search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரீஸ் ஒலிம்பிக்"

    • கென்யா வீராங்கனை பெய்த் கிபியெகான் ஒலிம்பிக் சாதனை படைத்தார்.
    • 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாதனையை முறியடித்து அமெரிக்க அணியே புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்ற ஆண்களுக்கான 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் அமெரிக்க அணி புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தது.

    கிறிஸ்டோபர் பெய்லி, வெரோன் நார்வுட், புரூஸ் டெட்மான், ராய் பெஞ்சமின் ஆகியோர் அடங்கிய அணி பந்தய தூரத்தை 2 நிமிடம் 54.43 வினாடியில் கடந்து தங்கம் வென்றது.

    இதற்கு முன்பு 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் அமெரிக்க அணி 2 நிமிடம் 55.39 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாதனையை முறியடித்து அமெரிக்க அணியே புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது.

    போஸ்ட்வானா அணிக்கு வெள்ளியும் (2 நிமிடம் 54.53 வினாடி), இங்கிலாந்து அணிக்கு (2 நிமிடம் 55.83 வினாடி) வெண்கலமும் கிடைத்தன.

    பெண்களுக்கான 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் அமெரிக்கா தங்கம் வென்றது. அந்த அணி பந்த தூரத்தை 3 நிமிடம் 15.17 வினாடியில் கடந்தது. நெதர்லாந்து 3 நிமிடம் 19.50 வினாடியில் கடந்து வெள்ளியும், இங்கிலாந்து 3 நிமிடம் 19.72 வினடியில் கடந்து வெண்கலமும் பெற்றன.

    பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் கென்யா வீராங்கனை பெய்த் கிபியெகான் ஒலிம்பிக் சாதனை படைத்தார்.

    அவர் பந்தய தூரத்தை 3 நிமிடம் 51. 29 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். இதற்கு முன்பு அவர் 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் 3 நிமிடம் 53.11 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. பெய்த் கிபியெ கான் தனது சாதனையை முறியடித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். அவர் தான் உலக சாதனையாளாராகவும் உள்ளார்.

    ஆஸ்திரேலிய வீராங்கனை வீராங்கனை ஜெசிகா ஹல் 3 நிமிடம் 52.56 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், இங்கிலாந்தை சேர்ந்த ஜார்ஜியா பெல் 3 நிமிடம் 52.61 வினாடியில் கடந்து வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினார்கள்.

    ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் கென்ய வீரர் இம்மானுவேல் வன்யோனி 1 நிமிடம் 41. 19 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். கனடாவை சேர்ந்த மார்கோ அரோப் 1 நிமிடம் 41.20 வினாடியில் கடந்து வெள்ளியும், அல்ஜீரியா வீரர் டிஜ்மெல் செட் ஜாட்டி 1 நிமிடம் 41.50 வினாடியில் கடந்து வெண்கலமும் பெற்றனர்.

    ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் நியூசிலாந்து வீரர் கெர்ஹமிஸ் 2.36 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார். அமெரிக்க வீரர் ஷெல்பைக்கு வெள்ளியும், கத்தாரை சேர்ந்த பார்சிமுக்கு வெண்கலமும் கிடைத்தன.

    ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் நார்வேக்கு தங்கம் கிடைத்து. அந்நாட்டை சேர்ந்த ஜேக்கப் இன்ஜெப்ரிஸ்டன் பந்தய தூரத்தை 13 நிமிடம் 13.66 வினாடியில் கடந்தார். ரொனால்டு கெமோய்க்கு வெள்ளியும் (கென்யா, 13 நிமிடம் 15.04 வினாடி), கிராண்ட் பிஷ்சருக்கு (அமெரிக்கா, 13 நிமிடம் 15.13 வினாடி) வெண்கலமும் கிடைத்தன.

    பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில், ஜப்பான், தென் ஆப்பிரிக்கா, செக்குடியரசு அணிகளுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் கிடைத்தன.

    பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை மசாய் ரஸ்சல் 12.33 வினாடியில் கடந்து தங்கம் வென்றார்.

    பிரான்சை சேர்ந்த சைரனா சம்பா வெள்ளி பதக்கமும் (12.34 வினாடி), போர்டோரிகோ வீராங்கனை ஜேஸ்மின் கேமாச்சோ (12.36 வினாடி) வெண்கலமும் பெற்றனர்.

    • வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது.
    • தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையீடு செய்தார்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.

    ஆனால் வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அரையிறுதியில் அவரிடம் 5-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்த கியூபா வீராங்கனை குஸ்மான் இறுதிப்போட்டிக்கு விளையாட தகுதிபெற்றார்.

    இதையடுத்து, தனது தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டுள்ளார்.

    தனது தகுதிநீக்கத்தை ரத்துசெய்ய வேண்டும் எனக்கூறிய வினேஷ் போகத், இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற தமக்கு வெள்ளிப் பதக்கம் பகிர்ந்து அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வினேஷ் போகத் விவகாரத்தில் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்படும். இந்த விவகாரத்தில் ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்தது. இந்த விவகாரத்தை நீதிபதி அனபெல் பெனட் விசாரிப்பார் என விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்துள்ளது.

    இதற்கிடையே, வினேஷ் போகத் விவகாரத்தில் சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் இன்று இரவு 9.30 மணியளவில் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், வினேஷ் போகத் விவகாரத்தில் மேல்முறையீடு தீர்ப்பை ஆகஸ்ட் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம்.

    • வினேஷ் போகத் பதக்கம் வென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
    • வினேஷ் நம் நாட்டுக்காக செய்ததை நாம் மறந்துவிட கூடாது என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.

    ஆனால் வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அரையிறுதியில் அவரிடம் 5-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்த கியூபா வீராங்கனை குஸ்மான் இறுதிப்போட்டிக்கு விளையாட தகுதிபெற்றார்.

    இதையடுத்து, தனது தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டுள்ளார்.

    தனது தகுதிநீக்கத்தை ரத்துசெய்ய வேண்டும் எனக்கூறிய வினேஷ் போகத், இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற தமக்கு வெள்ளிப் பதக்கம் பகிர்ந்து அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    வினேஷ் போகத் விவகாரத்தில் இன்று இரவு 9-30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், வினேஷ் போகத் குறித்து ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா பேசியுள்ளார்.

    அதில், "வினேஷ் போகத் பதக்கம் வென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இப்படி ஒரு நிலை வராமல் இருந்திருந்தால் அவளுக்கு பதக்கம் கிடைத்திருக்கும். பதக்கம் வென்றவர்களை மக்கள் சில காலம் நினைவில் வைத்துக் கொண்டு அவர்களை சாம்பியன்கள் என்று கூறுவார்கள்.

    பதக்கம் வெல்லாதவர்களை மக்கள் எளிதில் மறந்துவிடுவார்கள். ஆனால் வினேஷ் நம் நாட்டுக்காக செய்ததை நாம் மறந்துவிட கூடாது என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

    • இந்திய வீராங்கனை ரித்திகா காலிறுதியில் தோல்வி அடைந்தார்.
    • இந்தியாவின் அமன் ஷெராவத் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்றார்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் பெண்களுக்கான 76 கிலோ எடைப்பிரிவு ப்ரீஸ்டைல் பிரிவில் காலிறுதியில் இந்திய வீராங்கனை ரித்திகா ஹூடா, கிரிகிஸ்தானின் ஐபெரி கிஜியுடன் மோதினார். இந்தப் போட்டியில் இருவரும் சிறப்பாக ஆடினர்.

    இறுதியில், ரித்திகா 1-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

    ஆனாலும் ரிபிசேஜ் முறையில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் நுழைய வாய்ப்புள்ளது.

    இந்தியா சார்பில் மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் நேற்று வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய வீராங்கனை ரித்திகா தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார்.
    • இந்தியா சார்பில் மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் வெண்கலம் வென்றார்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் பெண்களுக்கான 76 கிலோ எடைப்பிரிவு ப்ரீஸ்டைல் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை ரித்திகா ஹூடா, ஹங்கேரியின் நாகி பெர்னட்டை எதிர்கொண்டார்.

    இந்தப் போட்டியில் ரித்திகா தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். இறுதியில், ரித்திகா 12-2 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

    நேற்று இந்தியா சார்பில் மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது.
    • தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையீடு.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.

    ஆனால் வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அரையிறுதியில் அவரிடம் 5-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்த கியூபா வீராங்கனை குஸ்மான் இறுதிப்போட்டிக்கு விளையாட தகுதிபெற்றார்.

    இதையடுத்து, தனது தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டுள்ளார்.

    தனது தகுதிநீக்கத்தை ரத்துசெய்ய வேண்டும் எனக்கூறிய வினேஷ் போகத், இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற தமக்கு வெள்ளிப் பதக்கம் பகிர்ந்து அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதற்கிடையே, இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வினேஷ் போகத் விவகாரத்தில் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்படும். இந்த விவகாரத்தில் ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்தது. இந்த விவகாரத்தை நீதிபதி அனபெல் பெனட் விசாரிப்பார் என விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், வினேஷ் போகத் விவகாரத்தில் இன்று இரவு 9-30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் தெரிவித்துள்ளது.

    • ஒலிம்பிக்கில் பதக்க பட்டியல் தங்கப் பதக்கத்தின் அடிப்படையிலேயே வரிசைப்படுத்தப்படும்.
    • இந்த பட்டியலில் முதலிடம் பிடிப்பதில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    பாரீஸ்:

    பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு நாட்டு வீரர், வீராங்கனைகள் தங்களது அபார திறமையை வெளிப்படுத்தி பதக்க வேட்டைகளை நடத்தி வருகின்றனர்.

    ஒலிம்பிக் தொடரின் பதக்க பட்டியல் தங்கப் பதக்கத்தின் அடிப்படையிலேயே வரிசைப்படுத்தப்படும். அதற்கு அடுத்து வெள்ளிப் பதக்கம் மற்றும் வெண்கல பதக்கங்களின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படுகிறது.

    இந்நிலையில், பதக்க பட்டியலில் முதலிடம் பிடிப்பதில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    தற்போது பதக்க பட்டியலில் 33 தங்கம், 39 வெள்ளி மற்றும் 39 வெண்கலம் என 111 பதக்கங்களுடன் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

    33 தங்கம், 27 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 83 பதக்கங்களுடன் சீனா 2-வது இடத்திலும், 18 தங்கம், 16 வெள்ளி, 14 வெண்கலம் என 48 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 3-வது இடத்திலும் உள்ளது.

    இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண்கல பதக்கங்களுடன் 69-வது இடத்தை பிடித்துள்ளது.

    அதேசமயம், பாகிஸ்தான் ஒரே ஒரு தங்க பதக்கம் வென்று 59-வது இடத்தில் உள்ளது.

    இந்தியா 5 வெண்கல பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா ஒரு வெள்ளி பதக்கம் வென்றார். துப்பாக்கி சுடுதலில் இந்தியா 3 வெண்கல பதக்கங்களை வென்றது. ஆண்கள் ஹாக்கியில் மற்றொரு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. மல்யுத்தத்தில் ஒரு வெண்கலம் கிடைத்தது. இதையடுத்து, 6 பதக்கங்களுடன் இந்தியா 69-வது இடத்தில் உள்ளது.

    • நிறைவு நாளான நாளை 13 தங்கத்துக்கான போட்டி நடத்தப்படுகிறது.
    • 206 நாடுகளை சேர்ந்த 10,717 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    பாரீஸ்:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 26-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. 27-ந் தேதி முதல் போட்டிகள் ஆரம்பமானது.

    இதில் 206 நாடுகளை சேர்ந்த 10,717 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 32 விளையாட்டில் 48 வகைகளில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    வெற்றிகரமாக நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகள் நாளையுடன் முடிகிறது. 15-வது நாளான இன்று 39 தங்கப் பதக்கத்துக்கான போட்டிகள் நடைபெறுகிறது.

    நிறைவு நாளான நாளை 13 தங்கத்துக்கான போட்டி நடத்தப்படுகிறது. ரோடு சைக்கிளிங், மல்யுத்தம் (தலா 3 தங்கம்), தடகளம், வாட்டர் போலோ, கூடைப்பந்து, ஹேண்ட்பால், மாடர்ன் பெண்டத்லான், கைப்பந்து, பளு தூக்குதல் (தலா 1 தங்கம்) ஆகிய விளையாட்டுக்கள் கடைசி நாளில் நடைபெறுகிறது.

    ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழா நாளை நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கிறது. 2 பதக்கம் வென்று சாதனை படைத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் , ஆக்கி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஆகியோர் தேசியக்கொடியை ஏந்தி செல்கிறார்கள்.

    • இரு அணிகளும் சிறப்பாக விளையாடியதால் ஆட்டம் 1-1 என சமனிலையில் முடிந்தது.
    • வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஷூட் அவுட் முறையில் நெதர்லாந்து 3-1 என வென்றது.

    பாரீஸ்:

    ஒலிம்பிக்கில் ஆண்கள் பிரிவு ஹாக்கி போட்டியின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்திய ஜெர்மனியும், நெதர்லாந்தும் மோதின.

    இதில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. இதனால் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

    இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்க ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் நெதர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்று தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியது.

    கடைசி வரை போராடிய ஜெர்மனி அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

    நேற்று நடைபெற்ற ஹாக்கி போட்டியில் இந்திய அணி வென்று வெண்கல பதக்கம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது.
    • தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையீடு.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.

    இதற்கிடையே, வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அரையிறுதியில் அவரிடம் 5-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்த கியூபா வீராங்கனை குஸ்மான் இறுதிப்போட்டிக்கு விளையாட தகுதிபெற்றார்.

    இதையடுத்து, தனது தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டுள்ளார்.

    தனது தகுதிநீக்கத்தை ரத்துசெய்ய வேண்டும் எனக்கூறிய வினேஷ் போகத், இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற தமக்கு வெள்ளிப் பதக்கம் பகிர்ந்து அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வினேஷ் போகத் விவகாரத்தில் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்படும். இந்த விவகாரத்தில் ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்துள்ளது.

    வினேஷ் போகத் விவகாரத்தை நீதிபதி அனபெல் பெனட் விசாரிப்பார் என விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்துள்ளது.

    • ஒலிம்பிக் நிறைவு விழா வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது.
    • இதில் மனு பாக்கர் மற்றும் ஸ்ரீஜேஷ் ஆகியோர் இந்திய தேசிய கொடி ஏந்துகின்றனர்.

    பாரீஸ்:

    ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளில் இருந்து 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா துப்பாக்கி சுடுதலில் 3 வெண்கலம், ஹாக்கியில் ஒரு வெண்கலம் மற்றும் ஈட்டி எறிதலில் ஒரு வெள்ளி என 5 பதக்கங்களை வென்றுள்ளது.

    தனிநபர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் ஸ்வப்னில் குசாலே தலா ஒரு வெண்கலமும், இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஒரு வெண்கலமும் வென்றுள்ளனர்.

    இதற்கிடையே, ஒலிம்பிக் நிறைவு விழாவில் இரட்டை வெண்கலம் வென்ற மனு பாக்கர் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்வார் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் நிறைவு விழாவில் இரட்டை பதக்கம் வென்ற மனு பாக்கர் மற்றும் ஹாக்கி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஆகியோர் இந்தியா தேசியக்கொடியை ஏந்திச் செல்வார்கள் என இந்திய ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

    • நோவா லைல்சால் 200 மீட்டர் ஓட்டத்தில் வெற்றிபெற முடியவில்லை.
    • ஜமைக்காவை சேர்ந்த ரஷீத் பிராட்டெல் (13.09) வெண்கலமும் கைப்பற்றினார்கள்.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் நள்ளிரவு 12.55 மணிக்கு பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம் நடைபெற்றது.

    இதில் பங்கேற்ற அமெரிக்க வீராங்கனை லெவரோன் சிட்னி மெக்லாக்லின் புதிய உலக சாதனை படைத்தார். அவர் பந்தய தூரத்தை 50.37 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதம் அவர் 50.65 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. தனது சாதனையை முறியடித்து மெக்லாக்லின் புதிய சாதனை நிகழ்த்தினார்.

    மற்றொரு அமெரிக்க வீராங்கனை அனா காக்ரெல் 51.87 வினாடியில் கடந்து வெள்ளியும், நெதர்லாந்தை சேர்ந்த பெமே போல் 52.15 வினாடியில் கடந்து வெண்கலமும் கைப்பற்றினார்கள்.

    உலகின் அதிவேக வீரரான அமெரிக்காவை சேர்ந்த நோவா லைல்சால் 200 மீட்டர் ஓட்டத்தில் வெற்றிபெற முடியவில்லை. 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற அவர் 200 மீட்டர் ஓட்டத்தில் 19.70 வினாடியில் கடந்து 3-வது இடத்தை பிடித்து வெண்கலம் வென்றார்.

    போஸ்ட்வானாவை சேர்ந்த டெபேகோ 19.46 வினாடியில் கடந்து தங்கப் பதக்கமும், மற்றொரு அமெரிக்க வீரர் கென்னத் பெட்னரிக் 19.62 வினாடியில் கடந்து வெள்ளியும் பெற்றனர்.

    ஆண்களுக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அமெரிக்க வீரர் கிராண்ட் ஹேர்லேவே 12.99 வினாடியில் கடந்த தங்கம் வென்றார். மற்றொரு அமெரிக்க வீரர் டேனியல் ராய்ட்ஸ் (13.09 வினாடி) வெள்ளியும், ஜமைக்காவை சேர்ந்த ரஷீத் பிராட்டெல் (13.09) வெண்கலமும் கைப்பற்றினார்கள்.

    பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் அமெரிக்க வீராங்கனை தாரா டேவில் 7.10 மீட்டர் தூரம் தாண்டி தங்கம் வென்றார். ஜெர்மனி, அமெரிக்காவுக்கு முறையே வெள்ளி, வெண்கலம் கிடைத்தன.

    ×