search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி20 உலகக் கோப்பை 2024"

    • டேவிட் மில்லரின் கேட்சை பவுண்டரி எல்லையில் சூர்யகுமார் யாதவ் பிடித்தார்.
    • அப்போது எல்லைக்கோட்டை சூர்யா தொட்டுவிட்டதாகச் சிலர் கூறுகின்றனர்.

    நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பைத் தொடரில், தொடர் தொடங்கியது முதல் தோல்வியே சந்திக்காத தென்னாப்பிரிக்க அணி, இறுதிப்போட்டியில் நல்ல நிலையில் இருந்தபோது இந்தியாவிடம் வெற்றியைப் பறிகொடுத்தது.

    தென் ஆப்பிரிக்கா கோப்பையை வெல்லவிடாமல் செய்தது இந்தியாவின் ஆட்டத் திறனா அல்லது க்ளாசன் செய்த தவறா, இல்லை ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சா, சூர்யகுமாரின் கேட்சா என அந்தச் செய்தி இணையதளம் கேள்வி எழுப்பியுள்ளது.

    டேவிட் மில்லரின் கேட்சை பவுண்டரி எல்லையில் சூர்யகுமார் யாதவ் பிடித்தார். அப்போது எல்லைக்கோட்டை சூர்யா தொட்டுவிட்டதாகச் சிலர் கூறுகின்றனர்.

    ஆனால் ஆட்டத்தின் திருப்புமுனை அதுவல்ல. மாறாக, ஃபார்ம் அவுட்டில் இருந்த கோலியை தொடக்கத்திலேயே பவுண்டரி விளாச அனுமதித்ததும் தென் ஆப்பிரிக்காவின் தோல்விக்கு ஒரு காரணம் சொவீடன் லைவ் இணையதளம் கூறியுள்ளது.

    தென் ஆப்பிரிக்கா இறுதிப்போட்டியில் தோற்றதற்கான மூன்று முக்கியக் காரணங்களை தி சௌத் ஆப்ரிக்கன் என்ற இணையதளமும் பட்டியலிட்டுள்ளது.

    இது குறித்து அந்த இணையதளம் கூறியதாவது:-

    டேவிட் மில்லரும், க்ளாசனும் களத்தில் நின்றவரை, தென்னாப்பிரிக்காவின் கை ஓங்கியிருந்தது. க்ளாசன் ஆட்டமிழந்தது, தென் ஆப்பிரிக்காவின் வேகத்தைக் குறைத்துவிட்டது. இருந்தாலும் மில்லர் இருந்த வரை, தென் ஆப்பிரிக்கா வெல்வதற்கான வாய்ப்பு இருந்தது.

    பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்ளவே முடியவில்லை. அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த க்ளாசனால்கூட பும்ரா ஓவரில் பவுண்டரி விளாச முடியவில்லை. நன்றாக ஆடிக்கொண்டிருந்த மில்லரும் பும்ரா பந்தில் சிங்கிள் எடுத்து, புதிதாகக் களமிறங்கிய மார்க்கோ யான்சனுக்கு ஸ்டிரைக்கை வழங்கினார். பும்ராவின் பந்துவீச்சை அவரால் எதிர்கொள்ள முடியாமல் ஆட்டமிழக்க நேர்ந்தது.

    இதேபோல, மில்லரின் கேட்சும் அதைத்தொடர்ந்து எஞ்சிய 5 பந்துகளில் வெற்றிக்காகப் போராடிய கேசவ் மகராஜ், ககிசோ ரபாடாவின் விக்கெட்டுகளும் தென் ஆப்பிரிக்காவுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துவிட்டது.

    மில்லரின் கேட்ச்சை பவுண்டரி லைனில் சூர்யகுமார் பிடித்தபோது அவரது கால் லேசாக பவுண்டரி லைனில் பட்டதாக சமூக ஊடகங்களில் விவாதம் எழுந்த நிலையில், தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஷான் பொல்லாக், அந்த கேட்ச்சில் எந்தத் தவறும் இல்லை. குஷன் லேசாக நகர்ந்தது. ஆனால் அது ஆட்டத்தின் ஒரு பகுதிதான். சூர்யகுமார் குஷன் மீது ஏறவில்லை எனக் கூறினார்.

    இவ்வாறு அந்த இணையதளம் செய்தி வெளியிட்டது.

    • தாலிபன்களின் ஆட்சியை காரணம் காட்டி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருதரப்பு தொடரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒத்தி வைத்தது.
    • ஆஸ்திரேலியாவால் உலக கோப்பையில் எங்களுடன் விளையாடும் இருதரப்பு போட்டிகளில் ஏன் விளையாட முடியாது என ரஷித்கான் கேள்வி எழுப்பியுள்ளார்.

    நடப்பு ஆண்டின் தொடக்கத்தில், மார்ச் மாதத்தில், ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான மனித உரிமைகள் மோசமடைந்து வருவதைக் காரணம் காட்டி, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஒத்திவைத்தது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருதரப்பு தொடரை மீண்டும் தொடங்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நிக் ஹாக்லி சம்மதம் தெரிவித்துள்ளார்.

    மேலும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ஆப்கானிஸ்தானுக்கு வாழ்த்துக்கள் எனவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நிக் ஹாக்லி தெரிவித்தார்.

    • இந்திய அணி 17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது.
    • உலகக் கோப்பையுடன் நாளை தாயகம் திரும்பும் இந்திய அணி வீரர்களை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது.

    சாதனை படைத்த இந்திய வீரர்கள் தாயகம் திரும்ப இருந்த நிலையில் பெரில் என்ற புயல் அவர்களை மேலும் 2 நாட்கள் பர்பட்டாசில் காக்க வைத்து விட்டது. இதனையடுத்து பர்பட்டாசில் இருந்து இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலம் இன்று புறப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை காலை 6 மணி அளவில் புது டெல்லியை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

    இந்நிலையில் உலகக் கோப்பையுடன் நாளை தாயகம் திரும்பும் இந்திய அணி வீரர்களை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். காலை 11 மணி அளவில் இந்த சந்திப்பு நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

    இதனை தொடர்ந்து மாலை மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய வீரர்கள் பேரணியாக, ரசிகர்கள் படை சூட திறந்த வெளி பஸ்ஸில் டி20 உலகக்கோப்பையுடன் பயணிப்பார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

    பேரணி முடித்தபின் மும்பை வான்கடே மைதானத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெறவுள்ளது

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டி20 உலகக் கோப்பை தொடரில் பேட்டிங்கில் 144 ரன்களும் பந்து வீச்சில் 11 விக்கெட்டும் பாண்ட்யா வீழ்த்தியுள்ளார்.
    • இவருடன் சேர்ந்து முதல் இடத்தை இலங்கை வீரர் வணிந்து ஹசரங்கா பகிர்ந்துள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    இந்த தொடரில் பேட்டிங்கில் 144 ரன்களும் பந்து வீச்சில் 11 விக்கெட்டும் பாண்ட்யா வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் டி20 ஆல் ரவுண்டர் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஹர்திக் பாண்ட்யா பெற்றுள்ளார்.

    இவருடன் சேர்ந்து முதல் இடத்தை இலங்கை வீரர் வணிந்து ஹசரங்கா பகிர்ந்துள்ளார். இருவரும் 222 புள்ளிகளுடன் உள்ளனர். 3-வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டோய்னிஸ் உள்ளார். 4, 5 இடங்கள் முறையே சிக்கந்தர் ராசா, சகிப் அல் ஹசன் ஆகியோர் உள்ளனர்.

    இந்திய அணியின் மற்றொரு ஆல் ரவுண்டரான அக்சர் படேல் 7 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தை பிடித்து அசத்தி உள்ளார்.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு என்ன நடந்தது என்பதை ஜீரணிக்க கடினமாக உள்ளது.
    • நான் எப்படி உணர்கிறேன் என்பதை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

    நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க மோதின. இதில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

    இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில், அந்த ஓவரின் முதல் பந்திலேயே சிக்சர் அடிக்கும் முயற்சியில் டேவிட் மில்லர் பவுண்டரி எல்லையில் சூர்யகுமார் யாதவின் அபாராமான கேட்ச்சின் மூலம் விக்கெட்டை இழந்தார். அந்த கேட்ச் தான் இந்த போட்டியின் முடிவையும் மாற்றியது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

    இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் தோல்வி குறித்து டேவிட் மில்லர் மௌனம் கலைத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இந்த தோல்வி ரொம்ப வலிக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு என்ன நடந்தது என்பதை ஜீரணிக்க கடினமாக உள்ளது. நான் எப்படி உணர்கிறேன் என்பதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. எனக்குத் தெரிந்த ஒன்று, இந்த யூனிட்டைப் பற்றி நான் எவ்வளவு பெருமைப்படுகிறேன் என்பதுதான்.

    இந்த பயணம் நம்பமுடியாத ஒன்றாக இருந்தது, மாதம் முழுவதும் உயர்வும் தாழ்வும் இருந்தது. நாங்கள் வலியை சகித்துக் கொண்டோம். ஆனால் இந்த தோல்வி அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருந்தாலும், நாங்கள் தொடர்ந்து சிறப்பாக எங்களது விளையாட்டை கொடுப்போம்.

    என்று மில்லர் கூறினார்.

    • நான் இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்பினேன்.
    • இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த உலகக்கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட்டின் பதவி காலம் நிறைவு பெற்றது.

    இதையடுத்து இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில் 1992-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை பார்த்து அன்று இரவு முழுவதும் அழுததாக கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அந்த ஒரு போட்டியை பார்த்து நான் இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்பினேன். 1992-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டி எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

    இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. உண்மையில் நான் அன்று இரவு முழுவதும் அழுதேன். அதற்கு முன்னரோ அல்லது அதற்குப் பின்னரோ நான் அப்படி எதற்குமே அழுதது கிடையாது.

    அப்போது எனக்கு 11 வயது. நான் இரவு முழுவதும் அழுதேன். நான் அப்பொழுதுதான் இந்தியாவுக்காக உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்பினேன். 1992-ல் முடிவு செய்து 2011-ம் ஆண்டு நிறைவேற்றினேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • 2024 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.
    • இதன் காரணமாக பாகிஸ்தான் அணி மீது கடுமையான விமர்சங்கள் எழுந்து வருகின்றன.

    அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகி சர்மா தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

    அதேசமயம் இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் என கணிக்கப்பட்ட அணிகளில் ஒன்றான பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி மீதும் அந்த அணி கேப்டன் பாபர் அசாம் மீதும் கடுமையான விமர்சங்கள் எழுந்து வருகின்றன.

    இந்நிலையில் டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் நேபாள் அணி கூட அவர்களது பிளேயிங் லெவனில் பாபர் அசாமை சேர்க்காது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் மாலிக் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எங்கள் அணியின் சிறந்த வீரர் யார்? என கேட்டால், பாபர் அசாம் என்று தான் கூறுவோம். ஆனால் குறிப்பிட்ட வடிவத்தில் நான் முதல் 4-5 அணிகளைப் பற்றி பேசுகிறேன். ஏனெனில் அந்த அணிகளின் விளையாடும் லெவனில் பாபர் அசாம் இடம் இருக்குமா? அதிலும் டி20 வடிவத்தில் ஆஸ்திரேலியா, இந்தியா அல்லது இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் பாபர் அசாம் இருப்பாரா? என்று கேட்டால் என்னுடைய பதில் இல்லை என்பது மட்டும் தான்.

    என்னைக்கேட்டால் டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் நேபாள் அணி கூட அவர்களது பிளேயிங் லெவனில் பாபர் அசாமை சேர்க்காது.

    இவ்வாறு மாலிக் கூறினார்.

    • என்னுடைய வாழ்நாள் முழுவதும் இனிமேல் அந்த பிட்ச் மற்றும் மைதானத்தை மறக்க மாட்டேன்.
    • எனவே அதனுடைய சிறிய பகுதியை எடுத்துச் செல்ல விரும்பினேன்.

    பார்படாஸ்:

    அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று முடிந்த 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 17 ஆண்டுகள் கழித்து டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    இந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் பார்படாஸ் மைதானத்தின் மண்னை ரோகித் சாப்பிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    இந்நிலையில் அந்த பிட்ச்தான் எங்களுக்கு இந்த வெற்றியை கொடுத்தது என இதற்கான காரணம் குறித்து ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அது போன்ற விஷயங்களை என்னால் விவரிக்க முடியாது என்று நினைக்கிறேன். ஏனெனில் அது கதையாக எழுதப்பட்டது கிடையாது. அவை அனைத்தும் உள்ளுணர்வில் இருந்து வருவதாகும். அந்த தருணத்தில் பிட்ச் அருகே சென்று அதை நான் உணர்ந்தேன். ஏனெனில் அந்த பிட்ச்தான் எங்களுக்கு இந்த வெற்றியை கொடுத்தது. அதில் விளையாடி நாங்கள் வென்றோம்.

    என்னுடைய வாழ்நாள் முழுவதும் இனிமேல் அந்த பிட்ச் மற்றும் மைதானத்தை மறக்க மாட்டேன். எனவே அதனுடைய சிறிய பகுதியை எடுத்துச் செல்ல விரும்பினேன். அந்தத் தருணம் மிகவும் ஸ்பெஷலானது. அந்த இடத்தில்தான் எங்களுடைய கனவு நிஜமானது. எனவே அதை கொஞ்சம் நான் வைத்துக் கொள்ள விரும்பினேன். உலகக்கோப்பையை வென்றது உண்மையில் அற்புதமான உணர்வு. அது இன்னும் மூழ்கவில்லை என்று நான் சொல்வேன்.

    என்று ரோகித் கூறினார்.

    • இதுவரை நடந்த டி20 உலகக் கோப்பையை விட 2024 -ம் ஆண்டில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளது.
    • ஒரு டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரு வீரர் அதிக சிக்சர் அடித்தது இந்த உலகக் கோப்பையில் தான்.

    2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் 1- ந் தேதி தொடங்கி ஜூலை 29-ந் தேதி முடிவடைந்தது. இதில் இறுதிபோட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதியது. இந்த பரபரப்பான போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

    இந்த 2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் பல சாதனைகள் படைக்கப்பட்டது. நியூசிலாந்து வீரர் பெர்குசன் 4 ஓவர்களையும் மெய்டன் ஓவர்களாக வீசினார். இந்த உலகக் கோப்பை அதிக பவுண்டரிகள் விளாசப்பட்டது. ஒரு டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரு வீரர் அதிக சிக்சர் அடித்தது இந்த உலகக் கோப்பையில் தான். அதிக சிக்சர் விளாசிய கிறிஸ் கெய்ல் சாதனையை அந்த அணி வீரரான பூரன் முறியடித்தார்.

    அந்த வகையில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் இதுவரை இல்லாத அளவாக 44 மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளன. 2007-ல் தொடங்கப்பட்ட டி20 உலக கோப்பை தொடர் முதல், 2024 ஆண்டு வரை 152 மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளன.

    2024-ம் ஆண்டு அதிகபட்சமாக 44 மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக 2012-ம் ஆண்டில் 21 மெய்டன்கள் வீசப்பட்டது. 2009-ம் ஆண்டில் வெறும் 5 மெய்டன்களே வீச்சப்பட்டது.

    ஒவ்வொரு டி20 உலகக் கோப்பை தொடரில் வீசப்பட்ட மெய்டன் ஓவர்கள் விவரம்:-

    15 - 2007

    05 - 2009

    11 - 2010

    21 - 2012

    13 - 2014

    09 - 2016

    17 - 2021

    17 - 2022

    44 - 2024

    • 2023 -ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றால் பச்சை குத்திக்கொள்ள வேண்டும் என்று நான் நினைத்தேன்.
    • ஆனால் அது நடக்கவில்லை. இந்த முறை நாங்கள் அதை செய்து விட்டோம்.

    தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் நான் இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற தேதி மற்றும் டி20 கோப்பையை பச்சைக் குத்தி கொள்ள போகிறேன் என சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் அதை முன்பே திட்டமிட்டு இருந்தேன். 2023 -ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றால் பச்சை குத்திக்கொள்ள வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. இந்த முறை நாங்கள் அதை செய்து விட்டோம். உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு அருமையான தருணம். ஜூன் 29 எனது தங்கையின் பிறந்த நாள் வேறு. நான் தற்போது பச்சைக் குத்திக்கொள்வது அவருக்கும் ஒரு பிறந்த நாள் பரிசாக அமையும். அதோடு இந்த நாள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய நாள் என்றார்.

    உலகக் கோப்பையை வென்றது எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானது. இது நீண்ட காலமாக நினைவில் இருக்கும். இதைப் பற்றி சிந்திக்க எனக்கு சிறிது நேரம் உள்ளது. உலகக் கோப்பையை வென்ற நாளை நான் எனது நெஞ்சில் பச்சைக்குத்திக் கொள்வேன்.

    என்று கூறியுள்ளார்.

    • டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
    • கரீபியன் தீவுகளில் புயல் எச்சரிக்கையின் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி ஜூன் 29-ந் தேதி நடந்தது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கரீபியன் தீவுகளில் புயல் எச்சரிக்கையின் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பெரில் என்ற புயல் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு பார்படாஸைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயலின் மையம் தெற்கு கடற்கரையிலிருந்து சுமார் 80 மைல் தொலைவில் உள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தியா தற்போது ஹில்டன் ஹோட்டலில் தங்கியுள்ளது.

    நிலைமை சரியானதும் இந்திய அணி தனி விமானம் மூலம் நாடு திரும்புவார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னதாகவே புறப்பட்டது சென்றது குறிப்பிடத்தக்கது.

    • ரோகித் தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது.
    • இதனை தொடர்ந்து கோலி, ரோகித், ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ளனர்.

    டி20 உலகக் கோப்பை 17 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி வென்றுள்ளது. டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அந்த தொடரில் தோல்வியே இல்லாமல் கோப்பை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.

    இந்நிலையில் ஐசிசி-யின் அனைத்து கோப்பைகளையும் வெல்ல வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணி எல்லா ஐசிசி கோப்பைகளையும் வெல்ல வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அடுத்த இலக்கு சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தான்.

    மேலும் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட மூத்த வீரர்கள் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவார்கள்.

    இவ்வாறு ஜெய் ஷா கூறினார்.

    ×