search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்களவை தேர்தல்"

    • இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தேர்தல் முடிவுகள் ஜூன் 4 -ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

    தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்கியது.

    அப்போது, இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளதால், அம்மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, ஒரே கட்டமாக 175 தொகுதிகள் கொண்ட ஆந்திரப் பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 13-ம் தேதி நடைபெறுகிறது.

    ஒடிசா மாநிலத்தில் 4 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. மே 13-ம் தேதி 28 தொகுதிகளும், மே 20-ம் தேதி 35 தொகுதிகளுக்கும், மே 25-ம் தேதி 42 தொகுதிகளுக்கும், ஜூன் 1-ம் தேதி மீதமுள்ள 42 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

    தேர்தல் முடிவுகள் ஜூன் 4 -ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மாநில சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தேர்தல் ஆணைய இணையதளத்தில் லைவ் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.

    பாராளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால், ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இதற்கிடையே இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தேர்தல் கமிஷனராக இருந்த அனுப் சந்திர பாண்டே கடந்த மாதம் ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் கமிஷனரான அருண் கோயல் கடந்த 9-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதனால் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் மட்டுமே தேர்தல் கமிஷனர் பதவியில் இருந்தார்.

    இதையடுத்து இரண்டு புதிய தேர்தல் கமிஷனர்களை பிரதமர் தலைமையிலான குழு நேற்று கூடி தேர்வு செய்தது.

    இதில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சந்து ஆகியோர் புதிய தேர்தல் கமிஷனர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

    தேர்தல் கமிஷனர்களாக ஞானேஷ் குமார், சுக்பிர்சிங் சந்து நேற்று காலை பதவியேற்று கொண்டனர். முன்னதாக அவர்களை தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் வரவேற்றார்.

    இதையடுத்து பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக மூவரும் ஆலோசனை நடத்தினார்கள். ஏற்கனவே பாராளுமன்ற தேர்தல் தேதி குறித்து முடிவு எடுத்துவிட்ட நிலையில் அது தொடர்பாக புதிய இரு தேர்தல் கமிஷனர்களுடன் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் ஆலோசனை நடத்தினார்.

    பாராளுமன்ற தேர்தல் இன்று மதியம் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது.

    அத்துடன், அருணாச்சல பிரதேசம், ஆந்திர பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் மாநில சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும். தேர்தல் ஆணைய இணையதளத்தில் லைவ் ஸ்ட்ரீம் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, இன்று மதியம் 3 மணியளவில் தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்கியது.

    அதில், மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, முதற்கட்டத்திலேயே ஒரே கட்டமாக தமிழ்நாடில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் ஏப்ரல் 19ம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இதற்கிடையே, தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுடன், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் ஏப்ரல் 19ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    2ம் கட்டமாக நடைபெறும் தேர்தல்கள் அனைத்தும் ஏப்ரல் 26ம் தேதி நடைபெறும்.

    3ம் கட்டமாக நடைபெறும் தேர்தல்கள் அனைத்தும் மேம் 7ம் தேதி நடைபெறுகிறது.

    4ம் கட்ட தேர்தல் மே 13ம் தேதி நடைபெறுகிறது.

    5ம் கட்ட தேர்தல் மே 20ம் தேதி நடைபெறுகிறது.

    6ம் கட்ட தேர்தல் மே 25ம் தேதி நடைபெறுகிறது.

    மக்களவை தேர்தல் முடிவு ஜூன் 4ம் அறிவிக்கப்படுகிறது.

    மேலும், தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் வரும் மார்ச் 20ம் தேதி முதல் தொடங்குகிறது.

    வேட்புமனு கடைசி நாள் மார்ச் 27ம் தேதி ஆகும். வேட்பு மனு பரிசீலனை மார்ச் 28ம் தேதி அன்று நடைபெறுகிறது.

    வேட்பு மனு வாபஸ் மார்ச் 30ம் தேதி நடைபெறுகிறது.

    • 2 ஆண்டுகளில் 11 மாநில தேர்தல்களை நடத்தியுள்ளோம்.
    • மக்களவை தேர்தலுக்கு 10.5 லட்சம் வாக்குசாவடிகள் அமைக்கப்பட உள்ளது.

    தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்கியது.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவின் தேர்தலை உலகமே கவனித்து கொண்டிருக்கிறது. தேர்தலை நேர்மையாக நடத்துவோம்.

    மக்களவை தேர்தலை நடத்த குழு அளவில் தயாராக உள்ளோம். ஒவ்வொரு தேர்தலும், தேர்தல் ஆணையத்திற்கு ஒரு தேர்வு போன்று தான்.

    அரசு அதிகாரிகள், காவல் அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். மக்கள் தேர்தல் நடத்துவது குறித்து அனைத்து அதிகாரிகளுடனும் ஆலோசனை செய்தோம்.

    அனைவரும் பங்கேற்கும் வகையில் தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளோம். தேர்தலுக்கான பொருட்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவது என்பது மிகப் பெரிய சவால்.

    மக்களவை தேர்தலுக்கு 10.5 லட்சம் வாக்குசாவடிகள் அமைக்கப்பட உள்ளது. 97 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 1.82 கோடி முதல் தலைமுறை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 88.4 லட்சம் மாற்றுதிறனாளி வாக்காளர்கள் உள்ளனர். 20.5 கோடி இளம் வாக்காளர்கள் உள்ளனர்.

    16 குடியரசு தலைவர், துணை தலைவர் தேர்தல்களை நடத்தி உள்ளோம். 2 ஆண்டுகளில் 11 மாநில தேர்தல்களை நடத்தியுள்ளோம்.

    வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் ஒவ்வொரு நிலையிலும் அரசியல் கட்சியினரிடமும் ஆலோசனை நடத்தினோம்.

    1000 ஆண் வாக்காளர்களுக்கு, 947 பெண் வாக்காளர்கள் உள்ளனர். பெண் வாக்காளர்கள் பங்களிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. 49.7 கோடி ஆண் வாக்களர்கள் உள்ளனர்.

    100 வயதைக் கடந்த 2.18 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.

    மக்களவை தேர்தலில் 55 லட்சம் மன்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்படுகிறது.

    தேர்தல் தொடர்பான விவரங்களை வாக்காளர்கள் செயலி வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம்.

    2024ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி 18 வயது நிரம்பியவர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். தங்களின் வேட்பாளர் குறித்து விபரங்களை வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் தெரியப்படுத்த வேண்டும்.

    KYC செயலியில் வேட்பாளர் பற்றிய பிரமாண பத்திரங்கள கிடைக்கும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் காஸ்டிங் செய்யப்படும்.

    எல்லைகளில் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும். புகார் அளிக்க மக்கள் செயலிகளை பயன்படுத்தலாம்.

    தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்தது. சட்டவிரோத ஆன்லைன் பணப் பரிமாற்றம் குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம்.

    அண்மையில் நடைபெற்ற பல்வேறு மாநில தேர்தல்களில் 3,400 கோடி பணம் சிக்கியது.

    சூரிய மறைவுக்கு பிறகு வங்கி வாகனங்களில் பண நடமாட்டம் கூடாது. தேர்தலில் வெறுப்பு பிரசாரம் இருக்க கூடாது.

    தனி நபர் வாழ்க்கை குறித்து எந்த விமர்சனமும் கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தல் ஆணையர்கள் இருவரும் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டனர்.
    • தலைமை தேர்தல் ஆணையர் இருவருடன் இறுதி கட்ட ஆலோசனை நடத்தினார்.

    பாராளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால், ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இதற்கிடையே இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தேர்தல் கமிஷனராக இருந்த அனுப் சந்திர பாண்டே கடந்த மாதம் ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் கமிஷனரான அருண் கோயல் கடந்த 9-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதனால் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் மட்டுமே தேர்தல் கமிஷனர் பதவியில் இருந்தார்.

    இதையடுத்து இரண்டு புதிய தேர்தல் கமிஷனர்களை பிரதமர் தலைமையிலான குழு நேற்று கூடி தேர்வு செய்தது.

    இதில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சந்து ஆகியோர் புதிய தேர்தல் கமிஷனர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் தேர்தல் கமிஷனர்களாக ஞானேஷ் குமார், சுக்பிர்சிங் சந்து இன்று காலை பதவியேற்று கொண்டனர். முன்னதாக அவர்களை தலைமை தேர் தல் கமிஷனர் ராஜீவ்குமார் வரவேற்றார்.

     இதையடுத்து பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக மூவரும் ஆலோசனை நடத்தினார்கள். ஏற்கனவே பாராளுமன்ற தேர்தல் தேதி குறித்து முடிவு எடுத்து விட்ட நிலையில் அது தொடர்பாக புதிய இரு தேர்தல் கமிஷனர்களுடன் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் ஆலோசனை நடத்தினார்.

    அவர்கள் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக இறுதி கட்ட ஆலோசனையில் ஈடுபட்டனர். இதையடுத்து பாராளுமன்ற தேர்தல் தேதி நாளை மதியம் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அருணாச்சல பிரதேசம், ஆந்திர பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் மாநில சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும். தேர்தல் ஆணைய இணைய தளத்தில் லைவ் ஸ்ட்ரீம் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லியில் மட்டும் தற்போது எம்.பி.யாக இருக்கும் 6 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
    • கர்நாடகா மாநிலத்தில் 20 பேரில் 11 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 8 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    மக்களவை தேர்தலில் பா.ஜனதா இந்த முறை 370 பிடித்தாக வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து தேர்தல் களப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது கடந்த 2019 தேர்தலில் பெற்ற எண்ணிக்கையை விட 67 அதிகமாகும்.

    இலக்கு மிகப்பெரியது என்பதால் ஒவ்வொரு வேட்பாளர்களையும் மிகவும் கவனமாக தேர்வு செய்து வருகிறது. களத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு, ஏற்கனவே எம்.பி.யாக இருந்தால் தொகுதியில் அவருக்கு எதிரான அலை குறித்து கவனமாக ஆராய்ந்து அதன்பின் இடம் வழங்குகிறது.

    பா.ஜனதா இதுவரை இரண்டு கட்டமாக வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. தற்போது வரை 270 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    முதற்கட்டமாக 195 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதில் ஏற்கனவே போட்டியிட்ட 33 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. நேற்று 72 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஏறக்குறைய பாதி அளவிற்கு, அதாவது 30 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    இரண்டு பட்டியல்களை சேர்த்து 21 சதவீதம் பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதில் பிரக்யா தாகூர், ரமேஷ் பிதுரி, பர்வேஷ் வர்மா ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    140 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கவுதம் கம்பீர் தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்திருந்தார். ஹர்ஷ் மல்ஹோத்ரா தேர்தலில் போட்டியிடவில்லை என்றார்.

    டெல்லியில் மட்டும் தற்போது எம்.பி.யாக இருக்கும் 6 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மனோஜ் திவாரிக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது.

    கர்நாடகா மாநிலத்தில் 20 பேரில் 11 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 8 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 14 எம்.பி.களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐந்து பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. குஜராத் மாநிலத்தில் ஏழு எம்.பி.க்களில் மூன்று பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மத்திய மந்திரி தர்ஷனா ஜர்தோஷ்க்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    • சர்வதேச எல்லைகள் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்படும்.
    • ஜம்மு காஷ்மீரில் 86.9 லட்சம் வாக்களார்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

    இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஜம்மு காஷ்மீரில் ஆய்வு நடத்திய பிறகு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தகவல் தெரிவித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலை நடத்த தயாராக உள்ளோம். அதற்கான பணிகள் முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.

    போலிச் செய்திகள் பரவுவதை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் சமூக ஊடகப் பிரிவு ஏற்படுத்தப்படும்.

    மக்களவை தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மாநில எல்லைகள் மற்றும் சர்வதேச எல்லைகள் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்படும்.

    ஜம்மு காஷ்மீரில் மக்களவைத் தேர்தலில் அனைத்து கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பு உறுதி செய்யப்படும்.

    போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அனைவருக்கும் சமமான மற்றும் போதிய பாதுகாப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஜம்மு காஷ்மீரில் 86.9 லட்சம் வாக்களார்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

    தேர்தல் பத்திர தரவுகள் நிச்சயம் குறித்த காலத்திற்குள் வெளியிடப்படும்.

    எப்போதும் வெளிப்படைத் தன்மைக்கு ஆதரவாகவே உள்ளோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • தேர்தல் வரும் நிலையில் சிஏஏ-வை அமல்படுத்தியது மோசமான வாக்கு வங்கி அரசியல்.
    • மொத்த நாடும் சிஏஏ சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என கோருகிறது.

    இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருவதாக நேற்று முன்தினம் மத்திய அரசு அரசாணை வெளியிட்டது. அதற்கான விதிகளை வெளியிட்டுள்ள மத்திய அரசு, விண்ணப்பிப்பதற்கான இணைய தளத்தையும் உருவாக்கியுள்ளது.

    சட்டம் நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகள், 3 மாதம் ஆகிய நிலையில் தற்போது அமல்படுத்துவது ஏன்? என மத்திய அரசை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. தேர்தலுக்காக இதை கொண்டு வந்துள்ளது எனத் தெரிவித்துள்ளன. தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா ஆகிய 3 மாநிலங்கள் செயல்படுத்தமாட்டோம் என அறிவித்துள்ளன.

    இந்த நிலையில் டெல்லி மாநில முதல்வரும், அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பா.ஜனதாவின் மோசமான வாக்கு வங்கி அரசியல் எனத் தெரிவித்துள்ளார்.3

    இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

    சிஏஏ என்றால் என்ன? வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் உள்ள சிறுபான்மையினர் இந்தியாவுக்கு வந்து குடியேறி, அவர்கள் இந்திய குடியுரிமை பெற விரும்பினால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    அதனுடைய அர்த்தம் அதிகப்படியான சிறுபான்மையினர் இந்தியாவுக்கு வருவார்கள் என்பதுதான். அவர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள். அவர்களுக்காக வீடுகள் கட்டி கொடுக்கப்படும். பா.ஜனதாவால் நம்முடைய குழந்தைகளுக்கு வேலை வழங்க முடியாது.

    ஆனால், பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களின் குழந்தைகளுக்கு வேலை வழங்க விரும்புகிறார்கள். நம்முடைய ஏராளமான மக்கள் வீடுகள் இல்லாமல் தவிக்கிறார்கள். ஆனால், பாகிஸ்தானில் இருந்து இங்கே வந்தவர்களுக்கு பா.ஜனதா வீடுகள் வழங்க விரும்புகிறது. நம்முடைய வேலை வாய்ப்பை அவர்களுடைய குழந்தைகளுக்கு வழங்க விரும்புகிறார்கள். பாகிஸ்தானில் இருந்து வந்து இந்தியா வந்து குடியேறிவர்களை நமது உரிமையான வீடுகள் குடியமர்த்த விரும்புகிறார்கள்.

    நமது குடும்பங்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட வேண்டிய இந்திய அரசின் பணம் பாகிஸ்தானில் இருந்து வந்து குடியேறியவர்களுக்கு பயன்படுத்தப்படும்.

    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் நாடுகளில் இருந்து, அந்த நாடுகளில் சிறுபான்மையினராக கருதப்படும் நபர்கள் சுமார் 3.5 கோடி பேர் இந்தியாவில் வந்து தங்கியுள்ளனர். இங்கு வந்து குடியேறிவர்களுக்கு வீடுகள் வழங்கவும், வேலைவாய்ப்புக்காகவும் நம்முடைய மக்கள் பணத்தை செலவழிக்க பா.ஜனதா விரும்புகிறது.

    வரும் தேர்தலில் இந்த மூன்று நாடுகளில் இருந்து இந்தியா வந்து குடியேறிவர்கள், வாக்கு வங்கியாக மாறுவதால் பா.ஜனதாவுக்கு ஆதாயம் கிடைக்கும். தேர்தல் வரும் நிலையில் சிஏஏ-வை அமல்படுத்தியது மோசமான வாக்கு வங்கி அரசியல். மொத்த நாடும் சிஏஏ சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என கோருகிறது. சட்டத்தை திரும்ப பெறவில்லை என்றால், மக்கள் பா.ஜனதாவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.

    நாட்டின் ஒடுத்த மொத்த மக்களும் சிஏஏ சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என விரும்புகிறார்கள். மக்கள் பா.ஜனதாவுக்கு எதிரான அவர்களது கோபத்தை மக்களவை தேர்தலில் அதற்கு எதிராக வாக்களித்து வெளிப்படுத்த வேணடும்.

    இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்தார்.

    • கடந்த சில நாட்களாகவே திவ்யா சத்யராஜ் அரசியலுக்கு வர போகிறார், பாஜகவில் சேர போகிறார் என்று தகவல்கள் பரவி வந்தன
    • இது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

    கடந்த சில நாட்களாகவே திவ்யா சத்யராஜ் அரசியலுக்கு வர போகிறார், பாஜகவில் இணைய போகிறார் என்று தகவல்கள் பரவி வந்தன. சத்யராஜ் தி.க கொள்கைகளில் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் அவரது மகள் பாஜகவில் சேர போகிறாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

    இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், கடந்து சில மாதங்களுக்கு முன்பு ஊடகத்தில் அரசியலில் ஆர்வம் இருக்கிறது என நான் கூறிய பிறகு பலரும் எந்த கட்சியில் சேருவீர்கள்? உங்களுக்காக சத்யராஜ் பிரச்சாரம் செய்வாரா? மேயர் பதவிக்கு ஆசைப்படுகிறீர்களா? ராஜ்ய சபா எம்.பி சீட் கேட்பீர்களா? என பல கேள்விகளை என்னிடம் கேட்டார்கள்.

    நான் அரசியலுக்கு வருவது பதவிக்காக அல்ல. மக்கள் சேவை செய்ய வேண்டும் என்பதற்காக. மகிழ்மதி இயக்கம் என்ற அமைப்பை கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறேன். அதன் மூலம் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை இலவசமாக நாங்கள் அளித்து வருகிறோம்.

    அந்த வகையில் அரசியலில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். பாஜகவில் இருந்து வரும் தேர்தலில் போட்டியிட எனக்கு அழைப்பு வந்தது உண்மை தான். ஆனால் எந்த ஒரு மதத்தை போற்றும் கட்சியிலும் இணைய விருப்பம் இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம் நான் தனிக்கட்சி ஆரம்பிக்க போவதில்லை.

    நான் எந்த கட்சியில் இணைய போகிறேன் என்பதை வரும் மக்களவை தேர்தலுக்கு பின் அறிவிப்பேன். புரட்சி தமிழன், தோழர் சத்யராஜின் மகளாகவும், தமிழ் மகளாகவும் தமிழ்நாட்டின் நலன் காக்க உழைப்பேன்" என்று அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.

    • பிரதமர் மோடியை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை முழுவதும் தொண்டர்கள் சூழ்ந்தனர்.
    • அப்போது, அஸ்வந்த் பிஜய் என்ற பாஜக தொண்டர் மோடியை வரவேற்க சென்னை விமான நிலையத்துக்கு வந்தார்.

    மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்தியா முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும், நிறைவு பெற்ற திட்டங்களையும் புதிய திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார்.

    அந்தவகையில் சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த பிரதமர் மோடி கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ள 500 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய ஈணுலை திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் சென்னை நந்தனத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து உரையாற்றினார்.

    இத்தகு முன்னதாக, பிரதமர் மோடியை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை முழுவதும் தொண்டர்கள் சூழ்ந்தனர். அப்போது, அஸ்வந்த் பிஜய் என்ற பாஜக நிர்வாகி மோடியை வரவேற்க சென்னை விமான நிலையத்துக்கு வந்தார்.

    இது தொடர்பாக மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில்,

    "சென்னை விமான நிலையத்தில், நமது கட்சி நிர்வாகிகளில் ஒருவரான அஸ்வந்த் பிஜய் அவர்கள் என்னை வரவேற்க காத்திருந்தார். சற்றுமுன் தான், அவரது மனைவி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார் என்றும், ஆனால் அவர் இன்னும் அவர்களை சந்திக்கவில்லை என்றும் என்னிடம் கூறினார். இந்த நேரத்தில் அவர் இங்கு வந்திருக்கக் கூடாது என்றும், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆசிகளையும் தெரிவித்தேன்.

    நமது கட்சியில் கடமை மற்றும் அர்ப்பணிப்புள்ள உறுப்பினர்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது கட்சியினரின் இத்தகைய அன்பையும் பாசத்தையும் பார்க்கும்போது நான் உணர்ச்சிவசப்படுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த பதிவை அடுத்து யார் இந்த அஸ்வந்த் பிஜய் என பாஜகவினர் மட்டுமில்லாமல் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. கேரளாவை பூர்விகமாக கொண்ட அஸ்வந்த் பிஜய் தனியார் விமான நிலையத்தில் பணியாற்றி வருகிறார் என தெரியவந்தது. மேலும் இவர் சென்னையில் வேளச்சேரியில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் பிரதமர் மோடியிடம் கூறியது போல் அஸ்வந்த் பிஜய்க்கு குழந்தை எதுவும் பிறக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பிரதமர் மோடியிடம் நன்மதிப்பை பெறவேண்டும் என்பதற்காக அவரிடம் தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக அஸ்வந்த் பிஜய் பொய் சொல்லியுள்ளார். பிரதமரிடம் சொன்ன தகவல் யாருக்கும் தெரியாது என நினைத்திருந்த நிலையில், பிரதமர் மோடியே இந்த நிகழ்வை தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் பதிவாக வெளியிட்டதால் அஸ்வந்த் பிஜய் மாட்டிக்கொண்டுள்ளார்.

    இதனையடுத்து தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு அவர் தலைமறைவாகியுள்ளார். இதனை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். அதே சமயம் பிரதமரிடம் பொய் சொன்ன அஸ்வந்த் பிஜய் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    • பா.ஜனதா- ஜேஜேபி இடையிலான கூட்டணி முறிவடைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
    • கட்டார் தனது முதல் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

    அரியானா மாநிலத்தில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. மனோகர் லால் கட்டார் முதல்வராக இருந்து வந்தார். கட்டார் ஆட்சிக்கு ஜனநாயக ஜனதா கட்சி என்ற மாநில கட்சி ஆதரவு அளித்து வந்தது.

    இரு கட்சிகளும் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்தன. ஜேஜேபி கட்சி தலைவரும், அரியானா மாநிலத்தின் துணை முதல்வராக இருந்த துஷ்யந்த் சவுதாலா டெல்லியில் ஜே.பி. நட்டா உடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் பா.ஜனதா- ஜேஜேபி இடையிலான கூட்டணி முறிவடைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

    இருந்த போதிலும் சில சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாருக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் ஆட்சி கவிழ வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது. இருந்தபோதிலும் கட்டார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் எனத் தகவல் வெளியானது. இந்த நிலையில் கட்டார் தனது முதல் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

    இந்நிலையில், அரியானா மாநில பாஜக தலைவராகவும், குருக்ஷேத்ரா தொகுதி எம்.பி ஆகவும் இருக்கும் நயாப் சைனி ஹரியானா முதல்வராக பதவியேற்றார்

    இன்று மாலை 5 மணியளவில் நயப் சிங் சைனிக்கு ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

    முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள மனோகர் லால் கட்டார், மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    • ஜனநாயக ஜனதா கட்சி உடன் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
    • மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.

    அரியானா மாநிலத்தில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. மனோகர் லால் கட்டார் முதல்வராக இருந்து வந்தார். கட்டார் ஆட்சிக்கு ஜனநாயக ஜனதா கட்சி என்ற மாநில கட்சி ஆதரவு அளித்து வந்தது.

    இரு கட்சிகளும் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்தன. ஜேஜேபி கட்சி தலைவரும், அரியானா மாநிலத்தின் துணை முதல்வராக இருந்த துஷ்யந்த் சவுதாலா டெல்லியில் ஜே.பி. நட்டா உடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் பாஜனதா- ஜேஜேபி இடையிலான கூட்டணி முறிவடைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

    இருந்த போதிலும் சில சுயேட்சை எம்.எல்.ஏ.-க்கள் கட்டாருக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் ஆட்சி கவிழ வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது. இருந்தபோதிலும் கட்டார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் எனத் தகவல் வெளியானது. இந்த நிலையில் கட்டார் தனது முதல் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

    முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள கட்டார், மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    2019 மக்களவை தேர்தலில் அரியானாவில் உள்ள 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஜேஜேபி ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஏழு இடங்களில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. அதன்பின் சட்டமன்ற தேர்தலின்போது ஜேஜேபி கட்சியுடன் கூட்டணி வைத்தது.

    90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட அரியானாவில் பா.ஜனதாவுக்கு 41 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர். 5 சுயேட்சை எம்எல்ஏ-க்கள் மற்றும் ஹெச்.எல்.பி எம்.எல்.ஏ. கோபால் கண்டா ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    • மக்களவை தொகுதியில் போட்டியிட்டில் ஒரே தொகுதியில் முடங்கிப்போக வாய்ப்புள்ளதாக கருதுகிறார்.
    • மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் இன்னும் நான்கு வருடங்கள் இருக்கிறது.

    காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே இருந்து வருகிறார். பா.ஜனதாவுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.

    பா.ஜனதா விமர்சனங்களுக்கு உடனடியாக பதிலடி கொடுத்து வரும் நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கீட்டு கொடுக்கும் பணியில் மும்முரமாக இருந்து வருகிறார்.

    ஒருவேளை இந்தியா கூட்டணி மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றால் மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்மொழிய வாய்ப்புள்ளது. முன்னதாக ஒருமுறை மம்தா உள்ளிட்டோர் அவரது பெயரை முன்மொழிந்தனர். ஆனால் கார்கே அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தேர்தல் முடிந்த பின்னர் அது குறித்து பார்த்துக் கொள்ளலாம் எனக் குறிப்பிடிருந்தார்.

    இந்த நிலையில் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதை மல்லிகார்ஜூன கார்கே தவிர்க்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வழக்கமாக கர்நாடகா மாநிலம் குல்பர்கா தொகுதியில் போட்டியிடுவார். இந்த முறை அவரது மருமகன் ராதாகிருஷ்ணன் தோட்டாமணியை நிறுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மக்களவை தேர்தலில் போட்டியிட்டால், அந்த தொகுதிக்குள்ளேயே முடங்கி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். போட்டியிடவில்லை என்றால் நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளலாம். நாடு முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொள்ள மல்லிகார்ஜூன கார்கே விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    காங்கிரஸ் கட்சியில் பெரும்பாலும் கட்சித் தலைவர் போட்டியிடாமல் இருந்ததில்லை. சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கடந்த தேர்தலில் போட்டியிட்டனர். இந்த முறை சோனியா காந்தி உடல்நலத்தை  காரணம் காட்டி மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    மல்லிகார்ஜூன கார்கே கடந்த 2019 தேர்தலில் தோல்வியடைந்தார். இதனால் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். அவருடைய பதவிக்காலம் இன்னும் நான்கரை ஆண்டுகள் இருக்கிறது.

    பா.ஜனதா தேசிய தலைவரான ஜே.பி. நட்டா கூட இந்த முறை போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மல்லிகார்ஜூன கார்கே மகன் பிரியங் கார்கே கர்நாடகா மாநில மந்திரியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×