search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்பி சிங்"

    • மெகா ஏலத்தில் பெங்களூரு அணிக்கு சவால் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
    • தேவையான வீரர்களை ஆர்.டி.எம். கார்டு மூலம் குறைவான தொகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

    புதுடெல்லி:

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் நவம்பர் மாதம் நடக்கிறது. அதற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு அணி 5 வீரர்களை தக்கவைக்கும் பட்சத்தில் முதல் 3 வீரர்களுக்கு ரூ.18 கோடி, ரூ.14 கோடி, ரூ.11 கோடி வீதமும் கடைசி இரு வீரர்களுக்கு ரூ.18 கோடி, 14 கோடி வீதமும் ஊதியமாக வழங்க வேண்டும். ஏலத்தில் ஒரு அணி ரூ.120 கோடி வரை செலவிட அனுமதிக்கப்பட்டுள்ளது. 5 வீரர்களை தக்க வைக்கும் போது அவர்களுக்குரிய மொத்த ஊதியம் ரூ.75 கோடி போக மீதமுள்ள ரூ.45 கோடியை வைத்து தான் ஏலத்தில் மற்ற வீரர்களை வாங்க முடியும்.

    இந்த நிலையில் ஐ.பி.எல்.-ல் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுக்கு வீரர்களை எடுப்பது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் சில யோசனைகளை தெரிவித்துள்ளார்.

    அவர் கூறுகையில், 'ஐ.பி.எல். மெகா ஏலத்தில் பெங்களூரு அணிக்கு சவால் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் விராட் கோலியை தக்கவைத்துவிட்டு, மற்ற வீரர்கள் அனைவரையும் விடுவித்து விடலாம். பிறகு தேவையான வீரர்களை ஆர்.டி.எம். கார்டு மூலம் குறைவான தொகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

    உதாரணமாக பெங்களூரு அணியில் ரஜத் படிதாரை விடுவித்து விட்டு பிறகு ஏலத்தில் அவரை ரூ.11 கோடி அல்லது அதற்கும் குறைவான தொகைக்கு ஆர்.டி.எம். சலுகை மூலம் வாங்க முடியும். அதே போல் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜையும் இழுத்துக் கொள்ளலாம். சிராஜை தக்க வைத்தால் ரூ.14 கோடி கொடுக்க வேண்டி இருக்கும். ஆனால் ஏலத்தில் அவர் அவ்வளவு விலைக்கு போகமாட்டார்.

    எனவே பெங்களூரு அணியினர் புதிய மனநிலையுடன் ஏலத்துக்கு செல்ல வேண்டும். அந்த அணிக்கு விராட் கோலி தேவை. அவர் அணிக்காக பெரிய அளவில் பங்களிப்பு அளித்துள்ளார். அவர் மிகவும் முக்கியமான வீரர். அதனால் பெங்களூரு அணி அவரை சுற்றியே அணியை கட்டமைக்க வேண்டும் அல்லது புதிய சிந்தனையுடன் செயல்பட வேண்டும். இந்த அணியில் விராட் கோலியை தவிர மற்ற வீரர்களின் மதிப்பு ரூ.18 மற்றும் ரூ.14 கோடியாக இருப்பதை நினைத்து பார்க்க முடியாது' என்றார்.

    • பேட்டிங் செய்யும் விதத்தை பார்க்கும்போது 4 அல்லது 5-வது வரிசைக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்க முடியும்.
    • அதேவேளையில் அதிக பந்துகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் ஒரு நாள் போட்டி வடிவம் வேறுபட்டது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி வீரர் சூர்யகுமார் யாதவ், 20 ஓவர் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் ஒரு நாள் போட்டிகளில் ரன் குவிக்க திணறி வருகிறார்.

    தற்போது அவர் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறார்.

    இந்நிலையில் ஒருநாள் போட்டியில் 4-வது வரிசைக்கு சூர்யகுமார் யாதவ் பொருத்தமானவர் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    வருகிற 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யருடன் 4-வது இடத்துக்கு ஒரு நல்ல தேர்வாக இருப்பார். சூர்யகுமார் யாதவ் பொருத்தமாக இருந்தால் அவருக்கு போட்டிகளில் விளையாட வாய்ப்பு கொடுக்க வேண்டும். மேலும் நிச்சயமாக ஒரு நல்ல தேர்வாக இருப்பார்.

    அவர் பேட்டிங் செய்யும் விதத்தை பார்க்கும்போது 4 அல்லது 5-வது வரிசைக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்க முடியும். 20 ஓவர் கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவின் தற்போதைய ஆட்டம் மிகவும் சிறப்பாக உள்ளது.

    அதேவேளையில் அதிக பந்துகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் ஒரு நாள் போட்டி வடிவம் வேறுபட்டது. இதனால் சூர்யகுமார் யாதவ் தனது ஆட்ட திட்டத்தை கொஞ்சம் மாற்ற வேண்டும்.

    அவருக்கு ஒருநாள் போட்டிகளில் அனுபவம் இல்லாவிட்டாலும் அவரது திறமையை வெளிப்படுத்த போதுமான வாய்ப்புகளை வழங்குவது முக்கியம். வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கை நீண்ட கால விருப்ப வீரராக நீங்கள் நினைத்தால் அதற்கேற்ப அவர் மெருகூட்டப்பட வேண்டும். ஒருவரை ஒரு போட்டியில் விளையாட வைத்துவிட்டு இரண்டு போட்டிகளுக்கு வெளியே உட்கார வைக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×