search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஜித் பவார்"

    • பாராமதி மக்களவை தொகுதியில் சர்த் பவார் மகள் சுப்ரியா சுலேயிடம் தோல்வியடைந்தார்.
    • மகாராஷ்டிரா மாநிலங்களில் 2-வது மாநிலங்களை எம்.பி.க்கான இடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் பவார் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அஜித் பவார், அதிக எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியை கைப்பற்றிக் கொண்டார்.

    தற்போது அஜித் பவார் ஒரு அணியாகவும், சரத் பவார் ஒரு அணியாகவும் திகழ்கின்றனர். சரத் பவார் மகள் சுப்ரியா சுலே பாராமதி மக்களவை தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்.

    மக்களவை தேர்தலில் சரத் பவார் தனது மகள் சுப்ரியா சுலேவை மீண்டும் அதே தொகுதிளில் நிறுத்தினார். அதேவேளையில் அஜித் பவார் தனது மனைவி சுனேத்ராவை அந்த தொகுதியில் நிறுத்தினார். சுப்ரியா சுலே தனது அண்ணன் மனைவியை எதிர்த்து போட்டியிட வேண்டியிருந்தது.

    இருந்த போதிலும் அண்ணன் மனைவியை வீழ்த்தி 4-வது முறையாக வெற்றி பெற்றார். இதனால் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரான அஜித் பவார் ஏமாற்றம் அடைந்தார்.

    இதற்கிடையே அசாம், பீகார், மகாராஷ்டிரா மாநிலங்களில தலா இரண்டு மாநிலங்களவை எம்.பி.க்கான இடங்கள் காியாக இருப்பதாக மாநிலங்களவை செயலாளர் அறிவிப்பாணை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அஜித் பவார் தனது மனைவியை மாநிலங்களவை எம்.பி.யாக்க முடிவு செய்தார். கட்சியும் ஆதரவு தெரிவிக்க சுனேத்ரா மாநிலங்களவை எம்.பி.க்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

    இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சகான் புஜ்பால் கூறியதாவது:-

    மாநிலங்களவை தேர்தலில் சுனேத்ரா பவார் வேட்புமனு தாக்கல் செய்ய தேசியவாத காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. நான் கூட இந்த தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இருந்தேன். ஆனால், நேற்று மாலை (புதன்கிழமை) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கட்சி தலைவர்கள் சுனேத்ரா பெயரை முடிவு செய்தார்கள்.

    அனைவரும் கட்சி முடிவை ஏற்றுக் கொண்டனர். சில நிர்பந்தங்கள் அங்கே இருந்தன. நான் தனிப்பட்ட நபர் கிடையாது. கட்சி தொண்டர், கட்சி தலைவர்.

    இவ்வாறு சகான் புஜ்பால் தெரிவித்துள்ளார்.

    அரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா மாநிலங்களில் தலா ஒரு மாநிலங்களவை எம்.பி.க்கான இடம் காலியாக உள்ளது.

    • இணையமைச்சர் பதவியை ஏற்க முடியாது என்பதை பாஜக தலைமைக்கு தெரிவித்துவிட்டேன்
    • மோடி அமைச்சரவையில் அஜித் பவார் கட்சி இடம்பெறவில்லை

    மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் பாஜக 17 இடங்களில் மட்டும் தான் வென்றது. அதில் 1 இடத்தில் மட்டும் தான் அஜித் பவார் கட்சி வென்றது. அக்கட்சியின் பிரஃபுல் படேல் எம்.பி.யாக தேர்வானார்.

    இந்நிலையில், மத்திய அமைச்சரவையில் பிரஃபுல் படேலுக்கு வழங்கப்பட்ட இணையமைச்சர் பதவியை ஏற்க அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. அதனால் மோடி அமைச்சரவையில் அஜித் பவார் கட்சி இடம் பெறவில்லை.

    இது தொடர்பாக பேசிய மராட்டிய துணை முதல்வர் அஜித் பவார், "பிரஃபுல் படேல் ஏற்கனவே ஒன்றிய அமைச்சராக பதவி வகித்துள்ளார். அப்படி இருக்கும்போது இணையமைச்சர் பதவியை ஏற்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எங்களுக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வேண்டும் என கேட்டுள்ளோம். அமைச்சர் பதவிக்காக காத்திருக்க தயார் என பாஜக தலைமையிடம் தெரிவித்து உள்ளோம்" என்று கூறியுள்ளார்.

    • ஐந்து முதல் ஆறு எம்.எல்.ஏ.-க்கள் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள முயற்சி.
    • பா.ஜனதாவை மகிழ்விப்பதற்காக இது போன்ற கருத்துகளை தெரிவித்துள்ளார்- சரத் பவார் கட்சி

    சரத் பவார் தொடங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.-க்கள் பிரித்துக் கொண்டு சென்றார். இவர் தலைமையிலான அணிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    இதனால் சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்த்ரா பவார்) என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இந்த நிலையில் "சரத் பவாரின் கட்சியை சேர்ந்த ஐந்து முதல் ஆறு எம்.எல்.ஏ.-க்கள் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள். அவர்கள் சரத் பவார் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க விரும்புகின்றனர்" என அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுனில் தத்காரே தெரிவித்துள்ளார்.

    இதற்கு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கிளைடே கிராஸ்டோ பதில் கூறுகையில் "மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்களவை தேர்தலில் அவருடைய கட்சி ஒரு இடத்தைக் கூட பிடிக்காது என்பது தத்காரேவுக்கு தெரியும். பா.ஜனதாவை மகிழ்விப்பதற்காக இது போன்ற கருத்துகளை தெரிவித்துள்ளார்" என்றார்.

    மக்களவை தேர்தலில் சரத்பவார் கட்சி, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே கட்சி இணைந்து போட்டியிடுகின்றன. மறுபக்கம் பா.ஜனதா, அஜித் பவார் கட்சி, ஏக் நாத் ஷிண்டே கட்சி இணைந்து போட்டியிடுகின்றன.

    மத்தியில் யார் ஆட்சி அமைப்பது என்பதை நிர்ணியக்கும் முக்கிய மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்வது குறிப்பிடத்தக்கது.

    • 2021-ம் ஆண்டு மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த ரூ.25,000 கோடி ஊழல் தொடர்பாக விசாரிக்க, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
    • இந்த ஊழல் நடந்தபோது, மகாராஷ்டிரா துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் இயக்குனராக இருந்தார்

    மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளுக்கு 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே முதற்கட்டத் தேர்தலின்போது 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துவிட்டது.

    மகாராஷ்டிராவில் வி.ஐ.பி தொகுதியாகக் கருதப்படும் பாராமதியில் சரத் பவார் மகள் சுப்ரியா சுலேயும், துணை முதல் மந்திரி அஜித் பவார் மனைவி சுனேத்ர பவாரும் போட்டியிடுகின்றனர். இந்த பாராமதி தொகுதிக்கு மே 7ஆம் தேதி மூன்றாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் மீதான ₹25,000 கோடி கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில், அவர் மீது குற்றமில்லை என்றும் வங்கிகளுக்கு பணம் இழப்பே இல்லை என்றும் வழக்கை மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை மூடியுள்ளது.

    இதுகுறித்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தலைவர் ஆனந்த் துபே கருத்து தெரிவித்துள்ளார். அதில், "பிரதமர் மோடி இந்தக் குற்றச்சாட்டை எழுப்பி, இது ஊழல் குடும்பம் என்று கூறினார். ஆனால், இன்று அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டு பாஜகவில் இணைந்த தலைவர்கள் அனைவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் எந்த குற்றச் செயலையும் பார்க்கவில்லை என மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது" என அவர் கூறினார்.

    2021-ம் ஆண்டு மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த ரூ.25,000 கோடி ஊழல் தொடர்பாக விசாரிக்க, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்த ஊழல் நடந்தபோது, தற்போது மகாராஷ்டிரா துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் உட்பட, தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் இயக்குநர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
    • பாராமதியில் சரத் பவார் மகள் சுப்ரியா சுலேயும், அஜித் பவார் மனைவி சுனேத்ர பவாரும் போட்டியிடுகின்றனர்.

    மும்பை:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    இதற்கிடையே, நாடு முழுவதும் நாளை முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் நடைபெறுகிறது

    இந்நிலையில், பாராமதி தொகுதியில் போட்டியிடும் அஜித் பவார் மனைவி சுனேத்ர பவார் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    அப்போது முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்பட பலர் உடனிருந்தனர்.

    வி.ஐ.பி தொகுதியாகக் கருதப்படும் பாராமதியில் சரத் பவார் மகள் சுப்ரியா சுலேயும், துணை முதல் மந்திரி அஜித் பவார் மனைவி சுனேத்ர பவாரும் போட்டியிடுகின்றனர். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன
    • அதன்படி நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது

    பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

    இந்நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு பாராமதி மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த தொகுதியில் பாஜக கூட்டணி சார்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவாரின் மனைவி சுனித்ரா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

    ஆனால் அஜித்பவாரின் மனைவி சுனித்ராவை எதிர்த்து பாராமதி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக ஏக்நாத் ஷிண்டே சிவசேனா நிர்வாகி விஜய் ஷிவதாரே பேசியுள்ளார். இதனால் மகாராஷ்டிரா பா.ஜ.க. கூட்டணியில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

    கூட்டணியில் இருந்து கொண்டே போட்டி வேட்பாளராக களமிறங்கும் விஜய் ஷிவதாரேவை சிவசேனாவில் இருந்து நீக்காவிட்டால், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறப்போவதாக அஜித்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க. மற்றும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி வகித்து வருகிறார். அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் அமைச்சர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகாராஷ்டிரா மாநிலத்தில பா.ஜனதா 31 இடங்களில் போட்டியிடுகிறது.
    • சுப்ரியா சுலே எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராமதி தொகுதி அஜித் பவார் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜனதா, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்த மூன்று கட்சிகளும் மக்களவை தேர்தலில் இணைந்து போட்டியிட முடிவு செய்தன. 48 தொகுதிகளை பிரித்துக் கொள்வது தொடர்பாக மூன்று கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால் இறுதி முடிவு எட்டப்படாமல் இழுபறி நிலவியது.

    இதனால் சில தினங்களுக்கு முன் மத்திய உள்துறை மந்திரியான அமித் ஷா தலையிட்டு இரண்டு கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாராமதி, ரெய்க்கார், ஷிருர், பார்பனி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிக்கு 13 இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. பா.ஜனதா 31 இடங்களில் போட்டியிடுகிறது.

    பாராமதி தொகுதி பவார் குடும்பத்தின் கோட்டையாக விளங்குகிறது. தற்போது சரத் பவார்- அஜித் பவார் குடும்ப உறுப்பினர்கள் இடையே போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே பாராமதி தொகுதி எம்.பி.யாக உள்ளார். அவர் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது. அவரை எதிர்த்து அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா களம் இறங்க அதிக வாய்ப்புள்ளது.

    • சரத் பவார் கட்சி சார்பில் பதவி நீக்கம் செய்ய மனு.
    • பதவி இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கும் நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலம் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் பிரபுல் பட்டேல் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் மாநிலங்களவை எம்.பி.யாக ஐந்தாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.

    கடந்த ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் கட்சியில் தனக்கென்று ஒரு அணியை பிரித்துக் கொண்டு செயல்பட்டார்.

    கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ.-க்கள் தன்னுடன் இருப்பதாக கூறிக்கொண்டு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சியில் இணைந்து துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் சில மாநில மந்திரியாக பதவி ஏற்றனர்.

    அஜித் பவாருடன் பிரபுல் பட்டேல் இணைந்து செயல்பட்டார். தேர்தல் ஆணையம் தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித் பவார் அணிக்கே சொந்தம் என அறிவித்தது. மகாராஷ்டிரா மாநில சபாநாயகரும் அதை உறுதிப்படுத்தினார்.

    இந்த நிலையில்தான் சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திரா பவார் கட்சியை தொடங்கினார். சரத் பவார் பிரபுல் பட்டேலை மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் மனு அளித்திருந்தனர்.

    இந்த நிலையில்தான் பிரபுல் பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்னும் நான்கு ஆண்டுகள் பதவிக் காலம் உள்ள நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    அதேவேளையில் மீண்டும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியிட இருக்கிறார். அம்மாநிலத்தின் வந்தனா சவான் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. அந்த இடத்திற்கு பிரபுல் பட்டேல் போட்டியிட இருக்கிறார்.

    அரவது ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது விரைவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மாநிலங்களவை எம்.பி.க்கான இடம் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிக்க இருக்கிறது.

    • சரத் பவார் கட்சியை உடைத்து, அதை கைப்பற்றிக் கொண்டவர் அஜித் பவார்.
    • அரசியல் ரீதியாக மோதல் இருந்து வரும் நிலையில் சரத் பவார் மகள், அஜித் பவாரை சந்திக்க சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

    சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து, அந்த கட்சியை கைப்பற்றிக் கொண்டார் அஜித் பவார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை கைப்பற்றியதுடன், கடிகாரம் சின்னமும் அவருக்கு கிடைத்துள்ளது.

    இதனால் சட்டப்போராட்டம் முடியும் வரை சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் சரத்சந்த்ரா பவார் என்ற பெயரில் புதுக்கட்சியை தொடங்கியுள்ளார்.

    இரு கட்சி தலைவர்களுக்கும் இடையில் கட்சி ரீதியில் மோதல் இருந்து வந்த நிலையில், இன்று காலை சரத் பவாரின் மகளும், மக்களவை எம்.பி.யுமான சுப்ரியா சுலே மகாராஷ்டிர மாநில துணை முதல்வரான அஜித் பவாரை சந்திக்க வந்தார்.

    இரு கட்சிகளுக்கும் இடையில் மோதல் இருந்து வரும் நிலையில் திடீரென சுப்ரியா சுலே அஜித் பவாரை சந்திக்க வந்தது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து, அந்த கட்சியை கைப்பற்றிக் கொண்டார் அஜித் பவார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை கைப்பற்றியதுடன், கடிகாரம் சின்னமும் அவருக்கு கிடைத்துள்ளது.

    இதனால் சட்டப்போராட்டம் முடியும் வரை சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் சரத்சந்த்ரா பவார் என்ற பெயரில் புதுக்கட்சியை தொடங்கியுள்ளார்.

    இரு கட்சி தலைவர்களுக்கும் இடையில் கட்சி ரீதியில் மோதல் இருந்து வந்த நிலையில், இன்று காலை சரத் பவாரின் மகளும், மக்களவை எம்.பி.யுமான சுப்ரியா சுலே மகாராஷ்டிர மாநில துணை முதல்வரான அஜித் பவாரை சந்திக்க வந்தார்.

    இரு கட்சிகளுக்கும் இடையில் மோதல் இருந்து வரும் நிலையில் திடீரென சுப்ரியா சுலே அஜித் பவாரை சந்திக்க வந்தது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் சுப்ரியா சுலே கூறியதாவது:-

    அஜித் பவார் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வர். புனே மாவட்டத்தின் பாதுகாவலர் மந்திரியும் கூட. உஜ்ஜானி, நஜார் அணைகள் என்னுடைய தொகுதியான பாராமதியில் உள்ளது. தற்போது இந்த அணைகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளத. இது குடிநீர் மற்றும் பாசன நீர் தொடர்பாக கவலை அளிக்கும் விதமாக உள்ளது. இதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என சந்திப்பின்போது வேண்டுகோள் விடுப்பேன்.

    எனது தொகுதியில் நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து அஜித் பவாரின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக அவரை சந்திக்க வந்தேன்.

    இவ்வாறு சுப்ரியா சுலே தெரிவித்தார்.

    இந்த நிலையில் சுப்ரியா சுலே கூறியதாவது:-

    அஜித் பவார் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வர். புனே மாவட்டத்தின் பாதுகாவலர் மந்திரியும் கூட. உஜ்ஜானி, நஜார் அணைகள் என்னுடைய தொகுதியான பாராமதியில் உள்ளது. தற்போது இந்த அணைகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளத. இது குடிநீர் மற்றும் பாசன நீர் தொடர்பாக கவலை அளிக்கும் விதமாக உள்ளது. இதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என சந்திப்பின்போது வேண்டுகோள் விடுப்பேன்.

    எனது தொகுதியில் நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து அஜித் பவாரின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக அவரை சந்திக்க வந்தேன்.

    இவ்வாறு சுப்ரியா சுலே தெரிவித்தார்.

    • அஜித் பவாருக்குதான் தேசியவாத காங்கிரஸ் கட்சி என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
    • சரத்பவார் சட்டப்போராட்டம் நடத்தும் அதேவேளையில், புதிய கட்சி பெயரை அறிவிப்பு.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை நிறுவியவர் சரத் பவார். இந்த கட்சியில் முக்கிய தலைவராக விளங்கிய அவரின் அண்ணன் மகன் அஜித் பவார் பெரும்பான்மை எம்.எல்.ஏ.-க்களுடன் தனியாக செயல்பட்டு வந்தார். ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா- பாஜனதா கூட்டணி ஆட்சியில் இணைந்து துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் சில எம்.எல்.ஏ.-க்கள் மந்திரியாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

    இதனால் சரத் பவார் அணி- அஜித் பவார் அணி என தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்தது. பின்னர் தேர்தல் ஆணையம் தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித் பவாருக்கு சொந்தம் எனத் தெரிவித்து கடிகாரம் சின்னத்தையும் அவரது அணிக்கே வழங்கியது.

    இதனால் சரத் பவார் புதுக்கட்சியை தொடங்கும் நிலை ஏற்பட்டது. அவர் தனது கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திர பவார் எனப் பெயர் வைத்திருந்தார். இதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது.

    இந்த நிலையில் தற்போது தேர்தலில் போட்டியிடுவதற்காக சின்னம் ஒதுக்கியுள்ளது. சரத் பவார் கட்சிக்கு "கொம்பு இசைக்கருவி ஊதும் மனிதன் (Man blowing Turha- பராம்பரிய இசைக்கருவி)" சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

    வரும் மக்களவை தேர்தலில் சரத்பவார் கட்சி- உத்தவ் தாக்கரேயின் சிவசேனா- காங்கிரஸ் ஆகியவை ஒன்றிணைந்து போட்டியிட இருக்கின்றன. விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் அணி- அஜித் பவார் அணி என பிரிந்து செயல்பட்டது.
    • அஜித் பவார் அணிதான் தேசியவாத காங்கிரஸ் கட்சி என இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.

    இந்திய தேர்தல் ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன் அஜித் பவார் தலைமையில் இயங்கும் அணிக்குதான் தேசியவாத காங்கிரஸ் கட்சி என அங்கீகரித்தது. மேலும், கடிகாரம் சின்னத்தையும் பயன்படுத்த அனுமதி அளித்தது.

    இதனால் சரத் பவார் தனது அணிக்கு "தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திர பவார்" கட்சி எனப் பெயர் சூட்டினார். தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படும் என சரத் பவார் அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சரத் பவார் அணியினர் முறையீடு செய்துள்ளனர்.

    முன்னதாக,

    அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.-க்களுடன் பிரிந்து சென்று தனியாக செயல்பட்டு வந்தார். அத்துடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் இணைந்து துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பலர் அமைச்சரவையில் இடம் பிடித்தனர்.

    கட்சியில் இருந்து விலகி தனியாக செயல்படும் அஜித் பவார் உள்ளிட்டோரை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நீக்க வேண்டும் என சபாநாயகரிடம் புகார் அளித்தனர். ஆனால், சபாநாயகர் சரத் பவார் அணியின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார். அதனைத் தொடர்ந்துதான் தேர்தல் ஆணையம் அஜித் பவார் அணியை தேசியவாத காங்கிரஸ் கட்சியாக அங்கீகரித்தது.

    • சிவசேனா உத்தவ் தாக்கரே கட்சி நிர்வாகி அபிஷேக் கோசல்கர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார்.
    • இந்தச் சம்பவம் மும்பையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    மும்பை:

    மும்பை தகிசர் பகுதியில் பேஸ்புக் லைவ் ஷோவில் பேசிக் கொண்டிருந்த சிவசேனா உத்தவ் தாக்கரே தரப்பைச் சேர்ந்த நிர்வாகி அபிஷேக் கோசல்கர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், அபிஷேக் கோசல்கர் படுகொலையைக் கண்டித்து மகாராஷ்டிர துணை முதல் மந்திரி அஜித் பவார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியபதாவது:

    மகாராஷ்டிராவில் இதுபோன்ற படுகொலை சம்பவம் நடந்திருக்கக் கூடாது. இருவருக்கும் இடையே நட்புறவு இருந்தது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.

    இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும். அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அவதூறுகளைப் பரப்பி வருகின்றன.

    இந்த கொலைக்கான பின்னணி குறித்து ஆராயப்படும். முதல் மந்திரியுடன் இதுபற்றி கலந்து ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.

    ×