search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுமைதூக்கும் தொழிலாளர்கள்"

    • தொழிலாளர்கள் எங்களை அனுமதிக்கவில்லை.
    • 21 கிராமங்களை சேர்ந்தவர்கள் இங்கு தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறோம்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் சுமார் 100 ஆண்டுகளாக சரக்கு முனையம் செயல்பட்டு வந்தது.

    கூட்ஸ் ரெயில் மூலம் கொண்டு வரப்படும் உரம், அரிசி, கோதுமை, நெல் உள்ளிட்டவைகள் இங்கிருந்து லாரிகள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வந்தது.

    இந்நிலையில் சரக்கு முனையத்தால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக கூறி, இந்த சரக்கு முனையத்தை சமீபத்தில் கங்கைகொண்டான் ரெயில் நிலையத்திற்கு இடமாற்றம் செய்தனர்.

    நெல்லை சரக்கு முனையத்தில் சுமார் 120 சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இவர்கள் தங்களுக்கு கங்கைகொண்டானில் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். அவர்களுக்கு அங்கு பணி அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் கங்கை கொண்டான் சரக்கு முனையத்தில் பணியாற்றும் சுமை தூக்கும் பணியாளர்கள், லாரி டிரைவர்கள் ஆகியோர் சந்திப்பு ரெயில் நிலையத்தில் பணியாற்றிய பணியாளர்களை கங்கை கொண்டானில் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி இன்று கங்கைகொண்டான் ரெயில் நிலையம் முன்பு திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தர்ணா போராட்டத்தில் வட்டார லாரி சங்க தலைவர் அலெக்ஸ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பொருளாளர் இஸ்ரவேல், மாரிமுத்து, செந்தில் குமரன், முருகன், ஆறுமுகம், வட்டார விவசாய சங்க தலைவர் இலோசியஸ், ஊர் நாட்டாண்மை துரைப் பாண்டியன், பஞ்சாயத்து தலைவர்கள் கவிதா பிரபாகரன், புதிய தமிழகம் மாவட்ட செயலாளர் ராமர், மானூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், மாவட்ட கவுன்சிலர் மகேஷ் குமார், விடுதலை கட்சி மாவட்ட செயலாளர் சுரேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறும் போது, நாங்கள் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் சரக்கு முனையம் செயல்பட்ட போது பணிக்கு சென்ற நிலையில் அங்குள்ள தொழிலாளர்கள் எங்களை அனுமதிக்கவில்லை.

    கங்கைகொண்டானை சுற்றியுள்ள 21 கிராமங்களை சேர்ந்தவர்கள் இங்கு தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறோம். அவர்களை இங்கே அனுமதித்தால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே அவர்களை இங்கு அனுமதிக்க கூடாது. அதனை மீறி அனுமதித்தால் நாங்கள் எங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

    தகவல் அறிந்ததும் தாழையூத்து டி.எஸ்.பி. பாலச்சந்திரன், இன்ஸ்பெக்டர் வேல்கனி மற்றும் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வருவாய் ஆய்வாளர் அமுதா, தாசில்தார் ஜெயலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமாரி உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    • 6 ஆண்டுகளாக வழங்கப்படாத கூலி உயர்வை உடனடியாக வழங்க வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
    • சுமைதூக்கும் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்கள் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு பார்க் ரோடு, மூலபட்டறை குப்பைகாடு போன்ற பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட லாரி அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த லாரி மூலமாக வெளிமாநிலங்களுக்கு ஜவுளி, மஞ்சள், அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

    இதில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 50 ஆண்டுகளாக இந்த நிறுவனங்களில் அவர்கள் சுமைதூக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ஈரோடு கூட்ஸ் ட்ரான்ஸ்போர்ட் அசோசியேசனுடன் அனைத்து தொழிற்சங்கம் நிர்வாகம் ஒப்பந்தம் செய்து மூன்றாண்டுக்கு ஒரு முறை ஒப்பந்தம் கையெழுத்தாகி கூலி உயர்வு வழங்கப்பட்டு வந்தது.

    கடைசியாக 2016-ம் ஆண்டு முதல் தற்போது வழங்கிக் கொண்டிருக்கும் கூலியில் இருந்து 41 சதவீத கூலி உயர்வு மற்றும் இரவு எட்டு மணிக்கு மேல் லோடு ஏற்றுவதாக இருந்தால் இரவு சாப்பாடுக்கு 75 ரூபாய் வழங்குவதென்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் நிர்வாக தரப்பினர், தொழிலாளர் தரப்பினர் கையெழுத்திட்டு ஒப்பந்தம் தயார் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

    ஆனால் அதன் பிறகு கூறியபடி சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அனைத்து தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடந்தும் சுமூகமான முடிவு ஏற்படவில்லை.

    எனவே ஈரோடு கூட்ஸ் ட்ரான்ஸ்போர்ட் அசோசியேசினும் மற்றும் ரெகுலர் லாரி சர்வீஸ் நிறுவனங்களில் பணிபுரியும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆயிரம் பேர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

    அதன்படி இன்று ஆயிரம் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் ஈரோடு ஸ்டார் தியேட்டர் அருகே பார்க் ரோட்டில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈரோடு மாவட்ட அனைத்து சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    ஈரோடு மாவட்ட சுமை தூக்குவோர் மத்திய சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.எஸ்.தென்னரசு, சங்கத்தின் மாவட்ட செயலாளர் மாதையன், டி.பி.டி.எஸ். சங்கத்தின் தலைவர் பெரியார் நகர் மனோகரன், சி.ஐ.டி.யு. தலைவர் தங்கவேலு, மத்திய சங்கத்தின் தலைவர் விஜயகுமார், பாட்டாளி தொழிற்சங்க கவுரவ தலைவர் எஸ்.ஆர்.ராஜூ, ஈரோடு மாவட்ட பொது தொழிலாளர் மத்திய சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆறுமுகம் உள்பட அனைத்து சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    6 ஆண்டுகளாக வழங்கப்படாத கூலி உயர்வை உடனடியாக வழங்க வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    சுமைதூக்கும் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்கள் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ×