search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணிப்பூர் வன்முறை"

    • கிளர்ச்சியாளர்கள் மாறி மாறி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மே மாதம் தொடங்கிய வன்முறை 16 மாதங்கள் ஆகியும் இன்னும் கட்டுப்படுத்தமுடியாமல் இருந்து வருகிறது.

    மணிப்பூர்:

    மணிப்பூரில் பழங்குடி அந்தஸ்து தொடர்பாக மெய்தி மற்றும் குக்கி இனக்குழு மக்ளுடையிலான மோதல் கலவரமாக வெடித்து 220 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். கடந்த வருடம் முதல் நடந்து வரும் இந்த கலவரத்தில் இரண்டு குக்கி சமூகப் பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய வன்முறை 16 மாதங்கள் ஆகியும் இன்னும் கட்டுப்படுத்தமுடியாமல் இருந்து வருகிறது.


    இதுவரை எந்த தீர்வும் காணப்படாமல் இன்றளவும் கலவரங்கள் தொடர்ந்து வருகின்றன. சுமார் 70,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இரு சமூகத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் மாறி மாறி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதனால் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டு வந்த நிலையில் தடை தளர்த்தப்பட்டு அங்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
    • தேடுதல் வேட்டையில் பெரிய அளவில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இம்பால்:

    வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே ஒரு ஆண்டுக்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.

    மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுவே மோதலுக்கு முக்கியக் காரணமாகும்.

    இரு சமூகத்தினரை சார்ந்த பயங்கரவாதிகளும் மாறி மாறி தாக்குதல்களில் ஈடுபடுவதால் உயிர் சேதம் தொடர் கதையானது. இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா்.

    இந்நிலையில், ஜிரிபாம் மாவட்டத்தில் நேற்று ஒரு வீட்டுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த ஒருவரை சுட்டுக்கொன்றனர். இந்த பயங்கரவாதிகள் மலைப்பகுதியில் இருந்து வந்தவர்களாவர். இதைத் தொடர்ந்து இரு சமூகத்தினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 3 பயங்கரவாதிகள் உள்பட ஆயுதம் தாங்கிய 5 போ் உயிரிழந்தனர். அங்கு மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    மணிப்பூரில் ஏற்பட்ட புதிய கலவரம் தொடர்பாக முதல்-மந்திரி பிரேன்சிங் அவசர ஆலோசனை நடத்தினார். சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடர்பாக அவர் இம்பாலில் உள்ள தனது இல்லத்தில் மாநில மந்திரிகள், ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ.க்களுடன் நேற்று இரவு அவர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    இந்த அவசர கூட்டத்துக்கு பிறகு முதல்-மந்திரி பிரேன்சிங், கவர்னர் லட்சுமன் ஆச்சார்யாவை தனியாக சந்தித்தார்.

    இந்த நிலையில் முதல்-மந்திரி பிரேன்சிங், 20 எம்.எல்.ஏ.க்களுடன் கவர்னர் லட்சுமன் ஆச்சார்யாவை இன்று காலை 11 மணியளவில் சந்தித்தார். இந்த சந்திப்பு 1 மணி நேரம் நடைபெற்றது. அவர்கள் என்ன விவாதித்தார்கள் என்று தெரியவில்லை.

    ஆளில்லா விமானம், ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து புதிய வன்முறையில் 5 பேர் கொல்லப்பட்டதால் மணிபூரில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த தேடுதல் வேட்டையில் பெரிய அளவில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. துப்பாக்கிகள், கைதுப்பாக்கிகள், குண்டுகள், கையெறி குண்டுகள், நீண்ட தூரம் தாக்க கூடிய ராக்கெட் குண்டுகள், வெடி பொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாப்பு படை வீரர்கள் கைப்பற்றினர்.

    • சொந்த வீட்டிற்கு வர முடியாமல் தவிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் அழுகுரல் கேட்கவில்லையா?.
    • 2023-ம் ஆண்டு மே 3-ந்தேதிக்குக்கு பிறகு மத்திய மந்திரிகள் மணிப்பூர் வராதது ஏன்?.

    பாராளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது மணிப்பூர் (Outer Manipur) காங்கிரஸ் எம்.பி., மணிப்பூர் வன்முறை தொடர்பாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து உணர்ச்சிப்பூர்வமான பேச்சை பதிவு செய்தார்.

    இன்று மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ஆல்ஃப்ரட் ஆர்தர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி வன்முறையால் பாதிக்கப்பட்ட மாநிலமான மணிப்பூருக்கு வர வேண்டும். சொந்த வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் மீண்டும் சொந்த வீட்டிற்கு வர முடியாமல் தவிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் அழுகுரல் கேட்கவில்லையா?.

    மத்திய மந்திரிகள் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒவ்வொரு வாரமும் 2023-ம் ஆண்டு மே 3-ந்தேதிக்குக்கு முன் வந்த நிலையில், அதன்பின் மணிப்பூர் வராதது ஏன்?.

    பிரதமர் மோடி மணிப்பூர் மாநில முதல்வர் என். பிரேன் சிங்கை ஏன் மாற்றவில்லை. ஒருவரை மாற்றினால் அமைதியை கொண்டு வர முடியும் என்ற நிலையில், அவரை மாற்ற ஏன் கஷ்டப்படுகிறார்கள் என்பது ஆச்சர்யமாக உள்ளது.

    இந்த வன்முறைக்கு ஒரு நபர்தான் காரணம் என ஒரு சமூகத்தினர் கூறுகிறார்கள். முதல்வரை விட நீங்கள் 49 உறுப்பினர்களை அதிகமாக பெற்றுள்ளீர்கள். பிரதமர் மோடி அவரை மாற்ற வேண்டும். அமைதி கொண்டு வருவதற்காக ஒருவரை மாற்றுவது கடினமா? உங்களால் சிறிய மாநிலத்தில் அமைதியை கொண்டு வர முடியவில்லை என்றால், எப்படி மிகப்பெரிய நாட்டில் அமைதியை நிலைநாட்டுவீர்கள்?

    மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டை நான் பார்வையிட்டேன். இந்த நேரத்தில், மணிப்பூர் மிகக் குறைந்த தனிநபர் வருமானம் கொண்ட மாநிலமாகவும், அதிக பணவீக்கத்தைக் கொண்ட மாநிலமாகவும் உள்ளது என்பதை அவர் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார் என்று நினைக்கிறேன். எது மக்கள் நட்பு மற்றும் ஒரு நாட்டின் நலனுக்கு எதிரானது என்பதனை புரிந்துகொள்ள உங்களுக்கு ராக்கெட் அறிவியல் தேவையில்லை.

    இவ்வாறு ஆல்ஃபர்ட் ஆர்தர் தெரிவித்துள்ளார்.

    • மணிப்பூரில் மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்பி வருகிறது.
    • வன்முறையால் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களையும் ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

    மணிப்பூரில் மெய்தி, குகி இனக்குழுவினருக்கு இடையே கடந்த ஆண்டு மே மாதம் கலவரம் வெடித்தது. ஓராண்டை கடந்தும் மோதல் சம்பவங்கள் ஆங்காங்கே தற்போதும் நீடித்து வருகிறது. இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    அதேவேளை, வன்முறையை கட்டுப்படுத்த மணிப்பூரில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. வன்முறை சம்பவங்கள் தற்போது குறைந்துள்ள நிலையில் மணிப்பூரில் மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்பி வருகிறது.

    இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி நாளை மணிப்பூர் செல்கிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் மணிப்பூர் செல்லும் அவர் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூற உள்ளார்.

    மேலும், வன்முறையால் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களையும் ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

    • மணிப்பூரில் வன்முறை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
    • மாநிலத்தின் அதிகமான இடங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

    மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு சமூகத்தினருக்கு இடையிலான மோதல் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் காணாமல் போகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் அண்டை மாநிலங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    மணிப்பூரில் வன்முறை இன்னும் முற்றிலுமாக ஓயவில்லை. பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை குறித்து வாய் திறப்பதில்லை. பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்கவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தன.

    நேற்று மக்களவையில் பிரதமர் மோடி பேசும்போது, மணிப்பூர் வன்முறை தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குரல் எழுப்பினர். "Save Manipur" எனத் தொடர்ந்து கோஷம் எழுப்பினர்.

    இந்த நிலையில் இன்று மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலுரை வழங்கி பிரதமர் மோடி பேசினார்.

    அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

    மாநில அரசு மற்றும் மற்றவர்களுடன் சேர்ந்து மத்திய அரசு மணிப்பூரில் அமைதியை கொண்டு வர பணியாற்றி வருகிறது. மணிப்பூரில் வன்முறை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. மாநிலத்தின் அதிகமான இடங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. முற்றிலும் அமைதி திரும்புவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வரப்படுகிறது.

    வன்முறை தொடர்பாக 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    மணிப்பூர் வெள்ள அபாயத்தை எதிர்கொண்டிருக்கும்போது, மத்திய அரசு இரண்டு தேசிய பேரிடர் குழுவின் இரண்டு அணிகளை மணிப்பூருக்கு அனுப்பி வைத்தது.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • 2 பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் செல்லும் பதற வைக்கும் வீடியோ வெளியானது
    • மணிப்பூர் கலவரம் தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது

    கடந்தாண்டு மணிப்பூரில் வன்முறையில் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்துச் செல்லும் நெஞ்சை பதற வைக்கும் வீடியோ வெளியானது.

    இதனையடுத்து மணிப்பூர் அரசாங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட சிபிஐ விசாரணையில், ஆறு நபர்கள் மற்றும் ஒரு சிறார் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் மீது கூட்டுப் பலாத்காரம், கொலை, குற்றச் சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில்,

    "மணிப்பூரில் வன்முறையின் போது, ஆடைகள் இன்றி இழுத்துச் செல்லப்பட்ட இரு பெண்களும், சாலையில் நின்ற போலீஸ் வாகனத்தில் ஏறி, உதவி கேட்டுள்ளனர். எனினும், வாகனத்தை எடுக்க சாவி இல்லை எனக் கூறியுள்ள போலீசார், கலவரக் கும்பலிடமே இருவரையும் வலுக்கட்டாயமாக விட்டுச் சென்றுள்ளனர் என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. 

    • மணிப்பூரில் கடந்த வருடம் நடைபெற்ற வன்முறையின்போது மனித உரிமை மீறல்.
    • ராகுல்காந்திக்கு தண்டனை வழங்கப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளது.

    அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் கடந்த வருடம் மணிப்பூரில் நடைபெற்ற வன்முறைக்குப்பிறகு குறிப்பிடத்தகுந்த அளவிற்கு மனிதாபிமான மீறல் நடைபெற்றுள்ளது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த அறிக்கைக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்து. அந்த அறிக்கை மிகவும் பாரபட்சமானது. இந்திய நாட்டின் மோசமான புரிதலை பிரதிபலிக்கிறது.

    மேலும் அந்த அறிக்கையில் பிபிசி அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சுமார் 60 மணி நேரம் விசாரணை நடத்தியது. மோடியின் குடும்ப பெயர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு தண்டனை வழக்கப்பட்டு, அதன்பின் உச்சநீதிமன்றம் அதற்கு தடைவிதித்தது உள்ளிட்ட விவகாரங்களையும் தெரிவித்துள்ளது.

    அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் மனித உரிமைகள் நடைமுறைகள் குறித்த நாட்டின் அறிக்கைகள் என்ற பெயரில் அறிக்கை வெளியிடும். அதன்படி 2023 மனித உரிமைகள் நடைமுறைகள் குறித்த நாட்டின் அறிக்கைகள்: இந்தியா என்ற பெயரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவ்வாறு தெரிவித்துள்ளது.

    • 2023 மார்ச் 27-ல் மெய்தி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மணிப்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • மணிப்பூரில் மேய்தி இனத்தினருக்கும், குக்கி பழங்குடிக்கும் இடையே மோதல் உருவாகி பின்னர் மிகப்பெரிய கலவரம் வெடித்தது.

    மெய்தி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற உத்தரவை மாற்றியமைத்தது மணிப்பூர் உயர்நீதிமன்றம். இதன்படி மெய்தி இனத்தினர் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலிலேயே சேர்க்கப்படுவர்.

    2023 மார்ச் 27-ல் மெய்தி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மணிப்பூர் உயர்நீதிமன்றம் அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு பிறகு மணிப்பூரில் மெய்தி இனத்தினருக்கும், குக்கி பழங்குடிக்கும் இடையே மோதல் உருவாகி பின்னர் மிகப்பெரிய கலவரம் வெடித்தது.

    உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, மணிப்பூர் பழங்குடியினர் சங்கம் மறு ஆய்வு செய்தது. அவ்வழக்கின் தீர்ப்பில், தனது உத்தரவை நீதிமன்றம் திரும்ப பெற்றுள்ளது.

    அத்தீர்ப்பில் பழங்குடியினர் பட்டியலில் மாற்றம் செய்யவும், திருத்தவும் உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிமன்றம் சுட்டி காட்டியது.





    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த இரண்டு வாரங்களில் சந்தேகத்திற்குரிய கிளர்ச்சிக்குழுவால் பலர் படுகொலை.
    • கூட்டத்தில் பங்கேற்க எம்.எல்.ஏ.-க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. இதனால் மணிப்பூரில் ஆங்காங்கே மோதல் வெடித்த வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில் பள்ளத்தாக்கைச் சேர்ந்த கிராம பாதுகாப்புக்கு குழு இன்று மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள கங்லா கோட்டையில் மிகப்பெரிய கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. இதனால் நேற்று இரவு முதல் இதுவரை இல்லாத அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பள்ளத்தாக்கின் கிராம பாதுகாப்பு குழுவான அரம்பை டெங்கோல் (AT) என்ற குழு இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்திற்கு எம்.எல்.ஏ.-க்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த கூட்டத்தில் மணிப்பூர் வன்முறையில் தலைவர்கள் நிலை என்ன? என்பது தெளிவாக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    கடந்த இரண்டு வாரங்களில் நான்கு மரம் வெட்டுபவர்கள், கிராம பாதுகாப்பு தன்னார்வலர்கள், இரண்டு போலீஸ் கமாண்டோஸ் ஆகியோர் சந்தேகத்திற்குரிய கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில்தான் இந்த கூட்டத்தை நடத்த முன்வந்துள்ளது.

    இதனால் மத்திய அமைச்சகம் மூன்று பேர் கொண்ட சிறப்பு குழுவை மணிப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த குழு நேற்று இரவு மணிப்பூர் வந்துள்ள நிலையில் அரம்பை டெங்கோல் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

    கங்லா கோட்டை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மத்திய மற்றும் மாநில பாதுகாப்புப்படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே நாகா பழங்குடியின தலைவர்கள் உள்பட 35 எம்.எல்.ஏ.க்கள் 25 குகி கிளர்ச்சி குழுக்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுள்ளளது. எங்களது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றால், மக்களுடன் ஆலோசித்து, அதன்படி தலைவர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் சொல்லும் நடவடிக்கை, அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்து பா.ஜனதா அரசை கவிழ்ப்பது எனத் தகவல் தெரிவிக்கிறது. மணிப்பூர் சட்டசபை 60 எம்.எல்.ஏ.க்களை கொண்டதாகும்.

    குகி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பாதுகாப்புப்படை முழு அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்தரப்பு ஒப்பந்தம் முற்றிலும் ரத்து செய்யப்பட வேண்டும் என எம்.எல்.ஏ.க்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

    • மணிப்பூரில் அவ்வப்போது வன்முறை வெடித்த வண்ணம்தான் உள்ளது.
    • பிஷ்ணுபூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதால் பதட்டம் அதிகரிப்பு.

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் மைதேயி- குக்கி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 2 பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோக்கள் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இரு பிரிவினரிடையேயான மோதலால் 180-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடு, உடமைகளை இழந்த நிலையில் ஏராளமானோர் அண்டை மாநிலத்திற்கு இடம் பெயர்ந்தனர். அங்கு ராணுவம், பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் அவ்வப்போது அங்கு வன்முறை வெடித்து வருகிறது. புத்தாண்டு தினத்தன்றும் அங்கு துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதனால் பதட்டம் நிலவியது.

    இந்நிலையில் மணிப்பூரில் பிஷ்ணுபூர் மாவட்டம் அகசோய் பகுதியைச் சேர்ந்த நான்கு பேர், சுராசந்த்பூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள மலைப்பகுதியில் விறகு சேகரிப்பதற்காக நேற்று சென்றுள்ளனர். தாரா சிங், இபோம்சா சிங் (51), அவரது மகன் ஆனந்த் சிங் (20) மற்றும் ரோமன் சிங் (38) ஆகிய 4 பேரும் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கும்பலால் சிறைப்பிடிக்கப்பட்டு இருக்கலாம் என அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் நான்கு பேரில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடைய உடல்கள் சுராசந்த்பூர் மாவட்டம் ஹாடக் பைலென் காட்டுப்பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இபோம்சா சிங் (51), அவரது மகன் ஆனந்த் சிங் (20) மற்றும் ரோமன் சிங் (38) எனத் தெரியவந்துள்ளது. மூன்று பேரையும் ஆயுதமேந்திய குழு கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    தாராசிங் மட்டும் என்ன ஆனார்? என்று தெரியவில்லை. அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே நேற்று பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள கும்பி- தவுபால் மாவட்டத்தில் உள்ள வாங்கூவில் இரு பிரிவனருக்கு இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது.

    கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற வன்முறைக்குப் பிறகு மணிப்பூரில் ஏராளமானோர் மாயமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 5 நாட்களுக்கு இணையதளங்களும் முடக்கப்பட்டு உள்ளன.
    • சில இடங்களில் அவ்வப்போது அசம்பாவிதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

    மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமான மைத்தேயி சமூகத்தினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இதற்கு பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனையடுத்து கடந்த மே மாதம் 3-ந் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு பேரணி நடத்தினர். இந்த பேரணியில் கலவரம் ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அதன் பிறகும் சில இடங்களில் அவ்வப்போது அசம்பாவிதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

    இந்த நிலையில் மணிப்பூரில் மீண்டும் கலவரம் ஏற்பட்டது. சூரசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள திங்கங்பாய் கிராமத்தில் நேற்று முன் தினம் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டன. இதனை தொடர்ந்து, சூரசந்த்பூர் மாவட்ட கலெக்டர் தருண் குமார், சூரசந்த்பூர் மாவட்டம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த 144 தடை உத்தரவு வரும் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந்தேதி வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் இங்கு 5 நாட்களுக்கு இணையதளங்களும் முடக்கப்பட்டு உள்ளன.

    • கலவரம் மூண்டதை தொடர்ந்து மே 3-ந்தேதி முதலே மாநிலத்தில் செல்போன் இணையதளம் துண்டிக்கப்பட்டு இருந்தது.
    • மணிப்பூர் ரைபிள் படையினரின் முகாமில் கடந்த 1-ந்தேதி ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது.

    இம்பால்:

    மணிப்பூரில் மெய்தி, குகி இன பிரிவினருக்கு இடையே கடந்த மே 3-ந்தேதி கலவரம் வெடித்தது. 6 மாதங்களுக்கு மேலாகியும் அங்கே வன்முறை சம்பவங்கள் முற்றிலுமாக ஓயவில்லை.

    கலவரம் மூண்டதை தொடர்ந்து மே 3-ந்தேதி முதலே மாநிலத்தில் செல்போன் இணையதளம் துண்டிக்கப்பட்டு இருந்தது. இடையில் செப்டம்பர் மாதத்தில் சில நாட்கள் மட்டும் இந்த சேவை மீண்டும் வழங்கப்பட்டு இருந்தது. பின்னர் அடுத்தடுத்து இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மணிப்பூர் ரைபிள் படையினரின் முகாமில் கடந்த 1-ந்தேதி ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதனால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டியிருந்தது.

    இதைத்தொடர்ந்து மாநிலத்தில் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது.

    எனவே சமூக வலைத்தளங்கள் வழியாக வதந்தி பரவுவதை தடுக்க செல்போன் இணையதள சேவை துண்டிப்பை நாளை (புதன்கிழமை) வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான உத்தரவை மாநில உள்துறை கமிஷனர் ரஞ்சித் சிங் பிறப்பித்து உள்ளார்.

    ×