search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீரிழிவு நோய்"

    • நீரிழிவு நோயை தடுக்க சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை கடைபிடிக்க ேவண்டும்.
    • மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வலியுறுத்தினர்.

    மதுரை

    ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ந் தேதி உலக நீரிழிவு தினம் கடை பிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்தி ரியில் டாக்டர்கள் சந்திப்பு நிகழ்வு நடந்தது. அதில் நீரிழிவு துறையின் முதுநிலை டாக்டர் மகேஷ் பாபு துறைத்தலைவர் டாக்டர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் மருத்துவமனை நிர் வாகி டாக்டர் கண்ணன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவில் 10 கோடிக்கும் அதிக மான மக்களை நீரிழிவு நோய் பாதித் துள்ளது. ஆனாலும் நாட்டில் 50 சத வீதத்திற்கும் அதிகமான நோய் பாதிப் புகள் கண்டறியப்படாத நிலை உள்ளது. இது நீரிழிவு நோய் சுமையைக் குறைப்ப தில் மிகப்பெரிய சவாலாக உள்ளது.

    ஒவ்வொரு தனிநபரும் குறிப்பாக 35 வயதுக்கு மேற்பட்டவர்கள். மர பணு ரீதியாக இந்த நோய் வர வாய்ப்பு உள்ளவர்கள் அல்லது உடல் பருமன் உள்ளவர்கள் அதன் விளை வுகளை புரிந்துகொண்டு தகுந்த நடவ டிக்கை எடுப்பதன் மூலம் அதில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். நீரிழிவு நோயை முழுமையாக மதிப்பீடுவதற்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு- உணவுக்கு முன், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு- உணவுக்கு பின், ஹீமோகுளோபின் ஏ1சி நிலை பரிசோதனை ஆகிய 3 வகையான ரத்த பரிசோதனைகள் முக்கியம்.

    நீரிழிவு நோயை தடுக்க மக்கள் இள மையாக இருக்கும்போதே சுறுசுறுப் பான வாழ்க்கை முறையை மேற் கொள்ள வேண்டும். குறைந்தது 45 நிமிடங்க ளாவது நீச்சல், ஜாகிங் அல் லது நடைபயிற்சி போன்ற உடற்பயிற்சிகள் செய்வது முக்கியம். யோகா மற்றும் தியான பயிற்சி செய்வது மிக ஆபத்தான நோய் காரணியாக இருக்கக்கூடிய மன அழுத்தத்தைக் குறைக் கும். நீரிழிவு நோய் ஆபத்தில் உள்ள மக்கள் கார்போ ஹைட்ரேட் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ள உணவு களை எடுத்துக் கொள்ள பழகுவது நல்லது.

    சமச்சீர் உணவு, வழக்கமான உடற்பயிற்சி, 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் தகுதி வாய்ந்த மருத்துவரின் ஆலோசனை கள் மூலம் நீரிழிவு நோயை எந்த நிலையிலும் நிர்வகிக்க முடியும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • இங்கிலாந்து ஆய்வின் தரவுகளை அமெரிக்க பல்கலைக்கழகம் பெற்ற ஆய்வு செய்தது
    • அதிக உப்பு, கார்டிசாலை அதிகரித்து, அதன் மூலம் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது

    உலகெங்கும் மக்களை அச்சுறுத்தும் நோய்களில் 'சர்க்கரை நோய்' என வழக்கத்தில் அழைக்கப்படும் நீரிழிவு நோயும் ஒன்று. ஆங்கிலத்தில் 'டயாபடிஸ்' (diabetes) என அழைக்கப்படும் நீரிழிவில் டைப் 1 மற்றும் டைப் 2 என இரண்டு வகை உள்ளது. நீரிழிவு நோய்க்கான காரணங்களையும், அதை கட்டுக்குள் வைப்பதற்கான வழிமுறைகளையும் குறித்த ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

    சுமார் 4 லட்சம் பேரிடம் 12 வருடங்களாக இங்கிலாந்தில் இது குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் தரவுகளை பெற்று அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநிலத்தின் டுலேன் பல்கலைகழகத்தில் ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. 'அப்சர்வேஷனல் ஸ்டடி' (observational study) என அழைக்கப்படும் இந்த கண்காணிப்பு ஆய்வுகளில் ஒரு காரணியை நோய்க்கான நேரடி காரணம் என குறிப்பிட முடியாவிட்டாலும், நோயை உண்டாக்குவதில் மறைமுக தொடர்புடைய காரணியாக ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்துகிறார்கள். 



    அவ்வாறு நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நாம் சமைக்கும் உணவு மற்றும் கடைகளில் பேக்கிங் செய்யப்பட்ட உணவு வகைகளின் மூலமாக உட்கொள்ளப்படும் உப்பு, நீரிழிவு நோய்க்கு ஒரு மறைமுக தொடர்பு உள்ள காரணி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஒரு நாளைக்கு 8 கிராம் உப்பு, மக்கள் உட்கொள்ளும் சமைத்த மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட உணவின் மூலமாக உடலுக்கு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ரத்த அழுத்தம் கூடும் பொழுது, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் இன்சுலினின் செயலாக்கம் குறைந்து விடுகிறது. டுலேன் பல்கலைகழக ஆய்வில் உப்பின் அளவு கூடுவதால் கார்டிசால் எனப்படும் ஹார்மோன் அளவு அதிகரிப்பதும், இதன் காரணமாக ரத்த அழுத்தமும் அதிகரிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

    உப்பை குறைப்பதால் சர்க்கரை கட்டுக்குள் இருப்பதாகவோ அல்லது உப்பு கூடுவதால் சர்க்கரை அதிகரிப்பதாகவோ கூற இந்த ஆய்வில் நேரடி ஆதாரம் இல்லை. இருந்தாலும், உட்கொள்ளும் உப்பின் அளவை குறைத்து கொள்வது நல்லது என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், ரத்த அழுத்தம் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் ஆகிய இரண்டுமே உள்ள நோயாளிகளுக்கு, உட்கொள்ளும் உப்பின் அளவு குறைவதனால் ரத்த அழுத்தம் குறைவது இதில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவுறுத்தி இருந்த 5 கிராம் தினசரி அளவை விட, இந்தியர்கள் அதிகமாக 9லிருந்து 10 கிராம் வரை உப்பை உட்கொள்கிறார்கள் என சமீபத்தில் ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

    • வெறும் வயிற்றில் சிறுகுறிஞ்சான் இலைகளை இலைகளை சாப்பிட வேண்டும்.
    • வெப்பமண்டலக் காடுகளில் அதிகம் காணப்படும்.

    சிறுகுறிஞ்சான் அல்லது கோகிலம் என்பது தென், மத்திய இந்தியா மற்றும் இலங்கையின் வெப்பமண்டலக் காடுகளில் அதிகம் காணப்படும் மூலிகைச் செடி. அதிலுள்ள ஜிம்னேமிக் அமிலம் காரணமாக கசப்புச் சுவை கொண்டதாக உள்ளது. இதன் இலை சிறிதாகவும், முனை கூர்மையாகவும் மிளகாய் இலை போன்று காணப்படும்.

    இது கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடங்களாக நீரிழிவு நோய்க்கு அருமருந்தாக இந்த மூலிகை உள்ள நிலையில், ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், தினமும் வெறும் வயிற்றில் சிறுகுறிஞ்சான் இலைகளை இலைகளை சாப்பிட வேண்டும்.

    தவறான உணவு மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த நோயை தவிர்க்க, சில மருந்துகளுடன், வீட்டு வைத்தியத்தை பின்பற்றுவதன் மூலம் ரத்தில் உள்ள சர்க்கரையை இந்த மூலிகையை கொண்டு கட்டுப்படுத்தலாம்.

    சிறு குறிஞ்சான் இலைகள் டைப் 1 மற்றும் டைப் 2 ஆகிய இரு வகை நீரிழிவு நோய்களை குணப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது கணயத்தில் உள்ள செல்களை புத்துயிர் பெறச்செய்து இன்சுலின் அளவை அதிகரிப்பதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது.

    சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சிறுகுறிஞ்சான் இலையை நிழலில் காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து வைத்துக்கொண்டு நெய்யில் குழைத்து சாப்பிட்டால் சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறைந்து நாளைடைவில் நோய் முற்றிலும் குணமாகும்.

    நீரிழிவு நோயை குணப்படுத்துவதை தவிர, கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிப்பதன் மூலமும் கொழுப்பை சமநிலைப்படுத்துவதற்கும் மிகவும் உதவுகிறது.

    சிறு குறிஞ்சான் இலைகளில் பிசின்கள், அல்புமின், குளோரோபில், கார்போஹைட்ரேட், டார்டாரிக் அமிலம், ஃபார்மிக் அமிலம் மற்றும் பியூட்ரிக் அமிலம் உள்ளன. இதன் காரணமாகவே இதன் இலைகளை மென்று சாப்பிடுவதால் நாள் முழுவதும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது.

    • உடற்பயிற்சி செய்துவந்தால் நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழலாம்.
    • இதய நோய்களின் அபாயத்தை கணிசமாக குறைக்கும்.

    தினமும் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை தொடர்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு பல்வேறு உடல்நல பிரச்சினைகளை உருவாக்கும் அபாயத்தையும் குறைக்கும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்துவந்தால் நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழலாம். உடற்பயிற்சிகள் வழங்கும் நன்மைகள் எண்ணற்றவை. வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் தடுக்கக்கூடிய 8 வியாதிகள் குறித்து பார்ப்போம்.

    இதயநோய்

    வழக்கமான உடற்பயிற்சி இதயத்தை வலுப்படுத்துவதற்கும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கிய காரணியாக அமையும். அதனால் இதய நோய்களின் அபாயத்தை கணிசமாக குறைக்கும். ஓட்ட பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற ஏரோபிக் செயல்பாடுகள் ரத்த அழுத்தத்தை குறைக்கவும், கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும் உதவுகின்றன.

    உடல் பருமன்

    உடல் பருமனை தடுப்பதற்கும், சீரான உடல் எடையை நிர்வகிப்பதற்கும் உடல் இயக்க செயல்பாடு முக்கியமானது. வழக்கமான உடற்பயிற்சிகளை செய்வது கலோரிகளை எரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், ஆரோக்கியமான எடை இழப்பை ஊக்குவிக்கவும் உதவும். அதனுடன் ஏரோபிக் பயிற்சிகளை மேற்கொள்வது தசையின் வலுவை மேம்படுத்துவதோடு கொழுப்பை எரித்து உடல் திறனை அதிகரிக்க செய்யும்.

    டைப் - 2 நீரிழிவு நோய்

    வழக்கமான உடற்பயிற்சி இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும். இதனால் டைப் -2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.

    ஆஸ்டியோபோரோசிஸ்

    நடைப்பயிற்சி, நடனம், பளு தூக்குதல் போன்ற பயிற்சிகள் எலும்புகளை வலுப்படுத்துவதோடு ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தையும் குறைக்கும். வழக்கமான உடல் செயல்பாடு எலும்பு அடர்த்தியை அதிகரிக்க உதவும். குறிப்பாக மாதவிடாய் நின்ற பெண்களுக்கு எலும்புகள் வலு இழப்பதை குறைக்கும். வழக்கமான உடற்பயிற்சி மூட்டு வலியைக் குறைக்கும். நீச்சல், யோகா மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற நடவடிக்கைகள் மூட்டின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும். தசைகளை வலுப்படுத்தும். மூட்டுவலி அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

    மனநலக் கோளாறு

    வழக்கமான உடற்பயிற்சி, மனச்சோர்வு, பதற்றம் மற்றும் மன அழுத்தத்தின் அறிகுறிகளை குறைப்பதன் மூலம் மன ஆரோக்கியத்தில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் தினமும் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது எண்டோர்பின்களின் வெளியீட்டை தூண்டும். மனமகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும். வயதாகும்போது ஏற்படும் அறிவாற்றல், நினைவாற்றல் வீழ்ச்சியை தடுக்கும்.

    புற்றுநோய்

    உடற்பயிற்சியால் புற்றுநோயைத் தடுக்க முடியாது என்றாலும், வழக்கமான உடல் செயல்பாடு மார்பகம், பெருங்குடல் மற்றும் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட சில வகை புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. மேலும் உடற்பயிற்சி நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தவும் துணைபுரியும்.

    சுவாச நோய்கள்

    வழக்கமான உடற்பயிற்சி நுரையீரலின் செயல் திறனையும், சுவாச செயல்பாட்டையும் மேம்படுத்த உதவும். ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட நுரையீரல் நோய் (சி.ஓ.பி.டி) பாதிப்புக்குள்ளானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் ஏரோபிக் பயிற்சிகள் சுவாச செயல்பாடுகளுடன் இணைந்து நுரையீரல் திறன் மற்றும் ஒட்டுமொத்த சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    நாள்பட்ட நோய்கள்

    வழக்கமான உடற்பயிற்சி உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுக்களிலும் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து பல நாள்பட்ட நோய்களில் இருந்து பாதுகாக்கவும் உதவும். உடற்பயிற்சி, நோயை குணப்படுத்தாவிட்டாலும் மோசமடையாமல் தடுக்க உதவும்.

    முதுமை பருவத்தை எட்டுபவர்கள் உடற்பயிற்சி வழக்கத்தை தொடர்வது அவசியம். இது உடல் இயக்கம், சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும். உடல் செயல்பாடு, அறிவாற்றல் செயல்பாடு, நினைவகம் மற்றும் ஒட்டுமொத்த மூளை ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.

    • 11 நாட்கள் எடுத்துக்கொண்டால் உடலில் இருக்கக்கூடிய வியாதிகள் அனைத்தும் குணமாகும்.
    • கலப்படம் நிறைந்த உணவுகளையும் தான் நாம் சாப்பிட்டு வருகிறோம்.

    நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, நரம்புகளில் அடைப்பு, முழங்கால் வலி, மூட்டுவலி, இடுப்பு வலி, கண்பார்வை குறைபாடு, கெட்ட கொலஸ்ட்ரால் இதனால் வரக்கூடிய உடல்பரும் போன்ற தொந்தரவுகள் இருந்தால் இந்த மருந்தை தொடர்ந்து 11 நாட்கள் எடுத்துக்கொண்டால் உடலில் இருக்கக்கூடிய வியாதிகள் அனைத்தும் குணமாகும்.

    இப்போது இருக்கக்கூடிய டிஜிட்டல் உலகத்தில் நோய்களுக்கு பஞ்சம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு காரணம் நம்முடைய வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கம் தான். உணவு பழக்கவழக்கங்கள் இப்போது முற்றிலும் மாறிவிட்டது. நாம் இப்போது சாப்பிடக்கூடிய உணவுகள் நமக்கு 100 சதவீதம் ஊட்டச்சத்தை கொடுக்கிறதா என்றால் நிச்சயமாக கிடையாது.

    ஊட்டச்சத்து இல்லாத உணவுகளையும், கலப்படம் நிறைந்த உணவுகளையும் தான் நாம் சாப்பிட்டு வருகிறோம். அதனால் அதனுடைய விளைவு நிச்சயமாக நோய்கள் தான். இதனால் பல ஆஸ்பத்திரிகளுக்கு சென்று அலைவதை நிறுத்திவிட்டு முதலில் வீட்டில் உபயோகப்படுத்தக்கூடிய பொருட்களை பயன்படுத்தி செய்யக்கூடிய மருந்தை 11 நாட்களுக்கு சாப்பிடும் போது பல நோய்கள் குணமாகும். அதாவது உங்களுக்கு மாரடைப்பு, ரத்தக்குழாய் அடைப்பு மற்றும் இதயம் சம்பந்தமான எந்த நோய்களுக்கும் இந்த குடிநீரை பயன்படுத்தி நிவாரணம் பெறமுடியும். அதேபோல் உங்கள் நரம்புகளில் அடைப்பு ஏற்பட்டு அதனால் வரும் சிக்கல்களை இந்த மருந்து தீர்க்கும். இந்த எளிதான குடிநீரை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம் வாங்க.

    தேவையான பொருட்கள்

    தண்ணீர்-250 கிராம்

    வெந்தயம் -ஒரு டீஸ்ஸ்பூன்

    கறிவேப்பிலை- ஒரு கைப்பிடி

    பட்டை- ஒருதுண்டு

    இஞ்சி- ஒரு டீஸ்பூன் (துருவியது)

    செய்முறை:

    கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து 250 கிராம் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். இந்த 250 கிராம் தண்ணீர் 150 கிராம் அளவுக்கு குறுகி வரும் அளவிற்கு காய்ச்சி எடுக்க வேண்டும். இந்த பொருட்களில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் தண்ணீரில் இறங்கி வரும் அளவுக்கு காய்ச்சி எடுக்க வேண்டும். அதற்கு அடுப்பை மிதமான தீயில் வைத்தே இந்த மருந்தை காய்ச்சி எடுக்க வேண்டும். அதன்பிறகு இதனை வடிகட்டியில் வடிகட்டி இந்த தண்ணீரை 11 நாட்கள் தொடர்ச்சியாக குடித்து வர வேண்டும்.

    இதில் சுவைக்காக எதுவும் சேர்க்க வேண்டாம். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டுமானால் சிறிதளவு தேன் சேர்த்துக்கொள்ளலாம். இதனை 11 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் நீங்களே பிரம்மித்து போகிற அளவுக்கு உங்களுக்கு நிறைய பலன்கள் கிடைக்கும்.

    அதாவது நரம்புகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் முதற்கொண்டு எல்லாவிதமான பிரச்சினைகளும் நீங்கி நரம்புகள் சிறப்பாக செயல்பட ஆரம்பிக்கும். அதேபோல் மூட்டுவலி, முழங்கால் வலி போன்ற பிரச்சினைகளுக்கும் சிறப்பான தீர்வாக இருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். கபநோய்களுக்கும் சிறந்த தீர்வினை அளிக்கும்.

    வாதம், பித்தம், கபம் இந்த மூன்றையும் ஒழுங்குபடுத்தக்கூடிய ஆற்றல் இந்த குடிநீருக்கு உள்ளது. உங்களை நீங்கள் கட்டுடலாக வைத்துக்கொள்ளவும் இந்த குடிநீர் உதவியாக இருக்கும். கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதற்கும் இது பெரிதும் உதவியாக இருக்கிறது.

    • நீரிழிவு நோய்க்கு தீர்வு காண கல்லீரல், கணைய கொழுப்பு அளவை குறைப்பது முக்கியம் என்றார்.
    • மதுரை அரசு மருத்துவமனை டாக்டர் எஸ்.ஸ்ரீதர் விளக்கமளித்தார்.

    மதுரை

    எந்திரத்தனமான இந்த உலகில் இரண்டாம் வகை நீரிழிவு நோய் என்பது அதிகரித்துவரும் ஒன்றாகும். இது இந்தியாவில் படிப்படி யாக அதிகரித்து வருகிறது. இரண் டாம் வகை நீரிழிவு நோய்க்கான காரணங்கள் பல உள்ளன. இதில் மரபணு, வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் போன்ற காரணிகள் அடங்கும்.

    நீரழிவு நோய்க்கு மரபணு ஒரு முதன்மை காரணியாக இருந்தாலும், அதிகரித்து வரும் இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கு உடலுழைப்பற்ற வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் மற்றும் உடல் பருமன் போன்றவை காரணிகளாக அமைகின்றன.

    நகரமயமாக்கல் மற்றும் மேற்கத்திய வாழ்க்கை முறையை பின்பற்றுதல், உடலுழைப்பு இல்லாமை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ளுதல் ஆகியவற்றால் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் 101 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இது 2021 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் 74.2 மில்லி யனாக இருந்ததை விட கணிசமான அதிகரிப்பு என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையானது இந்த ஆபத்தான புள்ளிவிவரங்களை எடுத்துக்காட்டுகிறது. மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து நீரிழிவு நோயாளிகளில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய் உள்ளது. உலகளவில் இரண்டாம் வகை நீரிழிவு நோயுடன் வாழும் ஒவ்வொரு 6 பேரில் ஒருவர் இந்தியர் என்பது ஆச்சரியமான ஒரு விஷயம். நீரிழிவு நோயாளிகளின் இந்த அதிகப்படியான எண்ணிக்கை விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கை களின் அவசரத் தேவையை குறிக்கிறது.

    நீரழிவு நோய்க்கு சிகிச்சை அளிப்பதில் உள்ள முக்கிய சிக்கல் என்னவென்றால் நீரிழிவு நோயை திரும்ப பெற முடியுமா என்பதை புரிந்து கொள்வதேயாகும். நீரழிவு நோயை திரும்ப பெறுதல் என்பது நிரந்தரமான சிகிச்சையை குறிக்கிறது என்பதால், "நீரிழிவு நோய் நிவாரணம்" என்பது ஒரு தற்காலிக தீர்வாக இருக்கலாம். நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது.

    உடலுழைப்பற்ற வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை போன்றவை ஒருவருக்கு மீண்டும் ஏற்படும் சூழ்நிலையில் நீரழிவு நோயின் தீவிரம் அதிகரிக்கலாம், இதனால் மீண்டும் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

    இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கான நிரந்தர தீர்வை புரிந்துகொள்ளுதல் முக்கியமானதாகும். நீரிழிவு நோயின் நிரந்தர தீர்வு என்பது ரத்த சர்க்கரை அளவுகள் மற்றும் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்ற செயல்பாடுகள், தொடர் மருந்து சிகிச்சை அல்லது இன்சுலின் சிகிச்சை தேவையில்லாத இயல்பான அல்லது சாதாரண நிலைக்கு திரும்பும் நிலையைக் குறிக்கிறது. மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் HbA1c ன் மதிப்பு (மூன்று மாத கால ரத்த சர்க்கரை அளவுகளின் மதிப்பு) குறைந்தது ஆறு மாதங்களுக்கு 6.5 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும்போது, மட்டுமே இதை அடைய முடி யும்.

    கல்லீரல் மற்றும் கணைய கொழுப்பு அளவு குறைக்கப்படு வதே நிவாரணத்திற்கு உரிய வழி என்பதற்கான வலுவான சான்றுகள் உள்ளன. மேலும் குறைந்த கலோரி கொண்ட உணவை பின்பற்றுவதன் மூலம் 10-15 சதவீதம் அளவு எடை குறைப்புடன் இதை அடையலாம். நீரிழிவு நோயை நிர்வகிக்க எடை குறைப்பை பராமரிப்பது முக்கியம் என் பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். முன்பு இழந்த எடையை மீண்டும் பெற்றுவிட்டால், நீரழிவு நோய் மீண்டும் வர மற்றும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    ஆனால் நீரிழிவு நோய்க்கு நிரந்தர தீர்வு என்பது அனைத்து நோயாளிகளுக்கும் பொருந்தாது. இரண்டாம் வகை நீரழிவு நோய் ஒரு குறுகிய காலத்திற்குள் கண்ட றியட்டிருந்தால், இது பெரும்பாலான நோயாளிக ளுக்கு இருக்கும். 6 ஆண்டுகளுக் கும் குறைவாக நீரிழிவு நோய் மருந்துகள் உண்ணும் நோயாளி கள், இரண்டாம் வகை நீரழிவு நோய் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தால், நிரந்தர தீர்வு நிலையை அடைவது கடினமாகும்.

    நீண்ட கால நீரிழிவு நோயின் பாதிப்புகளான இதய நோய், சிறுநீரக நோய், நரம்பு பாதிப்பு, பார்வைக் கோளாறுகள், மன நலப் பிரச்சினைகள் போன்ற நோய்வாய்ப்பட்ட உடல்நலப் பிரச்சினைகளை உடைய நீரிழிவு நோயாளிகள் நிரந்தர தீர்வு காண்பது கடினம். நீரிழிவு நோயாளிகள் தங்கள் உடல் நிலையை திறம்பட நிர்வகிக்க நீரிழிவு மருத்துவரின் உதவியை நாட வேண்டும். சிகிச்சையளிக் கும் நீரிழிவு மருத்துவரிடம் நிரந்தர தீர்வு அடைவதற்கான சாத்தியக்கூறுகளை அறிய இது உதவும்.

    மேற்கண்ட தகவலை மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு ராஜாஜி மருத்து வமனை அகச்சுரப்பியல் மற் றும் நீரிழிவு நோய் உயர் சிறப்பு மருத்துவர் டாக்டர் எஸ்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

    • நீரிழிவு நோயின் ஆரம்ப நிலையில் 13.6 கோடி பேர் இருக்கிறார்கள்.
    • தென் மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்களில் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது.

    சென்னை:

    இந்தியாவில் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் உள்ளிட்டவற்றால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதை கண்டறிய ஆய்வு நடத்தப்பட்டது.

    மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிதியுதவியுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

    இந்த ஆய்வுக்காக நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் 20 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 13 ஆயிரத்து 43 பேரிடம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

    கிராமப்புற பகுதிகளை சேர்ந்த 79 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடமும், நகர்ப்புற பகுதிகளை சேர்ந்த 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடமும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் முடிவுகள் சர்வதேச ஆய்வு இதழான லான்செட் இதழில் வெளியிடப்பட்டது.

    இந்த ஆய்வு பற்றிய விவரங்கள் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

    இந்தியாவில் 10 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோயின் ஆரம்ப நிலையில் 13.6 கோடி பேர் இருக்கிறார்கள். நீரிழிவு நோய் பாதிப்பு 11.4 சதவீதம் பேருக்கும், ஆரம்ப நிலை பாதிப்பு 15.3 சதவீதம் பேருக்கும் உள்ளது. தென் மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்களில் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது.

    குறிப்பாக கேரளா, புதுச்சேரி, கோவா, சிக்கிம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர். மத்திய மற்றும் வடகிழக்கு பகுதிகளில் குறைவான பாதிப்பே உள்ளது. நகர்ப்புறங்களில் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம்.

    நீரிழிவு நோயின் ஆரம்ப நிலையில் நகரங்கள் மற்றும் கிராமங்களை சேர்ந்தவர்களிடையே அதிக வித்தியாசம் இல்லை.

    மேலும் உயர் ரத்த அழுத்தத்தால் 31.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 35.5 சதவீதம் ஆகும். உயர் ரத்த அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டோரில் 5 சதவீதம் பேர் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள்.

    மேலும் பொதுவான உடல் பருமனால் 25.4 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில் வயிற்று பருமனால் 35.1 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உடல் பருமனால் பெண்களை விட ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் பருமன் பாதிப்பு புதுச்சேரியில்தான் அதிகமாக உள்ளது.

    21.3 கோடி பேர் அதிக கொழுப்பு சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 18.5 கோடி பேர் அதிக கெட்ட கொழுப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக கொழுப்பு சத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆவர்.

    இதுபோன்ற தொற்றா நோய்களின் பாதிப்பு கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் அதிகமாக உள்ளன.

    ×