search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணிப்பூர் வன்முறை"

    • பெண்களை நிர்வாணப்படுத்தி அழைத்து சென்ற விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
    • மணிப்பூர் கலவரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என தூதர் தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மாதம் இரு இனத்தவர்களிடையே தொடங்கிய மோதல் கலவரமாக உருவெடுத்தது. 140க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு 300 பேருக்கும் மேல் காயமடைந்த இக்கலவரத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடம்பெயரும் நிலை ஏற்பட்டது.

    இந்த கலவரத்தை அடக்கி, மணிப்பூரில் அமைதி திரும்பு நடவடிக்கைகளை எடுக்க ஆளும் பா.ஜ.க. முதல்வர் தவறி விட்டதாகவும், பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் நிலைமையை சரியாக கையாளவில்லை என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டி வந்தது.

    இந்நிலையில் மே மாதம் மணிப்பூரில் ஒரு சம்பவம் நடந்ததாக வீடியோ ஒன்று நேற்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. நாட்டையே அதிர வைத்த இந்த வீடியோ காட்சிகளில் ஒரு இனத்தை சேர்ந்த ஆண்கள் கும்பல், மற்றொரு இனத்தை சேர்ந்த 2 பெண்களை ஆடைகளின்றி ஊர்வலமாக அழைத்து செல்கின்றனர். பிறகு அந்த பெண்கள் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்தியாவை மட்டுமின்றி உலகையே அதிர வைத்திருக்கும் இந்த சம்பவம் குறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டியிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-

    மணிப்பூர் கலவரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். நான் இன்னும் அந்த வீடியோவை பார்க்கவில்லை. இப்போதுதான் அது குறித்து கேள்விப்படுகிறேன். அக்கம்பக்கத்திலோ, உலகெங்கும் உள்ள நாடுகளிலோ அல்லது அமெரிக்காவிலோ, மனிதர்கள் துன்பப்படும்போதெல்லாம் எங்கள் இதயம் நொறுங்குகிறது. இந்த தருணத்தில் இந்திய மக்களின் துயரத்தையும் மனவேதனையையும் உணர்ந்து நாங்கள் அவர்களுடன் நிற்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியாவின் 140 கோடி மக்களையும் இந்த சம்பவம் வெட்கப்பட வைத்திருப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார்.

    • 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஒரு தரப்பினர் இழுத்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • மணிப்பூர் கொடூரம் தொடர்பாக திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    சென்னை:

    மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும் பழங்குடி இன மக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் 2 மாதத்துக்கு மேல் நீடித்து வருகிறது.

    இதுவரை 100-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டதால் இப்பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசை அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஒரு தரப்பினர் இழுத்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் மணிப்பூர் கொடூரம் தொடர்பாக திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் வரும் 23ம் தேதி கனிமொழி எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அரசு சார்பில் நாங்கள் விவாதத்திற்கு தயார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
    • எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேசவேண்டும் என வலியுறுத்துகிறது

    மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி தொடங்கிய வன்முறை பற்றி எரிகிறது. இதுவரை பிரதமர் மோடி மணிப்பூர் சம்பவம் குறித்து மவுனம் காத்து வந்தார். நேற்று பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய தினம், மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி அழைத்துச் செல்லும் வீடியோ வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி விரிவான விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதேவேளையில் நாங்கள் தயாராக இருக்கிறோம். எதிர்க்கட்சிகள் அவையை நடத்தவிடாமல் தடுக்கின்றனர் என குற்றம்சாட்டுகின்றனர்.

    எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பத்தால் பாராளுமன்றம் 2-வது நாளாக முடங்கியுள்ளது.

    இந்த நிலையில் மத்திய அரசு சொல்வது என்ன?. எதிர்க்கட்சிகள் சொல்வது என்ன? என்பதை பார்ப்போம்.

    காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

    நான் மணிப்பூர் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். ஆனால், எனக்கு வாய்ப்பு வழங்கப்படவிலலை. இந்த விவகாரம் குறித்து அரசு விவாதம் நடத்த வேண்டும். பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேச வேண்டும். பாராளுமன்றத்திற்கு வெளியே பிரதமர் மோடி பேசுகிறார். அவர் பாராளுமன்றத்தில் பேச வேண்டும்.

    உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத்

    இது மிகவும் முக்கியமான விசயம். மணிப்பூர் வன்முறை பற்றி சர்வதேச அமைப்பில் பேச வேண்டும். நமது பாராளுமன்றத்தில் இல்லை. ஏன் நீங்கள் (மத்திய அரசு) மணிப்பூர் சட்டம்-ஒழுங்கை பற்றி பேசவில்லை. நிர்பயா விவகாரத்தில், பா.ஜனதா எதிர்க்கட்சியாக இருந்த போது அரசை ஒரு உலுக்கு உலுக்கியது. ஆனால் தற்போது இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

    ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதா

    மணிப்பூர் வன்முறை நமது ஒட்டுமொத்த மனசாட்சியையும் உலுக்கியுள்ளது. மத்திய அரசு தூக்கத்தில் இருந்து எழுந்து, மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன். மணிப்பூரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிய ஒட்டு மொத்த மக்களும் விரும்புகிறார்கள். மணிப்பூர் அரசை கலைத்து, ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர வேண்டும் என விரும்புகிறோம்.

    காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி

    இந்த நேரத்தில் இதை வேறு எந்த மாநிலத்துடனும் ஒப்பிடுவதைவிட துரதிர்ஷ்டவசமானது வேறு எதுவும் இருக்க முடியாது. அதுவும் கடந்த 77-478 நாட்களாக மணிப்பூரில் அராஜக சூழ்நிலை நிலவுகிறது. அரசு மற்றும் நிர்வாகம் அங்கு சீர்குலைந்துள்ளது என்பதை சொல்வது தவறாக இருக்க முடியாது. மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் பிரதமர் மோடி, பாராளுமன்றத்தில் பேசுவது அவரது வேலை இல்லையா?. அதனால் இரு அவைகளிலும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் வழங்கியுள்ளோம்.

    எதிர்க்கட்சிகளுக்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய அரசு சார்பில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி

    சபாநாயகர் எப்போது உத்தரவு பிறப்பித்தாலும், விவாதிக்க தயாராக இருக்கிறோம். சபாநாயகர் மற்றும் மாநிலங்களை தலைவரிடம் நாங்கள் விவாதிக்க தயாராக இருக்கிறோம் என அமித் ஷா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் புதிய கோரிக்கைகளை வைப்பது, விவாதங்களை தடுப்பது தவறு

    பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்

    மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்துவது பற்றி எதிர்க்கட்சிகள் முக்கியமானதாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. அரசு மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க விரும்புகிறது. இந்த விவகாரத்தால் நாடே வெட்டுகப்படுகிறது. தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை என்றால், அவர்கள் இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்.

    மத்திய மந்திரி அனுராக் தாகூர்

    விவாதங்களைத் தவிர்க்கவும், நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்கவும் எதிர்க்கட்சிகள் சில அல்லது வேறு சாக்கு போக்குகளை கூறுகின்றன. பாராளுமன்றத்தில் இருந்து சிலர் வெளியேறுகின்றனர். பாராளுமன்றம் நடப்பதை அவர்கள் விரும்பவில்லை. பாராளுமன்ற விவாதத்தில் இருந்து அவர்கள் ஏன் ஓட வேண்டும்?. அவர்களுடைய அரசியல்வாதிகள் நீண்ட நாட்கள் பாராளுமன்றத்தில் சேவை ஆற்ற முடியாது என்பதாலா? அல்லது அவர்களுடைய அரசின் ஓட்டைகள் வெளிப்படும் என்பதாலா?.

    பா.ஜனதா எம்.பி. தேஜஸ்வி சூர்யா

    காங்கிரஸ் கட்சி ஜனநாயத்தில் பாராளுமன்றம் அல்லது சட்டசபையில் விவாதம் நடத்த விரும்பாது. காங்கிரஸ் அதிகாரத்திற்கும் வரும்போதெல்லாம், ஜனநாயகத்தை நசுக்க முயற்சிக்கும். கர்நாடகாவில் 15-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மணிப்பூரில் கலவரம் உருவான மே 3-ந் தேதி இரவு பரபரப்பாக சமூக வலைதளங்களில் ஒரு காட்சி பரவியது.
    • உண்மையில் வீடியோ காட்சியில் இடம் பெற்றிருந்த பெண் டெல்லியை சேர்ந்தவர் ஆவார்.

    மணிப்பூர் கலவரத்தில் பழங்குடியின பெண்கள் இருவர் ஆடைகள் இன்றி ஊர்வலமாக இழுத்து செல்லப்பட்ட கொடூர சம்பவத்தின் பின்னணியில் என்ன நடந்தது? என்பது பற்றி விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.

    குறிப்பாக குகி இன பெண்கள் மீதான பாலியல் கொடூரத்துக்கு ஒரு போலி வீடியோ காட்சி வதந்தியாக பரவியதுதான் காரணம் என்பதை போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.

    மணிப்பூரில் கலவரம் உருவான மே 3-ந் தேதி இரவு பரபரப்பாக சமூக வலைதளங்களில் ஒரு காட்சி பரவியது. அதில் ஒரு பெண் பிளாஸ்டிக் ஷீட்டில் சுற்றப்பட்டு கிடப்பது போன்று காட்சிகள் இடம் பெற்று இருந்தன.

    அந்த காட்சிகளுக்கு கீழே மணிப்பூரில் மைதேயி இனத்தை சேர்ந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளார் என்ற வாசகங்கள் இடம் பெற்று இருந்தன. இது மணிப்பூரில் மே 3-ந் தேதி இரவு காட்டுத்தீ போல பரவியது.

    அந்த வீடியோ காட்சியை கண்ட மைதேயி இன மக்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். தங்கள் இனத்தை சேர்ந்த ஒரு பெண்ணை குகி இனத்தவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து வீசி இருப்பதாக தவறாக புரிந்து கொண்டனர்.

    உண்மையில் வீடியோ காட்சியில் இடம் பெற்றிருந்த பெண் டெல்லியை சேர்ந்தவர் ஆவார். டெல்லியில் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டு, பிளாஸ்டிக் ஷீட்டில் சுற்றி வீசப்பட்ட காட்சிதான் அதுவாகும்.

    ஆனால் அதை சமூக விரோதிகள் யாரோ மணிப்பூரில் நடந்தது போன்று சித்தரித்து போலி வீடியோ தயாரித்து சமூக வலைதளங்களில் பரப்பி விட்டனர். அது மணிப்பூரில் எரிந்து கொண்டிருந்த கலவரத்தீயை மேலும் பற்றி எரிய வைத்துவிட்டது.

    தாங்கள் பார்ப்பது போலி வீடியோ காட்சிகள், தவறான தகவல் பரப்பப்படுகிறது என்பதை மைதேயி இன மக்கள் யாரும் தெரிந்து கொள்ளவில்லை. தங்கள் இன பெண் கொல்லப்பட்டது போன்று குகி இன பெண்ணை கொலை செய்ய வேண்டும் என்ற ஆக்ரோஷம் அவர்கள் மனதில் வெறியாக மாறி விட்டது.

    இவை அனைத்துக்கும் போலியான, தவறான தகவல்கள் வீடியோ காட்சிகளுடன் இடம்பெற்றதுதான் அடிப்படை காரணமாக அமைந்தது. குறிப்பிட்ட பகுதியை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் அந்த காட்சிகளை பார்த்ததால் மறுநாள் (மே 4-ந் தேதி) அருகில் உள்ள குகி இனத்தவர்கள் கிராமத்துக்குள் புகுந்து வெறியாட்டம் நடத்தி விட்டனர்.

    • மெரினா போலீசார் சட்ட விரோதமாக கூடுதல், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுதல் என்பன உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    • மெரினாவில் நடைபெற்ற திடீர் போராட்டத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    சென்னை:

    மணிப்பூரில் 2 இளம்பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில் மணிப்பூர் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சென்னையில் மெரினா கடற்கரையில் நேற்று இரவு போராட்டம் நடத்தப்பட்டு உள்ளது. மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி உள்பட 50-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். காந்தி சிலை அருகே திடீரென திரண்டு அனுமதி இல்லாத இடத்தில் போராட்டம் நடைபெற்றதால் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    இதுதொடர்பாக மெரினா போலீசார் சட்ட விரோதமாக கூடுதல், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுதல் என்பன உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    மெரினாவில் நடைபெற்ற இந்த திடீர் போராட்டத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நேப்பியர் பாலத்தில் தொடங்கி கலங்கரை விளக்கம் வரையில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். சந்தேகத்துக்கிடமாக சுற்றி திரிபவர்களை பிடித்து விசாரணை நடத்தி வெளியில் அனுப்பி வருகிறார்கள்.

    • மைதேயி இன மக்கள் இப்படி நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
    • கார்கில் போர் களத்தில் நின்றதை விட சொந்த மண்ணில் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதை இப்போதுதான் நான் உணர்ந்தேன்.

    மணிப்பூரில் மைதேயி இனத்தை சேர்ந்த சுமார் 1000 பேர் கொண்ட கும்பல் குகி இனத்தவர்களின் பைனோம் கிராமத்துக்குள் புகுந்து 64 நாட்களுக்கு முன்பு நடத்திய வெறியாட்டம் நாடு முழுவதும் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அன்றைய தினம் அந்த கும்பலில் இருந்தவர்கள் ஈவு, இரக்கம் இல்லாமல் 3 பெண்களின் ஆடைகளை கலைந்து நிர்வாணப்படுத்தினார்கள்.

    அதில் ஒரு பெண் கை குழந்தையுடன் இருந்ததால் அவரை மட்டும் விட்டு விட்டனர். மற்ற 2 பெண்களை ஆடைகள் இன்றி ஊர்வலம் நடத்தினார்கள். அந்த 2 பெண்களில் 21 வயது இளம்பெண்ணும் ஒருவர் ஆவார். அவரை காப்பாற்ற முயன்ற அவரது சகோதரரை ஈவு, இரக்கமின்றி அடித்து கொன்றனர்.

    வெறிப்பிடித்த அந்த கும்பலிடம் சிக்கிய 2 பெண்கள் தான் வீடியோ காட்சிகளில் இடம்பெற்று இருந்தனர். கைக்குழந்தையுடன் சிக்கிய 3-வது பெண்ணை ஆடைகளை கலைந்துவிட்டு விட்டுவிட்டதால் அவர் வீடியோ காட்சியில் இடம் பெறவில்லை.

    அந்த 3-வது பெண்ணின் கணவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். கார்கில் போரில் முன்களத்தில் நின்று போராடிய வீரர்களில் அவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சூரச்சந்துபூர் கிராமத்தில் உள்ள நிவாரண முகாமில் தங்கி இருக்கும் அவர் மே 4-ந் தேதி நடந்த காட்டுமிராண்டிதனமான வன்முறை பற்றி கூறியதாவது:-

    மைதேயி இன மக்கள் இப்படி நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. பயங்கரமான ஆயுதங்களுடன் வந்து அவர்கள் தாக்கினார்கள். எங்களது வீடு, உடமைகள், கவுரவம் அனைத்தும் சூறையாடப்பட்டு விட்டன.

    வீடுகளை தீ வைத்து எரித்தனர். கால்நடைகள் அனைத்தையும் கொன்று குவித்தனர். அவர்களது வெறியாட்டத்தால் 9 கிராமங்களில் இருந்த மக்கள் அனைத்தையும் இழந்து அகதிகள் போல மாறிவிட்டனர்.

    பயத்தில் அருகில் உள்ள காடுகளில் மக்கள் தஞ்சம் அடைந்தனர். அதன்பிறகும் மைதேயி இன மக்கள் விடவில்லை. துரத்தி துரத்தி வேட்டையாடினார்கள். துப்பாக்கி முனையில் மிரட்டிதான் பெண்களின் ஆடைகளை கலைந்தனர்.

    சில பெண்களை பிடித்து சென்று வயல்வெளியில் நிற்க வைத்து நடனமாட சொன்னார்கள். பெண்களை அடித்து கை தட்டி சிரித்தனர். எதற்காக இவ்வளவு கொடூர மனதுடன் நடந்து கொள்கிறார்கள் என்பதை நினைத்து பார்க்க முடியாமல் இருந்தது.

    கார்கில் போர் களத்தில் நின்றதை விட சொந்த மண்ணில் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதை இப்போதுதான் நான் உணர்ந்தேன். வன்முறை நடந்தபோது எப்படியோ என் மனைவி என்னிடம் இருந்து தனியாக பிரிய நேரிட்டது. அதனால் தான் அவளுக்கு இந்த நிலை ஏற்பட்டது.

    அவள் இன்னமும் தனக்கு ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீளவில்லை. மிக மிக கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறார்.

    பட்டப்பகலில் கும்பலாக வந்து நடத்திய வெறியாட்டம் இன்னமும் மனதுக்குள் வந்துகொண்டே இருக்கிறது. மனிதாபிமானமே இல்லாமல் பெண்களிடம் அவர்கள் நடந்து கொண்ட விதம் ஆறாத வடுவாக மாறிவிட்டது.

    தற்போது எங்களது 9 கிராமங்களிலும் யாரும் இல்லை. பல்வேறு திசைகளில் சிதறிவிட்டனர். நாங்களும் உடைமைகளை இழந்துதான் பல மணி நேரம் நடந்து முகாமுக்கு வந்து சேர்ந்துள்ளோம்.

    எனது வீடு முழுமையாக தீ வைத்து எரிக்கப்பட்டு விட்டது. அந்த வீடு எனது மனைவி கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைத்த பணத்தில் இருந்து கட்டியதாகும். இப்போது நிவாரண முகாம் மட்டுமே எங்களுக்கு தஞ்சம் தந்துள்ளது.

    இவ்வாறு அந்த கார்கில் வீரர் மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார்.

    • மணிப்பூர் விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • இந்திய பாராளுமன்றம் இந்த விவகாரத்தால் 2-வது நாள் முடங்கும் அபாயம்.

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மாதம் இரு இனத்தவர்களிடையே தொடங்கிய மோதல் கலவரமாக உருவெடுத்தது. 140-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு 300 பேருக்கும் மேல் காயமடைந்த இக்கலவரத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடம்பெயரும் நிலை ஏற்பட்டது.

    இந்த கலவரத்தை அடக்கி, மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கைகளை எடுக்க ஆளும் பா.ஜ.க. முதல்வர் தவறி விட்டதாகவும், பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் நிலைமையை சரியாக கையாளவில்லை என்றும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வந்தது.

    இந்நிலையில் மே மாதம் மணிப்பூரில் ஒரு சம்பவம் நடந்ததாக வீடியோ ஒன்று நேற்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. நாட்டையே அதிரவைத்த இந்த வீடியோ காட்சிகளில் ஒரு இனத்தை சேர்ந்த ஆண்கள் கும்பல், மற்றொரு இனத்தை சேர்ந்த 2 பெண்களை ஆடைகளின்றி ஊர்வலமாக அழைத்து செல்கின்றனர். பிறகு அந்த பெண்கள் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்தியாவை மட்டுமின்றி உலகையே அதிர வைத்திருக்கும் இந்த சம்பவம் குறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்ஸெட்டி கூறியதாவது:-

    மணிப்பூர் கலவரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். நான் இன்னும் அந்த வீடியோவை பார்க்கவில்லை. இப்போதுதான் அது குறித்து கேள்விப்படுகிறேன். அக்கம்பக்கத்திலோ, உலகெங்கும் உள்ள நாடுகளிலோ அல்லது அமெரிக்காவிலோ, மனிதர்கள் துன்பப்படும்போதெல்லாம் எங்கள் இதயம் நொறுங்குகிறது. இந்த சந்தர்பத்தில் இந்திய மக்களின் துயரத்தையும் மனவேதனையையும் உணர்ந்து நாங்கள் அவர்களுடன் நிற்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியாவின் 140 கோடி மக்களையும் இந்த சம்பவம் வெட்கப்பட வைத்திருப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார்.

    • இன்று 3-வது நாளாக போராட்டம் நீடிப்பதால் மணிப்பூரில் பதட்டம் அதிகரித்துள்ளது.
    • பிடிபட்டவர்கள்தான் கும்பலாக சென்று குகி இனத்தவர்கள் கிராமத்தை சூறையாடியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள் சுமார் 53 சதவீதம் பேர் உள்ளனர். அதுபோல குகி இனத்தை சேர்ந்தவர்கள் சுமார் 40 சதவீதம் பேர் உள்ளனர்.

    இவர்களில் குகி இனத்தவர்களுக்கு பழங்குடியின அந்தஸ்து இருக்கிறது. அதேபோன்று தங்களுக்கும் பழங்குடியின அந்தஸ்து வேண்டும் என்று மைதேயி சமூகத்தினர் போராடி வருகின்றனர்.

    மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து கொடுக்கக்கூடாது என்று குகி இனத்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு சமூகத்தினர் இடையே கடந்த மே மாதம் 3-ந் தேதி மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. அது மணிப்பூர் மாநிலம் முழுவதும் கலவரமாக மாறியது. அதில் 150-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

    மறுநாள் (அதாவது மே 4-ந் தேதி) குகி இனத்தவர்கள் வாழும் ஒரு கிராமத்துக்குள் புகுந்த சுமார் 1000 பேர் கொண்ட மைதேயி இனத்தவர்கள் மிக மோசமாக வன்முறையில் ஈடுபட்டனர். குகி இனத்தை சேர்ந்த 2 பெண்களை ஆடைகள் இன்றி ஊர்வலமாக இழுத்து சென்றனர்.

    அவர்களை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்திய கொடூரமும் அரங்கேறியது. அதை தடுத்த 2 பேர் கொல்லப்பட்டனர்.

    2 பெண்கள் மீதான பாலியல் கொடூரம் பற்றிய வீடியோ காட்சிகள் நேற்று முன்தினம் திடீரென வெளியானது. 26 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ காட்சியில் 2 பெண்கள் ஆடைகள் இன்றி கொடுமைப்படுத்தப்படும் காட்சிகள் மனதை நொறுக்குவதாக இருந்தது. நாடு முழுவதும் இந்த வீடியோ காட்சி வைரலாக பரவி மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    சுப்ரீம் கோர்ட்டு இதுதொடர்பாக தாமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வேட்டையாடும் பணியில் மணிப்பூர் போலீசார் ஈடுபட்டனர். வீடியோ காட்சியை வைத்து விசாரணை நடந்தது.

    பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அழைத்து செல்லும் முக்கிய நபரான ஹூப்ரீம் ஹிரதாஷ் சிங் கைது செய்யப்பட்டார். நேற்று மதியம் மேலும் 3 பேர் போலீசாரிடம் பிடிபட்டனர். அவர்களை தனி இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாக மணிப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான 4 பேருக்கும் அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்க பரிந்துரைப்பது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. மணிப்பூர் மாநில முதல்-மந்திரி பைரேன்சிங் இதற்கான பரிந்துரையை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் மணிப்பூரில் மைதேயி இனத்தவர்களின் பாலியல் கொடூரத்தை கண்டித்து குகி இனத்தவர்கள் நேற்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் குகி இன மக்கள் கருப்புச்சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவும் தீ பந்தம் ஏந்தி போராட்டம் நடந்தது.

    சில இடங்களில் விடிய விடிய குகி இன மக்கள் போராட்டம் செய்தனர். இன்று 3-வது நாளாக போராட்டம் நீடிப்பதால் மணிப்பூரில் பதட்டம் அதிகரித்துள்ளது. இதையடுத்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான ஹூப்ரீம் ஹிரதாஷ் சிங் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது. நேற்று இரவு அவனது வீட்டை சூழ்ந்த மர்ம மனிதர்கள் பெட்ரோல் வீசி தீ வைத்து எரித்தனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.

    வீடியோவில் இடம் பெற்றுள்ள கும்பலில் உள்ளவர்களில் பலர் தலைமறைவாகி விட்டனர். இன்று காலை வரை 657 பேரை பிடித்து விசாரித்து வருவதாக மணிப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர். பிடிபட்டவர்கள்தான் கும்பலாக சென்று குகி இனத்தவர்கள் கிராமத்தை சூறையாடியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    அவர்களிடம் நடத்தப்படும் விசாரணை மூலம மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களது வீடுகள் மற்றும் உடமைகள் மர்ம மனிதர்களால் தாக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இது மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கும் இடையேயான மனக்கசப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

    • துரதிர்ஷ்டவசமாக மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் கண்ணாடி மூலம் பார்க்கின்றன.
    • ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடக்கின்றன.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் மணிப்பூர் பிரச்சினையை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் முதல் நாளிலேயே முடங்கின.

    எதிர்க்கட்சிகளின் இந்த செயலுக்கு மத்திய மந்திரிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    பாராளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாகூர், இது தொடர்பாக கூறியதாவது:-

    துரதிர்ஷ்டவசமாக மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் கண்ணாடி மூலம் பார்க்கின்றன. அத்துடன் இதை அரசியலாக்கவும் முயற்சிக்கின்றன.

    மணிப்பூர் நிலைமை குறித்து விவாதிக்க தயார் என நாங்கள் கூறிவிட்டோம். ஆனால் இது குறித்து விவாதிக்காமல் எதிர்க்கட்சிகள் ஓட்டம் எடுக்கின்றன.

    ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடக்கின்றன. ஆனால் சோனியா, ராகுல் மற்றும் எதிர்க்கட்சிகள் மவுன பார்வையாளர்களாக கடந்து விடுகின்றன. ஒரேயொரு மாநிலத்துக்காக (மணிப்பூர்) கண்ணீர் வடிக்கின்றனர்.

    பெண்களுக்கு எதிரான குற்றங்களில் நீங்கள் எப்படி மாநிலங்களுக்கு இடையே பாகுபாடு காட்ட முடியும்? பெண்களை அரசியல் ஆயுதமாக மட்டுமே நீங்கள் பார்க்கிறீர்கள்.

    மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் விவாதிக்காமல் ஏன் ஓடுகிறீர்கள்? ராஜஸ்தானில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு சோனியா, ராகுல் ஆகியோரும் பதிலளிக்க வேண்டும்.

    இவ்வாறு அனுராக் தாகூர் தெரிவித்தார்.

    மத்திய மந்திரி பியூஸ் கோயல் கூறுகையில், 'மணிப்பூர் பிரச்சினையில் விவாதத்துக்கு தயாராக இருப்பதாக அரசு தெளிவாக கூறியபோதும், காங்கிரசும் பிற எதிர்க்கட்சிகளும் பாராளுமன்ற அலுவல்களை முடக்கியுள்ளன. சபையை செயல்பட விடக்கூடாது என்ற முடிவோடுதான் அவர்கள் வந்துள்ளனர் என்பது எதிர்க்கட்சிகளின் இந்த அணுகுமுறையில் இருந்து தெரிகிறது' என குற்றம் சாட்டினார்.

    மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தல் வன்முறை மற்றும் சத்தீஷ்கார், ராஜஸ்தானில் நடைபெறும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் காரணமாக எதிர்க்கட்சிகள் மனதில் கவலை இருக்கலாம் என்றும் அவர் சாடினார்.

    இதைப்போல மணிப்பூர் பிரச்சினையில் பாராளுமன்றத்தை முடக்கிய எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜனதாவும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

    இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'இன்று நாம் ஜூலை மாதத்தில் இருக்கிறோம். ஆனால் மே முதல் வாரத்தில் நடந்த ஒரு சம்பவம், பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள் டுவிட்டரில் வெளியாகி இருக்கிறது. இதன் மர்மம் தொடர்பாக எனது மனதில் பல கேள்விகள் எழுகின்றன' என தெரிவித்தார்.

    மேலும் அவர், 'மணிப்பூர் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதனால் நாங்கள் அனைவரும் கவலையில் ஆழ்ந்துள்ளோம். ஆனால் இந்த விவகாரத்தை விவாதிக்க தயாராக இருக்கிறோம் என மத்திய மந்திரிகள் பாராளுமன்றத்தில் அறிவித்தபோதும், காங்கிரசும், எதிர்க்கட்சிகளும் விவாதத்துக்கான விதிகளுக்கு வாதம் செய்கிறார்கள். அப்படியானால் இந்த சம்பவங்கள் உங்களுக்கு முக்கியமில்லை, விதிகள்தான் முக்கியமா' என்றும் கேள்வி எழுப்பினார்.

    • இணையதள முடக்கம் காரணமாக மக்களில் பெரும் பகுதியினர் வன்முறையின் தீவிரத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை.
    • குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர்.

    மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே கடந்த மே மாதம் 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. அதன்பின்னர் வன்முறை வெடித்தது. பல இடங்களில் வன்முறை தாக்குதல்கள் தொடர்வதால், 2 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பவில்லை. இணையதள சேவை முடக்கப்பட்டது. இதன் காரணமாக நாட்டு மக்களில் பெரும் பகுதியினர் மணிப்பூரில் பரவிய வன்முறையின் தீவிரத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை.

    இதற்கிடையே, மணிப்பூரில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த இந்த சம்பவம் இப்போது வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். பாராளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்நிலையில், இந்த வீடியோவின் தாக்கம் மணிப்பூரின் சுராசந்த்பூரில் இன்று தீவிரமாக வெடித்தது. மக்கள் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தினர். வீதி வீதியாக மக்கள் அணிவகுத்துச் சென்று இந்த சம்பவத்தை கண்டித்து முழக்கமிட்டனர். 

    • வன்முறை சம்பவங்கள் தொடர்வதால் 2 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பவில்லை.
    • மணிப்பூர் வீடியோவை நீக்கக்கோரி டுவிட்டர் நிறுவனத்திற்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.

    புதுடெல்லி:

    மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே கடந்த மே மாதம் 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்வதால், 2 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பவில்லை.

    இதற்கிடையே, மணிப்பூரில் 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ சமூகவலை தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்திய சட்டத்தின் கீழ் இதுபோன்ற வீடியோக்களை டுவிட்டர் நிறுவனம் வெளியிடக்கூடாது என்றும், சட்டம் ஒழுங்கில் சிக்கல்களை ஏற்படுத்தும் வீடியோக்களை காட்டுவதால், டுவிட்டருக்கு எதிராக இந்திய அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ பரவாமல் இருக்க தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்படும் வீடியோவை நீக்கவேண்டும் எனக் கோரி டுவிட்டர் நிறுவனத்திற்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

    • பாராளுமன்ற கூட்டத்த நடத்த விடக்கூடாது என்பதில் என்பதில் எதிர்க்கட்சிகள் தெளிவாக இருப்பதாக பியூஷ் கோயல் தெரிவித்தார்.
    • மணிப்பூர் விவகாரம் தொடர்பான விவாதத்திற்கு உள்துறை மந்திரி அமித் ஷா விரிவாக பதில் அளிப்பார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணியும், எதிர்க்கட்சிகள் கூட்டணியும் அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தி உள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக 15-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

    குறிப்பாக அவையின் மற்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாதிக்கவேண்டும் என்றும், பெண்கள் மீதான கொடூர தாக்குதல் தொடர்பாக பிரதமர் பாராளுமன்றத்தில் பேசவேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. தொடர்ந்து அமளி நீடித்ததால் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 

    எதிர்க்கட்சிகள் முன்வைத்த விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க தயாராக இருக்கிறோம் என்ற பிறகும், எதிர்க்கட்சிகளின் அணுகுமுறையை பார்க்கும்போது, அவர்கள் பாராளுமன்ற கூட்டத்த நடத்த விடக்கூடாது என்பதில் என்பதில் தெளிவாக இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது என பியூஷ் கோயல் தெரிவித்தார்.

    எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தை அரசியலாக பார்ப்பதாகவும், விவாதிக்க தயாராக இருக்கும்போது, எதிர்க்கட்சிகள் அதில் இருந்து விலகுவதாகவும் மத்திய மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

    மணிப்பூர் விவகாரம் தொடர்பாக இரு அவைகளிலும் விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை ஏற்கனவெ தெளிவுபடுத்திவிட்டதாக பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். மேலும், மணிப்பூர் விவகாரம் உணர்வுபூர்வமான பிரச்சினை, விவாதத்திற்கு உள்துறை மந்திரி விரிவாக பதில் அளிப்பார். விவாத தேதியை சபாநாயகர் முடிவு செய்யட்டும் என்றும் பிரகலாத் ஜோஷி கூறினார்.

    ×