search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்களவை தேர்தல்"

    • நாடு முழுவதும் இன்று 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.
    • ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது!

    மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பிரதமர் மோடி அனைவரும் வாக்களிக்க வருமாறு குடிமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது! 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
    • தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது.

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் இன்று (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    அதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, அசாம், மேற்கு வங்கம், பீகார், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கியது.

    தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    இந்நிலையில், தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது. அது இன்று மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது.

    வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார், பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்ளை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது.
    • தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் இன்று (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.

    அதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, அசாம், மேற்கு வங்கம், பீகார், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கியது.

    அதன்படி, வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், பொது மக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.

    தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    • நாடு முழுவதும் இன்று 21 மாநிலங்களில் உள்பட்ட 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு.
    • அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஒன்றை எடுத்துச் செல்லலாம்.

    வாக்காளர்கள் ஓட்டுப்போட செல்லும்போது வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்.

    அவ்வாறு இல்லாதவர்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஒன்றை எடுத்துச் செல்லலாம். அதன் விவரம் வருமாறு:-

    1. ஆதார் அட்டை

    2. பான் அட்டை

    3. மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை

    4. வங்கி மற்றும் தபால் நிலையங்களில் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய புத்தகம்.

    5. தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை.

    6. ஓட்டுனர் உரிமம்.

    7. பாஸ்போர்ட்

    8. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை.

    9. மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்துக்கான அட்டை.

    10. மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை.

    • வாக்குப்பதிவு நாளான நாளை சாதாரண நகர சேவைகளில் இலவச பயணச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • தங்கள் இருப்பிடத்தில் இருந்து வாக்குச்சாவடி உள்ள இடத்திற்கு வாகன வசதி இல்லை என்றால் 1950 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    மூத்த குடிமக்கள், கண்பார்வை, உடலியக்க குறைபாடு உள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் நாளன்று பொது போக்குவரத்தை பயன்படுத்த இலவச பயணச்சீட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உடலியக்க குறைபாடு உள்ளவர்கள் மற்றும் பலவீனமான உடலியக்கம் உள்ள வாக்காளர்களுக்கு இலவச பயணச்சீட்டு. வாக்குப்பதிவு நாளான நாளை சாதாரண நகர சேவைகளில் இலவச பயணச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தங்கள் இருப்பிடத்தில் இருந்து வாக்குச்சாவடி உள்ள இடத்திற்கு வாகன வசதி இல்லை என்றால் 1950 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணை அழைத்தால் தேர்தல் ஆணையம் வாக்களிக்க வாகனங்கள் ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கேரளாவில் இந்தியா கூட்டணி 20 இடங்களில் வெற்றி பெறும் என நம்புகிறேன்.
    • இந்த முறை பா.ஜனதா போட்டியிடும் இடங்களில் டெபாசிட் கூட வாங்காது என நினைக்கிறேன்.

    மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது. பா.ஜனதா கூட்டணி இந்த தேர்தலில் 400 இடங்கள் என்ற இலக்குடன் களம் இறங்கியுள்ளது. தனியாக 370 இடங்கள் என பா.ஜனதா இலக்கு நிர்ணயித்துள்ளது.

    பா.ஜனதா இந்த இலக்கை எட்ட வேண்டுமென்றால் தென்இந்தியாவில் அதிகப்படியான இடங்களை பிடித்தாக வேண்டும். தென்இந்தியாவில் கர்நாடாகாவை தவிர மற்ற மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் பா.ஜனதா சாதித்தது கிடையாது.

    இந்த முறை தமிழகம் மற்றும் கேரளாவில் கால் பதிக்க தீவிரம் காட்டி வருகிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும் பிரதமர் மோடி அதிக அளவில் பிரசாரம் மேற்கொண்டார். அடிக்கடி இரண்டு மாநிலங்களுக்கும் வருகை தந்து ரோடு ஷோ நடத்தியதுடன் பொதுக்கூட்டத்திலும் பேசி வாக்கு சேகரித்தார்.

    இந்த நிலையில் தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தென் இந்தியாவில் (தமிழ்நாடு-39, கேரளா-20, கர்நாடகா-28, ஆந்திரா-25, தெலுங்கானா-17) உள்ள 130 இடங்களில் பா.ஜனதா எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்பதை கணித்துள்ளார்.

    இது தொடர்பாக ரேவந்த் ரெட்டி கூறுகையில் "தென்இந்தியாவில் சுமார் 130 தொகுதிகள் உள்ளன. பா.ஜனதா கஷ்டப்பட்டு 12 முதல் 15 இடங்களை கைப்பற்றப் போகிறது. மற்ற அனைத்து இடங்களும் இந்தியா கூட்டணிக்கு செல்லும்.

    கேரளாவில் இந்தியா கூட்டணி 20 இடங்களில் வெற்றி பெறும் என நம்புகிறேன். இந்த முறை பா.ஜனதா போட்டியிடும் இடங்களில் டெபாசிட் கூட வாங்காது என நினைக்கிறேன். தெலுங்கானாவில் இந்தியா கூட்டணி 17 இடங்களில் 14-ல் வெற்றி பெறும்.

    2023 சட்டமன்ற தேர்தலின்போது சந்திரசேகர ராவ் என்ன செய்தாரோ? அதேபோன்று பா.ஜனதா தற்போது பிரசாரம் மேற்கொள்கிறது. சந்திரசேகர ராவ் 100 இடங்களில் வெற்றி பெறுவோம் என்றார். ஆனால் அவருக்கு கிடைத்தது 39 இடங்களே. அதேபோன்று தற்போது பா.ஜனதா செய்து மக்களை குழப்ப முயற்சி செய்து வருகிறது. ஆனால் வாக்காளர்கள் பா.ஜனதாவுக்கு பாடம் புகட்டுவார்கள்" என்றார்.

    பா.ஜனதாவுக்கு கடந்த தேர்தலில் புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. தெலுங்கானாவில் 4 இடங்களில் வெற்றி பெற்றது. கர்நாடகாவில் 28 இடங்களில் 25-ல் வெற்றி பெற்றது.

    • 2021 சட்டமன்ற தேர்தலின்போது பல்வேறு மீடியாக்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளை மக்கள் புறந்தள்ளிவிட்டு எல்டிஎஃப் கூட்டணிக்கு வாக்களித்தார்கள்.
    • தற்போதைய கணிப்புகள் பணம் கொடுத்து போடப்பட்ட செய்திகள் (paid news) போன்று இருப்பதாக மக்கள் கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர்.

    கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான எல்டிஎஃப் (LDF), காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் (UDF), பா.ஜனதா ஆகியவை போட்டியிடுகின்றன. இடதுசாரி கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. பல மீடியாக்கள் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முன்னணி வகிப்பதாக தெரிவித்துள்ளன.

    இந்த கருத்துக் கணிப்புகளை அம்மாநில முதல்வர் பினராயி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பினராயி விஜயன் கூறுகையில் "நம்பகத்தன்மையின்மை அல்லது ஒருதலை பட்சம் ஆகியவற்றின் காரணமாக சில குறிப்பிட்ட செய்திகள் பணம் கொடுத்து போடப்பட்ட செய்திகள் (Paid News) என முத்திரை குத்தப்படுகின்றன. அதே அடிப்படையில் சில கணிப்புகள் பரப்பப்பட்டு வருகின்றன.

    2021 சட்டமன்ற தேர்தலின்போது பல்வேறு மீடியாக்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளை மக்கள் புறந்தள்ளிவிட்டு எல்டிஎஃப் கூட்டணிக்கு வாக்களித்தார்கள். தற்போதைய கணிப்புகள் பணம் கொடுத்து போடப்பட்ட செய்திகள் போன்று இருப்பதாக மக்கள் கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர்.

    கணக்கெடுப்பு நடத்தும் முறை, தகவல் சேகரிப்பில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை, முடிவு எப்படி கணிக்கப்படுகிறது போன்ற தகவல்களை வெளியிடாமல் தேர்தலுக்கு முந்தைய கணக்கெடுப்பு முடிவுகள் வெளியாகின்றன. அவற்றின் உண்மைத் தன்மை மக்களுக்குத் தெரியாது. சில ஏஜென்சிகளால் ஆதரிக்கப்படும் இந்த புள்ளிவிவரங்கள் மக்களை தவறாக வழிநடத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளன.

    கேரள மக்கள் தங்கள் அரசியல் கருத்துகளை உருவாக்க போலியான செய்திகளையோ அல்லது போலியான கணக்கெடுப்பு அறிக்கைகளையோ நம்பியிருக்கமாட்டார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

    கேரளாவில் மொத்தம் 20 மக்களவை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு வருகிற 26-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    • 2019 தேர்தல் பா.ஜனதா 25 இடங்களில் வெற்றி பெற்றது.
    • தற்போது காங்கிரஸ் கர்நாடகா மாநில ஆளுங்கட்சியாக உள்ளது.

    இந்தியாவின் தென் மாநிலங்களில் கடந்த 2019 தேர்தலில் பா.ஜனதா மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 25 இடங்களில் வெற்றி பெற்றது. அதன்பின் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா ஆட்சியை இழந்தது.

    சட்டமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை போன்று மக்களவை தேர்தலில் வெற்றி பெற அம்மாநில முதல்வர் சித்தராமையா தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த முறை பா.ஜனதா தனித்து போட்டியிட்டது. காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இரண்டு கட்சிகளும் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றன.

    இந்த முறை மதசார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதா உடன் கூட்டணி வைத்துள்ளது. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்காளர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என சித்தராமையான தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சித்தராமையா கூறுகையில் "கர்நாடகா மாநிலத்தில் வாக்களார்களிடம் நல்ல வரவேற்று உள்ளது. ஆனால் நாட்டின் மற்ற பகுதிகளை பற்றி எனக்குத் தெரியாது. கர்நாடகா மாநிலத்தை பொருத்தவரை நாங்கள் 20 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்.

    தற்போது வழங்கப்பட்டு வரும் உத்தரவாத திட்டங்கள், அடுத்த முறை ஆட்சி அமைத்தால் எந்த காரணத்திற்காகவும் நிறுத்தப்படாது. உத்தரவாத திட்டங்கள் தொடரும். அதற்காக பட்ஜெட்டில் 52 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது." என்றார்.

    கர்நாடகா மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு வருகிற 26-ந்தேதியும், 2-வது கட்ட வாக்குப்பதிவு மே 7-ந்தேதியும் நடக்கிறது.

    • பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    • ரூ.1,083 கோடி மதிப்பிலான நகை மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது, தமிழகத்தில் தேர்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கம் அளித்தார்.

    அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் நாளை நடைபெறவுள்ள வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டில் 6.3 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 3,32,000 தேர்தல் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.

    950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 874 ஆண் வேட்பாளர்கள், 76 பெண் வேட்பாளர்கள் உள்ளனர். 39 பொது பார்வையாளர்கள், 58 செலவின பார்வையாளர்கள் பணியில் உள்ளனர்.

    18- 19 வயதுடைய வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர் உள்ளனர். 190 கம்பெனி துணை ராணுவ படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    15 கம்பெனி துணை ராணுவத்தினர் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.

    பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    சி-விஜில் செயலி மூலம் இதுவரை 4,861 புகார்கள் பெறப்பட்டுள்ளன. ரூ.173.58 கோடி பணம், ரூ.6.67 கோடி மதிப்புள்ள மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    ரூ.1,083 கோடி மதிப்பிலான நகை மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    வாக்காளர் அட்டை இல்லை என்றாலும் கூடுதலாக 12 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம். சுமார் ஒரு லட்சம் மாநில போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    44,801 வாக்குப்பதிவு மையங்களில் வெட் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் நடப்பவை அனைத்தும் கண்காணிக்கப்படும்.

    மாற்று திறனாளிகள் வாக்களிக்க வாக்குச்சாவடிகளில் சாய்வுதளம், சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளன. இ.வி.எம்., விவிபேட் செயல்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் தெளிவாக விளக்கி உள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கேரளம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் தேர்தல்.
    • உடனடியாக அதை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    இதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக நாளை முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் நடைபெறுகிறது

    இந்நிலையில், கேரள மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் இன்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், ஒரு முறை பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக எதிர்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    4 இயந்திரங்களில் இந்த கோளறு கண்டறியப்பட்டுள்ளதாகவும், மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள காங்கிரஸின் கைச்சின்னம் மற்றதைவிட சிறியதாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    உடனடியாக அதை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து நேற்று 2,899 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து பயணம் செய்ய இதுவரை 46,503 பேர் முன்பதிவு.

    பாராளுமன்ற தேர்தல் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    வாக்குப்பதிவு முன்னிட்டு நாளை பொது அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சனி, ஞாயிறு என மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், வாக்கு அளிப்பதற்காக சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு நேற்று முதலே படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

    இந்நிலையில், மக்களவை தேர்தலை ஒட்டி போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

    சென்னையில் இருந்து ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.

    பொது மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சென்னையில் இருந்து நேற்று 2,899 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

    மேலும், சென்னையிலிருந்து பயணம் செய்ய இதுவரை 46,503 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    • தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டி.
    • தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    இதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக நாளை முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    அதன்படி, தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது.

    வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார், பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்ளை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×