search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணிப்பூர் வன்முறை"

    • பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
    • வழக்கை மணிப்பூரில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றும்படி மத்திய அரசு கேட்க உள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

    புதுடெல்லி:

    மணிப்பூரில் இரு சமூகங்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. கிட்டத்தட்ட மூன்று மாத காலம் நீடித்த இந்த வன்முறையில் 160க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். உயிருக்குப் பயந்து ஏராளமானோர் ஊரை காலி செய்து வேறு மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில், தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

    இந்த வன்முறை உச்சத்தில் இருந்தபோது நடந்த பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    குறிப்பாக இரண்டு பெண்களை ஆடையின்றி மானபங்கம் செய்தபடி ஊருக்குள் இழுத்து வந்தது தொடர்பான வீடியோ கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

    இந்நிலையில், மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக இழுத்து பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்றும், வழக்கை மணிப்பூரில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றும்படி மத்திய அரசு கேட்க உள்ளதாகவும் அதிகாரிகள் கூறி உள்ளனர். அநேகமாக அண்டை மாநிலமான அசாமில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

    மைதேயி மற்றும் குகி ஆகிய இரு சமூக குழுக்களுடனும் மத்திய உள்துறை அமைச்சகம் தொடர்பில் இருப்பதாகவும், மணிப்பூரில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை.
    • அமளிக்கு மத்தியில் ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது.

    புதுடெல்லி:

    மணிப்பூர் மாநிலத்தில் 2 சமூகத்தினர் இடையே நடந்த கலவரத்தில் 160 பேர் வரை பலியானார்கள். கடந்த மே மாதம் 3-ந் தேதி தொடங்கிய வன்முறை இதுவரை ஓய்ந்தபாடில்லை. பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் முன்வைத்து அமளியில் ஈடுபட்டுவருகின்றன. பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரியும், விவாதம் நடத்த கோரியும் அமளியில் ஈடுபடுவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    இதன் உச்சகட்டமாக மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார். ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை. அனைத்து கட்சிகளுடன் பேசி முடிவு செய்யப்படும் என்று சபாநாயகர் அறிவித்தார். இதனால் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று எதிர்க்கட்சி எம்.பி.கள் கருப்பு உடை அணிந்து வந்தனர். மணிப்பூர் சம்பவத்தை கண்டிக்கும் விதமாக அவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

    மாநிலங்களவையைப் பொருத்தவரை எதிர்க்கட்சிகளின் அமளி மற்றும் அவர்களுக்கு எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர்களின் முழக்கம் காரணமாக கூச்சல் குழப்பம் நிலவியது. இதன் காரணமாக முதலில் 12 மணி வரையிலும், அதன்பின்னர் பிற்பகல் 2 மணி வரையிலும் அவை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்தது. இந்த அமளிக்கு மத்தியில் ஒளிப்பதிவு (திருத்தம்) மசோதாதாவை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் கொண்டு வந்தார்.

    மசோதா மீது விவாதம் நடந்துகொண்டிருந்தபோது,  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

    • மணிப்பூர் வன்முறையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    தரங்கம்பாடி:

    மணிப்பூர் வன்முறையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மயிலாடுதுறையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட தலைவரும், மயிலாடுதுறை எம்.எல்.ஏ.வுமான ராஜகுமார் தலைமை தாங்கினார்.

    முன்னாள் மாவட்ட தலைவர் சொக்கலிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் சரத்சந்திரன், மாவட்ட பொருப்பாளர்கள் மூங்கில் ராமலிங்கம், இனிப்பகம் நரேந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஸ்வரி, நகர தலைவர் ராமானுஜம் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    • போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை அரசு மேற்கொள்ள தொடங்கியபோது, பதற்றம் உருவானது
    • அனைத்து சம்பவங்களையும் மணிப்பூர் அரசு கண்காணித்து வருகிறது

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் 3-ந்தேதி தொடங்கிய வன்முறைய இன்னும் கட்டுக்குள் வரவில்லை. வன்முறை தொடர்வதால் அண்டை மாநிலங்களில் மணிப்பூர் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். மணிப்பூரின் அண்டை மாநிலமான மிசோரமில் 13 ஆயிரம் பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    மிசோரமில் குகி-ஜோ பழங்குடியினர் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக ஒற்றுமை பேரணி நடத்தினர். இதில் அம்மாநில முதல்வர் ஜோரம்தங்கா கலந்து கொண்டார். இந்த பேரணியின் போது மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் குறித்து அவதூறாக பேசப்பட்டுள்ளது.

    மிசோ பழங்குடியினருக்கு குகி-ஜோ பழங்குடியினர் மற்றும் மியான்மரின் சின் மக்களுடன் நல்ல தொடர்பு உள்ளது. 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சின் மக்கள் அகதிகளாக மிசோரம் மாநிலத்தில் உள்ள முகாமில் உள்ளனர்.

    மிசோரம் மாநில முதல்வர் பேரணியில் கலந்து கொண்ட நிலையில், அடுத்த மாநில உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

    இதுறித்து பிரேன் சிங் கூறியதாவது:-

    போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை அரசு மேற்கொள்ள தொடங்கியபோது, பதற்றம் உருவானது. மணிப்பூர் மாநிலத்தில் வாழும் குகி சமுதாயத்தினருக்கு எதிராக மணிப்பூர் அரசு செயல்படவில்லை.

    அனைத்து சம்பவங்களையும் மணிப்பூர் அரசு கண்காணித்து வருகிறது. மணிப்பூர் ஒருமைப்பாட்டை அழிக்க முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்க நினைக்கும் வகையில் ஆயுதமேந்தியவர்களுக்கும் அரசுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. எனக்கு எதிராக மிசோரம் பேரணியில் அவதூறு குரல் எழுப்பியது காட்டுமிராண்டி தனமானது.

    மற்றொரு மாநிலத்தின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என மிசோரம் மாநில முதல்வரை கேட்டுக்கொள்கிறேன். ஐரோப்பிய யூனியன் கள நிலவரம் தெரியாமல் தீர்மானம் நிறைவேற்றி, அதிகாரிகள் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

    இவ்வாறு பிரேன் சிங் தெரிவித்தார்.

    • அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்து விட்டு மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
    • அமித்ஷா எழுதிய கடிதத்திற்கு கார்கே பதில் கடிதம் எழுதியுள்ளார்.

    புதுடெல்லி:

    மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி இருந்தன. மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி பாராளுமன்ற இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர்கள் முறையிட்டனர். இதனால் 4 தினங்கள் பாராளுமன்றம் முடங்கியது.

    இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்ற இரு அவைகளும் கூடியதும் எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானங்கள் கொண்டு வந்தன. அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்து விட்டு மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் இரு அவைகளிலும் ஒத்தி வைப்பு தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டன. இதனால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    பாராளுமன்ற மேல்சபை மட்டும் சிறிது நேரம் தொடர்ந்து நடந்தது. கடும் அமளிக்கு இடையே மணிப்பூர் பற்றி விவாதிக்க மேல்சபை துணைத் தலைவர் விதி எண் 176-ன் கீழ் சிறிது நேரம் ஒப்புதல் வழங்கினார். அப்போது எதிர்க்கட்சி தலைவர் கார்கே எழுந்து பேசினார்.

    அவர் பேசிக் கொண்டு இருந்தபோது மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதற்கு தி.மு.க. எம்.பி. எச்.சிவா எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.

    இதுபற்றி கார்கே பேசுகையில், "நான் பேசும் போது மைக் இணைப்பு துண்டிக்கப்படுவது என்னை இழிவுப்படுத்துவது போல் உள்ளது. இது உரிமை மீறல் ஆகும்" என்றார்.

    இதற்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதிஇரானி ஆகியோர் ஆவேசமாக எதிர்த்து பேசினார்கள். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மணிப்பூர்... மணிப்பூர் என்று கோஷமிட்டனர். அமளி அதிகரித்ததால் மேல் சபையும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    மதியம் 12 மணிக்கு இரு அவைகளும் மீண்டும் கூடிய போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் பிற்பகல் 2 மணி வரை சபைகள் ஒத்திவைக்கப்பட்டன.

    இதற்கிடையே அமித்ஷா எழுதிய கடிதத்திற்கு கார்கே பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், "எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும். மணிப்பூர் பற்றி விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் முதலில் பிரதமர் விளக்கம் அளிப்பதை உறுதி படுத்துங்கள்" என்று கூறியுள்ளார்.

    • என்னை 4 பேர் கொண்ட கும்பல் ஒரு வெள்ளை நிற காரில் தூக்கி மலைப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.
    • படுகாயங்களுடன் சாலையில் நின்றபோது அந்த வழியாக ஒரு ஆட்டோ வந்தது.

    இம்பால்:

    மணிப்பூரில் 2 மாதத்திற்கு மேலாக கலவரம் நீடித்து வரும் நிலையில் அங்கு பழங்குடியின சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்று கூட்டு பலாத்காரம் செய்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கடந்த மே மாதம் வன்முறை தொடங்கியபோது நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 19 வயது இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    என்னை 4 பேர் கொண்ட கும்பல் ஒரு வெள்ளை நிற காரில் தூக்கி மலைப்பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு கார் டிரைவரை தவிர மற்ற 3 பேரும் என்னை சித்ரவதை செய்து தாக்கினர்.

    பின்னர் 3 பேரும் என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர். இரவு முழுவதும் சாப்பிட எதுவும் தரவில்லை. தண்ணீர் கூட கொடுக்கவில்லை. ஒரு இடத்தில் அடைத்து வைத்தனர்.

    12 மணி நேரத்திற்கும் மேலாக கயிற்றால் கைகள் கட்டப்பட்ட நிலையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தேன்.

    இதனால் மயக்கமடைந்த நான் திடீரென விழித்து பார்த்தபோது அந்த கும்பல் என்னை பாலியல் வன்கொடுமை செய்ததையும், கைகள் கட்டப்பட்டு அடைக்கப்பட்டு இருப்பதையும் அறிந்தேன். அவர்கள் நான் தப்பி செல்லாமல் இருப்பதற்காக காவலுக்கு சிலரை நிறுத்தி இருந்தனர்.

    அதில் ஒருவரை அழைத்து நான் கழிவறைக்கு செல்ல வேண்டும் என கூறி கயிற்றை அவிழ்க்குமாறு தெரிவித்தேன். முதலில் அவர் மறுத்தார். பின்னர் கயிற்றை அவிழ்த்து விட்டார்.

    உடனே கழிவறைக்கு சென்ற நான் அங்கிருந்து கட்டிடத்தின் பின்புறமாக தப்பி சென்று சிறிய மலை குன்றிலிருந்து உருண்டு மெயின் ரோட்டுக்கு வந்தேன்.

    படுகாயங்களுடன் சாலையில் நின்றபோது அந்த வழியாக ஒரு ஆட்டோ வந்தது. அந்த முஸ்லிம் ஆட்டோ டிரைவர் நிலைமையை உணர்ந்து என்னை காய்கறிகளுக்குள் மறைத்து வைத்து பிஸ்னுபூர் காவல் நிலையம் நோக்கி சென்றார்.

    அப்போது அந்த கும்பல் காரில் விரட்டி வந்தது. ஒரு வழியாக நான் போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை கூறினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மணிப்பூரில் 2 பழங்குடியின பெண்களுக்கு நடந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
    • சுவாதி மலிவால் பாதிக்கப்பட்ட பழங்குடியின பெண்கள் இருவரையும் நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    இம்பால் :

    மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் 2 பேரை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் மணிப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால் பாதிக்கப்பட்ட பழங்குடியின பெண்கள் இருவரையும் நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    அப்போது அவரிடம் அந்த பெண்கள், அரசு சார்பில் யாரும் தங்களை சந்திக்கவில்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து பேசிய சுவாதி மலிவால், "முதல்-மந்திரி பைரன் சிங் உடனடியாக பதவி விலக வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களை அவர் ஏன் சந்திக்கவில்லை. நான் டெல்லியில் இருந்து வந்து அவர்களை (பாதிக்கப்பட்டவர்களை) சந்திக்க முடியுமானால், அவரால் ஏன் முடியாது?" என கேள்வி எழுப்பி உள்ளார்.

    • மியான்மரில் இருந்து ஆவணங்கள் இன்றி வருவோர் மீது நடவடிக்கை எடுக்க ஏற்கனவே வலியுறுத்தல்
    • 718 பேர் நுழைந்த நிலையில் அசாம் ரைபிள் படையிடம் விளக்கம் கேட்டுள்ளது மணிப்பூர் அரசு

    மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி ஆகிய இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்துள்ளது. இந்த மோதலில் இதுவரை 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இரண்டு பெண்களுக்கு ஏற்பட்ட கொடூரம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி இதுகுறித்து பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

    ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறன்றன. ஒருபக்கம் வன்முறை நடைபெற்று வரும் நிலையில், மறுபக்கம் மியான்மரில் இருந்து எந்தவித ஆவணங்களும் இன்றி 700-க்கும் மேற்பட்டோர் மணிப்பூருக்குள் நுழைந்துள்ளது அம்மாநில அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்திய-மியான்மர் எல்லையில் அசாம் ரைபிள் படை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 22 மற்றும் 23-ந்தேதியில் 718 பேர் மியான்மருக்குள் வந்துள்ளனர். அவர்களிடம் போதுமான ஆவணங்கள் இல்லை என்று அசாம் ரைபிள் மியான்மருக்கு தகவல் தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே, கடுமையான நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்ட நிலையில், தற்போது மணிப்பூரில் அசாதாரண சூழ்நிலை இருந்து வரும் நிலையில், எப்படி அனுமதித்தீர்கள் என்று விளக்கம் கேட்டுள்ளது.

    இதுதொடர்பாக மணிப்பூர் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ளை அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

    இதுபோன்ற சம்பவங்கள் முன்னதாக நடைபெற்றபோது, மியான்மரில் இருந்து மணிப்பூருக்கும் வருவோரிடம் முறையான விசா, தெளிவான ஆவணங்கள் இல்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு சார்பில் அசாம் ரைபிள் படைக்கு தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தற்போது மணிப்பூரில் நடைபெற்று வரும் அசாதாரண சூழ்நிலையில், 718 பேர் நுழைந்துள்ளது மிகவும் தீவிரமான விசயமாக பார்க்கப்படுகிறது.

    மணிப்பூர் எல்லைக்குள் எப்படி அனுமதிக்கப்பட்டார்கள் என்று அரசு சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அத்துடன் மியான்மரில் இருந்து வந்தவர்களை உடனடியான வெளியேற்றும்படி அசாம் ரைபிள் படையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    வந்துள்ளவர்களின் பயோமெட்ரிக் பதிவு செய்ய வேண்டும். புகைப்படங்கள் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • எதிர்க்கட்சிகளின் இந்த போராட்டம் இன்றும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் அறிக்கை அளிக்க வலியுறுத்தி பாராளுமன்ற வளாகத்தில் 'இந்தியா' கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று காலை போராட்டத்தை தொடங்கினார்கள்.

    இந்நிலையில் மேல்சபையில் இருந்து ஆம்ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்தும் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த போராட்டம் நேற்று இரவு முழுவதும் நீடித்தது. இதில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் மாறிமாறி பங்கேற்றனர்.

    குறிப்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட சஞ்சய் சிங் எம்.பி. இரவு முழுவதும் போராட்டத்தில் கலந்துகொண்டார். அவருடன் பல்வேறு எதிர்க்கட்சி எம்.பி.க்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். விடிய விடிய எம்.பி.க்களின் தர்ணா நடந்தது.

    எம்.பி.க்களில் பெரும்பாலானவர்கள் கையில் 'மணிப்பூருக்காக இந்தியா' ('INDIA for Manipur') என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி இருந்தனர். நள்ளிரவு வரை எம்.பி.க்கள் உட்கார்ந்து இருந்தனர். அதன்பிறகு அங்கேயே புல்தரையில் படுத்து தூங்கினார்கள்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) எதிர்க்கட்சி எம்.பி.க்களின் போராட்டம் காலையில் தொடங்கியது. சுழற்சி முறையில் எம்.பி.க்கள் வந்து இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    எதிர்க்கட்சிகளின் இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று எதிர்க்கட்சிகளின் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 20 பேர் மாநிலங்களவையில் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சிகள் 50 மணி நேர தொடர் போராட்டத்தை நடத்தி இருந்தனர்.

    இதைப்போல மீண்டும் ஒரு போராட்டத்தை அவர்கள் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட மேலும் பலர் வீடியோ காட்சி பதிவுகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
    • மைதேயி இனத்தவரும், குகி இன மக்களும் தங்கள் பகுதிகளில் பதுங்கு குழிகள் அமைத்து தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள்.

    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள் சுமார் 53 சதவீதம் பேர் உள்ளனர். அதுபோல நாகா மற்றும் குகி இனத்தை சேர்ந்தவர்கள் சுமார் 40 சதவீதம் பேர் உள்ளனர்.

    இவர்களில் குகி இனத்தவர்களுக்கு பழங்குடியின அந்தஸ்து இருக்கிறது. அதேபோன்று தங்களுக்கும் பழங்குடியின அந்தஸ்து வேண்டும் என்று மைதேயி சமூகத்தினர் போராடி வருகின்றனர்.

    மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து கொடுக்கக் கூடாது என்று குகி இனத்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு சமூகத்தினர் இடையே கடந்த மே மாதம் 3-ந் தேதி மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. அது மணிப்பூர் மாநிலம் முழுவதும் கலவரமாக மாறியது. அதில் 160-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

    மறுநாள் (அதாவது மே 4-ந்தேதி) குகி இனத்தவர்கள் வாழும் கிராமங்களுக்குள் புகுந்த சுமார் 1000 பேர் கொண்ட மைதேயி இனத்தவர்கள் மிக மோசமாக வன்முறையில் ஈடுபட்டனர். குகி இனத்தை சேர்ந்த 2 பெண்களை ஆடைகள் இன்றி ஊர்வலமாக இழுத்து சென்றனர்.

    அவர்களை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்திய கொடூரமும் அரங்கேறியது. அதை தடுத்த 2 பேர் கொல்லப்பட்டனர்.

    அதோடு இம்பால் நகரில் மே 4-ந்தேதி தங்கள் சமூகத்தை சேர்ந்த மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதாக குகி இன தலைவர்கள் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டனர். இதனால் மணிப்பூரில் கடந்த 4 நாட்களாக பதட்டம் நீடிக்கிறது.

    நேற்று இரவு பல இடங்களில் வீடுகளுக்கு தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. சில இடங்களில் பழங்குடி இனத்தவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பல கிராமங்களில் மிகப்பெரிய கலவரம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மணிப்பூரில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் மற்றும் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 13 ஆயிரம் பேர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

    பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட மேலும் பலர் வீடியோ காட்சி பதிவுகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு சாரார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    மைதேயி இனத்தவரும், குகி இன மக்களும் தங்கள் பகுதிகளில் பதுங்கு குழிகள் அமைத்து தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். அந்த பதுங்கு குழிகளை பாதுகாப்பு படையினர் அழித்து வருகிறார்கள். நேற்றுவரை சுமார் 300 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டுள்ளன.

    சூரச்சந்த்பூரில் தீ வைத்து பள்ளி எரிக்கப்பட்டதால் ஏற்பட்ட பதட்டம் இன்னும் தணியவில்லை. அங்கு பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள்.

    மணிப்பூரில் கலவரம் செய்து இன குழுக்கள் போலீசாரிடம் இருந்து சுமார் 5 ஆயிரம் ஆயுதங்களை பறித்து சென்று விட்டனர். அவற்றில் 3,400 ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 1,500 துப்பாக்கிகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே மணிப்பூரில் சமூக வலைதளங்கள் மூலம் மீண்டும் வதந்தி பரவுகிறது. எனவே தவறான தகவல்களை நம்பவேண்டாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • மாணவர் அபிஷேக் தலைமையில் 300-க்கும் மேற்பட்டவர்கள் முறையாக அனுமதி பெற்று கல்லூரி வளாகத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • முதலாம் ஆண்டு, 2, 3-ம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    மணிப்பூர் வன்முறை சம்பவத்தை கண்டித்து நந்தனம் அரசு கல்லூரி மாணவர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் அபிஷேக் தலைமையில் 300-க்கும் மேற்பட்டவர்கள் முறையாக அனுமதி பெற்று கல்லூரி வளாகத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஈவுஇரக்கமற்ற செயலை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதில் முதலாம் ஆண்டு, 2, 3-ம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். போலீசாரின் வேண்டுகோளை ஏற்று சிறிது நேரம் கோஷங்களை எழுப்பி விட்டு கலைந்து சென்றனர்.

    • பாராளுமன்றம் கூடுவதற்கு முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்கொள்ள 26 எதிர்க்கட்சிகள் இணைந்து "இந்தியா" என்ற புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளது.

    இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறையில் இன்று காலை நடந்தது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி பாராளுமன்றம் கூடுவதற்கு முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பாராளுமன்ற இரு அவைகளிலும் அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இது தொடர்பான பேனர்களையும், பதாகைகளையும் வைத்து இருந்தனர்.

    மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினார்கள்.

    இதற்கிடையே எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜனதா எம்.பி.க்களும் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாகவும், அசோக் கெலாட் தலைமையிலான மாநில அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். பா.ஜனதா பெண் உறுப்பினர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

    ×