search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளிமாநில வாகனங்கள்"

    • போலீசாரின் இந்த அடாவடி செயலால், சுற்றுலா பயணிகள் மீண்டும் புதுச்சேரிக்கு வரவே தயக்கம் காட்டுகின்றனர்.
    • போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோருக்கு சட்டப்படி அபராதம் விதியுங்கள் என்று போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

    புதுச்சேரி:

    சுற்றுலா தலமான புதுச்சேரிக்கு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இதனால் வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் குறிப்பாக, பெங்களூரு, சென்னையில் இருந்து பெரும்பாலான சுற்றுலா பயணிகள் குடும்பமாகவும், நண்பர்களுடன் சேர்ந்து காரில் பைபாஸ் மற்றும் ஈ.சி.ஆர். சாலை வழியாக புதுச்சேரிக்கு வருகின்றனர்.

    பின்னர், விடுதியில் தங்கி ராக் பீச், மெரினா கடற்கரை, சுண்ணாம்பாறு படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம் உள்ளிட்ட சுற்றுலா இடங்களை சுற்றி பார்க்கின்றனர்.

    மேலும், ஆரோவில்லுக்கு சென்றுவிட்டு வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் (வெள்ளிக்கிழமை) பிற்பகலில் புதுச்சேரி வரும் சுற்றுலா பயணிகள் 2 நாட்கள் தங்கி விட்டு சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்துவிட்டு (ஞாயிற்றுக்கிழமை) இரவு சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

    இந்நிலையில் புதுச்சேரியில் எல்லைப்பகுதிகள் மற்றும் நகரப்பகுதிகள் உட்பட பல்வேறு இடங்களில் போக்குவரத்து விதிமீறல் என கூறி சுற்றுலா பயணிகளின் வாகனங்களை மட்டும் போலீசார் குறி வைத்து அபராதம் வசூலிப்பதாக கூறப்படுகிறது.

    இதனால் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். போலீசாரின் இந்த அடாவடி செயலால், சுற்றுலா பயணிகள் மீண்டும் புதுச்சேரிக்கு வரவே தயக்கம் காட்டுகின்றனர்.

    இப்பிரச்சனை சட்டசபையிலும் எதிரொலித்தது. சுற்றுலா பயணிகள் வந்தால் மாநிலத்துக்கு வருவாய் கிடைக்கும். எனவே, போலீசார் சுற்றுலா பயணிகளிடம் கெடுபிடி காட்டக்கூடாது என்று முதல்-அமைச்சர் ரங்கசாமியும் அடிக்கடி அறிவுறுத்தி வந்தார். ஆனால், போலீசாரோ ஒவ்வொரு மாதமும் டார்கெட் வைத்து சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வந்தனர்.

    குறிப்பாக, கருவடிக்குப்பம் ஈ.சி.ஆர். சாலை சித்தானந்த சுவாமிகள் கோவில் அருகே போலீசார் நின்று கொண்டு தினமும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் கார், இருசக்கர வாகனம், வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி, சுற்றுலா பயணிகளிடம் காரில் சீட் பெல்ட் அணியவில்லை, தற்காலிக பெர்மிட் எடுக்கவில்லை, இருசக்கர வாகனத்தில் வருவோரிடம் ஹெல்மெட் அணியவில்லை என ஏதாவது காரணத்தை குறி இ-செல்லான் மிஷின் மூலம் உடனடியாக அபராதம் விதிக்கின்றனர்.

    அதுவும், வார இறுதி நாட்களில் அதிகமான சுற்றுலா வாகனங்களை நிறுத்தி அபராதம் விதிப்பதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

    ஆவணங்கள் சரியாக இருந்தாலும் கூட, போலீசார் அபராதம் வசூலிக்காமல் வெளிமாநில வாகனங்கள் செல்ல அனுமதிப்பதில்லை. போலீசார் கேட்கும் அபராதம் கொடுக்காவிட்டால், அதே இடத்தில் பல மணி நேரம் சுற்றுலா பயணிகளை நிற்க வைத்து மனஉளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர்.

    இதனால் அவர்கள் அபராதத்தொகையை செலுத்திவிட்டு செல்லும் நிலை உள்ளது. இந்நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கருவடிக்குப்பம் ஈ.சி.ஆர். சாலை வழியாக வந்தபோது, போலீசார் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்தி அபராதம் வசூலிப்பதை பார்த்துள்ளார்.

    இதனால் கோபமடைந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி உடனே காவல்துறை அதிகாரிகளை அழைத்து கண்டித்துள்ளார். புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை குறி வைத்து அபராதம் விதிப்பது சுற்றுலாவை வெகுவாக பாதிக்கும். வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்தி அபராதம் விதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டார்.

    அதேசமயம், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோருக்கு சட்டப்படி அபராதம் விதியுங்கள் என்று போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

    • அம்மன் கோவிலில் முன்பு பல மாதங்களாக உரிமையாளர்கள் யார் என்றே, தெரியாமல் வெளி மாநில கார்கள் மற்றும் சரக்கு மினி ஆட்டோக்கள் நிற்கிறது.
    • கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான்பேட்டை, பகவதி அம்மன் கோவிலில் முன்பு பல மாதங்களாக உரிமையாளர்கள் யார் என்றே, தெரியாமல் வெளி மாநில கார்கள் மற்றும் சரக்கு மினி ஆட்டோக்கள் நிற்கிறது.

    இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். வரும் நாட்களில் பள்ளி திறக்கும்போது இந்த வழியாக தனியார் பள்ளி பேருந்துகள் வந்து, செல்லும். வீதிகளில் இருபுறமும் 4 சக்கர வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளதால் பள்ளி வாகனம் சென்று வருவதில் சிரமம் ஏற்படும்.

    மேலும் இரவு நேரத்தில் கார்களின் மறைவில் மர்ம நபர்கள் உட்கார்ந்து கொண்டு மது அருந்துவது வழக்கமாக உள்ளது. கடந்த வருடம் இதே போல் வாகனங்களை நிறுத்தி வைத்திருந்த உரிமையாளர்களை போலீசார் எச்சரித்து வாகனத்தை எடுக்கச் செய்தனர்.

    இந்த நிலையில், இப்பகுதியில் நிற்கும் வாகனங்களுக்கு ஆர்.சி மற்றும் இன்சூரன்ஸ் உள்ளிட்டவை இல்லை என தெரிகிறது. இப்பகுதி மக்களுக்கு இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் யார் என்றே தெரியவில்லை.

    எனவே பரமத்திவேலூர் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுல்தான்பேட்டை பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×