search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு.க ஸ்டாலின்"

    • வங்கதேசத்தில் கலவரம் காரணமாக தமிழக மாணவர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
    • வங்கதேசத்தில் தமிழர்களின் குடும்ப உறுப்பினர்கள் அயலக தமிழர் நலத்துறையின் கட்டணமில்லா எண்களை தொடர்பு கொள்ளலாம்.

    சென்னை:

    வங்கதேசத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

    வங்கதேசத்தில் பதற்றமான சூழ்நிலை காரணமாக தமிழர்கள் சிலர் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அங்கு நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. உதவிகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் உள்ள தமிழர்களின் விவரங்களை பெற்று அனைத்து உதவிகளையும் விரைந்து வழங்க வேண்டும்.

    வங்கதேசத்தில் கலவரம் காரணமாக தமிழக மாணவர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அங்கு சிக்கியுள்ள தமிழர்களுக்கு அயலக தமிழர் நலன் ஆணையம் மூலம் உதவிகளை பெற தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    வங்கதேசத்தில் தமிழர்களின் குடும்ப உறுப்பினர்கள் அயலக தமிழர் நலத்துறையின் கட்டணமில்லா எண்களை தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்கள்: இந்தியாவிற்குள் - +91 1800 309 3793, வெளிநாடு - +91 80 6900 9900 எண்களை தொடர்பு கொள்ளலாம்.

    வங்கதேசத்தின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து தமிழர்களுக்கு உதவிகளை செய்வதற்கு தமிழக அரசு தயார் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு மக்கள் நலனை மனதில் வைத்து தொண்டாற்றுபவர் முதலமைச்சர்.
    • முதலமைச்சர் அகராதியில் அரசியல் காழ்ப்புணர்வு என்ற சொல், சிறுமதி ஒருநாளும் இருந்ததில்லை.

    சென்னை:

    ஏழை, எளியவர்களின் அன்னலட்சுமியாக திகழ்ந்த அம்மா உணவகங்களுக்கு மூடுவிழா நடத்த முயற்சித்து, தற்போது முதலைக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் என்று எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மேயர் பிரியா கூறுகையில்,

    * திமுக ஆட்சியில் சிறப்பாக செயல்படும் அம்மா உணவகத்தை ஆய்வு செய்த முதலமைச்சரை பாராட்ட எதிர்க்கட்சி தலைவருக்கு மனமில்லை.

    * கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு மக்கள் நலனை மனதில் வைத்து தொண்டாற்றுபவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    * திமுகவால் தொடங்கப்பட்டது என்பதற்காகவே புதிய தலைமை செயலகம் உட்பட அதிமுக ஆட்சியில் முடக்கிய திட்டத்தை மக்கள் அறிவர்.

    * பொறாமையிலும் ஆற்றாமையிலும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி புலம்பி தவிக்கிறார்.

    * மனிதநேயர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அகராதியில் அரசியல் காழ்ப்புணர்வு என்ற சொல், சிறுமதி ஒருநாளும் இருந்ததில்லை என்று அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெயலலிதா ஆட்சியில் சென்னையில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்ட நிலையில் 19 உணவகங்களை மூடியது ஏன்?
    • தமிழகத்தின் அன்னலட்சுமியாக செயல்படும் அம்மா உணவகங்கள் சுமார் 19 உணவகங்களை திமுக அரசு மூடி உள்ளது.

    சென்னை:

    சென்னை தேனாம்பேட்டை அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டதை சுட்டிக்காட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    * அம்மா உணவகங்களுக்கு மூடுவிழா நடத்த முயற்சித்துவிட்டு தற்போது முதலைக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    * ஜெயலலிதா ஆட்சியில் சென்னையில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்ட நிலையில் 19 உணவகங்களை மூடியது ஏன்?

    * தமிழகத்தின் அன்னலட்சுமியாக செயல்படும் அம்மா உணவகங்கள் சுமார் 19 உணவகங்களை திமுக அரசு மூடி உள்ளது.

    * வாய்பந்தல் போடாமல் மூடியுள்ள உணவகங்களை திறப்பதுடன் புதிய உணவகங்களையும் திறக்க வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ, மாணவியர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்து, மடிக் கணினிகளை வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில், 264 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 956 புதிய வகுப்பறைக் கட்டிடங்கள், 12 ஆய்வகக் கட்டிடங்கள், தகைசால் பள்ளிகளில் புனரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் திருவண்ணாமலையில் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த கல்வி வளாகம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

    அதில் பள்ளிக்கல்வித் துறையில் 114 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவில் 26 மாவட்டங்களில் உள்ள 106 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 515 வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் 12 ஆய்வகக் கட்டிடங்கள்;

    தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் குழந்தை நேய வகுப்பறை கட்டும் திட்டத்தின் கீழ், 68 கோடியே 66 லட்சம் ரூபாய் செலவில் 25 மாவட்டங்களில் உள்ள 176 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி களில் கட்டப்பட்டுள்ள 441 வகுப்பறை கட்டிடங்கள்;


    தமிழ்நாட்டின் 28 மாவட்டங்களில் இயங்கி வரும் 28 தகைசால் பள்ளிகளில் 61 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடங்கள் ஆகியவை அடங்கும்.

    நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்று, சென்னை, ஐ.ஐ.டியில் பயில தேர்ச்சி பெற்றுள்ள விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், ஆதிதிராவிடர் நல மேல் நிலைப் பள்ளி மாணவர் சி. பார்த்தசாரதி, திருச்சி என்.ஐ.டியில் பயில தேர்ச்சி பெற்றுள்ள சேலம் மாவட்டம், கரியகோவில் வலவு, அரசு பள்ளி மாணவி சுகன்யா, திருச்சி சின்ன இலுப்பூர், அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி மாணவி ரோகிணி, சட்ட பல்கலைக் கழகத்தில் பயில தேர்ச்சி பெற்றுள்ள மாணவர் அஜய், தரமணி பேஷன் டெக்னாலஜியில் பயில தேர்ச்சி பெற்றுள்ள புளியம்பட்டி மாணவியர் மீனா மற்றும் எஸ். துர்கா, மணியார்பாளையம், அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி மாணவி பழனியம்மாள் மற்றும் மாணவர் கே. தவமணி, ஆகிய 8 மாணவ, மாணவியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ, மாணவியர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்து, மடிக் கணினிகளை வழங்கினார்.


    சிறைகள் மற்றும் சீர் திருத்தப் பணிகள் துறையின் சார்பில் 9 கோடியே 45 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் திண்டிவனத்தில் கட்டப்பட்டுள்ள கிளைச் சிறைக் கட்டடம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட சிறைச்சாலையில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடங்கள் ஆகியவற்றையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    • தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
    • அம்மா உணவகங்களில் புதிய பாத்திரங்கள் வாங்க ரூ.7 கோடி கட்டடத்தை புனரமைக்க ரூ. 14 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை:

    ஏழை மக்கள் பயன்பெறும் அம்மா உணவகத்தின் செயல்பாடு, உணவின் தரம் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் ஆய்வு செய்தார்.

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

    அம்மா உணவகத்தில் உணவு அருந்தியவரிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். ஊழியர்களிடம் உணவு தயாரிப்பு முறைகள், உணவின் தரம் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

    இந்நிலையில் சென்னையில் அம்மா உணவகங்களை மேம்படுத்துவதற்காக ரூ.21 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    தேனாம்பேட்டை அம்மா உணவகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்ட நிலையில் ரூ.21 கோடி ஒதுக்கீடு செய்து, அம்மா உணவகங்களை தொடர்ந்து சிறப்பாக நடத்த முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார்.

    சென்னை மாநகராட்சியில் 200 கோட்டங்களிலும் உள்ள 388 அம்மா உணவகங்களையும் சிறப்பாக நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    அம்மா உணவகங்களில் புதிய பாத்திரங்கள் வாங்க ரூ.7 கோடி, கட்டடத்தை புனரமைக்க ரூ. 14 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.

    அம்மா உணவகங்களில் ஆய்வு செய்து தேவையான உதவிகளை செய்து தருமாறு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

    சமையலறை மற்றும் உணவு கூடத்தை தூய்மையாக பராமரிக்கவும், ஏழைகள் பயன்பெறும் வகையில் தரமான உணவு தயாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

    • தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
    • உணவின் தரம் குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.

    சென்னை:

    ஏழை மக்கள் பயன்பெறும் அம்மா உணவகத்தின் செயல்பாடு, உணவின் தரம் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

    தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் உணவு அருந்தியவரிடம் உணவின் தரம் குறித்து அவர் கேட்டறிந்தார்.

     

    அம்மா உணகவகத்தின் உணவு தயாரிப்பு முறைகள், உணவின் தரம் குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார். உணவகத்தில் நின்றிருந்த பொதுமக்களிடமும் தகவல்களை கேட்டறிந்தார்.

    • அமைச்சரவையை விரைவில் மாற்றி அமைப்பார் என்றும் பேசப்படுகிறது.
    • உயர் அதிகாரிகளும் உடன் இருந்ததாகவும தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை:

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சர் ஆவார் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையை விரைவில் மாற்றி அமைப்பார் என்றும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் பிறந்த நாளுக்கு அமைச்சர்கள் பலர் அவரது வீட்டுக்கு நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

    மூத்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலர் சபரீசனை சந்தித்து வாழ்த்து கூறியதால் கட்சியில் அவரது முக்கியத்துவம் மேலும் உயர்ந்துள்ளதாகவே கருதப்படுகிறது.

    அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட வாய்ப்பு இருப்பதால் இந்த முறை சபரீசனை சந்திக்க அமைச்சர்கள் பலர் ஆர்வம் காட்டியதாக கட்சி நிர்வாகிகள் கருத்து பரிமாறிக் கொண்டனர்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்தெந்த அமைச்சர்கள் அதிக ஓட்டு வாங்கினார்கள். எந்த அமைச்சர்களுக்கு ஓட்டு குறைந்தது என்ற பட்டியல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் இருப்பதால் சில அமைச்சர்களின் இலாகாக் களை மாற்றி விடுவாரோ என்ற ஐயப்பாடும் சில அமைச்சர்களிடம் நிலவி வருகிறது.

    இந்த சூழ்நிலையில் தான் சபரீசனை பார்த்து வாழ்த்து சொல்ல நேற்று முன்தினம் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் அதிகம் பேர் சென்றதாக கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அன்றைய தினம் காலை 10.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமார் 10 அமைச்சர்களுடன் திடீர் ஆலோசனையும் நடத்தி இருக்கிறார்.

    சபரீசனை சந்தித்து வாழ்த்து சொன்ன அந்த அமைச்சர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய ஆலோசனையில் பங்கேற்றது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட 10 அமைச்சர்கள் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்திய ஆலோசனையில் பங்கேற்றதாகவும் அப்போது தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, முதல்-அமைச்சரின் செய லாளர்கள், முக்கிய துறைகளின் உயர் அதிகாரிகளும் உடன் இருந்ததாகவும தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த கூட்டத்தில் அரசு நிர்வாகம் மட்டுமின்றி 2026 தேர்தல் வர இருப்பதை யொட்டி இனி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றி பேசியதாகவும் தெரிகிறது.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல இருப்ப தால் அதற்கு முன்னதாக இந்த ஆலோசனையில் பல்வேறு விசயங்கள் பேசப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

    அன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் விக்கிரவாண்டி தேர்தலில் ஓட்டு குறைந்த அமைச்சர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் கேட்டதாகவும், சில அமைச்சர்கள் 'டோஸ்' வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

    • தமிழ்நாட்டிற்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட முக்கிய துறைகளின் விருதுகள்.
    • சுற்றுலா துறைக்கு கிடைத்த 3 விருதுகள்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பு ஏற்றது முதல் தமிழக வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.

    வறுமை ஒழிப்பு, தரமான கல்வி, சுத்தமான குடிநீர், தொழில் கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சி வேலை வாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம், சாலை வசதிகள் என அனைத்து வசதிகளையும் தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருகிறார்.

    இது தவிர, மகளிர் உரிமைத்தொகை, நான் முதல்வன் திட்டம், மகளிர் இலவச பஸ் பயணம், காலை உணவுத் திட்டம் என மாநில அரசால் நடை முறைப்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன.

    இதன் காரணமாக தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிக வேகமாக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    மத்திய அரசு சமீபத்தில் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களிலும் செயல்படுத்தப்படும் திட்டங் களை ஆய்வு செய்து ஒவ்வொரு மாநிலங்களும் திட்டங்கள் எந்த அளவுக்கு முன்னேற்றத்தில் உள்ளது என்பதை கண்டறிந்து புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் மாநிலங்களின் மதிப்பெண் அடிப்படையில் தமிழகம் 13 துறைகளில் நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னணியாக வகைப் படுத்தப்பட்டுள்ளது.

    அதில் நிதி ஆயோக் அறிக்கைபடி 11 நிலையான வளர்ச்சி இலக்குகளில் தமிழகத்தின் மதிப்பெண் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது.

    வறுமை ஒழிப்பில் தமிழகத்தின் செயல்பாடு தேசிய அளவில் 100-க்கு 72 என்பதை தாண்டி 92 சதவீதமாக அதிகரித் துள்ளது.

    இதேபோல் தரமான கல்வி வழங்குவதில் தேசிய சராசரி 61 புள்ளிகளை தாண்டி 76 புள்ளிகள் பெற்று முன்னிலையில் தமிழகம் உள்ளது. சுத்தமான குடிநீர், சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி, தொழில் புத்தாக்கம், உள் கட்டமைப்பு, கால நிலை நடவடிக்கைகள் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி இலக்குகளில் தமிழகத்தின் மதிப் பெண்கள் தேசிய சரா சரியை விட அதிகமாக உள்ளதாக அந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் வறுமையை ஒழிக்கும் இலக்கில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. உயர் கல்வி மாணவர்களின் மொத்த சேர்க்கை விகிதம் முறையே 81.5 சதவீதம் மற்றும் 47 சதவீதமாக இருந்தது. இது தேசிய சராசரியான 57.6 சதவீதம் மற்றும் 28.4 சதவீதத்தை விட அதிகமாகும்.

    இதேபோல் கிராமப்புறங் களில் வாழும் மக்களில் 81.87 சதவீதத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு பாதுகாப் பான மற்றும் போதுமான அளவு குடிநீர் கிடைத்து வருவதாக குறிப்பிடப் பட்டுள்ளது.

    செல்போன் பயன்பாட்டை எடுத்துக் கொண்டால் 92.8 சதவீதம் பேர் அதாவது குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒரு செல்போன் வைத்திருப்பதும் ஆதார் மூலம் இணைக்கப்பட்ட மக்கள் தொகை புள்ளிவிவர சதவீதம் 97.94 என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் தொழில் வளர்ச்சி சிறப்பாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்றுக்கு பிறகு தமிழ்நாடு பல துறைகளில் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளதுடன் சிறந்த முறையில் திட்டங்களின் செயல்பாடுகள் உள்ளதால் வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாகவும், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்கள் சமூக மற்றும் கல்வி சார்ந்த துறையில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தமிழ்நாட்டிற்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட முக்கிய துறைகளின் விருதுகள்.

    * தொழில் முன்னேற்றம் சம்மந்தமாக தமிழகத்தில் புத்தொழில் நிறு வனங்களுக்கு ஆதரவான செயல்பாடுகளை முன்னெடுத்ததற்காக 2021-ம் ஆண்டுக்கான புத்தொழில் 'லீடர்' விருது.

    * வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தால் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு வழங்கப்பட்ட சிறந்த நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு கொண்ட விருது.

    * ஸ்டார்ட் அப் இந்தியா வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் சிறந்த புத்தொழில் சூழமை வினை கட்டமைக்கும் மாநிலங்களில் முதல் தரவரிசைப் பிரிவில் தமிழகம் இடம் பிடித்ததற்காக சான்றிதழ்.

    * உயிர்நீர் இயக்க திட்ட செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழ் நாட்டுக்கு முதல் மாநிலத்துக்கான விருது மற்றும் தூய்மை இந்தியா நகர்ப்புற இயக்கத்தின் கீழ் ராமேஸ்வரம் நகராட்சி போத்தனூர் பேரூராட்சிக்கு கிடைத்த விருதுகள்.

    * பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டத்திற்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட சிறந்த செயல்திறனுக்கான விருது.

    * நம் ஆளுமை உள்ள கிராம ஊராட்சி எனும் பொருளில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற கோவை மாவட்டம் பிச்சானூர் ஊராட்சிக்கு மத்திய அரசு வழங்கிய விருது.

    சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் உரிமை ஏற்றத்திற்கான தேசிய விருது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அபுதாபியில் ஆசிய செஸ் கூட்டமைப்பின் சார்பில் 2023-ம் ஆண்டுக்கு சிறந்த மனிதருக்கான விருது

    தமிழக அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனத்துக்கு புதுப்பித்தல் ஆற்றல் சார் முதலீடுகளை அதிகரிப்பதில் ஆற்றிய சிறப்பான பணிகளுக்காக கிடைத்த முத லீட்டு ஊக்குவிப்பு விருது

    தேசிய அளவிலான இந்தியா ஸ்கில்ஸ் 2021 திறன் போட்டிகளில் பதக்கங்கள் வென்றதற்கான விருது

    தேசிய அளவில் சிறப் பாக செயல் புரிந்த தமிழ கத்தை சேர்ந்த 12 ஊராட்சி களுக்கு மத்திய அரசு விருது

    பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்த கோவை, தஞ்சை, கரூர் கலெக்டர்களுக்கு விருதுகள்

    சுற்றுலா துறைக்கு கிடைத்த 3 விருதுகள்

    சுகாதாரத்திற்கான மதிப்பீட் டில் தேசிய அளவில் 3-ம் இடம் பெற்றதற்கும், சுஜாலம் 1.0 எனும் 100 நாள் நீர் மேலாண்மை இயக்கத் தில் 5-ம் இடம் பெற்றதற் கும் கிடைத்த விருதுகள்

    மாற்றுத் திறனாளிகள் வேலை வாய்ப்பு மேம்பாட்டிற்கான தேசிய மையத்தால் தமிழ்நாடு அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான 'அனைத்தும் சாத்தியம்' அருங்காட்சியகத்துக்கு கிடைத்த விருதுகள்'.

    • அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
    • அறிஞர் அண்ணா பேசிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    தமிழகத்தில் இன்று (ஜூலை 18) தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் சிறப்பு வீடியோ பகிர்ந்துள்ளார். வீடியோவுக்கு தமிழ்நாடு வாழ்க என்று தலைப்பிட்டுள்ளார்.

    வீடியோவில் தமிழகத்தின் பெயர் மாற்ற விழாவில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா பேசிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1 ஆம் தேதியை மாநில தினமாக கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்கள் கொண்டாடி வருகின்றன. தெலங்கானா மாநிலம் ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்ட ஜூன் 2 ஆம் தேதியை மாநில தினமாக கொண்டாடி வருகிறது.

    எனினும், தமிழகத்தில் இப்படி மாநில நாள் கொண்டாடப்படாமல் இருந்தது. எனினும், தமிழ்நாடு அமைந்த நாளை தமிழ்நாடு தினமாக சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று நீண்ட காலம் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. சில தமிழ் அமைப்புகள் நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு தினமாக கொண்டாடி வந்தன. இந்த கோரிக்கை கடந்த 2012 ஆம் ஆண்டு ஏற்கப்பட்டு, அக்டோபர் 25 ஆம் தேதி அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

    அதன்படி தமிழ் வளர்ச்சி துறை சார்பில் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    2021 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு சென்னை மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்ற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜூலை 18 ஆம் தேதி "தமிழ் நாடு விழா" கொண்டாடப்படும் என்று அறிவித்து அரசாணை வெளியிட்டது. அன்று முதல் ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு தினம் கடைபிடிக்கப்படுகிறது.


    • சங்கீதா என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.
    • விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், வளம்பக்குடி அருகில் இன்று காலை சுமார் 7 மணியளவில் கந்தர்வகோட்டையில் இருந்து சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றுகொண்டிருந்தவர்கள் மீது எதிர்பாராதவிதமாக ஈச்சர் வாகனம் மோதிய விபத்தில் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், கல்லாக்கோட்டை ஊராட்சி, கண்ணுகுடிபட்டியைச் சேர்ந்த முத்துசாமி, ராணி, மோகனாம்பாள் மற்றும் மீனாஆகிய நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேலும், இவ்விபத்தில் தனலட்சுமிஎன்பவர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

    இவ்விபத்தில், பலத்த காயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சங்கீதா என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

    இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    • மேலும் சிலரை காவல் துறை அதிரடி கைது செய்தது.
    • அமைச்சர் இல்லத்திற்கு அருகில் வைத்து படுகொலை.

    தமிழகத்தில் கள்ளச்சாராய விவகாரம் அதைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் படுகொலை சம்பவம் என அடுத்தடுத்து படுபயங்கர சம்பவங்கள் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த சில மாதங்கள், வாரங்கள் என பின்னோக்கி பார்த்தால் பல சம்பவங்கள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு, ஒழுங்காகத் தான் இருக்கிறதா என்ற கேள்வியை கண் முன் கொண்டுவரும்.

    மிக சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வைத்து படுகொலை செய்யப்படுகிறார். படுகொலை முடிந்து ஆம்ஸ்ட்ராங் இறுதிச் சடங்கு தொடங்கும் முன் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குகள் பதியப்பட்டன. பிறகு, கொன்றவர்கள் என்று சிலர் சரண் அடைய, மேலும் சிலரை காவல் துறை அதிரடி கைது செய்தது.


     

    இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, காவல் துறை மாற்றங்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சரி செய்யும் என்று சென்னை நகருக்கு புதிய ஆணையர் நியமிக்கப்பட்டார். கூடவே காவல் துறையில் சில தலைமை அதிகாரிகளும் அதிரடியாக மாற்றப்பட்டனர். இந்த மாற்றங்களுடன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காவல் துறை மற்றும் அரசு துறையில் தலைமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    தொடர்ந்து, ரவுடிகளை தொடர்ந்து கண்காணிப்போம், ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்படுவதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அடுத்தடுத்து குற்ற சம்பவங்கள் குறையும் என்ற தொனியில் சில அறிவிப்புகள் வெளியாகின. இதன் காரணமாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்ற மக்கள் நம்ப துவங்கினர்.

    ஆம்ஸ்ட்ராங்க படுகொலை சம்பவத்திற்கு முன் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் வைத்து எரித்து கொல்லப்படுகிறார். இவரது வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. எனினும், இந்த கொலை பின்னணியில் இருப்பது யார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.


     

    இந்நிலையில், நேற்று அதிகாலை (ஜூலை 16) மதுரையில் திமுக அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இல்லத்திற்கு அருகில் வைத்து நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்குத் தொகுதி துணைச்செயலாளராக இருந்த பாலசுப்பிரமணியன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சிறார் உள்பட ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

    ஒருபுறம் குற்ற சம்பவங்கள் அரங்கேறி வரும் போதிலும், அதிகாரிகள் மாற்றம், ஆலோசனை கூட்டம் என அரசு நடவடிக்கை ஒருபுறமும் அரசியல் களத்தை சூடுபிடிக்க செய்துள்ளன. அந்த வகையில், தமிழகத்தில் நேற்று (ஜூலை 16) ஒரே நாளில் மாவட்ட கலெக்டர்கள் உள்பட 65 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

     


    இவர்களில் சிலர் அவர்களாகவே பணியிட மாற்றம் கோரியதாகவும், சிலர் கட்டாயமாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மாற்றப்பட்ட அரசு அதிகாரிகளில் பலர் உயர் பொறுப்புகளை வகித்தவர்கள் ஆவர். உள்துறை செயலாளர்கள், ஆணையர்கள் என மாநிலம் முழுக்க பெரிய பொறுப்புகளில் உள்ளவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

    காவல் துறை மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் மாற்றத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் மாநிலம் முழுக்க இதர நிர்வாக ரீதியிலான பிரச்சினைகளை களைய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயங்களில் மக்களுக்கு நிம்மதி பெருமூச்சு கிடைக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம். 

    • மு.க. ஸ்டாலின் அமெரிக்காவுக்கு செல்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
    • அரசு நிர்வாகத்திலும் சில அதிரடி மாற்றங்களை செய்வார் என்று தெரிய வந்துள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னிய முதலீட்டை ஈர்ப்பதற்காக அமெரிக்காவுக்கு இந்த மாதம் பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் அடுத்தடுத்து பல்வேறு தொடர் நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் பங்கேற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருப்பதால் அவரது வெளிநாட்டு பயணம் சற்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 2-வது வாரத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவுக்கு செல்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக அவர் ஆட்சியிலும், கட்சியிலும், அரசு நிர்வாகத்திலும் சில அதிரடி மாற்றங்களை செய்வார் என்று தெரிய வந்துள்ளது.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், விரைவாக பொருளாதார வளர்ச்சியை எட்டவும், அதிகாரிகளை மாற்றும் நடவடிக்கைகளை அவர் கையில் எடுத்துள்ளார்.

    சமீபத்தில் போலீஸ் அதிகாரிகளை மாற்றி அமைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஒரே நாளில் 65 ஐ.ஏ.எஸ். அதி காரிகளை இடமாற்றம் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

    இந்த நிலையில் நிர்வாக ரீதியாக மேலும் சில மாற்றங்கள் செய்து விட்டு அமைச்சரவையிலும் மாற்றங்கள் செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

    கடந்த சில மாதங்களாகவே அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது.

    குறிப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

    தற்போது அதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாக தலைமைச் செயலக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் விரைவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக நியமனம் செய்து அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அடுத்த மாதம் 15-ந்தேதி சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு கொடியேற்றி வைக்க உள்ளார்.

    அதன் பிறகு ஓரிரு நாளில் அவர் வெளிநாடு செல்வார் என்று கூறப்படுகிறது. எனவே விரைவில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அமைச்சரவை மாற்றத்தின் போது சில மூத்த அமைச்சர்களின் இலாகாக்களில் மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது. தங்கம் தென்னரசு உள்பட சில மூத்த அமைச்சர்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட இலாகாக்கள் உள்ளன. அவற்றை பிரித்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

    இதன் மூலம் அமைச்சரவையில் புதுமுகங்கள் இடம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. அந்த புதுமுகங்கள் பெரும்பாலும் இளைஞர்களாக இருப்பார் கள் என்று தெரிய வந்துள்ளது. அதற்கு ஏற்ப அமைச்சரவையை மாற்றம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார்.

    அமைச்சர் தங்கம் தென்னரசு தற்போது நிதி மற்றும் மின்சாரத் துறையை கவனித்து வருகிறார். இது அவருக்கு அதிக சுமையாக கருதப்படுகிறது. எனவே அவரிடம் உள்ள நிதி இலாகாவை வேறு ஒரு வருக்கு வழங்க ஆலோசிக்கப்படுகிறது.

    ஏற்கனவே நிதி அமைச்ச ராக இருந்த பழனிவேல் தியாகராஜன் வசம் மீண்டும் நிதி இலாகா ஒப்படைக்கப்படும் என்று கோட்டை வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த தகவல்கள் தி.மு.க. வட்டாரத்தில் மிகுந்த விறு விறுப்பை ஏற்படுத்தி உள்ளன.

    தி.மு.க.வில் உள்ள நடுத்தர வயதுள்ள பல எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர் பார்க்க தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக தி.மு.க. நிர்வாகிகள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    அமைச்சரவையில் சரியாக செயல்படாத சில ரை கட்சிப் பணிக்கு அனுப்பவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மூத்த தலைவர்களிடம் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. எனவே அமைச்சரவை மாற்றம் தொடர்பான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.


    இதற்கிடையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சர் ஆக்குவதற்கு தி.மு.க. மூத்த தலைவர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு கிடைத்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து தீவிர கட்சி பணிகளிலும், ஆட்சி பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி உள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலின் போது அவர் 40 தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்தார். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் அவர் தனி கவனம் செலுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

    அதுபோல விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் 2 நாட்கள் அவர் செய்த பிரசாரம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. எனவே அவருக்கு துணை முதல்-அமைச்சர் பதவி கொடுக்கும் பட்சத்தில் கட்சி பணிகளையும் மேம்படுத்த முடியும் என்று தி.மு.க. மூத்த தலைவர்கள் நம்புகிறார்கள்.

    தமிழக சட்டசபைக்கு இன்னும் 1½ ஆண்டுகளில் தேர்தல் வர இருக்கிறது. அந்த தேர்தலில் சுமார் 200 இடங்களை கைப்பற்ற வேண்டும் என்று முதலமைச்சர் இலக்கு நிர்ணயித்துள்ளார். அந்த இலக்கை எட்டிப்பிடிக்க இப்போதே அதிரடி மாற்றங்களை செய்யத் தொடங்கி உள்ளார்.

    உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவதன் மூலம் ஆட்சி நிர்வாகத்தை மேலும் எளிமைப்படுத்தி விரைவு படுத்த முடியும் என்றும் கருத்து நிலவுகிறது. எனவே அடுத்த அமைச்சரவை மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.

    ×