என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மக்களவை தேர்தல்"
- ஊழல் கட்சி என்று நீங்கள் கூறிய அதே காங்கிரஸ் கட்சியின் மடியில் அமர்ந்துள்ளீர்கள்.
- உங்களால் கூட்டணி அமைக்க முடியும். பிரதமர் மோடி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பார்.
மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து டெல்லி, அரியானா, குஜராத் போன்ற மாநிலங்களில் போட்டியிடுகின்றன.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டாலும் சரி, காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி இணைந்தாலும் சரி ஜீரோ பிளஸ் ஜீரோ ஜீரோதான் என அமித் ஷா கேலி செய்துள்ளார்.
மேலும், "ஊழல் கட்சி என்று நீங்கள் கூறிய அதே காங்கிரஸ் கட்சியின் மடியில் அமர்ந்துள்ளீர்கள். காங்கிரஸ் கட்சி ஊழல் கட்சி என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். உங்களால் கூட்டணி அமைக்க முடியும். ஆனால் பிரதமர் மோடி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பார்.
டெல்லியில் இரண்டு விதமான அரசியல் செய்யும் நபர்கள் உள்ளனர். ஒரு நபர் தாங்கள் சொன்னதை செய்யும் வகையைச் சேர்ந்தவர். மற்றொருவர் அதற்கு எதிர்ப்பதமாக செய்யக் கூடியவர். இரண்டு விதமாக மக்கள் டெல்லியில் உள்ளனர். ஒருவர் நரேந்திர மோடி. மற்றொருவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். கெஜ்ரிவால் அவர் சொன்னது எதையும் செய்யவில்லை" என்றார்.
இதற்கு ஆம் ஆத்மி கட்சி பதிலடி கொடுத்துள்ளது. மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் எங்களை டெல்லி மாநில ஆட்சியில் அமர்த்தினர். அதேபோன்று இந்த முறை டெல்லியில் இருந்து பா.ஜனதா எம்.பி.க்களை வெளியேற்றி பாராளுமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கையை உயர்த்துவார்கள் எனத் தெரிவித்துள்ளது.
- மொத்தமுள்ள 10 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே குருஷேத்ரா தொகுதியில் ஆம் ஆத்மி போட்டி.
- பாண்டவர்களுக்கு என்ன இருந்தது? பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களுடன் இருந்தார்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது கட்சிக்கு 'தர்மம்' உள்ளது என்றும், ஆனால், 'தர்மம்' வேண்டுமா அல்லது 'அதர்மம்' வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அரியானாவின் குருக்ஷேத்ரா மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய டெல்லி முதல்வர், அந்த தொகுதியில் இருந்து தனது கட்சி வேட்பாளர் சுஷில் குப்தாவுக்கு வாக்களிக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டார்.
அரியானாவில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிசும் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றன. கூட்டணியின் கீழ், மாநிலத்தில் உள்ள மொத்தமுள்ள 10 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே குருஷேத்ரா தொகுதியில் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது.
மேலும், கூட்டத்தில் உரையாற்றிய கெஜ்ரிவால், மகாபாரதத்தை எடுத்துரைத்து, "குருக்ஷேத்திரம் 'தர்மயுத்' போராடிய புண்ணிய பூமி" என்றார்.
'கௌரவர்கள்' அனைத்தையும் கொண்டிருந்தாலும் 'பாண்டவர்கள்' வெற்றி பெற்றதாக கெஜ்ரிவால் கூறினார்.
"பாண்டவர்களுக்கு என்ன இருந்தது? பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களுடன் இருந்தார். இன்று, நம்மிடம் என்ன இருக்கிறது. நாம் மிகவும் சிறியவர்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம்முடன் இருக்கிறார்?" என்றார்.
பாஜக தலைமையிலான மத்திய அரசை குறிப்பிட்டு பேசிய கெஜ்ரிவால், "அவர்களிடம் எல்லாம் உள்ளது. அவர்களுக்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளன. அவர்களிடம் ஐபி, சிபிஐ, இடி உள்ளது" என்றார்.
"எங்களுடைய 'தர்மம்' (நீதி) எங்களிடம் உள்ளது. இது 'தர்மம்' மற்றும் 'அதர்மம்' (அதர்மம்' (அதர்மம்) ஆகியவற்றிற்கிடையே நடக்கும் சண்டையாகும். மேலும், இதில் 'தர்மம்' அல்லது 'அதர்மம்' எது என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.
நான் டெல்லியில் இருந்து கூப்பிய கைகளுடன் உங்கள் வாக்குகளை கேட்க வந்தேன். சுஷில் குப்தா ஜி வீடு வீடாக சென்று உங்கள் வாக்குகளை கேட்கிறார். தேர்தலில் வெற்றி பெற உங்கள் வாக்குகள் எங்களுக்கு தேவை. அவர்களுக்கு (பாஜக) உங்கள் வாக்குகள் தேவையில்லை" என்றார்.
- சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்றது.
- 35 தொகுதிகளுக்கு வேட்பாளர் நேர்காணல் நடத்தப்பட்டது.
திமுக வேட்பாளர்கள் நேர்காணல் இன்று காலை தொடங்கியது.
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு அளித்துள்ளவர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.
அதன்படி, மார்ச் 10ம் தேதி காலை 9 மணி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்றது.
நேர்காணலின்போது, தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
இந்நிலையில், 35 தொகுதிகளுக்கு வேட்பாளர் நேர்காணல் நடத்தப்பட்டது.
நாமக்கல், விழுப்புரம், சிதம்பரம், ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி தொகுதிகளுக்கு மட்டும் நேர்காணல் நடைபெறவில்லை.
- தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிய உள்ளார்.
- பரிந்துரையாளர்கள், ஆதரவாளர்களுக்கு அனுமதி இல்லை எனவும் அறிவிப்பு.
திமுக வேட்பாளர்கள் நேர்காணல் வரும் மார்ச் 10ம் தேதி முதல் தொடங்குவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு அளித்துள்ளவர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் செய்ய உள்ளா்.
அதன்படி, மார்ச் 10ம் தேதி காலை 9 மணி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெறும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேலும், நேர்காணலின்போது, தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிய உள்ளார்.
நேர்காணலில், அந்தந்த நாடாளுமன்ற தொகுதி மாவட்ட செயலாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும், பரிந்துரையாளர்கள், ஆதரவாளர்களுக்கு அனுமதி இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
- காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.
- இளைஞர்கள் மத்தியில் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் பேசினார்.
நாகரர்கோவிலில் இன்று, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.
இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் டைசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் கே.ஜி. ரமேஷ் குமார் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய் வசந்த்," வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற இளைஞர்கள் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
- தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழுவை அறிவித்துள்ளார்.
- தேமுதிக, அதிமுக கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது
நடைபெறவுள்ள 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை அறிவித்துள்ளார்.
இக்குழுவில், தேமுதிக கட்சியின் துணைச்செயலாளர் எல்.கே. சுதீஷ், அவைத்தலைவர் டாக்டர்.வி. இளங்கோவன், கொள்கைப்பரப்பு செயலாளர் அழகாபுரம்.R. மோகன்ராஜ் மற்றும் துணைச்செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தேமுதிக, அதிமுக கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், அதிமுக - தேமுதிக இடையே 2ம் கட்ட கூட்டணிப் பேச்சுவார்த்தை இன்று மாலை 5 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
- தேசவிரோத சக்திகளை பாதுகாக்கும் வகையில் நீதிமன்றத்தில் ஆஜராகியதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு.
- நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தல்.
மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த சனிக்கிழமை பா.ஜனதா வெளியிட்டுள்ளது. அதில் நியூடெல்லி தொகுதியில் மறைந்த முன்னாள் மத்திய மந்திரியான சுஸ்மா சுவராஜ் மகள் பன்சூரி சுவராஜ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் போட்டியிட பன்சூரி சுவராஜ்-க்கு வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், பா.ஜனதா அவரது பெயரை திரும்பப்பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
தேசவிரோத சக்திகளுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் பன்சூரி சுவராஜ் ஆஜரானார். இதனால் நாட்டு மக்களிடையே அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்தியாவில் இருந்து தப்பி ஓடிய லலித் மோடிக்கு ஆதரவாக பாஸ்போர்ட் வழக்கில் ஆஜரானார். மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரானார் என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பான ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மாநில நிதியமைச்சர் அதிஷி "இன்று பன்சூரி சுவராஜ் நியூடெல்லி மக்களவை தொகுதியில் பெண்களிடம் சென்று வாக்கு கேட்க இருக்கிறார். அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.
இதற்கு பதிலடியாக பன்சூரி சுவராஜ் கூறுகையில் "ராஜேந்திர நகரில் நீங்கள் வேட்பாளராக நிறுத்தியவர், சொந்த கட்சியினரால் அடித்து விரட்டப்பட்டது ஏன்? என்பதை ஆம் ஆத்மி கட்சியிடம் கேட்க விரும்புகிறேன். அவர்களால் நிறுத்தப்பட்ட வேட்பாளரை சொந்த கட்சி உறுப்பினர்கள் கூட விரும்பவில்லை.
இந்த நிலையில் அவர்கள் என்மீது குற்றச்சாட்டுகளை வைக்க முடியும். ஆனால், மக்கள் அவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள்" என்றார்.
டெல்லியில் கவுதம் கம்பீர் அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய மந்திரி ஹர்ஷ் வர்தன் அரசியலில் இருந்து விலகியுள்ளார். ஹர்ஷ் வர்தன் அரசியலில் இருந்து விலகியது தொடர்பாகவும் பா.ஜனதாவை ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது.
+2
- டீப்ஃபேக் தற்போது டிரெண்டிங் ஆகி வருவதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- சர்ச்சைக்குரிய வகையிலான பேச்சு, அறிக்கைகளை தவிர்க்கவும்.
பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இதனால் தேர்தல் தொடர்பான பணிகளில் பிரதமர் மோடி முழுக்கவனம் செலுத்தி வருகிறார். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இதற்கிடையே வேட்பாளர்களை தேர்வு செய்தல் உள்ளிட்ட கட்சிப் பணிகளிலும் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்கிறார்.
இந்த நிலையில்தான் நேற்று மத்திய மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தனது 2-வது முறை ஆட்சிக்காலத்தில் மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவது இதுவே கடைசி முறையாகும்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மந்திரிகளை பார்த்து "செல்லுங்க்ள, வெல்லுங்கள், விரைவில் மீண்டும் சந்திப்போம்" என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் எந்தவொரு அறிக்கை விடும்போதும் தயது செய்து கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். தவறாக ஏதும் கூறிவிடாதீர்கள். தற்போது டீப்ஃபேக் டிரெண்டிங்காக உள்ளது. இதனால் இந்த இரண்டு விசயங்களில் கவமானகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
நம்முடைய திட்டங்கள் குறித்து பேசும்போது, சர்ச்சைக்குரிய அறிக்கைகளை தவிர்க்க வேண்டும். ஜூன் மாதம் நாம் தாக்கல் செய்யக் கூடிய முழு பட்ஜெட்டில் விக்சித் பாரத் (வளர்ச்சி அடைந்த இந்தியா) குறித்து முழு பார்வையையும் தெரியவரும்" எனத் தெரிவித்துள்ளார்.
- பலதரப்பட்ட மக்களுக்கு ஆதரவளிப்பதிலும் உதவுவதிலும் மட்டுமே எனது ஆர்வம் உள்ளது.
- எனது அறக்கட்டளை YOUWECAN மூலம் அதைத் தொடர்ந்து செய்ய நினைக்கிறேன்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பாஜகவில் இணைந்து, வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிடவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக தான் யுவராஜ் சிங், அண்மையில் மாநில பாஜக தலைவர் சோம்தேவ் சர்மா மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பான செய்திகளுக்கு தற்போது யுவராஜ் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார். தான் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிடவில்லை என்று கூறி, வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Contrary to media reports, I'm not contesting elections from Gurdaspur. My passion lies in supporting and helping people in various capacities, and I will continue to do so through my foundation @YOUWECAN. Let's continue making a difference together to the best of our abilities❤️
— Yuvraj Singh (@YUVSTRONG12) March 1, 2024
இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "பலதரப்பட்ட மக்களுக்கு ஆதரவு கொடுப்பதிலும் உதவுவதிலும் மட்டுமே எனது ஆர்வம் உள்ளது. எனது அறக்கட்டளை YOUWECAN மூலம் அதைத் தொடர்ந்து செய்ய நினைக்கிறேன். எங்களின் சிறந்த திறன்களை ஒன்றாக வெளிப்படுத்தி மாற்றத்தை உருவாக்குவோம்" என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
- விஜயதாரணி ராஜினாமா செய்ததால் விளவங்கோடு தொகுதி காலி என அறிவிப்பு.
- திருக்கோவிலூர் தொகுதி காலி என இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயதாரணி பா.ஜனதாவில் இணைந்தார். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அவர், பா.ஜனதாவில் இணைந்ததும் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
உடனடியாக விளவங்கோடு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இதனால் மக்களை தேர்தலுடன் விளவங்கோட்டிற்கு சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று 100 சதவீதம் வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு பேரணியை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிராதா சாகு தொடங்கி வைத்தார். இதில் சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை போலீஷ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கலந்து கொண்டனர்.
#WATCH | Tamil Nadu: Awareness campaign by Election Commission flagged off in Chennai.Tamil Nadu Chief Election Commisioner Satyabrata Sahoo, Chennai Corporation Commisioner J Radhakrishnan, and Chennai Commissioner of Police, Sandip Rai Rathore present at the event. pic.twitter.com/5IgU1XM7Zl
— ANI (@ANI) March 2, 2024
அப்போது விளவங்கோடு இடைத்தேர்தல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சத்யபிரதா சாகு கூறிகையில் "மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு இடைத்தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் முடிவு செய்யும். திருக்கோவிலூர் தொகுதியை காலியாக அறிவிப்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. சென்னையில் இரண்டு கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்" என்றார்.
திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பொன்முடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கியதால், அவரது மந்திரி பதவி மற்றும் எம்.எல்.ஏ. பதவி தானாகவே பறிபோகியுள்ளது. ஆனால், அந்த தொகுதி காலி என அறிவிக்கப்படாமல் இருக்கிறது.
#WATCH | Chennai: At an awareness campaign 'Cyclothon - Pedal for Vote' organised by the Election Commission of India, Tamil Nadu Election Commissioner Satyabrata Sahoo says, "We are going to create awareness, especially in the youth who are first-time voters. We invite them all… pic.twitter.com/80ZfiOXxKq
— ANI (@ANI) March 2, 2024
தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து பொன்முடி மேல்முறையீடு செய்துள்ளார். இதனால் அவர் இன்னும் சிறைக்கு செல்லாமல் உள்ளார்.
- சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களில் போட்டியிடுகிறது.
- உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 20 இடங்களில் போட்டியிடுகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து மக்களவை தேர்தலை சந்திக்கின்றன.
இந்த மூன்று கட்சிகளும் இந்தியா கூட்டணியில் உள்ளன. இந்தியாவில் அதிக மக்களவை இடங்களை கொண்ட 2-வது மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது. இங்கு ஒவ்வொரு கட்சிகளும் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து மூன்று கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
சுமார் ஒரு மாதங்களுக்கு மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. மும்பையில் உள்ள தொகுதிகளை ஒதுக்குவதில் காங்கிரஸ்- உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி இடையே இழுபறி நீடித்து வந்தது. இதனால் ராகுல் காந்தி உத்தவ் தாக்கரேயிடம் டெலிபோன் மூலம் பேசினார்.
இந்த நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 20 இடங்களிலும், காங்கிரஸ் 18 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும் போட்டியிடுகின்றன. விரைவில் எந்தெந்த தொகுதிகள் என்பது அறிவிக்கப்படும்.
48 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் கடந்த 2019 மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா 23 இடங்களிலும், சிவசேனா 18 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 1 இடத்திலும், வெற்றி பெற்றிருந்தன.
சிவசேனா 23 இடங்களில் போட்டியிட்டிருந்தது. தற்போது சிவசோன 2-வது உடைந்துள்ளது. உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 3 இடங்களில் குறைவாக போட்டியிடுகிறது. காங்கிரஸ் ஒரு இடங்களில் குறைவாக போட்டியிடுகிறது. சரத்பவார் கட்சி 15 இடங்களில் குறைவாக போட்டியிடுகிறது.
வன்சித் பகுஜன் அகாதி என்ற மாநில கட்சி உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியில் இருந்து 2 இடங்களை பெறும். சுயேட்சை வேட்பாளர் ராஜு ஷெட்டி சரத் பவாரிடம் இருந்து ஒரு இடம் பெற்றுக் கொள்வார்.
- முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்ய ஆலோசனை கூட்டம்.
- பிரதமர் மோடி தலைமையில் சுமார் நான்கரை மணி நேரம் நடைபெற்றுள்ளது.
மக்களவை தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. 3-வது முறையாக வெற்றி பெற்று பிரதமராக வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருக்கிறார். அதற்கு வலுசேர்க்கும் வகையில் 370 இடங்களை பிடிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறது பா.ஜனதா.
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக வேட்பாளர்களை பட்டியலை வெளியிட பா.ஜனதா தீர்மானத்தித்துள்ளது. முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் பிரதமர் தலைமையிலான பா.ஜனதாவின் மத்திய தேர்தல் கமிட்டி நேற்று முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வது குறித்து ஆலோசனை நடத்தியது.
இந்த ஆலோசனை கூட்டம் நள்ளிரவு வரை நீடித்துள்ளது. இரவு 10.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் சுமார் நான்கரை மணி நேரம் நடைபெற்றுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமித் ஷா, ஜே.பி. நட்டா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பா.ஜனதாவின் மத்திய தேர்தல் குழு வேட்பாளர்கள் பட்டியல் குறித்து அலுவலகத்தில் ஆராய்ந்து வந்த நிலையில், பிரதமர் மோடி தனது அலுவலகத்தில் அமித் ஷா மற்றும் நட்டாவுடன் தனியாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேவந்திர பட்நாவிஸ், பிரகாஷ் ஜவடேகர், மன்சுக் மாண்டவியா, புஷ்கர் தாமி, பிரமோத் சவாந்த், பூபேந்திர யாத், ஜோதிராதித்யா சிந்தியா, கேஷவ் மவுரியா யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், கேரளா, தெலுங்கானா, ராஜஸ்தான், கோவா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வேட்பாளர்களை அறிவிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
மாநிலத் தலைவர்களுடன் யாரை வேட்பாளராக நிறுத்தில் வெற்றி உறுதி செய்யப்படும் என்பது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். அவர்கள் தெரிவிக்கும் பெயரை குறித்து வைத்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பஞ்சாப், ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் வேட்பாளர் பட்டியல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாநிலங்களிலும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மார்ச் 10-ந்தேதிக்குள் 50 சதவீத வேட்பாளர்களை அறிவித்துவிடலாம் என பா.ஜனதா நம்புகிறது. கடந்த 2019-ல் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே 164 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. அந்த வகையில் தற்போது வெளியிட விரும்புகிறது.
வெற்றி பெறக்கூடிய ஆய்வு என்ற பா.ஜனதா கட்சி இதை கூறுகிறது. ஏனென்றால் வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களை தேடிப்பிடித்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில் கட்சி தீவிரம் காட்டி வருவதால் இப்படி அழைக்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி இன்னும் இட ஒதுக்கீடு பேச்சுவார்த்தையை முடிக்காத நிலையில், முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு உளவியல் ரீதியாக நெருக்கடியை கொடுக்க முடியும் பா.ஜனதா எதிர்பார்க்கிறது.
மாநிலங்களவை எம்.பி.யாக மீண்டு வாய்ப்பு வழங்கப்படதாக சில மத்திய மந்திரிகள் பெயர் வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெறலாம் எனக் கூறப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்