என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மக்களவை தேர்தல்"
- தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குகள் பதிவு.
- அ.தி.மு.க. சார்பில் புகார் எழுப்பப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.
நாடு முழுக்க 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் உள்ள 102 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
இந்த நிலையில், தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போடப்பட்டதாக அ.தி.மு.க. சார்பில் புகார் எழுப்பப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது. ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போட்டதாக அ.தி.மு.க.வினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையடுத்து வாக்குச்சாவடி மையத்தில் அ.தி.மு.க.வினர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கள்ள ஓட்டு போடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால், பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தற்போது வரை சீல் வைக்கப்படவில்லை. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தென் சென்னை அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் தலைமையில் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- சூறையாடுதல் மற்றும் பொய்களை பா.ஜனதா கடந்த 10 ஆண்டுகளாக உருவாக்கியுள்ளது.
- இந்த பிரபஞ்சத்தில் பா.ஜனதா மிகப்பெரிய பொய்யர்.
இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள பகுதிகளில் உள்ள 8 தொகுதிகளில் நடைபெற்றது. அந்த இடங்களில் பிரசாரம் மேற்கொண்டபோது பா.ஜனதா பொய்களை அள்ளி வீசியது என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-
சூறையாடுதல் மற்றும் பொய்களை பா.ஜனதா கடந்த 10 ஆண்டுகளாக உருவாக்கியுள்ளது. பா.ஜனதா கட்சியை போன்று அதிக அளவில் பொய் சொல்ல வேறு கட்சிகள் இல்லை. இந்த பிரபஞ்சத்தில் பா.ஜனதா மிகப்பெரிய பொய்யர்.
மேற்கு திசையில் இருந்து வீசிக் கொண்டிருக்கும் காற்று இந்த முறை பா.ஜனதாவை முற்றிலும் அகற்றிவிடுவது போல் உணர்த்துகிறது. இது பா.ஜனதாவின் முதல் நாளின் முதல் ஷோ பிளாப் போன்று உள்ளது.
பா.ஜனதா திரும்ப திரும்ப சொல்லுவதை பொதுமக்கள் யாரும் கேட்க விரும்பவில்லை. தற்போது வரை அவர்கள் புனைந்துள்ள கதை, யாரும் கேட்க விரும்பாத வகையில் உள்ளது.
இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தின் 39 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
- மாலை 6 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
சென்னை:
தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டனர்.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் சற்று மந்தம் ஏற்பட்டது. அதன்பின் வாக்குப்பதிவு செய்ய மக்கள் அதிக அளவில் திரண்டனர்.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதையடுத்து, வாக்குப்பதிவி இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டன. அவை பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
- 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
- தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20 சதவீதம் வாக்குகள் பதிவு.
புதுடெல்லி:
மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் 21 மாநிலங்களில் இதுவரை பதிவாகியுள்ள வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 21 தொகுதிகளில் 9 மணி நிலவரப்படி 9.7 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 24.5 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி 39.9 சதவீதம், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 49.9 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், மாலை 5 மணிக்கு 59.70 சதவீத வாக்குகள் பதிவாகின.
உத்தரகாண்டில் 53.56 சதவீதமும், உத்தரப் பிரதேசத்தில் 57.54 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 63.25 சதவீதமும், மகாராஷ்டிராவில் 54.85 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
- நாமக்கல்லில் 67.37 சதவீத வாக்குகளும், கள்ளக்குறிச்சியில் 67.23 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
- சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள மாவட்டங்களில் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளனர்.
காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நீன்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் சற்று மந்தம் ஏற்பட்டது.
அதன்பின் வாக்குப்பதிவு செய்ய மக்கள் அதிக அளவில் திரண்ட வண்ணம் உள்ளனர். மதியம் 5 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 63.20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 67.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நாமக்கல்லில் 67.23 சதவீத வாக்குகளும், கள்ளக்குறிச்சியில் 57.34 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
4. ஆரணி- 67.34
5. கரூர் - 66.91
6. பெரம்பலூர்- 66.56
7. சேலம்- 65.86
8. சிதம்பரம்- 66.64
9. விழுப்புரம்- 64.83
10. ஈரோடு- 64.50
11. அரக்கோணம்- 65.61
12. திருவண்ணாமலை- 65.91
13. விருதுநகர்- 63.85
14. திண்டுக்கல்- 64.34
15. கிருஷ்ணகிரி- 64.65
16. வேலூர்- 65.12
17. பொள்ளாச்சி- 63.53
18. நாகப்பட்டினம்- 64.21
19. தேனி- 63.41
20. நீலகிரி- 63.88
21. கடலூர்- 64.10
22. தஞ்சாவூர்- 63.00
23. மயிலாடுதுறை- 63.77
24. சிவகங்கை- 62.50
25. தென்காசி- 63.10
26. ராமநாதபுரம்- 63.02
27. கன்னியாகுமரி- 62.82
28. திருப்பூர்- 61.43
29. திருச்சி- 62.30
30. தூத்துக்குடி- 63.03
31. கோவை- 61.45
32. காஞ்சிபுரம்- 61.74
33. திருவள்ளூர்- 61.59
34. திருநெல்வேலி- 61.29
35. மதுரை- 60.00
36. ஸ்ரீபெரும்புதூர்- 59.82
37. சென்னை வடக்கு- 59.16
38. சென்னை தெற்கு- 57.30
39. சென்னை மத்தி- 57.25
- டுவிட்டரில் #Vote4INDIA எனப் பதிவிட்டதால் விமர்சனம்.
- தேசத்தின் வளர்ச்சியை பாஜக நம்புவதால்தான் இந்தியாவுக்கு வாக்களியுங்கள் என்று சொல்கிறோம்- குஷ்பு
பா.ஜனதா கட்சியை சேர்ந்த குஷ்பு இன்று காலை தனது குடும்பத்துடன் வந்து வாக்கு செலுத்தினார். பின்னர். வாக்கு செலுத்திவிட்டேன் என விரலை காண்பிக்கும் போட்டோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அத்துடன் #Vote4INDIA #VoteFor400Paar ஆகிய ஹேஸ்டேக்குகளை பதிவிட்டிருந்தார்.
பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அந்த கூட்டணி இந்தியா (INDIA Alliance) எனப் பெயர் வைத்துள்ளது. இதனால் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் பேசும்போது இந்தியா என்று அழைக்கமாட்டார். இண்டிக் (Indic) என அழைப்பார்.
இந்த நிலையில் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க கூறியதற்கு நன்றி என காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் தெரிவித்திருந்தார். மேலும், முதல்கட்ட வாக்குப்பதியின் போது குஷ்பு தனது பக்கத்தை மாற்றுக்கொண்டார். உண்மையான பச்சொந்தி என விமர்சனம் செய்யப்பட்டது. மேலும், விமர்சனங்களுடன் டிரோல் செய்யப்பட்டுள்ளது.
Why make a fool of yourself? We say Vote for India because we #BJP believe in growth of the nation. It's new to you because CONgress believes in growth of a family. And do read #Votefor400Paar and #ModiKaParivaar Or you suffer from selective blindness?? https://t.co/73vzBLfDNi
— KhushbuSundar (Modi ka Parivaar) (@khushsundar) April 19, 2024
இந்த நிலையில் குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். அதில் "ஏன் உங்களை முட்டாளாக்கிக் கொள்ள வேண்டும்?. தேசத்தின் வளர்ச்சியை பாஜக நம்புவதால்தான் இந்தியாவுக்கு வாக்களியுங்கள் என்று சொல்கிறோம். காங்கிரஸ் குடும்ப வளர்ச்சியில் நம்பிக்கை வைப்பதால் இது உங்களுக்குப் புதிது. #Votefor400Paar மற்றும் #ModiKaParivaar ஆகியவற்றைப் படிக்கிறீர்களா அல்லது நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட குருட்டுத்தன்மையால் பாதிக்கப்படுகிறீர்களா?" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- 21 மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.
- வாக்குப்பதிவு முடிந்ததை தொடர்ந்து வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் தொடங்கின.
இம்பால்:
நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.
21 மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, 21 தொகுதிகளில் 9 மணி நிலவரப்படி 9.7 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 24.5 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி 39.9 சதவீதமும், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 49.9 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
கொங்மேன் மண்டலத்தில் உள்ள 5 தொங்ஜு வாக்குச்சாவடியில் முறைகேடு நடப்பதாக பெண்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் வாக்குச்சாவடியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதால், தேர்தல் அதிகாரி உடனே வாக்குப்பதிவை நிறுத்தினார். கிழக்கு இம்பாலில் 2 வாக்குச்சாவடியும், மேற்கு இம்பாலில் 3 வாக்குச்சாவடியும் என மொத்தம் 5 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், மணிப்பூரில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதையடுத்து வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் தொடங்கின. பிற்பகல் 3 மணி அவரை அங்கு 63 சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மணிப்பூரில் காலை 7 மணி முதல் 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி 67.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சில இடங்களில் துப்பாக்கிச்சூடும், மிரட்டல் சம்பவமும் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
60 சட்டமன்ற இடங்களில் 32 இடங்களை கொண்ட இன்னர் மணிப்பூர் என அழைக்கப்படும் இடத்தில் 71.01 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அவுட்டர் மணிப்பூர் பகுதியான 28 சட்டமன்ற இடங்களில் 15-ல் 61.12 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
நாகா மற்றும் குகி மக்கள் வசித்து வரும் சண்டேல் பகுதியில் 85.54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
- 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
- தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீதம் வாக்குகள் பதிவு.
புதுடெல்லி:
மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் 21 மாநிலங்களில் இதுவரை பதிவாகியுள்ள வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 21 தொகுதிகளில் 9 மணி நிலவரப்படி 9.7 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 24.5 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி 39.9 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 49.9 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
உத்தரகாண்டில் 45.62 சதவீதமும், உத்தரப் பிரதேசத்தில் 47.44 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 53.40 சதவீதமும், மகாராஷ்டிராவில் 44.12 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
- நாமக்கல்லில் 57.67 சதவீத வாக்குகளும், கள்ளக்குறிச்சியில் 57.34 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
- சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள மாவட்டங்களில் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளனர்.
காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நீன்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் சற்று மந்தம் ஏற்பட்டது.
அதன்பின் வாக்குப்பதிவு செய்ய மக்கள் அதிக அளவில் திரண்ட வண்ணம் உள்ளனர். மதியம் 3 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 51.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 57.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நாமக்கல்லில் 57.67 சதவீத வாக்குகளும், கள்ளக்குறிச்சியில் 57.34 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
4. ஆரணி- 56.73
5. கரூர் - 56.65
6. பெரம்பலூர்- 56.34
7. சேலம்- 55.53
8. சிதம்பரம்- 55.2
9. விழுப்புரம்- 54.43
10. ஈரோடு- 54.13
11. அரக்கோணம்- 53.83
12. திருவண்ணாமலை- 53.72
13. விருதுநகர்- 53.45
14. திண்டுக்கல்- 53.43
15. கிருஷ்ணகிரி- 53.37
16. வேலூர்- 53.17
17. பொள்ளாச்சி- 53.14
18. நாகப்பட்டினம்- 52.72
19. தேனி- 52.52
20. நீலகிரி- 52.49
21. கடலூர்- 52.13
22. தஞ்சாவூர்- 52.02
23. மயிலாடுதுறை- 52.00
24. சிவகங்கை- 51.79
25. தென்காசி- 51.45
26. ராமநாதபுரம்- 51.16
27. கன்னியாகுமரி- 51.12
28. திருப்பூர்- 51.07
29. திருச்சி- 50.71
30. தூத்துக்குடி- 50.41
31. கோவை- 50.33
32. காஞ்சிபுரம்- 49.94
33. திருவள்ளூர்- 49.82
34. திருநெல்வேலி- 48.58
35. மதுரை- 47.38
36. ஸ்ரீபெரும்புதூர்- 45.96
37. சென்னை வடக்கு- 44.84
38. சென்னை தெற்கு- 42.10
39. சென்னை மத்தி- 41.47
- கிழக்கு இம்பால் மற்றும் மேற்கு இம்பாலில் தேர்தல் நடைபெற்று வருகிறது.
- பெண்கள் அமளியில் ஈடுபட்டதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூரில் கிழக்கு இம்பால், மேற்கு இம்பால் ஆகிய இரண்டு மக்களவை தேர்தலில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்றது வந்தது.
இந்த நிலையில் கொங்மேன் மண்டலத்தில் உள்ள 5 தொங்ஜு வாக்குச்சாவடியில் முறைகேடு நடப்பதாக பெண்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் வாக்குச்சாவடியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. அதிகாரிகள் வைத்திருந்த பேப்பர்கள் தூக்கி வீசப்பட்டன். நிலைமை மோசம் அடைந்ததை தொடர்ந்து தேர்தல் அதிகாரி, உடனடியாக வாக்குப்பதிவை நிறுத்தினார்.
இதேபோன்று கிழக்கு இம்பாலில் இரண்டு வாக்குச்சாவடிகள், மேற்கு இம்பாலில் 3 வாக்குச்சாவடிகள் என மொத்தம் ஐந்து வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூரில் 11 மணி நிலவரப்படி 28.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சில இடங்களில் உள்ளூர் மக்களுக்கும் அடையாளம் தெரியாத சமூக விரோதிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
- தமிழகத்தில் 9 மணி நிலவரப்படி 12.55 சதவீதம் வாக்குகள் பதிவு.
- வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 21 மாநிலங்களில் இதுவரை பதிவாகியுள்ள வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
இந்நிலையில், வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் 9 மணி நிலவரப்படி 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து, காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 23.72 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதிகபட்சமாக, சேலத்தில் 46.89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதற்கிடையே, சென்னையில் வழக்கம்போல் வாக்குப்பதிவு மந்தமாக பதிவாகியுள்ளது. ஒரு மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதத்தில் சென்னை தொகுதிகள் கடைசி 3 இடங்களை பிடித்துள்ளது.
இதில், மத்திய சென்னை 32.31 சதவீதமும், தென் சென்னை 33.93 சதவீதமும், வட சென்னை 35.09 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.
- 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
- தமிழகத்தில் 11 மணி நிலவரப்படி 39.51 சதவீதம் வாக்குகள் பதிவு.
புதுடெல்லி:
மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் 21 மாநிலங்களில் இதுவரை பதிவாகியுள்ள வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 21 தொகுதிகளில் 9 மணி நிலவரப்படி 9.7 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 24.5 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 39.9 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
உத்தரகாண்டில் 37.33 சதவீதமும், உத்தரப் பிரதேசத்தில் 37 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 44.43 சதவீதமும், மகாராஷ்டிராவில் 32.36 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்