search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலைஞர் உரிமைத்தொகை"

    • கலைஞர் உரிமைத்தொகை பலருக்கு கிடைக்க வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • தொலைபேசி எண்கள் இல்லாமல் முதியவர்கள் பலருக்கும் உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

    தென்காசி:

    தமிழ்நாடு அரசின் சார்பில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு கலைஞர் உரிமை தொகையாக ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.

    ரூ. 1000 உரிமைத்தொகை

    இருப்பினும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பெண்கள் அந்நிறுவனங்களின் சார்பில் ஓய்வு தொகையைப் பெற்று வந்தாலும் தமிழக அரசின் சார்பில் கொடுக்கப்படும் கலைஞர் உரிமைத்தொகை ரூ. 1000 பலருக்கும் கிடைக்க வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக எவ்வித ஓய்வூதிய மும் பெறாமல் இருந்து வரும் வயதான முதியவர்கள் பலருக்கும் தொலைபேசி எண்கள் எதுவும் இல்லாமல் உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

    மூதாட்டி கோரிக்கை

    அதன்படி நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மந்தியூர் ஊராட்சி பிள்ளை யார்குளம் கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மூதாட்டிகள், முன்னர் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டதன் காரணமாக அதற்கு ஓய்வூதியமாக மாதம் ரூ. 700 பெற்று வருகிறோம்.

    ஆனால் தற்போது தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வரும் கலைஞர் உரிமைத்தொகை ரூ. 1000 பெறுவதற்கு பதிவு செய்தி ருந்தும் கிடைக்கவில்லை. எனவே பீடி தொழிலாளர்க ளாகிய வயதான எங்களுக்கு ஆயிரம் உரிமை தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கலெக்டர் ரவிச்சந்திரனை சந்தித்து மனு அளித்தனர்.

    • விடுபட்டவர்களுக்கு நாளை முதல் 3 நாட்கள் சிறப்பு முகாம்
    • விண்ணப்பம் பெறாதவர்களும் மனுவை பதிவு செய்யலாம்

    கோவை,

    தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வாயிலாக பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி இதற்கான விண்ணப்ப மனுக்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    கோவை மாவட்டத்தில் வசிக்கும் ரேஷன்கார்டு தாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கி, அதற்கான டோக்கன்களும் தரப்பட்டன.

    இதனை தொடர்ந்து 2 கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த ரேஷன்கார்டுதாரர்கள் பூர்த்தி செய்த விண்ணங்களை பதிவு செய்து உள்ளனர்.

    அதன்படி கோவை மாவட்டத்தில் இதுவரை 6.80 லட்சம் பேர் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பங்களை பதிவு செய்து உள்ளனர் என்பது தெரிய வந்து உள்ளது.

    இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு 2 கட்டமாக முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் விண்ணப்பத்தை பதிவு செய்து உள்ளனர்.

    இந்த நிலையில் ரேஷன்கார்டுதாரர்களில் சிலர் விண்ணப்பங்கள் பெறவில்லை. அதிலும் பலர் வாங்கிய விண்ணப்பங்களை பதிவு செய்யவில்லை என்பது தெரியவந்து உள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு விண்ணப்பம் பெறாதவர்கள் மற்றும் மனுவை பதிவு செய்யாதவர்கள் ஆகியோர் பயனடையும் வகையில், விடுபட்டவர்களுக்கான 3 சிறப்பு முகாம்களை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான முகாம் நாளை (18-ந்தேதி) தொடங்கி வருகிற 20-ந்தேதி வரை நடக்க உள்ளது. இது முதல், இரண்டாவது கட்டமாக நடத்தப்பட்ட அதே முகாம்களில் நடக்க உள்ளது.

    எனவே கோவை மாவட்டத்தில் விடுபட்ட பெண்கள் அந்தந்த சிறப்பு முகாம்களுக்கு நேரில் சென்று கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

    விண்ணப்பப்படிவம் கிடைக்கப்பெறாதவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள முகாம்களுக்கு சென்று அங்கு உள்ள பொறுப்பு அதிகாரியிடம் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து ஒப்படைத்து பயன்பெறலாம்.

    கோவையில் மாற்று திறனாளிகள், உழவர் பாதுகாப்பு திட்டம், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியம் ஆகிய திட்டங்கள் வாயிலாக முதியோர் ஓய்வூதியம் பெறுவோர் தவிர அந்த குடும்பத்தில் தகுதிவாய்ந்த பெண்களும் கலைஞர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    ×