search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு.க ஸ்டாலின்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போதைப் பொருள் ஒழிப்பு உறுதி மொழியினை சுமார் 1500 கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஏற்றுக் கொண்டனர்.
    • முதலமைச்சர் 2024-ம் ஆண்டிற்கான காவலர் சிறப்பு பதக்கங்களை காவல் துறையினருக்கு வழங்கி கவுரவித்தார்.

    சென்னை:

    போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில்முறை கல்லூரிகளில் மாணவ, மாணவியருக்கு போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி நடத்த திட்டமிடப்பட்டது.

    அதன்படி, சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், இன்றைய தினம் போதைப் பொருள் ஒழிப்பு உறுதி மொழியினை சுமார் 1500 கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஏற்றுக் கொண்டனர்.

    இதே போல் தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவ-மாணவிகளும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

    மாநிலத்தில் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை ஒழிப்பதில் சிறப்பான பணியாற்றியதற்காக 2024-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் காவலர் சிறப்பு பதக்கங்களை, தேனி மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் சிவபிரசாத், சேலம், மத்திய புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜகன்னாதன், சென்னை, மத்திய புலனாய்வுப் பிரிவு, சார்-ஆய்வாளர் ராஜ் குமார், மதுரை மாவட்டம், ஒத்தக்கடை போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு சார்-ஆய்வாளர் அருண், ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் காவல் நிலைய முதுநிலை காவலர் துரை ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

    இதன் தொடர்ச்சியாக இன்று மாநிலம் முழுவதும் கைப்பற்றப்பட்ட சுமார் 13,775 கிலோ போதைப் பொருட்கள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் செங்கல்பட்டு, சேலம், தஞ்சை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் தகுந்த பாதுகாப்புடன் எரித்து அழிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில், தயாநிதி மாறன் எம்.பி., தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், டி.ஜி.பி. சங்கர் ஜிவால், கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவா சிர்வாதம், சென்னை போலீஸ் கமிஷனர் அருண், அமலாக்கப் பணியகம்-குற்றப் புலனாய்வுத் துறை கூடுதல் இயக்குநர் அமல்ராஜ் மற்றும் காவல துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றுவார்.
    • சென்னை முதல் குமரி வரை கடலோர பகுதிகள் அனைத்திலும் போலீசார் தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி நடைபெற உள்ள சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களிலும் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இதைத்தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற வேட்டையில் ஐ.எஸ். பயங்கரவாதியான ரிஸ்வான் அலி என்பவர் கைது செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக ரிஸ்வான் அலி டெல்லியில் முக்கிய பிரமுகர்களின் வீடுகளை நோட்டமிட்டது தெரிய வந்ததையடுத்து டெல்லி முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

    அதே நேரத்தில் மற்ற மாநிலங்களிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் அதிகமான போலீசார் சுதந்திர தின பாதுகாப்பு பணிகளில் இப்போதே ஈடுபட தொடங்கி உள்ளனர்.

    சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்ட அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளனர்.

    சுதந்திர தினத்தையொட்டி ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளை கவனமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட், கிளாம்பாக்கம் பஸ் நிலையம் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய மார்க்கெட்டுகளிலும் போலீசார் ரோந்து சுற்றி வந்து சந்தேகத்துக்கிடமாக யாராவது சுற்றி திரிகிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றுவார். இதையொட்டி போலீஸ் அணிவகுப்பும் நடைபெறும். இதனால் கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடலோர பாதுகாப்பு படையினரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னை முதல் குமரி வரை கடலோர பகுதிகள் அனைத்திலும் போலீசார் தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    கடல் வழியாக மர்ம நபர்கள் யாரும் ஊடுருவி விடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரம் முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    • பல தடைகள் வந்தாலும் மக்களின் உரிமைக்கு போராடும் உத்வேகத்தை அசைக்க முடியாது என நிரூபித்தவர் ஹேமந்த் சோரன்.
    • குறையாத வலிமையுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து முன்னேற ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்துகள்.

    சென்னை:

    ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில்,

    பல தடைகள் வந்தாலும் மக்களின் உரிமைக்கு போராடும் உத்வேகத்தை அசைக்க முடியாது என நிரூபித்தவர் ஹேமந்த் சோரன்.

    குறையாத வலிமையுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து முன்னேற ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

    • தமிழ்ப்புதல்வன் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக முதலமைச்சர் என்னிடம் நன்றி கூறினார்.
    • கருணாநிதியின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    கோவை:

    கோவை அரசு கலைக்கல்லூரியில் நடந்த தமிழ்ப்புதல்வன் திட்ட தொடக்க விழாவில் பங்கேற்ற கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் விழா மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சிறிது நேரம் பேசினார். பின்னர் அது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்ப்புதல்வன் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னிடம் நன்றி கூறினார். தமிழ்ப்புதல்வன் திட்டம் மிகவும் நல்ல திட்டம். இந்த பணத்தை மாணவர்கள் போதை பழக்கத்திற்கு பயன்படுத்தாமல் இருந்தால் சிறப்பான திட்டம் தான்.

    கோவை விமான நிலையம் மற்றும் எனது தொகுதிக்கு உட்பட்ட டவுன்ஹால், காந்திபுரம் பகுதியில் மல்டிலெவல் கார் பார்க்கிங் உள்பட தொகுதி சார்ந்த உள்கட்டமைப்பு பிரச்சினைகள் மற்றும் விமான நிலையம் விரிவாக்கம் தொடர்பாக பேசுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அதற்கு அவர் வந்து பாருங்கள் என்று சொன்னார்.

    அதோடு வருகிற 18-ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இதில் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என்று என்னிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். அதற்கு நான் கட்சியில் சொல்கிறேன் என்று தெரிவித்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜ.க. மட்டுமே உலகத்தில் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் ஆதரவான நிலையில் உள்ளது.
    • கோவிலில் உள்ள தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

    பழனி:

    பழனி கோவிலில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வங்கதேசத்தில் 20 சதவீத இந்துக்கள் இருந்த நிலையில் தற்போது 7 சதவீதமாக குறைந்துள்ளது. பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பேசிய காங்கிரஸ், கம்யூனிஸ்டு, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வங்கதேசத்தில் நடைபெறும் கலவரத்தில் அங்கு சிறுபான்மையினராக வாழும் இந்துக்கள் மீதும், அவர்களது வணிக நிறுவனங்கள், வீடுகள், கோவில்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல் குறித்து எந்த கருத்தும் கூறாமல் மவுனமாக உள்ளனர்.

    பா.ஜ.க. மட்டுமே உலகத்தில் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் ஆதரவான நிலையில் உள்ளது. கோவிலில் உள்ள தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். பழனியில் நடக்க உள்ள முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டால் அவர் கோவிலுக்கு சென்று வழிபட்டு நெற்றியில் திருநீறு அணிந்து கொள்ள வேண்டும். திரை உலகை முதலமைச்சர் குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல கோவில்களை தி.மு.க. மயமாக்க அமைச்சர் சேகர்பாபு முயற்சி செய்வதை கண்டிக்கிறோம்.

    தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு மேயர் தேர்தலில் வெட்ட வெளிச்சமாக தெரிந்துள்ளது. முதலமைச்சர் சொல்வதை தி.மு.க. கவுன்சிலர்கள் கூட கேட்பதில்லை. கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்க வேண்டும். கோவில் பணத்தில் கல்லூரிகள் கட்டி வருகின்றனர். கோவில் நிதியை மற்ற பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது. கும்பாபிஷேகம் பக்தர்கள் நன்கொடையில்தான் நடக்கிறது. எனவே இந்து விரோதிகளிடம் இருந்து கோவில்களை காப்பாற்ற வேண்டும். இந்துக்களை வாக்கு அரசியலுக்காக மட்டுமே அரசியல் கட்சிகள் பயன்படுத்துகின்றனர். இந்து மதத்தில் பிளவை ஏற்படுத்தும் தி.மு.க.வின் ஜால்ராவாக ஆன்மீக சொற்பொழிவாளர் சுகிசிவம் உள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 28 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுகிறார்கள்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலமாக உக்கடம் புறப்பட்டு சென்றார்.

    கோவை:

    தமிழகத்தில் பெண்கள் உயர்கல்வி படிப்பதை ஊக்குவிக்கும் வகையில் அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி செயல்படுத்தி வருகிறார்.

    இந்தநிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர் கல்வி பயின்று வரும் கல்லூரி மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். இந்த திட்டத்திற்கு தமிழ்ப்புதல்வன் திட்டம் என பெயர் சூட்டப்பட்டது.

    அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்குவதற்கான தமிழ்ப்புதல்வன் திட்டம் மாநில அளவில் இன்று தொடங்கப்பட்டது. இதற்கான தொடக்கவிழா கோவையில் உள்ள அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடந்தது.

    இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு வந்தார். பின்னர் அவர் கார் மூலமாக தமிழ்ப்புதல்வன் திட்ட தொடக்க விழா நடைபெற்ற கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு கலைக்கல்லூரி மைதானத்திற்கு சென்றார்.

    அங்கு அவரை அமைச்சர்கள், கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி, மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    அதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா மேடைக்கு சென்றார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் விழா தொடங்கியது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 28 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுகிறார்கள். விழாவில் தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடர்பான சிறு வீடியோவும் ஒளிபரப்பப்பட்டது.

    அதனை தொடர்ந்து கோவை செம்மொழி பூங்கா வளாகத்தில் அமைக்கப்படும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் ஆகிய புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    அதேபோல் பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயிரியல் துறை மற்றும் சமூக அறிவியல் துறைகளுக்கான புதிய கட்டிடங்கள் மற்றும் கோவை வ.உ.சி மைதானம் அருகே ரூ.1 கோடியில் கட்டப்பட்ட உணவு வீதி, புலியகுளம் அரசு மகளிர் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தையும் முதலமைச்சர் காணொலி வாயிலாக திறந்து வைத்து பேசினார்.

    அதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலமாக உக்கடம் புறப்பட்டு சென்றார். அங்கு உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரையிலான ரூ.481 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அத்துடன் அந்த மேம்பாலத்தில் காரிலும் பயணித்தார்.

    கோவை மாநகரில் 2 நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் கருமத்தம்பட்டி கணியூர் இந்திரா நகர் பகுதிக்கு சென்றார். அங்கு 8 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் வெண்கல சிலையை திறந்து வைத்து பார்வையிட்டார்.

    தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள கலைஞர் அறிவுசார் நூலகத்தை திறந்து வைத்து, 116 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடியினையும் ஏற்றி வைத்தார்.

    இந்த விழாக்களில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநகர மேயர், கவுன்சிலர்கள், மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமி, மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதேபோல் முதலமைச்சர் சென்ற அனைத்து இடங்களிலும் தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் திரண்டு வந்து கைகளில் உதய சூரியன் சின்னம், தி.மு.க கொடியை பிடித்தபடி சாலையின் இருபுறங்களிலும் நின்று உற்சாகத்துடன் வரவேற்றனர்.

    முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்பட அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    விழா நடைபெறும் இடமான அரசு கலைக்கல்லூரி பகுதி, உக்கடம், கணியூர், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோவையில் 3 விழாக்களையும் முடித்துக் கொண்டு பிற்பகலில் கோவை விமான நிலையத்திற்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து விமானம் மூலமாக மீண்டும் சென்னை செல்கிறார்.

    • 6- 12 அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்.
    • 3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.360 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் "தமிழ்ப் புதல்வன்" திட்டத்தை கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பற்றி பேசி மாணவர்களை ஊக்குவித்தார்.

    மேலும் அவர் பேசியதாவது:-

    ஒலிம்பிக்கில் பங்கேற்ற சகோதரி வினேஷ் போகத் எப்படிப்பட்ட தடைகளை எதிர்கொண்டார் என அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் பலவீனமாக வீட்டிற்குள் முடங்கிவிடாமல், தைரியமும், தன்னம்பிக்கையும், அசாத்திய துணிச்சலும் கொண்ட பெண்ணாக போராடி நாம் அனைவரும் பாராட்டும் அளவிற்கு கொடி கட்டி பறக்கிறார்.

    தடைகள் என்பது உடைத்தெறியத்தான். தடைகளை பார்த்து ஒருபோதும் சோர்ந்துவிடக்கூடாது. வெற்றி ஒன்றே இலக்காக இருக்க வேண்டும்.

    உங்கள் மேல் உங்களைவிட நான் அதிக நம்பிக்கை வைத்துள்ளேன். உங்களுக்கு பின் உங்கள் பெற்றோர் மட்டுமல்ல திமுக அரசும் உள்ளது.

    வரலாற்றில் என்றைக்கும் நம்ம பெயரை சொல்லப் போகிறத் திட்டமாக அது இருக்கும். அப்படிப்பட்ட திட்டமாக உருவாகியுள்ள 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தை தொடங்கி வைத்ததில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 6- 12 அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்.
    • 3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.360 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    கோவை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் இருந்து, இன்று தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த விழாவுக்கு வருவதற்கு முன்பு நேற்று இரவே வங்கிக்கணக்கில் ரூ.1000 வரவு வைக்க உத்தரவிட்டுவிட்டேன்.

    நாள்தோறும் ஏராளமான திட்டங்களை தீட்டினாலும் ஒரு சில திட்டங்கள் தான் மனதிற்கு நெருக்கமாக இருக்கும்.

    இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்க கோவையை தேர்ந்தெடுக்க காரணம், என் பாசமான மக்கள் கோவையை சேர்ந்தவர்கள்.

    தொழில் துறையில் சிறந்த மாவட்டம் கோவை. தலை சிறந்த கல்வி நிறுவனங்கள் இங்கு உள்ளன. மக்களுக்கு நேரடியாக பயனளிக்கக்கூடிய திட்டங்களை திராவிட மாடல் அரசு தொடங்கி வைத்து வருகிறது.

    திராவிட மாடல் அரசு என்றாலே அது சமூக நீதிக்கான அரசு தான். பொருளாதாரத்தில் பெண்கள் முன்னேறுவதில் பார்த்து பார்த்து செய்கிறோம்.

    முதலமைச்சர் ஆனதும் முதல் கையெழுத்தே பெண்களுக்கான விடியல் பயணம் திட்டத்திற்கு தான்.

    6- 12 அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்.

    புதுமைப் பெண் திட்டத்தை பார்த்து மாணவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.360 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    திராவிட மாடல் வழியில் முதலமைச்சரான நானும் ஒரு தந்தை நிலையில் உருவாக்கிய திட்டம் தமிழ் புதல்வன். நானும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்து மாணவர்கள் கல்வி பயில உருவாக்கிய திட்டம்.

    விழா நடைபெறும் இந்த அரசுக் கல்லூரி 173 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

    மேலைநாடுகளுக்கு இணையான கட்டமைப்பு வசதி உள்ள மாநிலமாக தமிழ்நாடு உயரும்.

    அனைவரும் உயர்கல்வி பெற வேண்டும்- இதுதான் என்னுடைய கனவு.

    மாணவர்களின் கல்விக்கு எதுவும் தடையாக இருக்கக் கூடாது. இதற்கு உறுதுணையாக நான் இருக்கிறேன். உங்கள் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை விட, நான் அதிகம் வைத்துள்ளேன்.

    உங்கள் வெற்றிக்கு பின்னால் என்னுடைய திராவிட மாடல் இருக்கிறது. மறந்துவிட வேண்டாம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தேர்வான மாணவர்களின் வங்கி கணக்கில் உடனடியாக ரூ.1000 செலுத்தப்படும்.
    • இத்திட்டத்திற்கு தமிழக அரசு ரூ.360 கோடி ஒதுக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு மாணவ-மாணவிகள் உயர்கல்வி படிக்கும் நோக்கத்தில் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    அதன்படி அரசு பள்ளிகளில் படித்து விட்டு பின்னர் உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதனை தொடர்ந்து அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    அதன்படி, தமிழ்ப்புதல்வன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் இன்று (9-ந் தேதி) காலை 11.30 மணியளவில் தொடங்கி வைத்தார்.

    கோவை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் இதற்கான பிரமாண்ட விழா நடைபெற்று வருகிறது.

    இந்த திட்டத்தில் தேர்வான மாணவர்களின் வங்கி கணக்கில் உடனடியாக ரூ.1000 செலுத்தப்படும் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.

    இதன்மூலம், 3.28 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் இத்திட்டத்திற்கு தமிழக அரசு ரூ.360 கோடி ஒதுக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையம், கோவை அரசு கலைக்கல்லூரி மைதானம், உக்கடம், கணியூர் மற்றும் அவர் காரில் வந்து செல்லும் இடங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    • தேர்வான மாணவர்களின் வங்கி கணக்கில் உடனடியாக ரூ.1000 செலுத்தப்படும்.
    • இத்திட்டத்திற்கு தமிழக அரசு ரூ.360 கோடி ஒதுக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு மாணவ-மாணவிகள் உயர்கல்வி படிக்கும் நோக்கத்தில் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    அதன்படி அரசு பள்ளிகளில் படித்து விட்டு பின்னர் உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதனை தொடர்ந்து அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    அதன்படி, தமிழ்ப்புதல்வன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9-ந் தேதி) காலை 11.15 மணிக்கு கோவையில் தொடங்கி வைக்கிறார்.

    கோவை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் இதற்கான பிரமாண்ட விழா இன்று நடைபெறுகிறது.

    இந்த திட்டத்தில் தேர்வான மாணவர்களின் வங்கி கணக்கில் உடனடியாக ரூ.1000 செலுத்தப்படும் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.

    இதன்மூலம், 3.28 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் இத்திட்டத்திற்கு தமிழக அரசு ரூ.360 கோடி ஒதுக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கோவை மாவட்ட தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். முதலமைச்சர் வந்து செல்லும் அனைத்து இடங்களிலும் திரளானோர் கூடி அவருக்கு வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளனர்.

    முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையம், கோவை அரசு கலைக்கல்லூரி மைதானம், உக்கடம், கணியூர் மற்றும் அவர் காரில் வந்து செல்லும் இடங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    • பட்டாச்சார்யா 2000 முதல் 2011-ம் ஆண்டு வரை 11 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்துள்ளார்.
    • புத்ததேவ் பட்டாச்சார்யாவின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.

    மேற்கு வங்காளத்தின் முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை காலமானார்.

    80 வயதாகும் புத்ததேவ் பட்டாச்சார்யா கடந்தாண்டு உடல்நல பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் பாதிப்புகள் இருந்ததால் சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வீடு திரும்பினார்.

    நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயால் அவதிப்பட்டு வந்த புத்ததேவ் பட்டாச்சார்யா அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்தார். தற்போது வயதுமூப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.

    மேற்கு வங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புத்ததேவ் பட்டாச்சார்யா 2000 முதல் 2011-ம் ஆண்டு வரை 11 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்துள்ளார்.

    இந்நிலையில், பட்டாச்சார்யா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இடதுசாரி இயக்கத்தின் தலைவரும் மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வருமான தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.

    மாநிலத்திற்கும், தேசத்திற்கும் அவரது உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் சேவை என்றென்றும் நினைவுகூரப்படும்.

    ஒரு உறுதியான மார்க்சிஸ்ட், அவர் தனது வாழ்க்கையை சமத்துவ சமூகத்தை வளர்ப்பதற்கும், ஒதுக்கப்பட்டவர்களின் காரணத்திற்காகவும், சமூக நீதிக்காக வாதிடுவதற்கும் அர்ப்பணித்தார்.

    அவரது சாதனைகள் மற்றும் அவரது இலக்கிய பங்களிப்புகள் ஒரு நீடித்த பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளன.

    அவரது தலைமைத்துவமும், மக்களுக்கான அர்ப்பணிப்பும் வருங்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். சிவப்பு வணக்கம், தோழர்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 8 அடி உயர உருவ வெண்கல சிலையை திறந்து வைக்கிறார்.

    கோவை:

    தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு மாணவ-மாணவிகள் உயர்கல்வி படிக்கும் நோக்கத்தில் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    அதன்படி அரசு பள்ளிகளில் படித்து விட்டு பின்னர் உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதனை தொடர்ந்து அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து விட்டு உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    தமிழ்ப்புதல்வன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (9-ந் தேதி) கோவையில் தொடங்கி வைக்கிறார். கோவை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் பங்கேற்று அவர் இந்த புதிய திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    மேலும் இந்த விழாவில் கோவை செம்மொழி பூங்கா வளாகத்தில் அமைக்கப்படும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் ஆகிய வளர்ச்சித்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.40 கோடி மதிப்பில் கட்டப்பட்ட உயிரியல் துறை மற்றும் சமூக அறிவியல் துறைக்கான புதிய கட்டிடம், கோவை வ.உ.சி. மைதானம் அருகே ரூ.1 கோடியில் கட்டப்பட்ட உணவு வீதி, புலியகுளம் அரசு கல்லூரியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தையும் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

    விழா முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை உக்கடம் செல்கிறார். உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் வரை ரூ.481 கோடியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள மேம்பாலத்தை திறந்து வைக்கிறார். பின்னர் அந்த மேம்பாலத்தில் அவர் காரில் பயணிக்க உள்ளார்.

    அங்கிருந்து கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூருக்கு செல்கிறார். அங்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 8 அடி உயர உருவ வெண்கல சிலையை திறந்து வைக்கிறார். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள 116 அடி உயர கொடிக்கம்பத்தில் தி.மு.க. கொடியேற்றி வைக்கிறார். நூலக கட்டிடத்தையும் திறந்து வைக்கிறார்.

    கோவையில் நாளை 3 இடங்களில் நடைபெறும் விழாக்களில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு காலை 11 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து காரில் புறப்பட்டு கோவை அரசு கலைக்கல்லூரிக்கு சென்று விழாவில் பங்கேற்கிறார். 3 விழாக்கள் முடிந்த பின் மீண்டும் கோவை விமான நிலையம் வரும் மு.க.ஸ்டாலின் பிற்பகலில் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கோவை மாவட்ட தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். முதலமைச்சர் வந்து செல்லும் அனைத்து இடங்களிலும் திரளானோர் கூடி அவருக்கு வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளனர்.

    முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. விமான நிலையம், கோவை அரசு கலைக்கல்லூரி மைதானம், உக்கடம், கணியூர் மற்றும் அவர் காரில் வந்து செல்லும் இடங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    ×