலையில், இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ள மத்திய கல்வி அமைச்சகம், இது தொடர்பான விளக்க அறிக்கையுடன், இவ்விஷயத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கும்படி மேற்கு வங்காள கல்வித்துறையை கேட்டுள்ளது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    ×