search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்களவை தேர்தல்"

    • ஜார்கண்ட் காங்கிரஸ் தலைவர் முன்னிலையில் ஜெய்பிரகாஷ் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்
    • இந்தியா கூட்டணியை வலுப்படுத்தவே நான் காங்கிரஸ் கட்சியில் இணைத்துள்ளேன் என்று அவர் தெரிவித்தார்

    ஜார்க்கண்ட் மாநில பாஜக எம்.எல்.ஏ. ஜெய்பிரகாஷ் பாய் படேல், பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

    ஜார்கண்ட் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாக்கூர் , ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கிர் ஆலம் ஆகியோர் முன்னிலையில் ஜெய்பிரகாஷ் பாய் படேல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "எனக்கு எனது பதவியை பற்றி கவலையில்லை. ஜார்க்கண்டை பாதுகாக்க வேண்டும். அதனால் தான் இந்தியா கூட்டணியை வலுப்படுத்த நான் காங்கிரஸ் கட்சியில் இணைத்துள்ளேன்" என்று தெரிவித்தார்.

    வரும் மக்களவை தேர்தலில் ஹசாரிபாக் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் படேல் நிறுத்தப்படலாம் என்று செல்லப்படுகிறது. 

    • அனைத்து மாநில மகளிருக்கும் மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கப்படும்.
    • குடியுரிமைத் திருத்தச் சட்டம்' (CAA-2019) ரத்து செய்யப்படும்.

    திமுக மக்களை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. இதில் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் உள்ள மக்களின் பேராதரவுடன் மத்தியத்தில் 'இந்தியா' கூட்டணி அரசு நிறுவப்பட்டபின் நிறைவேற்றப்படவுள்ள திட்டங்கள் என தலைப்பில் கீழ்கண்ட தகவல்களை வெளியிட்டுள்ளது.

    1. இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளில், வங்கிகளில் பெற்றிருக்கும் கடனும் வட்டியும் மத்திய அரசால் தள்ளுபடி செய்யப்படும்.

    3. அனைத்து மாநில மகளிருக்கும் மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கப்படும்.

    4. மாநில முதலமைச்சர்களை கொண்ட மாநில வளர்ச்சிக்குழு அமைக்கப்படும்.

    5. பா.ஜ.க அரசால்கலைக்கப்பட்ட மத்திய திட்டக்குழு மீண்டும் அமைக்கப்பட்டு நாடு முழுமையிலும், மாநில அரசுகளின் கோரிக்கையின் அடிப்படையில் திட்டங்கள் வகுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போதுள்ள நிதி ஆயோக் கலைக்கப்படும்.

    6. தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

    7. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.

    8. தொழில் மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் இணைப்புச் சாலைகள் கான்கிரீட் சாலைகளாக விரிவுபடுத்தப்பட்டு, போக்குவரத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும்.

    9. பல்கலைக்கழகங்களில் ஆளுநர்களால் நியமிக்கப்படும் துணைவேந்தர்கள் நியமனத்தை, இனி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கமே மேற்கொள்ளும்வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்.

    10. குடியுரிமைத் திருத்தச் சட்டம்' (CAA-2019) ரத்து செய்யப்படும்.

    11. கல்லூரி மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் ஒரு ஜி.பி. அளவில் கட்டணமற்ற 'இலவச சிம் கார்டு' வழங்கப்படும்.

    12. மாநிலங்களில் உள்ள மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் அந்தந்த மாநிலத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும்.

    13. வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.

    14. மத்திய திட்டக் குழுவைப்போல, மத்திய நிதிக் குழுவும் நிரந்தர குழுவாக அமைக்கப்படும்.

    15. வசூலிக்கப்படும் கூடுதல் வரி செலவிடப்படும் முறை வெளிப்படைத் தன்மையுடன் இருப்பது உறுதி செய்யப்படும்.

    16. கண்காணிப்பு அமைப்புகளின் நியமனங்கள் ஒரு நியமனக் குழுவால் நியமிக்கப்படுவர். இக்குழுவில் 50 சதவிகித உறுப்பினர்கள் பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும்.

    17. அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மத்திய அரசால் நிறுவப்பட்டு, தரமான குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்படும்.

    18. அந்நிய ஆக்கிரமிப்புத் தாவரங்களைக் களையெடுக்க நிதியுதவி செய்ய மத்திய அளவில் நிதியம் ஒன்று உருவாக்கப்படும்.

    20. இந்தியாவில் உள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படும்.

    21. இந்தியாவில் உள்ள முக்கிய புனிதத் தலங்களுக்குப் பயணிகள் வர வசதியாக அந்தந்த ஊர்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி சுற்றுலாத் திட்டம் செயல்படுத்தப்படும்.

    22. இந்தியாவில் ராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell) மொழி ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படும்.

    23. மேல் வரியை (CESS) மாநிலங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப் பரிந்துரைக்கப்படும். மாநில அரசிடமிருந்து பெறப்படும் நிதியில் 42% முதல் 50% வரிப் பங்கீடு மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்க நிதிக் குழுமம் மூலம் பரிந்துரைக்கப்படும்.

    24. பணி ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் மத்திய அரசில் பணியாற்றிய செயலாளர்கள் உள்ளிட்டோர் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகளில் இணைய 2 ஆண்டுகள் காத்திருப்புக் காலமாக அறிவித்து புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்.

    25. இந்தியாவில் வாழும் ஈழத் தமிழர்கள் குடியுரிமை பெற வழிவகுக்கப்படும்.

    26. கச்சத்தீவு மீட்பு: கச்சத்தீவில் இருந்து சுமார் 200 கி.மீ தொலைவில், குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைந்திருப்பதால், இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் மீனவர்களின் நலன் காக்கப்படவும், கச்சத்தீவை மீட்க வழிவகை செய்யப்படும்.

    27. இரண்டாகப் பிரிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும். அந்த மாநில சட்டமன்றத்திற்கு உடனடியாக ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்படும். மேலும், காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்.

    28. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற இந்திய அரசின் திட்டம் கைவிடப்படும். மேலும், மக்களவை தொகுதி உறுப்பினர் எண்ணிக்கையில் தற்போதைய நடைமுறையே (1971 மக்கள் தொகை கணக்கெடுப்பு) பின்தொடர ஆவன செய்யப்படும்.

    29. இந்திய அரசமைப்புச் சட்ட முகப்புரையில் கூறப்பட்டுள்ள மதச்சார்பற்ற தன்மை நிலைநாட்டப்பட பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாமல் கடுமையாகத் தடுக்கப்படும்.

    30. யுபிஎஸ்சி தேர்வு கமிட்டியில் அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் குழு அமைக்கப்படும்.

    31. இந்தியாவில் எமர்ஜென்ஸி காலகட்டத்தில் கல்வி மற்றும் சுகாதாரம் மாநில பட்டியலில் இருந்து, பொதுப் பட்டியலுக்கு (Concurrent List) மாற்றப்பட்டன. அவை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்படும்.

    32 கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த அனைத்து மக்கள் விரோதச் சட்டங்களும் இந்தியா கூட்டணி அரசு பொறுப்பேற்ற உடன் மறுபரிசீலனை செய்யப்படும்.

    33. மாநிலக் கல்வி நிறுவனங்களின் மீது திணிக்கப்படும் மத்திய அரசின் அனைத்துப் பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்படும்.

    34. புதிய தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 முற்றிலும் அகற்றப்படும்.

    35. நிதிக்குழுவின் அமைப்பு, ஆய்வு விதிகள் ஆகியன மாநிலங்களுக்கான மன்றத்தில் மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்படும்.

    36. FRBM Act - நிதியியல் பொறுப்பு -வரவு செலவு மேலாண்மை சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய நிபந்தனைகளை நிராகரிக்க வழிவகை செய்யப்படும்.

    37. நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் 33% மகளிர் இட ஒதுக்கீடு உடனடியாகச் செயல்படுத்தப்படும்.

    38. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் சமூக நீதி அடிப்படையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யப்படும்.

    39. வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இளம்பெண்கள்/இளைஞர்களுக்குத் தேவையான திறன் மேம்பாடு, மொழி அறிவு, உள்ளூர்ப் பிரச்சனைகளைச் சமாளிக்கும் வழிகாட்டல் ஆகியவற்றை மத்திய அரசே அளிக்கும். நாடு திரும்பும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்குத் தேவையான கடனுதவிகள் அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.

    40. MSME-க்கான வருமான வரிச் சட்டம் 43(h) பிரிவு நீக்கப்படும்.

    41. மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு நிதி இரட்டிப்பாக்கப்படும்.

    42. பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து அரசாங்கம் பங்குகளை விலக்கிக் கொள்வது முற்றிலுமாக நிறுத்தப்படும்.

    43. மாணவ- மாணவிகள் நலன் கருதி இந்தியா முழுவதும் நான் முதல்வன்- புதுமைப் பெண் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்.

    44. தேசிய அளவில் ஆன்லைன் சூதாட்டத் தடைச்சட்டம் கொண்டுவரப்படும்.

    45. அதிக மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு திட்டம் உருவாக்கப்படும்.

    46. தமிழ்நாட்டில் மத்தியப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும்.

    47. பெட்ரோல் ரூபாய் 75 க்கும் - டீசல் ரூபாய் 65 க்கும்- கேஸ் ரூபாய் 500 க்கும் வழங்கப்படும்.

    • சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
    • சமூக ஊடகங்கள் வாயிலாக 4 ஆயிரத்துக்கும் மேலான பரிந்துரைகள்.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது.

    இதில் தி.மு.க. செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட 11 பேர் இடம் பெற்றிருந்தனர்.

    இந்த குழுவினர் பிப்ரவரி 5-ந்தேதி முதல் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

    இதில் எழுத்துப்பூர்வமாக மனுக்கள் வாங்கியதுடன் தொலைபேசி வாயிலாகவும், சமூக ஊடகங்கள் வழியாகவும் ஆன்லைன் மூலமாகவும் கோரிக்கைகள் பெறப்பட்டிருந்தது.

    அதில் தொலைபேசி வாயிலாக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள், 2,500-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள், சமூக ஊடகங்கள் வாயிலாக 4 ஆயிரத்துக்கும் மேலான பரிந்துரைகள் பெறப்பட்டிருந்தது.

    அண்ணா அறிவாலயத்திற்கு 600-க்கும் மேற்பட்ட கடிதங்களும் பரிந்துரையாக வந்திருந்தது. 40 தொகுதிகளுக்கும் சென்று மக்களின் எதிர்பார்ப்புகளை கேட்டறிந்து வந்துள்ளனர்.

    இதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கனிமொழி தலைமையிலான குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

    இந்நிலையில், தி.மு.க. தேர்தல் அறிக்கை இப்போது இறுதி செய்யப்பட்டுள்ளததை தொடர்ந்து, தேர்தல் அறிக்கை நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • வேட்புமனு தாக்கல் செய்ய இந்த மாதம் 27-ந் தேதி கடைசி நாளாகும்.
    • வேட்பு மனு மீதான பரிசீலனை மார்ச் 28-ந் தேதி நடைபெறுகிறது.

    தமிழகம்-புதுச்சேரியில் பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடை பெறுகிறது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நாளை (புதன் கிழமை) தொடங்குகிறது.

    வேட்புமனு தாக்கல் செய்ய இந்த மாதம் 27-ந் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை மார்ச் 28-ந் தேதி நடைபெறுவதுடன், மனுக்களைத் திரும்பப் பெற மார்ச் 30-ந் தேதி கடைசி நாளாகும்.

    தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யும் போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவதாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.

    அதன்படி, வேட்பு மனுக்களானது காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பெறப்படும்.

    மனுத்தாக்கலின் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீ-க்குள் 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

    மனுத்தாக்கல் நடைபெறும் நாட்களில் மாலை 3 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் அலுவலக வளாகத்தில் ஒருவருக்கும் அனுமதியில்லை.

    • மக்களை சந்திக்க பா.ஜனதாவுக்கு பதற்றமாக உள்ளதா?. எதிர்க்கட்சிகளை குறிவைக்க தற்போது தேர்தல் ஆணையம் பக்கம் திரும்பியுள்ளனரா?.
    • மாநில அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள். கேட்டால் சுதந்திரமான, நியாயமான தேர்தல் என்கிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் பல வருடங்கள் வேலை பார்த்து வரும் அதிகாரிகள் தேர்தலையொட்டி மாற்றப்படுவார்கள்.

    இந்திய தேர்தல் ஆணையம் நேற்று ஆறு மாநில உள்துறை செயலாளர்களை மாற்ற உத்தரவிட்டுள்ளது. அத்துடன் மேற்கு வங்காள மாநில டிஜிபி ராஜீவ் குமாரையும் மாற்ற உத்தரவிட்டுள்ளது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தெரிக் ஓ'பிரைன் கூறுகையில் "பா.ஜனதாவின் இழிவான யுக்திகள் தேர்தல் ஆணையம் போன்ற நிறுவனங்களை அழிக்கின்றன. மக்களை சந்திக்க பா.ஜனதாவுக்கு பதற்றமாக உள்ளதா?. எதிர்க்கட்சிகளை குறிவைக்க தற்போது தேர்தல் ஆணையம் பக்கம் திரும்பியுள்ளனரா?. தேர்தல் ஆணையமா?. அல்லது எச்.எம்.வி.யா? (ECI or HMV?)

    மாநில அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள். கேட்டால் சுதந்திரமான, நியாயமான தேர்தல் என்கிறார்கள். நாங்கள் 2024 தேர்தல் உச்சநீதிமன்றம் கண்காணிப்பில் நடைபெற வேண்டும் என விரும்புகிறோம்" என்றார்.

    • கரூரில் அண்ணாலை போட்டி, தென்சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் என செய்தி வெளியானது.
    • மொத்தம் 14 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல் வெளியானது செய்தி என வெளியிடப்பட்டிருந்தது.

    தமிழ்நாட்டில் பா.ஜனதா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாமக கட்சியுடன் இன்று தொகுதி உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. அண்ணாமலை மற்றும் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை சவுந்தரராஜன் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

    இந்த நிலையில் பா.ஜனதாவில் தலைமை அலுவலகத்தில் இருந்து தமிழகத்தில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது போல் செய்தி வெளியானது. அந்த செய்தியில் தென்சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், கரூரில் அண்ணாமலை, கன்னியாகுமரியில் விஜயதாரணி போட்டியிடுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    மொத்த 11 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த செய்தி போலியானது. தமிழ்நாட்டில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை என தமிழக பா.ஜனதா விளக்கம் அளித்துள்ளது.

    • மார்ச் 31ம் தேதி வரையிலான முதற்கட்ட பிரசார பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
    • மார்ச் 24ம் தேதி மாலை 4 மணிக்கு திருச்சியில் பிரசாரம் செய்கிறார்.

    7 கட்டங்களாக நடைபெற உள்ள மக்களவை தேர்தல் முதற்கட்டமாகவும், ஒரே கட்டமாகவும் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி அன்று நடைபெறுகிறது.

    பெரும்பாலான கட்சிகள் தங்களின் கூட்டணியை முடிவு செய்துள்ள நிலையில், பிரசாரத்தையும் தொடங்கியுள்ளன.

    இந்நிலையில், அதிமுக வரும் மார்ச் 31ம் தேதி வரையிலான முதற்கட்ட பிரசார பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி, மார்ச் 24ம் தேதி மக்களவை தேர்தல் பிரசாரத்தை அதிமுக பொச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்குகிறார்.

    மார்ச் 24ம் தேதி மாலை 4 மணிக்கு திருச்சியில் பிரசாரம் செய்கிறார்.

    மார்ச் 26ம் தேதி மாலை 4 மணிக்கு தூத்துக்குடியிலும், அன்று இரவு 7 மணிக்கு திருநெல்வேலியிலும் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

    மார்ச் 27ம் தேதி மாலை 4 மணிக்கு கன்னியாகுமரியிலும், இரவு 7 மணிக்கு தென்காசி (தனி), 28ம் தேதி விருதுநகர், ராமநாதபுரத்திலும் பிரசாரம் செய்கிறார்.

    தொடர்ந்து, 29ம் தேதி காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூரிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    • மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது.
    • ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

    இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என நேற்று தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார் அறிவித்தார்.

    அதன்படி, வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் தேர்தல் ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது.

    மேலும், மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளதால், அம்மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது.

    மக்களவை, சட்டமன்ற மற்றும் இடைத்தேர்லுக்கு ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், அருணாச்சல பிரதேசம், சிக்கிமில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, சட்டப்பேரவைக்கு ஜூன் 4ம் தேதிக்கு பதிலாக ஜூன் 2ம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    மக்களவை தேர்தலுக்கு ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

    • நேற்று முதலே தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தது.
    • வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் விநியோகம் செய்வது தொடர்பான புகார் தெரிவிக்கலாம்.

    இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என நேற்று தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார் அறிவித்தார்.

    அதன்படி, வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் தேர்தல் ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

    மேலும், மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளதால், அம்மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று முதலே தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தது.

    இந்நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறை சார்பில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் விநியோகம் செய்வது தொடர்பான புகார்களை பொதுமக்கள் வருமான வரித்துறையிடம் தெரிவிக்கலாம்.

    1800 425 6669 என்ற தொலைபேசி எண் மூலமாகவும், 94453 94453 என்ற Whatsapp எண் மூலமாகவும் புகார்களைத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 2104-ம் ஆண்டு தான் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
    • ஜம்மு மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்கியது.

    அப்போது, இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் தேர்தல் ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

    மேலும், மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளதால், அம்மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படாத ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படவில்லை. கடைசியாக 2104-ம் ஆண்டு தான் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.


    நாடு முழுவதும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோதும், ஜம்மு-காஷ்மீருக்கு தேதி அறிவிக்கப்படவில்லை.

    ஆனால், ஜம்மு-காஷ்மீரில் பாராளுமன்றத்துக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த யூனியன் பிரதேசத்தில் 5 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. 5 தொகுதிகளுக்கும் 5 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி ஜம்மு பகுதியில் உள்ள உதம்பூர் மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஜம்மு மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    அனந்த்நாக் தொகுதியில் மே 7 -ம் தேதியும், ஸ்ரீநகர் தொகுதியில் மே 13-ம் தேதியும், பாரமுல்லா தொகுதியில் மே 20-ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் 42.58 லட்சம் பெண்கள் மற்றும் 161 மூன்றாம் பாலினத்தவர்கள் உட்பட மொத்தம் 86.93 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தத் தகுதி பெற்றுள்ளனர்.

    • இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது
    • உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது

    தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்கியது.

    அப்போது, இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் தேர்தல் ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

    தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில், உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.

    இந்தியாவில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறுவதை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தும் முன் 'ஒரே கட்டமாக தேர்தல்' நடத்தும் முறையை ஏன் அமல்படுத்தக்கூடாது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    • இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது
    • கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படாத ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

    தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்கியது.

    அப்போது, இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் தேர்தல் ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

    மேலும், மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளதால், அம்மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படாத ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படவில்லை. கடைசியாக 2104-ம் ஆண்டு தாங்க அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.

    இந்நிலையில், நாடு முழுவதும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோதும், ஜம்மு-காஷ்மீருக்கு தேதி அறிவிக்கப்படாதது குறித்து முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா காட்டமாக விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக எவ்வளவோ செய்கின்றனர். ஆனால், ஜம்மு-காஷ்மீரில் நிலுவையில் உள்ள சட்டமன்ற தேர்தலை, தேர்தல் ஆணையத்தால் நடத்த முடியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

    ×