search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பாபிஷேகம்‌"

    • மக்கள் ஏராளமானோர் பங்கேற்று மல்லிகேஸ்வரரை தரிசனம் செய்தனர்.
    • கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம், இனிப்புகள் வழங்கபட்டது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள மல்லிகேஸ்வரர் கோவில் புதுப்பிக்கப்பட்டு அதன் கோபுர விமானம் மற்றும் மூலவருக்கு இன்று காலை 7:50க்கு கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முற்றிலும் கருங்கல்லினால் கட்டப்பட்ட புதிய ராஜகோபுரம் நிர்மானம் செய்யப்பட்டு அதன் விமானத்திலும் புனித நீர் ஊற்றப்பட்டது.

    கடந்த வியாழக்கிழமை முதல் கணபதி ஹோமத்துடன் பல்வேறு வேல்விகள் நடத்தப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில், 7ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் மாமல்லபுரத்தை துறைமுகமாக ஆட்சி செய்தபோது மன்னரின் அரசவையில் அமைச்சராக இருந்த பரஞ்சோதி என்பவரால் கட்டப்பட்ட பழமையான கோவிலாகும்.


    13 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்ற இந்த மகா கும்பாபிஷேகத்தில் மாமல்லபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் ஏராளமானோர் பங்கேற்று மல்லிகேஸ்வரரை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் நந்திகேஸ்வரர் பிரதோஷ கமிட்டியினர் கோவில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம், இனிப்புகள் வழங்கபட்டது.

    • வையப்பமலை அருகே நாகர்பாளையம் நடுப்பாளையத்தில்‌ ஸ்ரீ ஓங்காளியம்மன் கோவில் கும்பாபிசேகம் நடைபெற்றது.
    • இதையொட்டி 4 கால யாக பூஜைகள் நடத்தப்பட்டன.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோட்டை அடுத்த வையப்பமலை அருகே நாகர்பாளையம் நடுப்பாளையத்தில் ஸ்ரீ ஓங்காளியம்மன் கோவில் கும்பாபிசேகம் நடைபெற்றது. இதையொட்டி 4 கால யாக பூஜைகள் நடத்தப்பட்டன.

    தொடர்ந்து காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தங்கள் எடுத்து வரப்பட்டு ஸ்ரீ ஓங்காளியம்மன்,ஸ்ரீ மகா கணபதி, ஹீ சப்த கன்னிகள், ஸ்ரீ முனீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    அப்போது 2 கருடன்கள் வட்டமிட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தன. கும்பாபிசேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் மண்டல அபிஷேகம் தொடங்கியது.

    ×